<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-28593647</id><updated>2012-01-05T03:50:26.571+05:30</updated><category term='இவன் தான் போலி'/><category term='சிறுகதை'/><category term='தீராநதி'/><category term='அதிர்வு'/><category term='பெரியார்'/><category term='போலி டோண்டு'/><category term='இவனும் போலி தான்'/><category term='கடிதம்'/><category term='ரஜினி'/><category term='தமிழில்'/><category term='மொக்கை'/><category term='கவிதை'/><category term='புலி'/><category term='நகைச்சுவை'/><category term='பார்ப்பனீயம்'/><category term='போட்டோ'/><category term='ஜெயராமன்'/><category term='சாரு நிவேதிதா'/><category term='தமிழ்மணம்'/><category term='மலையாளம்'/><category term='உதை'/><category term='போலி'/><category term='வலையுலகம்'/><category term='தீவிரவாதம்'/><category term='அரசியல்'/><category term='மீள் பதிவு'/><title type='text'>கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ்</title><subtitle type='html'>"எனது கருத்துக்களை மறுப்பதற்கு உனக்கிருக்கும் உரிமைக்காக "</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://kilumathur.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28593647/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://kilumathur.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28593647/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>மகேந்திரன்.பெ</name><uri>http://www.blogger.com/profile/17863131935297558260</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://i64.photobucket.com/albums/h187/mahendhiranp/mahendhiran.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>206</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-28593647.post-5465018625273733304</id><published>2011-06-26T12:25:00.000+05:30</published><updated>2011-06-26T12:26:36.907+05:30</updated><title type='text'>அரசியல் மூலம் தொண்டாற்றும் ஸ்தாபனம் திராவிட முன்னேற்றக் கழகம்</title><content type='html'>திராவிட முன்னேற்றக் கழகம் என்பது சற்றேறக்குறைய இரண்டு மூன்று ஆயிரம் ஆண்டுகளாக ஆரியர்களால் தாழ்த்தப்பட்டு அடக்கப்பட்டு, தலைநிமிராமல் அழுத்தி வைக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கென்றே தோற்றுவிக்கப்பட்ட கழகமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;தி.மு.க. தோன்றுவதற்கான வரலாறு&lt;br /&gt;&lt;br /&gt;அது தோற்றுவிக்கப்பட்ட காலத்தில் திராவிடர் என்ற சொல் சூத்திரர் என்ற சொல்லுக்குப் பிரதிச் சொல்லாகக் கருதப்படும் சொல்லாக இருப்பதாய்க் கருதப்பட்டு வந்ததால், அப்பெயரைக் கழகத்திற்கு வைக்க ஆந்திரர்கள் ஆட்சேபித்ததால் அக்கழகத்திற்கு தென் இந்தியர் விடுதலைக் கழகம் என்பதாகப் பெயரிட்டுத் (South Indian Liberal Federation) துவக்கினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;என்றாலும், துவக்க காலத்தில் ஜமீன்தார்கள், செல்வவான்கள், படித்த கூட்டத்தினர் ஆகியவர்களே முன்னின்று முக்கியமானவர்களாக இருந்து துவக்கப்பட்டதால் இம்மூன்று குழுவினர்களின் நலனே அதற்கு முக்கியக் கொள்கையாக இருக்கவேண்டி வந்தது. ஆட்சியையும், பதவியையும் கைப்பற்றுவதிலேயே அதிகக் கவனம் செலுத்தப்பட வேண்டிய தாயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பத்திலேயே பார்ப்பனர்களின் தொல்லை&lt;br /&gt;&lt;br /&gt;இந்த முயற்சி பார்ப்பானுக்குப் பெருங்கேடாய் முடியக்கூடியதாயிருந்ததால் இம்முயற்சிக்குப் பார்ப்பனர்கள் கூண்டோடு எதிரிகளாய் இருந்து இந்த ஸ்தாபனம் வெற்றிகரமாய்த் தொண்டாற்ற முடியாமல் தொல்லைக்குள்ளாக் கப்பட்டு தக்கபலன் ஏற்படச் செய்யாமல் தடுக்கப்பட்டு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;என்றாலும், இந்த ஸ்தாபனம் ஏற்பட்டதன் பயனாய் பார்ப்பனர் வேறு நாம் வேறு என்பதையும், பார்ப்பனர் தென்னிந்தியர்களுக்கு, திராவிடர்களுக்கு அரசியல், சமுதாய நல்வாழ்வுத் துறைக்கு பரம்பரை எதிரிகளும், தடங்கல்களுமாவார்கள் என்பதையும் திராவிட மக்கள் ஒவ்வொருவருக்கும் விளங்கும்படிச் செய்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;திராவிடர்களின் நிலை&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் திராவிடர்கள் பாமரர்களாகவும், பகுத்தறிவற்றவர்களாகவும், 100க்கு 100 பேரும் இருந்து வந்ததால் தாங்கள் ஏன் இந்த நிலையில் இருக்கிறோம் என்பதை உணரமுடியாமல் இருக்கும்படி ஆரியர்களின் கடவுள், மதம் சாஸ்திரம் பாரத ராமாயணப் பற்று, முதலியவைகள் செய்துவிட்டபடியால் வெறும் பதவி உத்தியோகம், தனிப்பெருமை ஆகியவற்றி லேயே பற்றுக்கொண்டு சமுதாய வளர்ச்சியை முக்கியமாய்க் கருதாமல் போய்விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணாவின் தலைமை&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு அந்த ஸ்தாபனம் அரசியலில் பெருந்தோல்வியுற்றதன் பயனாய் சமுதாயத் தொண்டுக்கு என்றே துவக்கி நல்ல நிலையில் நடந்துவந்த சுயமரியாதை இயக்கத்துடன் அந்த ஸ்தாபனம் இணையும்படியான நிலைக்கு வந்ததன் பயனாய் தென்னிந்தியர் விடுதலை ஸ்தாபனம் என்கின்ற பெயர் மாற்றமடைந்து திராவிடர் கழகம் என்கின்ற பெயருடன் நடந்து வந்தது. இதில் பிளவு ஏற்பட்டதன் காரணமாய் திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் பெயரால் மேற்சொன்ன தென்இந்தியர் விடுதலை ஸ்தாபனம் (ஜஸ்டிஸ் கட்சி) அண்ணாவின் தலைமையில் சுமார் 18 ஆண்டு பொறுத்து தமிழ்நாட்டு ஆட்சியைக் கைப்பற்றி சமுதாயத்தின் முன்னேற்றத் தொண்டையே முக்கியமாய்க் கொண்டு இன்று தமிழர்களுக்கு ஆரியர் - பார்ப்பனர் அல்லாத தமிழர் சமுதாயத்திற்குத் தொண்டாற்றி வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தி.மு.கழகத்தின் அரும்பெரும் சிறப்பு&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாகச் சொல்ல வேண்டுமானால் இந்தியாவிலேயே பார்ப்பனர் தவிர்த்த மற்ற திராவிடர் சமுதாயத்திற்கு, சிறப்பாக சமூகத் துறையில் அரசியல் மூலம் தொண்டாற்றும் ஸ்தாபனம் திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றே ஒன்றுதான் என்று சொல்லும்படியான நிலையில் இருந்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் தொண்டைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால், முதலில் ஆட்சியைக் கைப்பற்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது, அரசியல் பதவிகளில் எல்லாவற்றிலும் தமிழர்கள் (விகிதாசாரம் பெறாவிட்டாலும்) அமரும் நிலை ஏற்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாவதாக, கல்வித்துறையில் கல்வி பெற்ற மக்கள் எண்ணிக்கை உயர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நாலாவது, இன்றைய ஆட்சி தனித்தமிழர் - திராவிடர் ஆட்சி என்று சொல்லும்படி இருப்பது.&lt;br /&gt;&lt;br /&gt;அய்ந்தாவது பார்ப்பனன் என்றால் நமக்கு, தமிழனுக்கு சமமான பிறவியே அல்லாமல் எந்த விதத்திலும் உயர்ந்த பிறவி அல்ல என்பதை தமிழனின் கீழ் மட்டத்தில் இருப்பவர்களுக்கும் விளங்கி இருப்பது முதலியவைகளாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;அடிப்படைக் கொள்கையில் வெற்றி&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே, திராவிட முன்னேற்றக் கழகமும், திராவிடர் கழகத்தைப் போலவே சமுதாயத்துறையில், அதன் அடிப்படைக் கொள்கையில் வெற்றிப்பாதையில் மாபெரும் வெற்றிப் பாதையில் செல்லுகிறது என்று சொல்லத்தக்க வண்ணம் இருந்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே, திராவிடர் கழகமோ, திராவிடர் முன்னேற்றக் கழகமோ தனது இலட்சியத்தை - கொள்கையைச் சிறிதும் குற்றம் குறையின்றி வெற்றி வழியில் பின்பற்றித் தொண்டாற்றி வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதை உலகிற்கு ஒரு புதுமை என்றுதான் சொல்லவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகில், குறிப்பாக இந்தியாவில் - சமுதாயத் துறையில் இதுபோல் தொண்டாற்றிய - தொண்டாற்றும் வெற்றி ஸ்தாபனம் இதைத் தவிர வேறு எதுவும் இல்லை என்றே சொல்லவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பாக இந்த ஸ்தாபனத்தின் தொண்டால் தமிழர்கள் பார்ப்பனர்களை அடையாளம் கண்டுகொண்டார்கள் என்றும் சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;------------------------ தந்தை பெரியார் - "விடுதலை" - 11.03.1971&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28593647-5465018625273733304?l=kilumathur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kilumathur.blogspot.com/feeds/5465018625273733304/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28593647&amp;postID=5465018625273733304' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28593647/posts/default/5465018625273733304'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28593647/posts/default/5465018625273733304'/><link rel='alternate' type='text/html' href='http://kilumathur.blogspot.com/2011/06/blog-post_26.html' title='அரசியல் மூலம் தொண்டாற்றும் ஸ்தாபனம் திராவிட முன்னேற்றக் கழகம்'/><author><name>மகேந்திரன்.பெ</name><uri>http://www.blogger.com/profile/17863131935297558260</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://i64.photobucket.com/albums/h187/mahendhiranp/mahendhiran.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28593647.post-8501451898255395096</id><published>2011-06-18T17:14:00.000+05:30</published><updated>2011-06-18T17:18:42.968+05:30</updated><title type='text'>அதில்தான் இந்திய ஆளும் வகுப்பின் சூழ்ச்சி</title><content type='html'>இந்தியா முழுவதிலும் 2011இல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடைபெற்றது. அதன்முடிவின் முதல் கட்டமாக மொத்த மக்கள் தொகை 120 கோடிக்கும் அதிகம் என அரசினால் அறிவிக்கப்பட்டது. அந்தக் கணக்கெடுப்பின்போதே உள்சாதிவாரிக் கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என்று ஒடுக்கப்பட்ட வகுப்புகளின் சங்கங்களும், அரசியல் கட்சிகளும், மேல்சாதியினரும் கோரினர். அதை ஏற்கெனவே செய்திருந்தால், மீண்டும் ஆயிரக்கணக்கான கோடி உருபாவைச் செலவு செய்து, இரட்டிப்பு வேலையை மேற்கொள்ள வேண்டிய பணிச்சுமை ஏற்பட்டிருக்காது. ஆட்சியிலிருப்பவர்களில் மேல்சாதியினர் - பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர், மதச் சிறுபான்மையினரின் உயர்கல்வி முன்னேற்ற அளவு, அரசுப் பணிகளில் பெற்ற பங்கின் அளவு இவற்றைத் தெளிவாக அறிந்திடவும். அவர்களுக்குச் சரியான பங்கு கிடைக்கவில்லை என்று அறிந்தால் - அதை அடைய அவர்கள் போராடுவார்கள் என்பதையும் கருதியே - முதல் கணக்கெடுப்பில் சாதிவாரிக் கணக்கை எடுக்க முடியாது என்று மறுத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது, 19.05.2011இல் கூடிய இந்திய அமைச்சரவை - சாதி, மதம், ஏழ்மை யை அளக்கும் அளவுகோல் இவற்றைப் பற்றிய விவரங்களை அறிவதற்கு, 2011 சூன் முதல் திசம்பர் முடிவுக்குள் சாதிவாரிக் கணக்கெடுப்புச் செய்ய முடிவெடுத்து அறிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அதன்படி கணக்குப் பதிவு செய்கிற பொறுப்பை மாநில அரசுகள் ஏற்றுச் செய்ய வேண்டும் என்றும்; அவர்கள் ஊராட்சிப் பணியில் உள்ளவர்கள், கணக்குப் (கர்ணம்) பிள்ளைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைக்கு அமர்த்தப்படுவோர் ஆகி யோரைக் கொண்டு வீடுதோறும் கணக்கு எடுக்க வேண்டும் என்றும் திட்டமிட்டிருக் கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கணக்கெடுப்பில் எதை எதைப் பற்றி அறிய முயற்சிப்பார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;1.     மண்சுவர்களை வைத்து வைக்கோல் கூரைபோட்ட வீடுகளில் குடியிருப்போர்;&lt;br /&gt;&lt;br /&gt;2.     16 வயதுக்கு மேல் 59 வயது வரை உள்ள சம்பாதிக்கும் வயதினர் இல்லாத குடும்பங்கள்;&lt;br /&gt;&lt;br /&gt;3.     வயதுவந்த ஆண் இல்லாத - பெண்கள் தலைமையில் இயங்கும் குடும்பங்கள்;&lt;br /&gt;&lt;br /&gt;4.     ஊனமுற்றவரைக் கொண்ட குடும்பங்கள்;&lt;br /&gt;&lt;br /&gt;5.     வயதுவந்த - சம்பாதிக்கத் தகுந்த உடல்நலத்தோடு உள்ள குடும்பங்கள்;&lt;br /&gt;&lt;br /&gt;6.     25 வயதுக்கு மேற்பட்ட - படிப்பறிவு அற்றவர்களைக் கொண்ட பட்டியல் மற்றும் பழங்குடியினர் குடும்பங்கள்; மற்றும்&lt;br /&gt;&lt;br /&gt;7.     சொந்த நிலம் இல்லாத - அற்றைக் கூலிக்கு உடலுழைப்பு வேலை செய்வோர் குடும்பங்கள் என்பவைதான் இப்போது ஏழ்மையை அளப்பதற்கான அளவுகோல் களாக அறிவிக்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இதன்மூலம் ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள எழுத்தறிவு இல்லாதவர், உயர் கல்வி பெற்றவர்-பெறாதவர், அரசு அல்லது தனியார் துறையில் உத்தரவாதமுள்ள வேலை பெற்ற ஆண்-பெண் விவரம், அவரவர்களின் உள்சாதி கல்வியிலும் அரசு வேலையிலும்; ஆட்சி மன்றங்களிலும், சட்ட அவை களிலும் பெற்றுள்ள இடப்பங்கின் அளவு ஆகியவற்றை அறிய முடியாது; முடியாது. அவற்றையெல்லாம் அறியவும் பதிவு செய்யவும் கூடாது என்பதுதான், இந்திய உயர்சாதி ஆளும் வகுப்பினரின் நோக்கம். ஏனென்றால், அரசே அப்புள்ளி விவரங்களைத் தந்து விட்டால், அவையே ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களுக்குக் கையில் கிடைத்த போராட்டக் கருவிகளாக ஆகிவிடும். அக்கருவிகளைக் கொண்டு அவர்கள் போராடினால், எந்த முகத்தைக் காட்டி இந்திய அரசோ, மாநில அரசுகளோ ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களைப் புறக் கணிக்க முடியும்? முடியாது. எனவே தான், இந்த “ஏழ்மையை அளந்தறியும்” கணக்கெடுப்பு ஊர்ப்புற அளவில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது நகர்ப்புறத்திலும் “ஏழ்மைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களின்” கணக்கை எடுப்பது மட்டும்தான் முதல் தடவையாக மேற்கொள்ளப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உள்சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு என்பது - 1931க்குப் பிறகு முதன்முதலாக இப்போதுதான் எடுக்கப் படுகிறது. அது ஏன் 1951இல் எடுக்கப்படவில்லை? அதில்தான் இந்திய ஆளும் வகுப்பின் சூழ்ச்சி அடங்கி யிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன சூழ்ச்சி அது?&lt;br /&gt;&lt;br /&gt;1941 போர்க்காலம். எனவே சரிவரக் கணக்கு எடுக்கப் படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;1941 வரையில் இந்திய அரசும், மாகாண அரசுகளும் “பதிவு பெற்ற அரசு அலுவலர்களின் காலாண்டுப் பட்டியல்” என ஒன்றைக் காலாண்டுதோறும் வெளியிட்டனர். அதில் அலுவலரின் பெயர், படிப்பு, பதவியின் பெயர், வயது இவற்றுடன் கூட, அவரவர் உள்சாதியின் பெயரும் அச்சிடப்பட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;1920 வரையில், “பிராமணன்”, “சூத்திரன்” என்ற இரண்டு வகுப்புப் பிரிவுகளையும் அத்தகைய பட்டியலில் அச்சிட்டனர்; அத் துடன் அந்தந்த வகுப்பில் உள்ள உள் சாதியையும் அச்சிட்டனர். அதைப் பார்த்தவுடன் பார்ப்பனரும், மேல்சாதிக்காரரும்மட்டுமே - எழுத்தர் பதவிக்கு மேல் உள்ள எல்லாப் பதவிகளிலும் பெரிய எண்ணிக்கையில் இருப்பதை உணர முடிந்தது. இத்தகைய பட்டியலை 1950 வரையில் நான் பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மேல்சாதி ஆதிக்கம் தெரியாமல் இருக்க வேண்டித்தான், மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது, 1951 முதல் உள்சாதியைப் பதிவு செய்வதைக் கைவிட்டார்கள், இந்திய ஆட்சியில் ஆதிக்கம் செய்த பார்ப்பனர்கள். இதுவே உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது, ஊரகப்புறங்களில் -&lt;br /&gt;&lt;br /&gt;1.     தொலைபேசி இணைப்பு வைத்திருக்கிற - குளிரூட்டிப் பெட்டி வைத்திருக்கிற - (வேளாண் செய்பவர்) ரூபா 50 ஆயிரம் பணம் வைத்திருக் கிறவர் ஒரு பிரிவாகவும்;&lt;br /&gt;&lt;br /&gt;2.     திக்கற்றவர்கள், தோட்டி வேலை செய்வோர், ஒரு பிரிவாகவும்; ஆதிப்பழங்குடிகள் ஒரு பிரிவாகவும் கொள்ளப்பட்டு, இவர்களில் ஏழ்மைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களின் கணக்கு எடுக்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றும் ஏற்கெனவே சுட்டிக்காட்டப்பட்ட ஏழு அளவு கோல்களைக் கொண்டு ஏழ்மையின் அளவு அறியப் படும்.&lt;br /&gt;&lt;br /&gt;வரப்போகும் 12ஆவது அய்ந்தாண்டுத் திட்டம் (1912-1913 முதல் 2016-2017) இப்புள்ளி விவரங்களைப் பயன்படுத்தித் தீட்டப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏழ்மைக் கோட்டுக்குக் கீழே இருப்போர் அளவு 46 விழுக்காட்டுக்குமேல் இருக்கக்கூடாது என்று ஓர் உச்ச அளவை அரசே வைத்துக் கொண்டது. இது 50 விழுக்காடு வரை இருக்கலாம் என்று சேக்சானா குழு கூறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;‘விளக்கெண்ணெய் செலவானது தான் மிச்சம் - பிள்ளை பிழைத்தபாடு இல்லை’ என்கிற பழமொழிக்கு ஒப்ப, 80 ஆண்டுகளுக்குப் பிறகு, 2011 சூன் முதல் எடுக்கப்படப் போகும் உள்சாதிவாரிக் கணக்கு, இந்திய மேல்சாதி ஆளும் வகுப்பினர் - ஒடுக்கப்பட்ட வகுப்பி னரின் வாயில் மண்ணைத் திணிப்பதற்கே பயன் படும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒடுக்கப்பட்ட வகுப்பினர் சாதி வேறுபாடு - கட்சி வேறுபாடு பாராமல் இந்திய அரசின் மோசடியான, பாதி கிணறு தாண்டும் சூதைப் புரிந்து கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt; - வே.ஆனைமுத்து--சிந்தனையாளன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28593647-8501451898255395096?l=kilumathur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kilumathur.blogspot.com/feeds/8501451898255395096/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28593647&amp;postID=8501451898255395096' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28593647/posts/default/8501451898255395096'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28593647/posts/default/8501451898255395096'/><link rel='alternate' type='text/html' href='http://kilumathur.blogspot.com/2011/06/blog-post_18.html' title='அதில்தான் இந்திய ஆளும் வகுப்பின் சூழ்ச்சி'/><author><name>மகேந்திரன்.பெ</name><uri>http://www.blogger.com/profile/17863131935297558260</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://i64.photobucket.com/albums/h187/mahendhiranp/mahendhiran.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28593647.post-4161109511103096090</id><published>2011-06-11T09:10:00.002+05:30</published><updated>2011-06-11T09:13:26.359+05:30</updated><title type='text'>ஒரு அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு,</title><content type='html'>மாணவர்களுக்குப் படிப்பும் பரீட்சையும் முடிந்து கோடை கால விடுமுறை கிடைத்திருக்கிறது. இவ் விடுமுறையில் திராவிட மாணவர்கள் மகத்தான இன எழுச்சி சேவை செய்ய வேண்டியிருக்கிறது. படிக்கும் வேளையில் அரசியல் விவகாரங்களில் தலையிட்டு, தீவிரமாகக் கலந்து தொண்டாற்றுவதென்பது மாணவர்களின் உடனடியான லட்சியமாகிய தேர்வு என்பதைப் பாதிக்குமாதலால், கல்லூரியிலுள்ள காலத்தில் நம் மாணவர்கள் படிப்பிலேயே கவனமாயிருந்து வந்தனர். அவ்வப்போது ஓய்வு கிடைத்த சமயங்களில் சமுதாய வளர்ச்சிக்கான சிறுசிறு சேவைகளை மட்டுமே சிலர் செய்துவந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது பல மாணவர்களுக்கு மூன்று மாத ஓய்வும், பலருக்கு இரண்டு மாத ஓய்வும் கிடைத்திருக்கிறது. இந்த ஒய்வை நமது திராவிட சமுதாயத்தின் உரிமைப் போராட்டக் கிளர்ச்சிக்காகப் பயன்படுத்த வேண்டியது மாணவர்களின் கடமையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;கோடை விடுமுறையின்போது தேர்ச்சி பெற்ற சில மாணவர்கள் மட்டும் பல ஊர்களுக்குப் பிரசாரத்திற்காக அனுப்பப்படுவர். ஆனால் இவர்களே எல்லாக் கிராமங்களிலும் சென்று பிரசாரம் செய்து விட முடியாதாகையால், இதர திராவிட மாணவர்கள் அவரவர் ஊர்களைச் சுற்றிலுமுள்ள கிராமங்களுக்குச் சென்று நம் இயக்கத்தின் லட்சியங்களையும், சமுதாயத்தில் நமக்குள்ள சீர்கேடான நிலையையும் விளக்கிக் கூற வேண்டியது அவசியம் எனக் கருதுகிறோம். அத்துடன் இயக்கப் பத்திரிகைகளையும், வெளியீடு களையும் ஒவ்வொரு கிராமத்திலும் பரப்ப வேண்டியது இன்றியமையாத வேலையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதிக் கட்டத்தையடைந்திருக்கும் ஒரு அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு, இனி எக்காலத்திற்குமே நம்மை நசுக்கக்கூடிய மற்றொரு ஆபத்தான அடிமைத்தனத்தில் சிக்கிக் கொள்வதும், நம் நேஷனுக்கு உரிய பரம்பரைப் பெருமையையும் சுயேச்சையையும் இழப்பதுமே நம் கதியானால், மாணவர்களாகிய உங்களுடைய கல்வியும், பட்டங்களும் என்ன பலனைத் தரப் போகின்றன?&lt;br /&gt;&lt;br /&gt;இது 10ஆம் தேதி நடைபெற்ற லாகூர் இஸ்லாமியர் கல்லூரி பட்டமளிப்பு விழாவின்போது இடைக்கால சுகாதார இலாகா மந்திரியான தோழர் கஜ்னாபர் அலிகான் கூறியிருப்பது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வார்த்தைகளை திராவிட மாணவர்களும் தங்களுக்குப் பொருத்தமாக அமைத்துக் கொள்ளலாம். இதே கேள்வியை நம் மாணவர்களும் தம்மைத்தாமே கேட்டுக் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நம் இனம் எல்லாத் துறைகளிலும் பின்னணியில் கிடக்கிறது என்பதை ஒவ்வொருவரும் உணர்கின்றோம்; நாள்தோறும் அனுபவிக்கின்றோம்; சங்கடப்படுகின்றோம். பணச் செருக்கினாலும், அறிவு விளக்கமில்லாத காரணத்தினாலும், சுய நலத்தினாலும், நம்மவர்களில் ஒரு சிலர் இந்த இழி நிலையை உணராமலிருக்கலாம். அவர்கள் கிடக்கட்டும்; நாளடைவில் உணர்வார்கள்; உணருமாறு செய்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னணியிலுள்ள நம் இனம் முன்னேறாவிட்டால் அதன் விளைவுகளுக்குத் தலை கொடுக்க வேண்டியவர்கள் யார்? வயது சென்ற வைதீகர்களல்லர். ஏட்டிக்குப் போட்டி பேசி பொழுது போக்கும் சுகவாசிகளல்லர். பிற்காலக் குடிமக்களான, இப்போதைய மாணவர்களே யாவர். நம் எதிர்ப்பு சக்திகளோ பலம் பொருந்தியவை. பழைமை, வழக்கம், கடவுள், சாஸ்திரம், ஜாதி ஆசாரம், புண்ணியம், ஆகிய உயர்ந்த மதில் சுவர்களைத் தற்காப்புக் கோட்டைகளாகக் கொண்டவை. நம் இழிவை நீக்கிக் கொள்ளும் முயற்சியில் இக்கோட்டைகளைத் தாண்டியோ, தகர்த்தெறிந்தோ செல்வதைத் தவிர வேறு வழியில்லை. இந்த வேலைக்கு ஏற்ற கல்வி, அறிவு, துணிவு, சுயநலமின்மை, மாசற்ற மனம் ஆகிய ஆயுதங்களைக் கொண்டிருப்பவர்கள்தாம், மாணவர்கள். எனவே, இப்போது கிடைக்கும் கோடை விடுமுறையை வீணாக் காமல் திராவிட மாணவர்கள் கிராமந்தோறும் அணி அணியாகச் சென்று, நம் கழகக் கொள்கைகளை அமைதியான முறையில் விளக்கிக்கூறி, ஒவ்வொரு பெரிய கிராமத்திலும், ஒரு கழகத்தை நிறுவுவதற்கான வழிகளைச் செய்ய வேண்டுமெனக் கோருகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;மாணவர்கள் படித்துத் தெரிந்து கொண்ட சரித்திரம், விஞ்ஞானம், பொருள் நூல், தத்துவம் ஆகிய எல்லாம் தங்கள் பிறப்புரிமையைப் பெறுவதற்குக் கூட துணை செய்யாவிடில், அவைகளைக் சுற்றதனால் ஆய பயன் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;நம் கழகத்தில் லட்சக்கணக்கான உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும். நூற்றுக்கணக்கான புதிய கிளைச் சங்கங்களை அமைக்க வேண்டும். திக்கெட்டும் நமது சீரிய கொள்கைகள் தூவப்பட வேண்டும். பல்வேறு இயக்கங்களில் சிதறிக் கிடக்கும் திராவிட சக்தியை ஒன்று திரட்ட வேண்டும். ஹிந்து மதம் என்ற ஆரிய இருட்டறைக்குள் தடுமாறிக் கொண்டு கிடக்கும் பாமர மக்களை, ஜாதி - மத, உணர்வற்ற வெறும் மனிதனான திராவிடன் என்ற சூரிய வெளிச்சத்திற்குக் கொண்டு வர வேண்டும். இக்காரியங்களைச் செய்வதில் திராவிட மாணவர்கள் தாம் சோர்வோ, அலட்சியமோ, மன வெறுப்போ இல்லாமல் தொண்டாற்ற முடியும். இவைகளைச் செய்வது, தம் தம் குடும்பத்திற்காகவே என்ற உண்மையை உணர வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நம் முன்பு உள்ள வேலைகளையோ, எழுத்தால், பேச்சால், அளவிட்டுக் கூற முடியாது. நமக்குள்ள பிரசார இயந்திரமோ, மிக மிகச் சிறிது. நமது பொறுப்பும் லட்சியமுமோ மிகப் பெரிது. ஆதலால் திராவிட மாணவர்கள் இந்த 2-3 மாதங்களுக்குச் செய்யும் சிறு சேவைகூட நல்ல பலனைத் தரும் என்பதில் நமக்கு நம்பிக்கையுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;--------------------------- தந்தை பெரியார் - "விடுதலை" 15.4.1947&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28593647-4161109511103096090?l=kilumathur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kilumathur.blogspot.com/feeds/4161109511103096090/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28593647&amp;postID=4161109511103096090' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28593647/posts/default/4161109511103096090'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28593647/posts/default/4161109511103096090'/><link rel='alternate' type='text/html' href='http://kilumathur.blogspot.com/2011/06/blog-post_11.html' title='ஒரு அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு,'/><author><name>மகேந்திரன்.பெ</name><uri>http://www.blogger.com/profile/17863131935297558260</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://i64.photobucket.com/albums/h187/mahendhiranp/mahendhiran.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28593647.post-3789256566465130703</id><published>2011-06-01T20:39:00.002+05:30</published><updated>2011-06-01T20:44:25.431+05:30</updated><title type='text'>நாட்டில் ஒரே ஒரு கட்சியைத் தவிர வேறு கட்சி இல்லவே இல்லை.</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-wtSqrT0DQEg/TeZW-5zL39I/AAAAAAAAA0k/11HJTONrPG8/s1600/evr-periyar.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 302px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/-wtSqrT0DQEg/TeZW-5zL39I/AAAAAAAAA0k/11HJTONrPG8/s400/evr-periyar.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5613269624231288786" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நாம் பதவியை மறுத்தது பெருமைக்காகவோ பதவி பெறுவது கூடவே கூடாது என்கின்ற வீம்புக்காகவோ அல்ல. மற்றெதற்காக வென்றால் நம் கட்சி எதை உத்தேசித்துப் பதவிகளைக் கைப்பற்ற வேண்டியது அவசியமானது என்ற கொள்கை கொண்டிருக்கிறதோ அதற்கு அப்பதவி பயன்படுமா என்று கருதிப் பார்த்துப் பயன்படாது என்று அன்று கண்டதாலேயே ஆகும். அதே நிலைமை இன்றும் இருக்குமானால் நாம் கண்டிப்பாகப் பதவிகளை வெறுத்தே ஆக வேண்டும் என்பதே எனது அபிப்பிராயம்.             (விடுதலை 23.8.1940)&lt;br /&gt;&lt;br /&gt;பதவியில் இருப்பது என்பது, எப்போதும் பதவியில் இல்லாமல் இருப்பவர்களைவிட இருப்பவர்களுக்குச் சற்றுப் பலம் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் பதவியில் இல்லாதவர்கள் கட்டுப்பாடற்றவர்களாய், கோழை களாய், தனிப்பட்ட சுயநலக்காரர்களாய் இருப்பார்களானால் பதவியில் இருப்பவர்களுக்குத்தான் அதிகப் பலம் என்று சொல்ல வேண்டும். ஆதலால் நம் எதிரிகள் பதவியில் இருக்கும் போது நாம் கட்டுப்பாடும் மான உணர்ச்சியும் கொண்டு வீரர்களாக, தன்னலமற்றவர்களாக இருப்போமானால் எதிரிகளை வீழ்த்துவது வெகு எளிதான காரியமாகும்.         (விடுதலை 19.1.1946)&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டில் ஒரே ஒரு கட்சியைத் தவிர வேறு கட்சி இல்லவே இல்லை. வேறு கட்சி முளைக்கவும் இடம் இல்லை. பல கட்சிகள் இருக்கின்றன என்று சொல்லப்பட்டாலும் அவை எல்லாம் ஒரே கொள்கையும் ஒரே நோக்கமும் கொண்டவைகளாகவே மக்களை ஏய்க்கப் பல பெயர்களால் இருந்து வருகின்றன. அதாவது பொறுக்கித் தின்று வயிறு வளர்க்க வேண்டும்; பதவி வேட்டையாடிப் பெரு வாழ்வு வாழ வேண்டும் - இவை இரண்டும்தான் கொள்கையும் நோக்கமுமாக இருந்து வருகின்றன. அரசியல் சடடத்தையோ ஆட்சி முறையையோ தவறு என்று சொல்ல அரசியலின் பேரால் கட்சியே இல்லாமல் போய்விட்டது. இது மாத்திர மல்லாமல் நடப்புத் திட்டத்தைக் குறை கூறக்கூட நம் நாட்டில் கட்சிகள் கிடையாது. இதனால் அரசாங்கம் எதேச் சாதிகார அரசாங்கமாக இருக்க நேரிட்டுவிட்டது.             (விடுதலை 15.9.1957)&lt;br /&gt;&lt;br /&gt;முன்பெல்லாம் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த போரில் அசுரர்களைக் கொல்லத் தேவர்கள், பார்ப்பனர் களுக்கு ஆபத்து என்றால் உடனே மோகினியை விடுவார்கள். அதே மோகினிகள்தான் எம்.எல்.ஏ., எம்.பி. பதவியும் பர்மிட் வழங்கும் அதிகாரமும்; வேறொன்றுமே இல்லை.             (விடுதலை 4.10.1958)&lt;br /&gt;&lt;br /&gt;யார் ஒருவன் நல்லவன் ஒழுக்கசீலன் யோக்கியன் என்று போற்றப்படுகிறானோ, அவனை அயோக்கியனாக்க வேண்டுமென்றால் அவனைச் சட்டசபைக்கு அல்லது லோக்சபைக்கு அனுப்பினால் போதும். அவன் எப்பேர்ப்பட்ட அறிவாளியாகவோ புத்திசாலியாகவோ யோக்கியனாகவோ இருந்தாலும் தேர்தலில் பிரவேசித்தவுடனேயே அவன் அயோக்கியத்தனங்களுக்கு ஆளாகாமல் இருக்க முடியாது. தேர்தல் ஆசை வந்து விட்டால் அன்று முதல் அவன் பித்தலாட்டத்தைக் கற்றுக் கொள்கிறான். போக்கிரித்தனம், மகாபித்தலாட்டம் இவைகளைக் கற்க வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில் நம் நாட்டு அரசாங்க முறை அப்படி அமைந்து விட்டது.    (விடுதலை, 25.12.1955)&lt;br /&gt;&lt;br /&gt;அரசியலும், பொருளாதாரமும் சமூக அமைப்பு பெற்ற பிள்ளைகளே தவிரத் தனித்தனி விசயங்களல்ல. சமூக அமைப்பை எப்படி மாற்றி அமைக்கின்றோமோ, எப்படி உடைத்தெறிகின்றோமோ அதைப் பொறுத்தே அரசியலும் பொருளாதாரமும்  தானாகவே மாறுபாடு அடைந்துவிடும்.             (குடிஅரசு 29.12.1935)&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் அரசியல் கொள்கை சரியானபடி வளராதிருப்பதற்கு மூலக் காரணம் சமுதாயத்திலிருந்து வரும் கோளாறு என்றே கூறுவோம். சமுதாயத்திலிருந்து வரும் தாரதன்மை, வித்தியாசம் ஒழியாதவரை இந்நாட்டில் எத்தகைய அரசியல் கொள்கையும் நிலைத்திருக்க முடியாது.         (குடிஅரசு 8.8.1937)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28593647-3789256566465130703?l=kilumathur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kilumathur.blogspot.com/feeds/3789256566465130703/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28593647&amp;postID=3789256566465130703' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28593647/posts/default/3789256566465130703'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28593647/posts/default/3789256566465130703'/><link rel='alternate' type='text/html' href='http://kilumathur.blogspot.com/2011/06/blog-post.html' title='நாட்டில் ஒரே ஒரு கட்சியைத் தவிர வேறு கட்சி இல்லவே இல்லை.'/><author><name>மகேந்திரன்.பெ</name><uri>http://www.blogger.com/profile/17863131935297558260</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://i64.photobucket.com/albums/h187/mahendhiranp/mahendhiran.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-wtSqrT0DQEg/TeZW-5zL39I/AAAAAAAAA0k/11HJTONrPG8/s72-c/evr-periyar.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28593647.post-2827156970776510799</id><published>2011-05-28T18:40:00.002+05:30</published><updated>2011-05-28T18:47:50.659+05:30</updated><title type='text'>மக்களுக்குச் சுயமரியாதை இன்னதென்பதைக் கற்றுக் கொடுக்க வேண்டும்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-NloHm-40qIA/TeD165v9tvI/AAAAAAAAA0U/eVEYRtK8zi8/s1600/15684_periyar1009.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 296px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/-NloHm-40qIA/TeD165v9tvI/AAAAAAAAA0U/eVEYRtK8zi8/s320/15684_periyar1009.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5611755527986853618" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தற்கால ஆசிரியர்கள், தாங்கள் ஏற்றுக் கொண்டிருக்கும் ஆசிரியர் தொழிலை ஒரு புனிதமான கடமையென்பதாகக் கருதி பெருமைப்பட்டுக் கொண்டிருந்தாலும், அத்தொழிலுக்குரிய கடமைகளைச் சரியானபடி உணர்ந்து நடப்பதற்கில்லாத நிலையில் இருந்து கொண்டு, அத்தொழிலைத் தங்கள் வயிற்றுப்பாட்டிற்கு நடத்தி வருவதே வழக்கமாய் இருக்கிறது. ஆசிரியர்கள் இம்மாதிரி மகாநாடுகள் கூடிப் போசுவதும், தீர்மானிப்பதும், தங்களுக்குச் சில சவுகரியத்தை உண்டாக்கிக் கொள்ளவும், தங்கள் சம்பளத்தை அதிகப்படுத்திக் கொள்ளவுமேயல்லாமல் தங்களால் மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளவோ, தேச முன்னேற்றத்திற்கு அனுகூலமான கல்வியைப் போதிக்கும் சக்தியை அடையவோ ஒரு பிரயத்தனமும் செய்ததாக நான் அறியவே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;முதலாவது, நீங்கள் படித்த கல்வியும் நீங்கள் கற்றுக் கொடுக்கப்போகும் கல்வியும் வயிற்றுப் பிழைப்புக்கு ஓர் ஆதாரமாகக் கருதிக் கற்கவும், கற்பிக்கப்படவும் ஏற்பட்டிருக்கிறதேயல்லாமல், மக்கள் அறிவுத் தத்துவத்திற்கோ, தேசத்திற்கோ, ஒழுக்கத்திற்கோ ஒரு பலனையும் அளிக்க முடியாததாய் இருக்கிறது என்பது நீங்கள் அறிந்த விஷயமேதான். ஆரம்பக் கல்வி முதல் உயர்தரக் கல்வி, சகலகலா கல்வி என்பது வரையிலும் கவனித்தால், தற்காலம் அடிமைத் தன்மையையும், சுயமரியாதையற்ற தன்மையையும் உண்டாக்கிக் கொடுமையான ஆட்சிமுறை கொண்ட ஒரு அரசாங்கத்திற்கு உதவிசெய்து, வயிறு வளர்க்கும் தேசத் துரோகிகளை உற்பத்தி செய்யும் எந்திரங்களாகத்தானே இருக்கிறதேயல்லாமல் வேறென்ன இருக்கிறது?&lt;br /&gt;&lt;br /&gt;நமது குழந்தைகளுக்கு ஆரம்ப ஆசிரியர்கள், அவர்களுடைய தாய்மார்களாகிய நமது பெண்களேயாவார்கள். அக்குழந்தைகளுக்கு 6, 7 வயது வரையிலும் தாய்மார்களேதான் உபாத்தியாயர்களாக இருக்கிறார்கள். எனவே, இரண்டாவதாகத்தான் நீங்கள் ஆசிரியர்கள் ஆவீர்கள். தேசம் மக்களாலும், மக்கள் ஆசிரியர்களாலும் உருப்பட வேண்டி இருக்கிறது. ஆனால், அப்போர்ப்பட்ட ஆரம்ப ஆசிரியர்களாகிய பெண்களோ நமது நாட்டில் பிள்ளை பெறும் எந்திரங்களாக இருக்கின்றார்கள். அவர்களுக்கு ஏதாவது அறிவுண்டாக நாம் இடங்கொடுத்தாலல்லவா, பிள்ளைகளுக்கு அறிவுண்டாக்க அவர்களால் முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் முதலில் மக்களுக்குச் சுயமரியாதை இன்னதென்பதைக் கற்றுக் கொடுக்க வேண்டும்; சமத்துவத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும்; மக்களிடத்தில் அன்பு இருக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும். இவைகளில் ஏதாவது உங்களால் கற்பித்துக் கொடுக்கப்படுகிறதா? என்பதை உங்கள் மனதையே கையை வைத்துக் கேட்டுப் பாருங்கள். நீங்கள் மாத்திரமல்ல, உங்களைவிடப் பெரிய சகலகலா வல்லபர்களிடத்தில் படித்து, எம்.ஏ., டாக்டர் முதலிய பட்டங்கள் பெற்ற பையன்களும், தான் மோட்சத்திற்குப் போவதற்கு மற்றொருவன் கையில் பணத்தைக் கொடுத்து அவன் காலில் விழுந்து கும்பிடுகிறான்; தன் தேசத்தையும், மக்களையும் காட்டிக் கொடுத்து வயிறு வளர்ப்பதில் போட்டிப் போடுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;வண்ணான், அம்பட்டன், தச்சன், கொல்லன், சக்கிலி முதலியோர் எப்படித் தங்கள் தங்கள் தொழிலைக் கற்றுத் தேர்ந்திருக்கிறார்களோ, அப்படியே தற்காலம் பி.ஏ., எம்.ஏ., என்ற படித்தவர்கள் என்போர்களும் அந்தப் பாடத்தைக் கற்றவர்களாவார்கள். வண்ணானுக்கு எப்படி சரித்திர பாடம் தெரியாதோ, அப்படியே பி.ஏ. படித்தவர்களுக்கு வெளுக்குந் தொழில் தெரியாது. அம்பட்டனுக்கு எப்படிப் பூகோளப் பாடம் தெரியாதோ, அப்படியே எம்.ஏ. படித்தவனுக்குப் பிறருக்குச் சவரம் செய்யத் தெரியாது. சக்கிலிக்கு எப்படி இலக்கண இலக்கியங்களும் வேத வியாக்கியானங்களும் தெரியாதோ, அப்படியே வித்வான்களுக்கும் சாஸ்திரிகளுக்கும் செருப்புத் தைக்கத் தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே வண்ணான், அம்பட்டன், சக்கிலி முதலியோர்களைவிட பி.ஏ., எம்.ஏ., வித்வான், சாஸ்திரி முதலிய பட்டம் பெற்றவர்கள் ஒரு விதத்திலும் உயர்ந்தவர்களுமல்லர்; அறிவாளிகளுமல்லர்; உலகத்திற்கு அனுகூலமானவர்களுமல்லர். இவைகளெல்லாம் ஒரு வித்தை அல்லது தொழில்தானே தவிர, அறிவாகாது. இவ்வளவும் படித்தவர்கள் முட்டாள்களாகவும், சுயநலக்காரர்களாகவும், சுயமரியாதையற்றவர்களாகவும் இருக்கலாம். இவ்வளவும் படிக்காதவர்கள் பரோபகாரிகளாகவும், அறிவாளிகளாகவும், சுயமரியாதையுள்ளவர்களாகவும் இருக்கலாம். நமது நாட்டின் கேட்டிற்கும் நிலைமைக்கும் முதல் காரணம், தற்காலக் கல்வி முறை என்பதே எனது அபிப்ராயம்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே, இவை ஒவ்வொன்றையும் இன்னமும் கிளற, கிளற மிகவும் மோசமாகவேதான் வந்து கொண்டிருக்கும். இம் மகாநாட்டைப் பொறுத்த வரையிலும், இதிலேற்பட்டிருக்கிற சில தீர்மானங்களைப் பொறுத்த வரையிலும் உங்களுக்கிருக்கும் கஷ்டங்களையும், குறைகளையும் அறிந்து நான் மிகவும் அனுதாபப் படுகிறேன். உங்களுக்கு இன்னும் சம்பளம், மரியாதை முதலியன உயர வேண்டுமென்பதை நான் ஒப்புக் கொள்ளுகிறேன். அதற்காக நீங்கள் செய்யும் கிளர்ச்சிகளில் கலந்து கொள்ள எனக்கும் ஆசையிருக்கிறது. ஆனால், அந்நோக்கங்களையும் கிளர்ச்சிகளையும் உங்கள் சுய நன்மைக்கு மாத்திரமென்றில்லாமல், நமது மக்களின் உண்மையான ஆரம்ப ஆசிரியராய் இருக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்ளுகிறேன். &lt;br /&gt;24.4.1927இல் போளூரில் நடைபெற்ற ஆரம்ப ஆசிரியர்கள் மாநாட்டில்பெரியார் பேசியது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28593647-2827156970776510799?l=kilumathur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kilumathur.blogspot.com/feeds/2827156970776510799/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28593647&amp;postID=2827156970776510799' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28593647/posts/default/2827156970776510799'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28593647/posts/default/2827156970776510799'/><link rel='alternate' type='text/html' href='http://kilumathur.blogspot.com/2011/05/blog-post_28.html' title='மக்களுக்குச் சுயமரியாதை இன்னதென்பதைக் கற்றுக் கொடுக்க வேண்டும்'/><author><name>மகேந்திரன்.பெ</name><uri>http://www.blogger.com/profile/17863131935297558260</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://i64.photobucket.com/albums/h187/mahendhiranp/mahendhiran.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-NloHm-40qIA/TeD165v9tvI/AAAAAAAAA0U/eVEYRtK8zi8/s72-c/15684_periyar1009.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28593647.post-8908943573477854793</id><published>2011-05-26T21:07:00.001+05:30</published><updated>2011-05-26T21:14:30.902+05:30</updated><title type='text'>பாலியல் படமெடுக்கும் “பயந்தாங்கொள்ளி” இயக்குனர்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-CvzabYbEIVA/Td51TpsBTBI/AAAAAAAAAz8/Kvyr-YDsPM4/s1600/antichrist-movie-poster.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 146px; height: 200px;" src="http://4.bp.blogspot.com/-CvzabYbEIVA/Td51TpsBTBI/AAAAAAAAAz8/Kvyr-YDsPM4/s200/antichrist-movie-poster.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5611051166218669074" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இவ்வாண்டின் பல்வேறு சர்வதேசத் திரைப்பட விழாக்களில் அதிக ரசிகர்களை ‘கிறங்கடித்த படம்’ அல்லது திகிலூட்டிய படமென்றால் அதை லார்ஸ் வான் ட்ரையரின் ‘ஏன்ட்டி கிரைஸ்ட்’ என்று சொல்லலாம். கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டபோதே எழுந்த சர்ச்சைகள் வெவ்வேறு நாடுகளில் திரையிடப்பட்ட போதும் தொடர்ந்தன. ஏகமாய் கூட்டங்களை இப்படத்திற்குச் சேர்த்தது. ஒரு பெண் கணவனுக்கு செய்யும் சித்ரவதைகளின் உச்சத்தைக் கண்ட சில ஆண்கள் மயக்கமுற்று விழுந்தனர். திருவனந்தபுரம் திரைப்பட விழாவில் என் அருகினில் அமர்ந்திருந்தவர் ஒருவர் மயக்கமுற்றார். திரையரங்கில் பல சமயங்களில் அமளியும், சலசலப்பும் இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;லார்ஸ் எப்போதும் சர்ச்சைக்குரிய இயக்குனராகத்தான் இருந்து வந்திருக்கிறார். 1995ல் ‘டாக்மே’ படங்கள் என்ற தலைப்பில் அவரும் சில இயக்குனர்களும் பாலியல் சம்பந்தமான படங்களை ஹாலிவுட் படங்களுக்கு எதிரானவைகளாக எடுக்க ஆரம்பித்தனர். அது ஒரு இயக்கமாகவே வளர்ந்தது. பெள் ரசிகர்களுக்காகவே “போர்னோ” படங்களை 1998ல் எடுத்திருக்கிறார். படுக்கை அறை கதைகள், அதீத சிருங்கார கதைகள் என அவை வகைப்படுத்தப் பட்டிருக்கின்றன. அவை வெகுஜனப்படங்களாகவும் அமைந்திருக்கின்றன. தன்னுடைய படங்கள் பற்றியப் பெருமிதத்தில் எப்போதும் இருப்பவர். சில்மிஷ குணம் கொண்ட அவரின் இயல்புகளை அவரின் படங்களில் காணலாம். உதவியோ, குரூரமோ, மகிழ்ச்சியோடு வெகு துள்ளலாகி வெளிப்படும் அவரிடம். கடவுள் முன்கூட தலைவணங்கத் தேவையில்லை. கடவுள் என்று ஒருவர் இல்லவே இல்லை. இருந்தாலும் அவனிடம் தலைவணங்கத் தேவையில்லாததால் அகங்காரத்துடன் நிற்கிறேன் என்பவர்.&lt;br /&gt;&lt;br /&gt;‘டாக்மே’ வகைப்படங்கள் வறட்டு வாதப் படங்களாய், பரிசோதனை அம்சங்களைக் கொண்டு கிண்டல் தொனியில் வெளியிடப்பட்டவை. ஓரின பாலுணர்வு இயக்குனர் என்று அவரின் சில படங்களை முன்வைத்து அவர் பட்டம் சூட்டப் பெற்றிருக்கிறார். பத்து ஆண்டுகள் ‘டாக்மே’ வகைப்படங்களை ‘ஒரு போக்காக’ஹாலிவுட் படங்களுக்கு எதிராக நிறுவியவர். அவை பெரும்பாலும் வெளிப்புறப்படப்பிடிப்புகள் இல்லாமல், கட்டிடங்களுக்குள் நிகழும் சம்பவங்களாகவே அமைந்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;படப்பிடிப்புற்கு ஒளி அமைப்போ, ஒலி வகையோ முறையாக இல்லாமல் இயற்கையில் கிடைப்பதை பயன்படுத்தினார். அந்த வகையில் 18 படங்கள் வெளிவந்தன. 2005க்குப் பின்னர் அவ்வகைப் படங்களை அவரே நிராகரிக்க ஆரம்பித்தார். ‘போர்னோ’ படங்கள் எடுக்க தனி நிறுவனமொன்றை ஆரம்பித்து நடத்திக் கொண்டிருந்தவர் 1998ல் தாஸ்தாவிஸ்கியின் ‘இடியட்’டை எடுத்து சர்வதேச அரங்கில் பேசப்பட்டார். 2008ல் ‘டான்சர் இன் த டார்க்’ படத்தின் பாடல்கள் அவரின் வேறு உச்சங்களுக்குக் கொண்டு சென்றன. 2003ல் வெளிவந்த “டாக் வில்லே” அமெரிக்கச் சமூகத்தின் குரூரங்களை தோலுரிப்பதாக இருந்தது. தரையில் வரையப்பட்ட ‘செட்டுகள்’ என்பது அதன் சிறப்பம்சமாக அமைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;‘ஏன்டி கிரைஸ்ட்’ அவரின் ‘போர்னோ’ பிம்பத்தை உடைக்கவில்லை. அதிலிருந்து அவர் மீளவில்லை என்ற விமர்சனம் முன் வைக்கப்பட்டாலும் வியாபார நோக்கங்களுக்காக அவை பயன்படுத்தப்படவில்லை என்கிறார். குளியல் அறையில் தம்பதிகள் உடலுறவில் ஈடுபட்டிருக்கும்போது அவர்களின் நாலாவது மாடி ஜன்னலைத் திறந்து விளையாடும் சிறு வயது மகன் தப்பி விழுந்து சாகிறான். அப்பெண்ணிற்கு அது உறுத்தலாக அமைகிறது. ஒருவகையான பய உணர்ச்சியும், எதிர்பார்ப்புமான நோய் அவளைப் பீடிக்கிறது. அவளின் கணவன் ஒரு மருத்துவ நிபுணன். அவளின் பயத்தையும் தவிப்பையும் போக்குவதற்காய் சிகிச்சையைத் தொடங்குகிறான். குடும்ப உறுப்பினர்களுக்கு உளவியல் மருத்துவர்கள் சிகிச்சை தருவது தவறானது என்று சிலர் எச்சரிக்கை செய்கின்றனர். பயத்திலிருந்து அவள் விடுபட உடலுறவு என்பதை அவள் திரும்பத் திரும்ப கையாள்கிறாள். அதுவே அவளை ஆசுவாசப்படுத்துகிறது. பாலியல் நடவடிக்கைக்குள்ளேயே மருத்துவ கணவனும் அமிழ்ந்து போகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவளை ஒரு காட்டு மரபங்களாவிற்கு கூட்டி வருகிறான். இயற்கை அவளை சாந்தப்படுத்தவில்லை. “இயற்கை சாத்தானின் தேவாலயம்” என்கிற அவள் அது தரும் சலனங்களுக்க எதிராய் உடலுறவே தீர்வு என்று நினைக்கிறாள். கணவனைத் துன்புறுத்துகிறாள். அவனால் உடலுறவு முடியாதபோது சித்ரவரதை செய்கிறாள். அவனை அடித்து காயப்படுத்துபவள் காலில் துளையிட்டு கல் சக்கரத்தை மாட்டித் துன்புறுத்துகிறாள். அவன் தப்பித்து நரிக்குகையில் ஒளிந்தாலும் கண்டுபிடித்து சித்ரவதை செய்கிறாள். பிளவுண்ட அவளின் மனம் சில சமயம் அதிலிருந்து மீண்டு ஆறுதல் தருகிறது. ஆனால் மீண்டும் சித்ரவதை. கணவன் அவளை அடித்து தீயிட்டுக் கொளுத்துகிறான். இயற்கை சூழ்ந்த பகுதியின் குரூர செயல்கள் அவனைத் திகைப்படையச் செய்கின்றன. ட்ரையரின் டென்மார்க் நாட்டில் இப்படத்திற்கு எதிர்ப்பு அலை. ஆனால் பல நாடுகளில் திரையிட தயக்கம் காட்டி எதிர்ப்புணர்வைத் தெரிவித்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படத்தில் அப்பெண்ணுள் நிறைந்திருக்கிற பய உணர்ச்சியை லார்ஸின் உள்மன உறைவாகச் சொல்லலாம். நிஜத்தில் பய உணர்ச்சியில் மூழ்கிப் போகிறவர்தான் இயக்குனர் லார்ஸ். எல்லாவற்றையும் கண்டு பயம் கொள்கிற மனோபாவம் கொண்டவர். விமானம் ஏறி பயணம் செய்வது மிகுந்த பயத்தை அவருக்குத் தந்திருக்கிறது. விமானப் பயணம் என்பதாலேயே அமெரிக்கா சென்றதில்லை. பெரும்பாலும் தரை மார்க்கமாகவே பயணம் செய்பவர் விமானப் பயணங்களை உயிர்பயம் காரணமாக தவிர்த்து வந்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படம் நான்கு பாகங்களைக் கொண்டிருக்கிறது. துக்கம் என்ற பிரிவில் பையனின் மரண சடங்குகள் நடைபெறுகின்றன. வலி என்ற பிரிவில் நடைபாலத்தில் அவர்களின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. நரிவாழும் குகையில் அடுத்த பாகம் அமைந்திருக்கிறது. மூன்று பிச்சைக்காரர்கள் என்ற கடைசி பாகத்தில் மரபங்களாக் கூரைமீது பயமூட்டுகிற காகம், நரி, வந்து போகும் மான் ஆகியவற்றைக் குறியீட்டாகக் கொண்டு நடக்கும் மன சித்ரவதைகள் அமைந்திருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;“இயற்கை சாத்தானின் தேவாலயம்” என்ற அவளின் எண்ணம் நிறுவப் படுகிறது. இரண்டு நடிகர்கள் மட்டுமே படம் முழுக்க இடம் பெற்றிருக்கிற கருப்பு வெள்ளைப்படம் இது. கேன்ஸ் திரைப்பட விழாவில் பாலியல் வன்முறை குறித்த விஷயங்களுக்கான “எதிர் விருது” பெற்றிருக்கிறது. “படம் இயக்குவதைத் தவிர எல்லாமும் எனக்கு பயம் தருபவை” என்கிறார் லார்ஸ். “காலணியில் நுழைந்துவிட்ட சிறு கல் போல உறுத்திக் கொண்டிருக்க வேண்டும் திரைப்படங்கள்”&lt;br /&gt;&lt;br /&gt;நாத்திக வழிக் குடும்பம் அவருடையது. 1995ல் மரணப்படுக்கையில் இருந்த அம்மா அவனின் அப்பா என்று அறியப்பட்டவர் அப்பா அல்ல; இசைஞானம் மிக்கவரின் வாரிசாக தன் மகன் இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு இசைஞானமுள்ளவரிடமிருந்து குழந்தைப் பேற்றைப் பெற்றதாகச் சொல்கிறாள். லார்ஸ் அப்பாவைத் தேடிப்போய்க் கண்டடைகிறான். ஆனால் திரும்பத் திரும்ப மகன் தன்னைச் சந்திக்க வருவதை விரும்பவில்லை. தொடர்ந்து தன்னை சந்திக்க வந்தால் நீதிமன்றத்தில் வழக்குப் போடுவேன் என்று மிரட்டி அனுப்பி விடுகிறார். அவர் தந்த மிரட்டல் பயமாகி அவரை தூர விலகி இருக்கச் செய்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு கிறிஸ்துமஸின் போதும் 3 நிமிடங்கள் மட்டும் படமெடுத்து அவற்றை தொகுத்து படமாக்கும் முயற்சியே தனது புதிய சோதனை முயற்சி என்கிறார். 1991 முதல் 2014 வரை கிறிஸ்துமஸ் நிகழ்வுகளின் தொகுப்பு ஒரு பரிசோதனை முயற்சியாக அமையும் என்கிறார் “பயந்தாங்கொள்ளி” லார்ஸ்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28593647-8908943573477854793?l=kilumathur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kilumathur.blogspot.com/feeds/8908943573477854793/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28593647&amp;postID=8908943573477854793' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28593647/posts/default/8908943573477854793'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28593647/posts/default/8908943573477854793'/><link rel='alternate' type='text/html' href='http://kilumathur.blogspot.com/2011/05/blog-post_26.html' title='பாலியல் படமெடுக்கும் “பயந்தாங்கொள்ளி” இயக்குனர்'/><author><name>மகேந்திரன்.பெ</name><uri>http://www.blogger.com/profile/17863131935297558260</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://i64.photobucket.com/albums/h187/mahendhiranp/mahendhiran.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-CvzabYbEIVA/Td51TpsBTBI/AAAAAAAAAz8/Kvyr-YDsPM4/s72-c/antichrist-movie-poster.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28593647.post-2503747407956421217</id><published>2011-05-25T19:31:00.003+05:30</published><updated>2011-05-25T19:38:03.260+05:30</updated><title type='text'>சுஜாலம் சஃபாலம்**குஜராத்தில் நடத்தும் ஆட்சியின் கதை</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-Gc3OxfT7D0I/Td0M7ugUBkI/AAAAAAAAAzs/u_oRugabwJs/s1600/1275346970.jpe"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 234px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/-Gc3OxfT7D0I/Td0M7ugUBkI/AAAAAAAAAzs/u_oRugabwJs/s320/1275346970.jpe" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5610654931008882242" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;2002 ஆம் ஆண்டில் இஸ்லாமிய இனப் படுகொலையை நடத்தியவர் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி. இப்போது, அவர், இந்தியாவிலேயே நல்லாசி நடத்தி, சாதனை படைப்பதாக பார்ப்பன ஏடுகளும், ‘இந்துத்துவா’ சக்திகளும் புகழ் மாலை சூட்டத் தொடங்கியிருக்கின்றன. தமிழின உரிமை பேசும் நமது தோழர்களும்கூட இந்த பிரச்சார மாயை உண்மையென நம்பி மோடிகளின் புகழ் பாடத் தொடங்கியிருக்கிறார்கள். மோடி குஜராத்தில் நடத்தும் ஆட்சியின் கதை என்ன? அதையும் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரபல இந்தி நடிகையான ஷெர்லின் சாப்ரா என்பவர், குஜராத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது, நரேந்திர மோடியைத் தூக்கி வைத்துப் புகழ்ந்து, தான் அவரை சந்தித்ததே இல்லை என்றும், அவரிடம் உதவியாளராகப் பணியாற்றக் கூட தயாராக இருப்பதாகவும் பேசினார். அவர் பேசிய இடம் குஜராத் தொழிலதிபர்கள் நடத்திய நிகழ்ச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்ததாக ஊழல் எதிர்ப்பு இயக்கம் தொடங்கியுள்ள அன்னா அசாரேயிடமிருந்து, பாராட்டு மாலை வந்து விழுந்தது. மோடி - குஜராத் மாநிலத்தை வெகுவேகமாக வளர்ச்சிப் பாதையில் அழைத்துப் போகிறார் என்று. தமிழ்நாட்டில், குருமூர்த்திகளும் சோ இராமசாமிகளும் தீவிரப் பரப்புரை செய்து வருகிறார்கள். இந்தியாவின் பிரதமர் பதவி வேட்பாளருக்கு மோடியை முன்னிறுத்துவதே, இந்தப் பரப்புரையின் உள்நோக்கம். இந்த நாடகங்கள் நடந்து கொண்டிருக்கும்போது, மோடியின் உண்மை முகத்தை வெளிப்படுத்தும் மற்றொரு நிகழ்வும் நடந்தது. அதுதான் சஞ்சீவ் ராஜேந்திரபத் என்ற குஜராத்தின் முன்னாள் அய்.பி.எஸ். போலீஸ் அதிகாரி தாமாகவே முன்வந்து உச்சநீதிமன்றத்தில் மோடிக்கு எதிராக தாக்கல் செய்துள்ள வழக்கு. குஜராத் கலவரத்தைப் பற்ற வைத்தவரே மோடி தான் என்பது இவரது குற்றச்சாட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;கலவரத்தின்போது உயர்மட்ட காவல்துறை அதிகாரிகளின் கூட்டத்தைக் கூட்டிய மோடி, ‘முஸ்லீம்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார் என்பதே வழக்கு. அந்த உயர்மட்ட அதிகாரிகள் கூட்டத்தில், இருந்தவர், இந்த அதிகாரி. கொடூரமான குஜராத் இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பித்து கரை சேர்ந்து விட்டதாக நம்பிக் கொண்டிருந்த மோடிக்கு, இது ஒரு பேரிடி.  இந்த அதிகாரி, பிரமாண வாக்குமூலமாக வழக்கை தாக்கல் செய்துள்ளார். வாக்குமூலத்தில் தவறான தகவல் இடம் பெற்றிருந்தால் - அது கடுமையான குற்றமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;சபர்மதியில், கரசேவகர்கள் பயணம் செய்த ரயில் பெட்டி தீ வைக்கப்பட்டதைத் தொடர்ந்து குஜராத் கலவர பூமியானது. அப்படி ஒரு கலவரம் இந்தியாவில் நடந்ததே இல்லை. மூன்றே நாட்களில் குஜராத்தின் 19 மாவட்டங்களில் 2500 முஸ்லீம்கள் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டனர். மோடி அமைச்சரவையில் வருவாய்த் துறை அமைச்சராக இருந்தவர் ஹேரன் பாண்டி. இவர் ஆர்.எஸ்.எஸ். பின்னணியிலிருந்து வந்தவர்தான். அவராலேயே இதை சகித்துக் கொள்ள முடியவில்லை. இந்தப் படுகொலைகள் பற்றி சிறப்பு புலனாய்வுக்குழு உச்சநீதிமன்ற ஆணையின் கீழ் நியமிக்கப்பட்டு விசாரித்தது. ஆனால், ஆட்சி நிர்வாகம் மோடியிடம் இருந்ததால் உயர் அதிகாரிகள் உண்மையை வெளிப்படையாகக் கூறத் தயாராக இல்லை. சிறப்புப் புலனாய்வுக் குழுவும் நேர்மையாக செயல்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியங்களை சிறப்பு புலனாய்வுக் குழுவே பதிவு செய்ய மறுத்தது. இந்த நிலையில்  ஓய்வு பெற்ற நீதிபதிகள் பி.பி.சவந்த் மற்றும் ஹோஸ்பர்ட் சுரேஷ் ஆகியோரைக் கொண்ட ‘குடிமக்கள் பேராயம்’ என்ற சுயேச்சையான விசாரணை மையம் பல உண்மைகளைப் பதிவு செய்து சிறப்பு விசாரணைக் குழுவிடம் அளித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நீதிபதிகள் முன் தோன்றி மோடிக்கு எதிராக சாட்சியளித்தவர்களில் ஒருவர் வருவாய்த் துறை அமைச்சர் ஹிரேன் பாண்டியா, பிப். 27 ஆம் தேதி  மோடி தனது வீட்டில் நடத்திய கூட்டத்தில் தானும் கலந்து கொண்டதாகவும், அப்போது இந்துக்கள் நடத்தும் தாக்குதல் நடவடிக்கைகளை காவல்துறை தடுக்க வேண்டாம் என்று  - மோடி உத்தரவிட்டதாகவும் கூறினார். பின்னர் மர்மமான முறையில் அவர் கொலை செய்யப்பட்டார். மோடிக்கு ஆதரவாக உண்மைகளை மறைத்த காவல்துறை அதிகாரிகளான பி.சி. பாண்டே, பி.கே. மிஸ்ரா, அசோக் நாராயணன் போன்ற பார்ப்பன அதிகாரிகளுக்கு அவர்கள் பதவி ஓய்வுக்குப் பிறகு, வேறு பதவிகளை பரிசாக வழங்கினார் மோடி. இப்போது மனுதாக்கல் செய்துள்ள காவல்துறை அதிகாரி சஞ்சீவ் ராஜேந்திரபத், மோடி நடத்திய கூட்டத்தில் பங்கேற்கவே இல்லை என்று அரசு தரப்பில் மறுக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது உளவுத் துறையில் துணை ஆணையாளர் என்ற நிலையில் தான் அவர் இருந்தார். எனவே உயர்அதிகாரிகள் மட்டும் பங்கேற்ற கூட்டத்துக்கு அவர் எப்படி வந்திருப்பார் என்பது, அரசு தரப்பு எழுப்பும் மறுப்பு. அப்போது உளவுத் துறையின் தலைமை ஆணையர் ஜி.சி. ராஜ்கர் விடுப்பில் இருந்தார். எனவே தன் சார்பாக இராஜேந்திர பத்தை, கலந்து கொள்ளுமாறு அவர் பணித்ததால், பத், அந்தக் கூட்டத்தில் பங்கேற்றார். மோடியின் கட்டுப்பாட்டில் இருந்த சிறப்புப் புலனாய்வுக் குழு இராஜேந்திர பத் அக்கூட்டத்தில் பங்கேற்கவே இல்லை என்று தடாலடியாகக் கூறிவிட்ட பிறகு, நீதிமன்றமும் அதை ஏற்றுக் கொண்ட பிறகு, இப்போது நேரடியாகவே இராஜேந்திர பத் மோடிக்கு எதிரான வலிமையான சான்றுகளுடன் நீதிமன்றம் வந்து விட்டார். இந்த அதிகாரியின் வாகன ஓட்டுனரும், மோடி கூட்டிய கூட்டத்தில், அவர் பங்கேற்றதை உறுதிப்படுத்தியிருக்கிறார். பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதிமன்றத்தில் போராடி வரும், மனித உரிமைப் போராளியும், பெண் பத்திரிகையாளருமான தீஸ்த்தா செட்டால் வத், மோடிக்கு எதிராக நேரடியான குற்றச்சாட்டு, இப்போது தான் முதன்முதலாக வந்துள்ளது. உண்மைகள் வெளியே வரத் தொடங்கியுள்ளன என்று கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;மோடி நிர்வாகத்தில் பணிபுரிந்த சிறீகுமார், ராகுல் சர்மா போன்ற நேர்மையான அதிகாரிகள், கலவரங்கள் பற்றி சிறப்பு புலனாய்வில் பதிவு செய்த உண்மையான தகவல்களும் நிராகரிக்கப்பட்டு விட்டன. உண்மையைப் பேசியதற்காக, மோடி ஆட்சியில், இந்த அதிகாரிகள் பழிவாங்கப்பட்டனர். இந்த சூழ்நிலையில் தனது குற்றச்சாட்டுகளுக்கு நீதி கிடைக்குமா என்ற சந்தேகம் ராஜேந்திர தத்துக்கு ஏற்படுவது நியாயம் தானே! அந்த தயக்கமே, அவரை காலம் கடந்து, நீதிமன்றம் வரக் காரணமாக இருந்துள்ளது. இப்போது உச்சநீதி மன்றம் சிறப்பு புலனாய்வுக் குழு அறிக்கையை மட்டுமே ஏற்க வேண்டும் என்ற அவசியமில்லை; சுதந்திரமான அமைப்புகள் நடத்திய விசாரணை களையும் பரிசீலிக்கலாம் என்று அதிரடியாக அறிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மோடி - குஜராத் கலவரத்துக்குப் பிறகு இரண்டு தேர்தல்களில் வெற்றி பெற்றுவிட்டார். அவர் நாட்டை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு சென்று, வளர்ச்சித் திட்டங்களில் கவனம் செலுத்துவதே அவரது வெற்றிக்கான காரணம் என்ற பிரச்சாரம் பார்ப்பன வட்டாரங்களில் தீவிரமாக முடுக்கி விடப்படுகிறது!&lt;br /&gt;&lt;br /&gt;பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டலுக்கு தாராளமாகக் கதவு திறந்து விட்டுள்ள மோடியை அவர்கள் நடத்தும் ஊடகங்கள் புகழ் பாடுவதில் வியப்பு எதும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;•    ‘என்.சி.ஏ.பி.ஆர்.’ என்ற பொருளாதார ஆய்வு மய்யம் அண்மையில் குஜராத்தில் சிறுபான்மையினர் நிலை பற்றிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டு அறிக்கையாக வெளியிட்டுள்ளது. ஏழ்மை, வறுமை, கல்வியின்மை, பாதுகாப்பற்ற நிலையில் - இந்தியாவிலேயே ஒரிசா, பீகார் மாநிலங்களைப்போல் மிக அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பவர்கள் குஜராத்தில் வாழும் முஸ்லீம்கள் என்று அந்த ஆய்வு கூறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;•    குஜராத்தில் முஸ்லீம்களின் வறுமையின் அளவு உயர்சாதி இந்துக்களைவிட 50 சதவீதம் அதிகம். வங்கிக் கணக்கு வைத்துள்ள முஸ்லீம்கள் எண்ணிக்கை 12 சதவீதம் மட்டுமே. வங்கிக் கடன் வாங்கியவர்கள் 2.6 சதவீதம்.&lt;br /&gt;&lt;br /&gt;•    தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் முஸ்லீம்கள் புறக்கணிப்பு பெருமளவில் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;•    2002 கலவரத்தால் பாதிக்கப்பட்ட 23000 முஸ்லீம்கள் இப்போதும் தற்காலிக முகாம்களிலேயே அகதிகளாக வாழ்கிறார்கள். நிரந்தர முகாம்கள்கூட அமைக்கப்படவில்லை. பல லட்சம் மதிப்புள்ள வீடுகளை இழந்தவர்களுக்கு அரசு தரும் இழப்பு ஈடு ரூ.10,000 அல்லது ரூ.15,000 மட்டுமே.&lt;br /&gt;&lt;br /&gt;•    கிராம சாலைகள்; வீடுகளுக்கு மின் இணைப்பு; குடிநீர் இணைப்பு போன்ற அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டிருந்தாலும், மனித சமூக மேம்பாடு வளர்ச்சி மிகவும் குறைவாகவே உள்ளது. காரணம், ஊழல்கள் பெருகி நிற்பது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;•    கடந்த 2 ஆண்டுகளில் மூன்று பெரும் ஊழல்கள் நடந்துள்ளன. 17000 கோடி செலவில் குளங்களை வெட்டும் திட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத் திட்டத்தின் பெயர் ‘சுஜாலம் சஃபாலம்’; இதில் வேலை செய்யும் தொழிலாளருக்கு, உள்நாட்டு சந்தையில் கோதுமைக்கான விலை நிர்ணய அடிப்படையில் கூலி வழங்கப்பட வேண்டும். தொழிலாளர்களுக்கான ஊதியத்தை மொத்தமாக முன் கூட்டியே ஒப்பந்தக்காரர்களுக்கு அரசு வழங்கி விட்டது. ஆனால் தொழிலாளர்களுக்கு அரிசி விலைக்கான கூலியே தரப்படுகிறது. பல குளங்கள் காகிதத்தில் மட்டுமே வெட்டப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்காக வழங்கப்பட வேண்டிய அரிசி - பெருமளவில் மகாராஷ்டிராவுக்கு கடத்தப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;•    2009 இல் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்துக்காக ரூ.260 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், எந்த வேலையும் கிடைக்கவில்லை. வேலை நடப்பதாக கணக்கு எழுதப்பட்டு, பணம் ஒப்பந்தக்காரர்களால் சுருட்டப்பட்டு விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;•    2010 இல் உருவாக்கப்பட்ட மீன் வளர்ப்புத் திட்ட ஊழல்களால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.600 கோடி. இதற்கான டெண்டர் விடப்பட்டதில் ஊழல்கள் நடந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;•    பெருமளவில் அன்னிய தொழில் முதலீடுகளுக்கு குஜராத்தில் மோடி கதவு திறந்து விட்டுள்ளார். அன்னிய முதலீட்டை எதிர்ப்பதாக கட்டுரைகள் எழுதும் பார்ப்பன குருமூர்த்திகள், மோடி அதே வேலையை செய்யும்போது தொழில் வளர்ச்சி என்று பாராட்டுகிறார்கள். குஜராத்தில் 2003 இல் மோடி அன்னிய முதலீடுகளை வரவேற்கும் திட்டத்தைத் தொடங்கியபோது, ரூ.69 கோடி முதலீடு வந்தது. 2005 இல் ஒரு லட்சம் கோடி; 2007 இல் 4 லட்சம் கோடி; 2009 இல் 12 லட்சம் கோடி; 2011 இல் 21 இலட்சம் கோடியாக பன்னாட்டு மூலதனம் அதிகரித்து நிற்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;•    இந்த பன்னாட்டு பெரும் தொழில் நிறுவனங்களுக்கு அவர்கள் விரும்புகிற இடங்களில் நிலம் தாராளமாக ஒதுக்கப்படுகிறது. 5 ஆண்டுகளுக்கு எந்த வரி விதிப்பும் கிடையாது. தொழிலாளர் நல சட்டங்களிலிருந்தும் விதி விலக்கு. விவசாய நிலங்கள், பழங்குடியினருக்கானவனப் பகுதிகள், பெரும் தொழில் நிறுவனங்களின் வசமாகி விட்டன. சுற்றுச் சூழல் பாதிப்பு காரணமாக நீதிமன்றமே தலையிட்டு, பல தொழிற்சாலை களை மூட  உத்தரவிட்டுள்ளது. உடனே - மோடி ஆட்சி, அவர்களுக்கு வேறு இடங்களை ஒதுக்கித் தருகிறது. இந்த பெரும் தொழில் நிறுவனங்கள் வரத் தொடங்கிய பிறகு, மக்களின் சுகாதாரம், பொருளாதாரம், கல்விச் சேவைகள் மிகவும் குறைந்துவிட்டன. பெண்கள், குழந்தைகள், மைனாரிட்டியினர் வாழ்நிலை மிகவும் பின்னுக்குப் போய்விட்டன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;•    பெரும் தொழில் நிறுவனங்கள் வந்த பிறகும் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கவில்லை. படித்த வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சமூக சேவையாளர் தீஸ்கா செடல்வாட் ஆய்வு வழியாக அம்பலப்படுத்தியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;•    குஜராத்தில் மகுவா பகுதியில் விவசாயிகள் மோடி அரசுக்கு எதிராக கடும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். விவசாயத்தை நம்பி வாழும் இப்பகுதியில் பாசன வசதிக்காக அணைகட்டுவதற்காக ஒதுக்கப்பட்டிருந்த இடத்தை மோடி பூமிக்கடியில் உள்ள சுண்ணாம்புக் கல்லைத் தோண்டி எடுத்து சோப்பு தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க அனுமதித்து விட்டதால், அப்பகுதி மக்கள் உள்ளூர் பா.ஜ.க. ஆதரவுடன், மோடியை எதிர்த்து போராடி வருகின்றனர். குண்டர்களை வைத்து போராடும் மக்களை ஒடுக்குகிறது மோடி ஆட்சி. 1400 கோடி செலவில் 214 ஹெக்டர் நிலப்பரப்பில் உருவாகும் இந்தத் தொழிற்சாலைக்காக, 5000 குடும்பங்களைச் சேர்ந்த 30,000 மக்கள் கட்டாயமாக வெளியேற்றப்படுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;•    சவுராஷ்டிரா பகுதியில் வாங்கனர் மாவட்டத்தில் ‘ஒர்பட்’ நிறுவனத்துக்கான 40 ஹெக்டர் நிலத்தை ஒரு சதுர மீட்டர் ரூ.40 என்ற விலையில் வழங்கினார் மோடி. அந்தப் பகுதி மக்களின் பாசனத்துக்கும், குடிநீருக்கும் ஆதரமான இந்த ஒரே இடத்தை பெரும் தொழில் நிறுவனத்துக்கு ‘தாரை’ வார்த்ததை எதிர்த்து உள்ளூர் மக்கள் கடந்த மார்ச் மாதம் உயர்நீதிமன்றம் போய் தடை வாங்கியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;•    உதோராவில் உள்ள ‘கலாச்சாரம் மற்றும் மேம்பாடு ஆய்வு நிறுவனம்’, அரசு ஆவணங்களைக் கொண்டு நடத்திய ஆய்வில், 1947-லிருந்து 2004 ஆம் ஆண்டு வரை குஜராத் மக்கள் தொகையில் வளர்ச்சித் திட்டங்களினால்  5 சதவீத மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே காலகட்டத்தில் 33 லட்சம் ஹெக்டர் நிலம் பெரும் தொழில் நிறுவனங்களுக்காக கையகப்படுத்தப்பட்டிருக்கிறது என்று கூறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;•    “சர்வாதிகாரமும் வளர்ச்சியும் கைகோர்த்துக் கொண்டு வரும்போது மக்களுக்கு அத்தகைய ஒரு வளர்ச்சியே தேவை இல்லை. ஜனநாயகம் வாழும் ஒரு சமூகத்தில் வளர்ச்சி சற்று குறைவாக இருப்பினும் அதுவே நன்மை பயக்கும்” என்கிறார் மதச் சார்பற்ற எழுத்தாளரும், சிந்தனையாளருமான ராம் புனியானி.&lt;br /&gt;&lt;br /&gt;•    மோடிக்கு எதிராக அங்கே எவரும் பேச முடியாது. சட்டமன்றங்கள்  அவர் புகழ் பாடும் மன்றங்களாகவே  செயல்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;•    தலித் சமூகத்தின் மீதான அடக்குமுறை தலைவிரித்தாடுகிறது. தலித் மாணவர்களையும் பிறசாதி குழந்தைகளையும் ஒன்றாக அமர வைத்து ஒற்றுமை பற்றி பேசியதற்காக ஒரு ஆசிரியை உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டார். ‘இந்துத்துவாவின் பரிசோதனைக் களம்’ என்று அறிவிக்கப்பட்ட ஒரு மாநிலத்தில் அச்சத்தின் பிடியில் மைனாரிட்டிகளும் தலித் மக்களும் வாடும் நிலையில், பார்ப்பனர்களும், பட்டேல்களும் பன்னாட்டு நிறுவனங்களுடன் சுரண்டி கொழுத்து வரும்போது வளர்ச்சிப் பாதையில் நடைபோடுகிறது என்று பேசுவது என்ன நியாயம்? கருவுற்ற தாய்மார்களின் இரத்தத்தில் இருக்க வேண்டிய சிகப்பணுக்களின் எண்ணிக்கை குஜராத் மாநிலப் பெண்களிடம் தான் மிகக் குறைவாக இருப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது. தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு முறையான இட ஒதுக்கீடோ, இலவசக் கல்வியோ, அங்கே இருக்கிறதா? என்ற கேள்விக்கு,  இவர்களிடமிருந்து பதில் இல்லை. இதுதான் மோடி ஆட்சியின் சாதனைகளா?&lt;br /&gt;&lt;br /&gt;தகவல்கள்: ‘பிரன்ட்லைன்’ மே 20, 2011&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28593647-2503747407956421217?l=kilumathur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kilumathur.blogspot.com/feeds/2503747407956421217/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28593647&amp;postID=2503747407956421217' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28593647/posts/default/2503747407956421217'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28593647/posts/default/2503747407956421217'/><link rel='alternate' type='text/html' href='http://kilumathur.blogspot.com/2011/05/blog-post_25.html' title='சுஜாலம் சஃபாலம்**குஜராத்தில் நடத்தும் ஆட்சியின் கதை'/><author><name>மகேந்திரன்.பெ</name><uri>http://www.blogger.com/profile/17863131935297558260</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://i64.photobucket.com/albums/h187/mahendhiranp/mahendhiran.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-Gc3OxfT7D0I/Td0M7ugUBkI/AAAAAAAAAzs/u_oRugabwJs/s72-c/1275346970.jpe' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28593647.post-5861900120550428969</id><published>2011-05-23T16:37:00.002+05:30</published><updated>2011-05-23T16:43:12.368+05:30</updated><title type='text'>ஊழல் ஒழிப்பும் ஒரு திடீர் மகாத்மாவும்!!</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-Kb3u7zJXZPQ/TdpBNNSheoI/AAAAAAAAAzk/RvE0o69V4Lw/s1600/anna.bmp"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 269px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/-Kb3u7zJXZPQ/TdpBNNSheoI/AAAAAAAAAzk/RvE0o69V4Lw/s320/anna.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5609867981004831362" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஊடகங்கள் நினைத்தால், ஒரே வாரத்தில் ஒருவரை மகாத்மா ஆக்கிவிட முடியும் எனபதற்கான சான்றுதான், அன்னா ஹசாரே !&lt;br /&gt;&lt;br /&gt;அடேயப்பா... 4 நாள் உண்ணாவிரதம், ஒரு சட்ட முன்வடிவம்... இவை போதும் நாட்டை விட்டே லஞ்சத்தையும், ஊழலையும் ஒழிப்பதற்கு! இப்படித்தான் ஊடகங்கள் நம்மை நம்ப வைக்க முயல்கின்றன. நடுத்தட்டு வர்க்கத்தினர் பலர் இதனை நம்பவும் செய்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;70 வயதுக்காரரான அன்னா ஹசாரே, மராத்திய மாநிலத்தைச் சேர்ந்தவர். காந்தி குல்லாய் வைத்திருந்தாலும், ஆர்.எஸ்.எஸ். கோட்பாடுகளில் ஈடுபாடுடையவர். இடஒதுக்கீட்டுக்கு எதிரான கருத்து உடையவர். ஊடகங்கள் ஒருவரைத் தோளில் வைத்துத் தூக்கி ஆடுவதற்கு இவை போதாவா?&lt;br /&gt;&lt;br /&gt;‘ ராலேகான் சித்தி ’ என்னும் ஊரில், நிலத்தடி நீரை உயர்த்த அவர் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றிபெற்றுள்ளன என்னும் செய்தியை இணையத்தளம் தெரிவிக்கிறது. ஒரு குறிப்பிட்ட காலத்தில் மழை கொட்டித் தீர்த்துவிடும் அந்த ஊரில், தேவையான குளங்களையும், குட்டைகளையும், மக்களைக் கொண்டே உருவாக்கி, நீரைத் தேக்கி வைப்பதற்கான வழியை ஹசாரே செய்துள்ளார். அதனால் நிலத்தடி நீர்மட்டம் கூடியுள்ளது. பிறகு, ஆடு, மாடு, கோழிகளை வளர்க்கும்படி அந்தக் கிராம மக்களைத் தூண்டியுள்ளார். அவர்களின் பொருளாதார நிலையை அந்தக் கருத்துரை உயர்த்தியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இவைகளெல்லாம் பாராட்டப்பட வேண்டிய செயல்கள்தாம். இதிலிருந்து அவர் புகழ் பரவத் தொடங்கியிருக்கிறது. இப்போது,&lt;br /&gt;&lt;br /&gt;‘லோக்பால் ’ சட்டத்தை உடனடியாகக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, ஏப்ரல் 4ஆம் தேதி, தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் அவர் உண்ணாவிரதம் தொடங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வளவுதான்... ஆங்கிலத் தொலைக்காட்சிகள், இந்தியா முழுவதும் உள்ள பன்மொழி நாளேடுகள் அனைத்தும், ஒரே நாளில், ‘ இதோ காந்தி மறுபடியும் பிறந்து வந்துவிட்டார் ’ என அறிவிக்காத குறையாய், அச்செய்திக்கு அவ்வளவு பெரிய விளம்பரம் கொடுத்தன. லஞ்ச ஊழலை ஒழிப்பதற்கான இறுதிப்போர் தொடங்கிவிட்டது போன்ற ஒரு மாயை, அனைத்து மக்களின் ஆழ் மனங்களிலும் விதைக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;மேதா பட்கர், கிரண்பேடி, பாலிவுட் நடிகர் அமீர்கான், ரஜினிகாந்த் என்று பிரபலங்கள் பலர் வரிசையாய்த் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். சோனியா காந்தி ஆதரித்தார். ஊழலை ஒழிக்கப் புறப்பட்டுள்ள ஹசாரேக்கு, நம் ஊர் ஜெயலலிதாவும் ஆதரவு தெரிவித்துவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;(ஊழலை ஒழிக்க ஜெயலலிதாவும், போதையை ஒழிக்க விஜயகாந்தும் தனி இயக்கமே கூடத் தொடங்கலாம்). தமிழ்நாட்டில் உள்ள தமிழருவி மணியன் போன்ற வறட்டுக் காந்தியவாதிகளும் கூடத் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு பேர் ஆதரிக்கும் போது, நாம் மட்டும் சும்மா இருக்கலாமா என்று கருதி, கொலை வழக்கு ஒன்றில் வாழ்நாள் தண்டனையை அனுபவித்து வரும், பீகாரைச் சேர்ந்த பப்பு யாதவும், தன் ஆதரவை வழங்கினார். ஆதரவுகளில் எல்லாம் சிறந்த மணிமகுடமாய் அது ஆகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இனிமேல் லோக்பால் சட்டத்தைக் கொண்டுவந்து, ஊழலை ஒழிக்க வேண்டியது ஒன்று மட்டும்தான் மீதமுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த லோக்பால் சட்ட முன்வடிவம், அப்படியயான்றும் புத்தம் புதிதன்று. 1969ஆம் ஆண்டு, முதன் முதலாக அது அறிமுகப்படுத்தப் பட்டது. ஆனால் ஏற்கப்படவில்லை. மீண்டும் மீண்டும், சில திருத்தங்களுடன் கொண்டுவரப்பட்டது. இன்றுவரை, 10 முறை அதே சட்ட முன்வடிவம், நாடாளுமன்றத்திற்கு வந்து போய்விட்டது. இப்போது 11ஆவது முறை கொண்டுவரப்பட்டவுடன், அனைத்து ஊழல்களும் ஓடி ஒளிந்து விடும் என்பது போல, ஊடகங்கள் நமக்குப் படம் காட்டுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;பழைய லோக்பால் சட்டமுன்வடிவம், சில மாற்றங்களுடன், ‘ ஜன லோக்பால் ’ என்னும் பெயரில் வரைவு (Draft) செய்யப்பட்டுள்ளது. இதனை, மேனாள் உச்சநீதிமன்ற நீதிபதி சந்தோஷ் யஹக்டே உருவாக்கியுள்ளார். இந்த ஜனலோக்பால் திட்டத்தைச் சட்டமாக ஆக்கவேண்டும் என்பதற்குத்தான் ஹசாரேயின் உண்ணாவிரதம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜனலோக்பால் சட்டம் நடைமுறைக்கு வருமானால், ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளான அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் விசாரிக்கும் உரிமை லோக்பால் குழுவிற்கு உண்டு. அக்குழுவின் பரிந்துரையையயாட்டி, உச்ச நீதிமன்றம் வழக்கை விசாரித்து, ஓராண்டிற்குள் தீர்ப்பு சொல்ல வேண்டும். குற்றவாளிகள் என மெய்ப்பிக்கப்பட்டால், அவர்களின் தண்டனைக் காலத்தில், அவர்களிடமிருந்து நாட்டிற்கு ஏற்பட்ட இழப்புத் தொகை திரும்பப் பெறப்படும். இவைகளே அச்சட்ட முன் வடிவின் அடிப்படைச் செய்திகள். இதற்காக, மத்தியில் லோக்பால் என்ற அமைப்பும், மாநிலங்களில் லோகாயுக்தா என்ற அமைப்பும் நிறுவப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்னா ஹசாரேயின் கோரிக்கையை மத்திய அரசும் உடனே உள்வாங்கிக் கொண்டு, அதற்கான 10 பேர் கொண்ட குழுவை உடனடியாக நியமித்துவிட்டது. ஊழலை ஒழிப்பதில், அரசு உட்பட, அனைவரும் காட்டும் விரைவு நடவடிக்கைகள் நம்மை மலைக்க வைக்கின்றன. அதனாலேயே அது குறித்த ஐயங்களும் நமக்கு எழுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஜனலோக்பால் வரைவு அறிக்கையை இறுதி செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள அந்த 10 பேர் கொண்ட குழுவில், ஐவர் அரசு சார்ந்தவர்கள் ; ஐவர் பொதுநல விரும்பிகள். பொதுநல விரும்பிகளில் ஹசாரேயும் ஒருவர். போகட்டும், உண்ணாவிரதம் இருந்ததற்கு ஏதேனும் பலன் வேண்டாமா? பிறகு, தந்தையும், மகனுமான சாந்தி பூ­ன், பிரசாந்த் பூ­ன் ஆகியோரும் உறுப்பினர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கெல்லாம் வாரிசுச் சிக்கல் எழவில்லை என்றாலும், ஏன் ஒரே குடும்பத்திலிருந்து இருவர் என்ற கேள்வி சிலரிடம் எழுந்த போது, “ அவர்களைத் தனி மனிதர்களாகவும், அவர்களிடையே என்ன உறவு என்ற அடிப்படையிலும் பார்க்கக்கூடாது. அவர்களின் தகுதி, திறமையை மட்டுமே பார்க்க வேண்டும்” என்று ஹசாரே கூற, அதனைக் கிரண்பேடி வழிமொழிய, அரசும் ஏற்றுக்கொண்டுவிட்டது. அடடா, எவ்வளவு எளிய விளக்கம் ! 120 கோடி மக்களைக் கொண்டிருக்கும் இந்தியாவில், தகுதி, திறமை உடைய வேறு யாரும், வேறு குடும்பங்களில் இல்லாமல் போய்விட்டார்கள் !&lt;br /&gt;&lt;br /&gt;இனிமேல் அந்த வரைவு அறிக்கை, சட்டமுன் வடிவமாக மக்களவையிலும் மேலவையிலும் வைக்கப்படும். ஆயிரம் விவாதங்களுக்குப் பிறகு அவை ஏற்கப்பட்டுச் சட்டமாகலாம். அல்லது, வேறு சில திருத்தங்களுக்காக வழக்கம்போலத் திருப்பி அனுப்பப்படலாம். சட்டமாகவே ஆனாலும், அதில் உள்ள ஓட்டைகளைத் தகுதி, திறமை உள்ள வழக்கறிஞர்கள கண்டுபிடித்துக் கொள்வார்கள். கண்ணாமூச்சி ஆட்டம் தொடர்ந்து நடைபெறும். இதற்குத்தான் இவ்வளவு தடபுடல் !&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சமூகத்தை அப்படியே வைத்துக்கொண்டு, ஊழலை மட்டும் எப்படி ஒழித்து விட முடியும்? ஏற்றத் தாழ்வுகள், ஆதிக்கங்கள், சுரண்டல்கள், உலகமயமாதல் என்னும் பெயரில் பன்னாட்டு நிறுனங்கள் நடத்தும் பகற்கொள்ளைகள் எல்லாம் அப்படியே இருக்குமாம். ஊழலை மட்டும் ஒழித்துவிடுவார்களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தோலிருக்கச் சுளைவிழுங்கும் இந்தக் கனவு நாடகத்தின், கற்பனா வாதத்திற்குத்தான் எவ்வளவு வரவேற்பு!&lt;br /&gt;&lt;br /&gt;-சுப.வீரபாண்டியன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28593647-5861900120550428969?l=kilumathur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kilumathur.blogspot.com/feeds/5861900120550428969/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28593647&amp;postID=5861900120550428969' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28593647/posts/default/5861900120550428969'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28593647/posts/default/5861900120550428969'/><link rel='alternate' type='text/html' href='http://kilumathur.blogspot.com/2011/05/blog-post_23.html' title='ஊழல் ஒழிப்பும் ஒரு திடீர் மகாத்மாவும்!!'/><author><name>மகேந்திரன்.பெ</name><uri>http://www.blogger.com/profile/17863131935297558260</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://i64.photobucket.com/albums/h187/mahendhiranp/mahendhiran.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-Kb3u7zJXZPQ/TdpBNNSheoI/AAAAAAAAAzk/RvE0o69V4Lw/s72-c/anna.bmp' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28593647.post-5544518611964723609</id><published>2011-05-22T22:21:00.001+05:30</published><updated>2011-05-22T22:28:21.012+05:30</updated><title type='text'>பெரியார் எப்படிப்பட்ட அரசைக் காண விரும்பினார்?</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-eSF-wmoHf_I/TdlAk9EL4DI/AAAAAAAAAzM/DMjL7XdqNZg/s1600/periyar_340.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 340px; height: 310px;" src="http://2.bp.blogspot.com/-eSF-wmoHf_I/TdlAk9EL4DI/AAAAAAAAAzM/DMjL7XdqNZg/s400/periyar_340.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5609585814478250034" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பெரியார் ஈ.வெ.ரா., திருச்சியில், 30-09-1945 இல் அறிவித்தபடி, அவர் காணவிரும்பியது வெள்ளையன் ஆட்சியிலிருந்து விடுபட்ட - வட நாட்டான் சுரண்டலி லிருந்து விடுபட்ட ஒரு தனிச் சுதந்தர திராவிட நாடு!&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு முன்பு, 28-10-1942இல், அருப்புக் கோட்டையில் அவர் ஆற்றிய உரையில் பின்வருமாறு குறிப்பிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;“இந்த நாடு நல்ல நிலைமையில் பொருளாதாரம், கல்வி, நாகரிகம் முதலியன ஏற்பட வேண்டுமானால், திராவிட நாடு பிரிந்தே தீர வேண்டும். அப்படி நாட்டைப் பிரிக்க வேண்டுமானால், காங்கிரஸ், அச்சு நாடு(கள்) ஆகிய எதிரிகளின் தொல்லை இல்லாமல் இருக்க வேண்டும். தொல்லை இல்லாமல் இருக்க வேண்டுமானால், இந்தச் சண்டையில் வெள்ளைக் காரனுக்கு எல்லா உதவியும் செய்வதைத் தவிர வேறு வழியில்லை. இவ்விதச் சண்டை நின்ற பின்பு, நம்முடைய நாட்டைக் கொடுக்க வேண்டும் என்று நாம் வெள்ளைக்காரனைக் கேட்க வேண்டும். அவன் நாட்டைப் பிரித்துக் கொடுக்க மறுப்பானாகில் அவனிடமிருந்து நாட்டைப் பெறுவதற்கு இலட்சக் கணக்கான வாலிபர்களைப் பலி கொடுக்க நேர்ந்தாலும் நேரிடும். நாம் எந்தவிதமான யுத்தத்திற்கும் தயாராக இருக்க வேண்டும்.”&lt;br /&gt;&lt;br /&gt;பெரியார் குறிப்பிட்டுள்ளது இரண்டாவது உலகப் போர். அது 1945 ஆகஸ்டு 14ல் முடிவுற்றது. அப்படி உரையாற்றிய அவர், அதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னரே, 30-03-1942இல், பிரிட்டிஷ் அமைச்சர வைத் தூதுக்குழுவின் தலைவர் சர். ஸ்டாஃபோர்டு கிரிப்சை அவரும் மற்றும் மூவரும் சந்தித்தனர். அவர்கள் தமிழ் நாட்டின் பிரதிநிதிகள் மட்டுமே ஆவர் என்பதாலும் - பார்ப்பனர் ஆதிக்கம் இல்லாமலிருக்கச் சென்னை மாகாணத்தைப் பிரித்து பிரிட்டிஷாரின் நேரடி ஆட்சியில் வைக்க வேண்டும் என்று மட்டுமே அவர்கள் கோரியதாலும், பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் என்கிற வகுப்பின் பேரில் அரசியல் உரிமை வழங்கப்பட முடியாது என்று, 1945இல், கிரிப்ஸ் குழு மறுத்ததாலும், உடனடியாகத் தனிச் சுதந்தரத் திராவிட நாடு வேண்டும் என்று 30-09-1945 இல் கோரினார் ஈ.வெ.ரா.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு இக்கட்டான நிலை ஏற்பட்ட பிறகும், சென்னை மாகாணத்தின் மற்ற திராவிட மொழிகளைப் பேசும் பகுதிகளில் திராவிடர் இயக்கம் கால் பதிக்க வில்லை. தமிழ் நாட்டில் உயிரைப் பணையம் வைக்கும் போருக்கு ஏற்ற மறவர் கூட்டமாகத் தமிழர்கள் உருவாக்கப்பட வில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;திராவிடர் இயக்கத்தில், 1942க்குப் பிறகு எண் ணற்ற படித்த இளைஞர்களும் திறமை வாய்ந்த பரப்புரையாளர்களும் எழுத்தாளர்களும் இருந்த போதிலும், ஓர் அரசு அமைப்புக்கு முன்னர் நடை பெற வேண்டிய எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஏற்ற போரிடும் படை எதையும் உருவாக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் கருத்தியல் அளவில் பெரியாரை மூர்க்கமாக எதிர்த்த காங்கிரஸ் தேசிய வாதிகளுக்கும், கம்யூனிஸ்ட்களுக்கும் தக்க மறு மொழி தருவதிலும், தன் நிலையை விளக்குவதிலுமே பெரியார் முனைப்புக் காட்ட வேண்டி நேரிட்டது. அது இன்றியமையாத தாகவும் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளையன் இந்தியாவை விட்டு வெளியேறப் போவதாக 1946 சூனிலேயே அறிவித்தான். வெள்ளை யனிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்ட காங்கிரசுக்கட்சி, 1946 திசம்பர் 9 தொடங்கி, சுதந்தர இந்தியாவுக்கான அரசமைப்புச் சட்டத்தை எழுதத் தொடங்கியது. அதற்குத் தக்க முகம் கொடுத்து 1946 தொடங்கி எதிர்த்திட்ட பெரியார், 21-07-1947 இல், மக்களுக்குத் தெளிவானதொரு வேண்டு கோளை விடுத்தார். அது யாது?&lt;br /&gt;&lt;br /&gt;“இந்துஸ்தான் அரசமைப்புச் சபையில் வகுக்கப் பட்டுவரும் அரசியல் முறை, சென்னை மாகாணத் தைப் பழங்காலப் பஞ்சாயத்து ஆக்கவே தயாராகிறது. கடந்த பல நூற்றாண்டுகளாக நம் மீது ஆட்சி புரிந்து ஆதிக்கப்படுத்தி வந்த சுயநலக் கும்பலைக் கொழுக்க வைக்க, திராவிடஸ்தான், இந்திய யூனியனில் இணைந் திருப்பதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. மிக்க கேவலான முறையில், திராவிடஸ்தான், அக்கும்ப லுக்கு உழைத்துக் கொட்ட வேண்டும். திராவிடஸ்தான் சுதந்தரம் பெறாத வரையில் அதிகாரம் என்பது வெறுங்கற்பனையே” என்று தெளிவுபடக் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அத்துடன், நாட்டுப் பிரிவினைக் கோரிக்கையை ஏளனம் செய்த கம்யூனிஸ்டுக் கட்சியினருக்கு, 1947 சூலையில் பெரியார் தக்க விடை பகர்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;“திராவிடர் கழகம் கேட்கும் சுதந்தரம் கம்யூனிஸ்ட்டுக் கட்சி கேட்கும் சுதந்தரத்தை விட மேலானது”.&lt;br /&gt;&lt;br /&gt;“கம்யூனிஸ்ட்டுக் கட்சி - முதல் வைத்துப் பேரம் செய்யும் முதலாளித்துவம் ஒழிந்த சுதந்தரம் கேட்கிறது. திராவிடர் இயக்கமானது அம்முதலாளிகளுடன், அம் முதலாளிகளை உற்பத்தி செய்வதற்கு மூல காரண மாயுள்ள - அதுவும் முதல் வைத்துக் கூட பேரம் செய்ய யோக்கியதை இல்லாத கல் முதலாளிகளையும் - பிறவி முதலாளிகளாயிருந்து யாதொரு முதலு மின்றி, சோம்பேறித் தனத்தையும், ஏமாற்றுதலையும் ஈடாகவைத்து, மக்களை மாக்களாக்கி வரும் பார்ப்பனி யத்தையும் சேர்த்து ஒழித்துச் சுதந்தரம் கேட்கிறது”. என விளக்கமளித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், “இன்றைய கம்யூனிஸ்ட்டுக் கட்சிக்கோ, கொள்கைக்கோ நாங்கள் விரோதிகளாக இருந்த தில்லை; விரோதிகளாகப் பாவித்ததுமில்லை” என்று தோழமை உணர்வுடன் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;சுதந்தர திராவிட நாட்டில் எப்படிப்பட்ட ஆட்சி இருக்கும் என்பது பற்றித் தெளிவான ஒரு விளக்கத்தை, 06-01-1948இல் செயங்கொண்டம் (அரியலூர் மாவட்டம்) சொற்பொழிவில் அளித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;“... என் உயிருள்ள அளவும் சமூகத்தில் சூத்திரர் களாகவும், பொருளாதாரத்தில் ஏழைகளாகவும், அரசி யலில் அடிமைகளாகவும் வாழ்ந்து வரும் பண்டைச் சிறப்பு வாய்ந்த திராவிட மக்களை மனிதர்களாக ஆக்கும் பணியில் ஈடுபட்டிருக்கத் துணிந்து நிற்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“நாடு தன்னாட்சி பெற்றால், திராவிட நாட்டில் சூத்திரன், பிராமணன் என்கிற வேறுபாடு இருக்காது”&lt;br /&gt;&lt;br /&gt;“திராவிட நாட்டில் ஓரிரண்டு ஆண்டிற்குள் எழுதப் படிக்கத் தெரியாத மக்கள் ஒருவர் கூட இருக்க மாட்டார்கள்”.&lt;br /&gt;&lt;br /&gt;“திராவிட நாட்டிற்குள் அந்நியர் ஒருவர் கூட அநுமதிச் சீட்டின்றி உள்ளே வர அநுமதிக்கப்பட மாட்டாகள்”&lt;br /&gt;&lt;br /&gt;“திராவிட நாட்டில் அந்நியர்களோ அல்லது தனிப்பட்ட முதலாளிகளோ பிறரைச் சுரண்டி வாழ வசதி இருக்காது.”&lt;br /&gt;&lt;br /&gt;“எல்லாவற்றிற்கும் மேலாக திராவிட நாட்டு ஆட்சி வரி இல்லாமலே ஆட்சி புரிந்து வரும். போக்குவரத்து இலாகாவையும், தந்தி தபால் இலாகாவையும் அரசாங்கமே ஏற்று நடத்தி வருவது போல, மற்ற எல்லா வியாபாரங்களையும் திராவிட நாட்டு அரசாங்கமே ஏற்று நடத்தும்”&lt;br /&gt;&lt;br /&gt;“திராவிட நாட்டில் எந்த விவசாயிக்கும் அய்ந்து ஏக்கருக்கு மேற்பட்ட நஞ்சை புஞ்சை இருக்காது. அவனுடைய விளைபொருளை அவனுடைய கொள்முதலை அறிந்து ஓரளவு இலாபத்தைக் கூட்டிக்கொடுத்து, அரசாங்கமே வாங்கிக் கொள்ளும். அவனுக்கு நிலவரி இருக் காது. அவ்விளைபொருள்களைத் திருப்பி மக்களுக்கு விற்கும் போது ஓரளவுக்கு இலாபம் வைத்து, அரசாங்கமே தனது சொந்தப் பண்ட சாலைகள் மூலம் விற்பனை செய்யும்”என மாதிரி சமதர்ம ஆட்சித் திட்டம் ஒன்றையே முன்வைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;20-01-1948இல் ஆம்பூரில் பேசிய பெரியார், “லேவா தேவி முறை (தனியார் வட்டிக்குக் கடன் தரும் முறை) சட்டத்தின் மூலம் தடை செய்யப்பட வேண்டும். அரசாங்கமே லேவாதேவி செய்து வருமானால் கடன் வாங்குவதால் உள்ள வேதனை கள் பொது மக்களுக்கு இருக்காது.”&lt;br /&gt;&lt;br /&gt;“வயது வந்த எல்லோருக்கும் வாக்குரிமை வழங் கப்படும்” எனக் குறிப்பிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;மதம், சமயம், இனம் பற்றிய குழப்பங்களுக்கும், ஏற்கெனவேயே 25-07-1947இல் பறங்கிப்பேட்டை சொற்பொழிவில், பின் வருமாறு தெளிவுரை தந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;“திராவிட ஸ்தானில் முஸ்லீம்களின் நிலை என்ன என்று கேட்கப்படுகிறது. இனி இக்கேள்விக்கே இட மில்லை. திராவிடர் ஆட்சியில் முஸ்லீம் என்றோ, கிறித்துவர் என்றோ ஆதித்திராவிடர் என்றோ பிரிவி னைகள் ஒரு நாளும் இருக்க முடியாது. எல்லோரும் ஒரே இனமாக - திராவிடர்களாக வாழ்வோம். சைவன், வைணவன், பௌத்தன் என்ற பிரிவுகள் போல, இஸ்லாமியத் தத்துவத்தைப் போற்றும் முறையில் அவர்களுக்கும் உரிமை தரப்படுமே அன்றிப், பிரிவினைக்கு இடமே இருக்க முடியாது. அதேபோன்று, ‘ஆதித்திராவிடர்’ என்ற இழிவுப்பட்டத்தையும் ஒழித்துத் திராவிடனாக வாழ, சட்டப்படிச் செய்வோம்” எனத் தெளிவுபடுத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;தந்தை பெரியாரால் மேலே சொல்லப்பட்ட வை தான், அவர் காணவிரும்பிய ஓர் அரசின் இலக்கணம்; “அரசு” என்பது பற்றிய அவர்தம் விளக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;அது “தனிச் சுதந்தர அரசா”? “தன்னாட்சி அல்லது தன்னுரிமை அரசா”? என்பதை இன்றைய உலகச் சூழல் இந்தியச் சூழல் மற்றும் தமிழராகிய நாம் பெற்றுள்ள வலிமை - இந்திய ஏகாதிபத்திய அரசு பெற்றுள்ள வலிமை; இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உழைக்கும் மக்களின் விடுதலைக்கும் - மானிட சமத்துவ உரிமைக்கும் எதிரான கேடு கெட்ட கூறுகள் - இவற்றை உடைத்து நொறுக்கத் தமிழகத் தமிழர்கள் - குறிப்பாக இளைஞர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் இவற்றைப் பற்றிச் சிந்திக்க தமிழர்கள் ஒன்று கூடிச் சிந்திக்க ஆயத்தமாவோம், தந்தை பெரியார் காணவிரும்பிய வடிவிலான சமதர்ம - தன்னாட்சி அரசைத் தமிழகத்திலும் மற்ற அடிமைப்பட்ட மொழி வழி மாநிலங்களிலும் அமைக்கப்பட வழி காண்போம் வாருங்கள்! வாருங்கள்! இது முதலாவது பணி.&lt;br /&gt;&lt;br /&gt;- வே. ஆனைமுத்து&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28593647-5544518611964723609?l=kilumathur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kilumathur.blogspot.com/feeds/5544518611964723609/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28593647&amp;postID=5544518611964723609' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28593647/posts/default/5544518611964723609'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28593647/posts/default/5544518611964723609'/><link rel='alternate' type='text/html' href='http://kilumathur.blogspot.com/2011/05/blog-post.html' title='பெரியார் எப்படிப்பட்ட அரசைக் காண விரும்பினார்?'/><author><name>மகேந்திரன்.பெ</name><uri>http://www.blogger.com/profile/17863131935297558260</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://i64.photobucket.com/albums/h187/mahendhiranp/mahendhiran.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-eSF-wmoHf_I/TdlAk9EL4DI/AAAAAAAAAzM/DMjL7XdqNZg/s72-c/periyar_340.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28593647.post-6252803449397932099</id><published>2010-09-04T21:11:00.000+05:30</published><updated>2010-09-04T21:14:19.992+05:30</updated><title type='text'>கிழவனின் கைபிடித்து பயணிக்க வாருங்கள் தோழர்களே!</title><content type='html'>சாதி, மதம், மூட நம்பிக்கைகள், சடங்குகள், ஆணாதிக்கம், பொருளாதாரச் சுரண்டல் என அனைத்து வித இழிவுகளிலும் புதையுண்டு கிடந்த சமூகத்தை அவை அனைத்திலிருந்தும் மீட்டெடுத்து தன்மதிப்பு, சகோதரத்துவம், சமத்துவமுடைய ஒரு சமூகமாக மாற்ற தன் வாழ்நாள் முழுவதும் அயராது உழைத்த ஒரு மனிதர் பெரியார். தனது 95 ஆண்டு கால வாழ்க்கையில் ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுப் பணியில் ஈடுபட்டிருந்தவர் அவர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈ.வெ.ராமசாமி நாயக்கராக பொது வாழ்வில் நுழைந்து, அனைவராலும் வேறுபாடின்றி 'பெரியார்' என்று ஏற்றுக் கொள்ளப்படும் நிலைக்கு அவர் உயர்ந்தது ஓரிரவில் நடந்த மாயம் அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;ஆதிக்க சாதியை சேர்ந்ததாக அறியப்பட்ட ஒரு குடும்பத்தில் ஆணாகப் பிறந்து தன் நேர்மையான பார்வையாலும் சுயசிந்தனையாலும் சாதி ஆதிக்கத்திற்கும் ஆணாதிக்கத்திற்கும் எதிராக இறுதி வரை அவர் உறுதியாக நின்று போராடினார் எனில் அவர் கடந்து வந்த பாதை நிச்சயம் அத்தனை எளிமையானதாக இருந்திருக்க முடியாது. இன்றைய சமூகத்தில் எளிதாக உள்வாங்கப்படுகிற எத்தனையோ முற்போக்கான செயல்களுக்கு வித்திட்டவர் அவரே. இன்றளவிலும் சமூகத்தால் சகித்துக் கொள்ள முடியாத முற்போக்கான சிந்தனைகளை ஏறத்தாழ 80 ஆண்டுகளுக்கு முன்பே பழமையில் ஊறிப் போன அன்றைய சமூகத்தின் முன் துணிச்சலுடன் வைத்தவரும் அவரே.&lt;br /&gt;&lt;br /&gt;பெரியார் ஒரு சுய சிந்தனையாளர் மட்டுமல்ல; இன்று இச்சமூகம் ஓரளவேனும் சுயசிந்தனையும் சுயமரியாதையும் உள்ள ஒரு சமூகமாக வளர்ச்சிப் பெற்றிருக்கிறது எனில் அதற்கு அவரது அயராத உழைப்பே முக்கிய காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;தனது சிந்தனைகளை அவர் பகிரங்கப்படுத்தியதும், பிரச்சாரம் செய்ததும் அதிலிருந்து பொருள் ஈட்டவோ, புகழ் பெறவோ அல்ல; தேர்தலில் வாக்குகள் பெறவும் அல்ல. மாறாக அவரது சிந்தனைகள் அன்றைய சமூகப் போக்கிற்கு நேர் எதிராக இருந்த காரணத்தால் எதிர்ப்புகளையும் இழப்புகளையுமே அவர் சந்தித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரியாரின் இந்த நெடும்பயணம் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட ஒவ்வொரு மனிதனுக்கு வழிகாட்டியாக இருக்கக் கூடியது. அந்தப் பயணத்தின் சில பக்கங்களை, மிக முக்கியமான பக்கங்களை, பெரியாரின் சிந்தனைப் போக்கை, பெரியாரின் சொற்களிலேயே அறியும் வாய்ப்பாகவே பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டிருக்கும் குடி அரசு தொகுப்பு விளங்குகிறது. இதுவும் பெரியாரின் வாழ்க்கை வரலாறுதான். ஆனால் சம்பவ‌ங்களால் கோர்க்கப்பட்ட வரலாறு அல்ல; கருத்துக்களால் கோர்க்கப்பட்ட வரலாறு.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வரலாற்றைத் தொகுத்து 1925 முதல் 1938 வரையிலான குடி அரசு இதழ்களை 27 தொகுதிகளாக வெளியிட்டு ஒரு பெரும் பணியை பெரியார் திராவிடர் கழகம் செவ்வனே செய்து முடித்து விட்டது. அதை மக்களிடம் கொண்டு செல்லும் பணி பெரியார் திராவிடர் கழகத்திற்கு மட்டுமே உரியதல்ல. அந்தப் பெரும் பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது. ஏனெனில் பெரியார் மக்களுக்கு உரியவரே அன்றி எந்த ஒரு தனி கட்சிக்கு மட்டும் உரியவரல்ல. இதனை வலியுறுத்தியே பெரியார் திராவிடர் கழகம் பெரும் சட்டப் போராட்டத்தை நடத்தி இந்நூல்களை வெளிக் கொணர்ந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;வெறும் நோக்கு நூலாகவோ, அலங்காரமாக அடுக்கி வைக்கவோ அல்லது இதன் மூலம் பணம் சம்பாதிக்கவோ இந்நூல்கள் வெளியிடப்படவில்லை. இன்றைய சமூகத்தில் மீண்டும் தலைதூக்கியுள்ள சாதி, மத இழிவுகளை ஒழிக்க மீண்டும் மீண்டும் பெரியார் தேவைப்படுகிறார் என்ற பேருண்மையை உணர்ந்து இன்றைய தலைமுறையினருக்கு அவரை, அவரது கருத்துக்களை கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவே இந்நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன; இலவசமாக இணையத்தில் தரப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;10,000 பக்கங்களுக்கு மேலாக இருக்கக் கூடிய குடிஅரசு தொகுப்புகள் முழுவதையும் படிக்க பலருக்கு மலைப்பாகத் தோன்றக் கூடும். அந்த பணியை எளிதாக்கவே கீற்று 'பெரியாருடன் ஒரு பயணம்' நிகழ்விற்கு ஏற்பாடு செய்துள்ளது. ஐந்து தோழர்கள் நம்மை பெரியாருடன் பயணிக்க வைக்க இருக்கின்றனர். சாதி, மதம், பாலினம், வறுமை என அனைத்துவித ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகப் போராடிய பெரியாருடனான பயணத்தில் நம்மை அழைத்துச் செல்லக் கூடியவர்களாக அந்த ஒடுக்குமுறைகளுக்கு ஆளான சமூகத்தின் தோழர்களே வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தன்னைச் சுற்றியுள்ள மனிதர்கள் அனைவரையும் குழந்தை போல நேசித்த அந்த கிழவனின் கைபிடித்து பயணிக்க வாருங்கள் தோழர்களே!&lt;br /&gt;&lt;br /&gt;பெரியாருடன் ஒரு பயணம்&lt;br /&gt;(1925 -‍ 1938 குடிஅரசு தொகுப்புகளின் வழியே)&lt;br /&gt;&lt;br /&gt;நாள்: 18.09.2010, சனிக்கிழமை மாலை 4 மணி&lt;br /&gt;இடம்: தேவநேயப் பாவாணர் நூலக அரங்கு, அண்ணா சாலை, சென்னை&lt;br /&gt;&lt;br /&gt;வரவேற்புரை: பாஸ்கர், கீற்று ஆசிரியர் குழு&lt;br /&gt;&lt;br /&gt;குடிஅரசு இதழ் தொகுப்பு:&lt;br /&gt;&lt;br /&gt;1925 -‍ 1926: ச.தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்&lt;br /&gt;1927 ‍- 1929: எழுத்தாளர் ஓவியா&lt;br /&gt;1930 - 1932: எழுத்தாளர் அழகிய பெரியவன்&lt;br /&gt;1933 - 1935: எழுத்தாளர் பூங்குழலி&lt;br /&gt;1936 - 1938: பேராசிரியர் ஹாஜா கனி, பொதுச் செயலாளர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்&lt;br /&gt;&lt;br /&gt;ரிவோல்ட் ஆங்கில இதழ் தொகுப்பு: விடுதலை இராசேந்திரன், பொதுச் செயலாளர், பெரியார் திராவிடர் கழகம்&lt;br /&gt;&lt;br /&gt;தொகுப்புரை: கொளத்தூர் மணி, தலைவர், பெரியார் திராவிடர் கழகம்&lt;br /&gt;&lt;br /&gt;நன்றியுரை: பிரபாகரன், கீற்று ஆசிரியர் குழு&lt;br /&gt;&lt;br /&gt; அனைவரும் வருக!!&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்புக்கு: பாஸ்கர் - 9884499357&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28593647-6252803449397932099?l=kilumathur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kilumathur.blogspot.com/feeds/6252803449397932099/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28593647&amp;postID=6252803449397932099' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28593647/posts/default/6252803449397932099'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28593647/posts/default/6252803449397932099'/><link rel='alternate' type='text/html' href='http://kilumathur.blogspot.com/2010/09/blog-post.html' title='கிழவனின் கைபிடித்து பயணிக்க வாருங்கள் தோழர்களே!'/><author><name>மகேந்திரன்.பெ</name><uri>http://www.blogger.com/profile/17863131935297558260</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://i64.photobucket.com/albums/h187/mahendhiranp/mahendhiran.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28593647.post-5137793919593924657</id><published>2010-08-22T11:15:00.001+05:30</published><updated>2010-08-22T11:15:57.406+05:30</updated><title type='text'>முழு அப்பம் கேட்கும் பார்ப்பன குரங்குகள்</title><content type='html'>AIIMS, IIT, IIM ல் எல்லாம் எப்படி இடஒதுக்கீடு அளிக்க முடியும்’ என்று சமீபத்தில் பத்திரிகைகளை கரைத்து குடிக்கும் சுபாவம் உடைய ஒருவர் என்னிடத்தில் விவாதித்துக் கொண்டிருந்தார். விவாதம் நடக்கும் பொழுது தான் புலப்பட்டது. அவருடைய புரிதலில், அந்த உயர்கல்வி நிறுவனங்கள் எல்லாம் பிராமனர் சங்கத்தால் நடத்தப்படுபவை என அவர் அதுகாறும் நம்பி வந்தது. மத்திய அரசால் நடத்தப்படும் உயர் கல்வி நிறுவனங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27% இட ஒதுக்கீடு என்ற மண்டல் கமிஷனின் பரிந்துரைகளை அமுல்படுத்தும் அறிவிப்பு மனிதவள மேம்பாட்டு துறையிலிருந்து வந்தது தான் நாடு முழுக்க தீப்பற்றியது போலான தோற்றத்திற்கும், தில்லியிலுள்ள அஐஐஙந ல் மட்டும் தீ பிடித்ததற்கும் காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;அர்ஜுன் சிங் தனது அறிக்கையை வெளியிட்டு இரண்டு வாரங்கள் வரை இது ஏதோ அவரது சொந்த பிரச்சனை அல்லது வீட்டு விவகாரம் போலத்தான் அரசியலாகவும், மீடியாவிலும் கையாளப்பட்டது. இந்த தேசத்தின் பூர்வகுடிகளான கோடானு கோடி ஜனங்களின் அடிமை வரலாறு தொடர்புடைய பிரச்சனையாக இதை மீடியாக்கள் மாற்றத் தவறியது. அதை விடுத்து ஆங்கில சேனல்கள் சர்ச்சையை தலைகீழாக மாற்ற முயற்சி செய்தது. நுனி நாக்கில் ஆங்கிலம் ‘உள்ளவா‘ தான் பெரும்பகுதி ஆங்கில சேனல்களில் பணிபுரிவதால் அவர்கள் அஐஐஙந டாக்டர்களின் போராட்டங்களை சுதந்திர போராட்டத்தை விட ஒரு படி மேலாக சித்தரிக்க ஒவ்வொரு நிமிடமும் பாடு பட்டார்கள். பார்ப்பன மனசாட்சி துடிதுடித்தது. இந்த துடிப்புகளுக்கு பின் உள்ள சுயநலத்தையும், இடஒதுக்கீட்டால் ஏற்படும் தேச பொது நலத்தையும் ஒரு பார்வை பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2000 ஆண்டுகளுக்கு மேலாக பார்ப்பனியத்தின் நிழலில், அடிமை சமுதாயமாகவே இந்திய சமூகம் இருந்து வருகிறது. ஆங்கிலேயர்களுடன் 400 ஆண்டுகால கூடாநட்பையும் நாம் வரலாறு நெடுகிலும் காணலாம். இந்த தேசத்தின் பூர்வகுடிகளை வந்தேறிகள் அடிமையாய் வைக்க இன்றளவும் துடித்துக் கொண்டிருப்பதை உணர்த்துகிறது இங்கு நடக்கும் ஒவ்வொரு செயலும். சுதந்திர இந்தியாவில் மூச்சு திணறாமல் கொஞ்சம் சுவாசித்துக் கொள்ள அம்பேத்கரின் அரசியல் சாசனம் வழிவகை செய்தது. அரசு வேலைவாய்ப்புகளில், கல்வி நிறுவனங்களில் என யாவற்றிலும் இதுவரை வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகத்தை வெளிக் கொணர்ந்து அவர்கள் உலகை ஸ்பரிசிக்கும் முயற்சிகள் துவங்கின. அதிகார வர்க்கத்தின் சகல தளங்களிலும இயங்கும் பார்ப்பனியம் முனைப்புடன் பல முயற்சிகளை மழுங்கடித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1955ல் நாடாளுமன்ற உறுப்பினர் கலேகர் (Kalekar) தலைமையிலான குழுவை மத்திய அரசாங்கம் நியமிக்கிறது. தீவிரமான ஆய்வுகளை மேற்கொண்டபிறகு அந்த அறிக்கை 70% இட ஒதுக்கீட்டை பரிந்துரை செய்கிறது. முழி பிதுங்கிய மத்திய அரசாங்கம் அந்த அறிக்கையை கண்டு கொள்ளவில்லை. உச்ச நீதிமன்றத்துக்குள் இயங்கும் பார்ப்பனியம் எந்த ஒதுக்கீடாக இருந்தாலும் அது மொத்தத்தில் 50%க்குள்தான் இருக்க வேண்டும் என தனது கடிவாளத்தைக் கட்டுகிறது. தொடர் போராட்டங்களின் விளைவாக 1978ல் பி.பி.மண்டல் (B.P.MANDAL) தலைமையில் குழு அமைக்கப்படுகிறது. 49.5% இட ஒதுக்கீட்டை சிபாரிசு செய்யும் தனது அறிக்கையை அந்த குழு 1980 டிசம்பரில் சமர்ப்பிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பத்தாண்டுகளுக்குப் பிறகு 1990ல் அந்த அறிக்கையை தூசி தட்டி எடுத்தார் வி.பி.சிங். மண்டல் கமிஷன் என்ற சொல் ஊடாக புழக்கத்திற்கு அப்பொழுது தான் வந்தது. மிகப் பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தது. காங்கிரஸ் கூட அதை எதிர்த்து பி.ஜே.பியுடன் களமிறங்கியது. இந்த இரு கட்சிகளின் ஆதரவு இல்லையெனில், போராட்டம் எதுவும் அன்று நடைபெற்றிருக்க வாய்ப்பு இல்லை. தங்களின் சுயநல அரசியல் பொய்களுக்காகவே, இதை அன்று பூதாகரமாக மாற்றினார்கள். (இன்று நிலைமை மாறி காங்கிரஸ் - பி.ஜே.பி. இடஒதுக்கீடு வேண்டும் என்கிறார்கள்.) பி.ஜே.பி இந்திய அரசியலில் வேரிட்டது இரண்டு தளங்களில் - மண்டல் அறிக்கை மற்றும் பாபர் மசூதி விவகாரம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மண்டல் அறிக்கை இடஒதுக்கீட்டை மட்டும் பரிந்துரைக்கவில்லை. அது “பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உகந்த கல்வி சூழல் இன்றைய அரசு கல்வி நிறுவனங்களில் இல்லை, அதனால் அவர்களுக்கான பிரத்யேக தொழில் கல்வி மையங்கள், மேற்படிப்பிற்கான சிறப்பு வகுப்புகள், என புதிய கல்வி மற்றும் கலாச்சார சூழலை உருவாக்கவும் உத்தரவிட்டது. நடப்பில் உள்ள கல்வி மையங்களை சீர்திருத்தாமல் அங்கு பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரை அனுமதித்தால் அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படும் வாய்ப்பு உள்ளது” என்று மிக நுணுக்கமான அணுகுமுறைகளையும் கொண்டிருந்தது அந்த அறிக்கை.&lt;br /&gt;மண்டல் பரிந்துரையை மிஞ்சுகிற வகையிலான 69% இட ஒதுக்கீடு தமிழகத்தில் மட்டுமே அமலில் உள்ளது. தென் இந்திய மாநிலங்களில் ஏறக்குறைய 49 - 50% இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தென் இந்திய சமூகம் மனம் உகந்து இந்த பரிந்துரைகளை அமல்படுத்தியது. நாராயண குரு, பெரியார், அயோத்திதாசர் வாழ்ந்த மண்ணுக்கான சான்றுகளே. இவை மத்திய அரசால் நடத்தப்படும் உயர் கல்வி நிறுவனங்களில் ஏற்கெனவே பட்டியலிடப்பட்ட சாதியினர் / பழங்குடியினருக்கான 22.5% இட ஒதுக்கீடு அமலில் உள்ளது. இப்பொழுது அதே நிறுவனங்களில் 27% ஒதுக்கீட்டை மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு வழங்க வேண்டும் என்பது மண்டல் அறிக்கையின் மற்றொரு பரிந்துரை. 22.5% இடஒதுக்கீட்டால் அந்த நிறுவனங்களின் தரம் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை என்பதை வரலாறு எடுத்துரைக்கிறது. ஆனால் 27% ஒதுக்கீட்டால் அந்த நிறுவனங்களின் தரம் கெட்டு விடுமாம். பொது பிரிவில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவிடும் என்பது தான் அவர்களின் மறைமுகக் கவலையே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உயர்கல்வி நிறுவனங்களுக்கான நுழைவு தேர்வு வகுப்புகளை FIIT, JEE நடத்துகிறது. வருடாந்திர கட்டணம் ரூபாய் நாற்பதாயிரம். இந்த தொகையை கொடுத்து மேட்டுக் குடியினர், பொருளாதார வசதி படைத்தோர் தான் சேர இயலும். இங்கு படிப்பவர்கள் தான் வருடந்தோறும் 30% இடங்களை கைப்பற்றுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களை போலவே அனைவரும் நுழைவு தேர்வை எழுதுகிறார்கள். மதிப்பெண்கள் பெறுகிறார்கள். எல்லா நடைமுறைகளும் பின்பற்றித்தான் மற்ற வகுப்பினர் அனுமதிக்கப்படுகிறார்கள். நம் பத்திரிக்கைகள் எழுதுவதையும் அந்த தில்லி மருத்துவர்கள் பேசுவதையும் பார்த்தால் ஏதோ மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள். தங்கள் ஜாதி சான்றுகளுடன் வந்தால் அனுமதிக்கப் படுவார்கள் என்பது போல் உள்ளது. உதாரணத்திற்கு, 3000 மாணவர்களை இந்த ஆண்டு இந்தியா முழுவதிலுமுள்ள IIT களில் அனுமதிக்கலாம் என்றால், அதில் 27% - 810 மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் அனுமதிக்கப் படுவார்கள். 810 இடங்களை கைப்பற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இரண்டு லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். அவர்களின் கூற்றுப்படி இந்த இரண்டு லட்சம் மாணவர்களுமே முட்டாள்கள் இவர்கள் அனுமதிக்கப்பட்டால் தரம் கெட்டுவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தனியார் மருத்துவ கல்லூரிகள், மற்றும் பல அரசு மருத்துவ கல்லூரிகள் மாணவர்களை பெரும் தொகை பெற்று கொண்டு சேர்த்துக் கொள்வதை நாம் நன்கு அறிவோம். கடந்த ஆண்டு கூட என்.டி.டி.வி ரகசிய காமிராவுடன் இந்த பேரங்களை அம்பலப்படுத்தியது. பட்ட மேற்படிப்பு அதை விட தறிகெட்டு கிடக்கிறது. M.Ch -80 லட்சம், M.S -60 லட்சம், M.D. -45 லட்சம் என தேசமெங்கும் கூவி விற்கப்படுகிற மருத்துவ படிப்புகளால் தரம் கெட்டு விடவில்லையாம். இதை எல்லாம் அவர்கள் கண்டுகொள்ள மாட்டார்களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவத்தை படித்தவுடன் இவர்களில் 99% பேர் தங்களின் சுயநல கொள்ளைக்கு மட்டுமே தொழிலை அர்ப்பணிக்கிறார்கள். மருத்துவ தொழிலின் எல்லா அறங்களையும், இந்துமகா சமுத்திரத்தில் கரைத்தாகி விட்டது. அரசாங்கம் ஆயிரம் கோடிகளை இவர்களுக்காக செலவிடும் பட்சத்தில், சில புதிய நடைமுறைகளை அமுல்படுத்தலாம். பயிற்சிக்கால மருத்துவர்களின் காலத்தை மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம். அரசு தலைமை மருத்துவ மனைகளில் ஓராண்டும், அடுத்த இரண்டு ஆண்டுகள் மலைவாழ் மக்களிடம், மருத்துவம் இன்னும் எட்டிப்பார்க்காத கிராமப் புறங்களில் சிகிச்சையளிப்பதை நடைமுறையாக்கலாம். இந்த மூன்று ஆண்டுகளுக்குப் பின்பு தான் பட்டங்கள் வழங்க வேண்டும். கிராமப்புறங்களில் பணியாற்றும் காலத்தில், புறக்கணிக்கப்பட்ட மக்களின் மூச்சுக்காற்று மருத்துவர்களின் கொள்ளை வெறிகளைத் தணிக்கக் கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;AIIMS உள்பட அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் அரசு பணியிலிருந்து கொண்டே விதிகளுக்கு மாறாக தனியார் மருத்துவமனைகளை நடத்தி வருகிறார்கள். அவர்களின் சொந்த மருத்துவமனைகளுக்கு நோயாளிகளை அரசு மருத்துவமனைகளிலிருந்து தான் கடத்தி செல்கிறார்கள். அந்த தரகர் வேலைக்கு அவர்கள் பயன்படுத்துவது இந்த பயிற்சி மருத்துவர்களையே. பயிற்சி காலத்திலேயே பணம் சம்பாதிக்கும் வழி. மொத்த நாட்டின் மருத்துவத்துறையை சீரழித்துவிட்டு, தரம், தரம் என யாரை ஏமாற்றுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;21 சதவிகித இந்தியர்கள் தங்கள் உடல் உபாதைகளுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதில்லை. மருத்துவச் செலவுகள் கிராமப்புறங்கள் கடன் வலையில் சிக்குவதற்கான மிக முக்கிய காரணம். தனியார் மருத்துவமனைகள் கந்துவட்டிக் கடைகள் போல் மாறிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;IIT, IIM, AIIM, படித்து வெளியேறுகிற மாணவர்களில் 70% பேர் வெளிநாடுகளுக்கு சென்று விடுகிறார்கள். இந்த உண்மையை மறைக்கும் விதமாக பலர் கட்டுரைகளை தீட்டுகிறார்கள். கோர்வையுடன் பல பச்சை பொய்கள் IIT படித்து விட்டு மாதம் பத்தாயிரம் சம்பளத்திற்கு அம்பிகள் இந்தியா முன்னேற வேண்டும் என்கிற நோக்கத்துடன் மென்பொருள் குமாஸ்தாக்களாக பணிபுரிகிறார்களாம். அரசு செலவில் படித்து வெளிநாடு சென்றுவிடுகிறார்கள் என புலம்பிக் கொண்டேயிருப்பதில் பிரயோசனம் இல்லை. இந்த மாணவர்கள் தங்கள் படிப்பை முடிக்கும் தருவாயில் இவர்களது கடவுசீட்டுகள் (பாஸ்போர்ட்) 10 ஆண்டுகளுக்கு முடக்கப்பட வேண்டும். MLA, MP, அமைச்சர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள் (அதில் வரம்புகளை நியமித்துக் கொள்ளலாம்) என இந்த மேட்டுக் குடியினரை மொத்த ஒதுக்கீட்டிலிருந்து விலக்க வேண்டும். வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான (NRI) ஒதுக்கீடு முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். தனியார் தொழிற்சாலைகளின் இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் கடுமையான சட்டங்கள் பிறப்பிக்கப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;ஏற்கெனவே இந்த சலுகையை அனுபவித்த பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினர் கூட போராட்டங்களில் களமிறங்காமல் வேடிக்கை பார்ப்பது அபத்தமானது. இது ஒரு வகையான மேனிலையாக்கம். நூற்றாண்டுகளாக அடிமைப்படுத்தப்பட்ட ஜனத்திரளை கல்வி வாய்ப்பளித்து, அரசு உத்யோகங்களில் அமர்த்தினால் தான் அவர்களுக்கு இது தங்கள் சொந்த நாடு, தங்களுக்கு இந்த நாட்டில் உரிமை இருக்கிறது என்கிற உணர்வு பிறக்கும் என திட்டமிடப்பட்டது தான் இந்த ஒதுக்கீட்டின் நோக்கம். 20 ஆண்டுகளுக்கு இந்த ஒதுக்கீடு அமலில் இருக்க வேண்டும் என்பது மண்டல் பரிந்துரை. பின்பு குழு அமைக்கப்பட்டு அவர்களின் வாழ்க்கை தரம், சமூகத்தில் அவர்களின் பங்களிப்பு பற்றிய ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டு, அந்த முடிவுகளின் அடிப்படையில் தேவைப்பட்டால் இந்த இட ஒதுக்கீடு மீண்டும் நீட்டிக்கப்பட வேண்டும் எனத் தெளிவாக எடுத்துரைக்கிறது மண்டல் பரிந்துரை. நூறு சதவிகித எழுத்தறிவை (அரசு பதிவேடுகளில் அல்ல) நாட்டு மக்கள் மெய்யாக பெற வேண்டும், இடஒதுக்கீடு மட்டுமே சமூக ஏற்றத்தாழ்வுகளை நீக்க உதவும் கருவி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கல்வி நிறுவனங்களில் வெவ்வேறு நிலப்பரப்புகளைச் சார்ந்த, சாதிகளைச் சார்ந்த, பொருளாதார நிலை சார்ந்த, மாணவர்கள், ஆசிரியர்கள் ஒன்றிணையும் பொழுது தான் அங்கே கற்கும் சூழல் உருவாகிறது. அங்குதான் மிகப் பெரும் அனுபவப் பகிர்வு பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் நோக்கி, தீர்வுகள் நோக்கி பயணிக்கிறதென உலகளவிலான கல்வி ஆய்வாளர்கள் தெரிவித்துவருகிறார்கள். அதுபோலவே இங்கும் பன்முகத் தன்மை வாய்ந்த கல்வி நிறுவனங்கள் உருவாக இடஒதுக்கீடு தவிர்க்க முடியாத கருவியாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பொதுப்பிரிவில் உள்ள இடங்களை குறைக்காமல், அந்த கல்லூரிகளின் மொத்த இருக்கைகளை கூட்டுகிறதாம் மத்திய அரசு. போகிற போக்கை பார்த்தால் IIT, IIMல் இடஒதுக்கீட்டில் வரும் மாணவர்களுக்கு தனி வகுப்பறைகள் அமைக்க கூட அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். (பல உயர்கல்வி நிறுவனங்களில் தம்பி நல்ல படிக்கனும் டா, என பெருந்தன்மையாக கூறி சபாஷ் என முதுகில் தட்டி பூணூல் உள்ளதா என்பதை சோதிக்கும் பேராசிரியர்கள் இன்றளவும் சுதந்திரமாக உலவுகிறார்கள்).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தகுதி என்றால் என்ன. மனப்பாடம் செய்து அப்படியே வாந்தி எடுக்கும் கலையைத்தான் தகுதி என்கிறது இன்றைய தேர்வு முறை. அறிவியல் பூர்வமான அணுகுமுறைகள் வளர்ந்து வரும் 21ஆம் நூற்றாண்டில் இப்படிப்பட்ட காலாவதியான தேர்வு முறைகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும். சொந்தமாக சிந்திக்கும் திறன் வளர்க்கப்பட வேண்டும். முடிவெடுக்கும் திறனின் அடிப்படையில் சோதனைகள் நடத்தப்பட வேண்டும். நடைமுறையில் உள்ளது கல்வி கற்பதல்ல பயிற்சி அளிப்பதே.&lt;br /&gt;அமெரிக்காவில் வாழும் இந்தியர்களின் ஜனத்தொகை ஒரு கோடியைத் தாண்டுகிறது. இதில் பிராமணர்கள் 70%. குடியுரிமை பெற்று அமெரிக்காவைத் தங்கள் தாய்நாடாக பாவித்தவர்களுக்கும், அடுத்து பாவிக்கவிருக்கும் இந்த அடிமைக் கூட்டத்திற்கு இந்திய அரசாங்கத்தின் வரிப்பணம் ஏன் விரையம் செய்யப்பட வேண்டும். சென்னை மவுண்ட்ரோடில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் விசாவுக்காக நாள் கணக்கில் இந்த கூட்டம் காத்துக் கிடக்கிறது. இவர்கள் அமெரிக்கா சென்ற பிறகு அங்கும் இதுபோலவே அமெரிக்க குடியுரிமை பெற காத்துக் கிடக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தாழ்த்தப்பட்டவர்கள் நுழைந்தால் கோவில் தீட்டு பட்டுவிடும் என்பதற்கும் IIT, IIM ல் பிற்படுத்தப்பட்டவர்கள் நுழைந்தால் தரம் கெட்டுவிடும் என்பதற்கு எவ்வகையிலும் வேறுபாடு அல்ல. அடுத்து அர்ச்சகர்களாக அனைத்து சாதியினரும் வரலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்துள்ளது. அது தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. சென்னை IITல் மொத்த பேராசிரியர்கள் 400 அதில் பிராமணர்கள் 282 பேர், இதை எப்பொழுது மாற்றப் போகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1830கள் வரை பிரிட்டிஷ் நிர்வாகத்தில் மராட்டிய (தஞ்சாவூர்) பிராமணர்களின் ஆதிக்கத்தின் கீழ் தான் இருந்தது. அந்த காலத்தில் தான் சில சீர்திருத்தங்கள் அமுலாயின, அதில் மிகவும் முக்கியமானது வட்டார மொழிகளில் எல்லா அரசாங்க தொடர்புகளும் இருக்க வேண்டும் என்பது. இதனால் நவாபுகள் முதல் எல்லா உயர் பதவிகளில் உள்ளவர்கள் வரை அனைவரும் வட்டார மொழிகளை கற்க துவங்கினார்கள். அதன் தொடர்ச்சிதான் இப்பொழுதும் மாவட்ட ஆட்சியர்கள் வெளி மாநிலத்தவராக இருந்தால், அவர்கள் தமிழ் கற்கத் துவங்கி, தக்க புக்க என தொகைக்காட்சிகளுக்கு பேட்டி அளிப்பது, சமயத்தில் சன் டிவி தமிழையும் (டமில்) விஞ்சி விடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;மிஷனரிகள் பள்ளிகள் நடத்தி வந்தார்கள், 1838 முதல் அரசாங்கப் பள்ளிக் கூடம் துவக்கப்பட்டது. 1838ல் ரேவ். ஆண்டர்சன், கிறித்துவ மேல்நிலைப்பள்ளியை துவக்கினார். அதில் சில தலித் மாணவர்களை அவர் அனுமதித்தார். அனுமதித்த அடுத்த நாள் அந்த பள்ளியில் படித்த பிராமண மற்றும் வெள்ளாள மாணவர்களை ஒட்டு மொத்தமாக அவர்களின் பெற்றோர் விலக்கிக் கொண்டார்கள். உடன் அவசர அவசரமாக நீதிமன்றத்தில் நிலுவையிலிருந்த பச்சையப்பா அறக்கட்டளை வழக்கை முடிவுக்கு கொண்டு வந்து, பச்சையப்பா பள்ளி துவக்கப்பட்டது. ஏறக்குறைய 1840-1940 வரை ஒரு நூற்றாண்டு காலம் பச்சையப்பா பள்ளியில் தலித் மாணவர்களே அனுமதிக்கப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கேம்ப்ரிட்ஜில் படித்த பவேல் அரசு பள்ளியை சென்னையில் துவக்குகிறார், ப்ரோபிசியன்சி படிப்பு துவக்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூபாய் நான்கு கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த கட்டணமே பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களை பள்ளியில் நெருங்கவிடாமல் தடுக்கிறது. மிகச் சிலருக்கே அந்த வாய்ப்புக் கிடைக்கிறது. 33 மாணவர்களில் ஏறக்குறைய 30 பேர் பிராமணர், உயர்சாதியினர்களே. இவர்கள் தான் இந்தியா முழுவதும் திவான்களாக, உதவி கலெக்டர்களாக பல சமஸ்தானங்களில் நியமிக்கப்படுகிறார்கள். முழுக்க முழுக்க அரசு எந்திரத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் இவர்களில் சமூக மாற்று அல்லது சீர்திருத்தம் என்ற வார்த்தைகளைக் கூட எவரும் உச்சரித்ததில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1890 - 91ல் செங்கல்பட்டு கலெக்டர் ட்ரேமன்ஹீர் தனது அறிக்கையை சமர்ப்பிக்கிறார். அந்த அறிக்கை, தமிழக சமூக வாழ்வில் தலித்துகளின் புறக்கணிக்கப்பட்ட நிலையை எடுத்துரைக்கிறது. அயோத்திதாசர் தனது குரலை, கேள்விகளை உரக்கப் பதிவு செய்கிறார். அந்த காலகட்டத்தில்தான் பிரம்மஞான சபை துவக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1880ல் பல சமூகங்கள் அரசு கட்டமைப்புக்குள் ஊடுருவ முனையும் காலம். நாயக்கர்கள் காவல்துறை இராணுவம் ஆகிய துறைகளில் பெரும் பகுதியாக சேர்க்கப்படுகிறார்கள். இராணுவத்தில் நாயக் ரெஜிமென்ட்கள் உருவாக்கப்படுகிறது. இன்றளவும் அது தொடர்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடையாறில் ஆள்காட் பள்ளி துவக்கப்படுகிறது. அதுவே தலித் மாணவர்களுக்காக பிரத்யேகமாக துவக்கப்பட்ட முதல் பள்ளி. நீதிக்கட்சி துவக்கப்படுகிறது. சர்.பிட்டி. தியாகராய செட்டி, சர். சங்கரன் நாயர் என புதிய சமூக மாற்றத்திற்கான அலை வீசத்துவங்குகிறது. தென்னிந்திய நல உரிமைச் சங்கம் துவக்கப்படுகிறது. ஜஸ்டிஸ், திராவிடன் இதழ்கள் துவக்கப்படுகிறது. காங்கிரஸ் பிராமணர்களால் நிரம்பி வழிவதை உணர்ந்து காங்கிரஸிலிருந்து பெரியார் வெளியேறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1911ல் கல்கத்தாவில் இருந்து நாட்டின் தலைநகரம் தில்லிக்கு மாற்றப்படுகிறது. அம்பிகளின் (பார்ப்பனர்களின்) இடப் பெயர்வும் துவங்குகிறது. தில்லி, மும்பை என பெருநகரங்களை நோக்கி, அவர்களின் உறவினர்கள், சொந்தம், சுற்றாருடன் மொத்தமாக மூட்டை முடிச்சுக்களுடன் இடம் பெயர்ந்தனர். அங்கே தமிழ் சங்கங்கள் துவங்கப்படுகின்றது. புதிய தலைமை செயலகங்கள், அமைச்சக வளாகங்கள் என எதையும் விட்டுவைக்காமல் ஆக்கிரமிக்கிறார்கள். அன்றிலிருந்து இன்று வரை அவர்களுடைய ஆதிக்கத்தின் கீழ் தான் உள்ளது அதிகார வர்க்க (Bureaucratic) செயல்பாடு. அந்த வளாகங்களின் உள்கட்டமைப்பை அவர்களுக்குத் இசைவாக மாற்றிக் கொண்டு இன்றளவும் நிழலாட்சிப் புரிகிறார்கள். இவர்களைப் போலவே வங்கத்திலிருந்து சட்டர்ஜி, பானர்ஜிக்கள், கேரளாவிலிருந்து நாயர்கள், நம்பூதிரிகள், மகாராஷ்டிரத்திலிருந்து ராவ், தேஷ்முக்கள் என இந்த உயர்சாதி கூட்டத்தின் பிடியில், மூச்சுத் திணறுகிறது தேசம். வட மாநிலங்களில் இந்த பிராமணர்கள் செலுத்தத் துவங்கிய ஆதிக்கத்தை பொறுக்க முடியாமல்தான் பின்னாட்களில் சிவசேனா போன்ற இயக்கங்கள் உருவாக ஒரு காரணமாகயிருந்தது. மதராசி என தென் மாநிலத்தவர்களை அழைக்கவும் கேலி செய்யவும் துவங்கினார்கள். இன்றளவும் ஹிந்தி, மராத்தி சினிமாக்களில் மதராசிக்கள் நகைச்சுவை கதாப்பாத்திரங்களாக சித்தரிக்கப்படுகிறார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28593647-5137793919593924657?l=kilumathur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kilumathur.blogspot.com/feeds/5137793919593924657/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28593647&amp;postID=5137793919593924657' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28593647/posts/default/5137793919593924657'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28593647/posts/default/5137793919593924657'/><link rel='alternate' type='text/html' href='http://kilumathur.blogspot.com/2010/08/blog-post_22.html' title='முழு அப்பம் கேட்கும் பார்ப்பன குரங்குகள்'/><author><name>மகேந்திரன்.பெ</name><uri>http://www.blogger.com/profile/17863131935297558260</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://i64.photobucket.com/albums/h187/mahendhiranp/mahendhiran.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28593647.post-3224157943787917211</id><published>2010-08-12T20:11:00.002+05:30</published><updated>2010-08-12T20:16:49.511+05:30</updated><title type='text'>ஒருவன் ஒருத்தி என்றால் - பரத்தை எதற்கு?</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_4nqliyy-z-Y/TGQJP8LLeLI/AAAAAAAAAxw/PCAftFavCig/s1600/kushboo-feb-12-2008.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 394px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/_4nqliyy-z-Y/TGQJP8LLeLI/AAAAAAAAAxw/PCAftFavCig/s400/kushboo-feb-12-2008.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5504534814009292978" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;‘போகும் பொன்னி ஆறும் - இனி ஆகும் காலம் நூறும் - போவோமா - ஊர்கோலம்’ - என்று சின்னத்தம்பியில் பாடினவர் குசுபு. வருஷம் 16இல் - கார்த்திக்குடன் - முதல்படம். தளதள இளமையில் - எதுவும் அறியாப் பருவத்தில் - அவர் பேச்சும் நடிப்பும் படத்துக்குப் புதுமை சேர்த்தன. அதற்கேற்ப - ஒரு பணக்காரக் கேரளத்து நாயர் வீட்டில் சூட்டிங். ஓடி ஒளிய - கொஞ்ச - கெஞ்ச - நிறைய இடம் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;கற்பு என்பது&lt;br /&gt;&lt;br /&gt;மாமேதை குசுபு ஒரு கருத்து சொன்னார் - கற்பு என்பது திருமணத்துக்குப் பிறகு இருந்தால் போதும் என்று - தமிழகம் கொந்தளித்தது. தமிழ் மக்கள் திருடர்கள் - பொய்யர்கள் - என்பது என் கருத்து. வெளிப்படையாக பல கணவர் வாழ்க்கை வாழும் கேரளப் பெண்கள் போற்றுதலுக்குரியவர்கள். ஒருவன் ஒருத்தி என்று நாடக மாடும் தமிழர்கள் பற்றி எனக்கு மரியாதை குறைவுதான். திருவள்ளுவர் கூட - ஒருவன் ஒருத்தி கொள்கையைப் பெரிதுபடுத்துகிறார். அதே சமயம் பரத்தை கலாச்சாரம் இருப்பதையும் ஒப்புக்கொள்கிறார். ஒருவன் ஒருத்தி என்றால் - பரத்தை எதற்கு?&lt;br /&gt;&lt;br /&gt;விதைப்பதே ஆண்வேலை&lt;br /&gt;&lt;br /&gt;பரிணாமத்தின் உச்சியில் இருக்கும் ஆணுக்கு விதைப்பதும், பெண்ணுக்குக் கருவுருவதும் வேலை. பெண் யாருடன் வேண்டுமானாலும் உறவு கொண்டு கருவுறலாம். ஆண் - பெண் ஒன்று - இரண்டு எத்தனைப் பெண்களை வேண்டுமானாலும் கருவுறச் செய்யலாம். திருவள்ளுவர் - ஒருவன் ஒருத்தி உறவை உயர்த்திப் பேசுவது 1. குழந்தைகளின் பாதுகாப்புக்காக, 2. பெண்களின் பாதுகாப்புக்காக எல்லோருக்கும் பெண்டாட்டி என்பதுதான். யாருக்கும் பெண்டாட்டி இல்லை என்பது - ஒது பாதுகாப்பற்ற நிலை. குழந்தைகளின் வளர்ச்சிக்குப் பாதுகாப்பான சூழல்தான் முதல் தேவை. இதில் திருவள்ளுவர் - பெண்களின் கடமையை அதிகமாக்குகிறார். ஆண் எப்படியாவது ஒழியட்டும் பெண்ணாகிய நீ கற்போடு இரு; அதுதான் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு என்று. ‘தற்காத்துத் - தற் கொண்டான் பேணி’ தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்’ என்கிறார். 1. உன்னைக் காப்பாத்திக்கோ, 2. உன் கணவனைப் பராமரி,&lt;br /&gt;&lt;br /&gt;3. நல்ல பெயரை எடு, 4. எதற்கும் எப்பவும் கலங்காதே. இதை நோண்டிப்பார்த்தால் - புருஷன் காரன் - எப்படியும் திரிவான். நீதான் குடும்பத்தின் விளக்கு. உன் குழந்தைகள் வளர வீடு என்று ஒன்று இருக்க - நீ தான் முதன்மை என்பதாகும். கொஞ்சம் ஆழமாகப் பார்த்தால் இது மனுநீதிக் கருத்துதான்.&lt;br /&gt;&lt;br /&gt;மதர் இந்தியா - முதல் - கண்ணகி வரை&lt;br /&gt;&lt;br /&gt;மதர் இந்தியா - என்று சினிமா கணவன் - வயல் வேலையில் கால் நொண்டியாகி ஊரைவிட்டு ஓடிவிடுகிறான். அம்மாதான் - தன் நிலத்தை, தன் இரண்டு குழந்தைகளை உருவாக்கிக் கொண்டு வருகிறாள். ஒரு மகன் - பெண்களைக் கெடுப்பவனாக மாறும்போது அவனைச் சுட்டுத்தள்ளவும் தவறுவதில்லை. தேவடியாள் கூட ஓடிப்போகும் கோவலனை - என்ன ஆனாலும் என் கணவன் என்று கண்ணகி ஏற்கிறாள். ‘தேரா மன்னா’ என்று அரச சபையில் தன் வழக்கில் தானே வாதிடுகிறார். மதுரையை அழிக்கிறார். இதில் எல்லாம் கணவனைப் புறக்கணிக்காத - பெண்டிரே குடும்பத்தின் அடித்தளம் என்பது தெளிவாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சின்ன தம்பி’யின் பிரம்மாண்ட வெற்றி&lt;br /&gt;&lt;br /&gt;சின்ன தம்பியில் குசுபுவும், பிரபுவும் - அந்தப் பாத்திரங்களாகவே வாழ்ந்து காட்டினார்கள். தமிழ்த் திரைப்படங்களில் - சின்னதம்பி ஒரு மைல்கல் என்றால் அது மிகை இல்லை. இந்தப்பட வெற்றிக்குப் பிறகு குசுபு - சிவாஜி கணேசன் வீட்டுக்கு போகவும் அனைத்துப் பிரபு உறவினர்களுடன் பழகவும் செய்தார். சிவாஜி கூட ‘குச்பு குச்பு’ என்று இந்த அம்மையாரைக் கொஞ்சினார்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரபு மட்டுமே&lt;br /&gt;&lt;br /&gt;சில பத்திரிகையாளர்கள் ‘சின்னத்தம்பி’க்குப் பிறகு குசுபுவைப் பேட்டி கண்டார்கள். 1. உங்கள் வாழ்வில் முக்கிய ஆண் யார்? 2. நீங்கள் யாரையாவது காதலிக்கிறீர்களா? 3. யாரைத் திருமணம் செய்து கொள்வீர்கள் - என்று இப்படி எல்லாக் கேள்விகளுக்கும் குசுபு ஒரே விடைதான் தந்தார் - பிரபு - என்று. இதுதான் பிரபுவின் மனைவியை உசுப்பி இருக்கவேண்டும். முன்பே மனைவியாக வாழ்ந்து ஒன்றிரண்டு குழந்தைகளைத் தந்த தன் கணவனை - இன்னொருத்தி சொந்தம் கொண்டாடினால் எப்படி இருக்கும்? நடிப்பு வேறு. வாழ்க்கை வேறு.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையைச் சொன்னார்&lt;br /&gt;&lt;br /&gt;‘கற்பு’ பற்றிய பேட்டியில் - தன் வாழ்க்கை அனுபவத்தை வைத்து - ‘திருமணத்துக்குப் பின் பெண் கற்போடு இருந்தால் போதும்’. முன்னால் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும் என்கிற மாதிரி ஒரு கருத்தைச் சொன்னார். சுகாசினி கூட - இந்தக் கருத்தை ஆதரித்தார். சினிமா உலகில் இது சர்வ சாதாரணம். பொய்யே வாழ்வாக - இரட்டை வாழ்க்கை வாழும் - பார்ப்பனத் தலைமை - தமிழ்மக்கள் - ஆகா எம் கற்பை - இப்படி சிரிப்புச் செய்தி ஆக்கலாமா - என்று தாண்டிக் குதித்தார்கள். குசுபு - இதைப்பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. சில தீவிரத் தமிழர்கள் குசுபு மீது வழக்கும் போட்டார்கள். வழக்கில் - குசுபு நிலைப் பாட்டில் தப்பில்லை - என்று தீர்ப்பு வந்தது. தமிழ் மாவீரர்கள் - மேலும் கீழும் மூடிக் கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தி.மு.க.-வில் குசுபு&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப செய்தி குசுபு தி.மு.க.வில் சேர்ந்தார் - என்பது, அதாவது மிக வெற்றிகரமான தொடர்களை ‘ஜெயா டிவி’யில் செய்து கொண்டிருக்கும்போதே, இந்த முடிவு. தொடர்களைச் செய்யும்போதே - குசுபுவின் மிகப்பெரிய பங்களிப்பு - இன்று என்ன சோளி அணிந்தார் என்பதே இவருடைய பேச்சு - கருத்து பற்றியாரும் கவலைப்படவில்லை. ரவிக்கை பற்றியே ஆண்களும் பெண்களும் பேசி மாய்ந்து போனார்கள். குசுபுவுக்கு அரசியல் தெரியுமா? குசுபு - எம்பி - ஆவாரா? அமைச்சர் ஆவாரா? யார் யார் எல்லாம் குசுபுக்குத் தலைவர்கள் - இப்படி எல்லாம் கேள்விகள், விவாதங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மனு நீதிக் காட்டுமிராண்டிகள்&lt;br /&gt;&lt;br /&gt;பெண்ணுக்கென்று உடம்பு இருக்கிறது; அறிவு இருக்கிறது; தன் உடம்பை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பது அவள் செய்ய வேண்டிய முடிவு; தன் அறிவை எப்படி உபயோகிப்பது என்பது அவளுடைய முடிவு; அவள் ஒரு மனித சென்மம். அவளுடைய ஆசைக்கும் திட்டத்துக்கும், செயலுக்கும் விளைவுக்கும் அவள்தான் பொறுப்பு. அதில் மூக்கை நுழைத்துக் கருத்துச் சொல்வது அநாகரிகம். ‘குழந்தையாகத் தந்தையை - குமரியாகக் கணவனை - கிழவியாக மகனைச் சார்ந்து வாழப் பெண் கடமைப் பட்டவள்’ என்கிறது மனுநீதி. நீ யாரடா - அதைச் சொல்ல?&lt;br /&gt;&lt;br /&gt;- சங்கமித்ரா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28593647-3224157943787917211?l=kilumathur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kilumathur.blogspot.com/feeds/3224157943787917211/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28593647&amp;postID=3224157943787917211' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28593647/posts/default/3224157943787917211'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28593647/posts/default/3224157943787917211'/><link rel='alternate' type='text/html' href='http://kilumathur.blogspot.com/2010/08/blog-post.html' title='ஒருவன் ஒருத்தி என்றால் - பரத்தை எதற்கு?'/><author><name>மகேந்திரன்.பெ</name><uri>http://www.blogger.com/profile/17863131935297558260</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://i64.photobucket.com/albums/h187/mahendhiranp/mahendhiran.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_4nqliyy-z-Y/TGQJP8LLeLI/AAAAAAAAAxw/PCAftFavCig/s72-c/kushboo-feb-12-2008.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28593647.post-8604859005702424696</id><published>2010-03-04T11:45:00.000+05:30</published><updated>2010-03-04T12:15:35.782+05:30</updated><title type='text'>பிரேமானந்தா முதல் நித்தியானந்தம் வரை</title><content type='html'>பிரேமானந்தா ஆரம்பித்து வைத்த போலிச் சாமியார் டைட்டில் மெகா சீரியலில் லேட்டஸ்ட் வரவு நித்தியானந்தம் என்பதை தவிர இந்த விசயத்தில் என்ன கருமாந்திரப் புதுச்செய்தி இருந்துவிடப் போகிறது? பிரேமானந்தா, காஞ்சி காம கேடி, குலுக்கிய கலுக்கி பகவான் அம்மா சாமி காஞ்சி காமதேவன் தேவநாதன், சத்திய சாய்பாபா, இன்னும் இன்னும் தொடரப்போகும் காம சாமிகளின் வரிசையில் நித்தியானந்தமும் ஒருவர். &lt;br /&gt;&lt;br /&gt;நடிகை ஒருவரோடு படுத்திருந்ததற்காக நித்தியை கைதுசெய்ய வேண்டும் எனச் சொல்லும் மக்களை முதலில் கைது செய்து உள்ளே தள்ளுங்கள், இந்த மானம் கெட்ட மடையர்களின் மூட நம்பிக்கைகளால் தானே இந்த காலி சாமியார்கள் பெருத்து கொழுத்து கிடக்கிறார்கள். தவறு செய்தவனை விட தூண்டியவனுக்கு தான் அதிக தண்டனையாமே? மக்களே உங்களுக்கு என்ன கருமத்திற்காக தண்டனை தரலாம்?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28593647-8604859005702424696?l=kilumathur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kilumathur.blogspot.com/feeds/8604859005702424696/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28593647&amp;postID=8604859005702424696' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28593647/posts/default/8604859005702424696'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28593647/posts/default/8604859005702424696'/><link rel='alternate' type='text/html' href='http://kilumathur.blogspot.com/2010/03/blog-post.html' title='பிரேமானந்தா முதல் நித்தியானந்தம் வரை'/><author><name>மகேந்திரன்.பெ</name><uri>http://www.blogger.com/profile/17863131935297558260</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://i64.photobucket.com/albums/h187/mahendhiranp/mahendhiran.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28593647.post-5865294250775447286</id><published>2010-02-27T10:20:00.002+05:30</published><updated>2010-02-27T10:23:08.649+05:30</updated><title type='text'>பெரியார் 25</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_4nqliyy-z-Y/S4ik4Y5PTHI/AAAAAAAAAwo/gmUt_RR6C_U/s1600-h/p20a.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 220px; height: 380px;" src="http://3.bp.blogspot.com/_4nqliyy-z-Y/S4ik4Y5PTHI/AAAAAAAAAwo/gmUt_RR6C_U/s400/p20a.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5442781438339402866" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தந்தை பெரியார் - வஞ்சிக்கப்பட்ட மக்களின் வாய்தா வாங்காத வக்கீல். ஆயிரமாண்டு ஆதிக்க மலையை அடித்து நொறுக்கியது அவரது கைத்தடி. அடங்கியிருந்தவர்கள் எழுந்து நிற்க ஊன்றுகோலாக இருந்ததும் அதுவே. 95 வயதிலும் மூத்திரச் சட்டியைத் தூக்கிக்கொண்டு சளைக்காமல் போராடியவரின் சரித்திரத்தில் இருந்து...&lt;br /&gt;&lt;br /&gt;ராமசாமி என்பது அவரது பெற்றோர் வைத்த பெயர்.பெண்ணடிமைத்தனம் குறித்துப் பெரும் பிரசாரம் செய்ததற்காக, மாநாடு கூட்டிய பெண்கள் அமைப்பினர் சூட்டிய பட்டம்தான் பெரியார். அதுவே அவரது பெயராக மாறிப் போனது!&lt;br /&gt;&lt;br /&gt;பெரியார் - நாகம்மை இருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்து 5-வது மாதமே இறந்து போனது. அதன்பிறகு குழந்தைகள் இல்லை. ஆனால் 20-க்கும் மேற்பட்ட அநாதைக் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்க ஆரம்பித்தார். படிக்கவைத்துத் திருமணம் செய்தது வரை இவரது செலவுதான். இவர்களுக்கு ஈ.வெ.ரா.ம. என்பது இனிஷியல்!&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டுச் சரித்திரத்தில் எடைக்கு எடை பொருட்கள் தரப்பட்டது இவருக்குத்தான். வெள்ளி, நெல் மூட்டைகள், பேரீச்சம்பழம், பெட்ஷீட் தொடங்கி வெங்காயம் வரை தரப்பட்டுள்ளது!&lt;br /&gt;&lt;br /&gt;தான் மேடையில் பேசிக்கொண்டு இருக்கும்போது யாராவது மாற்றுக் கருத்து இருந்தால் உடனே எழுந்து சொல்லலாம் என அறிவித்திருந்தார். ''நான் இல்லாத இடத்தில் என்னைப்பற்றிப் பேசாதே, காணாத இடத்தில் குரைக்காதே'' என்பார்!&lt;br /&gt;&lt;br /&gt;வால்மீகி ராமாயணம், அபிதான சிந்தாமணி, தமிழ்ப் பேரகராதி ஆகிய மூன்று புத்தகங்களையும் எப்போதும் தன்னுடன் வைத்திருப்பார். சர்ச்சைக்குரிய புத்தகங்களின் அடுத்தடுத்த பதிப்புகளையும் விடாமல் வாங்குவார்!&lt;br /&gt;&lt;br /&gt;பதினைந்துக்கும் மேற்பட்ட நாய்களை வளர்த்தார். பிரெஞ்சு தொடங்கி ராஜபாளையம் வரை பல வகைகள் இருக்கும். வெளியூர் பயணத்தின்போதும் அவை வேனில் ஏறி வந்து மேடைக்குக் கீழே உட்கார்ந்திருக்கும்!&lt;br /&gt;&lt;br /&gt;தான் செய்யும் சிறு செலவுக்குக்கூட கணக்கு வழக்கு வைத்திருந்தார். அதைச் சின்ன டைரியில் குறித்துவைத்திருந்தார். வருமானவரி பிரச்னை ஒன்று வந்தபோது, இந்த டைரிகளைப் பார்த்து நீதிபதிகளே ஆச்சர்யப்பட்டார்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;வாரம் ஒருமுறை, பத்து நாளைக்கு ஒருமுறைதான் குளிப்பார். ''குளிக்கணும்கிற ஞாபகமே எனக்கு வர்றதில்ல. அதை ஒரு தொந்தரவாக நினைக்கிறேன்'' என்பார்!&lt;br /&gt;&lt;br /&gt;தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டுவந்தவர் பெரியார்தான். ணா, லை என்றெல்லாம் 75 ஆண்டுகளுக்கு முன்னால் முதன்முதலாக எழுத ஆரம்பித்தவர் அவர்தான்!&lt;br /&gt;&lt;br /&gt;இளமைக் காலத்தில் தான் செய்த சேஷ்டைகளைப் பகிரங்கமாகச் சொன்னவர். ''மைனர் வாழ்க்கை நடத்தியவன்தான். ஆனால், இதுநாள் வரை மது அருந்தியதே இல்லை. ஆனால், பலருக்கும் வாங்கிக் கொடுத்திருக்கிறேன். நான் வியாபாரியாக இருந்தபோது பொய் பேசி இருப்பேன். பொதுவாழ்க்கைக்கு வந்தபிறகு ஒரு பொய்கூடச் சொன்னதில்லை. ஒழுக்கக் கேடான காரியத்தையும் செய்ததில்லை'' என்று அறிவித்தவர்!&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுடைய அரசியல் வாரிசு யார் என்று கேட்டபோது, ''எனக்கு அரசியல் வாரிசு என்று யாரும் கிடையாது. என்னுடைய கொள்கைகளும் கருத்தும்தான் வாரிசு'' என்றார்!&lt;br /&gt;&lt;br /&gt;தன்னுடைய மனைவி நாகம்மை, அம்மா சின்னத் தாய் ஆகியோர் இறந்தபோது, தனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று பகிரங்கமாக அறிவித்தார். 'எனக்குஇருந்த குடும்பத் தொல்லைகள் ஒழிந்தன' என்று காரணம் சொன்னார்!&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்குப் பிரபலமாக இருக்கும் செல்போன், கம்யூட்டர், வாக்மேன், வெப்கேமரா, டெஸ்ட்டியூப் பேபி, உணவு கேப்சூல்கள், குடும்பக் கட்டுப்பாடு... அனைத்தைப் பற்றியும் 65 ஆண்டுகளுக்கு முன்னால் 'இனிவரும் உலகம்' என்ற கட்டுரையில் எழுதி தன்னுடைய விஞ்ஞான அறிவை வெளிப்படுத் தியவர் பெரியார்!&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு கவர்னர் ஜெனரல்கள் நேரில் வந்து சந்தித்து 1940, 42 ஆண்டுகளின் சென்னை மாகாணத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளச் சொன்னபோது மறுத்தார். ''நெருப்புகூடக் குளிர்ச்சி ஆகலாம், வேப்பெண்ணெய் தேன்ஆகலாம். ஆனால், பதவியேற்றவன் யோக்கியனாக இருக்கவே முடியாது'' என்றார்!&lt;br /&gt;&lt;br /&gt;தனது மனதில் பட்டதைத் தயவு தாட்சண்யம் பார்க்காமல் சொல்லிவிடுவார். வெற்றிலை பாக்கு கடை வியாபாரிகள் சங்க ஆண்டு விழாவுக்கு பேசப் போனவர், ''உங்களால் இந்த நாட்டுக்கு எந்த நன்மையும் இல்லை, எனவே, கடைகளைக் மூடி விட்டு, மக்களுக்குப் பயன்படக்கூடிய வேலையைப் பாருங்கள்'' என்று சொல்லி விட்டு வந்தார்!&lt;br /&gt;&lt;br /&gt;தன்னுடைய குடும்பச் சொத்தை எடுத்து வந்து பொதுவாழ்க்கையில் செலவு செய்தார். பொதுவாழ்க்கையில் கிடைத் ததை அனைவருக்கும் பயன்படுவது மாதிரி டிரஸ்ட் ஆக்கினார். அவரதுசேகரிப் பில் நயாபைசாகூடத் தனது குடும்பத்தினர் யாருக்கும் தரப்படவில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;முக்கியமானவர்கள் யார் வந்தாலும் தள்ளாத வயதிலும் எழுந்து நிற்பார். இளைஞராக இருந்தாலும் 'வாங்க, போங்க' என்பார். பொது நிகழ்ச்சியில் கடவுள் வாழ்த்து பாடினாலும் எழுந்து நிற்பார். யாராவது திருநீறு கொடுத்தாலும் வாங்கிக்கொள்வார்!&lt;br /&gt;&lt;br /&gt;உலகம் முழுவதும் பெண்ணியவாதிகள் தங்களது வேதப்புத்தகமாகச் சொல்லும் 'செகண்ட் செக்ஸ்' வெளிவருவதற்கு இருபது ஆண்டுகளுக்கு முன்பே இவர் எழுதிய 'பெண் ஏன் அடிமையானாள்?' புத்தகம் வெளியாகிவிட்டது!&lt;br /&gt;&lt;br /&gt;'நான் சொன்னதை அப்படியே நம்பாதீர்கள். உங்களுக்குச் சரி என்றுபட்டால் ஏற்றுக்கொள்ளுங்கள். நான் கொள்கையை மாற்றிக்கொண்டே இருப்பேன். எப்போது மாறுவேன் என்று எனக்கே தெரியாது'' என்று எல்லாக் கூட்டத்திலும் மறக்காமல் சொல்வார்!&lt;br /&gt;&lt;br /&gt;அவருடைய நண்பர்களில் எட்டுப் பேர் 42 வயதில் இறந்துவிட்டார்களாம். தானும் 42 வயதில் இறந்து போவோம் என்று நினைத்தாராம். ஆனால், அதன்பிறகுதான் தீவிரப் பொது வாழ்க்கையில் இறங்கினார்!&lt;br /&gt;&lt;br /&gt;'தோழர்' என்று கூப்பிடுங்கள் என்று முதன் முதலாக தமிழ்நாட்டில் அறிவித்தவர் இவர்தான்!&lt;br /&gt;&lt;br /&gt;புத்துலக தீர்க்கதரிசி, தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என்று யுனெஸ்கோ நிறுவனம் பாராட்டுப் பத்திரம் கொடுத்தபோது, ''இந்த வார்த்தைகளை ஏற்றுக் கொள்ள வெட்கப்படுகிறேன்'' என்றார்!&lt;br /&gt;&lt;br /&gt;பெரியார் அதிகமாக உச்சரித்த வார்த்தை-வெங்காயம். ''வெங்காயத்தை உரித்துக்கொண்டே போனால் கடைசியில் எதுவுமே மிஞ்சாது. ஒன்றும் இல்லாத பூஜ்யப் பேர்வழிகளைத் தாக்கவே அந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறேன்'' என்றார்!&lt;br /&gt;&lt;br /&gt;நேரடி விவாதங்களின்போது, ''சொல்றதுக்காக என்னை மன்னிக்கணும்'' என்று சொல்லிவிட்டுத்தான் பதில் சொல்வார்!&lt;br /&gt;&lt;br /&gt;95 வயது வயதில் மொத்தம் 98 நாட்கள் வாழ்ந்தார். அதில் 35 நாட்கள் வெளியூர் பயணம் சென்று 42 கூட்டம் பேசினார். கடைசியாக அவர் பேசிய இடம் சென்னை தியாகராயர் நகர். அந்த இடத்தில்தான் பெரியார் சிலை கம்பீரமாக நிற்கிறது!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;-ப.திருமாவேலன்&lt;span style="font-weight:bold;"&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28593647-5865294250775447286?l=kilumathur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kilumathur.blogspot.com/feeds/5865294250775447286/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28593647&amp;postID=5865294250775447286' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28593647/posts/default/5865294250775447286'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28593647/posts/default/5865294250775447286'/><link rel='alternate' type='text/html' href='http://kilumathur.blogspot.com/2010/02/25.html' title='பெரியார் 25'/><author><name>மகேந்திரன்.பெ</name><uri>http://www.blogger.com/profile/17863131935297558260</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://i64.photobucket.com/albums/h187/mahendhiranp/mahendhiran.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_4nqliyy-z-Y/S4ik4Y5PTHI/AAAAAAAAAwo/gmUt_RR6C_U/s72-c/p20a.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28593647.post-3833443373362781243</id><published>2010-02-15T11:19:00.000+05:30</published><updated>2010-02-15T11:21:24.724+05:30</updated><title type='text'>வன்னியர்கள் மீது பாய்ந்த கைவிரல் ரேகைப் பதிவு ஆணை</title><content type='html'>விரல் ரேகையைப் பதிவு செய்ய வேண்டும் என்ற ஆணை, கள்ளர் சமூகத்தினருக்கு மட்டுமல்லாது, வன்னியர் சமூகத்தினருக்கும் இருந்தது. குறிப்பாக தென்னாற்காடு மாவட்டத்தில் ‘படையாட்சி’ என்று அழைக்கப்பட்ட வன்னியர் சமூகத்தினர் காவல் நிலையங்களில், அன்றாடம் கைவிரல் ரேகை பதிவு செய்ய வேண்டும் என்று சில பார்ப்பன போலீஸ் அதிகாரிகள், அரசுக்கு பரிந்துரைத்துள்ளார்கள். ஜஸ்டிஸ் கட்சி ஆட்சியில் இந்த ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்ற அவசர தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், இதை காங்கிரசார், தங்களின் சாதனைபோல அப்போதே பொய் பிரச்சாரம் செய்துள்ளனர். இந்த வரலாற்றுச் செய்திகளை 1935 ஆம் ஆண்டு ‘விடுதலை’ ஏட்டிலும், ‘குடிஅரசு’ இதழிலும், ‘தென்னாற்காடு ஜில்லா படையாட்சிகள்’ எனும் தலைப்பிலும் பதிவாகியுள்ளது. செய்தியை இங்கு வெளியிடுகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் நடக்கப் போகும் தென்னாற்காடு ஜில்லா போர்டு தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெரியார்கள், மற்ற இடங்களில் உண்மையை மறைத்தும், உள்ளதைக் குறைத்தும் கூறிப் பொய்ப் பிரச்சாரம் செய்த மாதிரி, தங்களுடைய ஒழுங்கீனமான சுயநலப் பிரச்சாரம் செய்ய முற்பட்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது. அவர்கள் செய்த சூழ்ச்சிகளைக் குறித்து நமது நிருபர் எழுதிய விவரங்களை வேறொரு பக்கத்தில் பிரசுரித்திருக்கிறோம். அவற்றால், சுயநலக் கூட்டத்தார் ஜஸ்டிஸ் கட்சியினரைத் தோற்கடிக்க எவ்வளவு தூரம் முயற்சி செய்கிறார்களென்பது விளங்கும். தம்முடைய பிரச்சாரத்திற்காக, எவ்வளவு கேவலமான முறைகளையும் அனுசரிப்பார்களென்பது, அவர்களுடைய முழுப் பொய்ப் பிரச்சாரத்தினால் புலப்படுகின்றது. சில வாரங்களுக்கு முன், படையாட்சி வகுப்பினரைச் சேர்ந்தவர்கள் அனைவரையும் குற்ற பரம்பரைச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட அரசாங்க உத்தரவு ரத்து செய்யப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;க்ஷத்திரிய வகுப்பைச் சேர்ந்த பழங்குடி மக்களான படையாட்சிகள் ஏன் குற்றஞ் செய்யும் வகுப்பினரோடு சேர்க்கப்பட்டார்கள்? அதற்குக் காரணமென்ன? காரணம் சில பார்ப்பன போலீஸ் உத்தியோகஸ்தர்கள். அவர்களுடைய ‘ரிப்போர்ட்டு’களில் அவ்வகுப்பினரை குற்ற வகுப்பினர் சட்டத்தின் கீழ் கொண்டு வருதல் மிக அவசியம் என்று எழுதியதனால், அரசாங்கத்தார், தவறாக அப்படிப்பட்ட உத்தரவை வெளியிட்டார்கள். அந்த உத்தரவு படையாட்சி வகுப்பினரிடையே பெருத்த பரபரப்பை உண்டு பண்ணியது. அவர்களுடைய சுயமரியாதைக்கும், கௌரவத்திற்கும், அரசாங்க உத்தரவு இடையூறு செய்ததைக் கூட்டங்களிலும், பத்திரிகைகளிலும் கண்டிக்கப்பட்டது. அந்த அவமரியாதையான உத்தரவை ரத்து செய்வதற்குத் தென்னாற்காடு ஜில்லா போர்டு தலைவர், ராவ்பகதூர் ஜம்புலிங்க முதலியார் அவர்கள் பிரயாசைப்பட்டு வெற்றி பெற்ற விஷயம் அந்த ஜில்லாவாசியான படையாட்சிகளுக்குத் தெரிந்திருக்குமென்று நம்புகின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை சட்டசபையில் ஜஸ்டிஸ் கட்சியினர் ஒருவரால் அவசரத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அவ்வுத்தரவை ரத்து செய்யும் விஷயமாக அரசாங்கத்தார் கவனிப்பதாக வாக்குறுதியளித்ததின் பேரில், தீர்மானம் ‘வாப்பீஸ்’ வாங்கிக் கொள்ளப்பட்டது. பின்னர், ஜஸ்டிஸ் கட்சிப் பிரமுகர்களின் முயற்சியால், அரசாங்கத்தார் பார்ப்பன போலீஸ் உத்தியோகஸ்தர்களுடைய ‘ரிப்போர்ட்’டுகளின் மேல் தாங்கள் அம்மாதிரி உத்தரவிட்டது தவறென்று உணர்ந்து, படையாட்சிகளின் கிளர்ச்சியின் உண்மையை அறிந்து, உத்தரவை ரத்து செய்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வுத்தரவு ஜஸ்டிஸ் கட்சியாரால் ஏற்படுத்தப்பட்டது. காங்கிரஸ்காரர்கள் தான் சட்டசபையில் இதை விவாதித்து ரத ்து செய்வதற்கு உதவி செய்தார்கள் என்று சுயநலக் கூட்டப் பத்திரிகைகள் சில கூறுவது எவ்வளவு பொய்யான விஷயம் என்பதை படையாட்சிகள் அறிவார்கள் என்று நம்புகிறோம். படையாட்சிகள் பார்ப்பனரல்லாத பெருங்குடி மக்களில் மிகப் பழங்குடி மக்கள். அவர்களைப் பற்றிப் பார்ப்பனர்கள் பரிந்து பேசுவதும், அவர்களுடைய நன்மைக்காகப் பாடுபடுவது போலப் பாசாங்கு செய்வதும், மக்களை ஏமாற்றி ‘ஓட்’டுப் பறிப்பதற்கேயாகும். காங்கிரஸ் என்ற போர்வையை மேல் போர்த்திக் கொண்டால், படையாட்சிகளை ஏமாற்றிவிடலாம் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் போலும்.&lt;br /&gt;&lt;br /&gt;சதாகாலமும் பொய், ஏமாற்றுதல், மானக்கேடான செயல்களைச் செய்து, வேலை சம்பாதித்தல், புல்லிய செய்கைகளின் மூலம் வயிறு வளர்த்தல் முதலிய குற்றங்களை இரவு பகலாகச் செய்து வரும் பார்ப்பனர்களை, குற்ற வகுப்பினர் சட்டத்தின் கீழ் கொண்டுவர வேண்டியிருக்க, தமிழ்நாட்டின் விவசாய விருத்திக்குக் கற்றூண் போல் விளங்கி, பழமையும் பெருமையும் பொருந்திய க்ஷத்திரிய வீரத்தையும், தேக பலத்தையும் நாட்டின் செழுமைக்கு உபயோகிக்கும் படையாட்சிகளைக் குற்ற பரம்பரை வகுப்பினராகச் சேர்த்தது எவ்வளவு தவறான விஷயம். இத்தவறுதலுக்குக் காரணம் பார்ப்பனர்கள் என்பதை யுணர்ந்து, அவ்வுத்தரவு ரத்து செய்ததற்குக் காரணம் ஜஸ்டிஸ் கட்சி என்பதறிந்து, சமீபத்தில் நடைபெறப் போகும் தேர்தலில் சுயநலக் காங்கிரஸ் கூட்டத்தை முறியடிப்பார்கள் என்று நம்புகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;‘விடுதலை’&lt;br /&gt;&lt;br /&gt;‘குடி அரசு’ மறு பிரசுரம் - 08.12.1935&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28593647-3833443373362781243?l=kilumathur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kilumathur.blogspot.com/feeds/3833443373362781243/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28593647&amp;postID=3833443373362781243' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28593647/posts/default/3833443373362781243'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28593647/posts/default/3833443373362781243'/><link rel='alternate' type='text/html' href='http://kilumathur.blogspot.com/2010/02/blog-post_15.html' title='வன்னியர்கள் மீது பாய்ந்த கைவிரல் ரேகைப் பதிவு ஆணை'/><author><name>மகேந்திரன்.பெ</name><uri>http://www.blogger.com/profile/17863131935297558260</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://i64.photobucket.com/albums/h187/mahendhiranp/mahendhiran.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28593647.post-6193680534066274778</id><published>2010-02-13T12:55:00.003+05:30</published><updated>2010-02-13T13:00:25.824+05:30</updated><title type='text'>தங்கர்பச்சான்,சீமான்:தமிழ்ப்பாசிஸ்ட்கள்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_4nqliyy-z-Y/S3ZU008t8EI/AAAAAAAAAwg/35qipa4-LxI/s1600-h/thangarpatchanlm4.jpg"&gt;&lt;img style="cursor: pointer; width: 166px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/_4nqliyy-z-Y/S3ZU008t8EI/AAAAAAAAAwg/35qipa4-LxI/s400/thangarpatchanlm4.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5437626866639695938" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் நடிகைகள் குறித்த தங்கர்பச்சானின் ‘அரிய’ கருத்து, திருமணத்திற்கு முன்னான பாலுறவு குறித்த குஷ்புவின் கருத்து போன்றவைகளுக்கு அடுத்தபடியாக ஜெயராமின் பேச்சு இப்போது தமிழ் ‘இன உணர்வைக்’ கிளப்பியிருக்கிறது. இன்று காலையில் ஒரு தமிழ்த்தேசிய நண்பரிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது, ‘ஜெயராமுக்கு மன்னிப்பு, சீமானுக்குக் கைது - இதுதான் திராவிட நீதியா?’ என்று. ஜெய்ராம் பேசிய கருத்துக்காக தமிழகக் காவல்துறை அவரைக் கைதுசெய்யமுடியாது, ஜெய்ராம் மீது யார் வேண்டுமானாலும் வழக்குத் தொடரலாம் (தொடரப்பட்டிருக்கிறது). ஆனால் நாம் தமிழர் இயக்கம் ஜெய்ராம் வீடு புகுந்து நிகழ்த்திய வன்முறைக்கு நிச்சயம் காவல்துறை கைதுநடவடிக்கை எடுத்துத்தானாக வேண்டும். ஆனால் இந்த வித்தியாசங்களைக் கூட உணர முடியாதளவு நிதானத்தை இழந்துள்ளனர் தமிழ்த்தேசியவாதிகள். நிதானம்&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_4nqliyy-z-Y/S3ZU0kZpscI/AAAAAAAAAwY/zib-1CYEJVo/s1600-h/SEEMAN.jpg"&gt;&lt;img style="cursor: pointer; width: 351px; height: 350px;" src="http://4.bp.blogspot.com/_4nqliyy-z-Y/S3ZU0kZpscI/AAAAAAAAAwY/zib-1CYEJVo/s400/SEEMAN.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5437626862197649858" border="0" /&gt;&lt;/a&gt; இழப்பதும் எதார்த்தங்களைப் பரிசீலிக்கத் தவறுவதும் அவர்களுக்கு ஒன்றும் புதியதல்லவே!&lt;br /&gt;&lt;br /&gt;'தாக்கரே பெருமகன்' என்று மும்பையில் சீமான் பேசியதற்கு மேலும் அர்த்தத்தின் அடர்த்தியைக் கூட்டியிருக்கின்றனர் அவரது தம்பிமார்கள். ஜெயராமின் கருத்திற்கு எதிரான கண்டனப் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என்று எதுவுமேயில்லாது எடுத்தவுடனே வீடு புகுந்து அடிப்பது ஒன்றுதான் வழி என்றால் அந்த வன்முறை யார் மீது வேண்டுமானாலும் திரும்ப முடியும் என்பதை நாம் உணரவேண்டும். பெரியாரைக் கைவிட்ட சீமான் சிவசேனாவின் வழி நோக்கி அடியெடுத்து வைப்பது கருத்தியல் இயல்புதான்.&lt;br /&gt;&lt;br /&gt;நிச்சயமாக இந்த கட்டுரை ஜெயராமின் கருத்துக்களை நியாயப்படுத்தவில்லை; ஆனால் ஜெயராமின் சொற்களுக்குப் பின்னாலிருந்தது வெறுமனே இனவாதத் திமிரல்ல என்பதை அடையாளப்படுத்த முனைகிறது. மேலும் ஜெயராமுக்கு எதிராய்க் குரலுயர்த்தும் இனவாதிகள் மற்றும் ஊடகங்களின் அறிவுநாணயம் மற்றும் அரசியல் யோக்கியதை குறித்துக் கேள்வி எழுப்ப விரும்புகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெய்ராம் மலையாளச் சேனலில் அளித்த நேர்காணலை வைத்து முதன்முதலாகப் பரபரப்பைக் கிளப்பியது குமுதம்தான். வேலைக்காரிகள் குறித்த ஜோக்குகளையும் படங்களுக்கான கமெண்டில் நடிகைகள் குறித்த அருவெறுப்பான வார்த்தைகளையும் உதிர்க்கும் குமுதத்திற்கு இதுகுறித்து எழுதுவதற்கு ஏதாவது யோக்கியதை உண்டா? குமுதம் திடீரென்று பேசும் இனவாதத்தின் பின்னுள்ள லாபம் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;ஜெய்ராம் குறித்து முதலில் கண்டனத்தைத் தெரிவித்தவர் வழக்கம் போல், ‘என்ன சார் நடக்குது இங்க?’ தங்கர்பச்சான்தான். ஆனால் இதே தங்கர்பச்சான்தான் ‘நடிகைகள் விபச்சாரிகள்’ என்ற ‘முற்போக்குக் கருத்தை’ச் சொன்னவர். அவர் சொன்னது நவ்யா நாயர் என்னும் மலையாள நடிகை குறித்துத்தான். ‘எம்மினப் பெண்ணை எப்படி வேசி என்று சொல்லலாம்?’ என்று கேரளா அன்று கொதித்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? குமுதத்தின் வேலைக்காரி ஜோக்குகளில் அவமானப்படுத்தப்படுபவர்கள் எல்லாம் ‘தமிழ் வேலைக்காரிகள்’தானே? சீமான், பச்சான் மாதிரியான தமிழ்த்தேசிய இயக்குனர்களின் படங்களில் தமிழ்ப்பெண்களுக்கான இடமென்ன? எப்போதாவது பெண்களின் உரிமைகள் குறித்தும் சுயமரியாதை குறித்தும் அங்கீகாரம் குறித்தும் அவர்களின் படங்கள் பேசியிருக்கின்றனவா? ‘என் சேலைக்கு அவிழ்ந்து விழ நேரம் என்னைக்கு?’ என்பதுதானே அதிகபட்சம் இவர்கள் படத்துப் பெண்கள் ஆண்களை நோக்கி கேட்ட கேள்வி?&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்த்திரைப்படங்கள் தமிழ்ப்பெண்களைச் சித்தரித்தது ஒருபுறமிருக்கட்டும். தமிழ்ச்சினிமா மலையாளப் பெண்களை எப்படி சித்தரித்திருக்கிறது? இடுப்பு வரை முண்டு கட்டிய பாலுணர்வு தீனிப்பண்டங்களாகத்தானே அவர்களைச் சித்தரித்திருக்கிறது. ‘தாராளமா மனசு இருந்தா கேரளான்னு தெரிஞ்சுக்கோ’ (ரன் படப் பாடல்) என்ற வரிகள் மலையாளப் பெண்களை இழிவுபடுத்தவில்லையா? எத்தனை படங்களில் மலையாளப் பெண்களுக்கான கேரக்டர்களில் ஷகீலாவும் மும்தாஜிம் வந்து ‘கவர்ச்சி விருந்து’ படைத்திருக்கிறார்கள்? இதற்குப் பெயர் இனவாதமில்லையா? மலையாள சினிமா எப்படி தமிழர்களையும் தமிழ்ப்பெண்களையும் இழிவாகப் பார்க்கிறதோ அதேபோல்தான் தமிழ்ச் சினிமாவும். ‘மற்றமை’ குறித்த வெறுப்புணர்ச்சியும் இனவாத அடிப்படைவாதமுமே இதற்குக் காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் தெளிவும் அறிவுநாணயமும் உடைய யாரும் தங்கர்பச்சான், சீமான் வகையறாக்களோடு கைகோர்த்து ஜெயராமை எதிர்க்க முடியாது. இப்படி ஒரு கேள்வியை எழுப்பிப் பார்ப்போம். ‘ஜக்குபாய் திருட்டு விசிடியாக வெளியானதை ஒட்டி நடந்த கண்டனக்கூட்டத்தில்’ கமல்ஹாசன் இப்படிப் பேசினார், "திருட்டு விசிடி மூலம் கிடைக்கும் பணம்தான் மும்பை குண்டுவெடிப்பிற்குப் பயன்படுத்தப்படுகிறது". ஏன் ‘நாம் தமிழர்’ இயக்கம் முஸ்லீம்களை இழிவுபடுத்தியதைக் கண்டித்து கமல்ஹாசனுக்கு எதிராகப் போராடவில்லை? 'முஸ்லீம்கள் நாம் தமிழர் இல்லை' என்கிறாரா சீமான்?&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது ஜெயராமின் கருத்துக்கு வருவோம். ஜெயராமின் கருத்துக்களில் நிச்சயம் இனவாதம் இருந்தது. ‘கேரளப்பெண்களின் தாராள மனசைச் சொன்ன’ தமிழ் இனவாதத்தைப் போன்றதொரு மலையாள இனவாதம்; மேலும் பெண்களைப் பாலியல் நுகர்வுப்பண்டமாய்ப் பார்க்கும் ஆணாதிக்கத் திமிர்; உழைக்கும் பெண்களை இழிவாய்க் கருதும் வர்க்கத்திமிர் - இவையெல்லாம் சேர்ந்துதான் ஜெயராமின் வார்த்தைகளாக உருமாறின. ஆனால் தமிழினவாதிகள் மற்ற இரண்டு திமிர் குறித்துப் பேசமாட்டார்கள். ஏனென்றால் அந்த திமிர் அவர்களுக்கும் சொந்தமானது. ஜெய்ராம் வேலைக்காரிகளை அவமானப்படுத்தினார் என்றால் ஹேர்டிரஸ்ஸர் என்னும் உழைக்கும் பெண்ணிற்கான பேட்டா பிரச்சினையை முன்வைத்த நடிகையை ‘விபச்சாரி’ என்றவர்தானே தங்கர்பச்சான்?&lt;br /&gt;&lt;br /&gt;ஜெய்ராம் வீட்டின் மீதான வன்முறைத் தாக்குதலுக்கும் சிவசேனாவின் பாசிச நடவடிக்கைகளுக்கும் இடையேயான ஒப்புமைகள் என்ன? மராட்டியத்தில் சிவசேனாவின் வன்முறைகள் தமிழர்கள், தொழிலாளிகள், முஸ்லீம்கள் என்று தொடர்ந்து விரிந்து இப்போது மராட்டியர் அல்லாதோரான வட இந்திய கூலித் தொழிலாளர்கள் வரை வந்து நின்றிருக்கின்றது. இந்தப் பாசிசத்தின் அடிப்படை, தொடர்ச்சியாக எதிரிகளைக் கட்டமைப்பதும், அவர்களின் மீதான வன்முறையை உணர்ச்சிகரமான வெகுமக்கள் அரசியலாக்குவதும்தான். அதற்கு இடையூறான மாற்றுக்குரல்கள் தமது சொந்தப் பிரிவினரிடம் இருந்து வந்தால் கூட (உதாரணம் சச்சின் டெண்டுல்கர்) அவர்களின் மீதான வன்முறையாகக் கூட மாறக்கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவதாக இந்தப் பாசிசத்திற்கு எப்போதும் கருத்தியல் பலம் இருப்பதில்லை. மாறாக உணர்ச்சிவயப்பட்ட சொல்லாடல்களும், வெறுப்பின் அரசியல் மட்டுமே இவற்றின் நடவடிக்கைகளுக்கு பலம் கூட்டும்; மார்க்சியம், பெரியாரியம் மாதிரியான எல்லாவிதக் கருத்தியல் அடிப்படைகளை நீக்கம் செய்த தூய இனவாதத்தை இந்தப் பாசிசம் ‘வெற்றிகரமாக’ முன்வைக்கும். மேலும் பாசிசம் ஒரு சில கருத்தியல் அடிப்படைகள் இருப்பதாக பாவனை செய்தபோதும் கூட, தன் வன்முறைக்கு நியாயம் சேர்க்கும் கூறுகள் தனக்கு முற்றிலும் எதிரான ஒரு தளத்தில் இருப்பதாக நம்பினால் கொஞ்சமும் வெட்கமின்றி அதை உயர்த்திப் பிடிக்கும். பால்தாக்கரே புலிகளை ஆதரித்ததையும், சீமான் பசும்பொன் முத்துராமலிங்கத்தை ஆதரித்ததையும் இங்கு ஒப்பு நோக்கலாம். மேலும் பாசிசத்தின் பிரதான கூறு ஆர்ப்பாட்டம், போராட்டம், உண்ணாவிரதம், மனிதச் சங்கிலி என்று மனித குலப்போராட்டங்கள் இதுவரை கண்டடைந்த எல்லா வழிமுறைகளையும் புறங்கையால் நிராகரித்துவிட்டு, நேரடி வன்முறைக்கு முன்னுரிமை அளிப்பதுதான். இதுதான் ஜெய்ராம் வீட்டின் மீதும் நிகழ்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இங்கே இன்னொரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். இதேநாட்களில் சென்னையில் நடைபெற்ற ‘அனைத்து இந்திய வீடுகளில் வேலை செய்யும் பணிப்பெண்களுக்கான மாநாட்டில்’ ஜெயராமின் கருத்துக்கள் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகியவற்றில் மொழிபெயர்க்கப்பட்டு வழங்கப்பட்டன. ஜெயராமுக்கான கண்டனமும் தெரிவிக்கப்பட்டன. நமது குரல் இந்த கண்டனங்களோடு இணையவேண்டுமே தவிர, நமது கைகள் உழைத்துச் சோர்ந்த இந்த கரங்களோடு இணைய வேண்டுமே தவிர தங்கர்பச்சான், சீமான் மாதிரியான தமிழ்ப்பாசிஸ்ட்களோடு அல்ல.&lt;br /&gt;- அங்குலிமாலா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28593647-6193680534066274778?l=kilumathur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kilumathur.blogspot.com/feeds/6193680534066274778/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28593647&amp;postID=6193680534066274778' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28593647/posts/default/6193680534066274778'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28593647/posts/default/6193680534066274778'/><link rel='alternate' type='text/html' href='http://kilumathur.blogspot.com/2010/02/blog-post.html' title='தங்கர்பச்சான்,சீமான்:தமிழ்ப்பாசிஸ்ட்கள்'/><author><name>மகேந்திரன்.பெ</name><uri>http://www.blogger.com/profile/17863131935297558260</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://i64.photobucket.com/albums/h187/mahendhiranp/mahendhiran.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_4nqliyy-z-Y/S3ZU008t8EI/AAAAAAAAAwg/35qipa4-LxI/s72-c/thangarpatchanlm4.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28593647.post-8095794415666135168</id><published>2010-01-11T20:01:00.000+05:30</published><updated>2010-01-11T20:08:30.788+05:30</updated><title type='text'>ஏன் காங்கிரசிலிருந்து விலகினேன்?</title><content type='html'>எனக்கு, ‘ஏதாவது எழுதலாமா’ என்ற உணர்ச்சி வந்தது. உடனே,‘என்ன எழுதலாம்?’ என்று யோசித்தேன். காகிதம், பேனா எடுத்து எழுத ஆரம்பித்தேன்.“ ஏன் காங்கிரசிலிருந்து விலகினேன்?” என்பது பற்றி எழுதத் தோன்றிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;“ஏன் காங்கிரசிலிருந்து விலகினேன்?” என்று எழுதுகின்ற நான், ‘நான், ஏன் காங்கிரசில் சேர்ந்தேன்?’ என்பதைத் தெரிவிக்கவேண்டியது அவசியமாகும். அதற்குமுன், எனது சரித்திரத்தையும் ஒரு சிறிது எடுத்துக்காட்டுவது அவசியமாகும். &lt;br /&gt;நான் 1879-இல் பிறந்தவன். 1887 வரையில், நான் ஒரு வீட்டுக்கு குழந்தைப் பருவத்திலேயே சுவீகாரமாய், வாய்ப் பேச்சில் கொடுக்கப்பட்டு, அங்கு வளர்ந்து வந்தவன். காரணம் என்னவென்றால், என் தமையனார் பெரியவர்; அவர் காயலாக் குழந்தை; தபசு செய்து வரம் இருந்து பெற்ற பிள்ளை; அதைக் காப்பாற்ற, என்னைக் கொடுத்துவிட்டார்கள். என்னை சுவீகாரம் பெற்றவள், என் தகப்பனாருக்கு - சிறிய தகப்பனார் மனைவி; சிறிது பூமியும், ஒரு வீடும், கொஞ்சம் பணமும் உடையவள்; அன்றியும், அவள் ஒரு விதவை. அந்தஅம்மாள் என்னை வெகு செல்லமாய் வளர்த்து வந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;நான், சிறிது ‘சுறுசுறுப்பான சுபாவமுள்ள’ சிறுவன்; அதோடு வேடிக்கையாக, மற்றவர்கள் சிரிக்கும்படி பேசுகிறவன். மற்றவர்கள், சிரிக்கும்படி பேசுவது இரண்டு விதம். ஒன்று பேச்சில் வேடிக்கை, அதிசயக் கருத்து இருந்து சிரிக்கப்படுவது ஒருவிதம்; மற்றொன்று, மானாவமானமில்லாமல் சங்கதிகளை கீழ்த்தரத்தில் பேசுவதில் சிரிக்க நேருவது மற்றொரு விதம். நான்அதிகமாக, வேடிக்கைக் குறும்புத்தனமாய் சங்கதி பேசுவது வழக்கம். ஆதலால், அது இரண்டாம் தரத்தைச் சேர்ந்தது. வெகு தாராளமாக, கொச்சையாக சங்கதிகளை, பச்சையாகப் பிரயோகம் செய்யும் பழக்கம் என்னிடம் உண்டு. இதை ரசிக்கிறவர்களே கூட்டமாக என் சுவீகார வீட்டில் காணப்படுவார்கள்.&lt;br /&gt;சுவீகாரத் தாய் என்னை அடக்கினாலும், மற்றவர்கள், ‘சிறு குழந்தைகள், அப்படித்தான் இருக்கும்; அடிக்காதே’ என்பார்கள். நான் செல்லமாக வளர்க்கப்படுகிறேன். ஆதலால், அதிகமாக அடிக்கமாட்டார்கள். என்னைப் பார்க்க என் தகப்பனார் அடிக்கடி வீட்டிற்கு வருவார். அவரிடம் இதைச் சொல்லுவார்கள். அவருக்கு கோபமும், சிரிப்பும் வரும். ஏனென்றால், என் பேச்சு ஆபாசமாயிருந்தாலும், அதில் சிறிது அதிசயம், அர்த்தபுஷ்டி என்பதும் இருக்குமாம். அதனால், உள்ளே சிரித்துக்கொண்டே என்னைக் கண்டித்துவிட்டுப் போய்விடுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் என்னை படிக்கப் போட்ட பள்ளிக்கூடம், ஒரு ஓலைச்சாலைக் குடிசு. 16 அடி நீளம், 8 அடிஅகலம் இருக்கும். அதில் சுமார் 50 பிள்ளைகள் படிப்பார்கள். 5 வயது முதல் 13 வயதுவரை வயதுள்ளவர்கள். வீட்டில் காலித்தனம், தெருவில்வம்பளப்பு - கலகம், பள்ளியில் சுட்டித்தனம், வளர்ப்பில் செல்லம் (செல்வம்) இவைகளால் நான் கற்றது, வாயாடித் தனம்தான் என்று சொல்வார்கள். இந்த வாயாடித்தனம், வெட்கமில்லாமல் - பயம் இல்லாமல் - செல்ல வழி கிடைத்துவிட்டால், அது எங்கு போய் நிற்கும். . . ? சொல்ல வேண்டுமா. . . ? என் தமையனார் நல்ல வளப்பம் பெற்று, உடல் நலம் அடைந்த உடன் என் தாயார் பிடிவாதத்தால், என் சுவீகாரம் ரத்தாக்கப்பட்டு, நான் தகப்பனார் வீட்டிற்கே அழைத்துக்கொள்ளப்பட்டு - அங்கு சென்றதும் இரண்டொரு வருடம் முனிசிபல் ஆரம்பப் பள்ளியில் படிக்க வைக்கப்பட்டு - அங்கும் வாத்தியாரால் என்னை வைத்து சமாளிக்க முடியாமல் - நாலாவது வகுப்பு ‘ப்ரைமரி பரீட்சை’ அதாவது, ஒரு ரூபாய் பணம் கட்டி, அம்மை குத்திக்கொண்டு பரீட்சை எழுதுவது, பெரிதும் சிலேட்டிலேயே, பரீட்சை எழுதிக் காட்டவேண்டும். இந்த பரீட்சை பாசானால் கணக்கு மணியம், அட்டெண்டர் முதலிய வேலைக்குப் போகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்ததால் அங்கு எனக்கு செவுடிப் (தமிழ்க் கணக்கு) பாடமிருந்தாலும் முனிசிபாலிடி பள்ளியில் 4-வது பரீட்சை பாசாகி (என் பேர், செயிண்ட் ஜார்ஜ் கெஜட்டில் வந்து) விட்டதாலும், வாத்தியாருக்கு என்னைப் பள்ளியில் வைத்து சமாளிக்க முடியாமற் போனதாலும், என் தகப்பனாருக்கு, என்னை மேலும் படிக்க வைக்க முடியாமல், ‘இதுவே போதும்’ என்று கருதி எனது 10 அல்லது 11-வது வயதில் பள்ளியை நிறுத்தி, தன் மண்டிக் கடைக்கு - மூட்டைகளுக்கு விலாசம் போடவும், வண்டிச் சரக்குகளுக்கு விலை ஏலம் கூறவுமான வேலையில் போட்டுவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் கடைக்கு, அந்தக் காலத்தில் “குறைந்தது தினம் 50 வண்டி சரக்குகளுக்குக் குறையாமல் 100 வண்டி வரையில் மஞ்சள், மிளகாய், தானியப்பயிர் வகைகள், எண்ணெய், கைராட்டை நூல், வெல்லம், கருப்புக்கட்டி (பனை வெல்லம்) முதலியவைகள் வரும். இந்த வண்டிகளுக்கு வண்டிக்கு இரண்டு பேருக்குக் குறையாமல் வருவார்கள். வியாபாரத்திற்கு, வாங்குவதற்கும் பலர் வருவார்கள். எனக்கு இந்த வெளியூரிலிருந்து வருகிறவர்களிடம் பேசுவதும், அவர்களுக்கு வேண்டிய சில்லரைச் சவுகரியம் செய்து கொடுப்பதும் எனது வேலையாக இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;‘நான் மண்டி முதலாளி மகன்’ ஆகிவிட்டதால், என்னிடம் அவர்களுக்கு ஒரு பற்றுதல் ஏற்படுவது இயற்கை; ஆதலால், நேரப்போக்காகவும் இருந்ததால் அங்கும் பேச்சு வளர்ச்சியடைய ஆரம்பித்துவிட்டது. இந்தப் பேச்சு வளர்ச்சியடைய, அடைய, தர்க்கவாதமும் கூடவே வளர்ச்சியடைய ஆரம்பித்துவிட்டது. ‘இயற்கை வாயாடிக்கு சிறிது சட்ட ஞானமும் இருந்தால், அவன்தான் கெட்டிக்கார வக்கீல்’ என்று சொல்லப்படுவது வழக்கம். அதிலும், கொஞ்சம் பகுத்தறிவு உணர்ச்சியிருந்தால், உண்மையிலேயே கெட்டிக்காரனாவான். யோக்கியமானவனா, அயோக்கியமானவனா என்பது வேறு விஷயம்; அவன் நிச்சயமாக கெட்டிக்காரப் பேச்சாளியாவான். எனக்கு, எப்படியோ பேசுவதில் ஆசை ஏற்பட்டு, இந்தப்படி கெட்டிக்காரப் பேச்சாளியாக நான் ஆகவேண்டுமென்பதற்காக, ‘வேண்டுமென்றே’ குயுக்தி, தர்க்கம், மனதறிந்து எதிர்ப்பு பேசுவது இந்த மாதிரியாக பேச ஆரம்பித்து, பிறகு இப்படிப் பேசுவது என்பது எனக்குச் சுபாவமாக ஆகிவிட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் கடையில் நான் இப்படிப் பேசுவது தவிர, எங்கள் வீடு அந்தக் காலத்தில் அதாவது 1890-இல் சிறிது பணக்கார வீடு என்று ஆகி இருந்ததால், வைணவ மத விஸ்வாசமுள்ள பாகவதர் வீடாகவும் இருந்ததால், கோயில், உற்சவம் முதலியவைகளில் சிறிது சிரத்தை எடுத்து செலவு செய்யும் வீடாகவும் இருந்ததால், சதா சந்நியாசிகள், மத பக்தர்கள், பாகவதர்கள், புராணீகர்கள், வித்வான்கள், சொந்தமாக வந்து பயன்பெற்றுப்போகவும், 4 நாள், 8 நாள் தங்கிப் போகவுமான வீடாகவும் ஆகிவிட்டதால், இவர்களிடமும் வம்பளத்தல், தர்க்கம் பேசுதல் ஆகிய வசதி அதிகமாகிவிட்டது. எனவே, கடையில் கிராமத்தாரிடமும், சந்தை வியாபாரிகளிடமும் பேசுவது மாத்திரமல்லாமல், வீட்டில் மத பக்தர்கள், வித்வான்களிடமும் பேசுவதுமாக நேரிட்டுவிட்டதால் பின்கண்ட இவர்களிடம் பேசுவது மத எதிர்ப்பு, சாஸ்திர எதிர்ப்பு, புராண எதிர்ப்பு, கடவுள் எதிர்ப்பு என்கிற அளவுக்குப் போய்விட்டது. இதுவே, என்னை ஜாதி, மதம், கடவுள் என்கின்ற விஷயங்களில் நல்ல முடிவு ஏற்படும்படி செய்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் காரணமாக எனக்குப் பார்ப்பனீயத்தில் ஒரு வெறுப்பு ஏற்பட்டுவிட்டது. பார்ப்பனர் உயர் வாழ்வில் எனக்கொரு பொறாமையும் ஏற்பட்டுவிட்டது; என்றாலும், பார்ப்பனருடன் நெருங்கிப் பழகுவதில் சிறிதும் எனக்கு அசவுகர்யமோ, பார்ப்பனர் என்னைப்பற்றி தவறாக நினைக்கும் தன்மையோ ஏற்பட்டதில்லை என்றே சொல்வேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சாதாரணமாக எனக்கு 1900 - த்திலேயே ‘பார்ப்பனர் - தமிழர்’ என்ற உணர்ச்சியுண்டு. பேசும்போது, இந்தப் பிரிவு எனக்கு அடிக்கடி ஏற்படும்; என்றாலும், நான் பார்ப்பனருக்கு நல்ல பிள்ளையாகவே இருந்தேன். என் தகப்பனார், பார்ப்பனருக்கு ரொம்பவும் தர்மம் செய்வார்; அடிக்கடி சமாராதனை செய்வார். இது எனக்கு வருத்தமாக இருக்குமென்றாலும், பார்ப்பனர்கள் நான் பேசுவதைக் குற்றமாக எண்ணமாட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;---------------- &lt;br /&gt;&lt;br /&gt;நூல்:- ”தந்தை பெரியாரே எழுதிய சுயசரிதை” பக்கம் 1-4&lt;br /&gt;&lt;br /&gt;அனுப்பி உதவியவர்: தமிழ் ஓவியா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28593647-8095794415666135168?l=kilumathur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kilumathur.blogspot.com/feeds/8095794415666135168/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28593647&amp;postID=8095794415666135168' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28593647/posts/default/8095794415666135168'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28593647/posts/default/8095794415666135168'/><link rel='alternate' type='text/html' href='http://kilumathur.blogspot.com/2010/01/blog-post_11.html' title='ஏன் காங்கிரசிலிருந்து விலகினேன்?'/><author><name>மகேந்திரன்.பெ</name><uri>http://www.blogger.com/profile/17863131935297558260</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://i64.photobucket.com/albums/h187/mahendhiranp/mahendhiran.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28593647.post-8334411888780344527</id><published>2010-01-08T18:05:00.001+05:30</published><updated>2010-01-08T18:09:35.312+05:30</updated><title type='text'>புரட்சியின் நிறம் கறுப்பு</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_4nqliyy-z-Y/S0cncLBw4OI/AAAAAAAAAwA/qCx2FDjO31I/s1600-h/evr-with-periyar.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 302px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/_4nqliyy-z-Y/S0cncLBw4OI/AAAAAAAAAwA/qCx2FDjO31I/s400/evr-with-periyar.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5424347641141059810" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;'சீர்திருத்தம் என்பது ஓட்டை, உடைசலை அடைக்கிற வேலை. எல்லாவற்றையுமே தலைகீழாகக் கவிழ்ப்பதுதான் உண்மையான புரட்சி!'- புரட்சியின் நிறம் சிவப்பு என்பதைக் கறுப்பு என்று மாற்றிக் காட்டிய கலகப் பேராசான் பெரியாரின் வார்த்தைகள் இவை. சாதி ஒழிப்பு, ஆணாதிக்க எதிர்ப்பு, சமத்துவப் பொதுவுடமைச் சமுதாயம் ஆகியவைதான் பெரியாரின் செயல்பாட்டு அடிப்படைகள். இந்தியாவில் எத்தனையோ பேர் இந்த அநீதியான சாதி அமைப்புக்கு எதிராகப் போராடினார்கள் என்றபோதிலும், முதன்முதலாக பெயருக்குப் பின்னால் சாதி போட்டுக்கொள்ளும் பழக்கத்தை ஒழித்த பெருமிதத்தை தமிழ்நாட்டுக்கு உருவாக்கித் தந்தவர் பெரியார். இன்று திருமணப் பத்திரிகைகள் தவிர, பொதுவெளியில் சாதிப் பெயர்கள் இல்லை என்றால், அதற்குக் காரணம் பெரியார்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;சுய மரியாதை இயக்கத்தின் முதல் மாநாட்டுக்கான அழைப்பிதழே புரட்சிகரமாக இருந்தது. 'தனியாக வாழும் பெண்கள், விதவைகள், விபசாரிகள் என்று தங்களைக் கருதிக்கொள்வோர் சிறப்பாக இந்த மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும்' என்று அழைப்பு விடுத்தார். திருமணம் பெண்களை அடிமைப்படுத்துகிறது என்பதால், 'திருமணம் என்பதை கிரிமினல் குற்றமாக்க வேண்டும்' என்றார். 'தாலியும் நீண்ட கூந்தலும் பெண் அடிமைச் சின்னங்கள்' என்றவர், கிராப் வெட்டிக்கொள்கிற பெண்களுக்குப் பரிசு வழங்கு வதாகவும் அறிவித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;ஆண் குழந்தைகளுக்கும் பெண் குழந்தைகளுக்கும் பொதுவான பெயர் இட வேண்டும். கற்பு என்பது எவ்வளவு அயோக்கியத்தனமோ அதேபோல் விபசாரம் என்பதும் அயோக்கியத்தனம் என்றெல்லாம் எழுதியதும் பேசியதும் அவருக்கே மட்டுமான தைரியம். கலகத்தின் உச்சிக்கே போனவர், 'பெண்கள் பிள்ளை பெறும் இயந்திரங்கள் இல்லை. அவர்களுடைய கர்ப்பப் பைகளை அகற்ற வேண்டும்' என்றார். தன் முதல் மனைவி நாகம்மாள் இறந்தபோது வெளியிட்ட இரங்கல் அறிக்கையில், 'நாகம்மை தான் நம்பிய ஆணாதிக்கத்துக்கு 100 சதவிகிதம் உண்மையாக இருந்தார். ஆனால், நான் பேசிய முற்போக்குக்கு அந்தளவு உண்மையாக இருந்ததில்லை' என்று தன்னை வெளிப்படையாகத் தமிழ்ச் சமூகத்தின் முன் விமர்சனத்துக்காகக் கிடத்தினார். &lt;br /&gt;&lt;br /&gt;சாதி, மதம், கடவுள், காதல், திருமணம், குடும்பம், குழந்தைப்பேறு, ஒழுக்கம், தேசியம், மொழிப்பற்று என இதுவரை கட்டியமைக்கப்பட்ட புனிதங்கள் அனைத்தையும் போட்டு உடைத்தார். தேசியக் கொடி, அரசியல் சட்டம், காந்தி சிலை, பிள்ளையார் சிலை, ராமன் படம் என யாரும் கைவைக்கத் தயங்குகிற புனிதங்களைக் கொளுத்தினார், செருப்பால் அடித்தார். 'நமது மொழி, சாதி காப்பாற்றும் மொழி'யாக இருக்கிறது என்று சொன்ன பெரியார், அதனாலேயே 'தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி' என்றார். 'அரசியல்வாதிகள் பொறுக்கித் தின்ன அரசியல்' என கடுமையாக விமர்சித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;இறுதிக் காலத்தில் உடல்நிலை வாட்டியபோதும் மூத்திரப் பையுடன் தமிழனின் சூத்திர இழிவுபோக்க தமிழ்நாடு முழுக்கச் சுற்றிவந்தார். 'இன்னும் 50 ஆண்டுகளுக்குப் பிறகு, ஈ.வே.ராமசாமி என்னும் பிற்போக்குக்காரன் இருந்தான் என்று உலகம் பேசும். ஏனெனில், உலகம் அந்த அளவுக்கு முற்போக்காகச் செல்லும்' என்றார். ஆனால், அந்தக் கலகக்காரருக்கு முன்னும் பின்னும் அப்படியானதொரு நெருப்பு கிளர்ந்தெழவே இல்லை. பெரியார் ஆசைப்பட்டபடி, பெரியாரைத் தாண்டிச் செல்வதுதான் நாம் அவருக்குச் செலுத்தும் மரியாதையாக இருக்கும்!&lt;br /&gt;&lt;br /&gt;- ரீ.சிவக்குமார்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28593647-8334411888780344527?l=kilumathur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kilumathur.blogspot.com/feeds/8334411888780344527/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28593647&amp;postID=8334411888780344527' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28593647/posts/default/8334411888780344527'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28593647/posts/default/8334411888780344527'/><link rel='alternate' type='text/html' href='http://kilumathur.blogspot.com/2010/01/blog-post.html' title='புரட்சியின் நிறம் கறுப்பு'/><author><name>மகேந்திரன்.பெ</name><uri>http://www.blogger.com/profile/17863131935297558260</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://i64.photobucket.com/albums/h187/mahendhiranp/mahendhiran.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_4nqliyy-z-Y/S0cncLBw4OI/AAAAAAAAAwA/qCx2FDjO31I/s72-c/evr-with-periyar.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28593647.post-2929596741768717394</id><published>2009-12-07T20:09:00.004+05:30</published><updated>2009-12-07T20:12:14.080+05:30</updated><title type='text'>முதல்வருக்கு கோவணாண்டி உசுப்பல் கேள்வி...</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_4nqliyy-z-Y/Sx0Txtxoq0I/AAAAAAAAAv0/jVD2bai7iC4/s1600-h/pv58.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 286px;" src="http://2.bp.blogspot.com/_4nqliyy-z-Y/Sx0Txtxoq0I/AAAAAAAAAv0/jVD2bai7iC4/s400/pv58.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5412504071991503682" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தமிழகத்தின் தன்னிகரற்ற ஒரே தலைவர், நிரந்தர அரசியல் சாணக்கியர், தமிழக முதல்வர், கலைஞரய்யாவுக்கு... மறுபடியும் வணக்கம் போடுறான், இந்த கோவணாண்டி! &lt;br /&gt;&lt;br /&gt;'என்னடா இவன், போன தடவைதான் சுத்திச்சுத்தி அடிச்சான். மறுபடியும் நம்மளையே சுத்தறானேனு கோவப்படாதீங்க. அதுக்கான அவசியத்தை உண்டாக்கினதே நீங்கதான். எங்க கோவணாண்டிக பாஷையில சொல்றதுனா... 'வினையை விதைச்சவன் வினையை அறுக்கணும், தினையை விதைச்சவன் தினையை அறுக்கணும்'.&lt;br /&gt;&lt;br /&gt;'எங்க பொழப்பு பொசுங்கப் போகுது, காப்பாத்துங்க... காப்பாத்துங்க'னு ஆரம்பத்துல இருந்தே கதறுனோம். அப்பயெல்லாம் கண்டுக்காம இருந்துட்டு, கடைசியில கருமாதிக்கு வந்து மவுனமா அழுகுற கதையா... 'கேரள முதல்வர் அளவுக்கு எனக்கு தைரியம் இல்லை'னு முல்லை-பெரியாறு விஷயத்துல அற்புதமா ஒரு அறிக்கை விட்டிருக்கீங்க பாருங்க... அங்கதாங்கய்யா... நீங்க நிக்கறீங்க... அடச்சே, உக்கார்ந்திருக்கீங்க (என்ன சரியா?).&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;'அணையோட நீர்மட்டத்தை உயர்த்தச் சொல்லி, உச்ச நீதிமன்றமே உத்தரவிட்ட பிறகும், அதை நிறைவேற்றாம... சட்டசபையைக் கூட்டி ஒரு சட்டத்தைப் போட்டிருக்கார் கேரள முதல்வர்'ங்கறதுதானே அவரோட தைரியம்னு நீங்க சொல்றது?&lt;br /&gt;&lt;br /&gt;அவரும் ஒங்கள மாதிரி மனுஷன்தானே... ஒங்கள மாதிரி ஒரு முதல்வர்தானே... அவருக்கு மட்டும் எங்கிருந்துங்கய்யா வந்துச்சு.. அத்தனை தைரியம்? அது ஏன்... இங்க மட்டும் இல்லாம போச்சு?&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனைக்கும் கூட்டணி ஆட்சிங்கற பேருல பல வருஷமா மாத்தி மாத்தி காங்கிரஸ§ம் கம்யூனிஸ்டும் ஆண்டுக்கிட்டிருக்கற மாநிலம்தான் கேரளா. தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரன்கிற மாதிரி, ஒரு எம்.எல்.ஏ. ஸீட் இருந்தாலே அங்கெல்லாம் பெரிய ஆளு. ஒடனே அமைச்சராயிடலாம். அந்த அளவுக்கு கோஷ்டி கானம் நிறைஞ்ச ஊரு. ஆனா, ஒரு பிரச்னைனு வந்துட்டா... அதெல்லாத்தையும் தூக்கி எறிஞ்சுட்டு, 'எண்ட தேசம், கேரள தேசம்'னு ஒரே குரல்ல கூவ ஆரம்பிச்சுடறாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா, இங்க என்ன நிலைமை?&lt;br /&gt;&lt;br /&gt;'இலங்கைத் தமிழனுங்களுக்காக பதவியை ராஜினாமா பண்ணுவோம்... பாம் போடுவோம்... பட்டையைக் கிளப்புவோம்...'னு சொல்லிக்கிட்டே இருந்தோமே ஒழிய... ஒரு நாளும் துணிச்சலான நடவடிக்கையில இறங்கல.&lt;br /&gt;&lt;br /&gt;''காவிரித் தண்ணிக்காக கர்நாடகாவை ரெண்டுல ஒண்ணு பார்ப்போம்...''&lt;br /&gt;&lt;br /&gt;''முல்லை- பெரியாறு விஷயத்துல கேரளவுக்கு மரண அடி கொடுப்போம்'' &lt;br /&gt;&lt;br /&gt;இப்படி மூலைக்கொருத்தரா கூவிக்கிட்டிருக்கீங்களே தவிர, ஒரு நாளாச்சும் இங்க இருக்கற அரசியல் கட்சிங்கள்லாம் ஏதாவது ஒரு பிரச்னையில ஒண்ணா நின்னிருக்கோம்னு நெஞ்சுல கையை வெச்சு சொல்லுங்க பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்துல வந்த பார்லிமென்ட் எலக்ஷனப்ப... 'தமிழ்நாடு ஒட்டுமொத்தமா தேர்தல புறக்கணிப்போம். அதன் மூலமா நம்முடைய எதிர்ப்பைக் காட்டுவோம். அதுக்குப் பயந்து இலங்கைத் தமிழர்களை மத்திய அரசு காப்பாத்தும்'னு அருமையா ஒரு யோசனை வெச்சாரே 'கறுப்பு எம்.ஜி.ஆர்.' விஜயகாந்த். அதுக்கு காது கொடுத்திருந்தா... இன்னிக்கு இலங்கையில இப்படியரு ரத்த ஆறு ஓடியிருக்குமா?&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா, பதவி ஆசையில ஆளாளுக்கு ஓடியாடி, கடைசியில இலங்கைத் தமிழனுங்களுக்கு சாவு மணி அடிச்சுட்டீங்க எல்லாருமா சேர்ந்து! &lt;br /&gt;&lt;br /&gt;கிட்டத்தட்ட அதே கதைதான் இப்பவும். ஏற்கெனவே காவிரிப் பிரச்னையில எல்லாமே காலியாகிடுச்சு. இந்த முல்லை-பெரியாறு விஷயத்துலயாவது எல்லாரும் கைகோத்து நிப்பீங்னு பார்த்தா... ஆளாளுக்கு தெற்கயும் வடக்கயும் அரசியல் பண்ணிக்கிட்டு நிக்கறீங்க.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப்பட்ட கேவலமான அரசியலையே பார்த்துப் பார்த்து வளர்ந்ததால சூடு-சொரணை, மானம்-மரியாதை இதையெல்லாம் எப்பவோமூட்டைக்கட்டி வெச்சுட்டான் தமிழ்நாட்டுக் குடிமகன். கறிக்கும்-பிரியாணிக்கும், காசுக்கும்-சரக்குக்கும் எதையும் விக்க துணிஞ்சுட்டான். ஒரு கன்னத்துல அறைஞ்சா, மறு கன்னத்தை மட்டுமில்ல... ஒடம்பு மொத்தத்தையும் காட்டிக்கிட்டு நிக்கறான்!&lt;br /&gt;&lt;br /&gt;இவங்களையெல்லாம் இப்படி மாத்துனது யாரு? மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்க. அந்தப் புண்ணியத்துல உங்களுக்கும் கணிசமான பங்கு இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;முல்லை-பெரியாறு அணையை அழிக்குறதுக்கு திட்டம் போடுறாங்க மலையாளிகனு தெக்க இருக்க சனங்க, சம்சாரிக, அரசியல் கட்சிக, பொதுநல அமைப்புக அறிக்கை, ஆர்ப்பாட்டம்னு அலறுனதை மௌனமா பாத்துகிட்டிருந்தீங்க. முப்பது வருஷ போராட்டத்தை உச்ச நீதிமன்றத்தோட ஒரே உத்தரவு மறுபடியும் ஆரம்ப நிலைக்கே கொண்டு வந்தப்பவும் மௌனமாத்தான் இருந்தீங்க.&lt;br /&gt;&lt;br /&gt;செய்றதெல்லாம் செஞ்சுட்டு, 'ஜனநாயக நாட்டுல உச்ச நீதிமன்றம்தான் பெருசு. அதோட தீர்ப்பைத் தடுத்து தடைச் சட்டம் போட்டு தண்ணிய தடுக்கறாரு அச்சுதானந்தன். நடவடிக்கை எடுக்க வேண்டிய மத்திய அரசு வேடிக்கை பாக்குது. கண்டிக்க வேண்டிய உச்ச நீதிமன்றம் மௌனம் சாதிக்குது. இனி யாருகிட்ட போயி முறையிடுறதுன்னே தெரியலை'னு உடன்பிறப்புக்கு உருக்கமா கண்ணீர் வுடுறீங்க. &lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்கு ஒண்ணு தெரியுமா..? அதைப்படிச்சுட்டு ஒங்க ஒடம்பிறப்புகளே நக்கலா சிரிச்சு, சிரிச்சு வயிறே புண்ணாப்போச்சாம்.&lt;br /&gt;&lt;br /&gt;'கேரள அரசு புதுசா சட்டம் போட்டதைக் கண்டிக்காம, பிரச்னையை அஞ்சு நீதிபதிங்க விசாரிச்சு முடிவெடுப்பாங்க'னு சொல்லிடுச்சே உச்ச நீதிமன்றம்னு கொதிச்சு போய் சொல்லியிருக்கீங்க. ஆனா, நவம்பர் 10-ம் தேதியன்னிக்கு உச்ச நீதிமன்றத்துல இப்படியரு உத்தரவு கொடுக்குறதுக்கு முன்ன, தமிழ்நாடு அரசு சார்பா வாதாடுன வக்கீல் பராசரன்கிட்ட, 'இந்த உத்தரவுக்கு ஒப்புக்கிறீங்களா’னு நீதிபதிக கேட்டிருக்காங்க. அவரு மறுத்திருக்காரு. இடையில எங்கிருந்து உத்தரவு வந்துச்சோ தெரியல... மத்தியானம் நீதிமன்றம் கூடுனதும் 'ஒப்புக்குறோம்'னு சொல்லி, முல்லை-பெரியாறு விஷயத்துக்கு மங்களம் பாடியிருக்காங்க நம்ம ஆளுங்க. காலையில, 'ஒப்புக்க மாட்டேன்'னு சொன்னவரு, மதியம் எப்படி ஒப்புக்கிட்டாரு?&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப இவ்வளவு வேதனைப்பட்டு முழம் நீளத்துக்கு அறிக்கையை விட்டுக்கிட்டிருக்கற நீங்க, அன்னிக்கே 'ஒப்புக்க முடியாது'னு சொல்லியிருக்க வேண்டியதுதானே..? அதைவிட்டுட்டு, இப்ப அழுது புலம்புறது யாரை ஏமாத்த..? &lt;br /&gt;&lt;br /&gt;'விட்டு கொடுத்தவங்க, கெட்டுப் போறதில்லை’னு சொலவடை சொல்வாங்க. ஆனா, விட்டுக் கொடுத்ததால கெட்டுப் போன வரலாறுதான் தமிழகத்தோட வரலாறு. 1956- ல தமிழ்நாட்டுக்கு முதலமைச்சரா இருந்த காமராஜர் இந்திய தேசியம் பேசிகிட்டிருந்ததால தமிழ்நாட்டுல இருந்த தேவிகுளம், பீர்மேடு இதெல்லாம் நம்மை விட்டு போயிடுச்சு. இப்படி கைவிட்டு போன பகுதியில மட்டும் சின்னதும், பெருசுமா இருபதுக்கும் மேல வற்றாத ஆறுக இருக்கு. இப்ப இந்த தண்ணி முழுசும் வீணா அரபிக் கடலுக்குத்தான் போகுது. &lt;br /&gt;&lt;br /&gt;1980-ல முதலமைச்சராயிருந்தா எம்.ஜி.ஆர்., தமிழ்நாட்டு போலீஸ்கிட்டயிருந்த முல்லை-பெரியாறு அணை பாதுகாப்பு பொறுப்பை, கேரள போலீஸ§க்கு தாரை வார்த்தாரு. இப்ப என்னாச்சு..? நம்ம இன்ஜினீயரையே அணைக்குள்ள நுழைய விடாம துரத்தியடிக்குது கேரளா.&lt;br /&gt;&lt;br /&gt;உச்ச நீதிமன்றம் உத்தரவு கொடுத்தும் அணையோட மட்டத்தை உயர்த்தறதுக்குண்டான வேலைகளைப் பார்க்காம, தேர்தல்ல ஜரூரா இருந்தாங்க கொடநாட்டு அம்மா. இப்ப என்னடான்னா... 'எல்லாத்துக்கும் காரணம் கருணாநிதிதான்' விடிஞ்சா, பொழுதுபோனா கூப்பாடு போடுறாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;'பிறக்கும் குழந்தை இறந்து பிறந்தால், அதை வாளால் கீறி புதைக்கும் வீரம் செறிந்தது தமிழர்களின் வரலாறு’’னு சொல்லுவாங்க. அந்தத் தமிழர்களோட தலைமகன்னு சொல்லிக்கறீங்க... ஆனா, கேரளாவுக்கு இருக்குற துணிச்சல்ல கால்வாசிக்கூட இல்லாம, வாளெடுக்கறதுக்கு பதிலா தாள்ல புலம்புறீங்களே... இதுதான் தமிழனோட வீரமா..? &lt;br /&gt;&lt;br /&gt;இப்படி எல்லா அரசியல்வாதிகளாலயும் இருக்கற ஒவ்வொண்ணையும் இழந்துகிட்டே இருக்கறதுதான் எங்களோட புதிய வரலாறு. &lt;br /&gt;&lt;br /&gt;'வந்தாரை வாழவைக்கும் தமிழனமே... நீ சொந்த நாட்டானையே சுரண்ட ஆரம்பித்தது எப்போது'னு சினிமா வசனம் ஞாபகம் இருக்கும்னு நினைக்கிறேன். அப்படித்தான் இப்ப எல்லா அரசியல்வாதிகளையும் பார்த்து கதற ஆரம்பிச்சுருக்கான் அப்பாவி தமிழன். அவனோட வயித்தெரிச்சலும், விவசாயிகளோட வேதனையும் இதுக்குக் காரணமானவங்களை நிச்சயம் சும்மா விடாது. வரலாற்றுல 'கருப்புப் பக்கங்கள்'லதான் ஒங்க எல்லாரையும் குறிக்கப்போகுது காலம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா... 'வந்தவனும் சரியில்ல... வாய்ச்சவனும் சரியில்ல'னு சொல்ற மாதிரி எதுவுமே சரியில்லாத நாட்டுல நாதியத்த விவசாயிக... யாருகிட்ட போயி முறையிடுறதுனுதான் தெரியல.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிக்கு&lt;br /&gt;கோவணாண்டி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28593647-2929596741768717394?l=kilumathur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kilumathur.blogspot.com/feeds/2929596741768717394/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28593647&amp;postID=2929596741768717394' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28593647/posts/default/2929596741768717394'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28593647/posts/default/2929596741768717394'/><link rel='alternate' type='text/html' href='http://kilumathur.blogspot.com/2009/12/blog-post.html' title='முதல்வருக்கு கோவணாண்டி உசுப்பல் கேள்வி...'/><author><name>மகேந்திரன்.பெ</name><uri>http://www.blogger.com/profile/17863131935297558260</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://i64.photobucket.com/albums/h187/mahendhiranp/mahendhiran.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_4nqliyy-z-Y/Sx0Txtxoq0I/AAAAAAAAAv0/jVD2bai7iC4/s72-c/pv58.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28593647.post-4009159418099140371</id><published>2009-09-29T18:40:00.002+05:30</published><updated>2009-09-29T18:45:41.913+05:30</updated><title type='text'>பன்றி காய்ச்சல் Vs மகாவிஷ்ணு</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_4nqliyy-z-Y/SsIIYOLBwHI/AAAAAAAAAvU/I_1gvqAiZIU/s1600-h/vishnu_painting_QJ93_l.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 302px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/_4nqliyy-z-Y/SsIIYOLBwHI/AAAAAAAAAvU/I_1gvqAiZIU/s400/vishnu_painting_QJ93_l.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5386877316502765682" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பன்றியை இந்து புராணங்கள் - மகா விஷ்ணுவின் அவதாரம் என்று புகழ் கின்றன. ஆனால், ஒரு சக ‘இந்து’வை ‘பன்றி’ என கூறி விட்டால் அதற்காக எந்த இந்தும் மகாவிஷ்ணுவுக்கு ஒப்பிட்டதாக பெருமைப்படுவது இல்லை. திருப்பி அடித்து விடுவான். பன்றி அவதாரம் எடுத்த மகாவிஷ்ணுவுக்கு பன்றி விரும்பி சாப்பிடும் “உணவை”யே படைக்கலாமா என்று கேட்டால், உடனே மதத்தைப் புண்படுத்துகிறார்கள் என்று ஓலமிடத் தொடங்கி விடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;இப்போது பத்திரிகைகளில் கதா நாயகன் ஒவ்வொரு நாளும் மகாவிஷ்ணு தான்! உலகம் முழுவதும் ‘மகாவிஷ்ணு’ வைக் கண்டு நடுங்கிக் கொண்டிருக்கிறது. மகாவிஷ்ணு, காய்ச்சல் அவதாரம் எடுத்து மக்களின் உயிரோடு திருவிளையாடல் நடத்து கிறான். அதற்காக மக்கள் பகவான் வந்து விட்டார் என்று கூறி மகிழ்ச்சிக் கூத்தாட தயாராக இல்லை. ‘மகாவிஷ்ணு’ காய்ச்சலை அதாவது, பன்றி காய்ச்சலை விரட்டி அடிப்பதற்கு மருந்துகளைக் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்கள். மகாவிஷ்ணு (பன்றி) காய்ச்சல் - தொற்று நோய். இந்தத் தொற்று நோய்களையெல் லாம் தடுப்பதற்கு நமது முன்னோர்களே பாதுகாப்பான ஏற்பாடுகளை செய்திருந்த தாகவும், அதுதான் ‘நமஸ்தே’ என்று கும்பிடு போடும் பழக்கம் என்றும் ஒரு பார்ப்பனர் ‘இந்து’ ஏட்டில் (ஆக. 23) ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;“மவுண்ட் ரோடு மகாவிஷ்ணுவான” இந்துவும் அதை வெளியிட்டிருக்கிறது. ஒருவருக் கொருவர் கை குலுக்காமல், கும்பிடு போடும் பார்ப்பன கலாச்சாரம் ‘தீண்டாமை’யின் மறுவடிவம்தான். நாட்டில் தொற்று நோய்கள் பரவா திருக்க ‘தீண்டாமை’யைப் பின்பற்ற வேண்டும் என்று கூறுவதன் மூலம் ‘தீண்டாமை nக்ஷமகரமானது’ என்று சங்கராச்சாரி கூறுவதை நியாயப்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். எப்போதோ வந்து போகும் தொற்று நோய்களுக்காக சமூகம் ஒருவரையொருவர் ‘தீண்டாமல்’ வாழ்வதே சிறந்த தத்துவம் என்று கூறி, இந்து பார்ப்பனியத்தை நியாயப்படுத் தும் எல்லைக்குப் போய் விடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கேயாவது விமான விபத்துகள் நடந்தால் கூட அதற்காகத்தான் ‘கடல் தாண்டக் கூடாது’ என்று, ‘இந்து தர்மம்’ ஏற்கனவே கூறியிருக்கிறது என்று இவர்கள் கூறினாலும், வியப்பதற்கு இல்லை. தகாத உறவுகளால் ‘எய்ட்ஸ்’ பரவுகிறது என்பதால்தான் நமது முனிவர்கள் இல்லறத்தையே வெறுத்தார்கள் என்று கூறி, இனி, திருமண மில்லாத வாழ்க்கையே சிறந்தது என்று இவர்கள் கூறுவார்களா, என்று எவரும் கேட்டுவிடக் கூடாது. ஒருவருக்கொருவர் கைகுலுக்கிக் கொள்ளாமல் தூர நின்று, ‘கும்பிடு போட்ட’ காலங்களில் பிளேக் நோயும் காலராவும் பரவி, ஊர் ஊராக பிணங்கள் விழுந்தனவே. அதற்கு என்ன காரணமாம்! இத்தகைய அபத்தங் களை கட்டுரையாக வெளியிடும் மவுண்ட் ரோடு ஆங்கில “பன்றி”கள் (அதாவது மகாவிஷ்ணுவின் மாற்றுப் பெயர் என்று அறிக!) ‘தீண்டாமை’யை நியாயப்படுத்துகின்றனவா? இதற்காக ‘தீண்டாமை’ தடுப்புச் சட்டத்தின் கீழ் எவராவது இவர்கள் மீது வழக்கு தொடர்ந்தால் அதற்கு நாம் பொறுப்பு அல்ல. தன்மானமுள்ளவர்கள் நாட்டில் இல்லாமலா போய் விடுவார்கள்?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28593647-4009159418099140371?l=kilumathur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kilumathur.blogspot.com/feeds/4009159418099140371/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28593647&amp;postID=4009159418099140371' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28593647/posts/default/4009159418099140371'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28593647/posts/default/4009159418099140371'/><link rel='alternate' type='text/html' href='http://kilumathur.blogspot.com/2009/09/vs.html' title='பன்றி காய்ச்சல் Vs மகாவிஷ்ணு'/><author><name>மகேந்திரன்.பெ</name><uri>http://www.blogger.com/profile/17863131935297558260</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://i64.photobucket.com/albums/h187/mahendhiranp/mahendhiran.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_4nqliyy-z-Y/SsIIYOLBwHI/AAAAAAAAAvU/I_1gvqAiZIU/s72-c/vishnu_painting_QJ93_l.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28593647.post-3582714967738009295</id><published>2009-09-12T18:52:00.001+05:30</published><updated>2009-09-12T18:59:30.418+05:30</updated><title type='text'>அவதூறுகளை அள்ளி வீசூம் சீர்குலைவு சக்திகள்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_4nqliyy-z-Y/SquiJadhr_I/AAAAAAAAAu8/u1YxnFGPlgw/s1600-h/prabakaran.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 358px; height: 388px;" src="http://4.bp.blogspot.com/_4nqliyy-z-Y/SquiJadhr_I/AAAAAAAAAu8/u1YxnFGPlgw/s400/prabakaran.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5380572462429876210" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஈழத்தமிழினம் ஒரு மிகப்பெரிய அழிவை சந்தித்திருக்கிறது. 2.85 லட்சம் மக்கள் சிங்கள இனவெறி அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். ஈழத்தமிழர்களின் விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அழித்தொழிக்கப்பட்டுள்ளது. உலகத் தமிழினம் செய்வதறியாது திகைத்து நிற்கிறது. தமிழகத் தமிழர்கள் புழுங்கிச் சாகின்றனர். இத்தகையச் சூழலில், ஈழத்தமிழர்களின் இந்த அவல நிலைக்குக் காரணமான சிங்கள இனவெறி அரசையோ, அதற்கு முழு உதவிகள் புரிந்த இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளையோ கண்டிக்க வக்கில்லாத ஒரு கூட்டம், ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தையும், போராட்ட இயக்கத்தையும், இயக்கத் தலைமையையும் வேண்டுமன்றெ கொச்சைப்படுத்தியும், அவதூறு செய்து எழுதியும் பேசியும் மகிழ்ச்சி கொள்கிற மனசாட்சி இல்லாதவர்களாக இன்றைக்கும் உலவி வருகின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt; ஒரு இனவாத அரசு தன்னால் ஒடுக்கப்படுகின்ற ஓர் இனம், அதன் விடுதலைக்காகப் போராடும் பொழுது அந்த இனத்தில் உள்ள பலவீனமான குழுக்களை முதலில் அடையாளம் காணும் வேலையைச் செய்யும். அப்படி அடையாளம் காணும் குழுக்களை நேரடியாக ஒடுக்குகின்ற இனத்தின் ஆளும் வர்க்கம், தன்னுடன் இணைத்துக் கொள்வதும் உண்டு. மாறாக, அவர்களை இருக்குமிடத்தில் அப்படியே வைத்துக் கொண்டு அங்கிருந்து நீங்கள் எங்களுக்கான வேலையை செய்யுங்கள் என உத்தரவிடுவதும் உண்டு. டக்ளஸ் தேவானந்தா, கருணா போன்றவர்கள் முதல் வகையறா. “இந்து வெறி” அ.தி.மு.க., பார்ப்பனீய பா.ச.க., பூணூல் கம்யுனிஸ்ட்கள் மட்டுமின்றி முற்போக்கு முகமூடி போட்டுத் திரியும் ம.க.இ.க, உள்ளிட்ட அமைப்புகள், “துக்ளக்” சோ, சு.சுவாமி, “இந்து” என்.ராம், அ.மார்க்ஸ், இரயாகரன், சோபாசக்தி உள்ளிட்ட முற்போக்கு முகமூடிகள் அணிந்த தனிநபர்கள் என இரண்டாம் வகையறா பட்டியல் நீள்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அ.தி.மு.க., பா.ச.க., பார்ப்பனக் கம்யுனிஸ்ட் கட்சி உள்ளிட்ட ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளையும், சோ, சு.சுவாமி, இந்து ராம் போன்றவர்களைப் பற்றி நாம் விவாதிக்கத் தேவையில்லை. அவர்கள் நேரடியாக எதிரி முகாமில் எச்சம் தின்பவர்கள் என்பது வெளிப்படை. ஆனால், ம.க.இ.க., இரயாகரன், அ.மார்க்ஸ், சோபா சக்தி உள்ளிட்டவர்கள் அப்படியானவர்கள் அல்ல. அதாவது சிங்கள அரசின் வெளிப்படையான சேவகர்கள் அல்ல. மறைமுக சேவகர்கள் அவ்வளவே. ம.க.இ.க.வினரின் அரசியலைக் கேள்விக்குட்படுத்தி எழுதப்பட்ட எமது முந்தைய கட்டுரைக்கு “கீற்று” இணையதளத்தில் சிலர் எதிர்வினை புரிந்திருந்தனர். கேள்விகளுக்கு பதில் கேட்டால் அதற்குப் பதிலளிக்காமல் அக்கேள்விகளை மறுபடியும் கேள்விக்குட்படுத்துவதும், “நக்கல்” அடித்து பேசி கேள்வியை திசைமாற்றுவதும், வாய்க்கு வந்தபடி திட்டிவிட்டு “நாங்கதான்டா புரட்சியாளர்கள்.. நீங்களெல்லாம் துரோகிகள்/எதிரிகள்" என்று நகைச்சுவை செய்வதும் இவர்களுக்கு கைவந்த கலை என்பதனை இவர்களது கமெண்ட்டுகள் நமக்கு உணர்த்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;விமர்சனம் என்ற போர்வையில் ம.க.இ.க., இரயாகரன் உள்ளிட்டோர் செய்து வரும் வேலைகளை மென்மையான முறையில் அ.மார்க்ஸ், சோபா சக்தி வகையறாக்கள் “முற்போக்கு” முகமூடியில் ஒளிந்து கொண்டு செய்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழவிடுதலைக்கு உதவ முடியாமலும், தம் இரத்த சொந்தங்களை போர் அழிவிலிருந்து காப்பாற்ற முடியாமலும் போய் விட்டதே என்ற வருத்தம் தமிழ்நாட்டுத் தமிழர் மனதில் ஆறாக் காயத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து சிங்கள அரசிற்கு உதவிகளை வாரி இறைத்து சிங்களனுடன் “நட்புறவு” பேணும் இந்தியாவின் இவ்வகை போக்கால், இந்த வருத்தம், இந்திய அரசின் மீதான கோபத்தை கிளறிவிட்டிருக்கிறது. இந்திய அரசின் மீது மட்டுமல்ல, தமிழ்நாட்டை இந்திக்காரர்களுக்குக் காட்டிக் கொடுத்து லாபம் பெறும் தமிழ்நாட்டு ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகள் மீதும் தமிழக மக்களுக்கு இயல்பானதொரு கோபமும் இருக்கின்ற நிலையில், இவற்றைத் தணிக்க பெருந்திட்டம் தீட்டி வருகின்றது, ஆரிய இந்திய அரசு. அந்த திட்டத்தின் ஒரு பகுதியாகத் தான் தமிழ்நாட்டில் எழுந்து வரும் தமிழ்த் தேசியம், ஈழவிடுதலை குறித்த கருத்தியல்கள் மீது தாக்குதல் தொடுத்து வருகின்றது, இக்கூலிக் கும்பல.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப்புலிகள் மீதான விமர்சனங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;“புலிகள் அரசியல் போராட்டத்தை முன்னெடுக்கவில்லை. வடதுசாரிய சிந்தனையுள்ளவர்களாக இருந்தனர். சாதி ஒழிப்பைப் பற்றி எங்கும் அவர்கள் பேசவில்லை. புலிகள் முஸ்லிம்களை விரட்டினார்கள். சிங்கள உழைக்கும் மக்களுடன் இணைந்து புலிகள் செயல்படவில்லை. மாற்று இயக்கத்தினருடன் இணைந்து பணியாற்றவில்லை. தமிழ் மக்களை புலிகள் அழித்தொழித்தனர்”&lt;br /&gt;&lt;br /&gt;- மேற்கண்டவை தாம் புலிகள் மீதான இக்கூலிக்கும்பலின் பிரதான குற்றச்சாட்டுகள். இந்தக் குற்றச்சாட்டுகளை எழுப்புவதால் இவர்கள் எல்லோரும், ஏதோ சனநாயகவாதிகள் என்றோ, தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் மீது உண்மையிலேயே அக்கறை கொண்டவர்கள் என்றோ கருத முடியாது. என்.ஜி.ஏ. அமைப்புகள் செய்யும் பணிகளுக்கு பின்னால் ஏகாதிபத்தியம் எப்படி ஒளிந்து கொண்டுள்ளதோ அதே போன்று தான் இவர்களது நடவடிக்கைகளுக்குப் பின்னால், ஆரியம் ஒளிந்து கொண்டுள்ளது. இவர்களது செயல்பாடுகளை உற்று நோக்கினால், சிங்களப் பேரினவாதம் செய்யும் வேலையை இவர்கள் நம்முடன் இருந்து கொண்டே செய்கிறார்கள் என்பது புலப்படும். இன்னும் சரியாக சொல்லப் போனால், சனநாயகம், மார்க்சியம் போன்ற முற்போக்கு கருத்தியலின் சொல்லாடல்களைக் கொண்டு, அவதூறுகளை அள்ளி வீசும் அற்பத்தனங்களை திறம்பட செய்பவர்கள் இவர்கள் என வரையறுக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;புலிகள் என்றுமே விமர்சனத்திற்கு அப்பாற்ப்பட்டவர்கள் கிடையாது. அவர்களும் விமர்சனத்திற்கு உட்பட்டவர்கள் தான். அந்த விமர்சனத்தை அவர்கள் மீது எழுப்புகின்றவர்களின் நோக்கமும், விதமும் தான் விமர்சனங்களை எழுப்புபவர்களின் அரசியலைத் தீர்மானிக்கிறது. தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்ட அமைப்பான விடுதலைப்புலிகள் இயக்கம், தன் மீதான விமர்சனங்களுக்கு ஏற்ப தன்னை திருத்திக் கொண்டு செயல்பட வேண்டும் என்று இவர்கள் எண்ணுவதில்லை. மாறாக, அப்போராட்ட அமைப்பு மீது சேறடித்து வீழ்த்துவதன் மூலம், சிங்களப் பேரினவாதத்திற்கு மறைமுகமாக துணை போவது தான், இந்த எழுத்துப் போர் “ஏகாம்பரங்களின்” வேலைத்திட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;கீற்று இணையதளக் கட்டுரையின் பின்னூட்டத்தில் ம.க.இ.க. தோழர் ஒருவர் எழுதியிருந்தார், ”நல்ல நண்பன் குறைகளை சுட்டிக் காட்டுவான்” என்று. நான் திருப்பிக் கேட்கிறேன், “நீங்கள் என்றைக்கு புலிகளுக்கு நண்பனாக இருந்தீர்கள் என்று சொல்லுங்கள் முதலில்”. வாய்த்திறந்தாலே “புலிகள் பாசிஸ்ட்கள்” என்று சொல்வதும், எழுதுவதும் தவிர தமிழ்நாட்டில் இவர்களது ம.க.இ.க.வும் அதன் தலைமையும் ஈழத்திற்காக செய்த வேலை தான் என்ன? “பிரபாகரன் ஒரு பாசிஸ்ட்டு” - “புலிகள் இயக்கம் ஒரு பாசிச இயக்கம்” என்று வீரத் தமிழ்மகன் முத்துக்குமார் இறுதி ஊர்வலத்தில் இவர்கள் முழங்காமல் அடக்கி வாசித்ததும், புலிகள் சர்வாதிகாரிகள் என்று சொல்லி விட்டு பின்னர், அவர்களுக்கே ”வீரவணக்கம்!” போட்டுக் கொண்டதும் தானே இவர்களது ”வீரதீர” நடவடிக்கைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;விமர்சனம் என்ற பெயரில் தான் மேற்கொண்டுவரும் காட்டிக்கொடுப்பு வேலைகளையும், அவதூறுகளையும் இதுவரை யாருமே அங்கீகரித்தில்லை என்பது தெரிந்தும் அதனை மட்டுமே தொடர்ந்து செய்து வரும் இவர்களது “வீரதீர” நடவடிக்கைகள் வேடிக்கையாக இருக்கிறது. ஈழப் போராட்டம் பற்றி இவர்கள் எழுதுவதை கண்டாலே இதனை தெரிந்து கொள்ளலாம். இவர்களைப் போன்ற சிங்கள இனவெறி அரசின் துணைக்குழுக்கள் எழுப்பும் கேள்விக்கெல்லாம் நாம் பதிலெழும் பட்சத்தில் அவர்கள் திருந்திவிடப் போவதில்லை. மாறாக, அப்படிப்பட்ட துரோகக் குழுக்களில் உண்மை தெரியாமல் சிக்கியிருக்கும் அப்பாவி தமிழ் இளைஞர்களை மீட்டெடுப்பதற்கும், அவர்கள் மீது கட்டமைக்கப்பட்டுள்ள பிம்பங்களை உடைத்தெறியவுமே அவை உதவும்.&lt;br /&gt;&lt;br /&gt;புலிகள் அரசியலை முன்னெடுக்கவில்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;புலிகள் அரசியலை முன்னெடுக்கவில்லை என்று இக்குழுக்கள் கூறுகின்றன. இதற்கான பதிலை புலிகளே தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு வெளியிட்ட “சோசலிச தமிழீழம்” என்று தலைப்பிடப்பட்ட விடுதலைப்புலிகளின் அரசியல் வேலைத் திட்டம் குறித்த நூலில் இதற்கான பல விளக்கங்கள் உள்ளன. அதன் முதற்பகுதி விடுதலைப்புலிகள் இயக்கமும், தேசிய விடுதலைப் போராட்டமும் என்று தலைப்பிடப்பட்டது. இரண்டாம் பகுதி அரசியல் வேலைத்திட்டமும் கொள்கை விளக்கமும் என்று தலைப்பிடப்பட்டதாகும். இந்நூலை தற்பொழுது எடுத்துக்காட்டுவதன் நோக்கம், புலிகள் இயக்கம் வீரியமுடன் செயல்படத் தொடங்கிய காலத்திலிருந்தே மேற்கொண்டு வந்த பல கொள்கைகளும், வரையறுப்புகளும் தற்பொழுது பெரும்பாலானோர்க்கு தெரிந்திருப்பதில்லை. அதனால் இதனை இப்பொழுது எடுத்துக் காட்டுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே நேரத்தில், தொடக்கத்தில் லட்சிய உறுதியுடனும் போர்க் குணத்துடனும் செயல்படத் தொடங்கியவர்களில், இறுதி வரை அதே போர்க்குணத்துடனும் லட்சிய உறுதியுடனும் நீடித்தவர்கள் சிலரே. ஆனால், புலிகள் அவ்வாறல்லாமல், தனது தொடக்க காலத்தில் தனக்கென வரையறுத்த கொள்கைகளையும், கோட்பாடுகளையும் இறுதி வரை கடைப்பிடித்தனர். அதனால் தான் அவர்களது இயக்கம் இன்று வரை உலகத் தமிழர் மனதில் நீங்கா இடத்துடனும், உலக வரலாற்றில் வேறு எந்த கெரில்லா விடுதலைப் போராட்ட இயக்கமும் செய்திராத மாபெரும் சாதனைகளை செய்தும் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;“எமது இயக்கம் அரசியலுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அரசியல் இலட்சியமே ஆயுதப் பாதையை வழிநடத்த வேண்டும் என்பதில் நாம உறுதியாக இருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பகாலத்திலிருந்து எமது இயக்கம் அரசியல் பிரிவிலிருந்து இராணுவ அமைப்பை வேறுபடுத்தவில்லை. பதிலாக, இரு பிரிவுகளும் ஒன்றிணைக்கப்பட்ட அரசியல் - இராணுவ வேலைத் திட்டத்தின் அடிப்படையில் எமது இயக்கம் செயற்பட்டு வருகிறது. இந்த வேலைத்திட்டம் ஆயுதப் போராட்டத்தை ஒரு அதியுயர்ந்த அரசியற் போராட்ட வடிவமாகவே கொள்கிறது."&lt;br /&gt;&lt;br /&gt;(பக்கம் 9 பத்தி 2இன் பிற்பகுதி முதல் பத்தி 3 வரை, முதல் பகுதி)&lt;br /&gt;&lt;br /&gt;இது 1980களில் புலிகளால் எழுதப்பட்டது. ஒரு அரசியல் சக்தியாக இல்லாவிட்டால், புலிகள் அம்மண்ணில் கடந்த 35 வருடங்களாக காலூன்றி நின்றிருக்க முடியாது. மக்களை அரசியல்மயபடுத்தியதன் காரணமாகத்தான், புலிகள் கைகாட்டியதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்கள். மக்களை அரசியல்படுத்தியதால் தான், “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற பிரகடனம் “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்று இன்றைக்கு உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகின்றது. புலம் பெயர் மக்களை புலிகள் அரசியல்படுத்தியதால் தான் அவர்கள் புலம் பெயர் நாடுகளில், அந்தந்த நாடுகளின் மீது அழுத்தங்களை பிரயோகிக்கும் மக்கள் திரளாக அவர்களால் வளர முடிந்திருக்கிறது. இவ்வாறு, ஈழத்தமிழர்கள், புலம் பெயர்ந்த தமிழர்கள் என அனைத்துத் தரப்பு மக்களையும் தனது இராணுவ நடவடிக்கைகளின் மூலமாகவே அரசியல்படுத்தியவர்கள் புலிகள். இவர்களைப் பார்த்து மக்களை அரசியல்படுத்தவில்லை என்ற குற்றம் சாட்டுகின்றது, இக்கூலிக் கும்பல்.&lt;br /&gt;&lt;br /&gt;புலிகள் மீது மட்டுமின்றி, தமிழகத்தில் ஆயுததாங்கியப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மாவோயிஸ்டுகள் மீது ம.க.இ.க. - புதிய ஜனநாயகக் கும்பல் அவதூறுகளை அள்ளி வீசின. புதிய ஜனநாயகத்தின் இந்த அவதூறுகளுக்கு எதிராக மாவோயிஸ்டுகள் ஒரு வெளியீட்டைக் கொண்டு வந்தனர். அதற்கு பதில் கொடுக்கும் விதமாக புதிய ஜனநாயகமும் ஒரு வெளியீட்டைக் கொண்டு வந்தது. அவ்வெளியீட்டில், புதிய ஜனநாயகம் தானே அம்பலப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;“அரசியல் போராட்டத்தின் முதிர்ந்த வடிவம்தான் ஆயுதப் போராட்டம் என்பதையும், அரசியல் போராட்ட அனுபவத்தினூடாக ஆயுதப் போராட்டத்தின் அவசியத்தை மக்கள் உணரச் செய்யவேண்டும்” என்று நாம் கூறுவதையும் மாவோயிஸ்டு அமைப்பினர் ஏளனத்துடன் மறுக்கிறார்கள்.”&lt;br /&gt;&lt;br /&gt;(மாவோயிஸ்டுகளின் ஆயுதப் போராட்ட முன்னெடுப்புகள் கருவிலே சிதைவது ஏன்?, பு.ஜ.வெளியீடு, சனவரி 2008, பக்கம் 63, பத்தி 3 தொடக்கம்)&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் போராட்டத்தின் முதிர்ந்த வடிவம் தான் ஆயுதப் போராட்டம் என்று தானே கூறும் ம.க.இ.க. - புதிய ஜனநாயகக் கும்பல், அதனை புலிகளோ, மாவோயிஸ்டுகளோ செய்தால் தூற்றுவார்களாம். அவதூறு செய்வார்களாம். அதனை அவர்கள் மட்டும் தான் செய்ய வேண்டுமாம். மற்ற யார் செய்தாலும், அது சாகசவாதம் என்பார்களாம். நக்சல்பாரிகளின் ஆயுததாங்கிய எழுச்சி மிக்க போராட்டத்தைப் பற்றி புகழ்ந்தும் இவர்கள் எழுதுவார்கள், அதே சமயம் அதனை சாகசவாதம் என்றும் வாதாடுவார்கள். இவர்களது துண்டறிக்கைகள் பலவற்றில், “ஆயுதாங்கிய பாதையில் அணி திரள்வோம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால், 30 வருடங்களாக தன்னை நம்பியுள்ள தோழர்களிடம் அட்டைக் கத்தியைக் கூட இவர்கள் காட்டியது கிடையாது. இது தான் இவர்களின் அரசியல் லட்சணம். அப்பாவித்தனமாக இவர்களிடம் சிக்கியிருக்கும் இளைஞர்களின் நிலை தான் மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;புலிகள் வலதுசாரிச் சிந்தனையுள்ளவர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;தனது இலக்கு சுதந்திர சோசலிச தமிழீழத் தனியரசே என்று முதலிலேயே தனது அரசியலை பிரகடனப்படுத்தியவர்கள் புலிகள். தேசிய இன விடுதலைப் பற்றிய மார்க்சியப் புரிதல்களுடன் தான் அவர்களது போராட்ட இயக்கம் கட்டமைக்கப்பட்டது. தேசிய விடுதலையும், சோசலிச சமூகப் புரட்சியுமே தமது இயக்கத்தின் அடிப்படை அரசியல் இலட்சியங்கள் என்று பிரகடனப்படுத்தப்பட்டவை.&lt;br /&gt;&lt;br /&gt;உலகமயம் அழித்து வரும் தேசிய இன அடையாளங்களை பாதுகாப்பதன் மூலமும், தேசிய இன அடையாளத்தை மீட்டெடுப்பதன் மூலமும், தேசிய இன விடுதலைக்குப் போராடுவதன் மூலமும் உலகமயத்திற்கு எதிரான போராட்டத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர்கள் புலிகள். ஈழ மண்ணில் எந்தவொரு ஏகாதிபத்தியமும் காலூன்ற முடியாத படி தனது இராணுவத்தைக் கட்டமைத்தது புலிகள் இயக்கம். ஏகாதிபத்தியம், காலனித்துவம், நவ-காலனித்துவம், இனவாதம் ஆகியவையே உலக மக்களின் பொது எதிரிகள் என்று புலிகள் வரையறுத்திருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;“தமிழீழ சமூக வடிவமானது ஒரு முதிர்ச்சிகண்ட முதலாளித்துவ உற்பத்தி முறையைக் கொண்டிருக்கவில்லை. முதலாளிவர்க்கம் தொழிலாளி வர்க்கம் என்ற பிரதான வர்க்க முரண்பாட்டின் அடிப்படையில் பொருள் உற்பத்தி முறை இயங்கவில்லை. அதே சமயம், எமது சமூகத்தை பிரபுத்துவ சமூக வடிவமாகவும் சித்தரிக்க முடியாது. தமிழீழ சமுதாய அமைப்பானது தனக்கேயுரிய ஒரு தனித்துவமான பொருளுற்பத்தி வடிவமாகத் திகழ்கிறது. வளரும் முதலாளித்துவ அம்சங்களும், பிரபுத்துவ எச்ச சொச்சங்களும், சாதிய தொழில் பிரிவு உறவுகளும் ஒன்று கலந்த ஒரு சிக்கலான பொருளாதா அத்திவாரத்தில் எமது சமுதாயம் கட்டப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்தத்தில் எமது சமுதாயத்திற்கு அத்திவாரமாக விளங்கும் பொருளாதார அமைப்பானது சமூக அநீதிகள் மலிந்த ஒடுக்குமுறைகளையும் சுரண்டல் முறைகளையும் கொண்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;எமது சமூகத்தில் ஊடுருவியுள்ள சகலவிதமான சமூக ஒடுக்குமுறைகளையும் ஒழித்துக்கட்டி, வர்க்க வேறுபாடற்ற சமதர்ம சமுதாயத்தைக் கட்டி எழுப்புவதே தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சியமாகும்.”&lt;br /&gt;&lt;br /&gt;(பக்கம் 11 பத்தி 8 மற்றும் 9, இரண்டாம் பகுதி)&lt;br /&gt;&lt;br /&gt;1980களில் எழுதப்பட்ட மேற்கண்ட வரிகள், புலிகளின் தமிழ்ச் சமூகத்தின் மீதான புரிதல்களையும், மார்க்சிய இயங்கியல் கண்ணோட்டத்திலேயே தமிழர் பிரச்சினையை புலிகள் அணுகியதையும் நாம் புரிந்து கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சாதி ஒடுக்குமுறை பற்றி புலிகள் பேசவில்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;சாதிய ஒடுக்குமுறை பற்றி புலிகள் எங்குமே பேசவில்லை. யாழ்ப்பாண வெள்ளாள சமூகத்தினரின் மனநிலையே புலிகள் இயக்கத் தலைமையின் மனநிலை என்று ஒரு பெரும் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகின்றது. இந்த அவதூறுகளுக்கும் புலிகளின் முதல் அரசியல் அறிக்கையே பதில் அளிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;“எமது சமுதாய மேம்பாட்டிற்கு ஒரு சாபக்கேடாகவும் சமூக சமத்துவத்திற்கு ஒரு முட்டுக்கட்டையாகவும் இருந்துவருவது சாதியக் கொடுமையாகும். சாதிய அமைப்பு எமது கிராமியப் பொருளாதார வாழ்வுடன் ஒன்று கலந்திருக்கிறது. வர்க்க அமைப்புடன் இணைப்பெற்றிருக்கிறது. தொழிற் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்ட பொருள் உற்பத்தி உறவுகளுடன் பின்னிப்பிணைந்திருக்கிறது. மத சித்தாந்த உலகிலிருந்து வேரூன்றி வளர்ந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தொழிலின் மகத்துவத்தை இழிவுபடுத்தி, மனிதனை மனிதன் வேறுபடுத்தும் இந்த மூட வழக்குமுறையை முற்றாக ஒழித்துக்கட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் திடசங்கற்பம் பூண்டிருக்கிறது. சாதியத்தின் பெயரால் சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து நசுக்கப்பட்டுவரும் தமிழீழப் பாட்டாளி வர்க்கத்தின் விடிவிற்காக எமது இயக்கம் அயராது உழைக்கும். உழைப்பின் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட சோசலிச பொருளாதாரத் திட்டத்தை அமுலாக்குவதன் மூலமும், புரட்சிகரமான கல்விமுறை வாயிலாகவும் இந்த சமூக தீமையை எமது இயக்கம் ஒழித்துக்கட்டும்.”&lt;br /&gt;&lt;br /&gt;(பக்கம் 12 பத்தி 1 மற்றும் 2, இரண்டாம் பகுதி)&lt;br /&gt;&lt;br /&gt;சாதியைப் பற்றி எங்குமே புலிகள் பேசவில்லை என்ற அவதூற்றை, 1980களிலேயே எழுதப்பட்ட புலிகளால் எழுதி வெளியிடப்பட்ட அரசியல் அறிக்கையின் மேற்கண்ட வரிகள் தோலுரித்துக் காட்டுகின்றன. சாதி ஒழிக்கப்பட வேண்டும் என்பதிலும் உடனடியாக அதனை ஒழிக்க முடியாது என்பதையும் அதற்கு தொடர்ச்சியான நீண்டகாலத் திட்டங்கள் தேவை என்பதனையும் புலிகள் உணர்ந்திருந்தனர் என்பதனை இவை காட்டுகின்றன. புலிகள் இயக்கத் தோழர்கள் அவரவர் சொந்த சாதியிலேயே திருமணம் செய்யத் தடை விதிக்கப்பட்டிருந்ததை இச்சமயம் குறிப்பிட்டே ஆக வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லிம்கள் மீதான அணுகுமுறை&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் மக்கள் தனித்துவமான ஒர் இனக்குழு என்றும் முஸ்லிம்களின் தாயகம் வடகிழக்குப் பிரதேசமே என்றும் புலிகள் அங்கீகரித்திருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;“வடகிழக்குப் பிரதேசத்தில் வாழும் தமிழர்களும் முஸ்லிம்களும் பொதுவான தாயகத்தையும், பொதுவான மொழியையும், பொதுவான பொருளாதார வாழ்வையும், பொதுவான நலன்களையம் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விதம் ஒன்றிணைந்த சமூகப் பொருளாதா வாழ்வு காரணமாக ஒருவர் மீது ஒருவர் பரஸ்பரம் தங்கியிருப்பதால் தமிழரும் முஸ்லிம் மக்களும் ஒன்றுபட்ட சக்தியாக ஒருங்குசேர்ந்து தமது உரிமைக்காகப் போராடுவது அத்தியாவசியமானதாகும். முஸ்லிம் மக்கள் தமது அரசியல் உரிமைகளை வென்றெடுக்க வேண்டுமென்றால், தமது நலன்களை அடைந்து நல்வாழ்வு காண வேண்டுமென்றால், முக்கியமாக, தமது இன, மத, கலாச்சார தனித்துவத்தைப் பேணிப் பாதுகாக்க வேண்டுமென்றால் தமிழருடன் ஒன்றுபட்டு வாழ்ந்து, தமிழருடன் ஒருங்கிணைந்து போராடுவதே சாலச்சிறந்ததாகும்.”&lt;br /&gt;&lt;br /&gt;(பக்கம் 13 பத்தி 7, இரண்டாம் பகுதி)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“தமிழ் பேசும் மக்களின் ஐக்கியத்தைக் குலைத்து, தமிழ்த் தேசிய ஒன்றியத்திணை சிதறடிக்கும் நோக்கத்துடன் சிங்கள இனவாத அரசானது தமிழர் முஸ்லிம் மக்கள் மத்தியில் கலவரத்தை தூண்டிவிடும் நாசகார முயற்சிகளில் ஈடுபட்டு வருவதோடு எமது பொதுத் தாயகப் பூமியையும் படிப்படியாக விழுங்கி வருகின்றது. பொதுவான எதிரியையும், பொதுவான இலட்சியங்களையும் எதர்கொள்ளும் தமிழ் முஸ்லிம் மக்கள் தமது தனித்துவத்தையும் சுதந்திரத்தையும் நிலைநாட்ட ஒன்றுபட்டுப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை.”&lt;br /&gt;&lt;br /&gt;(பக்கம் 14 பத்தி 1, இரண்டாம் பகுதி)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புலிகள் முஸ்லிம் மக்களுடன் உறவு பேண விரும்பியதையும், அவர்களுடன் இணைந்து போராட வேண்டும் என்ற ஈடுபாட்டையும் புலிகள் கொண்டிருந்தனர் என்பதனை மேற்கண்ட வரிகள் தெளிவுபடுத்துகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;காலப்போக்கில், முஸ்லிம் மக்கள் சிங்கள இனவெறியர்களுடன் உறவு பேணியதால், சில உரசல்கள் ஏற்பட்டன. முஸ்லிம் மக்களுடன் இணைந்து போராட வேண்டும் என்ற நோக்கில், புலிகளின் முதல் முஸ்லிம் போராளியின் படத்தைத் தாங்கியபடி “ஒன்றிணைந்து போராடுவோம்” என்று புலிகளின் அரசியல் பிரிவு ஒரு புத்தகத்தையும் இந்நேரத்தில் வெளியிட்டது. அந்த புத்தகத்தில் புலிகள் முஸ்லிம் மக்களுக்கும் தமிழர்களுக்குமான பொது எதிரியான சிங்களப் பேரினவாதத்தை முறியடிக்க ஒன்றிணைந்து போராடுதல் அவசியம் என்பதை மீண்டும் வலியுறுத்தி இருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்களப் பேரினவாதம் தமிழ் - முஸ்லிம் மக்களிடையிலான உறவை சீர்குலைத்து, பகைமையைக் கட்டமைக்கும் வழிமுறைகளில் ஈடுபட்டிருந்ததையும் புலிகளின் வெளியீடுகள் அவ்வப்போது வெளிப்படுத்தி வந்தன. ஆனால், முஸ்லிம் இனவாதக் குழுக்கள் பல உருவாக்கப்பட்டு, சிங்கள இனவெறி சக்திகளுடன் இணைந்து கொண்டு ஆயுதம் தரித்து தமிழர்களை வேட்டையாடிதை வரலாறு கண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கள பேரினவாதத்திற்கு ஆதரவாகவும், தமிழர்களுக்கு எதிராகவும் தொடர்ந்து நடவடிக்கைகளில் பல முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் ஈடுபட்டு வந்தன. இவர்களுக்கு எதிராக புலிகளின் நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்ட சிலரை வைத்துக் கொண்டு, ஒட்டு மொத்த முஸ்லிம் மக்களுக்கும் எதிரானவர்கள் புலிகள் என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டது. மூதூர் வெளியேற்றம் குறித்து மூச்சுக்கு முன்னூறு தடவை பேசுகின்ற பலரும், அந்த வெளியேற்ற நடவடிக்கைக்காக புலிகள் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டது குறித்து வாய்த்திறக்காமல் முடிக்கொள்வதற்கு, பின்னணியில் பேரினவாதம் தான் ஒளிந்து கொண்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கள உழைக்கும் மக்களுடன் இணைந்து போராடவில்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;“சிறீலங்காவின் பாசிச அரசானது தமிழ் பேசும் மக்களது விரோதி மட்டுமின்றி ஒடுக்கப்பட்டு சுரண்டப்படும் சிங்களப் பாட்டாளி மக்களதும் பிரதான எதிரியாகும். இந்தப் பாசிச அரச இயந்திரத்தை இயக்கிவரும் ஆளும் வர்க்கமானது தமிழருக்கு எதிரான இனவெறியைக் கிளறிவிட்டு தனது ஆட்சி அதிகாரத்தை நீடித்து வருகிறது. பேரினவாத சித்தாந்தத்தைப் பரப்பி தமிழ் - சிங்கள பாட்டாளி வர்க்க ஒருமைப்பாட்டையும் சிதறடித்து வருகிறது. இந்தப் பேரினவாத பாசிச அரசையே விடுதலைப் புலிகள் இயக்கம் தனது எதிரியாகக் கருதுகிறதே தவிர, சிங்களப் பொது மக்களை அல்ல. சிங்கள பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர தோழமை சக்தியாகவே எமது இயக்கம் செயல்படும். சிங்கள பேரினவாத அரசுக்கு எதிராக நாம் முன்னெடுக்கும் சுதந்திரப் போராட்டம் சி்ங்களப் பாட்டாளி வர்க்கத்தின் சுபீட்சத்திற்கும் வழி வகுக்கும் என்பது திண்ணம்.&lt;br /&gt;&lt;br /&gt;.... சுதந்திர தமிழீழத்தில் தமிழ் பேசும் மக்களோடு ஐக்கியமாக வாழவிரும்பும் சிங்கள மக்களை தமிழீழப் பிரஜைகளாக ஏற்று, அவர்களுக்கு சகல சனநாயக சுகந்திரங்களையும், உரிமைகளையும் வழங்க எமது விடுதலை இயக்கம் முடிவு செய்திருக்கிறது.”&lt;br /&gt;&lt;br /&gt;(பக்கம் 14 பத்தி 1, இரண்டாம் பகுதி)&lt;br /&gt;&lt;br /&gt;தனது முதல் கொள்கை அறிக்கையிலேயே தெளிவுடன் சிங்களப் பாட்டாளி வாக்கத்துடன் இணைந்து போராட தயாராக இருந்ததாக புலிகளின் மேற்கண்ட வரிகள் தெரிவிக்கின்றன. புலிகளின் இம்முடிவை அங்கீகரித்து தமிழ்ப் பாட்டாளி வர்க்கத்துடன் இணைந்து போராட முற்பட்ட சிங்கள பாட்டாளி வர்க்க சக்திகள் ஏதேனும் ஒன்றையாவது இந்தக் கூலிக்கும்பல் அடையாளம் காட்ட முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;முடியாது. சிங்கள இனத்தில் அப்படிப்பட்ட பாட்டாளி வர்க்க சக்திகளே இல்லாத நிலையில், தமிழ்த் தேசிய இனம், தனது விடுதலைப் போராட்டத்தை ஒத்தி வைத்து விட்டு, சிங்கள இனத்தின் பாட்டாளி வர்க்கம் எழுந்து நிற்கிற வரை சிங்கள இனவெறிக் கும்பலின் ஒடுக்குமுறைகளை தாங்கிக் கொண்டு அப்படியே அழிந்து போக வேண்டுமாம். இது தான் பாட்டாளி வர்க்க சர்வதேசியம் என்று புளுகுகிறது, சோபாசக்தி, அ.மார்க்ஸ், ம.க.இ.க. கும்பல். இது தான் இந்திய சிங்கள ஆரியக் கும்பலின் ஆசையும் கூட..&lt;br /&gt;&lt;br /&gt;“ஒன்றுபட்ட இலங்கை” என்ற பெயரில் ஓலமிடும் இந்திய சிங்கள ஆரியக்கும்பலின் முழக்கத்திற்கும் “சிங்கள உழைக்கும் மக்களுடன் இணைந்து போராடுங்கள்” என்று முழக்கமிடும் ம.க.இ.க., சோபாசக்தி உள்ளிட்ட ஆரியக் கூலிக்கும்பலின் முழக்கத்திற்கும் வித்தியாசம் இது தான். ஆசியக் கும்பல் “தேசிய ஒருமைப்பாடு” என்று கூச்சலிடுவதை, இந்தக் கூலிக்கும்பல் மார்க்சிய சாயம் புசி வாந்தி எடுக்கிறது. அவ்வளவு தான் வித்தியாசம். இந்தியாவின் போலிக் கம்யுனிஸ்டுகளின் “ஒன்றுபட்ட இலங்கை” முழக்கத்தையே அதிலிருந்து பிறந்த ம.க.இ.க.வும் வலியுறுத்துகிறது. பாட்டாளி வர்க்க சர்வதேசிய சாயமடித்து பார்ப்பனியத்தை திணிக்கும் கலையில் ம.க.இ.க.விற்கு நிகர் அவர்களே தான்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் தமிழ் இனம் ஒர் அங்கீகரிக்கப்பட்ட தேசத்தை பெற வேண்டும் அதற்குப் பிறகு தான் சிங்கள உழைக்கும் மக்களுடன் இணைந்து சர்வதேசியத்தைப் பற்றி சிந்திக்க முடியும் என்று இக்கும்பல் சொல்வதற்கு வக்கில்லை. ஆனால், தனித்தமிழ் ஈழத்திற்காக போராடும் புலிகளை மட்டும் சிங்களர்களைப் போலவே இவர்களும் சேர்ந்து இழிவுபடுத்துவதை மட்டும் தவறாமல் செய்வார்களாம். என்னே இவர்களது சர்வதேசியம்..!&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பாட்டாளி வர்க்கம் தனக்கான ஒரு நாடு, வரையறுக்கப்பட்ட எல்லைகள் கொண்ட இறையாண்மையுள்ள ஒர் ஆட்சிப் பகுதி இருந்தால் தான் அங்குள்ள அதிகார வர்க்கத்திற்கு எதிரான வர்க்கப் போராட்டத்தையும், உலகு தழுவிய உலகமயமாக்கலுக்கு எதிரான சர்வதேசியப் போராட்டத்திலும் பங்கெடுக்க இயலும். தனக்கருககில் உள்ள அண்டை தேசிய இனத்தின் பாட்டாளி வர்க்கத்துடன் சேர்ந்து போராடவும் இயலும். இதுவே மார்க்சிய அடிப்படை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒடுக்கப்படும் பாட்டாளி வர்க்கத்தின் தேசிய விடுதலைக்கான தீர்வை இன்னொரு நாட்டின் பாட்டாளி வர்க்கம் வரையறுக்கக் கூடாது என்றும் சிலர் சொல்கிறார்கள். தனித்தமிழ் ஈழக் கோரிக்கை தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கை என்பது போல அரைவேக்காட்டுத் தனமாக புரிந்து கொண்டிருக்கும் ம.க.இ.க. கும்பலின் கூற்று இது. ஈழசிக்கலுக்கு தமிழ்த் தேசிய இன மக்கள் நாடிய தீர்வே தனித்தமிழ்ஈழம் என்பது. இதனை அவர்கள் 1977இல் நடந்த தேர்தலில் மெய்ப்பித்தார்கள். இதனடிப்படையில் தான் புலிகளும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான தனித்தமிழ் ஈழமே தமது இலட்சியம் என கொண்டனர். இது ம.க.இ.க.விற்கு நன்கு தெரியும். ஆனால், அதை அவர்கள் எவ்வாறெல்லாமோ மழுப்பி கடைசியில் “ஒன்றுபட்ட இலங்கை” குட்டைக்குள்ளும் “பாட்டாளி வர்க்க சர்வதேசிய” சொல்லாடல்களிலும் விழுந்து விடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒடுக்குகின்ற இனத்தின் பாட்டாளி வர்க்கம் தனது விடுதலைக்காக முன்னெழுந்து போராடுகின்ற நிலையில், ஒடுக்கப்படும் இனத்தின் பாட்டாளி வர்க்கம் அதனுடன் சேர்ந்து செயல்பட முடியும். ஆனால், ஒடுக்கும் இனத்தில் அவ்வாறான பாட்டாளி வர்க்க சக்திகள் இல்லாத நிலையில், ஒடுக்கப்படும் இனம் எவ்வாறு அவர்களுடன் சேர்ந்து செயல்பட இயலும்?&lt;br /&gt;&lt;br /&gt;ஜனதா விமுக்தி பேரமுனா கட்சி சிங்கள இனத்தின் பாட்டாளி வர்க்கக் கட்சியாக அடையாளப்படுத்தப்பட்டு, இன்று சீரழிந்த இனவாதக் கட்சியாக உள்ளது. இது போன்ற சிங்களப் பாட்டாளி வர்க்கக் கட்சிகள் இனவாதத்தில் விழுந்து போவதற்குக் காரணம் என்ன? சிங்கள உழைக்கும் மக்களின் உளவியல் தான் காரணம். இவ்வாறான உளவியலைக் கொண்ட சிங்கள உழைக்கும் மக்கள், தமிழ்ப் பாட்டாளி வர்க்கத்தின் விடியலுக்காக இதுவரை செய்தது தான் என்ன? செய்யப் போவது தான் என்ன? ஒன்றுமில்லை.. ஆனால் இவை பற்றி எண்ணாமல், சிங்கள பாட்டாளி வர்க்கத்துடன் உறவு பேணவே புலிகள் விரும்பினர். எழுச்சியுடன் ஜே.வி.பி. வளர்ந்து வந்த காலகட்டத்தில் அவர்களுடன் உறவு பேண புலிகள் முயற்சி எடுத்தனர். “ஹீரூ” -HIRU என்ற ஜே.வி.பி. ஆதரவு பத்திரிக்கை புலிகளின் முயற்சியை வரவேற்று, புலிகளின் கொள்கைகளையும் அங்கீகரித்து எழுதியது. பின்னால், அப்பத்திரிகையின் ஆசிரியர் துரத்தியடிக்கப்பட்டு அம்முயற்சி ஜே.வி.பி.யாலேயே உடைத்தெறியப்பட்டது. இது மறுக்க முடியாத உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;புலிகள் மாற்று இயக்கத்தினருடன் இணைந்து செயல்படவில்லை என்கிறார்கள். மாற்று இயக்கத்தினர் என்று இக்கூலிக்கும்பல் சொல்லும் அனைத்து இயக்கங்களையும் அவர்களே “ஒட்டுக்குழுக்கள்” என்று தான் விமர்சிப்பார்கள். சிங்கள பேரினவாதத்துடன் இந்திய ஆரியத் தலைமையுடனும் சமரசம் செய்து கொண்ட அது போன்ற ஒட்டுக்குழுக்களுடன் புலிகளும் இணைந்து தமிழ் மக்களுக்கு “சேவகம்” புரிய வேண்டுமாம். இதைத் தான் இந்தக் கூலிக்கும்பல் விரும்புகிறது. அதாவது, சிங்கள பேரினவாதத்துடனும், இந்திய உளவுத்துறையினருடனும் சமரசம் செய்து கொண்டு புலிகள் இருக்க வேண்டுமாம். இந்த ஒரு வாதமே இந்தக்கூலிக்கும்பலை யாரென அம்பலப்படுத்துகின்றது. தமிழ் மக்களை புலிகள் கொல்லுகிறார்கள் என்று சிங்களர் குரலில் பேசும் இந்தக் கூலிக்கும்பலுக்கும், அந்தக் கூலிகளே “சதியாளர்கள்” என விமர்சிக்கும் இந்து என்.ராம், பார்ப்பன செயா, சோ, சு.சுவாமி போன்றவர்களுக்கும் அடிப்படையில் என்ன வித்தியாசம்?&lt;br /&gt;&lt;br /&gt;தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை கேள்விக்குட்படுத்தும் இந்தத் துரோகக் குழுக்கள், இந்த விமர்சனங்களை எழுப்புகின்ற போர்வையில் ஒளிந்து கொண்டு நீங்கள் இதுவரை தமிழ் மக்களுக்காக செய்தது என்ன என்று கேள்வி எழுப்பினால் மட்டும் இருந்த இடம் தெரியாமற் காணாமற் போய்விடுவார்கள். புலிகளின் மீது இந்த ஆரியக் கூலிக்கும்பலுக்கு இருக்கும் வன்மம், புலிகளுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் செயல்படும் தமிழ்த் தேசிய சக்திகளையும் விட்டுவைப்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் ராஜதந்திரம் தோற்றுவிட்டதாக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் அய்யா கூறிவருகிறார். இன்னும் இந்தியத் தேசிய மனநிலையிலிருந்து முற்றிலும் விடுபடாத அவரது இக்கருத்தை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டுத் தமிழ்த் தேசியவாதிகள் அனைவரும் இந்தியத் தேசியததை ஏற்பவர்கள் தாம் என்று முழங்கி வரும் ம.க.இ.க.வின் பார்ப்பனீய செயல்பாடுகள் இதற்கொரு எடுத்துக்காட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையான தமிழ் உணர்வாளர்கள், இந்தியத் தேசியத்தை ஏற்கவில்லை என்பது இந்த கும்பலுக்கு நன்கு தெரியும். இருந்தாலும், அவ்வப்போது நெடுமாறன் போன்ற பலவீன சக்திகளை மய்யப்படுத்தி தமிழ் உணர்வாளர்களை, இனவாதிகள் எனறு சேறடிக்க வேண்டும் என்று செயல்படுவது இவர்களது தமிழ்நாட்டு வேலைத்திட்டத்துள் ஒன்று. இது தனது எஜமானர்களிடமிருந்து ம.க.இ.க. கற்றுக் கொண்ட பார்ப்பனிய ராஜதந்திரம் போலிருக்கிறது. இதன் ஒரு பகுதியாகத் தான், புலிகள் மீது எப்படி யாழ்ப்பாண வெள்ளாளர் மனநிலை உள்ளவர்கள் என்று முத்திரைக் குத்தப்படுகின்றதோ அதே போல, தமிழ்நாட்டுத் தமிழ்த் தேசியர்கள் மீது தொடர்ந்து ஆதிக்க சாதி வெறி முத்திரை குத்தப்படுகின்றது. புலிகளுக்கு சோபாசக்தி போல, தமிழ்நாட்டு தமிழ்த் தேசியர்களுக்கு மதிமாறன் போன்றவர்கள் இதற்கேற்ப செயல்படுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;வீரத்தமிழ் மகன் முத்துக்குமார் தனது மரண சாசனத்தில் குறிப்பிட்டது போல, தமிழர் என்ற ஒற்றுமை உணர்வை சீர்குலைக்கவே உளவுத்துறையினர் சட்டக்கல்லூரி சாதி மோதலை தூண்டியிருக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தார். இது ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது. ஈழத்தில் ஏற்பட்டுள்ள இன அழிவால் தமிழகத்தில் தற்பொழுது ஓரு தமிழ்த் தேசிய அலை மெல்ல எழுந்து வருகின்றது. அனைத்துத் தரப்பிலிருந்தும் “நாம் தமிழர்” என்ற முழக்கம் சாதி வேறுபாடின்றி, மத வேறுபாடின்றி மெல்ல அரும்பி வருகின்றது. இச்சூழல் ஆரிய இந்தியத் தலைமைக்குத் தலைவலியைக் கொடுத்துள்ளது. இதனை சீர்குலைக்க மற்றொரு வேலைத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தமிழர் என்ற அடையாளத்தை அழித்து சாதி வேற்றுமையை முதன்மைப்படுத்துவது தான் அது. இல்லையெனில், எப்பொழுதோ எழுந்த ஒரு விவாதத்தை “நாம் தமிழர்” என்று எல்லோரும் உணர்ந்து வரும் இவ்வேளையில் வெளியிட்டு, தமிழ்ச் சமூகத்தின் சாதி வேற்றுமைகளை வெளிச்சமிட்டுக் காட்ட வேண்டும் என்று எண்ணுகிற “குமுதம்” இதழ் குசும்பிற்கு சற்றும் சளைக்காத மதிமாறன்கள் தற்பொழுது வேகமாக செயல்படவேண்டிய அவசியம் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;நட்பு சக்திகள் போல் வேடமிட்டு வரும் சீர்குலைவு சக்திகளை நாம் அடையாளம் கண்டு கொண்டால் தான் நாம் எதிரியை நோக்கி முன்னேறிச் செல்ல முடியும் என்ற புரிதலை நாம் பெற்றாக வேண்டும். இது அவசியம் மட்டுமல்ல அவசரமும் கூட. இந்தக் கூலிக்கும்பலில் சிக்கியிருக்கும் இளைஞர்கள், இனியாவது சிந்திக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;- அதிரடியான் ( athiradiyaan@gmail.com&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28593647-3582714967738009295?l=kilumathur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kilumathur.blogspot.com/feeds/3582714967738009295/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28593647&amp;postID=3582714967738009295' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28593647/posts/default/3582714967738009295'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28593647/posts/default/3582714967738009295'/><link rel='alternate' type='text/html' href='http://kilumathur.blogspot.com/2009/09/blog-post.html' title='அவதூறுகளை அள்ளி வீசூம் சீர்குலைவு சக்திகள்'/><author><name>மகேந்திரன்.பெ</name><uri>http://www.blogger.com/profile/17863131935297558260</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://i64.photobucket.com/albums/h187/mahendhiranp/mahendhiran.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_4nqliyy-z-Y/SquiJadhr_I/AAAAAAAAAu8/u1YxnFGPlgw/s72-c/prabakaran.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28593647.post-131449536296721853</id><published>2009-08-25T18:33:00.002+05:30</published><updated>2009-08-25T18:46:31.944+05:30</updated><title type='text'>பண்டார வன்னியனும் காக்கை வன்னியனும்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_4nqliyy-z-Y/SpPj_-1D3qI/AAAAAAAAAuc/toGaOocxIYs/s1600-h/ltte.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5373889468719947426" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 288px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_4nqliyy-z-Y/SpPj_-1D3qI/AAAAAAAAAuc/toGaOocxIYs/s400/ltte.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஆங்கிலேயப்பிரபுவின் அரண்மனை நோக்கி&lt;br /&gt;நடந்துபோகிறான் எட்டப்பன்&lt;br /&gt;அவன் காலடியில் கொட்டுகின்றன&lt;br /&gt;தங்க நாணயங்கள்&lt;br /&gt;ஆனால் அதன்பால் ஓடிய இரத்தஆறு&lt;br /&gt;பின்னர் வரலாறு&lt;br /&gt;&lt;br /&gt;பண்டாரவன்னியனின் பரணிபாடும்&lt;br /&gt;வன்னிக்காடுகளின் மரப்பட்டைகளுக்குள்&lt;br /&gt;இன்னும் காக்கைவன்னியன் ஒளிந்திருக்கிறான்&lt;br /&gt;&lt;br /&gt;வரலாற்றை மெல்லத்தடவிப் பார்க்கிறேன்&lt;br /&gt;அதன் நியாயத்தராசு இன்றுவரை&lt;br /&gt;ஏனோ சரியாய் இருந்ததில்லை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சரித்திரத்தில் ஒரு மாவீரனை&lt;br /&gt;பிரசவிக்கும் வரலாறு&lt;br /&gt;பின்பக்கமாய் ஒரு புழுவையும் துப்பிவிடுகிறது&lt;br /&gt;அதன் வலி துளித்துளியாய் சிதறிக்கிடக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இது காலக்காகிதத்தில்&lt;br /&gt;ஆங்காங்கே தெறித்திருக்கும் கறுப்பு மை&lt;br /&gt;ஒரு இன முரண்பாட்டின்மேல் திணிக்கப்பட்ட&lt;br /&gt;மைய இழை&lt;br /&gt;வரலாற்றின் வீதிவழியே&lt;br /&gt;மெல்ல சுவாசித்தால்;&lt;br /&gt;காலம் புரிந்த பலாத்காரத்தின் வடு புரியும்&lt;br /&gt;துரோகத்தனங்கள் நெருஞ்சிகளாய்&lt;br /&gt;துருத்திக்கொண்டிருப்பது&lt;br /&gt;தெரியும்&lt;br /&gt;யார் இவர்கள்&lt;br /&gt;இழிதொழில்தொங்கும் மரங்காய்ச்சிகள்&lt;br /&gt;மரணக்காற்றோடு கைகோர்த்து நகர்வலம் வருவார்கள்&lt;br /&gt;இரத்தக்கறைகளிலிருந்து வெள்ளிக்காசை எண்ணுகிறார்கள்&lt;br /&gt;தமிழ் பக்கங்கள் ஒவ்வொன்றிலும்&lt;br /&gt;ஒரு சிவப்புச்சாயம் பூசப்பட்டிருக்கிறது&lt;br /&gt;இந்த மொழி விபச்சாரர்களின் கைகளினால்&lt;br /&gt;பூமி சிதைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;இதோ&lt;br /&gt;இந்த நூற்றாண்டின் துரோகம்&lt;br /&gt;அந்தத் தீவிற்குள் மெல்ல நுழைகிறது&lt;br /&gt;கூடு அறுக்கப்பட்டது&lt;br /&gt;அடுத்தடுத்து நடந்தவை காலத்தின் கண்ணாடி&lt;br /&gt;&lt;br /&gt;மரபறுந்த அணுக்களுடன் வரலாறு புணரும்போது&lt;br /&gt;இந்த நீலிகள் ஜனிக்கிறார்கள்&lt;br /&gt;அதனால் பிறப்பு வேரறுந்துபோகிறது&lt;br /&gt;&lt;br /&gt;வரலாற்றுப் புத்தகத்தில் பின்நோக்கி மெல்ல நடக்கிறேன்&lt;br /&gt;சதைகளும் பிணங்களுமே பக்கங்களில் கிடக்கிறது&lt;br /&gt;போர் முழக்கம் இல்லாத காற்றழுத்தம் இல்லையங்கே&lt;br /&gt;காலப்பூதத்தின் மார்பை&lt;br /&gt;என் கூரிய நகங்களால் கிழித்தெறிந்தபடி நடக்கிறேன்&lt;br /&gt;வரலாறே&lt;br /&gt;நீ படைப்பதை நிறுத்திவிடு&lt;br /&gt;இல்லையேல் சரித்திரத்தை அழித்துவிடு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;-சாமிசுரேஷ்&lt;br /&gt;&lt;br /&gt;﻿&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28593647-131449536296721853?l=kilumathur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kilumathur.blogspot.com/feeds/131449536296721853/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28593647&amp;postID=131449536296721853' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28593647/posts/default/131449536296721853'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28593647/posts/default/131449536296721853'/><link rel='alternate' type='text/html' href='http://kilumathur.blogspot.com/2009/08/blog-post.html' title='பண்டார வன்னியனும் காக்கை வன்னியனும்'/><author><name>மகேந்திரன்.பெ</name><uri>http://www.blogger.com/profile/17863131935297558260</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://i64.photobucket.com/albums/h187/mahendhiranp/mahendhiran.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_4nqliyy-z-Y/SpPj_-1D3qI/AAAAAAAAAuc/toGaOocxIYs/s72-c/ltte.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28593647.post-8158085318029504019</id><published>2009-04-09T22:07:00.000+05:30</published><updated>2009-04-09T22:08:13.796+05:30</updated><title type='text'>சுயநலமற்றவர்கள்</title><content type='html'>கடவுளைப் பற்றி நான் எதிர்ப்பாய் இருக்கிறேன் என்றால், ஏனப்படி இருக்கிறேன் என்று ஒரு கடவுள் பக்திக்காரரும் சிந்திப்பதில்லையே, நான் ஏன் கடவுள்களை ஒழிக்கவேண்டுமென்கிறேன்? கடவுளை உண்டாக்கிக் கொண்ட எவருமே யோக்கியமான அல்லது யோக்கியத்தன்மையுடைய கடவுளை ஏற்படுத்திக் கொள்ளவில்லையே!&lt;br /&gt;&lt;br /&gt;அவரவர் சுய நலத்திற்கேற்ப, முட்டாள் தனத்திற்கேற்ப, ஒழுக்கமற்ற, நேர்மையற்ற, சக்தியற்ற கடவுள்களையும், தங்கள் தங்கள் சுயநலத்திற்கேற்ற கடவுளையும், தன் எதிரிகளை ஒழிக்க வேண்டுமென்கிற ஆவலுக்கேற்ற கடவுள்களையும் உண்டாக்கிக் கொண்டால் - அவற்றை, அதை - அவற்றால் பாதிக்கப்படுபவர்களும் அறிவாளிகளும் ஏற்றுக்கொள்ள முடியுமா? சுயநலமற்றவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?&lt;br /&gt;&lt;br /&gt;உலக மனித சமுதாயத்திற்கு ஒருவன் தொண்டு செய்ய வேண்டுமானால், முதல் தொண்டாக இப்படிப்பட்ட கடவுள்கள் ஒழிப்பு வேலையில் இறங்கினால் தானே அவன் உண்மையான, யோக்கியமான - அறிவாளியான தொண்டனாக இருக்கமுடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;கவலையும் - துன்பமும் கடவுள் சித்தமா?&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணமாக ஒரு மனிதன், தான் மற்ற மனிதனை விட மேலான, மேல் பிறவியான உயர்சாதி மனிதன் என்று சொல்லிக் கொண்டு, அதற்காகவென்று ஒரு கடவுளையோ, பல கடவுளையோ கற்பித்துக் கொண்டு, அதுவும், அயோக்கியத்தனமான - ஒழுக்கங்கெட்ட கடவுள்களைக் கற்பித்துக்கொண்டு, “அவைகள் தான் என்னை - எங்களை உயர்சாதியாய்ப் பிறப்பித்தது’’ என்றால், அந்த உயர் சாதியல்லாத மற்றவன் அதனால், அவற்றால் இழிசாதி - கீழ்சாதியாக ஆக்கப்பட்டவன் அந்த அவற்றிற்கு ஆதாரமாகக் காட்டப்படும் கடவுளை - கடவுள்களை ஒழிக்க - அழிக்க பின்னப்படுத்த முன்வராதவன் அறிவாளியாவானா? மனிதனாவானா? மானமுள்ளவனாவானா? தன்னை மனிதன் என்று சொல்லிக் கொள்ளத் தகுதியுடையவன் ஆவானா?&lt;br /&gt;&lt;br /&gt;கடவுள் நம்பிக்கைக்காரர்கள் யாராகத்தான் இருக்கட்டுமே? அவர்களை எதற்காக கடவுள் ஏற்பட்டது - அதனால் உனக்கு என்ன பலன் என்று கேட்டால் என்ன பதில் சொல்வான்? அவன் ஏதாவதொரு பதிலைச் சொல்வானானால் அதனால் எல்லா மக்களும் பயனடைகிறார்களா - மகிழ்ச்சியடைகிறார்களா? யாராவது துக்கம், வேதனை, இழிவு, கவலை அடையாமல் இருக்கிறார்களா என்றால் என்ன பதில் சொல்வான்? மகிழ்ச்சி, நலம் மேன்மையடைந்திருக்கும் எவனும் “கடவுள் சித்தத்தால்” என்பான். அவை இல்லாதவன்&lt;br /&gt;&lt;br /&gt;அவற்றிற்கு நேர்மாறான துன்பம், தொல்லை, கவலை அடைந்து கொண்டிருப்பவன் முட்டாளாய் இருந்தால் கடவுள் சித்தம் என்பான். ஏனப்படியென்றால் என் கர்மம் என்பான். இப்படிப்பட்ட அயோக்கியர்களுக்காக, மடையர்களுக்காக நாமும் இவர்களோடு சேர்ந்து கொண்டு இந்தக் கடவுளைக் காப்பாற்றுவதா?&lt;br /&gt;&lt;br /&gt;யார் மனமும் புண்படாது&lt;br /&gt;&lt;br /&gt;“உயர்” சாதிக்காரன் நலன் அனுபவிப்பவன், கடவுளைக் காப்பாற்றினால் - "தாழ்ந்த” சாதிக்காரன் கேடு அனுபவிப்பவன், கடவுளை ஒழிப்பது என்பதுதானே நியாயமும் நேர்மையும் ஆகும்; அறிவும் ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படிக்கில்லையானால் அவன் அடிமை, மானமற்றவன், கூலி, சுயநலக்கார மடையன் என்றுதானே சொல்லப்படவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே தோழர்களே!&lt;br /&gt;&lt;br /&gt;கவலையும், துன்பமும், இழிவும் உள்ளவர்களே சிந்தியுங்கள்.உங்களுக்கு விமோசனம், விடுதலை, மனிதத்தன்மை, கடவுள் ஒழிப்பிலும், அழிப்பிலும், இழிவுப்படுத்துவதிலுந்தான் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் யோக்கியமான, அறிவாளியான யார் மனமும் புண்பட இடமில்லை. சுயநலத்திற்காக சிலர் ஆத்திரப்படலாம். மனம் புண்படுகிறது என்று சொல்லலாம். அதைப்பற்றிக் கவலைப்படாதீர்கள்; சிறிதும் அச்சப்படாதீர்கள்; நாம் யாரையும் மனம் புண்படுத்துவதற்காக இதைச் சொல்லவில்லை; செய்யவில்லை; இதற்காக அறிவற்றவர்களால், சுயநலக்கார்களால், கூலிகளால் நமக்குத் தொல்லை ஏற்பட்டால், மகிழ்ச்சியோடு ஏற்று மானத்தோடு பாய்ந்தெழுங்கள். யார் மீதும் வெறுப்பு - குரோதம் கொள்ளாதீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தந்தை பெரியார் – நூல்:-“உயர் எண்ணங்கள்” பக்கம்:-36 -37&lt;br /&gt;&lt;br /&gt;அனுப்பி உதவியவர்: தமிழ் ஓவியா (oviyathamizh@gmail.com)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28593647-8158085318029504019?l=kilumathur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kilumathur.blogspot.com/feeds/8158085318029504019/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28593647&amp;postID=8158085318029504019' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28593647/posts/default/8158085318029504019'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28593647/posts/default/8158085318029504019'/><link rel='alternate' type='text/html' href='http://kilumathur.blogspot.com/2009/04/blog-post.html' title='சுயநலமற்றவர்கள்'/><author><name>மகேந்திரன்.பெ</name><uri>http://www.blogger.com/profile/17863131935297558260</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://i64.photobucket.com/albums/h187/mahendhiranp/mahendhiran.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28593647.post-8400452193237135729</id><published>2009-03-07T16:02:00.002+05:30</published><updated>2009-03-07T16:05:53.288+05:30</updated><title type='text'>கற்பழிக்க உதவுங்கள்!</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_4nqliyy-z-Y/SbJNhIfnKkI/AAAAAAAAAuM/BHbPkydQTu0/s1600-h/Periyar_300.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 228px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/_4nqliyy-z-Y/SbJNhIfnKkI/AAAAAAAAAuM/BHbPkydQTu0/s400/Periyar_300.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5310392142234331714" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தோழர்களே! நான் ஏதோ எனக்குத் தெரிந்தவரை சீர்திருத்தம் பேசி வருகிறேன். நான் ஒருவனே சொல்லிக் கொண்டிருந்தால் முடியுமா? மேல்நாட்டில் நான் பிறந்திருந்தால் பெர்னாட்ஷாவைவிட மேலாகக் கொண்டாடுவார்கள், இங்கு பார்ப்பன ஆதிக்கம் இருக்கின்ற காரணத்தால், என்னை அப்படியே இருட்டடிப்பு செய்து வருகிறார்கள். இதை ஏன் கூறுகிறேன் என்றால், இந்த நாட்டில் அவ்வளவு அநீதிகள் நடந்து வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள் பிர்லா மகனின் கனவில் காந்தி மகான் தோன்றினாராம். உடனே தூக்கம் கலைந்த மகன் தன் தந்தையிடம் சொல்ல அதற்கு அவர், வேறு எதற்கு வந்திருப்பார், எல்லாம் பணத்திற்குத்தான் என்று கூறி, தொகை போடாத ஒரு செக்கை கையெழுத்து மட்டும் போட்டு அனுப்பி விட்டார். இம்மாதிரி பெரிய வியாபாரிகளிடத்தில் கொள்ளையடித்து கட்சி வளர்த்து அவர்களின் அரசாங்கமாக உருவாயிற்று. காந்தி பிர்லா வீட்டில்தான் இறந்தார்; பட்டேலும் அப்படித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுதெல்லாம் ஒரு நாளைக்கு 5,6 துணிமணிகள் உடுத்துகிறார்கள். 150 வருடங்களுக்கு முன் மார்பின் மேல் துணியைப் போடாமலே இருந்திருக்கிறார்கள். பெரிய பணக்கார வீடுகளில் மார்புக்குக் கச்சை மாத்திரம்தான் கட்டியிருப்பார்கள். திருமலை நாய்க்கன் வீட்டுப் பெண்களைப் படத்தில் பார்த்தால் தெரியும். தொப்புள் நன்றாகத் தெரியும். மார்பகம் ஒன்றைத்தான் கச்சை கட்டி நன்றாக இழுத்து கட்டியிருப்பார்கள். பிறகு கலெக்டர் உத்தரவு போட்ட பிறகுதான் நாமெல்லாரும் துணி போட ஆரம்பித்தோம். நம் கொடுமைகளை அறிந்து அதற்குப் பரிகாரமாக ஏதாவது புரட்சி செய்தால்தான் முடியுமே தவிர, வாயிலேயே பேசிக் கொண்டிருந்தால் ஒன்றும் காரியத்தில் நடக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழனைச் சூத்திரன் என்று ஒரு கூட்டம் கூறுகிறதே! அதை எதிர்க்க நமக்குத் துணிவு இல்லை என்றால் என்ன அர்த்தம்? எதற்காக நமக்கு 3000 வருடங்களாக ஆயிரக்கணக்கான கடவுள்களும், கோடிக்கணக்கான கோயில்களும் இருக்க வேண்டும்? குழவிக் கல்லைக் கும்பிட வேண்டும்? மாட்டு மூத்திரத்தை எதற்காகக் குடிக்க வேண்டும்? 63 நாயன்மார்கள், ஆழ்வார்கள் என்ன செய்தார்கள்? அவர்களுக்கு எப்படி அந்தப் பட்டம் கிடைத்தது? புத்தர்களை, ஜைனர்களைத் திட்டினார்கள், தீ வைத்தார்கள், பவுத்தப் பெண்களைக் கற்பழித்தார்கள். பார்ப்பான் சொற்படி வேத, புராண, மனுதர்மங்களை மக்களிடையில் பிரச்சாரம் செய்தார்கள். அதனால் பட்டம் கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நம் கருத்துக்குத் தகுந்தபடி 2000 வருடங்களுக்கு முன்பு புத்தர் கொள்கைகள் தோன்றின. பார்ப்பனர்கள், பவுத்தர்களைக் கொன்று, பள்ளி மடங்களுக்குத் தீயிட்டு, பண்ணக்கூடõத வேலைகளையெல்லாம் செய்திருக்கிறார்கள், அன்பே சிவம் என்று சொல்கின்ற சைவர்கள், திருவத்திபுரத்தில் போய் பார்க்க வேண்டும் - இன்றைக்கும் சமணர்களைக் கழுவிலேற்றிய பண்டிகை கொண்டாடப்பட்டு வருவதை! திருவத்திபுரத்தில் சைவர்கள், வேதம் பெரிது என்றார்கள். சமணர்கள், அறிவுதான் பெரிது என்று சொன்னார்கள். இரு பெயரையும் தனித்தனி சீட்டுகளில் எழுதி நதியில் விட்டார்கள். அதில் வேதம் என்று எழுதியிருந்த சீட்டு நீரை நோக்கி எதிர்த்துப் போனதாம். ஆகவே, அறிவுதான் பெரியது என்று சொன்ன 100க்கும் மேற்பட்ட சமணர்களைக் கழுவிலேற்றிக் கொன்றனர். மேற்கண்ட நிகழ்ச்சிகளை, சதுரம் கருங்கல்லில் செதுக்கி வைத்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஆரிய மூடப்பழக்கங்களை எதிர்த்து யார் கூறியிருக்கிறார்கள்? எல்லோரும் டாலர் முதல்கொண்டு போட்டு வணங்கி வரும் சாயிபாபா, ராமகிருஷ்ணர், விவேகானந்தர், யாராவது ஒருவர் கூறினார்களா? புத்தர் ஒருவர்தான் ஆரியத்தின் இந்து மதத்தின் மண்டையைப் பார்த்து ஓங்கியடித்தார். “மனிதன் தன் வாழ்க்கையில் துன்ப இன்பங்களை அனுபவிக்கிறான். தெரியாத ஆத்மாக்களைப் பற்றி ஆராய்ச்சி செய்வதைவிட "தெரிகிற ஆத்மாக்களாகிய' மனிதர்களின் துன்பத்திற்கு வழி தேட வேண்டும்'' என்றார் புத்தர்.&lt;br /&gt;&lt;br /&gt;தேவாரம் திருவாசகம் படித்துப் பாருங்களேன். திருஞான சம்பந்தன் என்னும் பார்ப்பனன் 3 ஆம் வயதிலேயே பாட்டுப் பாடினானாம்! இவன், பவுத்தர், சமணர்களை சண்டாளர்கள், அயோக்கியர்கள் என்று கூறி, அவர்கள் பெண்களைக் கற்பழிக்க உதவ வேண்டுமென்று கடவுளை வேண்டினானாம். இந்தப் பாட்டுக்களை மடாதிபதிகள் தங்கள் பள்ளிகளில் வைத்து, பாடம் சொல்லிக் கொடுக்கிறார்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;நன்றாக யோசித்துப் பாருங்கள்! புத்தர் தன் கொள்கைகளை வகுத்து சுமார் 2500 ஆண்டுகளாகின்றன. இதுவரை யாரும் அவர் பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடியதில்லை. ஆனால் இப்பொழுது நாடெங்கும் கொண்டாடுகிறார்கள். காரணம் என்ன? புத்தர் இந்த பார்ப்பனர்களுக்காக தம் கொள்கையை மாற்றிவிட்டாரா, பார்ப்பனர்கள் திருந்தி விட்டார்களா என்றால் இல்லை. மக்கள் புத்தரின் கொள்கைகளை ஒத்துக் கொண்டார்கள். மக்களுக்குப் புத்தி வந்து விட்டது. மக்கள் முன்னேற்றமடைந்து வருகிறார்கள் என்பதைத்தான் இது காட்டுகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28593647-8400452193237135729?l=kilumathur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kilumathur.blogspot.com/feeds/8400452193237135729/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28593647&amp;postID=8400452193237135729' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28593647/posts/default/8400452193237135729'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28593647/posts/default/8400452193237135729'/><link rel='alternate' type='text/html' href='http://kilumathur.blogspot.com/2009/03/blog-post.html' title='கற்பழிக்க உதவுங்கள்!'/><author><name>மகேந்திரன்.பெ</name><uri>http://www.blogger.com/profile/17863131935297558260</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://i64.photobucket.com/albums/h187/mahendhiranp/mahendhiran.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_4nqliyy-z-Y/SbJNhIfnKkI/AAAAAAAAAuM/BHbPkydQTu0/s72-c/Periyar_300.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28593647.post-2367825153525550695</id><published>2008-11-04T23:49:00.000+05:30</published><updated>2008-11-04T23:57:51.913+05:30</updated><title type='text'>கலைஞர் கையாலாகாதவரா இல்லையா ?</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_4nqliyy-z-Y/SRCT_TSD63I/AAAAAAAAAgE/C95aXJHH884/s1600-h/Slide1.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/_4nqliyy-z-Y/SRCT_TSD63I/AAAAAAAAAgE/C95aXJHH884/s400/Slide1.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5264870680113179506" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_4nqliyy-z-Y/SRCTxozcTpI/AAAAAAAAAf8/wqwFgZJ56-U/s1600-h/jayalalitha.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 268px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/_4nqliyy-z-Y/SRCTxozcTpI/AAAAAAAAAf8/wqwFgZJ56-U/s400/jayalalitha.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5264870445372165778" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சென்னை: ராஜீவ் காந்தியை கொலை செய்ய விடுதலைப் புலிகளைத் தூண்டிவிட்டதே ஜெயலலிதாதான் என்று திமுக குற்றம் சாட்டியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இது குறித்து அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ள அறிக்கையில்,&lt;br /&gt;&lt;br /&gt;முதல்வர் கருணாநிதி தலைமையில் ஆட்சி உருவாகும் போதெல்லாம் காலம் முடிவதற்குள்ளாகவே `கலைக்க வேண்டும்' `கலைக்க வேண்டும்' என்று ஒப்பாரி வைப்பது ஜெயலலிதாவிற்கு கைவந்த கலை.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த ஒப்பாரியால் இரண்டு முறை அரசியல் லாபம் அடைந்த ஜெயலலிதா மீண்டும் `கலைக்க வேண்டும்' என்ற ஒப்பாரி ராகத்தை துவக்கியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏதோ விடுதலைப் புலிகளுக்கு திமுக ஆதரவு என்பது போல புரளியைக் கிளப்பி காங்கிரசிற்கும் திமுகவிற்கும் மோதலை உருவாக்க முட்டிப் பார்க்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல்வர் கருணாநிதி சட்டமன்றத்திலும் சரி மக்கள் மன்றத்திலும் சரி ஈழத்தமிழர் போராட்டத்தில் ராஜீவ் காந்தி படுகொலைக்கு முன்- ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின் என்று பகுத்துப் பார்த்து தான் ஈழத்தில் வாடும் அப்பாவித் தமிழருக்காக குரல் கொடுக்கிறோம் என்று அழுத்தம் திருத்தமாகக் கூறியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இருந்தாலும் ஜெயலலிதா தன் பழைய பல்லவியை விடுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் உண்மை புரியும். ராஜீவ் காந்தியை கொலை செய்ய விடுதலைப் புலிகளைத் தூண்டியதே ஜெயலலிதாதான் என்பது நாடறிந்த உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு ஒரு முக்கியமான எடுத்துக்காட்டு- ஒரு கூட்டணித் தலைவரான ராஜீவ் காந்தி திருபெரும்புதூருக்கு வரும்போது அதில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து கிருஷ்ணகிரி சென்றுவிட்டு அங்கிருந்து படபடப்போடு சென்னையில் என்ன நடந்தது என போன் மூலம் ஜெயலலிதா விசாரித்தார் என்பதும்,&lt;br /&gt;&lt;br /&gt;ராஜிவ் காந்தியின் விமான நிலைய வரவேற்புக்கு ஜெயலலிதா மட்டுமல்ல, அவர் கட்சியைச் சேர்ந்த யாருமே செல்லவில்லை என்பதும் அன்றைய பத்திரிக்கைச் செய்திகள்.&lt;br /&gt;&lt;br /&gt;கருணாநிதி 1980ல் இந்திரா அம்மையாரோடு கூட்டணி வைத்தபோது அவரோடு மூன்று நாட்கள் தமிழகம் முழுவதும் அவர் காரிலேயே பிரச்சாரத்திற்கு சென்றதை நாடறியும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஜெயலலிதா ராஜீவோடு இல்லாமல் கிருஷ்ணகிரி சென்றது ஏன் என்ற கேள்விக்கு இன்றுவரை பதிலில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கருணாநிதி பெரியார் வழியில், அண்ணா வழியில் தன்னுடைய 14 வயதில் 1938ல் பள்ளிக்கூடப் பருவத்திலேயே தமிழுணர்வோடும், இன உணர்வோடும், சமுதாய உணர்வோடும் போராட்ட களத்தில் குதித்து இன்றுவரை அந்த உணர்வுகளைக் கட்டிக் காத்து வருபவர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஜெயலலிதாவோ 7 வயதிலே இளநீர் விற்பவராக திரைப் படத்தில் நுழைந்து `விபத்து அரசியலால்' தலைமைக்கு வந்தவர் என்பதை மறந்து அறிக்கை விடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக அரசால் வழங்கப்படும் பொருள்கள் ஐ.நா. மூலமாக அனுப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்ததற்குப் பிறகும் கலைஞர் செய்யும் வசூல் `விடுதலைப் புலிகளுக்கே' என்று அறிக்கை விடுகிறாரே ஜெயலலிதா.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிதாவது அரசியல் நாகரீகமோ. தமிழர்களின் மீது பற்றோ இருந்தால் இப்படி பேசுவாரா? `நான் அடிப்பதைப் போல் அடிப்பேன்- நீ அழுவது போல் அழ வேண்டும்' என்று விடுதலைப் புலிகளின் மீதுள்ள பயத்தால் வைகோ மூலம் விடுதலைப் புலிகளுக்கு இன்றளவும் ஜெயா செய்யும் மறைமுக உதவிகள் விரைவில் வெளிவரும்.&lt;br /&gt;&lt;br /&gt;வைகோவுடன் கை கோர்த்துக்கொண்டு தன்னை விடுதலைப் புலிகளின் எதிரியைப் போல நாடகமாடும் தந்திரம் மக்களுக்குப் புரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;மராட்டியத்தில் ஒரே ஒரு பீகார்காரர் கொலை செய்யப்பட்டார் என கேள்விப்பட்டவுடன் தங்கள் அரசியல் வேறுபாடுகளை மறந்து லல்லு பிரசாத், நிதிஷ் குமார், பஸ்வான் எல்லாம் கை கோர்க்கிறார்கள். இதைப் பார்த்தாவது ஜெயலலிதாவிற்கு ரோஷம் வராதா?. வரும்.... ஓடுவது சுத்தமான தமிழ் ரத்தமாக இருந்தால்.&lt;br /&gt;&lt;br /&gt;அதிமுக பொதுச் செயலாளர் நரகல் நடை நாயகி, அவருக்கே உரிய பாணியில் இன்று ஓர் அறிக்கை தலைவர் கலைஞரின் குடும்பத்திற்காகவே ஒதுக்கியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த அறிக்கை முழுவதிலும் முதல்வரையும் அவரது மனைவிகள், மகன்கள், மகள்களையும் திட்டித் தீர்த்திருக்கிறார். கருணாநிதி குடும்பத்துடன் இருக்கிறார், ஜெயலலிதா குடும்பம் இல்லாமல் இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு கருணாநிதி என்ன செய்வார்?. கலைஞரின் குடும்பத்தினரைக் கண்டு ஜெயலலிதா எதற்காக வயிறு எரிகிறார் என்று தெரியவில்லை. அந்த அறிக்கையிலே 86 வயதான கலைஞரை - இந்த வயதிலும் ஊருக்காக உழைத்துக் கொண்டிருப்பவரை கையாலாகாதவன் என்று ஜெயலலிதா சொல்லியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;கலைஞர் கையாலாகாதவரா இல்லையா என்பதற்குச் சாட்சியாகத் தான் ஜெயலலிதா அறிக்கையிலே குறிப்பிட்ட மனைவிகள், மகன்கள், மகள்கள் இருக்கிறார்கள் என்று பதில் சொல்ல எத்தனை நேரமாகும்?&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையிலே அப்பாவி தமிழ் மக்கள் படும் சிரமத்தைக் குறைப்பதற்காக நிவாரண நிதி திரட்டுவதைக் குறிப்பிட்டு குறை கூறுகிறார். சுயநலத்தோடு செய்யப்படுகின்ற காரியம் தான் இலங்கைத் தமிழர்களுக்காக நிதி திரட்டுகின்ற செயலாம்!.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வகையில் முதலில் கனிமொழியை முன்னிலைப்படுத்தினார் கருணாநிதி என்கிறார். அதிலே கனிமொழியை கலைஞர் என்ன முன்னிலைப்படுத்தினார்?.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் ஜெயலலிதா தன் அறிக்கையில் தமிழ் மொழி, தமிழ்ப் பண்பாடு என்று பேசும் கருணாநிதி; இலங்கைத் தமிழர்களுக்காக வேட்டி, சேலை ஆகியவற்றைக் கொடுப்பதற்குப் பதிலாக, தமிழ்ப் பண்பாட்டைச் சீர் குலைக்கும் ஆடைகளை அதாவது 'நைட்டி'களை கனிமொழி வழங்கியதாகக் கூறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;வேட்டி, சேலைக் கொடுப்பதற்குப்பதிலாக வெறும் 'நைட்டிகளை' மட்டும் கனிமொழி கொடுக்கவில்லை.&lt;br /&gt;ஜெயலலிதாவே அவரது அறிக்கையில் அடுத்த வாக்கியத்தில் "சக்கர நாற்காலியில் கருணாநிதி அமர்ந்திருக்க, பக்கத்தில் துணைவி ராஜாத்தி நிற்க, அருகில் கனிமொழி நின்று கொண்டு அரிசி மூட்டைகள், சேலைகள், லுங்கிகள் மற்றும் நைட்டிகள் வழங்கியதாக'' என்று குறிப்பிட்டுள்ளார். அதிலிருந்து சேலைகள், லுங்கிகள் வழங்கியதைப் புரிந்து கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;'நைட்டிகள்' வழங்கியிருப்பது பற்றி "தமிழ் மொழியின் மீதும், தமிழ்ப் பண்பாட்டின் மீதும் கருணாநிதிக்கு உள்ள அக்கறை இது தான்'' என்று ஜெயலலிதா எழுதியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;பதவி இல்லாமல் இருப்பதால் அம்மையாருக்கு ஏதாவது ஆகி விட்டதா என்ன?. 'நைட்டிகள்' அணிவதை தமிழ்ப் பண்பாட்டிற்கு விரோதமானது, அதை எப்படி கொடுக்கலாம் என்று கேட்கிறாரா?.&lt;br /&gt;&lt;br /&gt;அல்லது "வைரம்'' திரைப்படத்திலே ஜெயலலிதா உடுத்தியிருந்த ஆடைகளைப் போல வாங்கிக் கொடுக்க வேண்டுமென்று பரிந்துரை செய்கிறாரா?.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்திலே உள்ள யாரும் நைட்டிகளை அணிவதில்லையா? இலங்கைத் தமிழர்கள் அணியக் கூடிய ஒன்றைக் கொடுப்பது குற்றமா? நைட்டி என்று சொல்வதைக் குறை கூறுகிறாரா?. அதுவும் அந்த வார்த்தையை அண்ணன் கலைஞர் பயன்படுத்தவில்லையே?&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து கலைஞர் தன் துணைவியார் தயாளு அம்மாளை முன்னிலைப்படுத்தியதாக ஜெயலலிதா கூறுகிறார். இலங்கைத் தமிழர் நிவாரண நிதிக்காக தயாளு அம்மாள் ஐந்து இலட்சம் ரூபாய்க்கான காசோலை அளித்ததைத் தான் முன்னிலைப்படுத்தியதாகக் கூறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசு சார்பில் இலங்கைத் தமிழர்களுக்கு உதவிட, தமிழ் ரத்தம் ஓடுகின்ற- தமிழ் உணர் வுள்ள மக்கள் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டுமென்ற நோக்கத்தோடு உதவி செய்வது ஜெயலலிதா மொழியிலே குற்றமா?.&lt;br /&gt;&lt;br /&gt;"கருணாநிதியின் மனைவிக்கு ஐந்து லட்சம் ரூபாய் கொடுக்கக் கூடிய அளவிற்கு பணம் எங்கிருந்து வந்தது அவருக்கு எந்த வழியில் வருமானம் வருகிறது கருணாநிதியின் மனைவி வருமான வரி செலுத்துகிறாரா? என்பதையெல்லாம் கருணாநிதி நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும்'' என்கிறார் ஜெயலலிதா.&lt;br /&gt;&lt;br /&gt;தயாளு அம்மாள் அவர்கள் சன் தொலைக்காட்சியில் பங்கு தாரராக இருந்து; சில ஆண்டுகளுக்கு முன்பு- அவர் அதிலிருந்து விலகிய போது அவருக்குக் கிடைத்த நூறு கோடி ரூபாயில் குடும்பத்தாருக்குப் பிரித்துக் கொடுத்தது போக மீதமிருந்த ஒன்பதரை கோடி ரூபாயினை வங்கியிலே தன் பெயரில் டெபாசிட் செய்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு மாதந்தோறும் வட்டியும் கிடைக்கிறது. அவருக்குக் கிடைத்த தொகைக்கு அவர் முறையாக வருமான வரி கட்டியிருக்கிறார். தற்போது மாதந்தோறும் கிடைத்து வரும் வட்டித் தொகைக்கும் ஒவ்வொரு ஆண்டும் முறைப்படி வருமான வரி கட்டி வருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இது தான் கணக்கே தவிர, அவர் ஜெயலலிதாவைப் போல வருமான வரி முறையாகக் கட்டாமல் வழக்குகளிலே சிக்கிக் கொண்டு ஆண்டுக்கணக்கிலே நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளிலே ஏறி இறங்கிக் கொண்டிருப்பவர் அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;தன்னுடைய வருமான வரி கணக்கைச் சரிக் கட்டுவதற்காக மத்தியிலே அமைச்சராக இருந்த யஸ்வந்த் சின்கா அவர்களை வீட்டிற்கே விருந்துக்கு அழைத்து, அவர் புறப்படும்போது அவர் கையிலே வருமான வரி வழக்கிலிருந்து விடுபட பரிந்துரைக் கடிதத்தைக் கொடுத்து அனுப்பிய விவரம் தமிழ்நாட்டு மக்களுக்கு மறந்தா விட்டது?.&lt;br /&gt;&lt;br /&gt;வெளிநாட்டிலேயிருந்து யாரோ எனக்குத் தெரியாமல் என் பெயருக்கு பணம் அனுப்பினார்கள், யார் அனுப்பியது என்று தெரியாமலே அதனை என் பெயரிலே டெபாசிட் செய்து கொண்டேன் என்று ஜெயலலிதா ஊருக்கு கணக்கு காட்டினாரே அது போன்றதல்ல தயாளு அம்மாவின் கணக்கு!.&lt;br /&gt;&lt;br /&gt;எந்தவிதமான முதலீடும் இல்லாமல் 66 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்து, அதற்கான வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்று ஆண்டுக் கணக்கிலே இன்னும் நாறிக் கொண்டிருக்கிறதே, அது போன்றதல்ல தயாளு அம்மாவின் கணக்கு!.&lt;br /&gt;&lt;br /&gt;உதகையிலே கோடைநாடு எஸ்டேட் தனக்கு வேண்டியவருடையது என்று முதலில் கூறி, பின்னர் உடன்பிறவா சகோதரியின் சகோதரிக்கு உரியது என்று மாற்றப்பட்டதே, அதுபோன்றது அல்ல தயாளு அம்மாவின் கணக்கு!.&lt;br /&gt;&lt;br /&gt;"கருணாநிதி நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டு''மென்றாரே, நானே அந்தக் கணக்கு விவரங்களை விளக்கி விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஜெயலலிதாவின் கணக்கு என்ன? மற்றவர்களின் கணக்கைப் பற்றிக் கேட்க அருகதை வேண்டாமா? தன் மேல் ஆயிரம் குற்றங்களைச் சுமந்து கொண்டு மற்றவர்கள் மீது குற்றம் சுமத்த நினைப்பது என்ன நியாயம்?&lt;br /&gt;&lt;br /&gt;"கருணாநிதி ஒரு திட்டத்தை அறிவிக்கிறார் என்றாலே அதிலே சுய நலம் இருக்கும்'' என்று ஜெயலலிதா சொல்கிறார் எந்தத் திட்டத்திலே சுய நலம் ஏழை மகளிர் திருமண நிதி உதவி திட்டம், கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதி உதவித் திட்டம், விவசாயிகளுக்கு கடன் நிவாரணத் திட்டம், ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் திட்டம், குழந்தைகளுக்கு வாரம் மூன்று முட்டைகள் வழங்கும் திட்டம் என்று எந்தத் திட்டத்தை சுயநலத் திட்டம் என்கிறார் ஜெயலலிதா?.&lt;br /&gt;&lt;br /&gt;அரசுக்குச் சொந்தமான டான்சி நிலத்தை கொள்ளையடித்து தன் பெயருக்கு குறைந்த விலையில் வாங்கிக் கொண்டு உச்சநீதிமன்றமே திருப்பிக் கொடுக்கச் சொன்னதே அதற்குப் பெயர் தான் ஜெயாவின் சுயநலம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏழைத்தாய்மார்கள் பொழுது போக்க அனைத்துக் கட்சிக் குழுவை அமைத்து டெண்டர் போட்டு வண்ணத் தொலைக் காட்சி பெட்டிகளை வழங்குவது இந்த ஆட்சி.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் உங்கள் ஆட்சியிலே வெளி மார்க்கெட் விலையை விட அதிக விலை கொடுத்து- உள்ளாட்சி மன்றங்களுக்கான தொலைக் காட்சி பெட்டிகளை வாங்கி ஊழலிலே மாட்டிக் கொண்டது உங்கள் ஆட்சி.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்பிக் வங்கியிலே அதன் பங்குகளை வாங்கியதிலே நடைபெற்ற ஊழல் கதை தெரியாதா? அந்த ஊழலுக்கு கையெழுத்து போட மறுத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு கிடைத்த பரிசு தெரியாதா? ஆம்னி பேருந்துகளுக்கு வரியைக் குறைத்து நடத்திய ஊழல் சுயநலத்திற்காக செய்யப்பட்டது தானே?&lt;br /&gt;&lt;br /&gt;நிலக்கரி இறக்குமதியில் நடைபெற்ற ஊழல், கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஓட்டலுக்கு அனுமதி வழங்கியதிலே நடைபெற்ற ஊழல் என்று புகழ் பெற்ற ஜெயலலிதா சுய நலத்தைப்பற்றி பேசலாமா?&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கைத் தமிழர்களின் இன்னல் போக்க நிவாரண நிதி திரட்டினால் அதனை சுயநலம் என்று கூறுவதா?.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளி மாணவிகள் தங்கள் பாக்கெட் மணியை தொகையினைச் சேர்த்துக் கொண்டு வந்து கொடுத்தார்களே, அவர்களுக்குள்ள உணர்வாவது ஜெயலலிதாவுக்கு இருக்க வேண்டாமா?.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மையாரின் குணம் புரிந்து தான் நிவாரண நிதி வழங்குவோர் யாராக இருந்தாலும் அவர்கள் காசோலை மூலமாகத் தான் வழங்க வேண்டுமென்று சொல்லப்பட்டு - வழங்குகின்ற ஒவ்வொருவருடைய பெயரும் எழுதப்பட்டு அது வெளியிடப்பட்டு வருகிறது. அதிலே கட்டாய வசூல் என்ற பேச்சுக்கெல்லாம் இடமே கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்காக அம்மையார் தன் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறாராம். வெட்கம்! வெட்கம்!.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவி இலங்கைத் தமிழர்களுக்காக திரட்டப்படுகின்ற இந்த நிதி விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு சென்று விடுமோ என்று மக்கள் சந்தேகப்படுகிறார்களாம். ஜெயலலிதா அளந்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இருபதாண்டுகளுக்கு முன்பு கலைஞர் அவர்களின் பிறந்த நாளையொட்டி உண்டியலிலே போடப்பட்ட தொகையைப் பிரித்து அனைத்து இலங்கைப் போராளிகளுக்கும் பங்கிட்டு வழங்கியபோது, அப்போது அதிமுக ஆட்சியிலே இருந்த காரணத்தால் அவர்களுக்கு கோபம் வந்து விடுமோ என்ற எண்ணத்தோடு திமுக சார்பிலே கொடுக்கப்பட்ட நிதி உதவியைப் பெற மறுத்தவர்கள் விடுதலைப் புலிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;"அந்த விடுதலைப் புலிகளுக்கு எம்ஜிஆர் செய்த உதவியைப் போல கருணாநிதி எதுவும் செய்யவில்லை'' என்று ஆங்கில நாளிதழ்களுக்கு பேட்டியளித்தவர் தான் இந்த ஜெயலலிதா.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த விடுதலைப் புலிகளுக்கு இப்போதும் நேரடியாக ஆதரவு தெரிவித்தும், தனி நாடே கேட்போம் என்ற அளவிற்கும் துணிந்து பேசக் கூடிய மதிமுகவை இன்றைக்கும் தோழமை கட்சியாக ஜெயலலிதா வைத்துக் கொண்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் கட்சியினரும் நாங்கள் விடுதலைப் புலிகளை அழிக்க நினைக்கும் அதிமுகவோடு தான் உறவாக இருப்போம் என்று வெளிப்படையாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்ற நிலையில், அரசின் சார்பில் திரட்டப்படுகின்ற நிவாரண நிதித் தொகை விடுதலைப் புலிகள் அமைப்புக்கு சென்று விடுமோ என்று தமிழக மக்கள் சந்தேகப்படுகிறார்கள் என்று அறிக்கை விடுகிறார் என்றால், யாரை ஏமாற்ற இந்த நாடகம்?.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் மக்கள் யாருக்கும் ஜெயலலிதா போல அந்தச் சந்தேகம் கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;அதனால் தான் அவர்கள் தாராளமாக முன் வந்து மூன்றே நாட்களில் ஐந்து கோடி ரூபாய் அளவிற்கு தாங்களாகவே நிதியினை வழங்கியிருக்கிறார்கள். இந்த பொது நிதிக்கு ஒரு ரூபாய் கூட வழங்காத ஜெயலலிதார் அதிலே கோணல், இதிலே கோணல் என்று பம்மாத்து காட்டுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இது போன்ற காரியங்களில் அரசிலே இருப்போர் யார் என்று பார்க்க கூடாது. இதே ஜெயலலிதா ஆட்சியிலே இருந்தபோது சுனாமி ஏற்பட்டு தமிழர்கள் பாதிக்கப்பட்ட போது யார் ஆட்சியிலே இருக்கிறார்கள் என்று பார்க்காமல் திரைப்படம் எழுதி தனக்குக் கிடைத்த 21 லட்சம் ரூபாயை தன் மகன் மு.க. ஸ்டாலின் மூலமாக இதே ஜெயலலிதாவிடம் கொண்டு போய் கொடுக்கச் சொன்னவர் தான் கலைஞர்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படிப்பட்ட தலைவர் எங்கே? இன்றும் உயிரை விட்டுக் கொண்டிருக்கின்ற இலங்கைத் தமிழனுக்காக திரட்டப்படுகின்ற நிதிக்கு சுயநலம் என்று அறிக்கை விடும் ஜெயலலிதா எங்கே? தமிழ்நாட்டு மக்களே புரிந்து கொள்ளுங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;"தமிழக மக்களின் உதி ரத்தை உறிஞ்சி உலகப் பணக்காரர்களின் வரிசையிலே இடம் பிடித்தவர் இந்தக் கருணாநிதி'' என்கிறார் ஜெயலலிதா. யாருடைய உதிரத்தை யார் உறிஞ்சியது அதனால் உலகப் பணக்காரர்களாக மாறியது யார்?.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களுக்கு எங்கெங்கே எஸ்டேட்டுகள், தோட்டங்கள், மாளிகைகள் என்பதையெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அறிக்கையை வெளியிட நிச்சயமாக நான் காரணமல்ல, ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை தான் காரணம் என்பதையும் அவருடைய அறிக்கையை படிக்கும் ஒவ்வொரு தமிழனின் உணர்வு தான் இந்த அறிக்கை என்பதையும் கூறி- தமிழ் மக்கள் என்னை மன்னிக்க வேண்டிக் கொண்டு இதனை வெளியிடுகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு பொன்முடி கூறியுள்ளார்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28593647-2367825153525550695?l=kilumathur.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kilumathur.blogspot.com/feeds/2367825153525550695/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28593647&amp;postID=2367825153525550695' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28593647/posts/default/2367825153525550695'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28593647/posts/default/2367825153525550695'/><link rel='alternate' type='text/html' href='http://kilumathur.blogspot.com/2008/11/blog-post.html' title='கலைஞர் கையாலாகாதவரா இல்லையா ?'/><author><name>மகேந்திரன்.பெ</name><uri>http://www.blogger.com/profile/17863131935297558260</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://i64.photobucket.com/albums/h187/mahendhiranp/mahendhiran.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_4nqliyy-z-Y/SRCT_TSD63I/AAAAAAAAAgE/C95aXJHH884/s72-c/Slide1.JPG' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28593647.post-8249152459569091095</id><published>2008-10-27T15:06:00.000+05:30</published><updated>2008-10-27T15:16:17.231+05:30</updated><title type='text'>ஜெயலலிதா, சோ ராமசாமி, இந்து ராம் மற்றும் சில பூனைகள்</title><content type='html'>குண்டுகள் ஆலங்கட்டி மழை போல் பொழிந்தாலும்&lt;br /&gt;நாங்கள் பாசிஸ்டுகளுக்கு ஒரு அடி நிலத்தைக் கூட கொடுக்க மாட்டோம்.&lt;br /&gt;எங்களது தோழர்கள், ஆதரவாளர்களும் எங்களுக்குப் பின் நிற்கின்றனர்.&lt;br /&gt;எங்களுக்குப் பின்வாங்குதல் என்பது கிடையவே கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் வானத்தைப் பார்த்தேன்...&lt;br /&gt;அது எனது கண்களை வசியம் செயதது...&lt;br /&gt;நாங்கள் அனைவரும் சிற்பபாக சுடக் கூடியவர்கள், சுதந்திரமானவர்கள்...&lt;br /&gt;எங்களது ஒவ்வொரு தோட்டாவும் எதிரியை எழ விடாமல் செய்தது..&lt;br /&gt;&lt;br /&gt;(ஜப்பானுக்கு எதிரான சீனப் புரட்சியின் போது கனேடிய புரட்சியாளரும் மருத்துவருமான தோழர் நார்மன் பெத்யூன் குழுவினரின் பாடல்கள்)&lt;br /&gt;&lt;br /&gt; ‘‘தமிழ்நாட்ல ஏன் சார் இப்படி’’&lt;br /&gt;&lt;br /&gt;‘‘இன்னும் ரெண்டு கிலோமீட்டர்ல அவங்களை பிடிச்சுருவாங்களாமே? அவங்க கதை முடிஞ்சிடுமா?" வட இந்திய ஊடக நண்பரின் குரலில் கலந்திருந்த பதட்டமும் சந்தோஷம் கலந்த எதிர்பார்ப்பும் எனக்கு ஆச்சரியமாக இருக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நான் இப்படி அவருக்குப் பதில் சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;‘‘நீங்கள் பல முறை அவர்களை காட்டிக் கொடுத்து விட்டீர்கள். சில முறை அவர்களை களவாடியிருக்கிறீர்கள். உங்கள் விருப்பங்கள் பல முறை உங்களால் நிகழ்த்திக் காட்டப்பட்டது. ஆனால் மீண்டும் மீண்டும் ஒன்றை மறந்து விடுகிறீர்கள். உங்களின் நண்பர்கள் பல முறை அவர்களை வென்று விட்டதாகச் சொன்ன கதைகளை தமிழகமே கதைகள் என்று நிரூபித்தது. இனியும் நிரூபிக்கும்.’’ என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வட இந்தியாவில் மட்டுமல்ல தமிழகத்துக்குள்ளும் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள். கிளிநொச்சியை இலங்கை ராணுவம் கைப்பற்றினால் சிங்களர்கள் கொண்டாடுவார்களோ இல்லையோ காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தலைமையில் இவர்கள் கொண்டாடி விடுவார்கள் போல. சரி கிடக்கட்டும். காலம் இவர்கள் கிழித்த எத்தனையோ கோடுகளை அழித்துப் போட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 14ஆம் தேதி ஈழத்தமிழர்கள் மீதான இலங்கை அரசின் இனவெறிப் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரும்படியான கோரிக்கையோடு தமிழக முதல்வர் கலைஞரின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. கடந்த பத்தாண்டுகளில் இப்படியான ஒருங்கிணைந்த அரசியல் கட்சிகளின் கூட்டம் தமிழகத்தில் நடைபெறுவதால் இந்தியாவின் ஒட்டு மொத்த மீடீயாக்களும் தமிழகத்தின் அந்த முடிவுக்காக காத்திருந்தன. பல நேரலை ஒளிபரப்பு வாகனங்கள் தமிழகத்தின் போராட்ட மேடைகள் தோறும் வலம் வர இந்தியா முழுக்க கவனம் பெற்றது தமிழகத்தின் கொந்தளிப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த பத்தாண்டுகளில் குழந்தைகளும், பெண்களும், ஆண்களுமாய் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட போதெல்லாம் தமிழக தமிழர்கள் கொதிப்பை மனதுக்குள் பூட்டியே வைத்திருந்தார்கள். தொடர்ந்து கட்டப்பட்ட புலிவேஷம் மத்திய மாநில அரசுகளுக்கு பொருந்தியே வந்தது. ஈழம், புலிகள், தமிழ்ச்செல்வன் என எதைப் பேசினாலும் அடக்குமுறைச் சட்டங்களால் காட்டிய பூச்சாண்டிப் புலி வேஷம் பல நேரங்களில் அரசியல் ரீதியாக பழிவாங்கவும் பயன்படுத்தப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;பொடா சட்டம், தடா சட்டம் போன்ற கொடிய ஆள்தூக்கிச் சட்டங்கள் பலதையும் கடந்து வந்த தமிழகம் அதனூடாக இந்தியாவுக்கே சில கோரிக்கைகளை முன்வைத்தது. இந்திய அளவிலான மனித உரிமை ஆர்வலர்கள் தங்களின் மனித உரிமைக் குரல்களை சென்னையில் இருந்து ஒலிக்கவும் துவங்கவும் ஒரு வாய்ப்பாக அமைந்தது அந்தக் கொடிய சட்டங்கள். புலி வேடம் போட்டவர்களின் தடாவும் பொடாவும் இன்று இல்லை. பயங்கரவாதத்தின் பெயரால் இதை விடக் கொடிய சட்டங்கள் நாளை வரலாம் புலி வேஷத்தோடு.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குள், மொத்த தமிழகமும் இன்று ஈழத்தமிழருக்காய் திரண்டிருக்கும் சூழலை ஆதிக்கத்தின் மேல் விழுந்த உடைப்பு எனலாம். இந்த கட்டுரைக்கு உடைப்பு என்று பெயர் வைத்தால் கூட அது பொருத்தமானதாகத் தானிருக்கும். இந்த உடைப்பு அதிகப்படியான தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியையும் வழக்கம் போல சிலருக்கு கொதிப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சர்வ கட்சிக் கூட்டம் நடந்த அன்று காலை வெளிவந்த ஹிந்து நாளிதழில் மாலினி பார்த்தசாரதி என்ற ஒரு பத்திரிகையாளர் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். The dangers of tamil chauvinism என்கிற தலைப்பில் வெளிவந்த அந்தக் கட்டுரை திட்டமிட்டு அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் அன்று இந்து பத்திரிகையால் வெளிக் கொணரப்பட்டது. சரி ஆங்கில அறிவாளிகள் அல்லவா? ஏதாவது விஷயம் இருக்கும் என நினைத்து வாங்கிப் பார்த்தால் அந்தக் கட்டுரை ஈழத்தமிழர் தொடர்பில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள உடைப்பு தொடர்பாக ஹிந்து பத்திரிகைக்கும் அதன் ஆசிரியர் ராம் அவர்களுக்கும் எழுந்துள்ள கொதிப்பை உணர்த்தியது. அந்தக் கொதிப்பில் உள்ள நியாயத்தை பார்ப்பதற்கு முன் வெங்காயத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்பதை சுருக்கமாகப் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;# ஈழம் தொடர்பாக தமிழக அரசியல்வாதிகள் ஒரு புதிய டிரெண்டை உருவாக்க நினைக்கிறார்கள். தமிழகத்தில் எழுந்துள்ள இந்த அச்சுறுத்தல் இந்திய சமூகத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளது. தீவீரவாதமாக உருப்பெறும் தன்மை இந்த திரட்சிக்கு உண்டு. தெருவுக்குத் தெரு இது (ஈழ ஆதரவு) வளர்ந்து வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சியும், மதிமுகவும் இதை உச்ச கட்ட நிலைக்கு கொண்டு வந்து விட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;# வட இலங்கையில் நடக்கும் போருக்கு இங்கு (தமிழகத்தில்) கேம்பெய்ன் மாதிரி நடத்துகிறார்கள். எல்லோரையும் திரட்டி விட்டார்கள். ஆனால் இலங்கை ராணுவம் புலிகளின் தலைமையகத்தை பிடிக்க இன்னும் இரண்டு கிலோ மீட்டர் தொலைவிலேயே இருக்கிறது. இலங்கை ராணுவம் இது வரை இப்படி ஒரு வெற்றியை அடைந்ததில்லை. வேலுப்பிள்ளை பிரபாகரனை பிடித்து விடுவார்கள். இவர் யார் என்றால் பாரதப் பிரதமரை படுகொலை செய்ய மூளையாகச் செயல்பட்டவர்.&lt;br /&gt;&lt;br /&gt;# தமிழக அரசியல்வாதிகள் இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கைக்கு எதிராக செயல்படுகிறார்கள். இது எப்படி இருக்கிறதென்றால் இங்கிருந்து கொண்டு காஷ்மீரிகளையும் ஜிகாதிகளையும் ஆதரிப்பதற்கு சமமாக இருப்பதுபோல் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;# இதை(ஈழத்தை) ஆதரித்தால் அதை (காஷ்மீரை) ஆதரிக்கத்தானே வேண்டும். இதையும்( ஈழத்தையும்) அதையும் (காஷ்மீரையும்) ஒன்றாக வைக்க முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;# புலிகள்தான் தென்கிழக்காசியாவில் தீவீரவாதத்தை துவங்கியது. அவர்களால்தான் அகதிகளாக தமிழர்கள் தமிழகம் வருகிறார்கள். அவர்களின் பிரச்சனையில் இங்குள்ளவர்களை இன்வால்வ் ஆக்குகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;# இங்குள்ள அரசியல்வாதிகளுக்கு 83லிருந்து வெறும் இருபது வருட வரலாறே தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;# இவர்கள் புலிகளின் மாஸ்டர் மைன்டாக செயல்படுகிறார்கள். ஒரே இரவில் இவர்கள் விழித்துக் கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;# இந்திய மத்திய அரசு கடந்த பத்து வருடமாக சக்ஸசாக போய்க் கொண்டிருக்கிறது. (ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது என்பது போல புரிந்து கொள்ளவும்) இந்நிலையில் இந்த மாஸ்டர் மைன்டுகளை வளரவிட்டால் அது இந்தியாவின் ஒற்றுமைக்கு ஆபத்து.&lt;br /&gt;&lt;br /&gt;என்றெல்லாம் இந்திய உபகண்ட உலக வரலாறு தெரிந்த மாலினி பார்த்தசாரதி எழுதியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;தோழர்களே - நீங்கள் கற்றுக் கொள்ளவும் தெரிந்து கொள்ளவும் அப்படி எந்த புதிய கள்ளும் இந்த பழைய மொந்தையில் இல்லையாதலால் நீங்கள் அவர் எழுதிய கட்டுரையை படிக்க வேண்டிய அவசியம் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கட்டுரைக்கு எவ்விதத்திலும் பதில் சொல்ல முடியாத அளவுக்கு அந்தக் கட்டுரையின் தரம் இருந்தாலும் விடுதலைப்புலிகள் தீவீரவாதிகள் ஆக வேண்டும் என்று வேண்டி விரும்பி ஆயுதங்களைத் தூக்கிக் கொண்டு கள முனைக்கு வரவில்லை என்பதை உணர்த்த சில வரிகளில் சிங்கள இன வெறி வரலாற்றை நினைவுறுத்த வேண்டியிருக்கிறது....&lt;br /&gt;&lt;br /&gt;# வாளை செங்குத்தாக ஏந்திப் பிடித்திருக்கும் சிங்கக் கொடியோடு 1948 பிப்ரவரியில் சிங்களம் ஆட்சிக்கு வந்தபோது டான் ஸ்டீபன் சேனநாயகா அதன் முதல் பிரதமராக பதவியேற்றார். பதவியேற்ற ஒரு வருடத்துக்குள் அவர் ‘பிரஜா உரிமைச் சட்டத்தைக் கொண்டுவந்தார். அடர்ந்த காடுகளைத் திருத்தி காப்பியும் தேயிலையும் பயிர் செய்த மலையக மக்கள் சிங்கள் இன வெறிக்கு முதல் பலியானார்கள். 1840லிருந்து 1850 வரை கிட்டத்தட்ட பத்து இலட்சம் கூலி அடிமைகள் தமிழகத்தின் தென் ஆற்காடு, வட ஆற்காடு, திருச்சி, மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட குடியுறிமை மறுக்கப்பட்ட அவர்களைத்தான் இன்று வரை மலையகத் தமிழர்கள் என்றும், இந்திய வம்சாவளிகள் என்று வரலாறு பதிவு செய்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;# 1956ல் பண்டாரநாயகா பதவிக்கு வந்த ஜூன் மாதத்தில் தனிச் சிங்களம் சட்டம் கொண்டு வரப்பட்டது. இலங்கை அரசின் கல்வித்துறையில் இருந்து ஒட்டு மொத்த தமிழ் மாணவர்களும் புறக்கணிக்கப்பட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;# இவ் வேறுபாட்டின் கொடுமைகளை அன்றே அனுபவித்த தந்தை செல்வா அதை ஜனநாயக வழிகளில் அவர் நம்பிய அஹிம்சா கொள்கைகள் வழியே தீர்க்கலாம் என நம்பினார். அதனாலேயே சிங்கள ஆட்சியாளர்களுக்கு ஆதரவை வழங்கினார். சேனநாயகா, பண்டாரநாயகா, ஜெயவர்த்தனா என்று சிங்கள வெறியர்களோடு அவர் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் யாவும் பௌத்த பிக்குகளாலும் சிங்கள அடிப்படைவாதிகளாலும் கிளித்தெறியப்பட்டது. அஹிம்சா போராளிகள் மீது வன்முறை ஏவிவிடப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt; # 1981ல் யாழ்நூலகம் எரிக்கப்பட்டது. தமிழர்களின் வரலாற்று மூலமான 90,000 நூல்கள் எரிந்து சாம்பலாயின&lt;br /&gt;&lt;br /&gt;# தேடுதல் வேட்டையினால் பல நூறு தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்கள். அவர்கள் வெலிக்கடைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். 1983 ஜூலை 25 ஆம் தேதி சிங்கள கைதிகள் அரசின் ஆதரவோடு மிகப்பெரிய வன்முறையில் இறங்கினர். 34 கைதிகள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். ஜெகன், தங்கத்துரை, குட்டிமணி என ஏராளமான இளைஞர்கள் கொல்லப்பட்டனர். இரண்டு நாள் கழித்து மேலும் 18 பேர் கொல்லப்பட, தமிழ் மக்களுக்கு எதிரான தாக்குதல் எங்கும் பரவியது. கிட்டத்தட்ட 3,000 தமிழர்கள் கோரமாக கொல்லப்பட்டனர். உலகின் கறுப்பு வரலாற்றில் இந்த இன வெறித்தாக்குதலை ஜூலை கலவரம் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;# குமுதினி, செம்மணி, செஞ்சோலை என சிங்கள இனவெறி வரலாற்றில் கோரமாக கொல்லப்பட்ட தமிழ் மக்களின் கதைகளை நாம் குறைவாகவே பதிவு செய்திருக்கிறோம். அது போல 1956, 1958, 1961, 1974, 1981, 1983 என்று வரலாற்றின் மிக நீண்ட தக்குதல்களால் ஈழத்தமிழர்கள் உயிரையும் உடமைகளையும் இழந்திருக்கிறார்கள். 83 ஜூலை கலவரங்களுக்கு பிறகு ஆயுதம் தாங்கிய இளைஞர்களின் எழுச்சி ஏற்பட்ட பிறகுதான் சிங்களர்கள் தமிழர்களை படுகொலைகள் செய்வதை நிறுத்தினர். ஆனால் சிங்கள மக்கள் தமிழ் மக்களுக்கு எதிராக செய்ததை இப்போது இலங்கை அரசு செய்து கொண்டிருக்கிறது. இன வெறி அன்றும் இன்றும் அரசு பயங்கரவாதமாக இலங்கையில் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வெறும் இருபது வருடங்களுக்குள் அடங்காத பாசிசத்தின் கோரமுகம் இப்போதும் பல்லிளிக்கிறது அதே கோரத்தோடு.&lt;br /&gt;&lt;br /&gt;‘‘இந்த நாடு சிங்கள மக்களுக்கு மட்டுமே சொந்தமானது தமிழர்கள் இருந்து கொள்ளலாம் இங்கே’’ என்று இலங்கை ராணுவத்தளபதி சரத்பொன்சேகா சொல்லும் போது இன வெறிப் பாசிசத்தின் இறுகிய வடிவமான அந்த வார்த்தைகள் இந்தியா வகுத்துக் கொடுக்கும் இலக்கணத்தின் படியே சொல்லப்படுகிறது. இன்று நூற்றுக்கணக்கான சிங்கள ராணுவத்தினர் வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் ஆயுதப் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி பயிற்சி எடுக்கும் சிங்கள ராணுவத்தினருக்கு ஊக்கத் தொகையும் கொடுத்து உற்சாகப்படுத்துகிறது இந்தியா. இது அவரை உற்சாகப்படுத்துவதாய் சரத் பொன்சேகா சொல்கிறார். இது இன்றைய கதை.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று, அமைதிப் படையை இலங்கைக்கு அனுப்பி ஆயிரக்கணக்கான ஈழ மக்களை கொன்று குவித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;# திலீபனின் உயிரைக் காவு வாங்கியது&lt;br /&gt;&lt;br /&gt;# குமரப்பா புலேந்திரன் உடபட 17 பிரதானப் போராளிகளை சிங்களனிடம் காட்டிக் கொடுத்தது இந்தியா.&lt;br /&gt;&lt;br /&gt;# கிட்டுவின் மரணத்துக்குக் காரணமானது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கெல்லாம் இன்று இந்தியாவிடம் பதில் இல்லை. மௌனம் மட்டுமே பதில். அந்த மௌனம்தான் இன்று யுத்த தந்திரமாக ஈழத்தில் தமிழர்களை கொன்று குவிக்கிறது. ஆனாலும் இன்று தமிழகம் கொந்தளித்த பிறகு முதன் முதலாக வாய் திறந்திருக்கிறது இந்தியா. ‘‘இந்தியாவின் பிராந்திய நலனும் இந்து மகாசமுத்திரத்தில் வேறு எந்த நாடும் ஆதிக்கம் செய்வதை இந்தியா விரும்பவில்லை. ஆகவே இலங்கைக்கு ஆயுத உதவி செய்கிறோம்’’ என்கிறது. இந்துமாக்கடல் பிராந்தியத்தை அமெரிக்காவும், சீனாவும், பாகிஸ்தானும் பங்கு போட்டிருக்கிறது. திருகோணமலை துறைமுகத்தை தன் ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க நினைக்கிறது அமெரிக்கா.&lt;br /&gt;&lt;br /&gt;எண்பதுகளில் போராளிக் குழுக்களுக்கெல்லாம் ஆயுதமும் பயிற்சியும் கொடுத்து வளர்த்த இந்தியா அவர்களை தனது செல்லப் பிள்ளைகளாக்க நினைத்தது. தூண்டிலில் வைத்த இறை மீனுக்கு உணவு என்று நம்பி இந்தியாவிடம் ஏமாந்தவர்கள
