tag:blogger.com,1999:blog-285936472024-03-23T23:41:04.494+05:30கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ்"எனது கருத்துக்களை மறுப்பதற்கு உனக்கிருக்கும் உரிமைக்காக "Anonymoushttp://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comBlogger236125tag:blogger.com,1999:blog-28593647.post-23010879359082624922015-03-24T18:46:00.001+05:302015-03-24T18:57:32.539+05:30வெற்றிவேல் வீரவேல். சீமானின் தமிழ் தேசியப் புரட்டுக்கள். 2/2<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
முதல் பாகம் படிக்காமல் தவற விட்ட முப்பாட்டனின் பேரன்கள் <a href="http://kilumathur.blogspot.ae/2015/02/12.html">இங்கே சொடுக்கவும்.</a><br />
<br />
ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் சீமான் தன் கருப்புச் சட்டையோடு திராவிட இயக்க மேடைகளை வெறுத்து அதிமுக மேடைகளில் அதிகாரபூர்வமில்லா பேச்சாளராய் கோலோச்சிக் கொண்டே, " இனிமே எவனாச்சும் திராவிடம், தமிழ்னு பேசிகிட்டு கோபாலபுரம் கேட்டுக்கு அந்த பக்கம் போனீங்க? எல்லா பயலையும் கத்தியால குத்துவேன் என்று மார்க்ஸ், லெனின், சேகுவேரா, முப்பாட்டன் முருகன் எல்லாம் சிந்திக்காத ஒரு சித்தாந்தத்த முன் வைத்தபோது கூடவே இருந்த செவ்வாழைகள் எல்லாம் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று துள்ளிக் குதித்து ஓடிப்போன விவகாரம் எல்லாம் நாம் அறிந்ததுதான்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjAK_vabFu9HFxnO0XcFCJ16My5pstx8PPd6JpMEW51oFcYNe6j1PrJ59MHLkmsNxpxK1i3mBZ1A9FxOfctP5ls39Tzowz1gCSBEZIfZKxJTLqEC1RnROyR9Qer9fKNWv_8YrmY/s1600/download.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjAK_vabFu9HFxnO0XcFCJ16My5pstx8PPd6JpMEW51oFcYNe6j1PrJ59MHLkmsNxpxK1i3mBZ1A9FxOfctP5ls39Tzowz1gCSBEZIfZKxJTLqEC1RnROyR9Qer9fKNWv_8YrmY/s1600/download.jpg" /></a></div>
<br />
ஒரு பக்கம் ஈழ ஆதரவு, இன்னோர் பக்கம் ஈழத்துக்கு எதிரான ஜெயலலிதா ஆதரவு, என்று ரெட்டைக் குதிரையில் எந்தப் பக்கம் போவதென்று தெரியாமல் சவாரி செய்துகொண்டிருக்கும் சீமான், கொஞ்சம் அல்ல அதிகமே முற்றிய நிலையில் கைய்யில் எடுத்திருக்கும் விவகாரம் தமிழ் தேசியம், ஆசிவகம், முப்பாட்டன் முருகன். வரலாற்றின் முன் தங்களுக்கான இடத்தை தங்களின் முயற்சியால், உழைப்பால், வீரத்தால் தியாகத்தால் தங்களை தாங்களே கட்டமைத்துக் கொண்ட மாவீரர்களை, எல்லாம் இவன் என் பாட்டன், இவன் என் கொள்ளுப் பாட்டன், இவன் என் அண்ணன் என்று சொல்லிச் சொல்லியே தனக்கான இடத்தை அடைந்து விடலாம் என்ற மனோபாவம் எல்லோருக்கும் உரிய ஒன்றுதான் ஆனால், புராணங்களால் கட்டமைக்கப் பட்ட மொட்டை முருகனை முப்பாட்டன் என்பதில் என்ன விதமான தமிழ் தேசியத்தை சீமான் உண்டாக்க விரும்புகிறார் என்பதில்தான் குழப்பம்.<br />
<br />
டாக்டர் அம்பேத்கர் முன் வைத்த பண்பாட்டுப் புரட்சி மீட்டெடுப்பு இல்லாமல் சமூகப் புரட்சி சாத்தியமில்லை என்ற கோட்பாட்டு முழக்கத்தை இவர்கள் தங்களுக்கு வேண்டியபடி மடித்தும் ஒடித்தும் பாண்பாட்டை மீட்டெடுக்க பச்சை சட்டையணிந்து வெற்றி வேல் வீர வேல் என்று பழனி முருகனுக்கு பால் காவடி எடுக்கச் சென்றிருப்பதற்கு விளக்கம் சொல்கிறார்கள், நமக்கு காதெல்லாம் ரத்தம் வழிகிறது.<br />
<br />
சீமானின் அடிப்பொடிகள் மட்டும் என்ன சீமானைப் போலவே ஒரு பக்கம் சாதியவாதம் பேசிக் கொண்டே இன்னொருபக்கம் ஈழத்தை வென்றெடுப்போம் என்ற முழக்கத்தை முன் வைத்தவாரே கிடைத்த இடைவெளியில் கிடா வெட்டுகிறார்கள் தமிழ் தேசியத்தை.<br />
<br />
பெரியார், அண்ணா போன்ற அரசியல் மேதைகள் எல்லாம் கண்டெடுக்க முடியாத ஒரு சமூகக் கட்டமைப்பை தங்களின் அரசியல் ஆசைகளுக்காக அம்மையாரிடமும், இன்ன பிற குஞ்சுக் குளுவான் சாதி தேசியம் பேசும் ஆட்களுக்கும் நேர்ந்து விடப்பட்ட ஆடுகளைப் போலவே எந்த பக்கம் பாயச் சொன்னாலும் பாயத் தயாராக இருக்கும் பள்ளிக் கூடச் சிறுவர்களை வைத்துக் கொண்டே 2016 ல் பாய்வோம் முதல்வர் வேட்பாளருக்கு தயார் என்கிற சீமானின் தமிழ் தேசிய முயற்சி முதல்வர் வேட்பாளர் என்பதோடு முடிவடைந்து போகிறது.<br />
<br />
இந்திய அரசாங்கத்துடன் ஒரு அங்கமாக ஒட்டிக் கொண்டிருக்கும் தமிழகத்து முதல்வர் ஆகிவிட்டாலே தமிழ் தேசியம் வென்றெடுத்துவிட்டதாக ஆகுமென்றால் பச்சைத் தமிழன் பன்னீர்செல்வம் ஆட்சிகூட இவர்கள் அகராதியில் தமிழ் தேசியத்தின் ஆட்சிதான்.<br />
<br />
முருகனுக்கு ஒரு விளக்கம் சொன்னதற்கே சமூக வலைத்தளங்கள் எல்லாம் கழுவி ஊற்றியதில் நாரதரை பார்ப்பனராக்கி, சிவனையும் பார்வதியையும் முருகனையும் முப்பாட்டன்கள் ஆக்கியதில் ஆற்றங்கரைப் பிள்ளையார் கதிதான் அதோகதியாகிப் போனது.<br />
<br />
சாதிய வாதம், மொழிவாதம் இரண்டை மட்டுமே கொண்டு உண்டாக்கப் படும் தேசிய இனக் கொள்கைகள் மூலம் எந்த ஒரு தேசியத்தையும் ஒரு இம்மியளவுகூட முன்னெடுத்துச் சென்றுவிட முடியாதென்பது தெள்ளத் தெளிவு. அரசியலில் அரிச் சுவடி தெரியாத ஆட்களே சீமானின் பலம் என்பதால் கொள்கை ரீதியான விளக்கங்களையோ இல்லை அதற்கான மறுப்புகளை முன்வைப்போரின் கருத்துக்களையோ எதிர்கொள்ளும் ஆட்களோ இன்றி திருவிழாவில் காணாமல் போன குழந்தைகளைப் போல, திராவிடத்தையும், பெரியாரையும், கலைஞரையும் திட்டுவதும், தமிழ் தேசியத் தலைவர் என்று பிரபாகரனைக் கொண்டாடிக் கொண்டு வீரத்தமிழன் வீரப்பனுக்கு வீர வணக்கம் போஸ்டர் அடிப்பதிலும் மட்டுமே தங்கள் தேசியத்தை வென்றெடுக்க முடியும் என்று யார் சொன்னார்கள் என்று தெரியவில்லை.<br />
<br />
சீமானைத் தவிற யாரையுமே தமிழர்கள் பட்டியலில் ஏற்றுக் கொள்ளாத, தமிழ் தேசியம் பேசும் ஆட்கள் வசதியாக யாரையெல்லாம் சேர்க்கிறார்கள் என்று பார்த்தால் தாய்மொழி தமிழாக இருந்தால் மட்டுமே போதாது அவர்கள் சாதியாலும் தமிழர்களாக இருக்கவேண்டும் என்கிற ஒற்றைக் கொள்கை கிட்டத் தட்ட அவர்கள் வரையரையில் ஒட்டுமொத்த தமிழகமுமே வந்தேறிக் கூட்டம்தான்.<br />
<br />
வந்தேறிக் கூட்டம் தமிழகத்தில் மட்டுமா வந்தேறியது? உலகமெங்கும் இருக்கும் இந்திய, ஈழத் தமிழர்கள் எண்ணிக்கை பல கோடியைத் தாண்டுகிறது, அவர்களையெல்லாம் வந்தேறிகளே ஓடுங்கள் உங்கள் நாட்டுக்கு என்று சொல்லாதவரை சீமான் போன்ற அரசியல் தெளிவற்ற தமிழன் ஆளனும், என் மண், என் மக்கள், முப்பாட்டன்கள், ஆண்ட பரம்பரை பேசும் சாதிய மனோபாவம் விட்டு வெளியேற மறுக்கும் ஆட்களுக்கு கொண்டாட்டம்தான்.<br />
<br />
அதுவரை வெற்றிவேல் வீரவேல் என்ற முழக்கத்தோடு பழனி சித்தநாதன் பஞ்சாமிர்தம் வாங்கி சப்புக் கொட்டிக் கொண்டே நாக்கிலும் கொஞ்சம் நக்கிக் கொள்வோம். பழனியில் அவாள்கள் மணியாட்ட சிதம்பரத்தில் ஆறுமுகச் சாமியார் வெளியேற்றப் பட, அணைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டங்களுக்கு அவாள்கள் முழு வேகத்தோடு எதிர்க்க முப்பாட்டன் முருகனுக்கு இடையில் இருக்கும் பூநூல் போட்ட புரோக்கர்கள் துணையோடு தமிழ் தேசியத்தை வென்றெடுப்போம்.<br />
<br />
<br />
<br />
<br />
<br /></div>
Anonymoushttp://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-28593647.post-19786052387721881012015-02-13T00:43:00.002+05:302015-02-13T01:02:36.389+05:30வெற்றிவேல் வீரவேல். சீமானின் தமிழ் தேசியப் புரட்டுக்கள். 1/2<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
அப்போது நான் காதலில் விழுந்து கவிழ்ந்து என் கல்லூரிப் படிப்பை எல்லாம் மூட்டைகட்டி வைத்துவிட்டு விவசாயிக்கு கைய்யும் காலும் போதுமடா கல்லூரிப் படிப்பு ஏதுக்கடா என்று படு தீவிரமாய் விவசாயம் பார்க்க ஆரம்பித்திருந்தேன். பாஞ்சாலங்குறிச்சி திரைப்படத்தில் வரும் ஓன் ஒதட்டோர சிவப்பஏஏ... அந்த மருதாணி கடனா கேக்கும் கடனா கேக்கும் என்று மதுபாலாவின் இடைத் தேர்தலில் டெப்பாசிட்டுகளை இழந்துகொண்டிருந்தேன் அப்போதெல்லாம் இந்த சீமானை யாரென்று யாருக்குமே தெரிந்திருக்காத போது எனக்கு மட்டும் என்ன தெரிந்திருக்கவாப் போகிறது? இருந்தாலும் அந்த பாடலை அப்போதைய உச்ச கட்ட தொழில் நுட்பமான டிடிகே 90 கேசட்டு ஒன்றில் இரண்டு பக்கமும் இந்த ஒதட்டோர சிவப்பை மட்டுமே பதிவு செய்து ஓடவிட்டு என் பிபிஎல் ஆடியோ சிஸ்டத்தை அலறவிட்டு தனிமையில் காதலித்துக் கொண்டிருந்தேன்.<br />
<div>
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgPVQaU6QgxtgahoMjbDjqaAaBQLwEaeCAp8oGdyppq3ZT51pExDoMmGHggHEjRAqIVmlOLtG17c3qghH565fqzUrgMkoMrgHKyC2DXddUcLwg3aC7BnhcCNTXYiWGqBopJh_cv/s1600/10405316_10206172507138664_3201785836619409577_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgPVQaU6QgxtgahoMjbDjqaAaBQLwEaeCAp8oGdyppq3ZT51pExDoMmGHggHEjRAqIVmlOLtG17c3qghH565fqzUrgMkoMrgHKyC2DXddUcLwg3aC7BnhcCNTXYiWGqBopJh_cv/s1600/10405316_10206172507138664_3201785836619409577_n.jpg" height="123" width="320" /></a></div>
<div>
<br />
<div>
<br /></div>
<div>
நம்பினால் நம்புங்கள் அதற்குப் பின் சீமானை தம்பி படத்தில் இயக்குனராக கண்ட போதுதான் அவர் ஒரு ஈழப் போராளி என்றும் சாக்லேட் பாய் மாதவனை சண்டைக் கார மாதவனாக சைலண்டைக் கூட வயலண்டாகக் காட்டித்தான் சாதிக்க முடியும் என்ற உலகப் புகழ் பெற்ற காவியத்தில் நடிக்கவைத்து காணாமல் போக வைத்தவர் என்றும் கண்டுகொண்டேன்... என் சிங்களத்து கண்ணுக்குட்டீ பூஜா என்று வலையுலகம் எல்லாம் கொண்டாடும் பூஜாவுக்காக எல்லாவற்றையும் சகித்துக் கொண்டும் இருந்தேனோ என்னவோ. </div>
<div>
<br /></div>
<div>
ஆனால் அந்த செபஸ்டியன் சீமான், பகுத்தறிவாளார். (விக்கி பீடியா இப்படித்தான் சொல்கிறது அய்யன்மீர்) அப்போதும் அதன் பிறகும் கவிஞர் அறிவுமதியின் நிழலில் நின்று கொண்டு திராவிட இயக்க மேடைகளில் பேராசான் பெரியாரின் படம் தாங்கிய தேனீர் ஆடைகளில் (அட டீ சர்ட்டுதான் மக்களே) தோன்றி உங்க ராமன் எங்கடா பொறந்தான் என்று பொங்கிப் பொங்கிப் பேசியபோது அடடா எங்கேயப்பா இருந்தாய் என் பகுத்தறிவு போராளியே இத்தனை நாளாய் உன்னை ஒரு சாதாரண சினிமாக்காரன் என்றல்லவா நினைத்துக் கொண்டிருந்துவிட்டேன் என்று என்னை நானே குட்டிக் கொண்டேன். வந்தாலும் வந்தது ஈழப் போரின் இறுதிக் காட்சிகள்.</div>
<div>
<br /></div>
<div>
அதற்கு முன்போ அதற்கு பின்போ சந்தித்தோ சந்திக்காமலோ போட்டோ ஷாப்போ இல்லை ஒரிஜினல் ஷாட்டோ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனோடு எடுத்துக் கொண்டதாக ஒரு ஒற்றைப் புகைப்படத்தை வைத்தே தமிழ் தேசியப் போராளிகளின் ( அப்படித்தானே?) ஒற்றைத் தலைவனாய் தன்னை முன்னிறுத்திக் கொள்ள பட்ட பாடென்ன உயர்த்திய கைகள் என்ன? 2009ன் ஜனவரி மாதத்தில் தீக்குளித்த முத்துக்குமார் கொளுத்திப் போட்ட தீக்குச்சியின் நெருப்புக்களால் உண்டான சிறு துளிகளை ஒன்றாக்கி இயக்கமாக்கி கைதாகி சிறை சென்று கலைஞரை துரோகியாக்கி மகிழ்ந்து கொண்டிருந்த சீமான் உண்மையில் ஒரு கும்பலை தனக்குப் பின்னால் இழுக்கத்தான் செய்தார்.</div>
<div>
<br /></div>
<div>
சாதி, திராவிட அரசியலைத் தாண்டி வெளிவராத அரியலூர் மாவட்டம் செந்துறையில் என் அக்கா வீட்டுக்குப் போகும் போதுதான் கண்டேன் ஒரு பயங்கர பதாகையை. அவர் நாம் தமிழர் என்றொரு இயக்கத்தை தொடங்கியிருப்பதையையும் அதை வைத்து அவர் மற்றும் ஒரு அரசியலை அல்ல மாற்று அரசியலை தொடங்கி வைத்து அதில் குதிக்கவும் போகிறார் என்பதையும். இருப்போம் தமிழாய் நெருப்பாய் என்ற எல்லா தமிழ் படங்களுக்குக் கீழும் வரும் அந்த ஒன்றரைச் சொல் அடிவரி போல. அப்போது பல பேருக்கு என் நண்பர்களைப் போலவே இந்திய அரசியலும், சாதி அரசியலும், தேசியம் பற்றிய புரிதலும் இல்லாதிருந்தது. தமிழ் தேசியம் என்பதும் நாம் தமிழர் என்பதும் ஏதோ வானத்தில் இருந்து வல்லூரு தூக்கி வந்து போட்ட குயில் குஞ்சின் கீதம் என்றே நம்பிக் கொண்டிருந்தனர். பாவம் அவர்களுக்கு சி.பா ஆதித்தனாரையோ நாம் தமிழர் இயக்கத்தையோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எல்லாம் 2009க்குப் பின் அரசியல் பால பாடத்தை சீமானின் அடிச்சுவட்டில் தேடிய பிள்ளைகள். </div>
<div>
<br /></div>
<div>
ராஜீவ் கொலைவழக்கில் கைதாகி தூக்குத் தண்டணைக்காய் காத்திருக்கும் மூன்று பேர் விடுதலைக்காக பிணமான செங்கொடியின் பிணத்தின் மேல் தங்கள் அடித்தளைத்தை அதி தீவிரமாய் கட்டத் தொட்டங்கிய கட்சியின் தலைவர் அல்லவா எம்மான் சீமான்?. பாவம் அதற்குப் பின் கலைஞர் ஆட்சிக்கு வராமல் போனது எம் மக்கள் செய்த புண்ணியம், இல்லையென்றால் இன்னும் இன்னும் நெஞ்சடைக்கப் பேசி பல உயிர்களை பலி வாங்கி மக்கள் முதல்வருக்காய் மாண்டு போன மக்களின் ஓரங்க கின்னஸ் ரெக்கார்டுகளில் கை வைத்திருப்பார்.</div>
<div>
<br /></div>
<div>
2011 தேர்தலில் தமிழகத்தில் பல பத்தாண்டுகளாய் மாற்றம் வேண்டிய மக்கள் அய்யாவையும் அம்மாவையும் தேடிய அலையில் வாகாய் வந்து வண்டிக்குள் ஏறி என் தொப்புள் கொடி ஒறவுகளை கொன்றழித்த கயவர்களே என்று ஆக்ஸ், பாண்ட்ஸ், ரெக்ஸோனா பாடி ஸ்ப்ரே விளம்பர அம்பாசிடர்களுக்கு போட்டியாய் காங்கிரஸை கருவறுப்போம் என்றெல்லாம் பஞ்ச் டயலாக்குகள் பேசி காக்காய் உட்கார பணம் பழம்(பணம் -எழுத்துப் பிழை இல்லை) விழுந்ததில் பார்த்தீர்களா மக்களே என் பராக்கிரமத்தை என்று கதறியவாரே அம்மையாரின் பாதம் தொட்டு வணங்கி தன் அரசியல் பயணத்தை 2016ல் துவக்கி பாய்வோம் அதுவரை பதுங்குவோம் என்ற ஸ்பார்டகஸின் தத்துவத்தை தமிழுக்கு பெயர்த்து ஈழத்தாய் அம்மையார் பொரட்சி தலைவி வாழ்க, போரென்றால் பொதுமக்கள் சாகத்தான் செய்வார்கள் அதற்காக அம்மையாருக்கு எதிராக என் அரசியல் இருந்துவிடுமா என்று உலகமே இதுவரை கண்டிடாத ஒரு அரசியல் அரிச்சுவட்டியை கண்டெடுத்தார்.</div>
<div>
<br /></div>
<div>
பாவம் பிடித்தது பாம்பை அல்ல அந்த பாம்புகளை ஆட்டி வைக்கும் பிடாரியை என்று அறிந்த உடன் பழைய ஓய்வு பெற்ற ஈழப் போராளிகளான வைகோ, பழைய நெடுமாறன் ஆகியோரோடு சேர்ந்து முள்ளி வாய்க்கால் முற்றத்திலாவது கலந்து கொண்டு மீண்டும் ஒரு கிளர்ச்சியை உண்டாக்கலாம் என்று பார்த்தால் அண்ணன் வைகோ அவருக்கும் முந்தி "அங்க ராஜபக்ஷே கொல்றான் இங்க இவ கொல்றாளா ஜனநாயகத்த" என்று அம்மையாரை ஒருமையில் அழைத்து கன்னி வெடியை காலடியில் கொளுத்திப் போட்டதில் காளிமுத்துவின் மருமகனுக்கு சகல நாடிகளும் நொருங்கிப் போயின. பாவம் என்னதான் செய்வார் என் அன்பான ஒறவுகளே? கலைஞர் ஆட்சியாய் இருந்திருந்தால் கடற்கரை ஓரம் ஒரு கண்ணீர் அஞ்சலிக் கூட்டம் போட்டு கலைஞர் ஒழிக என்று கொள்கைப் பிரச்சாரமாவது செய்திருக்கலாம்.</div>
<div>
<br /></div>
<div>
நாடாளுமன்ற தேர்தலில் அம்மையாருக்கு ஆதரவாகவெல்லாம் இல்லை காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் எதிர் என்ற போர்வையில் மோடி அலையில் நாடே தத்தளித்து பல இடங்களில் பல் பிடுங்கப் பட்ட காங்கிரஸை ஒழிக்கக் கிளம்பி அதிமுக செலவில் சில பல பொதுக்கூட்டங்கள் பேசி ஒறவுகளை உசுப்பி விட்டதாக தனக்குத்தானே கதையளந்துகொண்ட சீமானின் அட்ராசிட்டிகளை அண்ணனின் தம்பியான அய்யநாதன் சொன்ன கதைகளை எல்லாம் தமிழ் கூறும் நல் உலகம் பார்த்து வாயாலா சிரித்தது? பாவம் பங்காளிச் சண்டை என்பது மஹாபாரதத்துக்கு பட்டும் சொந்தமா என்ன?</div>
<div>
<br /></div>
<div>
நமக்குத்தான் இருக்கவே இருக்கிறதே இலங்கை தமிழர்கள் (வாய்லயே போடுவேன் ஈழத் தமிழர்கள் என்று சொல்லுடா என்கிற ஆட்கள் அம்மையார் பற்றிய பயம் இல்லாத ஆட்களாய் இருக்கவேண்டும்) என்கிற பொன் முட்டையிடும் வாத்துக்கள் அவர்களை வைத்து பிழைப்பு நடத்தலாம் என்றால் யாரோ விக்னேஸ்வரனாம் இலங்கை வடக்கு மாநில முதல்வராகி "தமிழக அரசியல் வாதிகள் எங்கள் விஷயத்தில் அதிக ஆர்வம் காட்டாமல் இருப்பதே நல்லது " என்கிற ரீதியில் ஒரு வார்தை சொல்ல அதெப்படி அவர் என்னைக் கேட்காமல் சொல்லலாம் என்று தந்தி டீவியின் ரங்கராஜ் பாண்டேவின் மைக்கைக் கடிக்காத குறையாய் ஈழத் தமிழர்களின் அடுத்த தேசியத் தலைமையேற்க இருக்கும் சீமான் குமைந்ததை நாடே அறியும். </div>
<div>
<br /></div>
<div>
சரி அதுதான் போகட்டும் என்றால் பொங்கலுக்கு முன் இலங்கையில் தேர்தல் வைத்து ஈழத் தமிழர்களை ஏமாற்றப் பார்கிறார்கள் தமிழினமே தேர்தலைப் புறக்கணியுங்கள் என்று சீமான், வைகோக்கள் சொன்னதைக் கேட்காமல் குத்துங்க எஜமான் குத்துங்க என்று வடக்கும் கிழக்கும் சேர்ந்து குத்தியதில் மைத்திரி பால சிறி சேன மகிந்த ராஜபக்ஷேவை தோற்கடித்து தேர்தலில் ஜெயித்துவிட மைத்திரிபால அம்மையார் வெற்றி பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆட்களை வடை போச்சே என்று வருந்தியஆட்களை பேஸ்புக்கில் நாம் காண நேர்ந்தது மார்க் ஸுக்கர்பெர்க்கின் புண்ணியம், இன்றுவரை நாம் தமிழர்களின் பல அதி தீவிர தொண்டர்களுக்கு மைத்திரி என்ற பெயர் கொண்ட ஒரு ஆள் எப்படி ஆணாக இருக்க முடியும் எனற சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது. </div>
<div>
<br /></div>
<div>
மகிந்த, பசில்,கோத்தபாய ராஜபக்ஷேக்களை ஒழித்தாயிற்று இனி நமக்கென்னடா வேலை அடுத்தது தமிழ் மண் விடுதலைதான் அதற்கு ஒரே வழி வெற்றிவேல் வீரவேல் என்று கிளம்பி கோவனாண்டியாய் குன்றத்தில் குத்துக்காலிடாமல் நிற்கும் பழனி முருகனை கவணிப்போம் என்று பச்சை சட்டையில் கிளம்பிவிட்டார் அண்ணன் சீமான். </div>
<div>
<br /></div>
<div>
பெரியாரியக்க மேடைகளில் முழங்கி சேகுவேரா படம் கொண்ட உடைகள் அணிந்து பிரபாகரனுக்கு அடுத்த தேசியத் தலைவராய் வந்திருக்க வேண்டிய ஒரு ஆள் வெற்றிவேல் வீரவேல் என்று முழங்கி குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் அங்கே குவிந்ததம்மா கண்கள் எல்லாம் வண்டாட்டம் வண்டாட்டம் என்று குத்துப் பாடலுக்கு நடனம் ஆடி வரப் போகும் பகுத்தறிவாளன் சீமானைக் காண கண் கோடி வேண்டும்.</div>
<div>
<br /></div>
<div>
#இரண்டு பகுதிகளில் முதல் பகுதி முற்றும்.</div>
<div>
(தொடரும்)</div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
</div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-28593647.post-32036266180984049442015-02-01T21:33:00.001+05:302015-02-01T22:27:43.087+05:30ஊற்றிக் கொடுக்கிற அரசாங்கம்.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னால் ஒரு பள்ளி மாணவன் மது போதையில் மயங்கிக் கிடந்ததை காரணம் காட்டி அவனை பள்ளியில் இருந்தே விலக்கி இருக்கிறது பள்ளி நிர்வாகம். குடித்து போதையில் கிடந்த மாணவனுக்கு தண்டனை கொடுக்கும் சமூகம் ஊற்றிக் கொடுப்பதை, குடிப்பதை ஊக்குவித்து பண்டிகை நாட்களில் இலக்கு வைத்து சாராயம் விற்பதை ஒரு சமூகக் கடமையாகவே செய்து வரும் அரசாங்கங்களை என்ன செய்யப் போகிறது?.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEib0Nd7UjMJZ0HWLG7bhwod4jDk2wzZDYEUBhabxqq97TD508WLKHbHsUH1GWFVEc2ibICyRscqVandbGbseL1UeKdErLRFTNB-yzfB5w1rGb5ToRI_5PKe1D4nr8ofKZTjKGh7/s1600/31-1422697455-drunkard-student-600.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEib0Nd7UjMJZ0HWLG7bhwod4jDk2wzZDYEUBhabxqq97TD508WLKHbHsUH1GWFVEc2ibICyRscqVandbGbseL1UeKdErLRFTNB-yzfB5w1rGb5ToRI_5PKe1D4nr8ofKZTjKGh7/s1600/31-1422697455-drunkard-student-600.jpg" height="240" width="320" /></a></div>
<br />
<br />
முன்பும் அரசாங்கம் கள்ளுக்கடைகள் சாராயக் கடைகள் என்று நடத்தத்தான் செய்தது ஆனால் அது இப்போதிருப்பது போல தெருவுக்கு மூன்றாகவோ இல்லை எளிதில் சிறுவர்களால் எட்டப்படும் தூரத்திலோ இல்லை. நான் முதன் முதலாய் மது அதுவும் கிங்ஃபிஷர் பியர் அருந்தியது என் 19ம் வயதில். 1997 சென்னையில் கல்லூரி காலத்தில். இப்போதுபோல அப்போதும் மது கிடைக்கத்தான் செய்தது ஆனால் வளசரவாக்கத்தில் இருந்த நாங்கள் வடபழனி அல்லது சாலிகிராமம் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்கு முன்னால் இருக்கும் கடைக்குப் போனால்தான் கிடைக்கும். இதற்கு மலைத்தே அதை பல நாட்கள் தவிர்த்து வந்திருக்கிறோம். இப்போது நிலை அப்படியில்லை.<br />
<br />
முன்பெல்லாம் சிறு நகரங்களில் மட்டுமே இருந்த ஒயின் ஷாப்புகள் டாஸ்மாக்கின் வருகைக்குப் பின்னால் பட்டி தொட்டியெங்கும் படையெடுத்து ஒரு தலைமுறை இளைஞர்களின் வாழ்வையே கேள்விக்குறி ஆக்கியிருக்கிறது. என்னதான் குடிப்பதும் கும்மாளம் போடுவதும் தனிமனித சுதந்திரம் என்றாலும் எந்த வயதில் அதை அனுமதிப்பது என்ற ஒரு பெருங் கடமை அரசாங்கத்துக்கு உண்டு, சமூகத்துக்கும் உண்டு . கடந்த பத்தாண்டுகளில் அரசின் முக்கால் வாசி வருமானம் சாராயத்தில் இருந்தே வருகிறது. இலவசத் திட்டங்களை கொடுத்து ஒரு பக்கம் மக்களை ஏமாற்றிக் கொண்டே அரசாங்கம் இன்னொரு பக்கம் பல்லாயிரக் கணக்கான கோடிகளை நம் பாக்கெட்டில் இருந்து உருவிக்கொண்டிருக்கிறது.<br />
<br />
குடியை ஊக்குவிக்கும் அரசாங்கம் மதுவிலக்குத் துறை என்ற ஒன்றை என்னவோ கள்ளச் சாராய சாவுகளை தடுக்கவென்றே உருவாக்கப்பட்ட ஒரு துறையாக மாற்றி வைத்திருக்கிறது. சிறார்கள் மத்தியில் குடியின் கேட்டை விளக்கும் எந்த செயல்பாடும் அரசாங்கம் செய்யவில்லை, செய்ய விருப்பமில்லை. பாட்டில் மேலும் கடையின் முகப்பிலும் "குடிப்பழக்கம் உடல் நலத்துக்குக் கேடு" என்று எழுதி வைப்பதோடு தன் கடமையை முடித்துக் கொள்கிறது. அரசு மதுக் கடைகள் இல்லாவிட்டால் கள்ளச் சாராய சாவுகள் அதிகரிக்கும் என்று அக்கரையோடு விபரம் சொல்லும் அரசாங்கம் கள்ளச் சாராயத்தால் இறந்தவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கையை விட நாள்தோறும் அரசாங்கத்தின் நல்ல சாராயத்தால் நடக்கும் சாவுகளை மூடி மறைக்கிறது.<br />
<br />
போதைப் பழக்கத்துக்கு அடிமையான சிறுவர்கள் என்பதை நம் கண்முன்னே ஒரு சமூகம் மிக மோசமாக வளர்த்து வார்த்தெடுக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை மறந்து போகிறது அரசாங்கம். பத்தாவது தேர்வில் வெற்றி பெற்றதற்காக , தோல்வி அடைந்ததற்காக என்றெல்லாம் கும்பல் பார்ட்டிகள் நடத்துவது என்பது வெகு சாதாரணமாகப் போயிருக்கிறது இப்போது. 18 வயதுக்கும் மேல் அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கும் வயதை கண்டிப்போடு கடை பிடிக்கும் நாம் தன் வாழ்கையின் பாதையை தேர்வுசெய்யும் படிப்பை இழக்கச் செய்யும் மதுவை எல்லோருக்கும் சமமாக கிடைக்கும் படி வைத்திருக்கிறது. 18 வயதுக்கு மேலா என்று சான்றிதழ் கேட்டு விற்பனை செய்ய முடியாதுதான் ஆனால் விற்பனையாளருக்கு ஆளைப் பார்த்தாலே வயதைக் கண்டுகொள்ளும் பக்குவம் இல்லாமலா போகும்?<br />
<br />
மதுக்கடைகளை முறைப்படுத்த அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை. பொன் முட்டையிடும் வாத்துதானே அது?. கண்டிக்கப் பட வேண்டியது அரசாங்கத்தை மட்டும் அல்ல இந்த சமூகத்தையும்தான். கூட்டம் சேர்க்க குவாட்டரும் கோழிபிரியாணியும் கிடைத்தால் போதும் என்று வண்டியேறிப் போய் கட்சிகளிடம் தங்களை அடகு வைப்பதில் ஆகட்டும் ஓட்டுக்கு பணம் என்று தங்கள் உரிமைகளை அடகு வைப்பதாகட்டும் நாம் தானே நம்பர் ஒன்?.<br />
<br />
ஐந்தாம் வகுப்புக்கு மேலே மாணவர்களுக்கு மதுவின் தீமை குறித்தும் சமூகத்தில் அதனால் ஏற்படும் கேடுகள் குறித்தும் அப்படி ஒருவன் விரும்பும் பட்சத்தில் அவனின் 18 வயதுக்கும் மேல் அளவாக அதை அருந்துவது குறித்தும் பாடம் நடத்தலாம், அரசு சாரா தொண்டு நிறுவனங்களை விட சாராயக் கடைகளை நடத்தும் அரசுக்கே இதில் முழுப் பொறுப்பும் உண்டு. ஆனால் பரிதாபம் வாத்தியார்களே மாணவர்களை குவார்ட்டர் வாங்க அனுப்பிக் கொண்டிருக்கும் பள்ளிக் கூடங்கள் இருக்கும் மாநிலத்தில் எதுவுமே சாத்தியமில்லை. <br />
<br />
கள்ளச்சாராய சாவுகளை விட அதிகமான மரணங்கள் போதையின் விளைவால் ஏற்படுகின்றன என்பது எவ்வளவு உண்மை?. குடிக்கப் பணம் கொடுக்காத தாய், மகன், மகள், கணவன், என்று நாள் தோறும் நடக்கும் கொலைகள் மட்டுமே பல நூறுகள், இது மட்டுமில்லாமல் போதையில் அடித்துக்கொண்டு சாகிற ஆட்கள்தான் எத்தனை? போதைக்கு அடிமையாய் உடல் நலம் பாதிக்கப் பட்டு நிகழ்கிற சாவுகள் கணக்கில் அடங்காதவை . சாராயத்தை அரசாங்கம் முறைப் படுத்தாதவரை இதெல்லாமே நடக்கும்.<br />
<br />
இளம் சிறுவர்கள் போதைக்கு அடிமையாவதென்பது சமூகத்தால் மட்டுமோ இல்லை அரசாங்கத்தால் மட்டுமோ இல்லை, குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் அப்பன், அம்மாவிடம் குடித்துவிட்டு சண்டை பிடிக்கும் மகன், தந்தையிடம் குடித்துவிட்டு தகராறு செய்யும் மகன் என்று குடும்பத்துக்குள்ளேயேதான் எத்தனை குடிகாரர்கள்? 1997க்கு முன்னர் என் குடும்பத்தில் சாராயம் கள்ளு என்ற எந்த போதையின் வாசனை கூட அறிந்தவர்கள் இல்லை. என் தாத்தா, அப்பா உட்பட, நான் அவ்வப்போது கொண்டாட்ட மன நிலைகளில் மட்டும் அளவாக அல்லது யாருக்கும் தொந்தரவு இல்லாமல்.<br />
<br />
நான் குடிக்கிறேன் என்பது என் வீட்டில் அப்பா,அம்மா,மனைவிக்கு மட்டும் தெரியும் ஆனால் ஒரு நாளும் அவர்கள் முன் நான் குடித்துவிட்டு நின்றதில்லை ஆனால் இப்போது சிறுவர்கள் அப்பனுக்கு வாங்கிக் கொடுப்பதும், அப்பன் ஆம்லேட் போட்டுக் கொடுப்பதும் சர்வ சாதாரணமாய் ஆகியிருக்கிறது. மகனுக்கும் மகளுக்கும் முன்னால் குடித்துவிட்டு போவதற்கும் பேசுவதற்கும் வெட்கப் பட்ட காலம் போயே போய் விட்டது போலும்.<br />
<br />
டாஸ்மாக் விற்பனையில் சக்கை போடு போடும் தமிழக அரசாங்கமே தொழில் துறை வளர்ச்சி முடங்கிப் போய் இரண்டு லட்சம் கோடி கடனில் தள்ளாடிக்கொண்டிருக்கிறது. இது எதுவும் தெரியாமல் நாமும் தள்ளாடிக் கொண்டுதான் இருக்கிறோம். இளம் சிறார்களின் மதுப் பழக்கத்தை காரணம் காட்டி அவனை பள்ளியில் இருந்து விலக்கும் பள்ளிக் கூடம் என்பது சமூகக் கேடு ஒரு இளம் குற்றவாளியைத்தான் அது உருவாக்க முடியும்!. மாறாக அவனுக்கான மது பற்றிய புரிதல்களை ஏற்படுத்தி அவனுக்கான கல்வியை சரிவரக் கொடுப்பதே நல்ல பள்ளிக்கும் ஆசிரியர்களுக்கும் அரசாங்கத்துக்கும் அழகு. ஊருக்கு ஊர் பள்ளிக் கூடங்களில் வாத்தியார் வருகிறாரா இல்லை பள்ளிக் கூடம் நடைபெறுகிறதா என்பதைக் கவனிக்கத் தவறும் அரசாங்கம் டாஸ்மாக்கில் மட்டும் விற்பனை சரிந்தால் உடனடி நடவடிக்கை எடுப்பதென்பது வெட்கக் கேடு.<br />
<br />
சாராயக் கடைகளை மூடுவதென்பது சாத்தியமில்லாத ஒன்று என்கிற அளவுக்கு மது அடிமைகளை உண்டாக்கி வைத்திருக்கிறோம் நாம், குடிக்கட்டும் அவன் அவன் சம்பாத்தியத்தில் அவன் அவன் சுய முடிவெடுக்கும் வயதில் குடிக்கட்டும் யாருக்கும் தொந்தரவில்லாத குடியை.<br />
கல்யாணத்துக்கும், காதலுக்கும் வயது வேண்டும், சாதி, மதம் வேண்டும் என்கிற ஆட்கள் எல்லாம் ஒன்று கூடம் இடம் டாஸ்மாக்தான் அங்கேதான் சாதிச் சண்டைகள் இல்லை. அதற்காக ருசியாக இருக்கிறதே என்று விஷத்தையா குடிக்க முடியும்?<br />
<br />
மதுவை, குடியை முறைப்படுத்துங்கள், விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் அரசுகளே இந்த சமூகத்துக்கு குறைந்தபட்சம் ஏதேனும் நல்லது செய்ய விரும்பினால். மாணவர்களிடையே விழிப்புணர்வைத் தொடங்குங்கள், எதிர்காலச் சமூகத்தையே குடியில் ஆழ்த்தி கொலை செய்துவிட்டு நீங்கள் யாரைத்தான் ஆளப் போகிறீர்கள்?<br />
<br />
குடிக்கிற எல்லா அப்பன்களுக்கும் ஒரே ஒரு வேண்டுகோள் நீங்கள் குடிப்பதை குறைந்தபட்சம் உங்கள் குழந்தைகளுக்குத் தெரியாத அளவிலாவது பார்த்துக் கொள்ளுங்கள்.<br />
<br />
<br />
<br />
<br /></div>
Anonymoushttp://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-28593647.post-5249101271406998652015-02-01T01:33:00.002+05:302015-02-01T01:33:39.231+05:30உமாசங்கர். IAS or ISIS ?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
அரசுப் பதவியில் இருப்பவர்கள் மத மாற்றங்களில் ஈடுபடுவது என்பது இன்றோ நேற்றோ தொடங்கியது இல்லை. ஆயிரக் கணக்கான ஆண்டுகளாய் தொடர்ந்துவரும் ஒரு சமூக அயோக்கியத்தனம். இதில் கட்டாய மத மாற்றம், தானே விரும்பி ஏற்றுக் கொண்ட மத மாற்றம் இல்லை வேறென்ன பெயர் வைத்து வேண்டுமானாலும் அழைத்துக் கொள்வோம்.<br />
<br />
ஈரானில் 1300 ஆண்டுகளுக்கு முன்னால் இஸ்லாமியர்களின் கட்டாய மத மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பார்ஸிக்களின் வெளியேற்றத்தில் இருந்து இன்று ISIS இன் மத்திய கிழக்கில் தாங்கள் வென்ற இடங்களில் தொடரும் மத மாற்றம் வரை தொடர்ந்த அயோக்கியத் தனமான வரலாறு. சைவர்களால் கழுவில் ஏற்றப்பட்ட சமனர்கள் தொட்டு இந்துக்கள் அல்லாதவர்கள் வெளியேற வேண்டும் என்ற பாஜக/ஆர்.எஸ்.எஸ்/பெருந்தலைகளின் அரைகூவல் என்று இன்றும் தொடர்கிறது அந்த அவலம்.<br />
<br />
மதத்தின் பெயரால் மனிதம் இழப்பவர்கள் மத்தியில் கல்விக்கொடுக்கிறோம் என்று வணிகம் செய்யவந்த கிருஸ்துவம் ஆண்ட சமூகத்தில் இருந்து அடிமைப் பட்டவர்கள் என்றும் தாழ்த்தப் பட்டவர்கள் என்றும் மீட்கவந்த மேய்ப்பர்கள் கடற்கரை ஒட்டிய பகுதிகளில் செய்த மத மாற்றம் இன்று வேர்விட்டு ஒரு குறிப்பிட்ட வெற்றியும் பெற்றிருக்கிறது.<br />
<br />
கல்வியும் பதவியும் மட்டுமே ஒரு மனிதனின் மத விருப்பு வெறுப்புகளையோ இல்லை அவனின் மதம் குறித்த முட்டாள் தனங்களையோ தெளிவுபடுத்துவதில்லை என்பதற்கு அரசியல்வாதிகள் முதற்கொண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வரை ஏகப் பட்ட உதாரணங்கள் கிடைக்கின்றன.<br />
<br />
காஞ்சி சங்க்கராச்சாரியாரை ஆட்சிக்கு வந்ததும் பதவிக்கு வந்ததும் பார்க்காத ஆட்களே இல்லை அது ஜெயலலிதாவோ அப்துல் கலாமோ இல்லை டி.என் ஷேசனோ. அவர்களின் தனிப்பட்ட விவகாரம் என்று ஒதுக்கிவிட முடியாது. பதவியில் இல்லாத போது அவர்கள் பரதேசிக் கோலத்தோடு பரமனை தரிசிக்கப் போனாலும் இல்லை நிர்வாண கோலம் கொண்டு சன்யாசம் போனாலும் நமக்கு அது குறித்த கவலை இல்லை.ஆனால் மக்களுக்கான சேவை செய்யப் போகிறோம் என்ற பெயரில் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டும், மக்களாட்சியின் பெயரால் பதவியை ஏற்றுக் கொண்டும் செயல் படும் ஆட்கள் மதத்தின் பின்னால் போவதென்பது பைத்தியக்காரத்தனம் இல்லையா?<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEga2M5W2WxLJtlyA8Ec62zxiLxMdSoNebUeXgFgwSf_7GqaJ4z7bpQSn8WsBBxhobOwhPvJyxALgO2SkyrLytaOVJqIGceytLisbxZ6BDM9NDJx1sXmQEqncmNboehPsSkMzOYj/s1600/don+addis+mr+science+cartoon+religion+church+intelligent+design+myth+jesus+christianity+st+petersburg+times.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEga2M5W2WxLJtlyA8Ec62zxiLxMdSoNebUeXgFgwSf_7GqaJ4z7bpQSn8WsBBxhobOwhPvJyxALgO2SkyrLytaOVJqIGceytLisbxZ6BDM9NDJx1sXmQEqncmNboehPsSkMzOYj/s1600/don+addis+mr+science+cartoon+religion+church+intelligent+design+myth+jesus+christianity+st+petersburg+times.jpg" height="275" width="320" /></a></div>
<br />
<br />
பாஜக ஆட்சியில் இந்துத்துவாக்கள் ஆடுகிற ஆட்டத்தை கண்டிக்கும் நாமே இந்த இஸ்லாமியத்தின் பெயரால், கிருஸ்துவத்தின் பெயரால் மூட நம்பிக்கைகளை மக்களிடையே பரப்பும் ஆட்களின் முகத்திரையையும் கிழிக்கவேண்டி இருக்கிறது. உமாசங்கர் விவகாரமும் அப்படியான ஒன்றே. தந்தி தொலைக்காட்சியில் பேட்டியின் போது உமா சங்கரின் பேச்சு உளரல்களின் உச்சம் விட்டால் சாத்தானே அப்பால் போ என்று ரங்கராஜ் பாண்டே என்ற பாஜக அடி வருடியை அடித்து துரத்தி விடுவாரோ என்று பயந்து போகிற அளவு.<br />
<br />
ஏன் உமா சங்கரை மட்டும் கண்டிக்க வேண்டும்? அரசாங்க அலுவலகங்களில் இருக்கும் ஆயுத பூஜைக் கடவுள்களை வழிபடும் ஆட்கள் மட்டும் என்ன யோக்கியம்? படு விமரிசையாக ஆயுத பூஜையில் தங்களின் ரைஃபில்களை பூஜையில் வைத்து விட்டு இஸ்லாமியத்தில் பிறந்த குற்றத்துக்காக முஸ்லிம் தீவிரவாதிகளை தேடுகிறோம் என்ற பேரில் அப்பாவிகளை காவல் நிலையத்துக்குள்ளேயே சையது முகமதுக்களை சுட்டுக் கொன்றொழிக்கும் காளிதாஸ்கள் இருக்கும் நாடுதானே இது?<br />
<br />
அரசு அலுவலகங்களில் அரசுத்துறை வளாகங்களில் எந்த மதக் கடவுளின் படமும் சிலையும் கோவிலும் இருக்கக் கூடாதென்பதெல்லாம் வெறும் ஏட்டளவில் மட்டும்தானே இருக்கிறது? ஆயுத பூஜை தீபாவளி பொங்கல் கிருஷ்ணஜெயந்தி கொண்டாடும் காவல் நிலையங்கள் ஏகப்பட்டது உண்டு இந்தியாவில். ஏன் எந்த காவல் நிலையத்திலும் ரம்ஜான், கிருஸ்துமஸ் கொண்டாடப் படுவதில்லை? நாம் தான் மத சார்பற்ற இந்தியா ஆயிற்றே? ஆனால் செய்தி அது அல்ல.<br />
<br />
தங்களின் பதவிக்காலத்திலேயே ஃபயர், ஃபயர் ஃபயர் என்று கிருஸ்த்துக்களை பயமுண்டாக்கி மயங்கி விழச் செய்யும் எல்லை வரை மெத்தப் படித்த மேதாவிகள் போய்விடக் கூடாது என்பதே நம் கவலை. பாஜக மந்திரிகள் ஆளுக்கு 15 லட்சம் என்ற கருப்புப் பணத்தை திரும்பக் கொண்டுவரும் திட்டத்தை எல்லாம் கைவிட்டு ஆளுக்கு ஐந்து குழந்தைகள் என்ற இந்து ராஸ்டிரீய திட்டம் தீட்டிக் கொண்டிருக்கும் வேளையில் மக்களுக்கான ஆட்சிப் பணியில் இருக்கும் ஒருவரிடம் இப்படி ஏசு கிருஸ்து நேரடியாக இறங்குவார் என்று நான் கண்டிப்பாக எதிர்பார்க்கவில்லைதான்.<br />
<br />
பதவியில் இருக்கும் ஆட்கள் மதம் இனம் சார்ந்த பற்றோடு இருப்பதென்பது உலகமெங்கும் இருக்கும் நச்சு, இஸ்ரவேலர்கள் முதல் இசிஸ் வரை உதாரணங்கள் கோடி உண்டு.கூன்பாண்டியன், மோடி, ராஜபக்ஷே, ஹிட்லர், இடி அமீன், சதாம் ஹூசேன், என்று வரலாறு ஏகப்பட்ட அத்தியாயங்களை நமக்குமுன் விரித்தே வைத்திருக்கிறது. நாம்தான் மதத்தின் மேல் இருக்கும் பற்றால் கண்களை குருடாக்கிக் கொள்கிறோம்.<br />
<br />
மக்களுக்கான பதவியில் இருக்கும் ஆட்களின் மதச் சார்பு என்பது ஒரு வித மறைமுக மிரட்டல் என்று சொன்னால் அது எத்தனை உண்மை?. பாஜகவை விமர்சிக்கும் ஆட்கள் இதைக் கண்டு கொள்ளாமல் இருப்பது என்பது சிறுபான்மை மக்களின் ஓட்டுவங்கியை மட்டும் குறிவைத்து என்பது வெட்கக் கேடு இல்லையா?<br />
<br />
உதாரணத்துக்கு தான் சார்ந்த மதத்தின் மேல் இத்தனை பற்று வைத்திருக்கும் ஒரு ஆள் நாளெயே ஒரு மதம் சார்ந்த கிருஸ்துவ மதத்துக்கு எதிரான நிலையில் இருக்கும் ஒரு நபர் ஏதாவது மனுகொடுத்தால் என்ன ஆகும் இந்த கேள்வி உமாசங்கருக்கு மட்டும் இல்லை, காஞ்சி சங்கராச்சாரியாரை தரிசிக்கப் போகும் அப்துல்கலாம்களுக்கும் பொருந்தும்.<br />
<br />
58 வயதுக்கும் மேல் நீங்கள் உங்கள் பதவிகளைத் துறந்தபின் செத்தவனைப் பிழைக்க வைய்யுங்கள், ஐ.எஸ்.ஐ.எஸ் இல் சேருங்கள் இல்லை ஜெயேந்திரருக்கு வாழை இலை எடுக்கவோ நித்தியானந்தாவின் படுக்கை அறையில் ஸ்பை கேமரா செட் செய்யவோ போங்கள்.<br />
<br />
கொஞ்சமாவது மக்கள் பணியாற்ற விரும்பும் ஆட்கள் மதத்தில் இருந்து தள்ளி இருங்கள். இல்லை மதப் பணியாற்றப் போங்கள். மக்கள் பிழைத்துப் போகட்டும்.<br />
<br />
<br />
<br />
<br />
<br /></div>
Anonymoushttp://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-28593647.post-11872323742917332962015-01-30T15:27:00.002+05:302015-01-30T15:27:58.539+05:30நெகிழ வைத்த திரைப்படங்கள் -7 Der Untergang (Downfall)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
பொதுவாகவே சரித்திரங்கள், இரண்டாம் உலகப் போர், உண்மைக் கதைகளின் அடிப்படையில் உருவாக்கப் பட்ட திரைப்படங்கள் எப்போதும் என்னைக் கவருபவை. சில படங்கள் படு அயோக்கியத் தனமாக உண்மையைக் கொலைசெய்து வரலாற்றுத் திரிப்பில் ஈடுபட்டாலும் சில முத்துக்களும் ஆங்காங்கே கிடைக்கத்தான் செய்கின்றன அப்படியான முத்துக்களில் ஒன்றுதான் இந்த Downfall (Der Untergang- German, 2004). நிறைய வரலாற்று ஆவணங்களின் அடிப்படையிலும் நேரடி சாட்சிகளின் அடிப்படையிலான ஆதாரங்களைக் கொண்டும் உருவான இப் படம் நம்மை இரண்டாம் உலகப் போரின் கடைசி தினங்களுக்கு கொண்டு செல்கிறது.<div>
<br /></div>
<div>
Downfall.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg6gu2-rUNqX0Ygko-pTRWbZYA2bqUUbBm1kdrtvP9NkdLpBKJ3TUtVycY24-m7BVNzIkn2S2CQQu5Ik4YO8_WS4xSsEk0dveNsFQFc5XMYSbt8MgmQ4JInMyL5JHTyyubNgpnO/s1600/hYYV7Ls2FeogjU5Eydv62mny14f.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg6gu2-rUNqX0Ygko-pTRWbZYA2bqUUbBm1kdrtvP9NkdLpBKJ3TUtVycY24-m7BVNzIkn2S2CQQu5Ik4YO8_WS4xSsEk0dveNsFQFc5XMYSbt8MgmQ4JInMyL5JHTyyubNgpnO/s1600/hYYV7Ls2FeogjU5Eydv62mny14f.jpg" height="320" width="228" /></a></div>
<div>
இரண்டாம் உலகப் போருக்கு முன்னாலிருந்து ஹிட்லரின் தற்கொலை வரை ஹிட்லரிடம் அந்தரங்க உதவியாளராக இருந்த ஃப்ராடி ஜங் (Traudi Jung (1920-2002) தான் இளம் வயதில் ஹிட்லரிடம் உதவியாளராகச் சேர்ந்ததை நம்மோடு சொல்ல ஆரம்பிக்கிறது கதை. படத்தின் ஆரம்பத்திலும் முடிவிலும் ஃப்ராடி ஜங் தோன்றியிருக்கிறார்.</div>
<div>
<br /></div>
<div>
ஹிட்லரின் பிறந்த நாள் 1945 ஏப்ரல் 20ம் தேதி நள்ளிரவில் தங்களுக்கு மிகச் சமீபத்தில் குண்டு வெடிப்பதைக் கேட்ட ஃப்ராடி ஜங்கும் அவரின் உடன் பணிபுரிவோரும் எழுந்துகொள்ள ஹிட்லரும் விழித்துக் கொண்டு ஆர்ட்டிலரி தாக்குதல்கள் எங்கு எப்படி எவ்வளவு தூரத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்று கேட்க ஆரம்பிக்கிறார். ஜெனரல் பர்ஹ்டாஃப் பெர்லினில் இருந்து 12 கிலோமீட்டர்களுக்கு அப்பால் ரஷ்யாவின் படை வந்துகொண்டிருப்பதையும் தெரிவிக்கிறார்.</div>
<div>
<br /></div>
<div>
பிறந்தநாள் நிகழ்வின் போது ஹிட்லரின் எஸ்.எஸ் ஆர்மியின் ஜெனரலான ஹென்ரிச் ஹிம்லரும் ஹெர்மன் ஃபாக்லீனும் சீக்கிரமே பெர்லின் மேற்குக் கூட்டணிப் படைகளிடம் விழுந்துவிடும் என்றும் அதற்கு முன் ஹிட்லர் பெர்லினை விட்டு வெளியேறிவிடுவது நல்லது என்றும் தெரிவிக்கிறார்கள். ஆனால் பெர்லினுக்குள் நுழையும் வேளையில் ரஷ்யப் படைகள் அழிக்கப் படும் என்றும் இல்லாவிட்டால் பெர்லின் என்னோடு சேர்ந்தே விழும் என்றும் கூறி வெளியேற மறுத்துவிடுகிறார் ஹிட்லர். இதற்குப் பின்னால் ஹிட்லருக்குத் தெரியாமல் ஜெர்மனி சரணாகதி அடைவது பற்றி கூட்டணிப் படைகளுக்கு தகவல் அனுப்பி வைக்கிறார் ஹிம்லர்.</div>
<div>
<br /></div>
<div>
ஹிட்லரின் எஸ்.எஸ் படையில் மருத்துவராக பணியாற்றும் டாக்டர் எர்ன்ஸ்ட்டுக்கு மற்றுமொரு போர்முனைக்கு போகும் படி கட்டளை வருகிறது ஆனால் பெர்லினின் மைய்யப் பகுதியில் இருக்கும் மக்களுக்கும் போர் வீரர்களுக்கும் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதால் மருத்து விடுகிறார். பின்னர் ஹிட்லரின் மறைவிடத்துக்கு அருகிலேயே இருக்கும் ஒரு மறைவிட மருத்துவமணையில் உள்ள காயமடைந்தவர்களுக்கு மருத்துவம் தொடர்கிறார்.</div>
<div>
<br /></div>
<div>
ஹிட்லரின் அமைச்சர்களும், ஈவா ப்ரானும் பெர்லினை விட்டு வெளியேறிவிடவும் வேறெங்காவது ஒரு மறைவிடத்தில் இருந்து அரசியலைத் தொடரலாம் என்றும் தெரிவிப்பதையும் மறுத்து விடுகிறார் ஹிட்லர். மேலும் போரின் அடுத்த நகர்வாக 9ம் படையையும் 12ம் டிவிஷனையும் ரஷ்யப் படைகளுக்கு எதிராக போரைத் தொடங்கும்படியும் அதன் மூலம் பெர்லின் செம்படையின் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றும் நம்புகிறார்.</div>
<div>
<br /></div>
<div>
அடுத்தநாளே ஹிட்லரின் படைத் தலைவர்களுல் ஒருவரான ஹார்மஸ் கெர்ப்ஸ் வந்து 9 மற்றும் 12ம் படை அணிகளின் எண்ணிக்கை குறித்தும் அவை எந்தப் பக்கத்திலும் நகர முடியாதபடி சூழப் பட்டுள்ளதையும் தெரிவிக்கிறார்கள். பின்னர் தன் படைத் தலைவர்கள் அமைச்சர்கள் முன்னிலையின் எல்லோரையும் துரோகிகள் என்றும் மோசடிப் பேர்வழிகள் என்றும் திட்டித் தீர்க்கிறார். அதன் பின் பெர்லினை விட்டு வெளியேறவேண்டும் என்ற மற்ற அனைவரின் கோரிக்கையையும் நிராகரித்து தற்கொலை செய்து கொள்வது என்ற முடிவுக்கு வருகிறார் ஹிட்லர்.</div>
<div>
<br /></div>
<div>
ஹிட்லரின் கொள்கைப்பரப்பு அமைச்சர் ஜோஸப் கோயபல்ஸ் போர்க்களத்தில் இருந்து வெளியேரும் பொதுமக்களைக் கொல்லும் படி ஆணையிடுவதை ஜெனரல் மொன்க்ஃஹே எதிர்க்கிறார். போர்க்களத்தில் இறக்கும் பொதுமக்களைப் பற்றி தமக்கு எந்தக் கவலையும் இல்லை என்று தெரிவிக்கிறார் கோயபல்ஸ். (நமக்கு போரென்றால் பொதுமக்கள் சாகத்தான் செய்வார்கள் ஞாபகம் வருகிறது.)</div>
<div>
<br /></div>
<div>
போரில் ஜெர்மன் தோல்வி நிச்சயம் ஆனதும் ஹிட்லர், ஈவா, இருவரும் தங்களின் கடைசி கடிதத்தை தயாரிக்கிறார்கள். போர் வீரர்களைத் தவிர்த்து தங்களோடு இருப்பவர்கள் இருக்கலாம் போக விரும்புவோர்கள் போகலாம் என்றும் ஹிட்லர் அறிவிக்கிறார். ஃப்ராடி ஜங்குக்கு ஒரு சயனைடு பேழையைத் கொடுக்கிறார். ஈவாவை பெர்லினை விட்டு வெளியேரச் சொல்லும் ஈவாவின் தங்கைக் கணவன் பெர்லினைவிட்டு தப்பிச் செல்கையில் பிடிபட்டு மரணதண்டனைக்குள்ளாகிறான்.</div>
<div>
<br /></div>
<div>
போரின் கடைசி நாட்களில் தன் நிதானம் இழக்கும் ஹிட்லர் ஹெர்மன் கோரிங் ஹிட்லருக்குப் பின்னால் தனக்கு போர் நடத்த அனுமதி வேண்டும் என்று கேட்டு ஒரு தகவல் அனுப்ப அதைக் கண்டு கொதிக்கும் ஹிட்லர் ஹெர்மனைக் கைது செய்ய உத்தரவிடுகிறார். ராபர்ட் ரிட்டர் வான் க்ரிம்மை அழைத்து லுட்வாஃபேவின் கமாண்ட்டர் இன் சீஃப் ஆக நியமிக்கிறார் ஹிட்லர்.</div>
<div>
அதன் பின்னர் தன் குடும்பத்தோடு வெளியேர வேண்டி அனுமதி கேட்கும் டாக்டர் எர்னஸ்டுக்கு ஹிட்ட்லர் அனுமதி மறுக்க எர்னஸ்ட் தன் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்கிறார்.</div>
<div>
<br /></div>
<div>
ஹிட்லரின் மறைவிடத்தில் இருந்து 400 மீட்டர் தூரம் வரை கூட்டணிப் படைகள் முன்னேறி விட்டதை அறிந்த ஹிட்லர் ஈவா ப்ரானை திருமணம் செய்து கொள்ளும் முன்னர் ஃப்ராட்டியிடம் தன் கடைசி கடிதத்தை எழுதச் சொல்கிறார். பின்னர் கோயபல்ஸையும் அவரின் குடும்பத்தையும் பெர்லினை விட்டு வெளியேறிப் போய்விடும் படியும் கேட்டுக் கொள்கிறார் ஆனால் கோயபல்ஸ் மறுத்துவ்விடுகிறார். ஈவா ப்ரானும் ஹிட்லரும் திருமணத்துக்குப் பிறகான விருந்து முடிந்ததும் தன் அந்தரங்க பணியாளர்கள் அனைவரிடமும் தங்களின் கடைசி வணக்கத்தையும் வாழ்த்தையும் கூறி விடைபெற்றுக் கொண்டு அறைக்குள் சென்று தற்கொலை செய்து கொள்கிறார்கள். </div>
<div>
<br /></div>
<div>
பின்னர் இருவரின் உடலும் ஹிட்லரின் விருப்பப் படி மெய்க் காவலர்களால் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தப் படுகிறது. அதன் பின்னர் கோயபல்ஸும் மனைவியும் குழந்தைகளுக்கு சயனைடு கொடுத்து கொன்றுவிடுகிறார்கள். கோயபல்ஸ் மனைவியை சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்கிறார். பெர்லின் ரஷ்ய கூட்டணிப் படையிடம் தோல்வி அட்டைந்ததை அறிந்த பல ராணுவ அதிகாரிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள், ஃப்ராடி கடைசி நேரத்தில் பெர்லினை விட்டு வெளியேறிச் செல்வது என்ற முடிவெடுத்து வெளியேறிவிடுகிறார்.</div>
<div>
<br /></div>
<div>
1945ல் போரின் கடைசி நாட்களை மட்டுமே படம் விவரிக்கிறது. மாபெரும் படை பலத்துடனும், மக்களின் முன்னால் உரையாற்றியும் கர்ஜித்த ஹிட்லரின் கடைசி காலம் அத்தனை வேதனையும் வலியும் நிரம்பியதாக இருந்திருக்கிறது. ஹிட்லரின் பின்னால் அணிவகுத்து நின்றவர்கள் கிட்டத்தட்ட அனைவருமே விசுவாசத்தின் அடையாளமாக தோன்றுகிறார்கள்.</div>
<div>
<br /></div>
<div>
பல்லாயிரம் யூதர்களை கொன்று குவித்த ஹிட்லருக்குள் இருக்கும் கடைசிக் கால நெருக்கடிகளும், அவரின் வேதனையும் அவரைச் சுற்றி கோபத்தை மறைத்தபடி இருந்தவர்களின் இயலாமையையும் அப்படியே நமக்கு உணர்த்துவதில் இயக்குனரும் நடிகர்களும் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஹிட்லரின் உதவியாளர்கள், ஜெனரல்கள், சமையல்காரர்கள் என எல்லோருக்கும் ஹிட்லரின் மேல் இருக்கும் அன்பு கடைசி வரை மாறுவதே இல்லை. ஒரு மாபெரும் இனப் படுகொலையாளனாக உலகுக்குத் தெரிந்த ஹிட்லரின் மறுபக்கம் இப்படி ஒருவருக்குமே தெரியாமல் போகக் காரணம் ஹிட்லரோடு சேர்ந்தே அவர்களும் மரணமடைந்ததுதான் போலும். </div>
<div>
<br /></div>
<div>
குறிப்பாக ஹிட்லரின் மரணத்துக்கு முன்னால் ஈவா ப்ரான் மகிழ்ச்சியோடு கொண்டாட்டங்களில் ஈடுபடுவதும், எப்போதும் சிரித்துக் கொண்டிருக்கும் முகத்தின் ஒரு பக்கம் ஒரு மறைமுகச் சோகம் ததும்புவதும் நமக்குள் என்னவோ செய்கிறது. ஹிட்லர் தன் பணியாளர்களோடு கடைசி விடைபெரும் போது அவர்களின் மனநிலை எப்படி இருந்திருக்கும்? அவர்களுக்குள் என்ன மாதிரியான அன்பு இருக்கிறது என்பதை எல்லாம் அற்புதமாக காட்சிப் படுத்தி இருக்கிறார்கள்.</div>
<div>
<br /></div>
<div>
ஹிட்லரின் மரணத்துக் பின்னால் கோயபல்ஸின் மனைவி தன் ஆறு குழந்தைகளுக்கும் தூக்க மருந்தைக் கொடுத்து பின்னர் அவர்கள் தூங்கிய பின்னர் ஒவ்வொருவர் வாயிலும் சயனைடு குப்பிகளை வைத்து உடைத்து மரணத்தின் வாசலுக்குள் தள்ளிவிடும் காட்சியும் ஒரு நிமிடம் இந்தக் குழந்தைகள் என்ன செய்தன? என்ற கேள்வியை விதைக்கின்றது. பல்லாயிரக் கணக்கில் கொன்று குவிக்கப் பட்ட யூதக் குழந்தைகளும் கூடவே.</div>
<div>
<br /></div>
<div>
இத்தாலியின் முசோலினி போரில் தோல்வியை நெருங்கிக் கொண்டிருந்தபோது தப்பிக்க முயற்சிசெய்து பிடிபட்டு கொலை செய்யப் பட்டார் அது போல் ஏன் ஹிட்லருக்கு நடக்கவில்லை என்பதற்கெல்லாம் இப் படத்தில் பதில் இருக்கிறது. போரில் கடைசி காலத்தில் ஹிட்லர் இல்லாத ஜெர்மனியை யாரும் நினைக்கக் கூட இல்லை. எல்லாம் ஹிட்லர், விசுவாசம் இனப் பாசம், ஹிட்லர் முசோலினியைப் போல பெர்லினை விட்டுப் போகவும் இல்லை, </div>
<div>
<br /></div>
<div>
ஹிட்லரின் கடைசி தினங்களுக்குள் நீங்களும் கொஞ்சம் வாழ விரும்பலாம், எத்தனை பெரிய கொடுங்கோலனுக்கும் வாழ்கை என்பது கடைசி காலங்களில் ஒரே மாதிரியாகவும் தனிமையிலும் கழியும் அது எப்படி என்பதைப் பார்க்க ஆவல் இருக்காதா என்ன?</div>
<div>
<br /></div>
<div>
<a href="http://www.imdb.com/title/tt0363163/?ref_=fn_al_tt_1">படம் குறித்த தகவல்களுக்கு..</a></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<div>
<br /></div>
<div>
</div>
</div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-28593647.post-79515992055380189692015-01-14T20:47:00.002+05:302015-01-14T20:47:53.381+05:30பதவிக்காக..<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiRvhzrSNRwxgVMMeUy_LribU1_ZCAf7lJSTKMyVBw4p58WMSMbeqlRkKeX00n8j5kg7GCbFDZcVSmPZH34PVGHGaGCsAoC2LdadqHqmIf8IXxnzLqkpuhG5vF2JJ66AmZ29VxN/s1600/PATHAVIKKAKACOPY.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiRvhzrSNRwxgVMMeUy_LribU1_ZCAf7lJSTKMyVBw4p58WMSMbeqlRkKeX00n8j5kg7GCbFDZcVSmPZH34PVGHGaGCsAoC2LdadqHqmIf8IXxnzLqkpuhG5vF2JJ66AmZ29VxN/s1600/PATHAVIKKAKACOPY.jpg" /></a></div>
<span style="background-color: white; font-family: Verdana, sans-serif; font-size: 12px;"><br /></span>
<span style="background-color: white; font-family: Verdana, sans-serif; font-size: 12px;">சுஜாதாவின் பதவிக்காக நாவலை ஒரே மூச்சில் இரண்டாவது முறையாக இன்று படித்து முடித்தேன். தமிழில் வெளிவந்த மிகச் சிறந்த அரசியல் நாவல்களுள் ஒன்றான இது எத்தனை முறை படித்தாலும் அலுப்பதே இல்லை..</span><br style="background-color: white; clear: left; font-family: Verdana, sans-serif; font-size: 12px;" /><br style="background-color: white; clear: left; font-family: Verdana, sans-serif; font-size: 12px;" /><span style="background-color: white; font-family: Verdana, sans-serif; font-size: 12px;">தன்ராஜின் இடைத்தேர்தல் வெற்றியிலும் சின்னப்பனின் தோல்வியிலும் தொடங்கும் நாவல் எத்தனை சித்துவிளையாட்டுகள், சாதுர்யங்கள், சதிகள், திடீர் திருப்பங்கள் அரசியலில் சாத்தியமோ அத்தனையும் தொட்டுச் செல்கிறது. 1987-88 அரசியல் காலத்தைக் கொண்டு பார்கையில் இது அப்போதைக்கு ஒரு துணிச்சலான நாவலாக இருந்திருக்கலாம்.</span><br style="background-color: white; clear: left; font-family: Verdana, sans-serif; font-size: 12px;" /><br style="background-color: white; clear: left; font-family: Verdana, sans-serif; font-size: 12px;" /><span style="background-color: white; font-family: Verdana, sans-serif; font-size: 12px;">நாவலில் எங்குமே தன்ராஜின் வேகம் குறையவில்லை. மாறாக ஆறுமுகனாருக்கும் அரங்கராமானுஜத்துக்கும் நடக்கும் பதவிப் போட்டியில் பலிகடா ஆக்கப் படாமல் சாதுர்யமான வழி நகர்த்தல்கள்,</span><br style="background-color: white; clear: left; font-family: Verdana, sans-serif; font-size: 12px;" /><br style="background-color: white; clear: left; font-family: Verdana, sans-serif; font-size: 12px;" /><span style="background-color: white; font-family: Verdana, sans-serif; font-size: 12px;">திலகவதியோடு திருமணம், ஜமுனாவோடு இன்னொரு வாழ்கை என்று கதைதான் ஆனால் சுஜாதாவின் எல்லா நாவல்களின் கதாநாயகன்களிலும் , அவன் கொலைத் தொழில் திருட்டுத் தொழில் செய்பவனாக இருந்தால் கூட (உதா: என்றாவது ஒரு நாள், மேகத்தை துரத்தினவன்) இருக்கும் அதே ஒரு துளி நேர்மை ஒட்டிக் கொண்டிருக்கும் காதாநாயகன் நம் தன்ராஜ்.</span><br style="background-color: white; clear: left; font-family: Verdana, sans-serif; font-size: 12px;" /><br style="background-color: white; clear: left; font-family: Verdana, sans-serif; font-size: 12px;" /><span style="background-color: white; font-family: Verdana, sans-serif; font-size: 12px;">காவல்துறையின் அசுர பலம் அரசாங்கத்தின் உளவுக் கண்கள், மத்திய அரசு மாநில அரசின் மேல் செலுத்தும் அழுத்தம், வெறுப்பு விருப்புகளுக்காக மட்டுமே மாநிலத்தில் அரசியல் தலையீடு அதற்கு வர்மா என்ற ஒரு புத்திசாலித்தனமான குள்ளநரி கவர்னர் என்று கதை எல்லா தளங்களிலும் தட தடக்கிறது. சென்னையிலும் தமிழகத்திலும் கலவரங்களை உண்டாக்கி அதன் மூலம் பதவிக்கு வரத் துடிக்கும் அரசியலை அழுத்தமாக பதிவு செய்கிறது நாவல்.</span><br style="background-color: white; clear: left; font-family: Verdana, sans-serif; font-size: 12px;" /><br style="background-color: white; clear: left; font-family: Verdana, sans-serif; font-size: 12px;" /><span style="background-color: white; font-family: Verdana, sans-serif; font-size: 12px;">பாலியல் தொழிலாளி கம் நடிகை கௌரியின் கொலையில் ஒரு சாட்சியாக நுழையும் சாவித்திரி, ஐபிஎஸ் கோகுல் போலீஸின் நேர்மை அநியாயங்கள் எல்லாவற்றுக்கும் ஒரு சாட்சியாக கூடவே வருகிறது. சாவித்திரியின் சக பத்திரிகையாளனின் செல்லக் காதல் இளமை , நட்புக்கு ஒரு சாட்சி.</span><br style="background-color: white; clear: left; font-family: Verdana, sans-serif; font-size: 12px;" /><br style="background-color: white; clear: left; font-family: Verdana, sans-serif; font-size: 12px;" /><span style="background-color: white; font-family: Verdana, sans-serif; font-size: 12px;">ஒரு மாநில அரசை மத்திய அரசு என்னவெல்லாம் செய்யலாம் ஒரு முதல்வர் , மாநிலத்தில் என்னவெல்லாம் செய்யலாம் என்று அதன் உச்சம் வரை சென்று பார்க்கிறது நாவல். கவர்னர்கள் நினைத்தால் மாநில அரசின் அதிகாரத்தை மத்திய அரசின் துணைகொண்டு ஆட்டிப் படைக்கலாம் என்பதை விரிவாகவும் தெளிவாகவும் சொல்கிறது நாவல். நமக்கும்தான் வந்து வாய்க்கிறார்களே ஆட்டுக்குத் தாடி போன்ற கவர்னர்கள் என்று நமக்குத் தோன்றுவதை தவிற்க முடியவில்லை.</span><br style="background-color: white; clear: left; font-family: Verdana, sans-serif; font-size: 12px;" /><br style="background-color: white; clear: left; font-family: Verdana, sans-serif; font-size: 12px;" /><span style="background-color: white; font-family: Verdana, sans-serif; font-size: 12px;">இதெல்லாவற்றையும் விட ஜமுனாவின் கணவனாக வரும் கோவிந்தராவ்..... எமகாதகன். சாருவின் வார்த்தைகளில் சொன்னால் பெட்டிஷ் பெட்டிஷ். ஜமுனாவுக்கும் தன்ராஜுக்கும் இடையில் இருக்கும் காதலை கண்டு கொண்ட பின்னரும் அதை மனதுக்குள் வைத்துக்கொண்டே ஒன்றுமே தெரியாதவன் போல ஜமுனாவை அன்பாலேயே அடித்து துவைத்து கொல்லும் கிராதகன். அவன் செய்வதை அவன் அளவில் அது நியாயமாகத்தான் படுகிறது. </span><br style="background-color: white; clear: left; font-family: Verdana, sans-serif; font-size: 12px;" /><br style="background-color: white; clear: left; font-family: Verdana, sans-serif; font-size: 12px;" /><span style="background-color: white; font-family: Verdana, sans-serif; font-size: 12px;">ஜமுனாவும் பிறந்து இருபதே நிமிடத்தில் இறந்த குழந்தையும் பொட்டில் அறைய தன்ராஜ் விரக்தியின் உச்சியில் முதல்வர் பதவி வேண்டாம் என்க மீண்டும் ஆட்சிக்கு வர முடியாத அரங்கராரும், ஆட்சிக்கு வந்த ஆறுமுகமும் அதையும் காப்பாற்ற முடியாத நிலையில் தேர்தலுக்குள் தள்ளி விடுகிறார் கவர்னர்.</span><br style="background-color: white; clear: left; font-family: Verdana, sans-serif; font-size: 12px;" /><br style="background-color: white; clear: left; font-family: Verdana, sans-serif; font-size: 12px;" /><span style="background-color: white; font-family: Verdana, sans-serif; font-size: 12px;">இதை அப்போது நாவலாக இல்லாமல் தொடராக படித்தவர்களுக்கு வாரா வாரம் கண்டிப்பாக காத்திருப்பது ஒரு தண்டனை போல் இருந்திருக்கலாம். ஒவ்வொரு அத்தியாயமும் தடக் படக்கென்று நகர்வதை படிக்கும் போது உணரமுடிகிறது. </span><br style="background-color: white; clear: left; font-family: Verdana, sans-serif; font-size: 12px;" /><br style="background-color: white; clear: left; font-family: Verdana, sans-serif; font-size: 12px;" /><span style="background-color: white; font-family: Verdana, sans-serif; font-size: 12px;">ஒரு அரசியல் சினிமா ஆவதற்க்கான அத்தனை சாத்தியங்களும் இருக்கும் நாவலை இதுவரை யாரும் சினிமாவாக்காமல் இருப்பதற்க்காக பல கோடி நன்றிகள், இதில் இருந்து கொஞ்சமாய் எடுத்து முதல்வன் ஆக்கியிருக்கிறார் ஷங்கர். அந்த யாருக்கும் அடங்காத ஒரு நாள் முதல்வர். ஒரு கருதான். </span><br />
<span style="background-color: white; font-family: Verdana, sans-serif; font-size: 12px;"><br /></span>
<span style="font-family: Verdana, sans-serif;"><span style="background-color: white; font-size: 12px;">சந்தேகமே இல்லாமல் எந்த இலக்கிய தகுதிகளையும் விட்டுவிட்டுப் பார்த்தால், சுஜாதா ஜனரஞ்சக எழுத்தாளர்களில் முதலிடம் பெற வேண்டிய ஆள்தான்.</span></span></div>
Anonymoushttp://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-28593647.post-62083081125936878332015-01-13T21:28:00.001+05:302015-01-14T19:22:22.558+05:30மாதொருபாகனுக்கு முன் மஹாபாரதத்தை கொளுத்துவோம்.!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
பெருமாள் முருகன் நான்காண்டுகளுக்கு முன்னால் எழுதி காலச் சுவடு பதிப்பகத்தால் வெளியிடப் பட்ட மாதொருபாகன் நாவலைக் கொளுத்தியதில் ஆரம்பித்த சர்ச்சை இன்று பெருமாள் முருகனின் வாயாலேயே இனி நான் எழுத மாட்டேன் என்று சொல்லவைத்து இந்து சனாதனம் காக்கும் கோழைகள் தங்கள் கோர முகத்தை காண்பித்திருக்கிறார்கள். இந்த கட்டுரை பெருமாள் முருகனின் மாதொருபாகன் நாவலைப் பற்றியதும் இல்லை.<br />
<br />
படைப்பை அதன் தளத்தில் இருந்து உணராமல் அதில் இருக்கும் வார்த்தைகளை பிடித்து தொங்கிக்கொண்டே கலைகளுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் பழமைவாதிகள் இந்து மதத்தில் மட்டும் இல்லை என்பது எத்தனையோ முறை நிரூபிக்கப் பட்ட ஒன்று.<br />
<br />
தங்கள் கடவுள்களை மத நம்பிக்கைகளை கொச்சைப் படுத்துவதாகக் கூறி கிருஸ்துவர்கள் டாவின்ஸி கோடு திரைப்படத்தையும், முஸ்லிம்கள் விஸ்வரூபம் படத்தையும் தடைசெய்தது எல்லாம் மறந்து போகக் கூடியவை இல்லை. புனைவுகளின் வழியே கதை சொல்லுதல் என்பது மனிதனின் கலாச்சார மரபுகளில் ஊறிப்போன ஒன்று. கீதை, மகாபாரதம் ராமாயணம் என்று எழுதப் பட்ட எல்லாவற்றிலும் இவர்கள் இன்று எதிர்ப்பு தெரிவிக்கும் மாதொருபாகனை விடவும் ஆபாசம் நிறைந்த , பிறன் மனைவி கலத்தல், முறையற்ற உறவுகள், பல தார மணம் என்று இந்தியப் பழமைவாதிகள் கொண்டாடிக் கொன்டிருக்கும் பல படைப்புக்கள் இன்று மதங்களின் வேதங்களாக ஏற்றுக்கொண்டவர்கள்தான் நாம்.<br />
<br />
மனுதர்மத்தை ஏற்றுக் கொண்டு அதன்படிதான் காலம் காலமாய் ஆட்சியும் அதிகாரமும் ஆளுக்கொரு நீதி, குலத்துக்கொரு நீதி என்று நடக்கும் இந்த நாட்டில் கருத்துரிமையை எதிர்பார்ப்பதெல்லாம் நமது முட்டாள்தனம் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தே இல்லை. மகாபாரத பாஞ்சாலி முதல் ராமாயணத்து தசரதன் வரை புனைவுகள் எல்லாம் ஆபாசம்தானே? இவர்கள் ஆபாசம், கலாச்சார சீர்கேடுகளை உண்டாக்கக் கூடியவை என்றால் முதலில் மஹாபாரதத்தையும் ராமாயணத்தையும் அல்லவா கொளுத்தியிருக்கவேண்டும். எனக்கு ஆபாசமாகத் தெரியும் புத்தகம் அவர்களுக்கு புனித நூலாகத் தெரிவதில் தான் இருக்கிறது சூட்சுமம்,<br />
<br />
கொஞ்சம் கொஞ்சமாக மனிதன் தன் சகிப்புத் தன்மையை இழந்துவருவதன் வெளிப்பாடுகள்தான் புத்தகங்களை, நாடகங்களை, கலையை, தன் கவைக்கு உதவாத கலாச்சார கோட்பாடுகளைக் கொண்டு எதிர்ப்பதும், தடைகோருவதும் என்பவை எல்லாம் நமக்கு வெளிப்படுத்தும் செய்திகள். இலக்கியம் முதல் ஈழம் வரை இன்று எதை எழுதினாலும் ஒரு கும்பல் தங்களின் கலாச்சாரக் கேடயங்களை தூக்கிக் கொண்டு சண்டைக்கு வந்து விடுகிறார்கள். யாருக்குத்தான் இல்லை கலாச்சாரம்?<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgJcswPBeyKpgNggDLC_RMeSgJX2Pu3z9ekH-9yOIappoJb6kU41FDruoYT1iUs5a2zbe-by2YV31BPW1keIRMM2BrmSLTNHzwd-1PNZOm5Y1K7Cow-00IB9k43nEof46yrclDX/s1600/human_rights__freedom_of_expression_by_tanibelle-d5auy3i.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgJcswPBeyKpgNggDLC_RMeSgJX2Pu3z9ekH-9yOIappoJb6kU41FDruoYT1iUs5a2zbe-by2YV31BPW1keIRMM2BrmSLTNHzwd-1PNZOm5Y1K7Cow-00IB9k43nEof46yrclDX/s1600/human_rights__freedom_of_expression_by_tanibelle-d5auy3i.jpg" height="320" width="219" /></a></div>
<br />
<br />
ஒவ்வொரு மனிதனும் தன் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடுவதற்கும் பேசுவதற்கும், எழுதுவதற்கும் அடிப்படை மனித உரிமை என்று நம் அரசியல் அமைப்பு சட்டம் பாதுகாப்பாக இருக்கிறது என்றும் நமக்கு நாமே கொண்டாடிக் கொள்கிறோம். ஆம் பாதுகாப்பாகத்தான் இருக்கிறது ஆனால் யாருக்கு பாதுகாப்பாக இருக்கிறது என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. அது ஆட்சியில், அதிகாரத்தில், மக்கள் பலத்தில் ஆதிக்கம் உள்ளவர்களுக்கே ஆதரவாக இருக்கிறது என்பது உலகம் எங்கும் நடைபெறுகிற ஒன்று.<br />
<br />
பழமைவாதிகள் இப்படி காலம் காலமாய் கொலைமிரட்டல், வியாபார மிரட்டல், கருத்துச் சுதந்திர அச்சுறுத்தல் என தங்களை ஆதிக்கசக்திகளாக்கிக் கொண்டே போகையில் இவற்றை எல்லாம் கண்டு முகம் சுளிக்க வேண்டிய முற்போக்காளர்கள், பத்திரிகையாளர்களில் பலர், திராவிட இயக்கங்கள் வெற்று அறிக்கைகளை மட்டும் கொடுத்துவிட்டு நமக்கென்ன வேலை முடிந்தது என்று முகம் திருப்பிக் கொண்டிருப்பது சமூகத்துக்கும் , பின் வரும் புது படைப்பாளிகளுக்கும், முற்போக்கு எழுத்தாளர்களுக்கும் நல்லதல்ல. யார் கண்டது பிற் காலங்களில் வரப்போகும் முற்போக்கு படைப்பாளிகள் பிற்போக்குத் தனங்களுக்கு ஆதரவாகக் கூட எழுதித் தள்ளலாம்.<br />
<br />
அரசியல் அமைப்பைக் காக்கவேண்டிய அரசாங்கமே இதில் எல்லாம் தலையிட வேண்டும் என்றாலும் ஆளும் அரசாங்கத்தின் சில அங்கத்தினர்களே இத்தனை சிக்கல்களையும், படைப்பாளிகளுக்கு எதிரான கருத்தையும் உருவாக்குகிற ஆட்களாகவும் இருக்கிறார்கள். <br />
<br />
பாஜக எம்பிக்கள் இந்தியாவின் எம்பிக்கள் என்ற நிலையெல்லாம் தாண்டி இந்து எம்பிக்கள் என்று இந்துப் பெண்கள், 4,குழந்தைகள், 5 குழந்தைகள் என்று பெற்றுக் கொள்ளுங்கள் கோமியத்தை பினாயிலுக்கு பதிலாக பயன்படுத்துங்கள், சமஸ்கிருதத்தை தேவ பாஷை ஆக்குங்கள் என்று தங்கள் கருத்தை சுதந்திரமாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.<br />
<br />
இரண்டு குழந்தைகள் போதும் என்று கருத்தடை செய்துகொண்ட கணவன் மனைவிக்கு 3 வதாக குழந்தை பிறந்தால் சந்தேகப்பட மாட்டானா என்று கேட்கிறார் அப்பாவி நண்பர் ஒருவர். இதை விட பயங்கரமாக ஒரு பதில் சொன்னேன்<i> "முதலில் மோடியை பொண்டாட்டியோடு இருந்து வாழச் சொல்லுங்கள் பின்னர் குழந்தை குட்டியெல்லாம் பற்றி யோசிக்கலாம்</i>". என் கருத்துக்கான விளக்கம் என்னிடம் கேட்கலாம், இல்லை எதிர்த்து எழுதலாம் ஆனால் இதெல்லாம் நீ சொல்லக் கூடாது ஊரில் இருக்கக் கூடாது இனி சாப்பிடுவதைத் தவிற வேறெதற்கும் வாயே திறக்கக்கூடாது என்பது அரசியல் சட்டம் நமக்குத் தந்திருக்கும் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது.<br />
<br />
பாலியல் பலாத்காரக் கொலைகள், முறை தவறிய உறவுகளால் நடைபெறும் கொலைகள், என்பதெல்லாம் என்னவோ நம் கலாச்சாரத்திலேயே ஊறிப்போனவை போல தினசரி செய்திகள் வெளியாகும் நாட்டில்தான் புத்தகத்தில் எழுதப் படும் புனைவுகளுக்காக போராட்டம் நடக்கிறது. பாரிஸில் பத்திரிகை அலுவலகத்தில் நடத்தப் பட்ட கொலைகளை கண்டிக்கும் மக்கள்தான் பெருமாள் சல்மான் ருஷ்டி, தாஸ்லிமா நஸ் ரீன், பெருமாள் முருகன், எழுதியதையும் அவற்றை தடைசெய்ய வேண்டும் என்று அறைகூவல் விடுப்பதும் உச்சகட்ட நகை முரண்.<br />
<br />
பாலியல் கொலைகளுக்காக கடற்கரையோரம் ஒன்றாகக் கூடி மெழுகுவர்த்திகளைக் கொளுத்தி பலியான உயிருக்கு அஞ்சலி செலுத்துகிறோம் . ஆனால் பாலியல் குற்றங்களுக்கு எதிராக இதுவரை எந்த ஒரு அமைப்பும், இயக்கமும் மக்கள் விழிப்புணர்வை உண்டாக்கும் போராட்டங்களை முன்னெடுக்கவில்லை, அப்படி எடுப்பவர்கள் கூட அரங்கச் செயல்பாடுகள் கட்டுரைகள் என்பவற்றோடு முடித்துக் கொள்கிறோம்.<br />
<br />
பழமைவாதிகளிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறைய இருக்கிறன. வீதிக்கு இறங்கிப் போராடி மிரட்டல் விடுத்து இல்லை ஏதாவது செய்தாவாது மாற்றுக் கருத்தாளார்களை அடக்கும் நாட்டில், மாற்றுக் கருத்துக்களை தொடர்ந்து எழுதியும் அவற்றை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தையும் வளர்க்கும் விதமாக படைப்புக்களை தொடர்ந்து எழுதியும் வெளியிடுவதையும் தவிற வேறு வழியில்லை. இல்லையென்றால் ஊர் பெயரை, தெருப்பெயரை, ஆட்கள் பெயரையெல்லாம்,<br />
<br />
<i>" அந்த ஊரில் அந்த தெருவில், அவனும் அவளும் அவர்களுக்கு அவன் அவள் என்று ஆணும் பெண்ணுமாய் இரண்டு குழந்தைகள், அவர்களுக்கு பக்கத்துவீட்டில் அவன் இருந்தான் அவனுக்கு ஒரு அவள் காதலியாய் இருந்தாள் " </i><br />
<br />
என்று படிக்கவே முடியாத கதைகளை எழுதி சந்தோஷப் பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.<br />
<br />
எழுத்தும் பேச்சும் நமது உரிமைகள்!<br />
<br />
<br />
<br />
<br />
<br /></div>
Anonymoushttp://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-28593647.post-45868980305344935852015-01-12T01:28:00.000+05:302015-01-12T01:46:01.171+05:30நெகிழ வைத்த திரைப்படங்கள் -6 The Stoning of Soraya M<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் ஆண்களின் சமூகத்தாலும், ஆண்களின் பொய்களாலும், அவர்களின் கடவுள்களாலும், மதத்தின் பெயராலும், கற்பு என்ற பெயராலும் அடக்குதலுக்கும் அச்சுறுத்தல்களும் உள்ளாக்கப் பட்டுக்கொண்டிருக்கும் கோடிக் கணக்கான பெண்களின் ஒற்றைக் குரலாக ஒலிக்கும் திரைப்படம்தான் இந்த . The Stoning of Soraya M 1986ல் ஈரானில் நடந்த உண்மைச் சம்பவம் புத்தகமாக வெளிவந்து பின்னர் திரைப்படமாக்கப் பட்டது.<div>
<br /></div>
<div>
The Stoning of Soraya M.<br /><div>
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjgDcY2tpHe4NGWHpJceKH_pOdDs1xpkJKJLR-dpYuTfstA1374LqnjFrI3JMLyYXLM3RddaWIkiAVfmTM1T49nwju-d1VyKk2aE3Osrg23nRUporn1j62ZQLWURVUIvnzNrdJ6/s1600/11178387_800.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjgDcY2tpHe4NGWHpJceKH_pOdDs1xpkJKJLR-dpYuTfstA1374LqnjFrI3JMLyYXLM3RddaWIkiAVfmTM1T49nwju-d1VyKk2aE3Osrg23nRUporn1j62ZQLWURVUIvnzNrdJ6/s1600/11178387_800.jpg" height="320" width="213" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
தனது கார் ஈரானின் உள்ளடங்கிய கிராமமான குபையாஹ் வில் நின்று போய்விட அதை சரிசெய்யப் போகும் ஈரானிய-ப்ரெஞ்ச்சு பத்திரிகையாளரான ஃப்ரொடொன் ஸ்பாஜெமை சந்திக்கும் சாரா என்னும் பெண் தன் உறவுக்கார பெண்ணுக்கு நடந்த சம்பவம் குறித்து உண்மைகளை சொல்வதுதான் படத்தின் மொத்தக் கதையும்.</div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
ஸொரயாவுக்கு இளம் வயதிலேயே அலி என்பவனோடு திருமணம ஆகி இரண்டு ஆண் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றன, அலி ஈரானின் சிறையில் கண்காணிப்பளாராக ஒரு உயர்ந்த பதவி , வகிக்கும் கிராமத்தில் கொஞ்சம் செல்வாக்குள்ள ஆள், சிறையில் மரண தண்டனை பெற்ற ஒரு டாக்டரின் விடுதலைக்காக லஞ்சமாக மெஹ்ரா என்ற டாக்டரின் 14 வயது மகள் அலிக்கு பேரம் பேசப்படுகிறாள். ஸொராயாவை மிரட்டியும் அடித்தும் தன் இரண்டு மகன்களை தாய்க்கு எதிராகவே திருப்பி விட்டும் விவாகரத்து கேட்கிறான் அலி. ஆனால் தன் மகள்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து ஸொராயா மறுத்து விடுகிறாள்.</div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
இந்த விவாகரத்து விஷயத்தில் கிராமத்தின் முல்லாவும் அலிக்கு எப்படியாவது உதவி செய்தே ஆகவேண்டும் என்று முயற்சிக்கிறார். காரணம் முல்லா முல்லா ஆவதற்கு முன்பு ஈராணிய ஷா ஆட்சிகாலத்தில் மனித உரிமை மீறல்களை செய்த ஒரு ஆள் அதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாக அலி முல்லாவை மிரட்டுகிறான். வேறு வழியில்லாத முல்லா ஸொராயாவிடம் சென்று எல்லா பஞ்சாயத்துப் பண்ணும் மத குருமார்களைப் போலவே அவனை விட்டுவிடு எனக்கு ஆசை நாயகியாக இரு என்று சொல்லி பேசிக் கொண்டு இருக்கும் போது அங்கே வரும் சாராவுக்கும் முல்லாவுக்கும் பிரச்சினை ஆகி விடுகிறது.</div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
இதற்கிடையே ஸொரயா கோபித்துக்கொண்டு சாராவின் வீட்டில் இருக்கும்போது அதே ஊரில் கார் மெக்கானிக்காக இருக்கும் ஹஷீமின் மனைவி இறந்து போக ஹஷீமுக்கு வீட்டு வேலைக்காரியாக ஸொரயாவை ஊர் வழக்கப் படி மேயரும், முல்லாவுமே பணிக்கு அமர்த்துகிறார்கள். ஏற்கனவே ஸொராயாவை விவாகரத்து செய்ய முடியாத கோபத்தில் இருக்கும் அலி தன் மனைவிக்கும் ஹஷீமுக்கும் இடையே தகாத உறவு இருப்பதாக குற்றம் சாட்டி அதற்கு சாட்சியாக ஹஷீமையே மகனை அனாதை ஆக்கிவிடுவேன் என்று மிரட்டி திருப்புகிறான். கிராமத்தின் மேயரான இப்ராகிமும் இதற்கு துணை போகிறார்.</div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
இந்த திட்டங்கள் எல்லாம் தெரிந்த சாரா ஸொராயாவுக்கு ஆதரவாக எவ்வளவோ போராடிப் பார்த்தும் அந்த ஊரின் தீர்ப்பின் படி குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப் படும் ஸொராயா கல்லால் அடித்துக் கொலைசெய்யப் படுகிறாள். அலிக்கும் மெஹ்ராவுக்கும் திருமணம் நடக்கவில்லை, காரணம் சிறையில் இருக்கும் டாக்டர் கொலை செய்யப் படுகிறார். </div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
படம் முழுக்கவே ஆண்களின் உலகம் எத்தனை கொடூரமானதாகவும், சுயநலத்தோடும், பெண்களை எப்படியெல்லாம் வஞ்சித்துக் கொண்டும் இருக்கிறது என்பதற்கு ஒட்டு மொத்த வெளிப்பாடாக இருக்கிறது. தன் தாய்க்கு எதிராகவே கையை ஓங்கிக் கொண்டு வரும் மகனை ஆதரவோடு பார்க்கும் தந்தையும், மகன் அடிக்க வருவதை பார்த்து கலங்கிப் போய் இருக்கும் ஸொராயாவுமே காலம் காலமாய் பெண் என்பதால் மட்டுமே ஒடுக்கப் பட்டும் அடக்கப் பட்டும் கிடக்கும் கோடிக் கணக்கான பெண்களின் கதையைச் சொல்லிவிடுகிறது.</div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
ஒட்டுமொத்த ஆண்களின் ஒற்றை சாட்சியாக அலியும், பெண்களின் ஒடுக்கப் பட்ட குரலாக ஸொராயாவும் படம் முடியும் வரை பயணிக்கிறார்கள். மதத்தின் பெயரால் மட்டும் அல்ல ஒட்டு மொத்த ஆண் குலத்தாலும் அடங்கிக் கொண்டும் கொலையாகிக் கொண்டும், தற்கொலை செய்து கொண்டும் பாலியல் வன் கொடுமைமைக்கு ஆளாகிக் கொண்டும் இருக்கும் எல்லா பெண்களுமே ஸொராயாக்கள்தான். தங்கள் சுயநலத்துக்காகவும் மதத்துக்காகவும் பெண்களை வஞ்சித்துக் கொண்டே இருக்கும் ஆண்கள் எல்லாமே அலிகள் தான்.</div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
படத்தின் உயிர் நாடியாக கதையைச் சொல்லும் சாரா ஆங்காங்கே அடக்குதல்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் அஞ்சாமல் பெண்களின் வலிகளை உலகமெங்கும் உரக்கச் சொல்லும் குரலாக படம் முழுக்கவே ஒலித்துக் கொண்டிருக்கிறார். கொஞ்சமே கொஞ்சம் மனசாட்சி இருக்கும் ஆண்கள் என்று படத்தில் யாருமே இல்லை, அது உண்மையும் கூட. பெண்களுக்காக குரல் கொடுக்கும் எல்லா ஆண்களுக்கும் பின்னால் ஏதாவது ஒரு சுயநலம் கொஞ்சமாவது ஒட்டிக் கொண்டுதான் இருக்கிறது என்பதற்கு படத்தில் வரும் மேயர் இப்ராகிமும், ஹஷீமுமே சாட்சி. </div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
ஸொராயாவாக நடித்திருக்கும் Mozhan Marno <span style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue', Arial, Helvetica, sans-serif; line-height: 27px;"> </span><span style="background-color: white; font-family: 'Helvetica Neue', Arial, Helvetica, sans-serif; line-height: 27px;">வின் கண்களே படத்தில் பாதி பாரத்தை சுமக்கின்றன, அந்த பேரழகான கண்களுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் சோகமும் வலியும் உலகப் பெண்களுக்கு எதிராக இழைக்கப் படும் அநீதியின் குரலாக காலமெங்கும் ஒலிக்கும்.</span></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<span style="background-color: white; font-family: 'Helvetica Neue', Arial, Helvetica, sans-serif; line-height: 27px;"><br /></span></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<span style="font-family: Helvetica Neue, Arial, Helvetica, sans-serif;"><span style="background-color: white; line-height: 27px;">படத்தின் கொலைக் காட்சியீன் போது ஒலிக்கும் அல்லாஹ்ஹூ அக்பர் என்ற ஒலியைத் தவிற்த்துவிட்டுப் பார்த்தால் இது மத்திய கிழக்குகளில் மதத்தின் பெயரால் நடக்கும் அநீதி என்பதை தாண்டியும் படத்தை இன்னொரு பரிமாணத்துக்கு கொண்டு செல்கிறது.</span></span></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
எல்லா முயற்சிகளுக்கும் பின்னால் தண்டனை அளிக்கப் படுவதற்கு முன்னால் ஸொராயா கூடியிருக்கும் ஆட்களை பார்த்து </div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<i>" எனக்கு ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? உங்களால் எப்படி முடிகிறது, நான் உங்களில் ஒருத்தி இல்லையா? உங்களுக்கு தாய் அல்லவா நான், நான் மகள் இல்லையா? நான் உங்கள் மனைவி இல்லையா, உங்கள் வீட்டில் சாப்பிட்டிருக்கிறேனே?, உங்கள் பக்கத்து வீட்டுக் காரிதானே நான்? "</i></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
என்று கேட்பது அந்த கூட்டத்திடம் மட்டும் அல்ல , படம் பார்க்கும் எல்லோரிடத்திலும்தான், கடைசியில் ஸொராயாமேல் எறியப்படும் கற்கள் எல்லாம் பார்வையாளர்களான நம் மேலேயே வந்து விழுகிறது. படம் முடிகையில் ஒட்டு மொத்த படுகொலையையும் வன் கொடுமைகளையிம் வேடிக்கை பார்க்கும் உலகச் சமுதாயம் போல வேடிக்கை காட்டவரும் கோமாளிகள் கூட்டம் ஒன்று வேடிக்கை பார்ப்பதோடு ஸொராயா கொல்லப் படுவதுதான் நிஜம். </div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
இந்த உலகம், அலிகளுகாகவும், ஹஷீம்களுக்காகவும், முல்லாக்களுக்காகவும் படைக்கப் பட்டது, அங்கே ஸொராயாக்களுக்கும், சாராக்களுக்கும் இடமில்லை. என்னும் உண்மை உங்களை படம் முடிந்து பல நாட்களுக்கு துரத்திக் கொண்டே இருக்கும்.</div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<span style="background-color: white; font-family: 'Helvetica Neue', Arial, Helvetica, sans-serif; line-height: 27px;">தமிழ் சினிமாக்களில் எல்லாம் இதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் அந்நிய நாட்டிடம் மண்ணு அடிமையாய்க் கிடக்கே என்ற ஒற்றை வரி வசனத்தால் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அடிமையாகவே கிடக்கும் பெண்களின் வலியை கடந்து அதை நியாயமும் செய்யும் ஜெயமோகன்கள் ஆகச் சிறந்த ஆட்களாக இருப்பது நம் திரை மொழியின் சாபக் கேடு"</span></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<a href="http://www.imdb.com/title/tt1277737/?ref_=nv_sr_3">படம் குறித்த தகவல்களுக்கு..</a></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<a href="http://putlocker.is/watch-the-stoning-of-soraya-m-online-free-putlocker.html">படத்தை முழுவதும் காண..</a></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div>
<br /></div>
</div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-28593647.post-9831996653650616392015-01-07T02:27:00.000+05:302015-01-07T03:11:46.176+05:30ராம லட்சுமனர்கள்தான் ரைட் பிரதர்ஸ் !<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
இரண்டு நாட்களுக்கு முன்னால் வாஷிங்டன் போஸ்டில் " <a href="http://www.washingtonpost.com/blogs/worldviews/wp/2015/01/04/indians-invented-planes-7000-years-ago-and-other-startling-claims-at-the-science-congress/">இந்தியர்கள் 7000 ஆண்டுகளுக்கு முன்னே விமானங்கள் கண்டுபிடித்துவிட்ட்டார்கள்"</a> என்று அறிவியல் காங்கிரஸில் பேசிய ஆட்களை மேற் குறிப்பிட்டு ஒரு செய்தி வெளியிட்டார்கள் அதன் பின்னூட்டங்களில் இத்தனை ஆண்டுகளாய் கொஞ்சமாய் கொடி கட்டிப் பறந்த இந்துத்துவ வாந்திகளின் மானத்தை காற்றுக்கு மேலே கிரகங்கள் தாண்டியெல்லாம் பறக்கவிட்டுக் கொண்டிருக்கிறார்கள் சர்வதேசத்தினர்.<div>
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjeOCsaSxMhT6Hft8HSxFERvqE8cKWbaKFjYuhrUIBjUlXrYGesKP6-72izz59O7KdOJMTgFIwjz8lFlXOV7ePfO-BHOwctXNzGBXJuy4nGjYxwIvj-GvMZTQUBdAj50NSH78Yw/s1600/myths-legends-icarus-daedalus-flying_too_close_to_the_sun-greek_myths-greek_myth-rron1617_low.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjeOCsaSxMhT6Hft8HSxFERvqE8cKWbaKFjYuhrUIBjUlXrYGesKP6-72izz59O7KdOJMTgFIwjz8lFlXOV7ePfO-BHOwctXNzGBXJuy4nGjYxwIvj-GvMZTQUBdAj50NSH78Yw/s1600/myths-legends-icarus-daedalus-flying_too_close_to_the_sun-greek_myths-greek_myth-rron1617_low.jpg" height="264" width="320" /></a></div>
<div>
<br /><div>
<br /></div>
<div>
ஏற்கனவே நாசா எடுத்த மணல் திட்டை ராமனின் பாலம் என்று பாஜக ஆட்சியிலும் அதன் பின்னரான காங்கிரஸ் ஆட்சியிலும் ஊதி ஊதியே தமிழகத்தின் வளத்தை குறுக்கியும் அதன் பின்னர் அமைந்த தற்போதைய ஆட்சியில் சிங்கள இனவாத அரசுக்கு உதவிசெய்யும் விதமாக பல்லாயிரம் கோடிகள் கொட்டிக் கொடுக்கும் வருமான வழியை அடைக்கவேண்டாம் என்ற நல் எண்ணத்தாலும் சுப்பிரமணியன் ஸ்வாமி போன்ற நாசகார சக்திகள் மூலம் ஒரு இயக்கமாகவே முன்னெடுத்த பாஜக இப்போது இன்னும் ஒரு படி மேலே போய் அறிவியல் காங்கிரஸ் மாநாட்டில் கூட தன் முட்டாள்தனங்களை அவிழ்த்துவிட்டுக் கொண்டிருக்கிறது.</div>
<div>
<br /></div>
<div>
7000 ஆண்டுகளுக்கு முன்னர் விமானம் அதுவும் கிரகம் விட்டுக் கிரகம் ( காலக் கிரகமடா) போகும் எந்திரங்கள் கொண்டிருந்த ஆட்கள் என்ன டேஷுக்காக ராமரின் வானரப் படையும் அந்த மூன்று கோட்டு அணிலும் கொண்டு ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு பாலம் கட்டிக்கொண்டு இருந்தார்கள்? சரி கட்டியதுதான் கட்டினீர்கள் எங்கள் கரிகாலன் கட்டிய அணையைப் போல கொஞ்சம் திடமாகவாவது கட்டித் தொலைத்திருக்கக் கூடாதா என்றால் அதுவும் இல்லை. கடல் அழிப்பில் ஒழிந்து போனதாம் . எந்த எஞ்சினியரிங் காலேஜில் ராமர் பட்டித்தாரோ யாருக்குத் தெரியும்? </div>
<div>
<br /></div>
<div>
உங்கள் அறிவியல் ஞானமெல்லாம் என்ன லட்சணம் என்பது உலகுக்கே தெரிந்த ஒன்று. பாஜக ஆட்சிக்கு வந்தது முதலே இன்று வரை ஆறு மாதங்களுக்கு மேலாக ஒரு டேஷையும் பிடுங்காமல் இப்படி இந்துத்துவ கொடிகளை மட்டுமே தூக்கிக் கொண்டு திரிந்தால் உலகம் காரித் துப்பாதா? துப்பத்தான் செய்யும் செய்கிறதுதான். </div>
<div>
<br /></div>
<div>
7000 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கே விமானம் கண்டுபிடித்தோம் என்பதெல்லாம் உங்களின் கற்பனையாக கிடந்துவிட்டுப் போகட்டும் ஆனால் 7000 ஆண்டுகளுக்கு முன்னால் நீங்கள் இங்கே இல்லவே இல்லை என்றுதானே சரித்திர ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்? </div>
<div>
<br /></div>
<div>
சிந்துச் சமவெளி நாகரீகம் முதல் , ஆதிச்சநல்லூர் அகழ்வுகள் வரை இதைத்தானே சொல்கிறார்கள்? உங்களுக்கு மட்டும் எங்கிருந்தய்யா வந்தது 7000 ஆண்டு பாரம்பரியம் எங்களின் நாட்டில்?. இந்த லட்சணத்தில் நீங்கள் இதை இந்துக்களின் தேசம் என்கிறீர்கள்? 60000 மனைவிகளைக் கொண்ட தசரதனுக்கு நாளைக்கு ஒன்றென்றால் கூட கூடி வாழ பல்லாண்டுகள் ஆகுமே சாமி என்ற என் தாத்தன் பெரியாரின் கேள்விக்கே இன்று வரை உங்களால் பதில் சொல்ல முடியவில்லையே?</div>
<div>
<br /></div>
<div>
ரோம், எகிப்து, சீனா, சிந்து, திராவிட, நாகரிங்கள் எல்லாம் ஒற்றை ஆவணங்களையாவது கொண்டு எங்களின் இருப்பை நாங்கள் யார் என்பதை சொல்லிக் கொண்டிருக்கிறதே உங்களுக்கு அப்படி ஏனய்யா ஒன்றுமே கிடைக்கவில்லை? ராவணன் கட்டிய கோவில் , அசோகவனம் என்ற சிதிலங்களை காட்டவாவது இலங்கையில் கொஞ்சம் கிட்டி இருக்கிறது என்கிறார்கள் வரலாற்றாளர்கள், திராவிட நாகரீகம் பற்றி சொல்லவே வேண்டியதில்லை, கல்வெட்டுக்களாகவும், அகழ்வாய்வின் மிச்சங்களாகவும் ,சங்க இலக்கியங்களாகவும் எங்களிடம் ஏகப் பட்ட பாடல்கள் உண்டு, ஆதாரபூர்வமாகவே. உங்களிடம் கீதையும், ராமாயணத்தையும் விட்டால் கோவணத் துணிகூட மிஞ்சவில்லையே? </div>
<div>
<br /></div>
<div>
திப்புசுல்தான் தான் ராக்கெட் விட்ட முதல் இந்தியன் என்கிறது 1000 ஆண்டுகளுக்குள் ஆன வரலாறு, வெடி மருந்தைக் கண்டுபிடித்தது சீனா என்று உலகமே ஏற்றுக் கொள்கிறது. 7000 ஆண்டுகளுக்கு முன் ஏரோப்ளேன் கண்டு பிடித்தது நாங்கள்தான் என்று நீங்கள் சொல்லும் போதே உலகம் தன் சகல துவாரங்களையும் திறந்து சிரிக்க ஆரம்பித்து விடுகிறதே ஏன் என்று கொஞ்சமாவது சிந்தித்தீர்களா? </div>
<div>
<br /></div>
<div>
உங்கள் இலக்கியம் வரலாறு எல்லாமே எங்கள் மேல் செலுத்தவென்றே உங்களால் உங்கள் சனாதன பயமுறுத்தல்களால் எங்கள் மேல் தினிக்கப் பட்டு மக்கள் மாக்களாய் இருந்ததால் கடவுள்களின் பேரைச் சொல்லி இதிகாசங்கள் புராணங்களைச் சொல்லி வயிறு வளர்த்த ஆட்களால் உண்டானது என்று எங்களுக்கு தெரிந்து பல்லாண்டுகள் ஆயின ஆனலும் ஆட்சியும் அதிகாரமும் எதையும் சொல்லி ஏமாற்றும் திறனும் உங்களிடம் இருக்கிறது என்பதாலேயே ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே எங்களிடம் ஏரோப்பிளேன் இருந்ததென்று பேசிக் கொண்டிருக்கிறீர்கள் நாங்களும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்!!</div>
<div>
<br /></div>
<div>
குஜராத்தின் கடல் எல்லையில் துவாரகா என்ற இடம்தான் துவாரகை என்ற மகாபாரத வரலாற்றின் இடம் என்று சொல்லி ஒரு கடலாய்வு செய்தீர்களே என்ன ஆயிற்று என்ற சர்வதேசத்தின் கேள்விகளுக்கு உங்களிடம் இருந்து பதிலே இல்லை. மாட்டை புனிதமாக்கியது போல நாட்டை புனிதமாக்கும் உங்கள் செயலால் மானம் கப்பல் ஏறிக் கொண்டிருக்கிறது. ஆன்மீகத்தைத் தாண் ஆண்டுகொண்டீர்கள் அறிவியலைக் கொஞ்சம் மிச்சம் வைய்யுங்கள்.</div>
<div>
<br /></div>
<div>
இப்படியே போனால் உங்கள் அமைச்சர்களில் யாராவது ராம லட்சுமனர்கள்தான் ரைட் பிரதர்ஸ் என்று சொன்னாலும் சொல்வார்கள்!!</div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
</div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-28593647.post-7882909655912684522015-01-06T00:43:00.002+05:302015-01-07T03:11:46.171+05:30வெட்கமாக இல்லையா திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்களே?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஆராயப் படாமலேயே மக்கள் முதல்வர் என்ற பெயரில் ஒரு அசிங்கம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. ஊழல் வழக்கில் தண்டனை பெற்று குற்றவாளி என தீர்ப்பும் சொல்லப் பட்டு தன் வீட்டை விட்டு எதற்காகவும் வெளியேற முடியாத சட்டமன்ற உறுப்பினர் பதவியைக் கூட இழந்த ஒரு கட்சியின் தலைமை கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் அரசாங்க நடவடிக்கைகளில் பங்கு கொள்வதும் அரசாங்கத்தின் அங்கமாக இருக்கும் சுயமரியாதைப் பேரொளிகளில் ஒருவராக இருந்த பன்னீர்செல்வத்தின் பெயரைத் தாங்கி நிற்பவருமான பினாமி முதல்வர் இன்று வரை கூட மக்கள் முதல்வரின் வழிகாட்டுதலுக்கு இனங்க என்று அறிவிப்புகள் செய்வதும் தமிழகம் இதுவரை காணாத கேலிக் கூத்து.<br />
<br />
இந்தியத் தலை நகரில் முதல்வர்களின் கூட்டம் அங்கே செல்லும் பினாமி முதல்வர் கூடவே தன் துணைக்கென்று ஜெயலலிதாவின் புகைப் படம் அடங்கிய கோப்பை கொண்டு செல்கிறார். எல்லா ஊடகங்களிலும் வெளியாகிறது இந்தப் படம். ஒரு தலை முறைக்கு முன்னால் திராவிட இயக்கங்கள் என்றாலே கோவனத்தை அவிழ்க்காமலே மூத்திரம் போன ஆட்கள் எல்லாம் தமிழகம் என்றாலே நகைக்கிறார்கள்.<br />
<br />
இன்று வரை நீங்கள் முதல்வர் அறையில் அமர்ந்ததில்லை, உங்கள் வீட்டுக்கு முன்னால் முதல்வர் என்ற பெயர்ப் பலகை இல்லை, உங்கள் படம் தாங்கிய அரசாங்க காலண்டர், நாட்குறிப்பு இல்லை, உண்மையில் தெரியாமல்தான் கேட்கிறேன் யார் நீங்கள்?<br />
<br />
அம்மா என்ற பெயருக்கு ஏதும் தடையில்லை ஆனால் இரட்டை இலைக்கு , இயற்கை காட்சிக்கு தடை என்றதும் நாடளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு மறைத்த ஸ்டிக்கர்கள் இன்று இல்லை. சுய உதவிக் குழுக்களை முடக்கும் மோடியின் அரசாங்கத்துக்கு எதிராக பினாமி முதல்வர் வாய் திறக்க மறுக்கிறார். நாடாளும் மன்றத்தில் மோடி. கூடவே சுத்திக் கொண்டிருக்கும் செவ்வாழைகள் பதில் சொல்லும் வேளையில் அடுத்த பயணம் அண்டார்டிகாவா ஆர்டிக்கா என்ற சிந்தனையில். மதமாற்ற தடைச் சட்டம் கொண்டு வரும் இந்துத்துவ தீவிரவாதிகள் கூடவே மோடி பீரங்கியை களம் இறக்குகிறார்கள்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi7LB0fi6T08e2lli2JeP_uV6Y3z7BUqQiS7oBAKg-2pomcaRZ37ubD4O9B6ySq6Bsstu8OJ5-EObRKMTV5ZNtGL3Oz2J2z9ekiWsEPnP3-3ZfAeN0mjY0utvUnlID2rcKKzl-L/s1600/cartoon_650_093014010349.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi7LB0fi6T08e2lli2JeP_uV6Y3z7BUqQiS7oBAKg-2pomcaRZ37ubD4O9B6ySq6Bsstu8OJ5-EObRKMTV5ZNtGL3Oz2J2z9ekiWsEPnP3-3ZfAeN0mjY0utvUnlID2rcKKzl-L/s1600/cartoon_650_093014010349.jpg" height="195" width="320" /></a></div>
<br />
<br />
மாண்புமிகு முதல்வர் பன்னீர் செல்வம் அவர்களே!!<br />
<br />
கோட்சேவுக்கு சிலை, கோவால்கருக்கு மணி மண்டபம், என்று திராவிட இயக்கத்தின் முக்கிய கொள்கையான சமூகநீதிக்கு எதிரான பார்ப்பனீய பனியாக்களின் ஆதிக்கங்களை ஒரு வார்த்தை கூடச் சொல்ல முடியாமல் ஏற்றுக் கொண்டு குனிந்த தலை கவிழாமல் ஆட்சியை அதிகாரத்தை யாருக்காகவோ ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள் பன்னீர் செல்வம் அவர்களே?<br />
<br />
எங்கெல்லாம் அமைதியும் அடங்கிப் போகும் அடிமைப் புத்தியும் இருக்குமோ அங்கெல்லாம் பார்ப்பனீயம் தன் அகன்ற அலகுகளால் ஆதிக்கம் செலுத்த தொடங்கிவிடும். உங்கள் அடிமைத் தனம் என்பது உங்களோடு மட்டும் அல்ல உங்கள் தலைமையை தேர்வு செய்த என்னை அடங்காத கோடிக் கணக்கான தமிழர்களையும் சேரும் முதல்வர் பதவி என்பது வேண்டுமானால் உங்கள் கட்சித் தலைமை கொடுத்த ஒன்றாக இருக்கலாம் சட்ட மன்ற உறுப்பினர் என்பது மக்களின் தேர்வு.<br />
<br />
ஒரு டீக்கடைக் காரர் என்று உங்களை கிண்டல் செய்த ஆட்களுக்கு மத்தியில் உங்களின் விசுவாசத்தை போற்றிக் கொண்டிருந்த ஆட்களுள் நானும் ஒருவன். ஆனால் உங்களின் விசுவாசம் என்பது வெறும் கட்சியின் தலைமைக்காக என்பதைக் காணும் போது கண்கள் கலங்கிடத்தான் செய்கிறது. உங்களுக்கு இப்போதிருக்கும் பதவி என்பது யாரோ எவரோ பிச்சை போட்டதல்ல என்பதை உணருங்கள். மக்களின் தேர்வால் சட்டமன்ற உறுப்பினர் ஆன ஒருவரை முதல்வராக்குவது என்பது இந்திய அரசமைப்புச் சட்டம் நமக்குக் கொடுத்த உரிமை.<br />
<br />
குஜராத்தில் ஆயிரக்கணக்கான பேரைக் கொன்ற விவகாரத்தில் தன் கறைகளைக் கழுவத் துணியாத மோடி இன்று முதல்வர், பிரதமர் என்ற பதவிகளை அலங்கரித்துக் கொண்டே தன் இந்து பாசிச வெறியை தேசமெங்கும் பரப்ப பர பர பயணத்துக்கு ஆயத்தம் ஆகிக் கொண்டே அத்வாணி வாஜ்பாய் போன்ற ஜாம்பவான்களை கண்காணாத இடத்துக்கு பின் தள்ளிக் கொண்டிருக்கும் வேளையில் கேவலம் விசுவாசத்துக்காக ஜெயலலிதாவின் பின்னால் போய் வரலாற்றை எழுதும் ஆட்களுக்கு கூச்சம் ஏற்படுத்தாதீர்கள்.<br />
<br />
உங்களின் மேல் யாருக்கும் விருப்போ வெறுப்போ இல்லை என்பதுதான் உங்களின் பலம், பலவீனம், ஆனால் உங்களிடம் விசுவாசத்தை தவிற வேறொன்றும் இல்லை என்பதை அறியத் தெரிகையில் வெறும் அயற்சிதான் எஞ்சுகிறது. முதலில் உங்கள் கட்சி ஆபிமானங்களை எல்லாம் தூக்கி தூர எறிந்துவிட்டு மக்கள் பணியாற்ற வாருங்கள்.<br />
<br />
கொஞ்சமாவது உங்கள் கட்சியில் ஒட்டிக் கொண்டிருக்கும் திராவிட என்ற பெயருக்கு முழு அர்த்தம் தெரியுமானால், அந்த திராவிடச் சொல்லுக்கும் முந்தைய நீதிக் கட்சியின் வரலாறு தெரியுமானால் நீதிக் கட்சியின் முழு அர்த்தமான சுயமரியாதை இயக்கத்தின் போராட்டங்களை அறிவீர்கள் என்றால் நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் மக்களின் முதல்வரின் பினாமியாக இல்லாமல் உண்மையில் மக்களின் முதல்வராக எஞ்சி இருக்கும் உங்களின் ஆட்சிக் காலத்தையாவது கழிக்கப் பாருங்கள்.<br />
<br />
பயணக் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, கல்விக் கடன் கிடைக்காத அவலம், மின் வெட்டு, நில அபகரிப்பு, காணாமல் போன மலைகள், சட்டம் ஒழுங்கு<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
, உள் கட்டுமானம், மத தீவிரவாதங்கள் என நீங்கள் செய்ய வேண்டிய பணிகள் ஏகப் பட்டவை கிடக்கின்றன உங்கள் முன்னால். ஜெயலலிதாவின் வழக்கை அவர் பார்த்துக் கொள்வார், கட்சியும் கூட அவரின் கட்டுப் பாட்டில்தான் இருக்கும்.<br />
<br />
உங்களுக்கு தமிழக முதல்வர் என்னும் மிகப் பெரிய பணி காத்துக் கிடக்கிறது.<br />
<br />
நான் சொல்ல வந்ததில் நூற்றில் ஒரு பங்கையாவது சொல்லியிருக்கிறேன் என்ற மகிழ்வோடு.<br />
<br />
வாழ்த்துக்கள் திரு. பன்னீர் செல்வம் அவர்களே!!<br />
<br />
<br />
<br />
<br />
<br /></div>
Anonymoushttp://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-28593647.post-20129207286658730302014-12-31T23:04:00.001+05:302015-01-12T01:46:01.166+05:30நெகிழ வைத்த திரைப்படங்கள் -5 The Tin Drum <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
சில திரைப்படங்கள் காணும் போது உங்களை வெறும் நெகிழ்வுக்குள் ஆழ்த்தி விட்டு வேறெந்த கேள்விகளையும் கிளப்பாமல் சும்மா இருந்துவிடும், சில படங்கள் புதிய புதிய கதவுகளை திறந்துகொண்டே இருக்கும். சில படங்கள் விளிம்பு நிலை மனிதர்களின் கதையைச் சொல்கிறேன் என்று கிளம்பி அவர்களை கழிவிறக்கத்துக்குள்ளான மனிதர்களாய் சித்தரிப்பதோடு முடிந்து விடும். இல்லை நகைச்சுவையாக்கி பழி வாங்கி இருக்கும். <div>
<br /></div>
<div>
ஆனால் சில படங்கள் மட்டும்தான் விளிம்பு நிலை மனிதர்களின் உணர்வுகளை நமக்கு உணர்த்துவதோடு சமுதாயத்தின் மீதான மதிப்பீட்டின் மீது நாம் கட்டி வைத்திருக்கும் பிம்பங்களை கேள்விக்குள்ளாக்கி அதன் மேல் தன் தாக்கத்தையும் விட்டுவிட்டுப் போகும். அப்படியான ஒரு படம்தான் இது.</div>
<div>
<br /></div>
<div>
The Tin Drum (1979)</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEja52zhZmUeU1KM2fs9mkqLxyXzPDw43pCZVXiLU7JUIrqn-x-Vdp-h_Ohz2N-iYNKvi7fCbgvoP5_UzvJawhVrbcbQhSX2T86jMkhaSM_k7cpwH20Y4CjoZ9a2BvEJU_oqri40/s1600/the-tin-drum-movieposter.102.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEja52zhZmUeU1KM2fs9mkqLxyXzPDw43pCZVXiLU7JUIrqn-x-Vdp-h_Ohz2N-iYNKvi7fCbgvoP5_UzvJawhVrbcbQhSX2T86jMkhaSM_k7cpwH20Y4CjoZ9a2BvEJU_oqri40/s1600/the-tin-drum-movieposter.102.jpg" height="320" width="233" /></a></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியின் டான்சிங் (Danzing) என்னும் நகரத்தில் நடக்கிறது கதை, ஆஸ்கார் என்னும் சிறுவன் முதலில் போலந்தில் இருந்து வந்து ஜெர்மானியர்களால் தேடப்பட்டு தன் பாட்டியை தாத்தா மணந்து கொண்ட கதையைச் சொல்லி பின் தன் தாயின் (அக்னெஸ்) இரண்டு பேர் (ஜான் ப்ரொன்ஸ்கி, ஆல்ஃபிரட் மாட்செரத்) மீதான காதலையும் சொல்லிக்கொண்டிருக்கும் போது வயிற்றில்தான் இருக்கிறான் . </div>
<div>
<br /></div>
<div>
ஆஸ்காரின் மூன்றாவது வயதில் தன் தந்தைகளுள் ஒருவரான (?) ஜான் ப்ரொன்ஸ்கி (ஆம் ஆஸ்காரின் தந்தை யார் என்பது கடைசி வரை சொல்லப் படவே இல்லை. ஆஸ்காரின் தாய் இரண்டுபேரையுமே காதலிக்கிறாள்.ஆனால் ஆல்ஃபிரட் மாட்செரத்தை மணம் முடிக்கிறாள் ) ஆஸ்காருக்கு ஒரு ட்ரம்மை பரிசாகக் கொடுக்கிறார். ஆஸ்காரின் மூன்றாவது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது தன்னைச் சுற்றி நடக்கும் முறை தவறிய பெரிய மனிதர்களின் நடவடிக்கைகளால் மனம் வெறுத்த ஆஸ்கார் தான் பெரிய மனிதனாகவே ஆகக் கூடாதென்ற முடிவை எடுக்கிறான்.</div>
<div>
<br /></div>
<div>
பெரியவனாகவே ஆகாமல் இருக்கவேண்டும் என்பதற்காக நிலவரை ஒயின் செல்லரை கீழே தள்ளி விட்டு தானும் விழுகிறான் அதுவும் அந்த ட்ரம்மை மிகப் பத்திரமாக வைத்துவிட்டு. பின்னர் மருத்துவர்களால் காப்பாற்றப் பட்டாலும் தன் வளர்ச்சியை அவன் உடல் நிறுத்திவிடுகிறது. (Dwarf). </div>
<div>
<br /></div>
<div>
பின்னர் அவனின் உலகமே அந்த ட்ரம் மட்டும்தான். தன்னைச் சுற்றி நடக்கும் சமூக அவலங்களை பெரிய மனிதர்களின் சின்னத்தனங்களை காணும் போதெல்லாம் பறையடிப்பது போல தன் எதிர்ப்பை அந்த டரம்மின் மூலமாகவே தெரிவித்துக் கொண்டிருக்கிறான். ஆஸ்காரின் ட்ரம்மைப் பிடுங்க முயற்சி செய்யும் போது அவனிடம் இருந்து வெளிப்படும் உச்ச சத்தம் கண்ணாடிகளை உடைக்கும் வலுக் கொண்டது என்று ஒரு நாள் தெரிய வருகிறது.</div>
<div>
<br /></div>
<div>
ஆஸ்காருக்கு வயதாகிக் கொண்டே போனாலும் அவன் வளர்சியில் எந்த மாற்றமும் இல்லை. ஆஸ்காரின் தாய் தன் இன்னொரு காதலனை (ஜான் ப்ரொன்ஸ்கி) காண்பதற்காக போலந்தின் (?) ஒரு நகருக்கு ஆஸ்காருடன் போய் அங்கே இருங்கும் ஒரு பொம்மைக் கடையில் விட்டுவிட்டு போகும் போது தன் தாயின் இன்னொரு காதலை தெரிந்துகொள்ளும் ஆஸ்கார் மணிக்கூண்டின் உச்சியில் இருந்து ட்ரம்மை ஒலிக்கச் செய்து தன் எதிர்ப்பை தெரிவிக்கிறான்.</div>
<div>
<br /></div>
<div>
இதன் பின் தான் கற்பம் ஆனதால் இன்னொரு குழந்தை வேண்டாம் என்றோ இல்லை தன் காதல்களால் விளைந்த மோசங்களாலோ ஆஸ்காரின் தாய் வெறும் பச்சை மீன்களை தொடர்சியாகச் சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்ள ஆஸ்காரின் தந்தை(?) தன் உறவுக்கார பெண்ணான மரியாவைக் கொண்டு வந்து தன்னோடு வைத்துக் கொள்கிறார். ஆனால் ஆஸ்காருக்கும் அந்தப் பெண்ணுக்கும் , ஆஸ்காரின் தந்தைக்குமே ஒரு காதல் ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் இரண்டு பேருமே மரியாவுடன் ( வேறு வேறு நேரத்தில் ) உடலுறவு கொள்ள அதன் பின் மரியா கர்பமாக குழந்தைக்கு யார் தந்தை என்ற குழப்பம் வேறு. </div>
<div>
<br /></div>
<div>
இரண்டாம் உலகப் போரின் உச்சத்தில் போரில் பங்கெடுக்க இயலாத குள்ளர்களின் சர்கஸ் கூடாரத்தில் தான் முன்பே பார்த்த ஆட்களோடு சேர்ந்து போர் முனைக்குச் சென்று வீரர்களை மகிழ்வாக்கும் வேலை செய்யப் போகும் ஆஸ்கார் அங்கே தன்னைப் போல ஒரு பெண்ணைக் காதலிக்க ஆரம்பிக்கிறான். அந்தக் காதலும் போரின் முடிவில் புட்டுக் கொண்டு போகிறது குண்டு வீச்சில் கொல்லப் பட்டுகிறாள் அந்த பெண்.</div>
<div>
<br /></div>
<div>
போர் என்பதும் அதன் பின்னால் ஆன தோல்விக்குப் பின்னரும் தன் தந்தைகளுள் ஒரு ஆளான ஜான் ப்ரோன்ஸ்கியின் தபால் ஆஃபீஸில் சண்டைகளுக்கு நடுவே தன் இருப்பை நிலை நிறுத்த போராடுகிறான் ஆஸ்கார்.</div>
<div>
<br /></div>
<div>
தனக்குப்( ? ) பிறந்த மரியாவின் குழந்தைக்கு மூன்று வயதில் நானும் ஒரு ட்ரம் கொடுப்பேன் அதன் பின் வளராமல் இருக்க வேண்டிய ரகசியமும் சொல்லிக் கொடுப்பேன் என்று சொல்லும் ஆஸ்கார் (?)ஆல்ஃபிரட்டின் (?) குழந்தை குர்ட்ஸ் வீசிய கல்லில் மரணமடைந்த ஜான் ப்ரோன்ஸ்கியின் சவக் குழியில் மூன்று வயதில் தொட்ட ட்ரம்மை வீசி வளர விரும்பி ஆஸ்கார் வளர ஆரம்பிப்பதோடு முடிகிறது படம்.</div>
<div>
<br /></div>
<div>
இதில் நெகிழ என்றோ அழுகைக்கு என்றோ எந்த காட்சியும் இல்லை ஆனால் எல்லா காட்சிகளிலும் தன் இருப்பை வெளிப்படுத்தவென்றே ஒரு ட்ரம் இருக்கிறது. பறை என்றோ முரசு என்றோ சொல்லிக் கொள்வோம் ஆனால் 2007ல் இந்த படம் பார்க்கும் போது உலகப் படங்கள் மேல் இத்தனை ஆர்வம் இல்லாமல் இருந்ததாலோ என்னவோ இத்தனை பாதிக்கவில்லை இப்படம்.</div>
<div>
<br /></div>
<div>
இந்த தொடரை ஆரம்பித்த பின்னால் எந்த படங்களை எல்லாம் நான் கண்டு நெகிழ்ந்து அழுது கிடந்திருக்கிறேன் என்று பார்கையில் இந்தப் படமும் வந்தது நினைவில். மீண்டும் பார்க்கும் போது ஆஸ்காரின் எல்லா நடவடிக்கைகளுக்கும் பின்னால் இருக்கும் சமூக அவலங்களின் மேலான பறை அறிவித்தல் எல்லா சமூக விளிம்பு மக்களின் குரலாக ஒலித்துக் கொண்டே இருக்கிறதது. உடல் ரீதியாக ஒடுக்கப் பட்ட குள்ளர்கள், ஜெர்மனியை சுத்தம் செய்கிறோம் என்று கொன்றொழிக்கப் பட்ட இன சுத்திகரிப்பின் பெயரால் நாட்ஜிக்களின் வரலாறில் இடம் பெறாமல் போன பல்லாயிரம் பேர்களின் ஒற்றை சாட்சியாக படம் முழுக்க ஒலித்துக்கொண்டே இருக்கிறது ஆஸ்காரின் டின் ட்ரம்.</div>
<div>
<br /></div>
<div>
<a href="http://www.imdb.com/title/tt0078875/?ref_=fn_al_tt_1">படம் பற்றிய தகவல்களுக்கு </a></div>
<div>
<br /></div>
<div>
<a href="http://putlocker.is/watch-the-tin-drum-online-free-putlocker.html">முழு படத்தையும் பார்க்க.... </a></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-28593647.post-71268119334414810142014-12-29T00:46:00.000+05:302014-12-29T09:09:38.157+05:30நெகிழ வைத்த திரைப்படங்கள் -4 The Boy in the Striped Pajamas<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
ஜெர்மனியை ஹிட்லர் ஆண்டு கொண்டிருந்த இரண்டாம் உலகப் போரின் காலத்தில் நடக்கிற கதை.<br />
<br />
The Boy in the Striped Pajamas (2008)<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEid9ZycgXAU_C2b1AVQKU4wBUu1vaa7iPiGY4bJ_iJmqGfOh65nfGxGTl_K504RuBMp1tYMOGfVjAK28UbwY3WbmrQkLhR2elrWYc1fRa7F62mqeaqas_RI-bynaXT3NiVOs4vW/s1600/the-boy-in-the-striped-pajamas.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEid9ZycgXAU_C2b1AVQKU4wBUu1vaa7iPiGY4bJ_iJmqGfOh65nfGxGTl_K504RuBMp1tYMOGfVjAK28UbwY3WbmrQkLhR2elrWYc1fRa7F62mqeaqas_RI-bynaXT3NiVOs4vW/s1600/the-boy-in-the-striped-pajamas.jpg" /></a></div>
<br />
<br />
சீக்ரட் சர்வீசஸ் அல்லது சுருக்கமாக எஸ்.எஸ் என அழைக்கப் பட்ட ஹிட்லரின் நாட்ஜி ராணுவத்தில் கமாண்டராக இருக்கும் தன் தந்தையின் பணி உயர்வின் காரணமாக தன் தாய் , சகோதரி, வேலைக்காரி சகிதமாக யூதர்களை இன ஒழிப்பு செய்யவென்றே உண்டாக்கப் பட்ட கான்ஸன்ட்ரேஷன் கேம்புகளுக்கு அருகிலேயே ராணுவம் ஒதுக்கித் தந்த ஒரு வீட்டில் குடியேறுகிறான் எட்டு வயது சிறுவன் (ப்ரூனோ). கேம்பில் தன் வேலை என்னவென்று குடும்பத்தில் யாரும் அறிந்து விடாமல் ரகசியம் காக்கிறார் தந்தை,<br />
<br />
கேம்பில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் இருக்கும் போது ப்ரூனோ சும்மா சுற்றிப் பார்க்கப் போன இடத்தில் கேம்பில் இருக்கும் ஒரு யூதச் சிறுவனோடு (ஷ்யூல்ட்ஸ்) யாருக்கும் தெரியாமலேயே நட்பு கொண்டு விடுகிறான். நடுவில் இரண்டு பேரையும் பிரித்து வைத்திருக்கும் மின் வேலியின் அர்த்தம் தெரியாமலேயே. தினசரி வீட்டுக்குத் தெரியாமல் இருவரும் சந்தித்துக் கொள்கிறார்கள், விளையாடுகிறார்கள். ப்ரூனோ வீட்டுக்குத் தெரியாமல் தின்பண்டங்கள் கொண்டு வந்து கொடுக்கிறான்.<br />
<br />
இதனிடையே ப்ரூனோவின் தாய் தன் வீட்டில் வேலை செய்யும் ஒரு லெப்டினென்ட் மூலம் கேம்பில் இருந்து வரும் புகையும் அதன் துர் நாற்றம் குறித்தும் கேட்கப் போய் அங்கே நடைபெற்று வரும் படுகொலைகளை குறித்து தெரிந்து கொண்டு தன் கணவனோடு சண்டை பிடிக்கிறாள். இதை சொன்னதற்காக லெப்டினென்ட் போர் முனைக்கு அனுப்பப் படுகிறான். லெப்டினென்ட்டுக்கும் ப்ரூனோவின் அக்காவுக்கும் ஒரு ரகசிய காதல் வேறு ஓடுகிறது.<br />
<br />
போர் நடைபெற்று கொண்டிருக்கும் வேளையில் ப்ரூனோவின் தாத்தாவும் பாட்டியும் குண்டுவீச்சில் இறந்து விட குடும்பத்தோடு அவர்களை பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பிவிட முடிவு செய்கிறார் தந்தை. கிளம்பும் நாளுக்கு முந்தைய நாள் யூதச் சிறுவனின் தந்தை கேம்பில் காணாமல் போய்விட நானும் நாளை வந்து உன்னோடு தேடுகிறேன் என்று சொல்லும் ப்ரூனோ கிளம்பும் நாளில் கேம்புக்குள் யூதர்களின் உடை அணிந்துகொண்டு யூதச் சிறுவனின் தந்தையை கண்டு பிடிக்க உதவுவதற்க்காக கேம்புக்குள் செல்லும் இடத்தில் கூட்டத்தோடு கூட்டமாக விஷ வாயுக் குளியலில் மரணமடைந்துவிடுவதோடு படம் முடிகிறது.<br />
<br />
ஜெர்மனியின் நாட்ஜிக்களுக்கு, யூதர்களின் மேல் இருந்த வெறுப்பை எந்த காட்சிப் படுத்துதலும் இன்றி வசனங்கள் மூலமே சொல்லியிருப்பது படத்தின் பெரும் பலம். சிறுவன் ப்ரூனோ பள்ளிக் கூடத்தில் இருந்து மகிழ்ச்சியோடு வெளிப்பட்டு நண்பர்களோடு ஓடி வரும் போது சடக்கென தன் வீட்டைக் கண்டதும் சோகமே உருப்பெற்று படக்கென முகம் சோர்வதாக இருக்கட்டும், புதிதாகப் போன இடத்தில் வீட்டு வேலை, தோட்ட வேலை செய்யும் முன்னாள் டாக்டரான யூதக் கிழவர் பாவெலைப் பார்த்து வருத்தப் படுவதாக இருக்கட்டும் , கேம்பின் உள்ளே இருக்கும் ஷ்யூல்ட்ஸ்சை கண்டதும் சந்தோசப் படுவதாகட்டும் ப்ரூனோவாக நடித்திருக்கும் ஆஷா பட்டர்ஃபீல்டு அட்டகாசம் செய்கிறான்.<br />
<br />
கேம்பில் இருக்கும் சிறுவன் ஷ்யூல்ட்ஸ் ஆக நடித்திருக்கும் பெல்லா ஃபெச்ட்ஸ்பம்க்கு மிக அழுத்தமான பாத்திரம், எளிதில் உணர்வுகளைக் காட்டாத முகம் என்று ஒரு யூதச் சிறுவனாகவே மாறியிருக்கிறான் லெப்டினன்டால் முகத்தில் அடிபட்டு ப்ரூனோவை பார்க்காமலேயே தலை கவிழ்ந்து பேசும் இடங்கள் அற்புதமான நடிப்பு. உண்மையில் இந்த யூதச் சிறுவன் தான் படத்தின் கதாநாயகன்.<br />
<br />
படம் முழுக்கவே மிகச் சில கதாபாத்திரங்களே என்றாலும் படத்தின் காட்சிகளும் வசனங்களும் இசையும் படத்தோடு நம்மை ஒன்ற வைக்கின்றன. ஜெர்மனியின் யூத வெறுப்பை முன்பே புரிந்து கொண்டு படம் பார்ப்பவர்களுக்கு படத்தின் சில இடங்கள் நுணுக்கமாக புரியும் உதாரணமாக கேம்பின் புகைக் கூண்டில் இருந்து புகை வரும் போது ஏன் துர் நாற்றம் வருகிறது என்று ப்ரூனோ தன் தந்தையிடம் கேட்கும் போதும் , துர் நாற்றம் குறித்து லெப்டினன்ட் ப்ரூனோவின் தாயிடம் சொல்லும் போதும் வரலாற்றின் காலகட்டம் தண்டியும் நாம் ஒரு இன ஒழிப்பைப் பற்றி சிந்திக்கத் தொடங்கி விடுகிறோம்.<br />
<br />
இரண்டு சிறுவர்களுக்குள் இருக்கும் அன்பும் நட்பும், வளர்ந்த மனிதர்களிடையே சமூகத்தில் இருக்கும் ஏற்றத் தாழ்வுகளை எள்ளி நகையாடும் விதமாக குழந்தைகளின் இன்னொரு உலகத்தை நமக்குள் கொண்டு வருகிறது.<br />
<br />
படம் முடிகையில் இரண்டு சிறுவர்களுமே கேம்பின் உள்ளே மாட்டிக் கொண்டு உயிர் விடப் போகும் நேரத்தில் கைகளை ஒன்று சேர்த்துக் கொள்கிற இடம் ஒரு கவிதை. கடைசியில் வழக்கமான சினிமாக்களில் காட்டுவது போல் இறந்தவர்களின் உடல்களைக் காட்டாமல் வரிசையாக தொங்கிக் கொண்டும் இறைந்தும் கிடக்கும் கோடிட்ட நீல நிற பைஜாமாக்களை காட்டியதற்காகவே, ஜான் பாயினின் நாவலை படமாக்கிய இயக்குனர் மார்க் ஹெர்மனுக்கு ஒரு பூங்கொத்து.<br />
<br />
மேல்ஜாதிகளால் கீழ் ஜாதிகள் ஒடுக்கப் படுவதன் வலி உணர்ந்த, இனத்தின் பெயரால் கொத்துக் கொத்துக்களாக கொல்லப்பட்ட மனிதர்களை கண்டுணர்ந்த அதற்காக வருத்தப் படும் எல்லாருக்கும் பிடித்த படமாக இது இருக்கும்.<br />
<br />
<a href="http://www.imdb.com/title/tt0914798/?ref_=nv_sr_2">படம் குறித்த தகவல்களுக்கு </a><br />
<br />
<a href="http://putlocker.is/watch-the-boy-in-the-striped-pajamas-online-free-putlocker.html">முழு படத்தையும் காண </a></div>
Anonymoushttp://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-28593647.post-88594619729052024682014-12-26T20:13:00.000+05:302014-12-27T22:50:53.419+05:30கோட்சேவின் பெயரால் விருது கொடுப்போம் !<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
நாதுராம் வினாயக் கோட்சேவை தெரியாதவர்கள் காந்தியைக் கொன்ற இந்து மகா சபை உறுப்பினர் என்றால் உலகுக்கே தெரியும். காந்தியைக் கொன்றதன் மூலம் இந்து முஸ்லிம் கலவரத்தை தூண்டும் விதமாக தன் கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டது தொடங்கி சாவர்கர், மாளவியாக்களின் அங்கீகரிக்கப் பட்ட பிரதிநிதி அல்லவா கோட்சே.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgaVBJOmMZHw1OIOGA90pAxT_Ry3XMWTpJO9Nt2LHjHc6kuaHo98MUa-6ArT7WcGTEUWxtEkw4oPbosQ6nwPzmQsBbkgkfEcUOgwB5st6_wtnR9Dv4UAruNhDR26H7ZcA1SEJ2I/s1600/images.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgaVBJOmMZHw1OIOGA90pAxT_Ry3XMWTpJO9Nt2LHjHc6kuaHo98MUa-6ArT7WcGTEUWxtEkw4oPbosQ6nwPzmQsBbkgkfEcUOgwB5st6_wtnR9Dv4UAruNhDR26H7ZcA1SEJ2I/s1600/images.jpg" /></a></div>
<br />
<br />
பாஜகவின் ஆட்சியை இந்து மத வெறியர்களின் ஆட்சி, பஜகோவிந்தங்களின் ஆட்சி, காவிகளின் ஆட்சி என்று விமர்சித்தால் நம்மை ஏதோ தாலிபான்களின் அளவுக்கு வெறுக்க ஆரம்பித்துவிடுகிறார்கள் இந்த இடைச்சாதி இந்துக்கள். அவர்கள் அப்படியெல்லாம் இல்லை என்று சொல்லும் அளவுக்கு இவர்களுக்கு எந்த ஆதாரங்களும் இல்லை என்பதால் ஒட்டு மொத்தமாக எழுதுபவனின் அறிவைச் சோதிக்கும் விதமாக சில நண்பர்கள் அறிவாளித்தனமாக நம்மை சொறிய ஆரம்பித்து விடுகிறார்கள்.<br />
<br />
கோட்சே பற்றியோ மாளவியா பற்றியோ வாஜ்பாய் பற்றியோ அத்வானி பற்றியோ ஏன் மோடியைப் பற்றியோ சொல்ல ஒன்றுமே இல்லை. பாபர் மசூதி இடிக்க முக்கிய காரணமான அத்வானி, வெள்ளைக்கார துரைகளுக்கு உளவு வேலை பார்த்த வாஜ்பாய், குஜராத் கலவரங்களின் பிதா மகன் மோடி, பூரண இந்துத்துவ நாடாக இந்தியாவை மாற்றுவோம் என்று முழங்கிய மாளவியா குறித்து நல்லவிதமாக எதாவது இருந்தால் அல்லவா இவர்கள் நம் எழுத்தை விமர்சிக்க முடியும்?<br />
<br />
கோட்சேவுக்கு கோவில் கட்டுகிறார்கள் காந்தியின் நினைவு நாளில் திறக்கப் போகிறார்களாம், கூடவே, இந்திராவைக் கொன்ற சீக்கியருக்கும், அதற்கு காரணமான பிந்தரன் வாலேவுக்கும், ராஜீவைக் கொன்ற தனுவுக்கும் சிவராசனுக்கும், பிரபாகரனுக்கும் சிலைவைக்கப் போகிறோம் என்று யாராவது கிளம்பினால் என்ன ஆகும் என்று நினைக்கும் போதே பயந்து வருகிறது.<br />
<br />
வாஜ்பாயிக்கும் , மாளவியாவுக்கும் பாரத ரத்னா கொடுக்கிறார்களாம் கொடுக்கட்டும் இன்னும் இருக்கும் மிச்ச சொச்ச ஆட்சியின் சொற்ப நாட்களிலும் அமித் ஷாவுக்கும் , கலைஞரின் தலைக்கு விலைவைத்த ராம்விலாஸ் வேதாந்திக்கும் இன்னபிற பார்பனீய, இந்து வெறி எதிர்ப்பாளர்களுக்கு கொலைமிரட்டல் விடுக்கும் எச்ச ராஜாக்களுக்கும் கொடுத்துக் கொள்ளட்டும்.<br />
<br />
காவிகளின் வேர் ஆழ ஊன்றிக் கிடக்கும் இந்நாட்டில் இன்னும் ஆயிரம் ஆயிரம் கூத்துக்களும் அரங்கேறப் பார்ப்பதென்னவோ உண்மைதான் ஆனால் இவர்களின் கையில் ஆட்சி கிடைத்த பின் ஊடகங்களால் ஊதிப் பெருக்க வைக்கப் பட்ட ஶ்ரீமான் மோடியின் தர்பார் என்னவோ காத்தாடிக் கொண்டிருக்கிறது என்பது மட்டும் உண்மை.<br />
<br />
நாட்டை வளப்படுத்தும் பொருளாதார மேதைகள் இல்லாத சுகாதாரத்துக்கான செலவில் கூட 6000 கோடிகளை குறித்து வல்லபாய் பட்டேலுக்கு பல்லாயிரம் கோடிகளில் சிலை வைக்கத் துடிக்கும் ஆட்களின் கைய்யில் அல்லவா ஆட்சி இருக்கிறது.? பாவம் அவர்கள் மட்டும் என்ன வைத்துக் கொண்டா வஞ்சனை செய்கிறார்கள் தேர்தலுக்கு இரண்டு நாட்கள் முன்னர் தேர்தல் அறிக்கை வெளியிட்ட புத்திசாலிகள் அல்லவா?<br />
<br />
காஷ்மீரிலும் ஜார்கண்டிலும் வெற்றி பெற்று விட்டோம் என்றூ கொக்கரிக்கிறார்கள் ஆனால் காஷ்மீரில் வென்ற தொகுதிகளைத் தவிர மற்ற தொகுதிகளில் டெப்பாசிட் கூட பறிபோன விஷயத்தை மூடி மறைக்கிறார்கள்.<br />
<br />
கல்வி, மருத்துவம், சுகாதாரம், உள் கட்டமைப்பு என்று எந்த ஒரு அரசு, மக்கள் நலம் சார்ந்த கொள்கைகளும் இல்லாமல் , வாஜ்பாயி , அத்வானி மோடி அமித்ஷா என்ற பிம்பங்களின் தயவில் ஆட்சிக்கு வந்தவர்களிடம் கோட்சேவுக்கும் மாளவியாவுக்கும் வாழ்த்துக்களும் வீர வணக்கங்களும் தவிற வேறென்ன எதிர்பார்க்க முடியும். பஜகோவிந்தங்களின் ஆட்சி என்பது இன்னும் கொஞ்ச நாட்களின் முட்டுச் சந்தில் முட்டிக் கொண்டு நிற்கப் போகிறது என்பதை கருப்புப் பண விவகாரம், பெட்ரோல் விலை, ஊழல் எதிர்ப்பு, டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு என்று எல்லாவற்றிலும் பார்த்துவிட்டொம்.<br />
<br />
கூட இருந்தே கோஷ்டி காணம் பாடி என்னவோ திமுகவும் காங்கிரசும் மட்டும்தான் ஊழலின் வித்து, ஈழத்தின் எதிரி என்பதாய் பரப்புரைகளை வெளியிட்டு வஞ்சம் தீர்த்துக் கொண்ட செவ்வாழைகள், கொஞ்சம் கொஞ்சமாய் புளி மூட்டைக்குள் இருந்து வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்<br />
விளக்கத்துக்கு <a href="http://www.vinavu.com/2014/12/25/media-double-talk-on-anti-corruption-campaign/">வினவின் கட்டுரை படியுங்கள்.</a><br />
<br />
திராவிடம் என்றாலே உச்சா போய்க்கொண்டு ஆர் எஸ் எஸ்ஸின் பெயரைக்கூட தமிழகத்தில் உச்சரிக்க பயந்துகொண்டிருந்த எச்ச. ராஜாக்கள் எல்லாம் இன்று ரங்கராஜ் பாண்டேக்களின் தயவால் தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் கோட்சே புகழ் பாடிக் கொண்டிருக்கிறார்கள். கூடவே கொங்கு ஈஸ்வரன் என்ற ஜால்ராவும்.<br />
<br />
அத்வானிக்கு கோவையில் குண்டு வைத்தார்கள் என்று உண்மைக் குற்றவாளிகள் என்று யாராவது கிடைத்தால் அவர்களுக்கும் சிலைவைப்போம் என்று கிளம்பினால் அப்போதும் இந்த மகா சபைகள் மவுனம் காத்து வரவேற்கும் என்று நம்புவோமாக.<br />
<br />
பாஜக என்னும் ஆட்சியில் இருக்கும் ஒரு முகத்தை வைத்துக் கொண்டு காவிகள் தங்களின் எல்லா ஆசைகளையும் இந்த ஐந்தாண்டுகளுக்குள் நிறைவேற்றிக் கொள்ள துடிப்பது என்பது பொன் முட்டையிடும் வாத்தின் வயிற்றை அறுப்பதற்குச் சமம் என்பதை யாராவது சோக்களோ, இல்லை பத்ரிக்களோ அவர்களிடம் சொன்னால் பரவாயில்லை. பொன்முட்டை கிடைக்காவிட்டால் அவர்களுக்கு நஷ்டம் இல்லை, நம் உயிரல்லவா போகிறது.<br />
<br />
சிறுபான்மை மக்களின் நலனுக்கு எதிராகவே எப்போதும் நடக்கும் பாஜக சங் பரிவாரங்களின் சங்கறுக்கும் வேலை தொடங்கும் முன் விழித்துக் கொள்வோம் இல்லாவிட்டால் வரலாற்றை திரித்து எழுதும் பஜகோவிந்த பன்னாடைகள் கோட்சே பெயரில் ஒரு விருதை உண்டாக்கி காந்திக்கு கொடுத்து விடுவார்கள்.<br />
<br />
<br />
<br /></div>
Anonymoushttp://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-28593647.post-80269799758208736602014-12-22T21:10:00.002+05:302014-12-27T22:50:53.399+05:30நீங்கள் இந்துவா இல்லை இந்தியனா?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgrGWXzjzeEkAtVelIdHnUheZrLjMdD6ZMpcD8JdA0G8J45iGvX5j4epQYQJvfTQnGmG5FTqN3WGycwPbmt6VP5-w1q4U48Fm-VUSPShEfecWu3eugvvD08GN1Q8BWnA9lOARaC/s1600/secularism1.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgrGWXzjzeEkAtVelIdHnUheZrLjMdD6ZMpcD8JdA0G8J45iGvX5j4epQYQJvfTQnGmG5FTqN3WGycwPbmt6VP5-w1q4U48Fm-VUSPShEfecWu3eugvvD08GN1Q8BWnA9lOARaC/s1600/secularism1.jpg" height="200" width="320" /></a>இந்த காவிகளைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதித் தள்ளியாயிற்று, தமிழ் தேசியம் பேசுவோரின் இனத் தூய்மையை விட இந்து தேசியம் பேசும் தொகாடியாக்களின் பேச்சு ஆயிரம் மடங்கு அதிகம் வன்மம் கக்குவதாக மாறிக் கொண்டே போவது மத்திய கிழக்கின் இசிஸ், இசில், தாலிபான், அல்கொய்தாக்களின் வளர்ச்சி போல ஒரு புற்று நோய் போல உலக சமூகத்தை அச்சத்துக்குள் தள்ள ஆரம்பித்திருக்கிறது.<br />
<br />
இன்று கூட <span style="font-family: latha, TSCu_paranar, Arial, Helvetica, sans-serif;">December 22, 2014 </span><span style="font-family: latha, TSCu_paranar, Arial, Helvetica, sans-serif;">இந்தியாவில் இந்து மக்கள் தொகையை 100 சதவீதம் ஆக்குவோம் என்று வி.ஹெச்.பி. தலைவர் பிரவீன் தொகாடியா கொக்கரித்திருக்கிறார். இவர்கள் சொல்லும் இந்து நாடென்பது முதலில் யாரையெல்லாம் உள்ளடக்காது என்பதற்கு ஏகப்பட்ட ஆவணங்கள் உண்டு, சுருக்கமாகச் சொல்லப் போனால் ஒட்டு மொத்த சிறுபான்மையினர் அல்லாத இந்துக்களின் தேசமாக ஆக்கப் போகிறார்களாம்.</span><br />
<span style="font-family: latha, TSCu_paranar, Arial, Helvetica, sans-serif;"><br /></span>
<span style="font-family: latha, TSCu_paranar, Arial, Helvetica, sans-serif;">கூடவே கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் என்ற ஒன்றையும் கொண்டு வரப் போகிறார்களாம். நாசூக்காக "கட்டாய" என்றை சொல்லைச் சேர்த்துக் கொண்டுவிட்டார்கள். யார் வேண்டுமானாலும் எந்த சிறுபான்மை ஆட்கள் மேல் வேண்டுமானலும் என்னை இவர் "கட்டாயப்" படுத்தி மதம் மாற்ற முயல்கிறார் என்று குற்றம் சாட்ட ஏதுவாக. ஏற்கனவே தமிழ்நாட்டில் ஊழல் வழக்கில் தண்டனை பெற்று பதவியை இழந்த ஜெயலலிதா இப்படி ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து பின்வாங்கினார் என்பதெல்லாம் மோடி மஸ்தான்கள் அறிவார்களோ இல்லையோ?</span><br />
<span style="font-family: latha, TSCu_paranar, Arial, Helvetica, sans-serif;"><br /></span>
<span style="font-family: latha, TSCu_paranar, Arial, Helvetica, sans-serif;">இதைத்தானே மத்திய கிழக்கில் இஸ்லாமியத்தின் பெயரால் செய்கிறார்கள்? சிங்கள பவுத்தத்தின் பெயரால் இலங்கை இனவாத அரசாங்கம் செய்கிறது? பங்களாதேஷ், பர்மா, ஆப்பிரிக்க நாடுகள் சூடான் இஸ்ரேல் எல்லாம் இதைத்தானே செய்தன? ஜெர்மனி இதைத்தானே செய்தது? பிறகென்ன வேற்றுமையில் ஒற்றுமை இந்தியாவுக்கு?</span><br />
<span style="font-family: latha, TSCu_paranar, Arial, Helvetica, sans-serif;"><br /></span>
<span style="font-family: latha, TSCu_paranar, Arial, Helvetica, sans-serif;">அப்படி என்ன செய்துவிட்டார்கள் என்று வாதம் செய்ய வரவேண்டாம் இத்தனை ஆண்டுகள் சும்மா இருந்தவர்கள் ஆட்சியும் அதிகாரமும் மிருக பலத்தோடு கிடைத்தவுடன் பேசவும் ஆரம்பித்து விட்டார்கள். இனி மீதம் ஒன்றும் இல்லை </span><br />
<span style="font-family: latha, TSCu_paranar, Arial, Helvetica, sans-serif;"><br /></span>
<span style="font-family: latha, TSCu_paranar, Arial, Helvetica, sans-serif;">செய்ய வேண்டியது மட்டுமே பாக்கி. </span><br />
<span style="font-family: latha, TSCu_paranar, Arial, Helvetica, sans-serif;"><br /></span>
<span style="font-family: latha, TSCu_paranar, Arial, Helvetica, sans-serif;">இனத் தூய்மைவாதம், மதத் தூய்மைவாதம் எல்லாம் போய் வரலாற்றை திரித்தும் எழுத ஆரம்பித்திருக்கிறது காவிகளின் கூடாரம். காந்தியும் தேசபக்தர், காந்தியைக் கொன்ற கோட்சேவும் தேச பக்தர் என்று! இவர்களிடம் இருந்து வேறென்ன வார்த்தைகள் வரும்? கீதையை இந்தியாவின் தேசிய நூலாக்குவோம் என்று முழங்கியவர்கள் தானே?.</span><br />
<span style="font-family: latha, TSCu_paranar, Arial, Helvetica, sans-serif;"><br /></span>
<span style="font-family: latha, TSCu_paranar, Arial, Helvetica, sans-serif;">நமக்கு வாய்த்த பிரதமர் பற்றி சொல்லவே தேவையில்லை. எப்படியும் ஐந்தாண்டுகளுக்குள் தன் கால் படாத தேசமே உலகில் இருக்கக் கூடாதென்ற முன் முடிவோடு பறந்துகொண்டே இருக்கிறார். அவருக்கு அதானிகளும் அம்பானிகளும்தானே முக்கியம்?. அடுத்ததாக செவ்வாய் கிரகத்தில் நிலக்கரி கிடைக்கும் என்றால் அதானி குழுமத்தோடு அங்கும் போய் ஒரு ஒப்பந்தம் போடுவார் என்று நம்புவோம்.</span><br />
<span style="font-family: latha, TSCu_paranar, Arial, Helvetica, sans-serif;"><br /></span>
<span style="font-family: latha, TSCu_paranar, Arial, Helvetica, sans-serif;">அரசாங்கத்தை வழி நடத்தவும், மக்கள் நலத் திட்டங்கள் குறித்தும் எந்த கொள்கையும் அற்ற கட்சிகள் வெறும் மதம், தன் கட்சி சார்ந்த கொள்கைகளை மட்டும் வைத்துக் கொண்டு ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதை இன்னும் சில ஆண்டுகளில் தெரிந்துகொள்ளலாம் என்றிருந்த இந்திய மக்கள் ஆறே மாதங்களுக்குள் கசப்பு மருந்தை சுவைக்க ஆரம்பித்துவிட்டார்கள். </span><br />
<span style="font-family: latha, TSCu_paranar, Arial, Helvetica, sans-serif;"><br /></span>
<span style="font-family: latha, TSCu_paranar, Arial, Helvetica, sans-serif;">உண்மையில் காவி கட்சிகளின் கொள்கைதான் என்ன என்று கேட்டால் எல்லோரும் அது, ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி,சிவசேனா, பாஜக, இந்து முன்னனி என்று எவனைக் கேட்டாலும் . ராமர் கோவில், சேது சமுத்திரத்தை காப்பாற்றுவது, படேல்களுக்கும், சாவார்கர் களுக்கும் சிலை வைப்பது உலகின் ஒரே இந்து நாடு என்ற பெருமையை நேபாளிடம் இருந்து பிடுங்கிக் கொள்வது என்று பதில் இப்படித்தான் இருக்கிது. ஆட்சியாளர்கள் வெறும் போட்டோஷாப் உத்திகளைக் கொண்டே குஜராத்தை ஜப்பான் ஆக்கிக் காட்டி இந்தியாவை வென்றவர்கள் ஆயிற்றே இன்னும் சில நாட்களின் ராமர் கோவிலை அயோத்தியில் கட்டியேவிட்டதாகக் கூட காட்டுவார்கள் படம்.</span><br />
<span style="font-family: latha, TSCu_paranar, Arial, Helvetica, sans-serif;"><br /></span>
<span style="font-family: latha, TSCu_paranar, Arial, Helvetica, sans-serif;">பாஜகவும் அதன் கூட்டாளிக் கட்சிகளும் எப்படியெல்லாம் பிற்போக்குத் தனமாக சிந்திப்பவர்கள் என்பதற்கு இந்தியர்கள் எல்லாம் ராமனின் பிள்ளைகள் என்று உளரிக் கொட்டிய சாத்வி நிரஞ்சன் ஜோதி ஒருவரே போதும் இப்பேர்பட்ட ஆட்களை எல்லாம் மத்திய அமைச்சர் ஆக்கி அழகு பார்க்கும் பெருமை பாஜகவுக்கு மட்டுமே சேரும், சொல்லி வைத்தார் போல சட்ட சபைகளில் ஆபாசப் படங்கள் பார்ப்பது என்பதும் இவர்களின் பொழுதுபோக்கு , பெண்களை தெய்வமாகக் கொண்டாடுவோம் என்பதும் இவர்களின் பொழுதுபோக்கு.</span><br />
<span style="font-family: latha, TSCu_paranar, Arial, Helvetica, sans-serif;"><br /></span>
<span style="font-family: latha, TSCu_paranar, Arial, Helvetica, sans-serif;">குஜராத்தில் திட்டம் போட்டு கலவரங்கள் நடத்திவிட்டு அதை ஒரு விபத்து என்றும் ஒரு நாய் தான் செல்லும் வண்டியில் அடிபட்டு இறந்துவிட்டால் வருந்துவேன் என்று சொன்ன ஒரு ஆளைத்தானே நாம் பிரதமராக்கி அழகு பார்த்துக் கொண்டிருக்கிறோம்?.</span><br />
<span style="font-family: latha, TSCu_paranar, Arial, Helvetica, sans-serif;"><br /></span>
<span style="font-family: latha, TSCu_paranar, Arial, Helvetica, sans-serif;">கோத்ரா முதல் உத்திரப் பிரதேச கலவரங்கள் வரை தன் ரத்தக் கறைகளை கழுவாமல் அதையே ஆதாரங்களாக வைத்து ஒரு ஆளும் தேசிய கட்சியின் தலைவராக அமித் ஷா வரமுடியும் என்கிறபோது பாபா ராம்தேவ்களும் ஏதாவது ஒன்று கிடக்க ஒன்று செய்து தொலைக்கப் போகிறார்களோ என்று பயமாய் இருக்கிறது. </span><br />
<span style="font-family: latha, TSCu_paranar, Arial, Helvetica, sans-serif;"><br /></span>
<span style="font-family: latha, TSCu_paranar, Arial, Helvetica, sans-serif;">அத்வானி போகும் இடமெல்லாம் குண்டு வெடித்துக் கொண்டிருந்தது, நல்லவேளையாக தேர்தலில் ஜெயித்துவிட்டு அத்வானியும் ஓரங்கட்டப் பட்டுவிட்டதால் இனி அப்படி நடக்காது என்று நம்புவோம். மோடியின் கூட்டங்களில் இனி குண்டுகள் வெடிக்குமோ என்னமோ எல்லாம் அந்த அமித் ஷாக்களுக்கே வெளிச்சம். </span><br />
<span style="font-family: latha, TSCu_paranar, Arial, Helvetica, sans-serif;"><br /></span>
<span style="font-family: latha, TSCu_paranar, Arial, Helvetica, sans-serif;">காவி பயங்கரவாதம் என்பதென்னவோ வடநாட்டுக்கு மட்டும் என்று நினைத்துக் கொண்டு இங்கிருக்கும் திரவிடக் கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் வாக்கு கிடைத்தால் போதும் என்பதற்காகவும் ஆட்சியில் அதிகாரத்தில் இருந்து பதவியைச் சுவைத்தால் போதும் என்பதற்காகவும் ஒரு கூட்டணியை அமைக்குமேயானால் அந்த பிழையை வரலாறு ஒரு போதும் மன்னிக்காது. காரியம் ஆனபின்னால் காலை வாரி விடும் கயவர்கள் நிறைந்த இடம் என்பதை சு,சாமி தன் ஒவ்வொரு டிவீட்டிலும் சொல்லிக்கொண்டே இருக்கிறார், மான ரோஷம் இல்லாமல் இன்னும் பாஜகவில் ஒட்டிக்கொண்டிருக்கும், ராமதாஸ்களும், விஜயகாந்த் களும் விரைவில் அரசு உப்பை ஓருபிடி தனியே தின்றாவது உணர்ச்சி பெறட்டும்.</span><br />
<span style="font-family: latha, TSCu_paranar, Arial, Helvetica, sans-serif;"><br /></span>
<span style="font-family: latha, TSCu_paranar, Arial, Helvetica, sans-serif;">சமூகநீதி சமத்துவம் என்று வாய்கிழியப் பேசும் ராமதாஸ் பாஜகவின் கொள்கையை தன் கொள்கையாக மாற்றி நாட்கள் பல ஆயின என்றாலும் திராவிட மண்ணில் காவி பயங்கரவாதம் இடம் கொள்ள அனுமதிக்கக் கூடாது என்பதே எல்லாருடைய ஆவலும், அதற்குள் அன்புமணிக்கு ஏதும் மந்திரிப் பதவி கொடுத்து காரியத்தை பாஜக கெடுத்துவிடாது என்று நம்புவோம். </span><br />
<span style="font-family: latha, TSCu_paranar, Arial, Helvetica, sans-serif;"><br /></span>
<span style="font-family: latha, TSCu_paranar, Arial, Helvetica, sans-serif;">எங்கெல்லாம் மத பயங்கரவாதம் தலைதூக்குகிறதோ அந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போவார்கள் என்பதற்கு உதாரணமாக ஏகப் பட்ட நாடுகளைச் சொல்லலாம்.</span><span style="font-family: latha, TSCu_paranar, Arial, Helvetica, sans-serif;">நாமும் அப்படி நாசமாய்த்தான் போகவேண்டுமா என்பதை இந்தியர்கள் சிந்திக்கவேண்டும். </span><br />
<span style="font-family: latha, TSCu_paranar, Arial, Helvetica, sans-serif;"><br /></span>
<span style="font-family: latha, TSCu_paranar, Arial, Helvetica, sans-serif;">திராவிடம் பேசும் ஆட்களுக்கு இந்தியர்கள் மேல் என்ன அக்கரை என்று கேட்கும் ஆட்களுக்கு நாங்கள் திராவிடர்கள் அதனால்தான் இந்துக்களின் முகமூடிகளை கழட்ட முயற்சி செய்கிறோம். </span><br />
<span style="font-family: latha, TSCu_paranar, Arial, Helvetica, sans-serif;"><br /></span>
<span style="font-family: latha, TSCu_paranar, Arial, Helvetica, sans-serif;">நீங்கள் இந்துவாக இருக்கவேண்டுமா இல்லை இந்தியனாக இருக்க வேண்டுமா? </span><br />
<span style="font-family: latha, TSCu_paranar, Arial, Helvetica, sans-serif;"><br /></span>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-28593647.post-10199791909104814042014-12-21T19:46:00.002+05:302014-12-27T22:50:53.258+05:30திமுகவின் ஊளைச் சதைகள்.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து இன்று நெப்போலியன் வரை நடிகர்களுக்கும் திராவிட முன்னேற்ற கழகத்துக்கும் ஏழாம் பொருத்தம்தான். நடிகர்கள் என்று மட்டும் இல்லை எந்த கொள்கைகளும் அற்ற பதவிக்காகவும், புகழுக்காகவும் மட்டுமே திமுகவோடு ஒட்டி உறவாடிக் கொண்டிருந்து விட்டு சீ சீ இந்த பழம் புளிக்கும் என்று தனிக்கடை போட்டு திமுகவின் ஓட்டு வங்கியில் சேதாரம் செய்தவர்களால் திமுகவின் கொள்கைகளை சேதப் படுத்த முடியாது என்பதை வரலாறு உணர்த்திக் கொண்டே இருக்கிறது.<div>
<br /></div>
<div>
கட்சியின் பொருளாளராக இருந்து கொண்டே பொதுக் கூட்ட மேடையில் கட்சியின் கணக்கு வழக்குகளை கேட்ட எம்ஜிஆர் ஆகட்டும், ஏதாவது ஒரு விதத்தில் ஏதாவது ஒரு பதவியை அடைந்து விட மாட்டோமா என்று தன்னைத் தானே கழகத்தில் முன்னிலைப் படுத்திக் கொள்ள முயன்ற கண்ணதாசன் ஆகட்டும், ஏன் எஸ் எஸ் ஆர் முதல் ராதாரவி, சரத்குமார், ஏன் இன்றைய குஷ்பு வரை ஏதாவது ஒரு விதத்தில் கட்சியை விட்டு விலகும் போதோ அல்லது அங்கிருந்துகொண்டோ கலகச் செயல்களில் ஈடுபடுவதும் வழக்கமான ஒன்றாகிவிட்டது.முக முத்து முதல் முக அழகிரி வரை கலைஞரின் குடும்பத்துக்குள்ளேயே சிலர் இந்த வேலையை செய்யத் துணியும் போது மற்றவர்களை குறைகூறிப் பயணில்லை.</div>
<div>
<br /></div>
<div>
எந்த விதத்திலும் கட்சியின் கொள்கைகளான சமத்துவம் சமூக நீதி ஜனநாயகம் சாதி ஒழிப்பு திராவிட சித்தாந்தங்கள் அற்றவர்களை ஏதாவது ஒரு வகையில் மக்கள் அறிந்த முகம் என்பதனாலேயே கட்சியில் முன்னிலைப் படுத்தியதன் விளைவுகளை திமுக இப்போது அறுவடை செய்து கொண்டிருக்கிறது. இதெல்லாம் ஆரம்பகாலத்தில் எம்ஜிஆர் என்ற பிம்பம் கட்சியை உடைத்ததும் அதனால் ஏற்பட்ட இழப்புகளால் ஏற்பட்ட பயமும் கூட கட்சித் தலைமையை இப்படி முடிவுகளை எடுக்க வைத்திருக்கலாம். இது ஒன்றும் அதிமுக பாஜக போல பிரபலமான முகங்களால் மட்டும் வளர்ந்த கட்சி இல்லை. </div>
<div>
<br /></div>
<div>
கொள்கைகளால் புடம் போடப் பட்டு பெரியார் அண்ணா கலைஞர் பேராசிரியர் என்று வழிவந்த ஒரு இயக்கம் தேர்தல் தோல்விகள் என்பது கலைஞருக்கோ இல்லை கழகத்துக்கோ இழப்பு இல்லை ஆனால் சமூகநீதிக்கு, சமத்துவத்துக்கு ஒட்டு மொத்த தமிழ்நாட்டுக்கும் இழப்பு என்பதை திமுக ஆட்சியில் இல்லாத காலங்களில் எல்லாம் கண்டே வந்திருக்கிறோம்.</div>
<div>
திராவிடக் கொள்கைகளில் பற்றில்லாதவர்கள் கழகத்தில் இணைவதும் அவர்களை கட்சியே முன்னிலைப் படுத்துவதும் அவர்கள் பின்னர் கழண்டுகொண்டு புழுதி வாரி தூற்றுவதும் என்பது கட்சியின் அடிமட்டத் தொண்டனை அயர்வுக்குள்ளாக்குகிறது.</div>
<div>
<br /></div>
<div>
தீவிர காங்கிரஸ் ஆளான எம்ஜிஆர் கழகத்துக்குள் வந்து பிரிந்த போது கணிசமான வாக்காளர்களை தன் பின்னாலேயே இழுத்துக் கொண்டு போனார், பெயரில் மட்டுமே திராவிடத்தை வைத்துக் கொண்டு கருமாரி அம்மன் வழிபாட்டை பகிரங்கமாகச் செய்து பின்னர் தன் மறைவுக்குப் பின்னரான தலைமையை அடையும் அளவுக்கு முழுக்க முழுக்க திராவிடத்துக்கும் சமூக நீதிக்கும் எதிரான நிலைப்பாட்டையே எடுக்கும் அளவுக்கு தீவிர இந்துத்துவ வாதியான ஜெயலலிதாவை வளர்த்துவிட்டதைத் தவிர வேறெந்த புரட்சியையும் இந்த இரண்டு சினிமா புரட்சிகளுமே செய்துவிடவில்லை.</div>
<div>
<br /></div>
<div>
கட்சியில் இருந்து ஒதுங்கிய கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்துமதம் எழுதினார், டி ராஜேந்தர் பயங்கர பக்திமான் சோதிடரும் கூடவாம். நேறைய நெப்போலியன் கூட பாஜகவில் ஐக்கியமாகிவிட்டார், அடடே என்ன ஒரு கொள்கைப் பிடிப்பு? இவர்களுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தில் ஒரு பங்கையாவது குமரிமுத்து, வாகை சந்திரசேகர் போன்றவர்களுக்கு கொடுத்திருந்தால் இன்னும் இன்னும் என்று தமிழகத்தில் புயலாகச் சுழன்றிருக்க மாட்டார்களா?</div>
<div>
<br /></div>
<div>
விநாயகர் சதுர்த்திக்கு ஸ்டாலின் வாழ்த்து என்றதற்கு பின்னர் வந்த மறுப்பை படித்துவிட்டு கலைஞர் வீட்டிலேயே இந்த கூத்துக்கள் எல்லாம் நடக்கும் போது என்னடா பெரிய கொள்கை பேச வந்துட்டீங்க என்று மாற்றுக் கட்சியினர் கேட்கும் போது தலையை கவட்டியில் வைத்துக் கொள்ளும் அவமானம் என்பது எல்லா திமுக ஆட்களுக்கும் வழக்கமாகிப் போனது.</div>
<div>
<br /></div>
<div>
அதுதான் அப்படியென்றால் திராவிடக் கொள்கையென்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் ஆட்கள் எல்லாம் கட்சியின் முக்கியப் பதவிகளுக்கு முன்னிருத்தினால் அவர்கள் தங்களின் சாதியை வளர்த்துவிட்டு முடிவில் தனிக் கட்சி தொடங்க ஆரம்பித்து விடுகிறார்கள். சரத்குமார் உதாரணம்.</div>
<div>
<br /></div>
<div>
முறசொலி மாறனின் மகன் என்ற ஒரே காரணத்துக்காக வளர்த்துவிட்டு ஊடக ஜாம்பவானான அண்ணனின் துணைகொண்டு ஆ. ராசா என்ற கொள்கை பிழம்பின் அரசியல் முடிவுக்கே வித்திடும் அளவுக்கு 2ஜி அலைக்கற்றை விவகாரத்தை ஊதிப் பெரிதாக்கியதில் தயாநிதி மாறனின் பங்கு என்ன என்பதை நாடே அறியும். திமுகவின் படுதோல்விக்கு அதுவும் ஒரு காரணம் என்று சொல்லப் படுகிறது. </div>
<div>
<br /></div>
<div>
இப்படி வழக்கமான ஜனநாயகத்தில் இருந்து கொள்கைகளை அறவே மறந்த ஆட்களை எல்லாம் திமுகவில் வளர்த்துவிட்டதன் விளைவு இன்று பாஜக அடுத்த முதல்வரை தமிழகத்தில் களமிறக்குவோம் என்று குட்டை குழப்புகிறது. 2016 தேர்தலில் திமுகவோடு சேர்த்து முதல்வர் பதவிக்கு போட்டியிடும் கட்சிகளின் எண்ணிக்கையே ஒரு டஜனைத் தாண்டுகிறது.</div>
<div>
<br /></div>
<div>
திமுக ஒன்றும் சங்கர மடமில்லை என்று அடிக்கடி நாமே சொல்லிக் கொண்டு நம்மை ஏமாற்றிக் கொள்கிறோமா என்ற பயம் வரத்தான் செய்கிறது. ஆனாலும் இன்றளவும் கொஞ்சமாவது ஜனநாயகமும் கொள்கையும், அடிப்படை தொண்டன் சொல்வதையும் காது கொடுத்துக் கேட்கும் தலைமையும் இருக்கும் ஒரே கட்சி என்ற வகையில் திமுக தொண்டனாக பெருமைப் பட்டுக் கொள்ளலாம்.</div>
<div>
<br /></div>
<div>
திமுக ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கின் தண்டனைக்கும் பின்னால் அதிமுகவில் ஏற்படுத்தியிருக்க வேண்டிய வெற்றிடத்தை யார் யாரோ பயன்படுத்திக் கொள்ள வேடிக்கப் பார்த்தபடி கையைப் பிசைந்து கொண்டிருக்கிறது. அதன் விளைவுகள் தான் இன்றளவும் ஒரு டம்மி முதல்வரை பெயருக்கு வைத்துக் கொண்டு மம்மி ஆட்சியில் இருப்பது போன்ற பிம்பத்தை ஊடகங்கள் மூலம் மக்கள் முதல்வர் என்ற பெயரால் இன்னும் இன்னும் ஜனநாயகத்தையே கேலிக் கூத்தாக்கும் முயற்சியில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறது அதிமுக.</div>
<div>
<br /></div>
<div>
பாஜக ஆர் எஸ் எஸ் சங் பரிவார் அமைப்புகள் எல்லாம் ஒருவருக்குள் ஒருவர் அடித்துக் கொண்டாலும் ஒரு சிக்கல் அடுத்தவர்களால் என்று வரும் போது ஒன்றாய் கூடி கூட்டுச் சதி செய்கிற ஆட்கள் ஆனால் திமுக இன்று அப்படி இல்லை , தங்களுக்குள் குழுக்களை அமைத்துக் கொள்ளும் பெருந்தலைகள் திமுகவுக்கு ஒரு சேதாரம் என்றால் ஆஹா நான் இதைத்தான் ஆசைப் பட்டேன் என்று உள்ளுக்குள் கொட்டமடிப்பதை எல்லா சமீபகால தேர்தல்களிலும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதெல்லாம் வெளியில் இருந்து வந்தவர்களால் அல்ல.</div>
<div>
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg3TSFxZrAftDaafiyBlth1wR5FVgJS_RAu7bG07D1_Afv8u52HYDksmZqNXnTg_Mq0tdRxAabsBvCCqUVnT8FEp3M0Ppyp3yoNMEBLkx6gjSpA1fTfy7u-GhnmN0zK33L6uXvb/s1600/4605610510_afa0c3c6a5_z.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg3TSFxZrAftDaafiyBlth1wR5FVgJS_RAu7bG07D1_Afv8u52HYDksmZqNXnTg_Mq0tdRxAabsBvCCqUVnT8FEp3M0Ppyp3yoNMEBLkx6gjSpA1fTfy7u-GhnmN0zK33L6uXvb/s1600/4605610510_afa0c3c6a5_z.jpg" height="217" width="320" /></a></div>
<div>
மதுரையில் அழகிரி கொடுத்த தைரியம், இன்று கட்சியில் இருந்தும் ஒட்டு மொத்த மாக நீக்கப் பட்டதாக அறிவிக்கப் பட்டிருந்தாலும், திமுகவில் அவரை இத்தனை தூர வளர்த்துவிடுவதற்க்கு காட்டிய முனைப்பில் ஸ்டாலினுக்கு ஒரு பாதியாவது கட்சியில் முக்கியத்துவம் அப்போதிருந்தே கொடுத்திருந்தால் இன்று அடுத்த முதல்வர் யார் என்று அமீத் ஷாகளும் ராமதாசும், விஜயகாந்தும் போட்டிக்கு வந்து பேட்டிகள் கொடுத்திருக்க மாட்டார்கள்.</div>
<div>
<br /></div>
<div>
கொள்கைக் குன்றுகளும், கழகமே உயிர் என்று நினைத்தும் பலபேர் இருக்க கொழுத்த ஆட்கள் என்று கட்சியில் சிலரை முன்னிலைப் படுத்தியதன் விளைவே இன்றைய பிரபலங்கள் எல்லாம் கட்சியை விட்டு கழட்டிக் கொண்டு போவதும் , </div>
<div>
<br /></div>
<div>
போனவை போகட்டும் என்று கலைஞர் கத்தியை எடுக்க வேண்டிய நேரம் இது. ஊளைச் சதைகள் அதிகம் இருப்பது உடலுக்கும் நல்லதல்ல கட்சிக்கும் நல்லதல்ல என்பது அரசியலையே சுவாசித்து உயிர் வாழும் கலைஞருக்கு தெரியாதது அல்ல. இளைத்தாலும் பரவாயில்லை என்று சிகிச்சையை தொடங்குங்கள் கலைஞரே. </div>
<div>
<br /></div>
<div>
ஏனென்றால் கலைஞர் மட்டுமே கழகத்தின் முகம் என்பது கட்சித் தொண்டனுக்கு தெரியாமல் இல்லை.</div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-28593647.post-63925359010236312832014-12-17T21:54:00.003+05:302014-12-17T21:54:27.288+05:30வினையூக்கி சிறுகதைகள்- ஆண்களின் மறைக்கப் படாத உலகம். <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
செல்வகுமார் ராமச்சந்திரன் என்கிற செல்வகுமார் வினையூக்கிக்கும் எனக்கும் அத்தனை ஒன்றும் பூர்வஜென்ம பந்தம் இல்லை, இரண்டு பேரும் நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்து கொஞ்சமாவது இந்த இணைய கடலில் ஒரு சிறு கல்லையாவது வீசி, சிற்றலைகளை உண்டாக்கிவிட முடியாதா என்ற பல ஆயிரம் பேர்களின் கனவுகளின் பிரதிநிதிகளாக எங்களை நாங்களே முன்னிறுத்திக் கொள்ள முயன்றதைத் தவிர.<br />
<br />
சமூக நீதி, சமத்துவம், இட ஒதுக்கீடு, பெரியார், திராவிடம் என்று கண்ணுக்குத் தெரியாத இழைகளால் இணைக்கப் பட்ட இணைய உலகம் எங்களுக்கானது என்று இருவரும், தனித் தனியே தங்களின் பாதையை வகுத்துக் கொண்டு இரண்டு பேருமே பத்தாண்டுகளில் என்ன என்னவோ செய்து தொலைத்திருக்கிறோம். அவரும் நானும் ஒரே பாதையில் பயணப் பட்டவர்கள் என்பதை தவிற அதிகம் நான் ப்ளாகுகளில் எல்லாம் உரையாடிக் கொண்டது கூடக் கிடையாது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhMKX_CZ5cJDqNYJbCdudKIHMpQ1cUryQusyD9USLRWtmJk_QdTBDXE6rF7Io6x9lNq6ufLsdQybbWfvx1sjAKk-82m8xz5M0E70GByUryb8gf9qhmTRvre9s_ea70aS6NIInem/s1600/vinaiookki-short-stories.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhMKX_CZ5cJDqNYJbCdudKIHMpQ1cUryQusyD9USLRWtmJk_QdTBDXE6rF7Io6x9lNq6ufLsdQybbWfvx1sjAKk-82m8xz5M0E70GByUryb8gf9qhmTRvre9s_ea70aS6NIInem/s1600/vinaiookki-short-stories.jpg" height="320" width="232" /></a></div>
செல்வாவின் கதைகள் எல்லாம் கார்த்திக், அம்மு, அஞ்சலி பாப்பா என்கிற மூன்று பேருக்குள்ளேயே அடங்கி விடுகிறது. ஒவ்வொரு கதையும் படிக்கும் போதும் நாம் கார்த்திக்கையும் அம்முவையும் வேறு வேறு கார்த்திக் அம்மு அஞ்சலிகளியும் பார்க்கிறோம். அது வெறோனிக்கா ஆகட்டும் இல்லை வேறெந்த ஐரோப்பிய பெண்ணாகட்டும் எல்லாமே அம்முதான். தனித் தனி சிறுகதைகளை எல்லாம் ஒரு நாவல் போலவே படிக்க முடிவதற்கு காரணம் இதுதான் வேறு வேறு ஆட்கள் பெயர்கள் மட்டும் ஒன்றே.<br />
<br />
இடையிடையே சில விஞ்ஞானக் கதைகளும் உண்டு. போகிற போக்கில் அப்பாவி கணேசனை அத்தனை எளிதாக கடந்து செல்ல கொஞ்சம் நகைச்சுவை உணர்வும் வேண்டும், ஆனால் ஒட்டு மொத்த கதைகளையும் படிக்கையில் கார்த்திக் மேல் பொறாமையே வரும் அளவுக்கு திகட்டத் திகட்ட பெண்கள், காதல் , காதல். பிரிதல் என்ற ஒன்றைக்கூட வெகு எளிதாக கடந்து வந்த என் போன்ற ஆட்களுக்குள் இருக்கும் கார்த்திக்குகளை நிச்சயம் படிக்கிற எல்லோருக்கும் பிடிக்காமல் இருக்காது.<br />
<br />
ஆண்கள் எல்லாம் உத்தமர்களாகவோ இல்லை கேடு கெட்ட பொறுக்கிகளாகவோ மட்டும் கதை செய்யத் தெரிந்த ஆட்களுக்கு நடுவே ஆண்களின் இன்னொரு உலகத்தை ஒவ்வொரு கதையிலும் ஜன்னல் ஜன்னலாக திறந்து கொண்டே போகிறார். சமூக நீதி பேசும் இடங்களில் எல்லாம் கிளிமூக்கு அரக்கனும் எட்டிப் பார்க்கிறார். விஞ்ஞானக் கதைகளில் வினையூக்கி எட்டிப் பார்க்கிறார். இப்படி ஆங்காங்கே கதாசிரியர் தன் முகத்தை காட்டிக் கொண்டே இருப்பதால் படிக்க சுவாரஸ்யமாகவும் இருக்கிறது.<br />
<br />
நிறைய பயணங்களும் அதில் சந்திக்கும் பெண்களும் என்று சில இடங்கள் இழுவை போட்டாலும் ஐரோப்பிய அம்முகளுக்காகவே படிக்கத் தூண்டும் கதைகள் பக்கம் பக்கமாய் இருக்கின்றன. ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் மூலம் கடவுளை காணும் கதை இன்னொரு அன்பே சிவம்.<br />
<br />
ஒவ்வொரு கதையுமே ஒரு குறும்படத்துக்குண்டான நிகழ்வுகளை கொண்டவை, யாராவது குறும்பட இயக்குனர் இதைப் படித்தால் செல்வாவிடம் முன் அனுமதி பெற்று படமாக்க முயலலாம்.<br />
<br />
"தேவதைகளை பெற்றெடுத்தவுடன் மனைவிகள் பிசாசுகள் ஆகி விடுகின்றனர், தேவதைகளுக்காகவே பிசாசுகளை பொறுத்துக் கொண்டிருக்கவேண்டியிருக்கிறது"<br />
<br />
இது போல ஏகப்பட்ட சுவாரஸ்யம் மிகுந்த வரிகள் நூல் முழுதும் காணக் கிடைக்கிறது.<br />
<br />
பிடிஎஃப் கோப்பாக முழு நூலையும் தரவிறக்கம் செய்ய<br />
http://freetamilebooks.com/ebooks/vinaiooki-short-stories/<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br /></div>
Anonymoushttp://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-28593647.post-50843140728447305512014-12-01T21:04:00.001+05:302014-12-27T22:50:53.338+05:30பா.ஜ.க எனும் பாசிச நச்சு.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஆர்.எஸ்.எஸ், பாஜக என்னும் பாசிஸ்டுகள் ஆட்சியில் அமரும் போதெல்லாம் இந்தியா என்ற துண்டுகளால் ஒருங்கமைக்கப் பட்ட தேசம் மத, சாதி விரோதங்களால் அழிவையும், நிலையற்ற தன்மையும் சந்தித்தே வந்திருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் என்றும் சிவ சேனா என்றும் பாஜக என்றும் பெயர்கள் மட்டும்தான் வேறு வேறு மற்றபடி இவர்களின் கொள்கை எல்லாம் இந்தியாவை ஒரு இந்துக்களின் நாடாக, பாகிஸ்தான் முஸ்லிம்களின் நாடாக ஆனது போல மத்திய கிழக்கு நாடுகளில் மதத்தின் பெயரால் துண்டாடப் பட்டு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வன்முறை வெறியாட்டங்களால் மக்கள் ஒரு அச்சத்திலேயே வாழ்ந்து கொண்டிருப்பது போல இந்தியாவையும் வேற்றுமையில் ஒற்றுமை காணும் நிலையில் இருந்து ஒற்றுமை என்கிற பெயரால் வேற்றுமை விரோதங்களால் துண்டாடிவிட வேண்டும் என்பதே.<br />
<br />
ஆர் எஸ் எஸ் காலத்திலேயே தொடங்கப் பட்ட இவர்களின் செயல் திட்டம் கொஞ்சம் கொஞ்சமாக இந்துக்களுக்குள் ஒற்றுமை எனும் ஒரே முழக்கத்தோடு திட்டம் போட்டு தங்கள் ஆட்சி அதிகாரங்களை கைப்பற்ற ஆரம்பித்த பின் முழு வீச்சில் இப்போது செயல் படுத்த தொடங்கி விட்டனர். பாபர் மசூதி இடிப்பு தொடங்கி சேது சமுத்திர திட்டத்தை முடக்கியது வரை, இவர்கள் மதத்தாலும் தேச நலனாலும் தங்களுக்கு, தங்கள் மதத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கும் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்பதையே இப்படி புதுப் புது திட்டங்களாலும் அறிக்கைகளாலும் மிரட்டல்களாலும் செயல் படுத்த துணிகின்றனர்.<br />
<br />
சமஸ்கிருத தினிப்பு, பள்ளியில் சரஸ்வதி வணக்கம், எங்கே சென்றாலும் ஹிந்தியில் உரையாற்றும் பிரதமர், என்று தங்களின் பாசிச கொள்கைகளை தினிக்க ஆரம்பித்து விட்டனர். பெரும்பான்மை இல்லாத காலங்களில் அடுத்தவர் தயவில் ஆட்சியை ஓட்டிய காலங்களில் கொஞ்சமாவது கூட்டணி கட்சிகளின் தயவு வேண்டும் என்பதற்காக கடிவாளம் இட்ட குதிரையாக இருந்த இவர்கள் இப்போது மிருக பலத்தோடு எதிர்கட்சிகளே இல்லாத நிலையை அடைந்ததும் தங்கள் முகமூடிகளை எல்லாம் கழட்டி தூர வைத்துவிட்டு கோர முகத்தை காட்ட ஆரம்பித்து விட்டனர்.<br />
<br />
ஆட்சியில் அமரும் முன்னர் வானளாவி மோடி புராணம் பாடிய ஊடகங்கள் இன்னும் மயக்கத்தில் இருந்து விடுபடவில்லை. இதற்கெல்லாம் கட்டியம் கூறுவது போல அமைந்திருப்பதுதான் ஹெச்.ராஜா என்னும் பாஜக போர்வையில் பதுங்கிக் கொண்டு பகிரங்க மிரட்டல்களை கூட்டணிக் கட்சியின் தலைவர்களுக்கே விடுக்கும் அரசியல் ரவுடி. எந்த இன ஒழிப்புக்கு ஆதரவாக இருந்தது என்ற ஒரு காரணத்துக்காக ஒட்டு மொத்த தமிழகமும் திரண்டு நின்றதோ அதை ஒட்டு மொத்தமாக நடத்திய ராஜபக்ஷே மீண்டும் தேர்தலில் வெற்றிபெற வாழ்த்து சொல்லும் ஊடகங்களால் ஊதிப் பெருத்த ஊர்சுற்றி அதானிகளுக்கும் அம்பானிகளுக்கும் நன்றிக் கடனை திருப்பிச் செலுத்திக் கொண்டிருக்கும் மிஸ்டர் 56 அங்குல மோடி என்று தங்களின் காவி அடையாளத்தை காட்டத் தொடங்கி விட்டனர்.<br />
<br />
<br />
<br />
முன்னரே ஒரு முறை பெரியாரை செருப்பால் அடிப்பேன் என்று ஹெச்.ராஜா கூறியபோதும் சரி இப்போது வைகோவுக்கு பகிரங்க மிரட்டல் விடும் போதும் சரி, பாஜகவின் முக்கிய தலைவர்களுள் ஒருவராக மாறிப் போன சுப்பிரமணியன் ஸ்வாமி ஒட்டுமொத்த தமிழர்களையும் எலிகள் பொறுக்கிகள் என்று திட்டி வாய்க்கு வந்ததையெல்லாம் உளறிக் கொண்டிருக்கும் போதும் சரி ஊடகங்களோ, எதிர்கட்சிகளோ அப்படி ஒன்றும் பெரிய எதிர் விணை ஆற்றிடவில்லை என்பதுதான் உண்மை. தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் ஹெச்.ராஜா சு.ஸ்வாமியின் பேச்சுக்கள் அவர்களின் தனிப்பட்ட கருத்து என்றும் அரசியல் நாகரீகம் குறித்தும் வைகோ ராமதாஸ் போன்றவர்கள் அடக்கமாக இருப்பது நல்லது என்று பாடம் எடுக்கிறார்.<br />
<br />
முன்பே வைகோ, ராமதாஸ் போன்றவர்களை சு.ஸ்வாமி கூட்டணி கட்சியென்றும் பாராமல் டிவிட்டரில் திட்டிய போதே தங்களின் கண்டனத்தை தெரிவித்திருந்தாலாவது கொஞ்சம் அடக்கி இருக்கலாம். ஆனால் இவர்கள் கண்டுகொள்ளாமல் விட்டதன் விளைவு இன்று ஹெச் ராஜா வைகோவுக்கு மிரட்டல் விடுப்பதும், ஸ்வாமி கூட்டணியை விட்டு அவர்களே வெளியேறி விடுவது நல்லது என்றும் கூறும் அளவுக்கு வளர்ந்து போய் இருக்கிறது.<br />
<br />
பாசிசம் என்பது படுகொலைகளால் மட்டும் வளர்வதில்லை. மதத்தின் பெயரால் மட்டுமே மக்களை ஒன்று திரட்டி இனக் குழுக்களின் அரசியலை அதிகாரத்தை, அவர்களின் கைகளில் இருந்து பிடுங்கி ஒரு பெரும்பாண்மை மக்களின் கைய்யில் கொடுத்தால் அவர்களே தங்களின் அதிகாரங்களை நிறுவிக் கொண்டு சட்டத்தையும் மனித நேயத்தையும் கால்களில் போட்டு மிதிப்பார்கள் என்பதற்கு ஜெர்மனியின் ஹிட்லர், உகாண்டாவின் இடி அமீன், ஆப்கானிஸ்தானின் தாலிபான்கள், குஜராத்தில் மோடி, இலங்கையின் ராஜபக்ஷே என்று வரலாற்றின் அடுக்கு தோறும் சாட்சிகள் கொட்டிக் கிடக்கின்றன.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj92dZvfTU_5RdbOpcaOe33wJNOFrhtwkbrdqOWz5sjOG_Y1wEcYdnHML-U2Z3d9c9Dn0yrr5YX_jRwV6q6vJTHi-lFRrzk7xQa1wZchYiaGdpvbpWy2r7478Xa5bqSzrnTYMlw/s1600/240212satish.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj92dZvfTU_5RdbOpcaOe33wJNOFrhtwkbrdqOWz5sjOG_Y1wEcYdnHML-U2Z3d9c9Dn0yrr5YX_jRwV6q6vJTHi-lFRrzk7xQa1wZchYiaGdpvbpWy2r7478Xa5bqSzrnTYMlw/s1600/240212satish.jpg" height="239" width="320" /></a></div>
<br />
நாம்தான் வரலாற்றை அதன் மகிழ்வான பக்கங்களை மதிப்பெண்களுக்காக மட்டுமே படித்துவிட்டு மறந்தும் போகிறோமே? அதனால்தான் அம்பேத்கரும் பெரியாரும் சிங்காரவேலரும் வாழ்ந்த மண்ணில் காவிக் கொடியும் பறக்க அனுமதித்துவிட்டு இன்று அரசியல் மிரட்டல்களை சந்தித்துக் கொண்டிருக்கிறேம்.<br />
<br />
இந்த காவிக் களைகளை இப்போதே ஒழிக்கும் பணிகளை தொடங்காவிட்டால் இந்தியாவில் இருந்து எங்களை நாங்களே துண்டித்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதை குறைந்த பட்ச அரசியல், மத நல்லிணக்கம் விரும்பும் கட்சிகள் மக்களுக்கு தெரிவித்து காவிகளுக்கு எச்சரிக்கை விடுத்து தங்களின் செயல்பாட்டை தொடங்காவிட்டால் எதிர்காலத்தில் வரலாறு உங்களை மன்னிக்கப் போவதில்லை.<br />
<br />
முடிவு நம் கையில்.<br />
<br />
<br />
<br />
<br /></div>
Anonymoushttp://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-28593647.post-72671559060374209762014-11-27T14:42:00.000+05:302014-12-27T22:52:55.511+05:30நெகிழ வைத்த திரைப்படங்கள்-3 Dancer in the Dark<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
இந்த படம் என்னை மட்டுமல்ல பார்க்கும் யாரையும் இளகவைக்கும் என்பதில் எனக்கு துளியும் சந்தேகம் இல்லை 2002ல் இந்த படத்தை பார்க்கும் போது எனக்கு இவ்வளவு ஆச்சரியம் இல்லை ஆனால் இப்போது இருக்கிறது, காரணம் 2002க்கு பிறகுதான் வெறிபிடித்தது போல உலக சினிமாக்களை தேடித் தேடி பார்த்துக் கொண்டிருக்கிறேன். கிட்டத்தட்ட 2 TB கொள்ளளவு கொண்ட ஹார்ட் டிஸ்க்கில் முழுக்க முழுக்க உலக சினிமாக்கள் ஆங்கில சினிமாக்கள் என்று வகை வாரியாக 3000 படங்களுக்கும் மேல் சேமித்து வைத்திருக்கிறேன். இன்னும் டவுன்லோடிக் கொண்டிருக்கிறேன். எல்லாம் டோரண்ட்ஸ் தந்த வரம்.<br />
<div>
<br /></div>
<div>
Dancer in the Dark.<br />
<div>
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhB2-RzCV1Sju9S5Ras2lVgEaLdFUOEGfBqR35dKnQ25GVTn8y_MxjbhlmkFLGzC9UR8R63y4nmGlf50SiUSuRhQIwmvBW2TdOjUmihbaSpF-YA9Bhp3rg7fJdId10aLyswzHlJ/s1600/dancer-in-the-dark.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhB2-RzCV1Sju9S5Ras2lVgEaLdFUOEGfBqR35dKnQ25GVTn8y_MxjbhlmkFLGzC9UR8R63y4nmGlf50SiUSuRhQIwmvBW2TdOjUmihbaSpF-YA9Bhp3rg7fJdId10aLyswzHlJ/s1600/dancer-in-the-dark.jpg" height="320" width="219" /></a></div>
<div>
<br /></div>
<div>
பொதுவாகவே வசனங்கள் நிறைந்த சினிமாக்களை ரசிப்பவன் நான். அதிலும் Lars van Trier படங்களை சொல்லவே வேண்டியதில்லை, நிம்போமேனியாக் ஆகட்டும் ஆன்ட்டி கிரிஸ்ட் ஆகட்டும் மனுஷன் பின்னி இருப்பார். இந்த படத்தை பொருத்தவரையில் இசையும் பாடல்களும் வசனங்களும் என்று எந்த ஒரு இரும்பு இதயத்தையும் கொள்ளை கொள்ளுகிறது. அதிலும் முக்கியமாக வழக்கம் போல ட்ரையர் இந்த படத்தையும் கதாநாயகியை முன்னிலைப் படுத்தியே எடுத்திருக்கிறார். ஒட்டு மொத்தமாக காதாநாயகி பட்டுமே படத்தை தூக்கி சுமந்திருக்கிறார் அதுவும் ஜோர்க்குக்கு சொல்லவா வேண்டும் படத்தை சுண்டு விரலில் சுமந்திருக்கிறார். </div>
<div>
<br /></div>
<div>
கதை இதுதான் கதையின் நாயகி சல்மா தன் மகனுடன் செக்கோஸ்லோவாக்கியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்தவர், சல்மாவுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் பார்வை பறிபோய்க்கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தன் மகனுக்கும் அதே குறைபாடு என்பதால் மகனுக்கு மருத்துவம் பார்ப்பதற்காக வந்தவர். வந்த இடத்தில் , ஒரு ஸ்டீல் பேக்டரி, ஒரு வீட்டில் இருந்தே செய்யும் சிறு வேலைகள், மற்றும் டான்ஸ் பாடல் என்று உண்மையில் ஒரு குருவி சேர்ப்பது போலவே கொஞ்சம் கொஞ்சமாய் பணம் சேர்த்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு உதவியாக காவல் துறையிலிருக்கும் நண்பனும், அவர் மனைவியும் தங்கள் இடத்தை சல்மாவுக்கு வாடகைக்கு விட்டும் சல்மாவின் மகனை கவனித்துக் கொள்ளும் பொறுப்பும் ஏற்றிருக்கின்றனர், சல்மாவை தன் காதலியாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் ஒருவர், சல்மாவுக்கு பேக்டரியில் ஒரு தோழி. கொஞ்சம் கொஞ்சமாய் பணம் சேர்த்து வைத்திருக்கும் சல்மா தன் மகனுக்கு மருத்துவம் பார்ப்பதற்கு முன்பே கண் பார்வை முற்றிலும் போய்விடுகிறது அதன் பின் அவருக்கு எல்லா சத்தங்களும் இசைதான் அவருக்கு. பேக்டரியில் சத்தம் இசை, ரயில் சத்தம் இசை, என்று.</div>
<div>
<br /></div>
<div>
முற்றிலும் பார்வை பறிபோன பின்னர் ஒரு நாள் தான் வங்கிக்கு செலுத்த வேண்டிய கடனுக்காக அந்த போலீஸ் நண்பன் சல்மாவின் பணத்தை திருடி விடுகிறான். அதைக் கேட்கப் போன இடத்தில் நடக்கும் தள்ளு முள்ளுகளில் போலீஸ்காரன் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு விட கொலைப் பழி , திருட்டுப் பழி எல்லாம் சல்மாவின் மேல் விழுகிறது.</div>
<div>
<br /></div>
<div>
சிறைச்சாலையில் விசாரணைக்குப் பின் சல்மாவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப் படுகிறது. இதுதான் கதை.</div>
<div>
<br /></div>
<div>
சல்மாவாக நடித்திருக்கும் ஜோர்க் (Bjork)க்கைத் தவிற வேறு யாராலும் இப்படி ஒரு நடிப்பை வெளிப்படுத்தி இருக்க முடியுமா என்பதை ஒவ்வொரு காட்சியிலும் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார். பேக்டரியில் வேலை செய்வதாக இருக்கட்டும் கண் பார்வை பறிபோய்க் கொண்டிருப்பதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சமாளிப்பதாகட்டும் தன் காதலை ஏற்கச் சொல்லி வரும் ஜெஃப் இடம் (Peter Stomare) மறுக்கும் இடம் ஆகட்டும், தன் பார்வைக் குறைபாட்டை போலீஸ் கார நண்பன் பில்லிடம் (David Morse) சொல்லும் போதாகட்டும் இப்படி எல்லாக் காட்சிகளிலும் ஜோர்க் வாழ்ந்திருக்கிறார். </div>
<div>
<br /></div>
<div>
படம் முழுக்க நெகிழத்தான் வைக்கிறது ஆனாலும் குறிப்பிட்டுச் சொல்லும் இடங்கள் என்றால் பேக்டரியில் வேலை செய்து முடிந்த பின் ஜெஃப் தன் வண்டியில் வரும்படி அழைக்க சல்மா தனக்கு இப்போது ஒரு ஆண்துனை தேவையில்லை என்றும் அப்படி ஒரு வேளை தேவைப்பட்டால் உன்னைத்தான் தேர்ந்தெடுப்பேன் ஜெஃப் என்று சொல்லும் காட்சி ஒரு கவிதை என்றால் தனியே தண்டவாளத்தில் நடந்து போகையில் ஜெஃப்பும் சல்மாவும் பாடும் I have seen it all பாடல் ஒரு காவியம். பாடல், இசை, நடனம், என்று எல்லாம் ஒட்டுமொத்தமாய் மயங்க வைக்கிறது </div>
<div>
<br /></div>
<div>
<a href="http://www.youtube.com/watch?v=62pLY5zFTtc">பாடலுக்கு இங்கே சொடுக்கவும்</a></div>
<div>
<br /></div>
<div>
பணம் காணாமல் போனபின் பில்லிடம் போய் பணம் கேட்கும் போது ஒரு அடிபட்ட பறவையைப் பார்ப்பது போல் உணர்ந்தேன் ஆனால் கொலைக்குப் பின்னால் வரும் அந்த பாடல் நம்மை கொலைக்குப் பின்னாலான அதிர்வுகளில் இருந்து மீட்டு விடுகிறது. படத்தின் எல்லாப் பாடல்களும் மேஜிகல் ரியலிசங்கள்தான் கொஞ்சம் கூட தொய்வடைய வைக்காத கதை, சிறையில் இருக்கும் போதும் ஒரு பாடல் வருகிறது, </div>
<div>
<br /></div>
<div>
தனக்கு மரண தண்டனை என்று தெரிந்த பின் சிறையில் தன் பேக்டரி தோழியுடன் தொலை பேசியில் பேசிக் கொண்டே என் மகனுக்கு பார்வை முக்கியம் எனக்காக வக்கீல் வேண்டாம் என்று கதறும் காட்சி கண்களை குளமாக்குகிறது. முடிவில் தூக்கு தண்டனையின் போது எனக்கு தூக்கு வேண்டாம் பயமாய் இருக்கிறது என்று கதறுவதை பார்க்கும் போது என்னை அறியாமல் விம்மி வெடித்திருக்கிறேன் கல்நெஞ்சம் கொண்ட நானா இப்படி என்றெல்லாம் நினைத்தாலும் அதுதான் இந்த படத்தின் வெற்றி. </div>
<div>
<br /></div>
<div>
முடிவாக தூக்கிற்கு முன் கொடுக்கப் படும் கொஞ்ச அவகாசத்தில் சல்மா பாடிக் கொண்டிருக்கும் போதே அடிப்பலகை நகர்ந்து கொள்ள பாடல் பாதியில் துண்டிக்கப்பட தூக்கில் தொங்கும் கணத்தில் கண்களை மூடிக் கொண்டேன். ஒரு பத்து தடவைகளுக்கு மேல் பார்த்த இந்த படத்தில் நான் அந்த ஒரு செகண்டை மட்டும் கண்களை மூடிக் கொண்டுதான் கழித்திருக்கிறேன் என்றால் நம்பித்தான் ஆகவேண்டும். ஒட்டு மொத்தமாக என்னை நெகிழச் செய்த படங்களின் உச்சத்தில் எப்போதும் இருக்கும் படம் இது.</div>
<div>
<br /></div>
<div>
<a href="http://www.imdb.com/title/tt0168629/?ref_=nv_sr_1">படம் பற்றிய தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும்.</a></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<a href="http://putlocker.is/watch-dancer-in-the-dark-online-free-putlocker.html">முழு படத்தையும் காண இங்கே சொடுக்கவும்</a></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
</div>
</div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-28593647.post-81421218442455980192014-11-25T01:51:00.000+05:302014-12-27T22:52:55.520+05:30நெகிழ வைத்த திரைப்படங்கள்-2 A Serbian Film (Un Serbski Film)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
இந்த படத்தை ( எ ஸெர்பியன் ஃபில்ம் ) , ( Un Serbksi Film ) நெகிழவைத்த திரைப்படங்கள் வரிசையில் சேர்ப்பதை விட அதிர வைத்த திரைப்படங்கள் வரிசையில் சேர்ப்பதுதான் மிகச் சரியாக இருக்கும் என்றாலும் நான் அப்படி ஒரு தொடரை எழுத இதுவரை உத்தேசித்திருக்கவில்லை என்பதால் வேறு வழியே இல்லாமல் இதையும் நெகிழ வைத்த திரைப்படங்களின் வரிசையிலேயே சேர்க்க கட்டாயப் படுத்தப் பட்டுள்ளேன் ஒரு வேளை டின்ட்டோ பிராஸ் காவியங்களை (?) எழுதும் போதோ அல்லது ஸ்பார்ட்டகஸ் ப்ளட் அண்ட் சேண்ட் , காட்ஸ் ஆஃப் அரேனா, ரோம் சீரியல்கள் குறித்தோ எழுதினால் அந்த தலைப்பை வைக்கலாம் என உத்தேசித்திருக்கிறேன்.<br />
<br />
முதலிலேயே சொல்லி விடுகிறேன், கற்பினிப் பெண்கள், குழந்தைகள் 18+ வயதாகாதவர்கள், இளகிய மனமுடையவர்கள், என்னை பிடிக்காதவர்கள் இந்த படத்தை தவிற்பது உங்களுக்கும் எனக்கும் நலம் பயக்கும்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWHUDe3BvtjygtvmOTOVPDTOHVzU2-alSvboCZxvof-pXq5q-5a757PnxNwq14aVwHO7QZ1IOUrZp1p3h0rQHeTRHaMLu3zpYf0A6MhLFRSeTuVN_3p9CJuAvr_Cr57xmKcFv-/s1600/743795ASerbianFilmposter1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWHUDe3BvtjygtvmOTOVPDTOHVzU2-alSvboCZxvof-pXq5q-5a757PnxNwq14aVwHO7QZ1IOUrZp1p3h0rQHeTRHaMLu3zpYf0A6MhLFRSeTuVN_3p9CJuAvr_Cr57xmKcFv-/s1600/743795ASerbianFilmposter1.jpg" height="320" width="227" /></a></div>
<br />
<br />
கிடக்கட்டும் நம் கதைக்கு வருவோம். படத்தின் ஆரம்பத்திலேயே வரும் அறிமுகக் காட்சியில் அதிர ஆரம்பிக்கும் நாம் படம் முடியும் வரை அதில் இருந்து மீளப் போவதே இல்லை என்பதை கதாநாயகனும் மனைவியும் தன் மகன் பார்க்கும் "அந்த" காட்சியில் உணர்த்தி விடுகிறார்கள். கதை இதுதான். ஸெர்பியாவின் ஒரு முன்னாள் "ரிட்டயர்டு" பாலுணர்வு தூண்டும் சினிமாக்களின் நடிகர் தன் குடும்ப பொருளாதார சூழலால் மீண்டும் அந்த பாலுணர்வு பட்டங்களுக்குள் நுழைந்து அதன் பின்னனியில் வலையில் சிக்கிக் கொள்ளும் ஒரு பாலியல் வன்முறைகள் நிறைந்த படம்தான் இது ஆனாலும் அதிர்வுகளுக்கு மட்டும் பஞ்சமே இல்லை.<br />
<br />
மிலோஸ், மரியா, பீட்டர் என்ற அழகான குடும்பம், மிலோஸின் மனைவி மரியா மேல் ஒரு கண் வைத்திருக்கும் மிலோஸின் தம்பி மார்கோஸ், மிலோஸின் முன்னாள் தொழில் முறை நண்பி லைலா (லேய்ஜா?) மீண்டும் மிலோஸை உக்மிர் என்னும் தொழில் முறை பாலியல் பட, நிஜத்தை, நிஜ கொலைகளை, நெக்ரோ பீலியாக்களை, படமாக்கி அதை பணமாக்கும் இயக்குனரிடம் அறிமுகப் படுத்த அதன் பின் மிலோஸுக்கு நடப்பவைதான் கதை.<br />
<br />
இதில் நீங்கள் அதிர அதிர என்று அதிர்ந்து கொண்டே இருக்க படம் முழுக்க காட்சிகளும் விவரணைகளும் உண்டு. மிலோஸ் உக்மிரின் படத்தில் நடிக்க ஆரம்பிக்கும் போது ஒரு சிறு குழந்தையை அவளின் அம்மா அடித்து இழுத்துக் கொண்டு போகும் போது ஆரம்பிக்கிறது , பின்னர் எதுவுமே சினிமா இல்லை எல்லாமே உண்மைதானோ என்ற எண்ணம் வந்து மிலோஸ் மரியாவிடம் பேசிக் கொண்டிருக்கும் போதும், அந்த சிறுமியோடு, அவளின் முன்னிலையில் தன்னால் நடிக்க முடியாது என்னும் போதும் தன் மனைவியிடமும் தன் தம்பியிடமும் பேசும் போதும் உக்மிரின் படத்தில் நடிக்கையில் தன்னை போதைக்குள்ளாக்கி படம் எடுப்பதை பின் ஃபாளாஷ் பேக்கில் கண்டு திகைப்பதையும் காணுகையில் நெகிழச் செய்வதை விட படம் நம்மை அதிரத்தான் செய்கிறது.<br />
<br />
நான் நல்ல விமர்சகனாக இல்லாமல் போகலாம் என்னடா இவன் வள வள என்று இழுக்கிறானே என்று அது பற்றியெல்லாம் நான் கவலைப்படப் போவதில்லை ஆனால் நல்ல சினிமாக்களின் ரசிகன் என்ற முறையிலும், கொஞ்சம் ஹாரர்,கல்ட்,மேஜிக்கல் ரியலிச படங்களின் ரசிகன் என்ற முறையிலும் இந்த படத்தை பற்றி எழுதாவிட்டால் என் ஜென்மம் சாபல்யம் ஆகாது.<br />
<br />
எல்லாவற்றையும் விஞ்சி இந்த படத்தில் எஞ்சி நிற்பது கொஞ்சமே கொஞ்சமாய் ஒட்டிக் கொண்டு நிற்கும் செண்டிமெண்ட்.<br />
<br />
For Example an dialog from the film, after Milos Saw the Agreement and speaking with his Wife Maria.<br />
<br />
Maria: You fucked every one in the Industry and you just throw them like a Condom but why you couldn't don't to me?<br />
<br />
Milos: Because i just Fucked them but i love you.<br />
<br />
Maria: So it means you don't just like to fuck me?<br />
<br />
இதன் பின்னர் வரும் இரண்டு நிமிடங்களும் காதலின் , காமத்தின் உச்சம், இதில் என்ன உணரவைக்கும் நெகிழ்த்தும் நிமிடங்கள் என்று கேட்பவர்கள் படம் பார்த்துக் கொள்ளவும்.<br />
<br />
ஆனால் உங்களை அதிர்வின் உச்சத்துக்கே கொண்டு செல்ல இருக்கவே இருக்கிறது படத்தின் உச்ச காட்சி, இதைக் கண்டும் அதிராமல் போனீர்கள் என்றால் உங்களை ஒரு நல்ல மன நல காப்பகத்தில் கொண்டு சேர்ப்பது நல்லது, அதிராமல் மகிழ்வீர்கள் என்றால் உங்களையும் அங்கேயேதான் கொண்டு சேர்க வேண்டும் என்பது நிச்சயம்.<br />
<br />
உங்களை அதிரவைக்கவோ இல்லை உறைய வைக்கவோ இந்த படம் பற்றி எழுதவில்லை, என்னை கொஞ்சம் உலுக்கிய படங்களுல் ஒன்று இது. இன்னும் கொஞ்சம் இந்தப் படத்தை உற்றுப் பார்த்தீர்களே ஆனால் என் கண்களுக்கும் தெரியாத காட்சிகள் உங்களுக்கு கிட்டும்.<br />
<br />
இன்னொரு விஷயம் இது முழுக்க முழுக்க ஸெர்பியன் மொழியில் இருக்கும் படம் கொஞ்சமே கொஞ்சம் சிரமப் பட்டு ஸப் டைட்டிலை படித்து விடுங்கள்.<br />
<br />
<a href="http://www.imdb.com/title/tt1273235/fullcredits?ref_=tt_ov_st_sm">படம் பற்றிய தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும்.</a><br />
<br />
<a href="http://putlocker.is/watch-a-serbian-film-online-free-putlocker.html">படத்தை முழுதாகக் காண இங்கே சொடுக்கவும்.</a><br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br /></div>
Anonymoushttp://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-28593647.post-41003203564575677902014-11-20T21:52:00.001+05:302014-12-27T22:52:55.502+05:30நெகிழ வைத்த திரைப்படங்கள்- 1 Room in Rome<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
இப்போதெல்லாம் எந்த படத்தை பார்த்தாலும் சில காட்சிகள் என்னை ஒரு நிமிடம் குபுக் என்று நெகிழ்த்தி விடுகிறது. முன்பெல்லாம் சில காட்சிகளை பார்த்தால் என்ன கொடுமைய்யா இதெல்லாம் ரொம்பவே செண்டிமெண்ட் போட்டு தாளிக்கிறார்களே என்ற கிண்டலோடு படம் பார்த்த நானா இப்படி ஆகிவிட்டேன் என்று யோசிக்க வைப்பது என் நாற்பதை நெருங்கும் வயதா இல்லை சுமார் பத்தாண்டுகளாக நீண்ட இடைவெளிகளில் குடும்பத்தை பிரிந்து வாழும் துயரா என்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் கிடக்கட்டும் என்னை எத்தனை முறை திரும்பத் திரும்ப பார்த்தாலும் நெகிழ்த்திய படங்கள் என்று ஒரு தொடரை உத்தேசித்திருக்கிறேன். டாப் டென் போல இது வரிசைப் படுத்துவதற்காகவோ இல்லை படங்களை விமர்சிப்பதற்க்காகவோ அல்ல. வெறுமனே என்னை நெகிழச் செய்த படங்களை, காட்சிகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள. </div>
<br />
Room In Rome.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgDF0ONaaz4ZZk383YbZab47tmR2R4Doe7Wnuvm04UDZYNSsJCmnweEQoaizOD2_C2kh0gNew34jXPVzRXlbMc8fyiP9kqEd59DRnhdVxD2jscrR0t7mcr5WZ1BjAAwkcewV_A2/s1600/room+in+rome.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgDF0ONaaz4ZZk383YbZab47tmR2R4Doe7Wnuvm04UDZYNSsJCmnweEQoaizOD2_C2kh0gNew34jXPVzRXlbMc8fyiP9kqEd59DRnhdVxD2jscrR0t7mcr5WZ1BjAAwkcewV_A2/s1600/room+in+rome.jpg" height="320" width="226" /></a></div>
<br />
<br />
இரண்டு முற்றிலும் அறிமுகமில்லாத (ஆல்பா, நடாஷா ) பெண்களின் ஒரு நாள் இரவின் கதை, கொஞ்சம் பிசகினாலும் பாலியல் படங்களின் (Porn) வரிசையில் சேர்ந்துவிடக் கூடிய திரைக்கதை, ஆனால் அதை காட்சிப் படுத்திய விதத்திலும், பின்னனி இசையிலும் கொஞ்சம் கூட ஆபாசம் எட்டிப் பார்த்துவிடாமல் நிர்வாணத்தை அழகாக்கி இருக்கும் இயக்குனர், Julio Medem ( ஒளிப்பதிவாளர் <a href="http://www.imdb.com/name/nm0145915/?ref_=ttfc_fc_cr9" style="background-color: white; color: #70579d; font-family: Verdana, Arial, sans-serif; font-size: 13px; text-decoration: none;">Alex Catalán</a> இரண்டு பேரையும் விட இரண்டு கதை நாயகிகளும்<span style="background-color: white; color: #333333; font-family: Verdana, Arial, sans-serif; font-size: 13px;"> </span><a href="http://www.imdb.com/name/nm0025745/?ref_=tt_ov_st" itemprop="url" style="background-color: white; color: #70579d; font-family: Verdana, Arial, sans-serif; font-size: 13px; text-decoration: none;"><span class="itemprop" itemprop="name" style="font-size: inherit;">Elena Anaya</span></a><span style="background-color: white; color: #333333; font-family: Verdana, Arial, sans-serif; font-size: 13px;">, </span><span class="itemprop" itemprop="name" style="background-color: white; color: #70579d; font-family: Verdana, Arial, sans-serif; font-size: inherit; text-decoration: none;"><a href="http://www.imdb.com/name/nm1388067/?ref_=tt_ov_st" itemprop="url" style="background-color: white; color: #70579d; font-family: Verdana, Arial, sans-serif; font-size: 13px; text-decoration: none;">Natasha Yarovenko</a></span> கூட படத்தை ஒரு சேர அழகாக்குகிறார்கள்.<br />
<br />
சரி இது ஏன் நெகிழ வைத்தது என்ற விஷயத்துக்கு வருகிறேன் , ஏனென்றால் படத்தை நான் விமர்சிக்க விரும்பவில்லை. இரண்டு பெண்களும் ஒரு நாள் இரவில் அறிமுகமாகி ஆல்பா நடாஷாவை தன் அறைக்கு அழைக்கும் தருணம் நடாஷா ஆல்பாவின் கையை விட்டு விலக எண்ணி இழுத்துக்கொண்டு போகையில் ஆல்பா, நடாஷாவிடம் என்னிடம் போட்டியிட்டால் நான் தோற்றுப் போவேன் ஆனால் உன் அறைக்கு வந்து விடுவேன் என்னும் போது இருவரின் முகத்திலும் குறும்பு கொப்பளிக்கும்,<br />
<br />
முதன் முதலாய் ஒரு பெண் என்னை இப்படிப் பார்ப்பது இதுதான் முதல் முறை என்னும் போது நடாஷாவின் வெட்கமும் ஆல்பாவின் காதல் பார்வையும் ஒரு அழகிய கவிதை, அதன் பின் ஆபா உறங்குகையில் நடாஷா தன் அறைக்குச் செல்லும் முன் தன் பெயரை ஆல்பாவின் காதில் சொல்லும் " ஷா, நடாஷா" எனும் போதும் தவறுதலாய் ஆல்பாவின் உள்ளாடையை அணியும் போது அது கிழிந்து போனதை பார்த்து சிரிப்பதும் என இதெல்லாம் கதையை சுவாரஸ்யம் ஆக்குகின்றன, நடாஷாவின் செல்போனை ஆல்பாவின் அறையில் விட்டு விட்டு வந்து அதை திரும்ப எடுக்க வரும் போது இருவருக்கும் இடையில் ஆரம்பிக்கிறது கதை.<br />
<br />
ஆல்பா தன்னைப் பற்றி சொல்லும் போது தன் தாயாருடன் ஒரு அரபு ஷேக்கின் அந்தப்புரத்தில் இருந்த போது கர்பமாகி அங்கே இருந்தால் தன் குழந்தையும் ஒரு அந்தப்புரத்தில் இருப்பதை விரும்பாமல் அதுவும் பெண் குழந்தை என்றதால் கருவைக் கலைத்து விடுவதையும் சொல்லும் போதும் அந்த குழந்தைக்கு வைக்க விரும்பிய பெயரைத்தான் தனக்கான பெயராக வைத்துக் கொண்டதையும் சொல்லும் போது ஒரு கணம் நம்மை உலுக்கி விடுகிறதுதான். ஆனால் நடாஷாவும் ஆல்பாவும் தங்களை பற்றி பொய் மட்டுமே சொல்லிக் கொண்டு அந்த ரோமின் மைய்யத்தில் இருக்கும் ஹோட்டல் அறையின் சித்திரத்தின் கேரக்டர்களை பற்றியும் அதனை தொட்ட வாரே ஊரும் கதை அமைப்பையும் கவணித்து வந்தால் தான் இது ஒரு மேஜிகல் ரியலிசம் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.<br />
<br />
நடாஷாவும் ஆல்பாவும் தங்களை யார் என்றும் தங்களின் காதலையும் தெரிந்து கொண்ட பிறகும் இருவரும் பிரிந்து போவது என்று முடிவு செய்யும் போதும் என்று படம் முழுக்க நெகிழ வைக்கும் இடங்கள் ஏராளம், அதிலும் கடைசி காட்சியில் ஆல்பாவை பாத் டப்பில் கிடத்தி அந்த கற்பனை அம்பை நடாஷா பிடுங்கும் வேளை க்ளாஸ்.<br />
<br />
மற்றபடி இந்த படத்தை சிலாகித்துச் சொல்ல வசனங்கள் தான் இருக்கிறது ஆனால் நிறைய நேரங்கள் மவுனங்களின் அழகை அனுபவிக்கலாம், பின்னனி இசை காதில் ஒலித்துக் கொண்டே இருக்கும். அதிகமாய் எழுதி படத்தை பார்க்கப் போகிறவர்களின் சுவாரஸ்யத்தை குறைக்க விரும்ப வில்லை.<br />
<br />
<a href="http://www.imdb.com/title/tt1263750/?ref_=nv_sr_1">படம் பற்றிய குறிப்புகளுக்கு இங்கே சொடுக்கவும்.</a><br />
<br />
<a href="http://putlocker.is/watch-room-in-rome-online-free-putlocker.html">முழு படத்தையும் காண இங்கே சொடுக்கவும்.</a><br />
<br />
பின் குறிப்பு ; படம் முழுக்க நிறைந்து கிடக்கிறது நிர்வாண அழகு என்பதால் முன் கூட்டி எச்சரிக்க வேண்டியது அவசியம். இது ஒரு 18+ படம். ஆனால் ஆபாசப் படம் அல்ல .<br />
<br />
நம் பின் நவீனத்துவ எழுத்தாளர்கள் யாருமே இந்த மேஜிக்கல் ரியலிச படத்தை இன்னும் பார்க்கவில்லையா இல்லை இப்படி நிர்வாணங்கள் நிறந்த படங்களை எல்லாம் மக்களிடம் கொண்டு சேர்த்தால் ஆபாசம் என்று சொல்லி விடுவார்களோ என்று பயந்து விட்டார்களா என்று தெரியவில்லை.<br />
<br />
<br />
<br />
<br /></div>
Anonymoushttp://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-28593647.post-88727952313263152092014-10-14T22:23:00.003+05:302014-12-27T22:50:53.424+05:30தமிழ் பாஸ்போர்ட் !!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
என் அறை நண்பர்கள் ஈழத் தமிழர்கள். ஒருவர் மட்டக் களப்பு, மற்றொருவர் யாழ்ப்பாணம். மட்டக்களப்பு நண்பர் எனக்கு ஒரு எட்டாண்டுகளாய் தெரியும் அரசியல் , ஈழவிடுதலை, கருணாநிதி, ராமச்சந்திரன், ஜெயலலிதா, பிரபாகரனை விமர்சனம் செய்வது என்பதில் எனக்கும் அவருக்கும் மலைக்கும் மடுவுக்கும் எலிக்கும் பூனைக்கும் இருக்கும் ஒற்றுமை என்பது என்னைச் சுற்றி இருக்கும் நிறைய பேருக்கு தெரியும். எங்கள் இருவரையும் நட்பைத் தவிற வேறெதுவும் இணைக்கவில்லை.<br />
<br />
சென்ற வாரத்தில் என் அறையில் தங்கியிருக்கும் யாழ் நண்பர் அவருக்கு தமிழ்நாடு இந்தியாவில் தான் இருக்கிறதா என்பது தொடங்கி பிரபாகரன் வரை பயங்கர அரசியல் பூகோள அறிவு ஆனாலும் அறியாமையில் இருக்கும்ஆட்கள் தமிழ் நாட்டுக்கு மட்டுமே சொந்தமா என்ன? ஆனாலும் அவர் என் அறையில் இருக்கும் இன்னொரு மலையாள நண்பரைக் காட்டிலும் பரவாயில்லை என்றுதான் சொல்லவேண்டும்.<br />
<br />
மலையாளிகளின் அரசியல் என்பதுதான் சுயநல அரசியலையும் தாண்டி சுய சொரிதலுக்கான அரசியல் என்பது உலகப் பிரசித்தம். பிரபாகரனே மலையாளி என்பவர்கள் ஆயிற்றே அதோடு மாடுமல்ல உலகில் முதலில் நடக்கும் எல்லாம் மலையாளிகளால் தான் என்று இன்றும் ஐய்யப்பன் மேல் சத்தியம் செய்கிறார்கள். ஒருபக்கம் அச்சுவையும் உம்மன் சாண்டியையும் கடவுளுக்கு(?) நிகராக தூக்கிச் சுமப்பார்கள் பாஜகவின் ராஜகோபால் தோற்றுப் போன காரணத்துக்காகவே சசி தரூரை கேவலமாக்குவார்கள். அதெல்லாம் கிடக்கட்டும்.<br />
<br />
நான் சொல்ல வந்ததே அது அல்ல. அந்த மலையாள நண்பரின் பாஸ்போர்ட்டை எதற்க்காகவோ பார்த்த யாழ் நண்பர் கேட்டாரே ஒரு கேள்வி "உங்கட பாஸ்போர்ட்டில மலையாளம் காணக் கிடைக்குதில்லயே இது மலையாளமா என்ன ? " என்று ஹிந்தியைக் காட்டி. குண்டு அங்கேதான் வெடித்தது. மலையாளர் (எல்லாம் ஒரு மரியாதைதான்) அவருக்கும் ஒரு நண்பர் வேலைதேடி வழக்கம் போல எங்கள் அறையில் இருப்பவர் ( எங்களின் அறைக் கதைகளை இங்கே சொல்ல ஆரம்பித்தால் அது ஜெயமோகனின் வெண்முரசை விட பெரிதாகக் கூடிய அபாயம் இருப்பதால் இங்கேயே அதற்கொரு தடா போடுவோம்). அவரும் சொன்னார்கள் "ஹிந்தி ராஷ்ட்ர பாஷை " அதுகொண்டு தன்னெ இந்தியன் பாஸ்பொர்டிலே ஹிந்தியும் இங்கிலீசும் மத்துறாமுண்டு"<br />
<br />
நமக்குத்தான் மலையாளிகளை பேசிக்காகவே பிடிக்காது ஹிந்தியை அடிப்படையில் இருந்தே பிடிக்காது, ( என்ன ஒரு மொழி அறிவு என்று நீங்கள் சிரிப்பது என்னைப் பார்த்து அல்ல மக்களே நன்றாக சிந்தித்து பாருங்கள் பேருந்து நிறுத்தத்துக்கு வழி கேட்டால் பஸ் ஸ்டாப்புக்கு வழி சொல்லி இன்னொரு சக ஜீவியை பேந்த பேந்த அலைய விட்டவர்கள் தானே நீங்கள் ? ) இன்னொன்று இந்த இணையத்தில் புழங்க ஆரம்பித்த பிறகு தெரிந்தோ தெரியாமலோ தென்னிந்திய திராவிட அரசியலை படித்து படித்து ஒரு துளியாவது பருகி இருக்கிறேன், அதன் தாக்கம் என் செயல்களில் என் பேச்சுக்களில் தெரிக்கும், அது கேட்டு தெரித்தவர்கள் அதிகம் என்றாலும் அதிலெல்லாம் பார்வை செலுத்தாமல் நான் என் பாட்டுக்கு போய்க் கொண்டிருக்கிறேன்.<br />
<br />
நான் அந்த சரித்திர முக்கியத்துவமான வசனத்தை என் எட்டாண்டு கால இரண்டாண்டு இரண்டு மாத இரண்டு நாள் நண்பர்களிடம் சொன்னேன் " என்ன ஹிந்தி தேசிய மொழியா ? எவன்டா சொன்னான் இந்தியாவுக்கு அங்கீகரிக்கப்பட்ட மொழிதான் உண்டே தவிற அலுவல் மொழி எதும் இல்லைய்யான்னு குஜராத்தில் கோர்ட்டில் சொல்லப்பட்ட உயர்நீதிமன்ற தீர்ப்பைச் சொல்லி இந்திய அரசியல் மொழி அரசியல் பூகோள அரசியல் இன்ன பிற இன அரசியல் எல்லாம் விளக்கி சொன்ன பின்னரும் அந்த ஈழ நண்பர்கள் கேட்டார்கள் ஏன் அண்ணா இந்திய பாஸ்போர்ட்டில் அந்த அங்கீகரிக்கப் பட்ட மொழி கூட இல்லை? என்று!<br />
<br />
நியாயமான கேள்விதான் ! இலங்கை பாஸ்போர்ட்டில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் மூன்று மொழிகளும் உண்டு ஆனால் எல்லா விவரணைகளும் ஆங்கிலத்தில்தான் இருக்கும் என்பது உலக வல்லாதிக்க சக்திகளின் சதி என்பது உலக அறிவு கொண்டவர்களின் பால பாடம். ஆனாலும் கூட ஒவ்வொரு நாட்டின் குடி மகனுக்கும் தான் வைத்திருக்கும் குடிஉரிமை அட்டையில் என்னதான் அப்படி எழுதி வைத்து தொலைத்திருக்கிறார்கள் என்பதை அறிய அடிப்படை உரிமை உண்டே அது கூடத் தெரியாமல் இந்தியாவெங்கும் இருக்கும் பல நூறாயிரம் மக்கள் ஆங்கிலமும் ஹிந்தியும் தெரியாமல் அடிப்படையில் தாங்கள் தங்களை அடையாளப் படுத்துவதற்காக வைத்திருக்கும் அந்த குடிஉரிமைச் சீட்டு யாரைக் கேட்டு இப்படி ஆங்கிலத்தையும் ஹிந்தியையும் மட்டும் தாங்கி தொங்கிக்கொண்டு இருக்கிறது?<br />
<br />
சட்டபூர்வமாக ஹிந்தி தேசிய மொழி அல்ல ஆனால் அதைத்தான் நம் எல்லோர் தலையிலும் ஏற்றி இந்தியாவை ஹிந்தியா ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்<br />
<br />
நிலவியல் , பன் மொழிக் கொள்கை, நேருவின் ஹிந்தி தினியாமை, காக்கைதான் தேசிய பறவையா என்ற எல்லா உதா "ரணங்களையும்" தாண்டி நாம் இன்னும் சிந்திக்க வேண்டிய செயல்கள் பல கோடி உண்டு!<br />
<br />
என் கேள்வி எல்லாம் ஏன் இந்த பரந்த பல நாடுகள் ஒருங்கிணைந்த இந்தியாவில் பண் மொழி பேசும் இடத்தில் எவன் எந்த மொழி பேசும் இடத்தில் இருந்தோ அல்லது அந்த மாநில மொழிகளை விருப்ப மொழிகளாக பேசும், விரும்பும், அல்லது எனக்கு இந்த மொழியில்தான் குடியுரிமை வேண்டும் என்று கேட்பவர்காளுக்கு அவர்கள் விரும்பும் விருப்ப மொழியில் குறைந்த அளவுக்கு குடி உரிமையாவது கொடுக்கக் கூடாது?<br />
<br />
இந்தியாவுக்கென்று அலுவல் மொழி என்பது ஹிந்தி அல்ல என்பது நிறுவப் பட்டுள்ளது என்பதை எல்லாம் வெளி நாட்டில் பாரத் பாஸ்போர்ட்டில் இருந்துகொண்டு ஜாங்கிரி ஜிலேபி இன்ன பிற கை முறுக்குகளை எங்களின் குடி உரிமை, கடவுச் சீட்டுகளில் தாங்கிப் போகும் எங்களை பேசிக் கிழித்த எங்களை தூக்கித் தோரணமாய் தொங்கவிட்ட அந்த அறியாத யாழ் நண்பர் வாழ்க!!</div>
Anonymoushttp://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-28593647.post-58625817042511564272014-08-15T01:38:00.000+05:302014-12-27T22:50:53.362+05:30ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமா?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
1947 ஆகஸ்டு 15 இந்தியா, பாகிஸ்தான் பிரிவிற்குப் பிறகான ஒரு தனி நாடாக கட்டமைக்கப் பட்ட பல்வேறு மொழிகள், கலாச்சாரங்கள், தேசிய இனங்கள், ஏழைகள், திருடர்கள், எளிய மக்கள் , ஏமாற்றும் கடவுள்கள், அவர்களை பயன் படுத்தும் மூடர்கள், அவர்களின் வயிற்றில் அமிலத்தை வார்த்த இடதுசாரிகள், திராவிட சித்தாந்த பேரலைகளை உண்டாக்கிய பெரியார்கள், இந்துக்களின் முகத்திரையை முடிந்த அளவுக்கு கிழிக்க முற்பட்ட பேராசான் அம்பேத்கர்.... இதற்கெல்லாம் மேல் இவரால் தான் இதனால்தான் என்று இன்று மோடியை கட்டமைத்த மீடியா பிம்பங்களின் ஒரே உருவமான திருவாளர் மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி.<br />
<br />
இத்தனை சிக்கல்களுக்கும் மத்தியில்தான் இந்தியா இங்கிலாந்து என்ற ஒரு பேரரசில் இருந்து விடுபட்ட ஒரு சுதந்திர நாடாக பிரகடனம் செய்யப்பட்டது, குண்டூசி முதல் குண்டி கழுவும் காகிதம் வரை பாகப் பிரிவிணைகள். சேர்களும் நாற்காலிகளையும் விட மனிதர்கள் அத்தனை மதிப்பு பெற்று பாகம் பிரிக்கப் படவேண்டிய பொருளாய் இல்லாத காலம்.<br />
<br />
ஜவஹர்லால் நேருவும், இரும்பு மனிதர் படேலும் இந்தியாவை ஒரு குடையின் கீழ் கொண்டு வர முயன்று தங்களை பிரபல்யம் செய்துகொண்டிருந்தபோது ஒரு கோவணாண்டி மனிதர் கல்கத்தாவில் வழக்கம் போல முதல் தர உண்ணாவிரத நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருந்தார். அவரி நாடகத்தை வழக்கம் போல பேராசான் பெரியார் கிழித்து தொங்கவிட்டுக் கொண்டிருந்தார். பேரறிஞர் அண்ணா சில கோப தாபங்களால், கருத்து வேறுபாடுகளால் கருப்புக் கொடி தேவையில்லை எனக்கென்று கலகம் செய்து கொண்டிருந்தார், தமிழகம் ஒரு திரிசங்கு நரகத்தில் ராஜாஜியின் இந்தியாவின் முதல் கவர்னர் ஆட்சியின் கீழ் தொங்கிக் கொண்டிருந்தது.<br />
<br />
போனவை போனதாகட்டும் நிகழ்காலத்திற்கு வருவோம், இப்படித்தான் சில ஆண்டுகளுக்கு முன் அப்துல் கலாம் என்ற ஒரு புனித பிம்பம், இன்றைக்கு ஆளும் இதே பாஜகவால், உண்டாக்கப் பட்டு கட்டமைக்கப் பட்டும் அதன் பின் கீதையும் ராமாயணமும், குரானிலும் பைபிளும் சொல்லாத புதிய அத்தியாயமான 2020 என்ற முழு ஹிந்திய தேசத்திற்கு வித்திட முயற்சித்த அண்ணார் அப்துல் கலாம் . ஒரு இந்துவாக இருக்க நீ பிறப்பால் இந்துவாக இருந்தால் போதும் , இந்தியனாக இருக்க பிறப்பால் முசல்மானாகவும், வாழகையால் இரண்டு பங்கு இந்துவாகவும் இருக்க வேண்டும் என்று காஞ்சி காமகோடி பீடத்தில் மண்டியிட்டு , நிரூபித்த மகான்.<br />
<br />
இந்த கருமங்கள் எல்லாம் போய் சேர்ந்துவிட்டது என்று நானும் நீங்களும் கனவுகொண்டிருந்த வேளையில் , அன்னா ஹசாரே என்றொரு புனித பிம்பம் தன்னைத்தானே சுயம்புவாக உருக்கொண்டு, ஒரு புதிய அலையை உருவாக்கி, தன்னை ஒரு நவீன உலக பெருமகன், தன் சீடர்கள் எல்லாம் எந்த கட்டுப் பாடுகளுக்குள்ளும் அடங்காத பிறவிகள் என்ற புதிய சட்டம் படைக்க முயன்று முற்றும் தோல்வி அடந்த அரவிந்த் கேஜ்ரிவால்களும், டெல்லியில் மண்ணைக் கவ்வியபோது பாபா ராம் தேவ்கள் ராக்க்கி சாவந்துகளுக்கு கங்கனம் கட்டவா இல்லை ராக்கி கட்டவா என்று சிந்தனை செய்துகொண்டிருந்தார்கள்.<br />
<br />
இந்த கால கட்டங்களில் தான் ஈழப் போரும் அதற்கு ஆதரவாளர்களாக ஊடக பிம்பங்களால் கட்டமைக்கப் பட்ட லொட்டு லொசுக்கு இவர்களுக்கு ஆதரவாக உயிகளை இழந்த முத்துக் குமார்கள். இவர்களின் ஒரே எதிரியான தென் இந்திய திராவிட சித்தாந்தங்களின் ஒரே கடை ஆளான கருணாநிதியை நோக்கி திரும்பின. வெற்றி பெற்ற பக்கம் இருப்பதாக தங்களை கருதிக் கொண்டன.<br />
<br />
அதுவும் போகட்டும் என்றுதான், தமிழகத்தில் திராவிடத்தை வீழ்த்தவென்றே ஊடக ரவுடிகளால் உண்டாக்கப் பட்ட சீமான்களும் சீமாட்டிகளும் பெரும் வெளிச்ச வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தார்கள், அப்போது அலைகளில் ஒதுங்கிய வைகோக்கள், பழ மாறன்கள் , சீமான்கள் , மணியன்கள், எல்லாவற்றுக்கும் மேல் கோட நாடு சீமாட்டி. <br />
<br />
சீமாட்டிகளுக்கு சேவகம் செய்ய வந்த பிரவீன் குமார்கள், தேர்தல் ஆணையர்கள் வேடத்தில் வந்த தே...............................ர்தல் ஆணையர்கள்... ஆனாலும் என் பேராசான் பெரியார் சொன்னது போல, ஒரு அடிமையிடம் இருந்து ஒன்னொரு அடிமையிடம் தானே நாம் சுதந்திரத்தை அடகு வைத்திருக்கிறோம்?<br />
<br />
ஆனால் இத்தனை இழிவுகளுக்கும் பின்னால் எனக்கு இந்தியா என்ற ஒரு உடோப்பியா தேசத்தை கொண்டாட ஆயிரம் காரணங்கள் உண்டு, நான் வைக்கும் விமர்சனங்கள் என்பவை என் சக மனிதம் கொண்டாடும், மிக முட்டாள்தனமான கடவுள் மேல், அந்த கடவுளின் மூன்றாம் தர தரகர் மேல் இந்த தரகர்கள் மேல் அளவு மீறிய பற்று வைக்கும் முட்டாள் மாக்களும் வைக்கும் அன்புமேல் எனக்கும் ஒரு கோபம் இருக்கும். இதை எதைக் கொண்டு தீர்க்க?. மோடிகளும் காவிகளும் அரசாளும் நாடாக இருந்தாலும், எங்காவது ஒரு மூலையில் ஜனநாயகம் என்ற பேரால் சக மனிதர்கள் மேல் கொஞ்சமாவது துளிர்த்து நிற்கும் அன்பு.<br />
<br />
இன்றும் நாளையும் , இதைப் போலவே எழுதும் ஆயிரத்து சொச்சம் எழுத்தர்களும் இதுபற்றி எழுத ஆயிரம் காரணங்கள் உண்டு முற்றுப்பெறாத இந்த வியாக்கியானங்களை, விமர்சனங்களை என்னால் புறக்கணிக்க முடியாமல் இந்த அகண்ட தேசம் எனக்கும் ஒரு இடம் கொடுத்தது வெறும் இயல்பல்ல. நாளையே நான் முன் எப்போதோதோ இப்போதைய தமிழக முதல்வருக்கு எதிராக எழுதிய நிலைத் தகவல்களுக்காக கைது செய்யப் படலாம், இதே தமிழக முதல்வர் என் விடுதலைக்காக போராடவும் செய்யலாம், பிரபாகரனை கைது செய்து தூக்கில் இடுவோம், போரென்றால் பொதுமக்கள் சாகத்தான் செய்வார்கள், என்ற பித்தலாட்டம் போல, இதுவும் கடந்து போகும். இதே முதல்வர், தனித் தமிழ் ஈழம் ஒன்றே தமிழர்களின் நிரந்தர விடிவுகாலம் இதை அடைவதே எமது குறிக்கோள் என்று போர் முழக்கம் செய்வதையும், அதை, நம் 56" மார்பகம் கொண்ட மோடிகளின், மார்புகளில் பார்ப்பதுவும், விதியா இல்லை இந்த பாமர மக்களின் மதியில் கொண்டு வந்து சுதந்திரம் என்ற பெயரால் விவாதிக்கும் சதியா என்று தேடி தேடி பேசித் தீர்ப்போம் வா,<br />
<br />
அந்த நாள் வரை... ஹேப்பி இன்டிபெண்டன்ஸ் டேய்ய்ய்ய்ய்ய்ய் !!<br />
<br /></div>
Anonymoushttp://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-28593647.post-55951188779596902014-08-12T21:15:00.001+05:302014-12-27T22:50:53.354+05:30அம்மான்னா சும்மா இல்லடா!!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
எங்கள் இதயமே,<br />
குருதியில் ஓடும் ரத்தமே,<br />
நடுவில் இருக்கும் சென்டரே,<br />
ஓரத்தில் இருக்கும் சைடே, <br />
நதியில் ஓடும் ஆறே,<br />
கடலில் இருக்கும் ஆழியே,<br />
காற்றில் மிதக்கும் வாயுவே,<br />
மூச்சில் இருக்கும் சுவாசமே,<br />
கண்ணில் தெரியும் பார்வையே<br />
இப்படி எல்லாவற்றிலும்<br />
இரண்டிரண்டாக இருக்கும்<br />
இரட்டை இலையின்<br />
இயற்கை காட்சியே.<br />
குதிரைக்கு ரெக்கை முளைக்க<br />
வைத்த கோமகள் ஆட்சியே<br />
எங்கள் தங்கத் தலைவியே<br />
தன்னிகரற்ற முதல்வியே<br />
மாண்புமிகு இதய தெய்வமே<br />
எங்கள் நெஞ்சில் நிலைத்து நிற்கும்<br />
பயமே....17 ஆண்டுகளாய் வாய்தா<br />
வாங்கி சாதனை படைக்கப் போகும்<br />
எங்கள் பெண் கஜினியே.<br />
<br />
ஃப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பஆ ஆ ஆ மூச்சு விட்டுக்கொள்கிறேன். ஒரு முறை எழுதுவதற்கே நாக்கு தள்ளி விடுகிறது ஆனால் சலிக்காமல் மலைக்காமல் சட்டமன்றத்தில் எல்லா எதிர் கட்சிகளையும் கவனமாக கலாட்டா என்ற பெயரில் வெளியேற்றிவிட்டு ஆளுங்கட்சி நடத்தும் காமெடி தர்பார் மேலே நீங்கள் படித்த கவிதையை (?) விட மரண மொக்கையாக இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.<br />
<br />
110 விதி என்பதே இன்னொரு நாள் அவகாசம் இல்லாத அப்போதே அவையில் சொல்லிவிட வேண்டிய அறிவிப்புகளை எந்த வித எதிர்ப்பும் இல்லாமல் நிறைவேற்ற என்றே ஆட்சியாளார்களுக்கு ஒரு அவசரத் தேவைகளுக்காக உருவாக்கப் பட்டிருக்கிறது.<br />
<br />
அம்மையார் ஆட்சியில் 110 விதி என்பதை எப்படி எல்லாம் பயன் படுத்துகிறார்கள் என்பதற்கு நகைச்சுவையாக ஒரு உதாரணம் சொல்ல ஆசைதான் ஆனால் அம்மையாரின் 100க்கும் மேற்பட்ட 110 அறிவிப்புகள் எல்லாம் நகைச்சுவைதானே? ஒரு அறிவிப்பு, இன்று முதலமைச்சர் ஆணைப்படி <br />
<br />
<span style="background-color: white; color: grey; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 12px; line-height: 15.359999656677246px;">//Statement No.036 of the Chief Minister as per Tamil Nadu Legislative Assembly Rule 110 on new schemes for the development of Courts - 11.8.2014:</span><br />
<span style="background-color: white; color: grey; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 12px; line-height: 15.359999656677246px;"><br /></span>
<span style="background-color: white; color: grey; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 12px; line-height: 15.359999656677246px;">"ஜனநாயகத்தின் தூண்களுள் முக்கியத் தூணாக விளங்கிக் கொண்டிருக்கின்ற நீதித் துறை நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில், நீதிமன்றங்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளையும், நீதிபதிகளுக்கு தேவையான குடியிருப்பு வசதிகளையும் எனது தலைமையிலான அரசு ஏற்படுத்தித் தருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் புதிய நீதிமன்றக் கட்டடங்கள் மற்றும் நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் கட்டுவதற்காக, 225 கோடியே 19 லட்சம் ரூபாய் நிதியினை எனது தலைமையிலான அரசு ஒதுக்கியுள்ளது.//</span><br />
<span style="background-color: white; color: grey; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 12px; line-height: 15.359999656677246px;"><br /></span>
<br />
மனசாட்சி இருப்பவர்கள் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். ஒரு மாநில முதல்வர் பதினேழு ஆண்டுகளுக்கும் மேலாக தன் மேல் நடக்கும் வழக்குகளை எப்படியெல்லாம் இழுத்து வளைத்து ஒடித்து வாய்தா மேல் வாய்தாக்களை வாங்கி இன்று வரை சட்டத்தை தன் கைப்பாவையாக்கி வைத்திருக்கிறார்.? அவர் ஆணைப்படி ஒதுக்கப் பட்ட தொகை குறித்தோ நீதி பாதிகளுக்கு ( எழுத்துப் பிழை இல்லை) வழங்கப் படும் சலுகைகள் குறித்தோ எனக்கு எந்த ஆதங்கமும் இல்லை.<br />
<br />
ஆனால் சட்டத்தை தன் போக்கில் வளைத்து ஒரு மாமாங்கமாக நீதியில் இருந்து தப்பித்துக் கொண்டே இருக்கும் ஒரு முதல்வர் இருக்கும் மாநிலத்தில் ஏழைகள் நீதி என்பது எட்டாக் கனியாக அல்லவா இருக்கிறது?<br />
<br />
மனல் கொள்ளையை தடுக்கப் போகும் காவலர், கொல்லப் படுகிறார். அரசு அறிவிப்பு இப்படி வருகிறது கடமையை செய்ய டிராக்டர் வண்டியில் ஏறிய காவலர் தவறி விழுந்து வண்டி ஏறியதில் அதே இடத்தில் மரணமடைந்தார். காவலரின் குடும்பத்துக்கு சில லட்சங்கள் உதவி.<br />
<br />
சில காவலர்களால் சில பெண்கள் பாலியல் வன்முறையால் பாதிக்கப் படுகிறார்கள், அரசு அறிவிக்கிறது, சில லட்சங்கள் உதவி, இங்கே உயிருக்கும் மானத்துக்கும் நீதிக்கும் நீதிபாதிகளுக்குமே சில லட்சங்கள்தானே மதிப்பு?<br />
இல்லையென்றால் ஒரு வங்கிக் கொள்ளையில் தொடர்புடையவர்களை கண்டறிந்து கைது செய்வதற்குப் பதிலாக இரவோடு இரவாக போட்டுத் தள்ளி புகழ் பெற்ற அமையார் காவல் துறையை கைய்யில் வைத்திருப்பது வெறும் வேடிக்கை விளையாட்டுக்காகவா என்ன? இந்த அழகில் எல்லா கொள்ளையர்களும் ஆந்திர மாநிலத்துக்கு தப்பி ஓடிவிட்டார்கள் என்று அறிக்கை விட்டிருப்பாரா? கொள்ளையர்களை கோட்டை விட்டதைத்தான் எத்தனை நாசூக்காக சொல்கிறார் பாருங்கள்.<br />
<br />
ஆனால் ஆட்சியில் அமர்ந்தது முதல் ஆயிரத்தை நெருங்கும் கொலைகள், சில ஆயிரங்களை நெருங்கும் பாலியல் வன்முறைகள் பல்லாயிரங்களை தொட்ட பகல் கொள்ளைகள், என்று சட்டமும் ஒழுங்கும் சந்தியல்லவா சிரிக்கிறது?, யாரைப் பார்த்து வாக்களித்து சொந்த செலவில் வாய்க்கு அரிசியும் போட்டுக் கொண்ட அப்பாவி வாக்காளர்களான நம்மைப் பார்த்து.<br />
<br />
1200த்தி சொச்சம் பள்ளிக் கூடங்களை மாணவர் எண்ணிக்கை குறைவால் அம்மையார் மூடப் போவதாக ஒரு செய்தி வந்தது. நமக்கு அதெல்லாம் எதற்க்கு அம்மா திரையரங்குகள் திறந்தால் அதில் எஜிஆர் படம் பார்த்தால் போதுமல்லவா? மக்கள் பயனுற அம்மா மருந்தகங்கள். ஆரம்பித்த நாளில் கேள்விப் பட்டதோடு சரி இப்போதும் அதில் மருந்துகள் கிடைத்தால் ஒரு நல்ல தலைவலி மாத்திரை வாங்கி போட்டுக் கொண்டு உறங்கி விடுங்கள்.<br />
<br />
அரசன் எவ்வழி மக்களும் அவ்வழி என்று முட்டாள் தனமாக எவனோ சொல்லி வைத்தான் டாஸ்மாக்கை தெருவுக்குத் தெரு திறந்து வைக்கும் அரசாங்கம் ஆண்டுக்கு 20000 கோடிகளுக்கும் மேல் லாபமாக ஈட்டுகிரதாம் கேட்டால் நலத்திட்ட உதவிகளை இதன் மூலம் தான் நிறைவேற்றுகிறதாம். இதைவிட ஒரு நல்ல தொழில் இருக்கிறது , ஆணுறைகளை மட்டும் இலவசமாகக் கொடுத்து ஆட்களை வெளிநாட்டில் இருந்து தருவித்து விட்டால் போதும் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும்.<br />
<br />
அதில் கிடைக்கும் லாபத்தில் அம்மா எயிட்ஸ் நோய் கட்டுப்பாட்டுக் கழகம் என்று ஒன்றை 110 விதியின் கீழ் ஆரம்பித்து விட்டால் போகிறது.<br />
<br />
எத்தனையோ திட்டங்கள் அறிவிப்போடு கிடக்கின்றன பள்ளித் திட்டம் எதுவும் இல்லை , சட்டம் ஒழுங்கு சரியில்லை, ரேஷன் அரிசிகள் அளவை குறைக்கிறார்கள், பஸ் கட்டணம் பால் விலை உயர்கிறது. பள்ளிக் கூடங்கள் மூடப் படுகின்றன லாப் டாப் கிடைக்கிறது மின் வெட்டு உயர்கிறது பேனும் மிக்ஸியும் பரண் ,மேல் பூணைக் குட்டிகளோடு உறங்கிக் கொண்டிருக்கிறது.<br />
<br />
டாஸ்மாக் தமிழன் ஒரு க்வாட்டரும் அம்மா இட்லி கடையும் இருந்தால் போதுமென்று முழு போதையில் வெயிலுக்கு இதமாக மரத்தடியில் மல்லாந்து கிடக்கிறான்.<br />
<br />
<br />
<br />
<br />
<br />
பின் குறிப்பு : இனையக் குற்றங்களை குண்டர்கள் சட்டத்தின் கீழ் கொண்டுவருகிறார்களாம். இப்போது தெரிகிறதா? ஆரம்பத்திலேயே ஏன் அபிராமி அந்தாதி பாடினேன் என்று?<br />
<br /></div>
Anonymoushttp://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-28593647.post-39019567011548355082014-08-05T21:26:00.002+05:302014-12-27T22:50:53.325+05:30ஆப் கி பார்..... அரசாங்கமா இல்லை ஆர்.எஸ்.எஸ் சாங்கமா?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
மோடியின் அரசாங்கம் பதவியேற்ற இத்தனை நாட்களில் குறைந்த பட்சம் மக்கள் நலத் திட்டங்கள் என்று விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் கூட ஒரு திட்டத்தை வகுக்கும் அளவுக்கு வக்கில்லாமல் மோடி தர்பாரில் காற்றாடிக் கிடக்கிறது.<br />
<br />
சூப்பர் மேன் , ஸ்பைடர் மேன் அளவுக்கு மோடியை, ஆஞ்சநேயர் அளவுக்கு ஊதிப் பெரிதாக்கிய ஊடகங்களும் பாஜக தலைவர்களும் வாயைத் திறந்தாலே முத்துக்களை உதிர்க்கும் மோடிகளும் கூட மூடிக்கொண்டு கிடப்பது காலத்தின் கோலம் மட்டுமல்ல அவர்கள் மட்டும் என்ன வைத்துக் கொண்டா வஞ்சனை செய்கிறார்கள்?<br />
<br />
தேர்தலுக்கு முதல் நாள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டபோதே தெரிந்து விட்டது மோடியின் அரசாங்கம் எப்படி இருக்கப் போகிறது என்பது. இத்தனை நாட்களில் மோடியின் குஜராத் மாடல் ஃபேக் அரசாங்கம் கிழித்ததெல்லாம் காங்கிரசின் கொள்கைகளை இவர்கள் காப்பி அடித்தது மட்டுமல்லாமல் அதை கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல், ஈழ விவகாரம் முதல் கட்சத் தீவு வரை, சுவிஸ் வங்கியின் கருப்புப் பணம் முதல் ரயில்வே கட்டணம் வரை, பெட்ரோல் முதல் மரபணு மாற்றப் பயிர் வரை என்று ஏகபோகமாய் விளையாடிக் கொண்டே ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது.<br />
<br />
அன்னிய முதலீட்டில் அவர்கள் படிப்படியாக உள்ளே விட்டார்கள் என்றால் பாஜக ஒட்டு மொத்தமாக கதவைத் திறந்து விட்டிருக்கிறது. ராணுவம் முதல் இன்ஸூரன்ஸ் வரை, ரயில்வே தொடங்கி, கக்கூஸ் கழுவுவது வரை, ரீடெய்ல் மார்கெட்டிங்கில் 100 சதவீதத்துக்கு பொங்கிய பாஜக இப்போது அதைத்தானே செய்து கொண்டிருக்கிறது?<br />
<br />
இவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்புவரை அமீரக திர்ஹம் 1= ரூ14+ ல் இருந்தது இப்போது அது 16+க்கு எகிறி இருக்கிறது என்ன ஒரு முன்னேற்றம்?<br />
<br />
கம்யூனிஸ்டுகள் பேசுவதற்கும் வழியில்லை காங்கிரஸ் பேசவே பேசாது.<br />
<br />
அரசாங்கம் நஷ்டப் பட்டால் மக்களைத்தானே பாதிக்கும் என்ற பாஜக சொல்வதில் ஒரு கார்ப்பொரேட் தனம் இருக்கிறது. கார்பொரேட் முதலாளிகளின் அரசாங்கமாகத்தானே இது வரை மோடியின் அரசு இருக்கிறது?, அதானிகளும் அம்பானிகளும் ஆட்சியில் இருந்தால் என்ன நடக்கும் என்பதை மோடி காட்டிக் கொண்டிருப்பது மட்டும் தான் உண்மை.. இது கார்பொரேட்களின் அரசாங்கம் என்பதை வாரா வாரம் உயர்த்தப் படும் பெட்ரோல் டீசல் விலையேற்றம் காட்ட வில்லையா?<br />
<br />
வெளியுறவுக் கொள்கைகளில் அகன்ற 56 " மார்பு கொண்டவரின் கொள்கைகளைத்தான் பார்த்தோமே. இலங்கை விவகாரத்தில் மோடி வந்தால் எல்லாம் சுபிட்சம் ஆகும் என்ற தேர்தல் பிரச்சாரத்தில் மக்களை முட்டாளாக்கி பாஜகவின் வாக்கு வங்கி கூடிப் போனதாக பேசிய தரகர் தமிழருவி மணியன் 45 ஆண்டுகால (?) அரசியல் வாழ்வில் பாஜகவின் அடிப்படைக் கொள்கைகள் கூட தெரியாத அளவுக்கு மதி மயங்கிப் போனது உச்ச கட்ட காமெடி.<br />
<br />
மக்களாட்சி என்பது அதிகாரம் ஒருவரிடம் குவிந்து போகாமல் பரவலாக்கப் பட வேண்டுமே தவிர இப்படி ஒட்டு மொத்தமாக எல்லா மட்டத்திலும் ஒரு கட்சியே ஆட்சியில் இருப்பதனால் ஏற்படப் போகும் விளைவுகளை இன்னும் 4 ஆண்டுகளுக்குள் மக்கள் புரிந்துகொள்வார்கள் என்று திடமாக நம்புகிறேன்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXCdanFV2op4tpdI0h-7oqW6I4AdmZbyrTyMEPfgIfLo2SMMS51inUmcJh_3DPKT81cgMIQopE8FHwG2CF33odhwslPzgzOllrD5I9J3yqd52kIwhcoczdT9NCmTvie2I7m0ji/s1600/images+(1).jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXCdanFV2op4tpdI0h-7oqW6I4AdmZbyrTyMEPfgIfLo2SMMS51inUmcJh_3DPKT81cgMIQopE8FHwG2CF33odhwslPzgzOllrD5I9J3yqd52kIwhcoczdT9NCmTvie2I7m0ji/s1600/images+(1).jpg" /></a></div>
அதற்கான அறிகுறிகள் தான் ஹிந்தியை அலுவல் மொழியாக்க முயற்சி சமஸ்கிருத வாரம் என்று ஆர் எஸ் எஸ் ன் அகண்ட பாரதம் என்ற கொள்கையை சத்தமே இல்லாமல் நிறைவேற்ற தயார் ஆகிறது மோடியின் அரசு. அதை மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் படிப்படியாகச் செய்யும் படேலுக்கு சிலை வைக்க பல நூறு கோடிகளை ஒதுக்கும் அரசாங்கம் கழிவரை வசதிகளுக்கும் கல்விக்கும் ஒதுக்கும் தொகை என்பது மிகச் சொற்பம்.<br />
<br />
காங்கிரஸ், அதிமுக. இரண்டுமே மக்களுக்காக இனி நாடாளு மன்றங்களில் பேசப் போவது இல்லை. அதிமுகவுக்கு நாடாளு மன்றத்தில் நரேந்திர மோடியை காய்ச்சி எடுப்பதை விட அம்மா புராணம் பாடினாலே போதும். அதைத்தான் அவர்கள் செய்யப் போகிறார்கள்<br />
<br />
காங்கிரசுக்கு உள்ளுக்குள் மகிழ்வாகக் கூட இருக்கும்! அது பாஜக செய்யப் போகும் தவறுகளை சுட்டிக் காட்டாமல் காத்திருந்து அடுத்த தேர்தலின் போது கூடாரம் கலகலக்கும் நேரத்தில் உள்ளே புகுந்து கொள்ளலாம் என்று காத்திருக்கிறது அதற்குள் இருக்கிற குட்டி குட்டி மாநில கட்சிகளை மறுபடியும் ஓரணியில் திரட்ட வேண்டிய அவசியமும் தேவையும் அதற்கு இருப்பதால் மக்கள் பிரச்சினைகளை பேசும் அளவுக்கு அவர்களுக்கு நேரம் இல்லை.<br />
<br />
மக்கள் செய்ய முடிந்தது ஒன்றே ஒன்றுதான் ஓட்டுப் போடும் முன்பாவது ஒரு நிடம் சிந்தித்து பார்க்க வேண்டும் இல்லையென்றால் இப்போதும் இன்னும் வரப் போகும் 4 ஆண்டுகளிலும் அனுபவிக்கப் போவதை அனுபவிக்க தயாராய் இருக்க வேண்டும்.<br />
<br />
#ஆப் கி பார்.......ஆர்.எஸ்.எஸ் சர்கார்<br />
<div>
<br /></div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-28593647.post-38328372040787884802014-07-17T18:41:00.001+05:302014-12-27T22:50:53.313+05:30நாத்திகம், பகுத்தறிவு பேசாமல் சமூக நீதி சாத்தியமாகுமா?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.200000762939453px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
சில வாரங்களாகவே முகநூலெங்கும் தோழர்கள் குறிப்பாக திமுக உடன்பிறப்புகள் உட் கட்சி மோதலோ என்னவோ என்று நினைக்கும் அளவுக்கு நாத்திகம், பகுத்தறிவு,சமத்துவம், சமூக நீதி என்ற தளத்தில் தொடர்ச்சியாக ஒரு விவாதத்தில் ஈடுபட்டுக் கொள்ளுகின்றனர்.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.200000762939453px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
இதை எப்படி எடுத்துக் கொள்வது என்று எனக்கு இன்னும் தெரியவில்லை. அடிப்படை சமூக நீதிகள் மறுக்கப்பட்டு அதற்கெதிராக கிளர்ந்தெழுந்த தென்னிந்திய நல உரிமைச் சங்கமான நீதிக்கட்சியின் தொடர்ச்சியாக திராவிடர் கழகமும், கேட்கும் இடத்தில் இல்லாமல் சமூக நீதியை கொடுக்கும் இடத்தில் இருந்தால் தான் எதுவும் எளிதில் சாத்தியமாகும் என்ற அண்ணாவின் ஏற்பாட்டுக்கு இணங்க ஆரம்பிக்கப் பட்ட திமுக என்று இது ஒரு சமூக நீதிக்கான தொடர்ச்சி மட்டுமே.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.200000762939453px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
சமூக நீதி சமத்துவம் எல்லாம் ஏன் மறுக்கப் பட்டன ? அவற்றுக்கான தீர்வு என்ன என்று தேடித்தேடி தேய்ந்த சமூக சமத்துவ முன்னோர்களான டி.எம்.நாயர், பி.டி தியாகராயர், முனுசாமி நாயுடு, போன்றவர்களும் அவர்களின் தொடர்ச்சியான தந்தை பெரியாரும் வளர்த்தெடுத்த தத்துவார்த்தமான சிந்தனைகளே திராவிடச் சிந்தனைகளானது. பின்னர் திராவிடர் கழகமான பின் தேர்தல் அரசியலில் இருந்து தன்னை முற்றாக விடுவித்துக் கொண்ட தி.க சமத்துவம் சமூக நீதி ஆகியவற்றை வெல்ல வேண்டுமானால் முதலில் இவற்றுக்கு முட்டுக் கட்டையாக இருக்கும் சாதிய கட்டுப் பாடுகளையும் அதை மிகக் கவனமான ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்து மனு தர்ம ஆட்சியை நிலை நாட்டும் பார்ப்பனீயத்தையும் ஒழிப்பதே ஆகும் என்றனர். இதே கொள்கைகளை சமூக நீதியை கொள்கை அளவில் காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அதை ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோதே அடிமக்களுக்கும் படிப்பறிவு என்ற ஒற்றைக் காரணத்தாலே மட்டுமே பெரியாரால் காமராஜ் கொண்டாடப் பட்டார்.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.200000762939453px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
கருத்து வேறுபாடுகளால் பிரிந்தாலும் , சமத்துவம் சமூகநீதிக் கொள்கை அளவில் ஒன்றாகவே இருந்த திமுக ஆட்சிக்கு வந்ததும் அண்ணா திராவிடக் கொள்கைகளையே ஆட்சி அதிகாரங்களில் செயல் படுத்தினார். அதன் நீட்சியாக வந்த கருணாநிதியும் பெரியார் அண்ணா வழியில் நின்றே அதனை செயல்படுத்த முனைந்தார்.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.200000762939453px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
"சாதி மதப் பித்து என்னும் சனி தொலைந்தால்தான் சமத்துவம் எனும் ஞாயிறு பிறக்கும் " என்ற கலைஞரின் தொண்டர்களான நாம் இன்றும் அதனை கடைபிடிக்கிறோமா?</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.200000762939453px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
எனக்கென்னவோ இல்லை என்றே தோன்றுகிறது. </div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.200000762939453px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
சமூக நீதி கிடைக்காமல் போனதன் அடிப்படையே சாதியும் மதமும்தான் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடுகள் இருக்க முடியாது அந்த சாதியும் மதமும் இன்றும் கட்டிக் காக்கப் படுவது கடவுளின் பெயரால் சமத்துவமாக இல்லாத சாமிகளால் என்ன சமூக நீதியை படைத்துவிட முடியும் ?, இந்த சாமிகளின் பெயரால் சாதிகளையும் அதன் வழிபாட்டு நெறிகளையும் ஒரு கட்டுக்குள் வைத்திருக்கும் பார்ப்பனீயம் என்று இது ஒரு விஷ வலைப் பின்னல். </div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhxZlRW56Obbv58hdTWL8vfQWruqC4SpMnJSeeFSYIWtuzW-8HJDb5RCjs1UYSOjGzGrm41LFW26YqD_MSuHt3o4NGMJbuv9_vWD7kC44xnqntxuIMQnCEL-1scGuju5uYL1Q8I/s1600/css1020.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhxZlRW56Obbv58hdTWL8vfQWruqC4SpMnJSeeFSYIWtuzW-8HJDb5RCjs1UYSOjGzGrm41LFW26YqD_MSuHt3o4NGMJbuv9_vWD7kC44xnqntxuIMQnCEL-1scGuju5uYL1Q8I/s1600/css1020.jpg" height="201" width="320" /></a></div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.200000762939453px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
சமூக நீதியை நிலை நாட்டவே திமுக, பகுத்தறிவு பேச்சால் மட்டுமே தன்னை வளர்த்துக் கொண்ட ஒரு இயக்கம் அதற்க்காக போராடியே ஆட்சியை அடைந்த கழகம்,<br />
<br />
//<span style="background-color: #fafafa; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.200000762939453px; text-align: justify;">என் உடல் நிலைமை மிக மோசமாகி விட்டது. நினைவு சரியாக இல்லை. மறதி அதிகம். கண், காது சரியாக இல்லை. கால்கள், நடக்கவே முடிவதில்லை. அசதி அதிகம். இப்படிப்பட்ட நிலையிலும் சற்று மகிழ்ச்சி, சிறிது உற்சாகம் கொள்ளுகிறேன் என்றால், இன்று நமக்கு வாய்த்திருக்கும் தி.மு.க. ஆட்சிப் பணிகளால்தான்.</span>காரணம் என்னவென்றால், இதன் முன்னர் இருந்த ஆட்சியின் யோக்கியதைகளை அவைகளால் நாட்டுக்கு சமுதாயத்திற்கு ஏற்பட்ட கேடுகளை ஒழித்துக் கட்டாததால் சமுதாய விஷயத்தில், ஜாதி அமைப்பு விஷயத்தில், கல்வி விஷயத்தில் எப்படி நடந்து கொண்டார்கள்; என்ன கொள்கை மேற்கொண்டார்கள் என்பவைகளைச் சிந்தித்தால் தெரிய வரும்.<br />
ஏதாவது பொல்லாத வாய்ப்பால் இப்போதைய இந்த தி.மு.க. ஆட்சிக்கு ஏதாவது மாறுதல் காலம் ஏற்பட்டால், வேறு எந்த ஆட்சிவரும், அதன் பலன் என்ன ஆகும் என்பவைகளை சிந்தித்தால் பெரும் பயம் ஏற்படுகிறது. // பெரியார் -1972 விடுதலை மலரில்.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.200000762939453px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
ஆக சமூக மாற்றங்களுக்காகவும் சமத்துவ நீதிக்காகவும் உண்டான ஒரு இயக்கத்தின் தொண்டர்கள் நாத்திகம் பேசுவதையும் சாதி மத வேறுபாடுகளை பேசுவதையும் ஊக்குவிக்கத்தான் வேண்டுமே ஒழிய இவற்றால் நாம் ஓட்டு வங்கியை இழக்கிறோம் என்பதோ இல்லை இதனால் ஆட்சியை இழக்கிறோம் என்பதோ அறிவானதல்ல.<br />
யாருக்கும் சுயமரியாதை கிடைக்க பாடுபடுவதே திமுகவின் அடிப்படைக் கொள்கை என்பதை உணரவேண்டுமே ஒழிய பகுத்தறிவு பேசாதே என்பது அல்ல. நாத்திகமும் பகுத்தறிவும் பேசாமல் எந்த நீதியும் சாதியின் கட்டுப்பாட்டால் மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கும் இந்த நாட்டில் சாத்தியம் இல்லை. </div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.200000762939453px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
நாத்திகம் பேசாதே என்பதை விட கடவுள் நம்பிக்கை உள்ள திமுக ஆத்திகவாதிகள் ஏன் கலைஞரின் அணைவருக்கும் அர்ச்சகர் ஆகும் உரிமைக்காகவும், கருவறை நுழைவுக்கான உரிமைகளை முன்னெடுத்துச் செல்வதற்க்காகவும், ஆத்திகவாதிகளால் மக்களை மூட நம்பிக்கைக்களுக்குள் தள்ளப் படும் கொடுமைகளைப் பற்றியும் பேசக் கூடாது? பகுத்தறிவை பேச நாத்திகவாதியாய் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் நாத்திகம் பேச கடும் பகுத்தறிவு வாதம் தேவைப் படுகிறது.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.200000762939453px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
தேர்தல் அரசியலை மீறி அதில் அடையும் வெற்றி தோல்விகளை தாண்டி திமுக என்னும் கட்சியை அதன் கொள்கைகள் மட்டுமே இந்திய அளவில் மாறுபடுத்துகின்றது. அது நாத்திகமா பகுத்தறிவா என்பதெல்லாம் அவர் அவர் சிக்கல். ஆனால் நாத்திகமும் பகுத்தறிவும் பேசாமல் , சமத்துவம் சமூக நீதிக்கான பெண்ணுரிமைக்கான எந்தக் கல்லையும்<span style="background-color: transparent; text-align: left;"> புரட்டிவிட முடியாது. அடிப்படைத் தத்துவங்கள் இல்லாமல் போனால் திமுக ஒரு அதிமுகவாக ஆகிவிடும் அபாயம் இருப்பதை உணர வேண்டும். அதை விட பாஜக கொள்கைகளே மேல்.</span></div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.200000762939453px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
அதற்க்காக சிலை உடைப்பு போராட்டம் நடத்த வேண்டாம், அந்த சிலைகளை வழிபடும், அர்ச்சிக்கும் உரிமைகளை பேசுவோம்.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.200000762939453px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
<br /></div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.200000762939453px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
<br /></div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.com0