Thursday, March 04, 2010

பிரேமானந்தா முதல் நித்தியானந்தம் வரை

பிரேமானந்தா ஆரம்பித்து வைத்த போலிச் சாமியார் டைட்டில் மெகா சீரியலில் லேட்டஸ்ட் வரவு நித்தியானந்தம் என்பதை தவிர இந்த விசயத்தில் என்ன கருமாந்திரப் புதுச்செய்தி இருந்துவிடப் போகிறது? பிரேமானந்தா, காஞ்சி காம கேடி, குலுக்கிய கலுக்கி பகவான் அம்மா சாமி காஞ்சி காமதேவன் தேவநாதன், சத்திய சாய்பாபா, இன்னும் இன்னும் தொடரப்போகும் காம சாமிகளின் வரிசையில் நித்தியானந்தமும் ஒருவர்.

நடிகை ஒருவரோடு படுத்திருந்ததற்காக நித்தியை கைதுசெய்ய வேண்டும் எனச் சொல்லும் மக்களை முதலில் கைது செய்து உள்ளே தள்ளுங்கள், இந்த மானம் கெட்ட மடையர்களின் மூட நம்பிக்கைகளால் தானே இந்த காலி சாமியார்கள் பெருத்து கொழுத்து கிடக்கிறார்கள். தவறு செய்தவனை விட தூண்டியவனுக்கு தான் அதிக தண்டனையாமே? மக்களே உங்களுக்கு என்ன கருமத்திற்காக தண்டனை தரலாம்?