Friday, August 31, 2007

என்னை போலியின் தொண்டன் என்ற தமிழ்ப் பித்தனுக்கு நன்றி

கொஞ்ச நாளுக்கு முன்ன நான் ஒரு பதிவு போட்டேன் "அடத் தூ ஒங்களுக்கு யாருதான் ஒரிஜினல் பதிவர்னு சொல்லி அதுக்கு காரணம் இருக்கு. ஏன்னா எனக்கு நெருக்கமான சில பதிவர்கள் என்னை தொடர்பு கொண்டு நான் போலின்னு ஒரு பிம்பத்த உருவாக்க சிலர் பாடுபடுவதா சொன்னாங்க அப்போவெல்லாம் அட விடுங்க அவனுங்க அப்படித்தான்னு விட்டுட்டேன் சும்மா ஒரு கலாய்த்தல் பதிவு போட்டுட்டு. இப்போ இவங்க அடிச்சிகிட்டு இருக்கும் போது மறுபடியும் தேவையே இல்லாம என்னை இதுக்குள்ள இழுத்து விட்டு என்ன லாபம் கிடைக்க போகுதுன்னு தெரியல. சரி விஷயத்துக்கு வரலாம்.

தமிழ்பித்தன்னு ஒரு ஐஎஸ் ஓ 2008 விருது வாங்குன தமிழ் பதிவர் ஒருத்தர் ஆடிக்கு ஒன்னு அமாவாசைக்கு ஒன்னுன்னு ஒரு அரணா கயித்த காணோம் என்னோட சொம்ப நாய் நக்கிறுச்சின்னு பதிவு போடுவாரு அதும் தமிழ் மண முகப்பில் இருந்துட்டு அப்படியே வானவில்லு மாறி மறஞ்சுபோகும் என்ன செஞ்சும் சூட்ட கிளப்பற மாதிரி பதிவு போடத் தெரியல பாத்தாரு என்ன இப்போதைக்கு லேட்டஸ்டு இவ்வனுங்கதான் அப்படீன்னு என்னையும் இதுல இத்து விட்டு சூட்ட கிளப்ப பாக்குறாரு.

(ச்சூடான இடுகைல வரதுக்கு ச்சூடு பதிவுக்கு உள்ள இருக்க கூடாது தலைப்பிலயே இருக்கனும் அதுகூட தெரியல இன்னும் பாவம் உங்களுக்கு என்னோட பரிந்துரை உங்க பதிவுக்கு
"சிக்கினார் போலியின் அல்லக்கை, மகேந்திரனுக்கு வெகுவிரைவில் ஆப்பு" இப்படி இருக்கனும் தெரிதா?)

அண்ணே தமிழ்பித்தண்ணே என்னன போலியோட தொண்டன்னு சொன்னீங்களே அதுக்கு என்ன காரணம்ணா? தெரிஞ்சுக்கலாமா? ஏன்னா நான் உண்மைலயே தொண்டன் தானான்னு தெரிஞ்சுக்கலாமில்ல அதனாலதான் எங்கயாவது எனக்கு தெரியாம போலியை நான் ஆதரிப்பதாக பதிவோ இல்லை வேற எதுவோ எழுதித் தொலைச்சிருந்தா அதையெல்லாம் அவசர அவசரமா அழிச்சிடலாமில்ல அதுக்குத்தான்.

அப்றம் ஒங்களுக்கு ஒரு நன்றி எதுக்குன்னு கேக்குறீங்களா எல்லாருமென்னை போலின்னே சொல்லும்போது நீங்களாவது கொஞ்சம் பெரிய மனசு "பன்னி" தொண்டன்னு சொன்னீங்களே அதுக்கு!

வேற எதும் விவரம் தேவைன்னா சொல்லி அனுப்புங்க ...

பி.கு.( எனக்கு கோவம் அதிகமா வந்தா ரொம்ப மரியாதையா பதிவு எழுதுவேன் அதுக்கு இந்த பதிவே சாட்சி)

Thursday, August 30, 2007

லூஸ் டாக்ஸ் ( நாய்கள் அல்ல)

நண்பர் ஓசை செல்லா என்னை லூசு என்று சொல்லி இருந்தார். ஒத்துக் கொள்கிறேன். மேற்படி ஓசை செல்லாவுக்கும் கருப்புவுக்கும் பிரச்சனை வந்தது நேற்றோ, இன்றோ இல்லை, ஒரு மாதத்திற்கு முன்பே இருவருக்கும் முட்டிக் கொண்டது அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

மீண்டும் என்று ஒருவர் காலை ஒருவர் நக்கிக் கொண்டார்கள் என்று தெரியவில்லை, கருப்பு அனுப்பிய மெயில் என்று கிருபானந்த வாரியார் பற்றிய கட்டுரையை வெளியிட்டு சிலாகித்துக் கொண்டார். அவர் அந்த பதிவில் கொடுத்த சுட்டியை வைத்து கருப்பு பதிவுக்கே சென்று பலரும் பின்னூட்டினர்.

இவர்கள் என்று அடித்துக் கொள்வார்கள், சேர்ந்து கொள்வார்கள் என்றே தெரியாது, இந்த அவலெட்சணத்தில் என்னை லூசா என்று கேட்பதற்கு ஓசை செல்லாவுக்கு எதாவது ஆகி இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

இது போல் டோண்டு இராகவன் என்ற பார்பன புகழ் நபரும் விடாது கருப்புக்கு நன்றி என்று பதிவைப் போட்டு கருப்புவின் காலை நக்கினார்.

இவனுங்க எப்போ எதிரிஆவானுங்க நண்பன் ஆவானுங்க என்று எந்த நாய்க்குமே தெரியாது. இதில் ஏங்கடா சாமிகளா என்னைப் பார்த்து ?

செல்லா ,
போருக்கு தயாராகிறேன் என்ற சுகிர்தராணி கவிதையும், நாய்களும் நானும் கவிதையும் எந்த இடத்திலாவது யாரையாவது ஆதரித்திருக்கிறதா? அப்படி என்ன அர்த்தம் பார்க்கக் கூட முடியாத அவசரம் உங்களுக்கு? முதலில் இந்த லூசுத்தணமாக ஒரு விஷயத்தை ஆராயாமல் அவசரப் பட்டு அடுத்தவனை லூசு எனச்சொல்லும் லூசுத் தனத்தினை கைவிடவும்.

Monday, August 27, 2007

பார்பனர்கள் இட ஒதுக்கீடு பெற யோஜனை.

அண்மையில் உச்சநீதிமன்றத்தில் சாதிகள் ஒழிக்கப்பட வேண்டும் என்ற அக்மார்க் 'அக்கரையில்' சொல்லப்பட்ட 'மனு'வின் விவரம்

இந்தியாவில் சாதிகள் அடிப்படையில் இட ஒதுக்கீடு இருப்பதனால், பலர் படிப்பதற்கு வழி இன்றி தவிர்கின்றனர்.

"ஆயிரக்கணக்கான ஜாதிகளால் நாடே பிளவுப்பட்டு இருக்கும் போது இந்தியாவை ஒரு நாடு என்று அழைக்க முடியாது. ஜாதியும், சகோதர மனப்பான்மையும் ஒன்றுடன் ஒன்று ஒத்து போகாது. எனவே இரண்டும் நிலைத்து இருக்க வேண்டும் என்பது முடியாத காரியம். ஜாதியத்தால் இந்துக்கள் அழிந்து விடுவர். கல்வி மற்றும் வேலை வாய்ப்பால், இட ஒதுக்கீட்டால் வாய்ப்பு கிடைக்காத இளைஞர்கள் வெறுத்து போய் உள்ளனர். அவர்களை இனம் கண்டு நக்சலைட்டுகள் தங்கள் வசம் மாற்றி வருகின்றனர். இதனால், நக்சலைட் அமைப்பு வளர்ந்து வருகிறது. சமூக ஒருமைப்பாடு மற்றும் சமூக, ஜனநாயக கட்டமைப்புக்கு ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு மிகப்பெரிய அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது. ஜாதி, மதம், பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் குடிமக்களை வேற்றுமைபடுத்த கூடாது என்று அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு அரசியல் சட்டத்துக்கு முரணானது. இதர பிற்படுத்தப்பட்ட மக்களில் மேல் மட்டத்தில் உள்ளவர்களே ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டினால் பலன் பெறுகின்றனர். கீழ்மட்ட மக்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். இட ஒதுக்கீட்டில் இருந்து கிரீமி லேயரை நீக்காதவரை ஜாதி ரீதியான இட ஒதுக்கீடு பலன் தராது."

ச்சே......., படிப்பதற்கே பரிதாபமாக இருக்கிறது,

ஒரு குடுமி ஆசாமி ஸொல்றார்,

'உழைச்சு சாப்பிடுங்கடா என்றார்கள்' படித்துவிட்டு அரசாங்க 'உயர்' பதவிகளில் உட்கார்ந்தோம், மிலிட்டெரி, போலிஸ் என உடம்பு வளைந்து வேலை செய்யும் அளவுக்கு அசைவம் சாப்பிட்ட தேகம் இல்லை, எனவே அதிகாரிகளாகத்தான் 'உயர்ந்தோம்', இட ஒதுக்கீடு எல்லாத்துக்கும் வேட்டுவச்சிட்டு, எங்கவா எல்லோரும் நக்சலைட்டா மாறப்போறா, எல்லோரும் லைட்டா எடுத்துக்காதிங்க'

ஏன் ச்சாமி, நக்சலைட்டு, டியூப்லைட்டுன்னு மாறுவதற்கு பதில், இஸ்லாமிய மததிற்கோ , கிறித்துவ மதத்திற்கோ பூணூலை கழட்டிப் போட்டுண்டு மதம் மாறிடலாமே, ஏன் சாமி பாழாப் போன இந்துமதத்தை கட்டிண்டி அழரேள். அங்கே போனாலும் 'பிசி' ஆக மாறி அரசாங்க சலுகையை நன்னா அனுபவிக்கலாம். நக்சலைட்டா மாறிட்டேள்னா, எப்போதாவது கண்டுபிடிச்சுட்டாள்னா போலிஸ்காரன் பூணூலை கழுத்தில் போட்டு இறுக்குவானே, சாமி பேசாம மதம் மாறிடுங்கோ, இதான் நல்ல யோஜனையாப் படறது. உங்கவா அறிவுக்கும், திறமைக்கும் எடுக்கிற மார்க்குக்கு பிசி(BC)யில் இருந்தேள்னா எங்கேயோ போய்டலாம். செய்வேளா ?

Saturday, August 25, 2007

விஞ்ஞானி துரைமுருகன் தனது காமெடிடைமை சட்டசபையோடு நிறுத்திக்கொள்ளட்டும்

ஜூனியர் விகடனில் மணல்கொள்ளை குறித்து ராமதாஸுக்கு பதில் தரும் விதமாக ஒரு புதிய விஞ்ஞான உண்மையை வெளிப்படுத்தி இருக்கிறார் துரைமுருகன். அதாவது

"மணல் அள்ளுவதால் விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது என்றும் கூறியிருக் கிறார் ராமதாஸ். அவருக்கு ஒன்றைச் சுட்டிக்காட்ட நினைக்கிறேன்... ஆற்றில் மணல் அள்ளாவிட்டால்தான், மணல் குவிந்து மேடாகிவிடும். பிறகு தண்ணீர் வரும்போது ஓட்டம் தடைப்பட்டு, ஊருக்குள்ளும் விவசாய நிலங்களிலும் புகுந்து மக்களுக்கு சிரமத்தைக் கொடுக்கும். இதைத் தவிர்க்கத்தான் காலம்காலமாக ஆற்றில் மணல் அள்ளி வருகிறோம். "

அடக் கொடுமையே ராமதாஸ் சொல்றதுக்கு எதிர்ப்பை சொல்ல வேற ஒன்னுமேவா கிடைக்கல என்னோட அனுபவத்த சொல்றேன் கேளுங்க

அப்போ எனக்கு 10 வயசு இருக்கும் சரியான கோடை வெயில் எங்க ஊர் ஆறு தினம் மழைபேஞ்சா ஒரு நாலு நாளைக்கு வெள்ளம் போகும் அதும் கூட எங்க ஊரத் தாண்டி ஓடனும்னா ஒரு வாரம் பேயனும் ஆனா அந்த குட்டியூண்டு வெள்ளத்தை வச்சே எங்க ஆத்து மோட்டாரு ஒரு வருசம் முழுக்க தண்ணி இறைக்கும் இத வச்சித்தான் எங்க வயல் நெல்லாகவும் கரும்பாவும் தெண்ணையாவும் காச அள்ளித் தந்தது. அப்போ எங்க ஊரு முழுக்க கூறை வீடுங்கதான் அதிகம் மெத்தை வீடுங்க இல்லை. எங்க மோட்டார் தண்ணி இறைக்க போட்ட போரின் ஆழம் வெறும் 17 அடி எந்த நாளும் வற்றாது எங்ககிட்ட ஒரு கிணறு இருக்கு அது 20 அடி ஆழம்தான் இன்னிக்கு வரைக்கும் வத்தினதில்ல. அது ஆத்தை விட்டு கொஞ்சம் உள்ள தள்ளி இருக்கு வயலுக்குள்ள அது இந்த 65 வருசத்தில் வத்தினதே இல்லைன்னு எங்க அப்பா சொல்றாரு. சரி விஷயத்துக்கு வருவோம்.
அப்போ அப்ப்டியெல்லாம் இருந்த எங்க ஆத்து நீர்நிலை இப்போ எப்படி இருக்கு? போன வருசம் தமிழகம் எங்கும் பேஞ்ச கணத்த பேய் மழைல எங்க ஊருக்குள்ள எல்லாம் வெள்ளமாம் எங்க ஊர் பசங்க சொன்னாங்க ஆனா என்ன கொடுமை அந்த வெள்ளமும் 10 நாளில் வடிஞ்சி போச்சி... தண்ணியிறைக்கிற மோட்டார் பம்புசெட்டெல்லாம் தண்ணி புகுந்து ரிப்பேர் ஆச்சு அத சரி செஞ்சி வைக்கறதுக்கு முன்ன ஆத்துல ஓடுன வெள்ளம் வடிஞ்சி போச்சி. அப்போ 17 அடியில இருந்து தண்ணிய அள்ளி கொட்டுன மோடார் இன்னிக்கும் கொட்டுதுதான் ஆனா 17 அடியில இருந்து இல்ல 42 அடியில இருந்து. அட எங்களை மாதிரி கொஞ்சம் கையில காசு வைச்சி விவசாயம் (கடன் வாங்கியாவது) பாக்குறவன் எதாவது ஒரு வகையில இன்னும் ஆழமா போர் போட்டு தண்ணியிறைக்கலாம் ஆனா அடுத்தவங்க தயவில மோட்டார் தண்ணி பாசனம் பன்றவங்க என்ன பன்ன? இந்த கஷ்ட காலத்துக்கெல்லாம் யார் காரணம் என்ன காரணம்? எல்லாம் இந்த ஆத்துல அடிக்கிற மணல் லோடு லோடா போய் மாடி வீடாவும் காண்கிரீட் காடாகவும் மாறிக் கிடக்கே அதனாலதான். அதனாலதான் எங்க ஏரியா முழுக்க தண்ணீர் பஞ்சம். இது தலைவிரிச்சி ஆட ஆரம்பிக்கும் முன்ன எதாவது செய்யனும்னு பாக்குறோம் எவன் கேக்குறான்? எல்லாம் அரசியல் எங்க போய் முறையிட்டாலும் இந்த அரசியல் அங்கயும் வந்துடுது. அதனாலதான் மணல் கொஞ்சமா தேவைப்படும் ஹாலோப்ளாக் முறை தயாரிப்பு கற்களைபயன்படுத்த சொல்லி பலரை கொஞ்சமா மணல் பயன்பாட்டுக்கு மாத்திப்பாக்குறோம், இப்படி விவசாயிகளோட வாழ்வாதாரமா இருக்கும் தண்ணீர் ஆத்து மணலை ஆதாரமா கொண்டு இருக்கு. 3ம் வகுப்பு பாடத்திலயே மணல்தான் அதிக நீரை தேக்கிவைக்கும் படிச்சதோட இல்லாம இந்த மகேந்திரனுக்கு 5 வருசம் தீவிர விவசாயம் வேற பாத்தோம்கிற விவசாயிக்கே உரித்தான திமிர் இருக்குங்க, அதனால துறைமுருகன் அய்யா உங்க விஞ்ஞான காமெடிகளை சட்டசபைக்கு உள்ள மட்டும் வச்சுக்கோங்க இந்த மாதிரி ஆத்திரமூட்டும் பதில் எல்லாம் சொல்லி மனுசன கடுப்பக் கெளப்பாதீங்க.. ஒரு பாட்டு உங்களுக்கு ஞாபகம் இருக்கா கருத்தம்மா படத்தில

"ஆறு என்ன ஆறு அட போடா வெக்கக்கேடு
மழ வந்தா தண்ணி ஓடும் மறு நாளே வண்டி ஓடும்"

இது எல்லா ஆத்துக்கும் வந்து விவசாயம் மஞ்சத்துண்டு போட்டுக்கறதுக்கு முன்ன கொஞ்சமாவது இந்த மணல் கொள்ளைய தடுங்கய்யா மவராசனுவளா....

Monday, August 20, 2007

பெரியண்ணனின் தகிடுதத்தங்கள் இன்னொரு ஈரானா இந்தியா?

மார்ச் 2, 2006ல் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் மற்றும் இந்திய பிரதம மந்திரி மன்மோகன் சிங் ஆகியோரால் அறிவிக்கப்பட்ட மிகவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட இந்திய, அமெரிக்க நாடுகளுக்கு இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் இப்பொழுது ஒரு இக்கட்டான நிலையில் உள்ளது; சிக்கலகற்றுவதற்கு அச்சுறுத்தலை கொண்டிருக்கிறது. மே 31ம் தேதி புது டில்லியில் அமெரிக்க வெளிவிவகார துணைச் செயலர் (அரசியல் விவகாரங்கள்) மற்றும் இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தத்தின் தலைமை பேச்சுவார்த்தையாளருமான நிக்கோலஸ் பேர்ன்ஸ§க்கும், இந்திய வெளியுறவுச் செயலர் சிவசங்கர் மேனனுக்கும் இடையே உக்கிரமாய் நடந்த மூன்று நாள் பேச்சுவார்த்தைகள் முக்கிய வேறுபாடுகளை தீர்ப்பதில் தோல்வி அடைந்தன.

பேர்ன்ஸ் 123 என அழைக்கப்படும் உடன்பாட்டை அடைவதற்காக முன்கூட்டி நிர்ணயிக்கப்படாத ஒரு பயணத்திற்காக தனிஒரு முனைப்புடன் புது டில்லிக்கு பறந்து வந்தார்; இதற்கு இப்பெயர் கொடுக்கப்பட்ட காரணம் 1954 அமெரிக்க அணுசக்தி சட்டத்தின் (US Atomic Energy Act -USAEA) 123 வது பிரிவின் கீழ் மற்ற நாடுகளுடன் நடத்தப்படும் அமெரிக்க பேச்சுவார்த்தைகளின் இருநாட்டு அணுசக்தி ஒப்பந்தமாக இது இருப்பதால்தான். அவர் புது டில்லிக்கு புறப்படுவதற்கு சற்று முன்னர் பேர்ன்ஸ் பயணம் பற்றி அமெரிக்க தரப்பு உறுதியற்ற தன்மையை காட்டியது; இந்தியாவை இன்னும் சில சலுகைகள் விட்டுக்கொடுக்கும் வகையில் பேச்சுவார்த்தைகளை தூண்டும் உந்துதலாய் இது ஐயத்திற்கு இடமின்றி இருந்தது.

குறிப்பிட்ட நேரத்தில் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை கொள்ளலாம், அதையட்டி புஷ் நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கையின் "வெற்றிகளை" மன்மோகன் சிங் மற்றும் புஷ் இருவரும் ஜேர்மனியில் இருக்கும் ஹைலிகென்டாமில், G8 உச்சி மாநாட்டை ஒட்டி சந்திக்கும்போது அறிவிக்கலாம் என்று பேர்ன்ஸ் நம்பியிருந்தார். உத்தியோக பூர்வமாக இந்தியா நி8 ல் உறுப்பு நாடு இல்லை என்றாலும், மன்மோகன் சிங் உச்சிமாநாட்டின் சில பகுதிகளுக்கு சீனா, பிரேசில், மெக்சிகோ, தென் ஆபிரிக்க தலைவர்கள் அழைக்கப்பட்டது போல், அழைக்கப்பட்டிருந்தார்.

இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தப்படி, இந்தியாவிற்கு ஒரு சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்படும்; அதையட்டி அது அணு தொழில்நுட்பம் மற்றும் யுரேனிய எரிபொருள் அளிப்புக்களை உலகின் அணுசக்தி வணிகத்தை கட்டுப்படுத்தும் அணுசக்தி அளிக்கும் 45 உறுப்பினர்கள் அடங்கிய குழுவிடம் இருந்து (NSG) பெறமுடியும்; இதற்கு ஈடாக இந்தியா தன்னுடைய குடியியல்சார்ந்த அணுவாற்றல் வசதிகளை தனியே இராணுவத்திற்குப் பயன்படுத்தும் வசதிகளிடம் இருந்து பிரிக்க வேண்டும் என்றும் முந்தையதை சர்வதேச அணுசக்தி அமைப்பின் ((International Atomic Energy Agency -IAEA) கண்காணிப்பிற்கு உட்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டது.

இப்படி ((Non-Proliferation Treaty -NPT) ) அணுவாயுதப் பரவலை தடுக்கும் ஒப்பந்தத்தை மீறி அணுவாயுதங்களை தயாரித்துள்ள இந்தியாவிற்கு கொடுக்கப்பட இருந்த சிறப்பு அந்தஸ்து, ஈரானுக்கு எதிராக அமெரிக்கா இடைவிடாமல் அதை அரக்கத்தனமாக சித்திரித்து வருதல், அச்சுறுத்தல் கொடுத்தல் என்பதோடு வேறுபடுத்திப் பார்க்க வேண்டியதாகும். ஈரான் NPT ல் கையெழுத்திட்டுள்ள போதிலும், அமெரிக்கா மிகக் கடுமையாக அது முழு குடியியல் சார்ந்த அணுசக்தித்திட்டத்தை மிகிணிகி கண்காணிப்பில் அபிவிருத்தி செய்யும் உரிமைகளுக்கு மறுப்பு தெரிவித்து, NPT இன் விதிகள் ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதற்கு எதிரான போதுமான எச்சரிக்கைகளை கொண்டிருக்கவில்லை என்றும் கூறுகிறது.

இந்திய-அமெரிக்க 123 உடன்பாட்டின் விவரங்கள் பல மாதங்களாக பேச்சு வார்த்தைகளில் உள்ளன. ஆனால் டிசம்பர் 2006 Henry Hyde Act விதிகள் சிலவற்றின்படி (இவை USAEA இலும் திருத்தம் செய்து அமெரிக்க அரசாங்கம் இந்தியாவுடன் குடியியல் சார்ந்த அணுசக்திக்கு, அது அணுவாயுதங்களை தயாரித்திருந்தபோதிலும் கொள்ளலாம் என்கின்றன), என்பது பெரும் முட்டுக் கட்டைகளாக உள்ளன.

HYDE ACT அறிமுகப்படுத்தும் பல தேவைகள் இந்தியாவின் அணுசக்தி அமைப்பினாலும் இந்தியாவில் அரசியல் உயரடுக்கினராலும் வாஷிங்டன் இந்தியாவின் அணுசக்தி வளர்ச்சித் திட்டத்தை கடுமையாக தடைக்கு உட்படுத்திவிடும், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை அமெரிக்காவின் மேலாதிக்க விழைவுகளுக்கு தாழ்த்திவிடும் என்றும் கருதப்படுகிறது.

மே மாதத்தில் Strastfor வலைத் தளத்தில் வந்த கருத்து கூறியதாவது: "அமெரிக்க காங்கிரஸ் முதல் ஒப்பந்தத்துடன் சேர்த்த சில புதிய நிபந்தனைகள் பற்றி இந்தியா களிப்பு அடையவில்லை; நிறைய சலுகைகளை இந்தக்கட்டத்தில் கொடுப்பதற்கு இரு பக்கங்களும் தயாராக இல்லை."

இந்தியாவிற்கு கவலை மிக அதிக அளவில் தரும் hyde act நிபந்தனைகள் வருமாறு:

*அமெரிக்கா இதேபோன்ற சோதனைகளை நடத்துதற்கு தடை ஏதும் இல்லை என்றாலும், இந்தியா எவ்வித அணுசக்தி வெடிப்பு முறையையும் வெடிப்பதில் இருந்து தடை செய்யப்படுகிறது. IAEA உடன் கொண்டுள்ள உடன்பாட்டை மீறிய வகையில் ஏதேனும் செய்தாலோ, அணுசக்தி வெடிப்புச் சோதனையை இந்தியா நடத்தினாலோ, "திரும்பிச் செல்லும் உரிமையை" அமெரிக்கா எடுத்துக் கொள்ளும்; அதன்படி இதுகாறும் கொடுக்கப்பட்ட அமெரிக்க உலைகள், செலவழிக்கப்பட்ட எரிபொருள், உபயோகிக்கப்படாத எரிபொருள் உட்பட அனைத்தையும் திருப்பிக் கொடுக்குமாறு அமெரிக்கா கோரும்.

* தற்போதைய உடன்பாட்டின்படி, இந்தியா அமெரிக்காவில் இருந்து கிடைக்கும் எந்தக் கருவி அல்லது எரிபொருளையும் வெளிப்படையான அமெரிக்க அனுமதி இல்லாமல் செலவழிக்கப்பட்ட அணுசக்தி எரிபொருளை மறுமுறை பயன்படுத்தக்கூடாது. இந்த 123 உடன்பாட்டில் இருக்கும் வெளிப்படை மொழி என்பதில் அமெரிக்காவால் முன்கூட்டிய நிரந்தர, முழுமையான அனுமதி என மாற்றப்பட வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது.

ஹைட் சட்டம் இந்தியா, "ஈரானை அணுவாயுதங்கள் உட்பட பேரழிவு ஆயுதங்கள் பெறும் முயற்சிகள் மற்றும் யூரேனிய செறிவூட்டல், அணுசக்தியை மறுவழிப்படுத்துதல், பேரழிவு ஆயுதங்களை இயக்கும் வகைகள் இவற்றில் இருந்து தவிர்த்துக் கொள்ளுவதற்கு அறிவுரை கூறுதல், தனிமைப்படுத்துதல், தேவையானால் பொருளாதாரத்தடைகள் மற்றும் அதை அடக்குதல் ஆகியவற்றை கையாள வேண்டும்" என்று அமெரிக்கா கூறுகிறது. இந்த நடவடிக்கையின் முக்கியத்துவம் சற்று பூசலில் உள்ளது; ஏனெனில் வெள்ளை மாளிகை இது ஒரு "ஆலோசனைதான்" என்று கூறினாலும், இந்தியா தன் வெளியுறவுக் கொள்கை அமெரிக்க சட்டத்தின் கீழ் ஆணையிடப்படுவதற்கு எதிர்ப்பைக் காட்டியுள்ளது.

* அமெரிக்க ஜனாதிபதி ஒவ்வொரு ஆண்டும் காங்கிரசிற்கு இந்தியா சட்டத்தின்படி நடந்து கொண்டுவருகிறது என்று சான்று கொடுக்க வேண்டும்; உலக அரங்கில் அமெரிக்கா கூறுவதை செய்வதற்கு இது வாடிக்கையாக மிரட்டும் வகையில் பயன்படுத்தப்படும் என்று இந்திய ஆளும் உயரடுக்கு அஞ்சுகிறது.

புஷ் நிர்வாகம் இந்தியாவுடனான இறுதி 123 உடன்பாட்டிற்கு மிகிணிகி, ழிஷிநி இவற்றின் ஒப்புதலை பெற வேண்டும் என்று ஹைட் சட்டம் விதிக்கிறது. ழிஷிநி உறுப்பினர்களில் பலர் ஏற்கனவே இத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்; ஒருமித்த உணர்வு ஒன்றை அந்த அமைப்பின் மூலம் ஒப்புதலுக்காக இந்த உடன்பாட்டின் வெற்றிக்காக பெறமுடியுமா என்பது இந்தக் கட்டத்தில் தெளிவாக இல்லை.

புஷ் நிர்வாகம் ஹைட் சட்டத்தின் சில விதிகள் பற்றி பகிரங்கமாக உடன்பாடு இல்லை என்று கூறினாலும், இந்த சட்டமன்றத்தின் கட்டுப்படுத்தும் ஆணைகளை பயன்படுத்தி இந்தியா அதன் உயரடுக்கின் பல பிரிவுளுக்கு ஏற்கமுடியாத சில சலுகைகளை கொடுக்குமாறு அழுத்தம் கொடுக்கிறது; குறிப்பாக இந்தியாவின் அணுசக்தி அமைப்பும் இராணுவமும் இதற்கு ஆதரவாக இல்லை.

இந்தியா NNWS (Non-Nuclear Weapons State அணுசக்தி இல்லாத நாடு என்ற பகுப்புமுறையைத்தான் ஹைட் சட்டம் கொண்டுள்ளது; இதன் விளைவாக பல ழிறிஜி வகையிலான தடுப்புக்களுக்கு USAEA வில் இருக்கும் தடுப்புக்களுக்கு உட்பட நேரிடும்.NNWS ல் இந்தியாவை பகுத்துக்காட்டியுள்ளதின் அபத்தம் உடனடியாக வெளிப்படையாகும்; ஏனெனில் இந்தியா கணிசமாக அணுவாயுதங்களை கொண்டிருக்கிறது; தேவையானால் "அணுசக்தி வகைத் தடைகளையும்" பெருக்க விரும்புகிறது. ஆயினும்கூட இத்தகைய பகுப்பு முறை அமெரிக்க சட்டத்தின்படி, NPT ல் கையெழுத்திடா நிலையில், இந்தியா குடியியல் சார்பு அணுசக்தி எரிபொருள், தொழில்நுட்பம் ஆகியவற்றை பெறுவதற்கு தேவையாகும்.

இந்திய உயரடுக்கினருக்கு இந்த அணுசக்தி எரிபொருள் அளிப்பு உறுதி மற்றும் வெளிநாட்டு அணுசக்தி தொழில்நுட்பத்தை இறக்குமதி செய்யும் திறன் இரண்டும் மிகவும் முக்கியமானது ஆகும். இந்தியாவில் மிகக் குறைந்த உள்நாட்ட அணு யுரேனிய இருப்புக்கள்தான் உள்ளன; அவை குடியியல் மற்றும், இராணுவ அணுசக்தி தேவைகளுக்கு போதுமானதாக இல்லாமல் அதை சிரமத்திற்கு உட்படுத்துகிறது.

International Panel on Fissile Material இன் மதிப்பீடுகளின்படி, இந்தியா தன்னுடைய அணுவாயுத உற்பத்திகளை ஆண்டிற்கு 6ல் இருந்து 12 என்ற தற்போதைய நிலையிலிருந்து ஆண்டிற்கு 40 முதல் 50 வரை என்று, இந்திய-அமெரிக்க அணுசக்தி உடன்பாடு இராணுவத்திற்காக யூரேனியம் உள்பட உள்நாட்டு வளங்களை செலவழிக்க வகைசெய்துவிட்டபின் அதிகரிக்க முடியும்.

இந்திய அணுசக்தி அமைப்பு கணிசமான முயற்சியில் இந்தச் சிக்கல் வாய்ந்த அணுசக்தி தொழில்நுட்பம் பற்றி, அதன் உற்பத்தி உட்பட, ஆய்ந்திருந்தாலும், இதன் கருவிகள் பலவும் மாற்றுப் பொறியியல் தன்மை, நடுவர் இடர்பாடுகள் ஆகியவற்றிற்கு உட்பட்டிருப்பதால் அவற்றின் தரம் பற்றி வினாக்கள் எழுகின்றன. இந்திய அணுசக்தி நடைமுறை உலகில் இருக்கும் அணுசக்தி நடைமுறையுடன் இடைத்தொடர்பு கொண்டு இன்னும் முன்னேற்றமான தொழில்நுட்பம், அறிவியல் பெருக்கம் ஆகியவற்றைக் காண விரும்புகிறது.

அணுவாயுத தடையில் இந்தியா ஒரு கால வரம்பை அறிவித்துள்ளது; ஆனால் இந்த தடையை சட்டபூர்வ கட்டுப்பாடாக மாற்றுவதை தடுக்கிறது. பாகிஸ்தான் அல்லது சீனா அணுவாயுதங்களை சோதித்தல், அல்லது புதிய அணுவாயுதங்களை அமெரிக்காவே தயாரித்தல் போன்ற உலக நிலையினால் பாதிப்பு ஏற்படுகிறது என்று தாங்கள் நினைத்தால் இந்த தடையை எப்பொழுது வேண்டுமானாலும் நீக்கும் உரிமை இருக்க வேண்டும் என்று இந்திய உயரடுக்கு விரும்புகிறது.

எரிக்கப்பட்ட எரிபொருளை மறுபயன்பாடு செய்யும் உரிமையும் இந்தியாவிற்கு பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது; ஏனெனில் அத்தகைய எரிபொருள் இந்தியா தயாரிக்க விரும்பும் மூன்று கட்ட, இந்திய அணுசக்தி கட்டமைப்பிற்கு தேவையாகும் --இந்த வழிவகையின் இறுதிக் கட்டம் தோரியம் பயன்படுத்துவதாக இருக்கும்; இந்தியா இதனை மிக அதிக அளவு இருப்பில் கொண்டுள்ளது. யூரேனியமும் புளூட்டோனியமும் மறு பயன்படுத்தலுக்கு தடை என்றால் இந்தச் சிக்கல் வாய்ந்த பொறுப்பெடுத்தலை இன்னும் கடினமாக்கும்; இந்தியா அதையட்டி மகத்தான தொழில்நுட்ப மற்றும் பொருளாதார பாதிப்புக்களை சந்திக்க நேரிடும்.

முரண்படும் நலன்கள்

ஐயத்திற்கு இடமின்றி மிகச் சிக்கல் வாய்ந்த முரண்பட்ட காரணிகள் ஒரு ஒப்பந்தத்தை அடைவதற்கு இரு புறத்திலும் பெரும் முயற்சிகள் வேண்டும் என்ற உந்துதலை கொடுத்துள்ளன.

உடன்பாடு வெற்றிகரமாக முடிந்தது என்றால், இப்பொழுது ரஷ்யாவினால் கொடுக்கப்படும், மிக அதிக அளவிலான அணுசக்தி தொழில்நுட்பம், இராணுவ தளவாடப் பொருட்களுக்கான இந்திய சந்தை அமெரிக்க பெருவணிகத்திற்கு கிடைக்கும். அமெரிக்க வணிகக் குழுவின் கருத்துப்படி, ஒரு வெற்றிகர உடன்பாடு அணுசக்தி நுட்பம் மற்றும் பிற விற்பனைகள் மூலம் $100 பில்லியன் வணிகத்தை அமெரிக்க நிறுவனங்களுக்கு கொடுக்கும்.

பொருளாதார கணக்கீடுகள் கணிசமான முக்கியத்துவம் கொண்டாலும், இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்திற்கு உந்துதல் கொடுக்கும் முக்கிய காரணிகள் புவிசார்-அரசியல் தன்மை உடையவை ஆகும்.

இந்தியா "ஒரு உலக சக்தியாக" வருவதற்கு தான் உதவத் தயாராக இருப்பதற்கு இந்த அணுசக்தி உடன்பாடு நிரூபணம் என்று புஷ் நிர்வாகம் கூறிக் கொள்ளுகிறது; உலகின் "இரு பெரும் மக்கட்தொகை நிறைந்த ஜனநாயகங்களுக்கு இடையே" "பூகோளந்தழுவிய பங்காளித்தனத்தின்" முதல் கட்டமாகும் இது என்றும் அமெரிக்கா கூறுகிறது.

எழுச்சி பெற்று வரும் சீனாவை கட்டுப்படுத்தி, அடக்கி வைப்பதில் தான் காட்டும் முயற்சிகளின் மையப்பகுதியாக இந்தியாவை ஆக்க வேண்டும் என்பதில் அமெரிக்கா ஆர்வம் கொண்டுள்ளது. இந்தியாவை பயன்படுத்தி எண்ணெய் வளம் நிரம்பியிருக்கும் மத்திய ஆசியப் பகுதியில் இன்னும் ஊடுருவ அது நம்பிக்கை கொண்டுள்ளது; இதற்காக அமெரிக்காவுடன் அதிகம் பிணைந்துள்ள ஒப்பந்தங்களை இந்தியா கொள்ளுவதை அது விரும்புகிறது --அவை அதிகரித்த அளவில் இராணுவ, அணுசக்தி, புவி-அரசியல் பிணைப்புக்கள் மூலம்-- இந்தியப் பெருங்கடல் பகுதியில் கண்காணித்தலுக்கு தயார் செய்கிறது.

ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானத்தில் அமெரிக்கா எதிர்கொண்டுள்ள சங்கடங்கள், புஷ் நிர்வாகத்தை இந்தியாவுடன் இத்தகைய உடன்பாட்டை முடிக்க வேண்டும் என்ற உணர்விற்கு தள்ளியிருக்கிறன.

ஏப்ரல் 26ம் தேதி வாஷிங்டன் போஸ்ட் பதிப்பில் எழுதிய நிக்கோலஸ் பேர்ன்ஸ் அறிவித்தார்; "வாஷிங்டனுக்கும் டில்லிக்கும் இடையே நடக்கும் பேச்சுவார்த்தைகளின் போக்கு மிக விரைவாக உள்ளது; அமெரிக்க நலன்களுக்கு கிடைக்கக்கூடிய இலாபத் திறன்கள் கணிசமாக இருக்கும்; எனவே ஒரு தலைமுறைக்குள் அமெரிக்கர்கள் இந்தியாவை நம்முடைய இரண்டு அல்லது மூன்று மூலோபாய முக்கிய பங்காளிகளுள் ஒன்றாகக் கருதுவர் என்று நான் நம்புகிறேன்.

அமெரிக்க நிறுவனங்களுக்கு மிகக் கணிசமாக வரக்கூடிய இலாபத்திறன் பற்றி பேர்ன்ஸ் தொடர்ந்து கூறினார்: "அமெரிக்க நிறுவனங்கள் முதலில் முதலீடு செய்து இலாபம் பெரும் வகையில் இந்த மகத்தான விசைச் சந்தை இருக்கும். இந்தியாவும் விரைவில் இருதரப்பு உடன்பாட்டை முடிக்க செயல்பட்டு இதை உண்மையாக்கும் என்று நம்புகிறோம்."

இந்திய ஆளும் உயரடுக்கு இந்தியா ஒரு பெரிய உலக சக்தியாகிறது என்ற வாஷிங்டனின் பேச்சில் பெரும் திருப்தியைக் கொண்டுள்ளது. இந்தியாவின் அணுசக்தித் திட்டத்திற்கு, புவி அரசியல் காரணங்களுக்காகவும் இந்தியாவின் குடியியல் சார்பு அணுசக்தி விசைத் திறன் விரைவில் விரிவாக்கம் செய்யப்படுவதற்கும், சர்வதேச பிரித்து வைக்கப்படலில் இருந்து வெளியேறுவது மிகவும் முக்கியம் என்றும் அது நம்புகிறது.

ஆனால் இந்தியாவை "அணுவாயுதக் குழுவில்" முழுமையாக அனுமதிக்க அமெரிக்கா மறுப்பது, ஹைட் சட்டத்தில் இருக்கும் பல நிபந்தனைகள், ஒப்பந்தத்தை பயன்படுத்தி அமெரிக்காவுடன் இணைந்து ஈரானுக்கு எதிரான மோதலில் நிற்க வேண்டும் என்று அமெரிக்கா மிரட்டுவது, ஈரானிய இயற்கை எரிவாயுவை தெற்கு ஆசியாவிற்கு குழாய்த்திட்டம் மூலம் கொண்டுவருவதை கைவிட்டுவிடுமாறு கூறுவது ஆகியவை இந்திய அரசாங்கத்திற்கும் உயரடுக்கிற்கும் அனுமதி அளித்திருக்கிறது.

ஈரான் மற்றும் பாகிஸ்தான் உடன் சேர்ந்து எரிவாயுத் திட்டம் (மிறிமி) ஒன்றை கைவிடுமாறு இந்தியாவை அமெரிக்கா வற்புறுத்துகிறது; இதற்கு ஈடாக அணுசக்தி ஒப்பந்தத்தை கொடுப்பதுடன் ஒரு போட்டி குழாய்த்திட்டத்தையும் அது தர உள்ளது; அத்திட்டம் துர்க்மேனிஸ்தான்-ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான்-இந்திய குழாய்த்திட்டம் (IPI) ஆகும். Asia Times online கருத்தின்படி, ஜிகிறிமி குழாய்த்திட்டம், மிறிமி திட்டம் போலன்றி, முக்கிய அமெரிக்க எண்ணெய், கட்டுமான நிறுவனங்களையும் தொடர்புபடுத்தி, அமெரிக்காவின் ஆக்கிரமிப்பிற்குட்பட்ட ஆப்கானிய பகுதி வழியே செல்லும். இது அமெரிக்காவை மற்ற நாடுகளின்மீது கட்டுப்பாட்டை கொள்ளும் நிலையில் வைக்கும்; இந்திய உயரடுக்கு இத்தகைய அமெரிக்காவை நம்பியிருந்தல் பற்றி எச்சரிக்கையாக இருப்பது உணர்ந்து கொள்ளத்தக்கதே; அதுவும் நீண்டகாலமாக மிரட்டும் உத்திகளை அமெரிக்கா பயன்படுத்திவரும் நிலையில்.

இந்தியாவிற்கு சமீபத்திய பேர்ன்ஸின் வருகை அதிக பேச்சுக்களை, குறிப்பாக அமெரிக்கத் தரப்பில் இருந்து, 123 உடன்பாடுகள் பற்றிய பேச்சுக்கள் இறுதிக் கட்டத்தை அடைந்துவிட்டன என்பதுடன் வந்துள்ளன. ஆனால் இரு திறத்தாருக்கும் இடையே இருக்கும் வேறுபட்ட உந்துதல்கள், நலன்கள் ஆகியவற்றை பார்க்கும்போது, இது அடையப்படமுடியுமா என்பது சந்தேகமாகத்தான் உள்ளது. இறுதிவடிவம் பெற்றாலும், அதற்கு nsg , iaea மற்றும் அமெரிக்க காங்கிரஸ் ஆகியவற்றின் ஒப்புதல் வேண்டும்; அப்படியும் அதி ஆட்டம் கொடுக்கும் ஒரு புவி அரசியல் அஸ்திவாரத்தில்தான் தொடர்ந்து தங்கியிருக்கும்.

நன்றி: WWW.WSWS.ORG

Thursday, August 16, 2007

வடகலை அய்யங்கார்களுக்கும் இடஒதுக்கீடு தேவை..

அரசு இட ஒதுக்கீடுகள் சாதி சார்பாக இருப்பதற்கு ஆயிரம் ஏற்கத்தக்க காரணங்கள் இருக்கின்றன. அதே சமயத்தில் சாதிரீதியாக இட ஒதுக்கீட்டில் உயர்சாதியைச் சேர்ந்த ஏழ்மை நிலையில் இருப்பவர்களில் வெகு சிலர் பாதிக்கப்படுவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை. (யப்பா பாலா வந்து திட்ட முடியாத அளவுக்கு ஒரு பதிவுக்கு கரு கிடைச்சிடுச்சி) :)

உயர்சாதி வகுப்பில் பிராமணர்கள் என்ற பிரிவில் தமிழகத்தை பொருத்து இரு பெரும் பிரிவுகளாக இருப்பது ஒன்று ஐயர் அடுத்து ஐயங்கார். ஐயர்கள் கோத்திரத்தில் பலபிரிவுகள் இருக்கின்றன என்பதை திருமண வரன் விளம்பரங்களைப் படித்தவர்களுக்கு நன்கு தெரியும். அதுபோல ஐயங்கார் என்ற பிராமணப் பிரிவில் முக்கிய இரண்டு பிரிவுகள் வடகலை மற்றும் தென்கலை. நாம வெறுபாடுகளை வைத்தே இவர்களை அடையாளம் கண்டு கொள்ளலாம் என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதே போன்று நிறத்தை வைத்தும் இவர்களை வடகலை ஐயங்கார் என்றும் தென்கலை ஐயங்கார் என்றும் கண்டு கொள்ளலாம்.

பார்ப்பனர்களுக்கே உரிய வெளிரிய மஞ்சள் நிறத்தில் இருப்பவர்கள் தென்கலை ஐயங்கார்கள், தமிழர்களின் பொது நிறமான மாநிறம் அல்லது கருப்பு நிறத்துடன் இருப்பவர்கள் வடகலை ஐயங்கார்கள். எல்லோரும் பிராமணர்கள் என்று இருக்கும் போது வடகலை ஐயங்கார்கள் மட்டும் ஏன் கருப்பாக இருக்கிறார்கள் என்று கேள்வி பலருக்கும் இருக்கக்கூடும். அதற்கு நாம் சமய வரலாற்றை திரும்பிப் பார்க்க வேண்டும்(நன்றி: ஜோசப் சார்).

இராமானுஜர் காலத்தில் தீண்டாமை கொடுமை தலை விரித்தாடியது, அதனைக் கண்டு மனம் நொந்த இராமானுஜர் மாற்றுவழியை கொண்டு வந்தார். பார்ப்பனர்கள் அல்லாதவர்களையும் பார்பனர்கள் ஆக்கிவிட்டால் தீண்டாமை கொடுமை தனியும் என்று நினைத்து பலதரப்பட்ட மக்களையும் அரவணைக்க ஆரம்பித்தார். அதன்படி மீனவர்களாக மீன்பிடித்துக் கொண்டவர்களிடம் வைணவத்தின் பெருமைகளைக் கூறி அவர்களை அரவணைத்தார். பிராமண பெரியவர்கள் தங்கள் மீனவ குலத்திடம் அன்பு செலுத்துவதை நினைத்து நெகிழ்ச்சியுற்றனர் அம்மீனவர்கள். பின்பு அவர்களையும், இன்னும் அந்நாளில் தாழ்த்தப்ப்பட்டு இருந்த பலரையும் வைணவ பிராமணர்களாக மாற்றுவதற்காக அவர்களுக்கு தீட்சை கொடுத்தார் இராமானுஜர். (பாத்துக்கோங்க வடகலை அய்யங்கார்கள் வந்தேரிகள் இல்லை )




தீட்சையின் போது இனிமேல் யாரும் தங்கள் பழைய சாதியைச் சொல்லிக் கொள்ளக் கூடாது என்று சத்திய பிரமாணமும் பெறப்பட்டது.(அட பாவமே இது தெரியாதா அவங்களுக்கு )இராமனுஜருக்குப் பின்பு ஐயங்கார்களில் இருந்த ஒரிஜினல் ஐயங்கார்கள் இந்த மாற்றத்தை ஏற்றாலும் அவர்களுடன் இரத்த உறவுகள் வைத்துக் கொள்ள விரும்பவில்லை. ஆகையால் புதிதாத ஐயங்கார்களாக மாறிய முன்னாள் மீனவர்களை அவர்கள் கூரேசர் வழிவாந்த வடகலை ஐயங்கார் என்று அடையாளப்படுத்தி வைத்தனர். அந்த அடையாளம் அப்படியே நிலைக்க வடகலை ஐயங்கார்களின் கரிய நிறமும் ஒரு காரணமாக இருந்தது. பழைய உண்மைகள் தெரியும் என்பதால், இன்றைய காலகட்டத்திலும் வடகலை ஐயங்கார்கள் வீட்டில் தென்கலை ஐயங்கார்கள் சம்பந்தம் வைத்துக் கொள்வது மிக மிக குறைவு.

ஆரியர்கள் குடியேறியவர்கள் என்ற வாதம் இருந்தாலும் வடகலை ஐயங்கார்கள் எனப்படும் பிராமணப் பிரிவுகள் இம்மண்ணின் மைந்தர்கள். தீண்டாமை இன்னும் பல சமூக கொடுமைகளில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டவர்கள். இன்றைய கால ஓட்டத்தில் இடஒதுக்கீடு முறை இருப்பதால் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகுபவர்கள் வடகலை ஐயங்கார்களே. காரணம் மற்ற பிராமணப் பிரிவுகள் போல் இவர்களுக்கு பெரிய கோவில் மானியங்களோ, அரசர்களால் பெரிய அளவில் பொருளுதவி ஒதுக்கீடு செய்யவில்லை என்பதால் ஏழைகளாகவே கோவில்களில் கூலி வேலை செய்து சொற்ப வருமானத்திலேயே வாழ்ந்து வந்தார்கள்.

நமக்குத் தெரிந்து வடகலை ஐயங்கார்கள் இன்னும் அடிப்படை வசதி இல்லாமல் அன்றாட வருமானத்தில் வயிற்றைக்கழுவி வருகிறார்கள். எனவே அரசுகள் இடஒதுக்கீடு முறையில் வடகலை அய்யங்கார்களுக்கு முன்னாள் மீனவர்களக இருந்த பூர்வ குடிகள் என்றமுறையில் சமய வல்லுனர்களைக் கலந்து ஆலோசித்து, அவர்கள் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு சாதி ரீதியான இட ஒதுக்கீட்டில் 'பிற்பட்டுத்தப்பட்டோர்' பட்டியலில் இவர்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும்.

Sunday, August 05, 2007

கிழிந்துபோன காவிக் கோமணம் !

கிழிந்துபோன காவி கோமணம் !

உலகிலேயே அலங்கார வார்த்தைகளுக்கு சொந்தக்காரர்கள் என்ற பெருமையை பெற்றிருக்கும் ஒரு கொள்கை உடையவர் எவரென்றால் அது "பாரத" "தேச"த்தில் இயங்கிவரும் சங்கர் பரிவார் கும்பலைச் சேர்ந்தவர்களே. தேசிய ஒருமைப்பாட்டையும், உலகம் தழுவிய கொள்கைகளையெல்லாம் பார்கும் போது மொட்டை தலையில் உள்ள ஒற்றை முடி கூட சிலருக்கு சிலிர்கிறது.

தே'சீ'யம் என்ற வார்த்தைகளில் இவர்கள் அமைக்கும் கொள்கைகளையும் கட்சி பெயர்களைப் பார்க்கும் போது பாரத தேசத்தில் பிறந்த பசுமாடுகள் கூட படி பாலை எக்ஸ்டாராவாக கறக்கின்றனர். இந்த வேத விற்பனையாளர்களின் கட்சி பெயர்களைப் பார்த்தால் தேசியம் பொங்கி பெருக்கெடுத்து, உடைப்பெடுத்து இந்து மக்கள் ச"மூ"த்திரத்திரத்தால் இந்திய பெருக்கடலையே மூழ்கடித்துவிடும் போல் தெரிகிறது.

ஆகா ! இந்துக்களை ஒருங்கினைத்து, இந்து அரசியல் நடத்தவும் வருணம் செழித்து விளைச்சலை பெருக்க இவர்களுக்கு தேவைப்படும் பெயர் தேசம் தழுவிய ஒரு கவர்ச்சி பெயர். ஆம் 'பாரதம்' என்ற சொல்லை வைத்துவிட்டால் அகில இந்திய இந்துக்களின் மதிப்பைப் பெற்று சாதி வேறுபாடு என்ற அம்மணத்தை காவிக் கோமணத்தால் தற்காலிமாக மறைத்துவிடலாம் என்று கணக்கு போட்டு பார'தீய' ஜனதா (மக்கள்) பார்டி - என்ற பெயரில் கவர்ச்சி பெயர் சூட்டினர். அதன் பொருள் பாரதிய மக்கள் கட்சி என்பதாகும். இங்கே 'பாரதிய' என்று புகுத்தியிருக்கும் சொல்லாடலைப் பார்த்து இந்து அபிமானிகள் (மதி ?) மயங்கி ஒன்றிணைந்தார்கள் என்பதைக் காட்டுவதே வாஜ்பேயின் முந்தைய வெற்றிகள். பார'தீ'ய திட்டம் வெற்றிகரமாகவே கவர்ச்சி பெயரால் தேச ஒற்றுமை என்ற உணர்வின் பெயரால் மயக்க மருந்த்தாக கொடுக்கப்பட்டது தெரியவருகிறது.

அடுத்து கோவண ஆண்டிகளின் உலக பார்வை என்னவென்று பார்ப்போம். இவர்களின் நோக்கு ஈரேழு பதினான்கு உலகமும் சுபிக்சமாக இருக்கவேண்டும் என்று சாதாகாலமும் அசுத்தமோக (அசுவமேத ?) யாகம் வளர்த்து லோக ஷேமத்திற்காக சிறப்பு பூஜைகள் செய்துவருகின்றனர். இஸ்லாம் வாளால் பரப்பிய மதம் என்றும், கிறித்துவ மெசினரிகள் இந்தியவை கெடுத்துவிட்டார்கள். மெக்கலே (வெள்ளைக்காரன்) ஆட்சியால் இந்திய ஏழை நாடக மாறியது என்று இவர்கள் அடிக்கடி குற்றம் சுமத்துவதை மறந்துவிடுங்கள். ஏனென்றால் உலக மததுக்கெல்லாம் தாய் மதமான இந்துமதத்தில் இருந்து கொண்டு மற்ற மதங்களை கண்டிப்பது என்பது ஒரு தாய் மகனை கண்டிபதற்கு என்ற "உயர்ந்த" நோக்கில் பார்க்க பழகிக் கொள்ளுங்கள். இந்துத்துவ வாதிகளின் உலக பார்வை என்பது பூமியை மற்றும் சார்நத்து இல்லை, சந்திரமண்டலத்தையும், கடந்து புளூட்டோவையுகடந்து காஸ்மிக் கதிர்களை ஊடுருவி தடைகளை கடந்து செல்பவை. இருந்தாலும் உலக மக்கள் புரிந்து கொள்ளவேண்டிய உலக நன்மையை முன்னிறுத்தி எளிய முறையில் வைக்கப்பட்ட பெயர் ஒன்று இருக்கிறது. அது உலகத்தை பிரகலாதன் சிவலிங்கத்தை தழுவியது போல் ஒருங்கிணைக்கும் ஒரு பெயர், அதுதான் "விஷ்வ" ஹிந்து பரிசத். அதாவது உலக ஹிந்துக்களின் அமைப்பு. பெயரில் உள்ள கவர்சியை பாருங்கள். யார் சொன்னது இந்துத்துவ என்பது ஒரு "குறுகிய" நோக்கம் கொண்ட அமைப்பு என்று ? உலகம் என்ற ஒருங்கினைப்பினால் இந்துவத்தைப் புரிந்து கொண்டு வெளிநாட்டினர் வெள்ளை ஆடைகளை கிழித்து எறிந்துவிட்டு காவி கோமணத்துக்கு மாற தயாராகவே இருக்கிறார்கள் என்று பழைய பேப்பர் "கட்டிங்" ஆதாரத்தில் அண்ணன் நந்த லீலா நரித்தனத்தால் எழுதும் பொது நமக்கு எங்கெல்லாமோ அரிக்கிறது.

ஆக இன்னும் ஒரு பெயர் சொல்ல மறந்துவிட்டேன். மாணவர்களை ஒருங்கிணைக்கும் ஒரு அமைப்பு இருக்கிறது. மாணவ பருவத்தில் மாணவர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு சமஸ்கிரதம், சாஸ்திரம் எல்லாவற்றையும் குருகுல பாடம் போல் நடத்தி மாணவர்களுக்கு மத(வெறி) ப்பால் ஊட்டிவரும் ஒரு அமைப்பு. "அகில பாரதிய வித்யார்த்தி பரிசத்" மாணவர்களே மாநிலங்களை மறந்துவிடுங்கள், தாய்மொழியை மறந்துவிடுங்கள்
நீங்கள் ஒன்றிணைந்து உங்கள் ஆற்றலை வெளிப்படுத்தும் சக்தி மான் ஆகுங்கள். நீங்கள் அகில பாரதிய வித்யார்த்திகள் (மாணவர்கள்).

இந்துத்துவ வாதிகள் என்னதான் கோவணத்தை இறுக்கிக் கட்டினாலும் அதன் கோரமுகத்தினால் வருணபேத கிழிசல்கள் ஏற்பட்டு சாதிய அம்மணம் தெரியவே செய்கிறது.

Saturday, August 04, 2007

தோழி தமிழச்சிக்கு.....

கடந்த வாரம் இதே வலைப்பூவில் எழுதப்பட்ட தாடிக்கார தந்தை பெரியாரின் பார்ப்பன துரோகம் எனும் பதிவில் பெரியாரைப்பற்றி அவதூறுகளை பரப்புவதாக சொல்கிறீர்கள் அதற்கான பதில்....

அந்த பதிவில்

//பெரியார், அம்பேத்காருக்கு பிறகு பிற இந்திய மாநிலங்களிலும் தலித் தலைவர்கள் வளர்ந்து பார்பனரின் தகிடு தத்தங்களை அம்பலப்படுத்தினர் என்று தோழர் ஓத்துக் கொள்கிறார். பிறகு பெரியாரைப் பற்றி அவதூறுகளை எழுதுகிறார். அவருக்கே என்ன எழுதுவது என்று தெரியவில்லை. ஆனாலும் எதையாவது எழுத வேண்டும் என தொடருகிறார்… "பெரியார்தான் காங்கிரசில் இருக்கும் பார்ப்பனர்கள் சொல்பேச்சு கேட்கவில்லை என்பதால் எதிர்த்தார் அம்பேத்கருக்கு என்ன வந்தது அவரும் ஏன் பார்ப்பனர்களை எதிர்க்க ஆரம்பித்தார்? என்று குறிப்பிடுகிறார். தோழர் சமூதாய நிகழ்வுகளை மேம்போக்காக பேசுகிறார்.//

என்ன சமுதாய நிகழ்வுகளை மேம்போக்காக பேசுவதை அதில் கண்டீர்கள் எனத் தெரியவில்லை. ஆண்டாண்டு காலமாய் அடக்கி ஒடுக்கி நம்மை வைத்திருந்தவன் பெரியாருக்குப்பின்னும் அம்பேத்கருக்குப் பின்னும் அடங்க ஆரம்பித்தான் . ஆனால் பெரியார் பார்ப்பனர்களை எதிர்க்க காங்கிரஸில் அவரின் செயல்பாடுகளுக்கு ஏற்பட்ட தடைகளே காரணம் என நான் அதே பதிவில் குறிப்பிட்டிருக்கும் ஒரு பதிவர் தனது வலையில் எழுதுகிறார் அதற்கானபதிலாக பார்பனர்கள் ஒன்னும் நல்லவர்கள் இல்லை பெரியார் பார்ப்பனீயத்தை எதிர்க்க காங்கிரஸ் மட்டும் காரணமில்லை எனச் சொல்வதற்காக எழுதப்பட்டதே அது.

//அம்பேத்கருக்கு என்ன வந்தது அவரும் ஏன் பார்ப்பனர்களை எதிர்க்க ஆரம்பித்தார் என முட்டாள்தனமான கேள்வியை எழுப்புகிறார்? வரலாறு தெரியாதவர்கள் தெரியாததைப்பற்றி ஏன் பேச வேண்டும்? எழுத வேண்டும்? //

என் பதிவை நீங்கள் படித்த விதம் தவறு என்பதற்க்கு இது ஒன்றே சான்று. முன்னறே சொன்னது போல அது அந்த பதிவருக்கு அளிக்கப் பட்ட பதில். மற்றபடி எனக்குத் தெரிந்த வரலாறு பற்றியெல்லாம் உங்களுக்கு கவலை வேண்டாம். நீங்கள் சொல்லும் அதே எழுத்துரிமையை முற்றாய் நம்புபவன் நான்.

//பூணூல் சட்டைக்குள் இருந்தால் எவருக்கு தெரியப்போகிறது. இணையத்திலும் 'குறுக்கிட்டு' காட்டவேண்டுமோ? என்று இடக்குமடக்கான கேள்விகளை கேட்கிறார். பூணூல் என்ன மார்பில் மட்டுமா ஒட்டிக் கொண்டிருக்கிறது? குணத்தையும் அல்லவா தரங்கெட்ட நிலையில் வைத்திருக்கிறது. மனிதனை மனிதன் தாழ்த்தி கேவலப்படுத்திக் கொண்டிருக்கும் சிறு கூட்டத்தின் ஆணவத்திற்கு வக்காலத்து வாங்குவதோடு அல்லாமல்,//

இதில் என்ன வக்காலத்தை கண்டீர்கள். ஒருவன் பார்ப்பானாக இருப்பதை அவன் பிறப்பின் காரணம் எனச் சொல்லலாம் ஆனால் அதை அவன் இணையத்தில் எழுதி தன்னை ஏன் இன்னும் வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிறேன்?. பார்ப்பனத் தனத்தை இன்னும் ஏன் விட்டுவிடாமல் இருக்கிறார்கள் எனக் கேட்கிறேன். இதனால்தான் மற்றவர்களின் வசைபாடலுக்கு ஆளாகிறார்கள் எனச் சொல்கிறேன்.

//பார்பனர் பழம்பெருமையையும், சாதிய அடையாளத்தையும் விட்டு தொலைக்காமல் இருக்க வேண்டும் என்கிறார். இவர் சொல்வதைப்பார்த்தால் பார்ப்பான் மீண்டும் பழையநிலைக்கு திரும்ப வேண்டும் என்று அழைப்பு விடுப்பதை போல் உள்ளது//

இந்த அர்த்தம் தொனிக்கும் வரிகள் அப் பதிவில் எங்கேனும் இருப்பின் நான் வலைப்பூ எழுதுவதை நிறுத்தி விடுகிறேன்.

பின் குறிப்பு: மகேந்திரன்,பெ அவர்களுக்கு என கடிதத்தை ஆரம்பித்து அதை பொதுவிவாதமாக எழுதி அதாவது ஏன் இப்படி அவர் எழுதுகிறார், இப்படி எழுதுகிறார் என எழுதும் உங்கள் எழுத்து வியப்பாய் இருக்கிறது.

Thursday, August 02, 2007

Wednesday, August 01, 2007

தாடிக்கார தந்தை பெரியாரின் பார்ப்பன துரோகம்

பெரியார் வாழ்ந்த காலத்தில் பெரியார் பெயர் சொல்லியதும் கடவுள் சிலைகள் கூட எழுந்து ஓடியதாம் : இது தமாஷ்.

பார்பனர்களை பலரும் தூற்றுகிறார்கள், பார்பனர்களை இழிபிறவிகளாக பலரும் பார்க்கிறார்கள் இதற்கு பெரியார்தான் காரணம் என்று ஒரு பதிவர் எழுதி இருக்கிறார். ஐயா பெரியாரை தென் இந்தியாவைத் தவிர வட நாடுகளில் தெரிந்தவர்கள் மிகக் குறைவு. பார்பன சூழ்ச்சிகள் ஒவ்வொன்றாக கடந்த நூற்றாண்டுகளிலேயே இந்தியா கண்டு கொண்டது. சூடு போட்டுவிடத்தான் எவரும் முன்வரவில்லை. காரணம் அன்றைய மன்னர் ஆட்சி. மன்னர்களுக்கு அடிவருடிகளாக சேவகம் செய்த பார்பனர்களை எப்படி எதிர்க்க முடியும்? எவரும் முன்வரவில்லை. பெரியார் , அம்பேத்காருக்கு பிறகு பிற இந்திய மாநிலங்களிலும் தலித் தலைவர்கள் வளர்ந்து பார்பனரின் தகிடு தத்தங்களை அம்பலப்படுத்தினர். பெரியார்தான் காங்கிரசில் இருக்கும் பார்ப்பனர்கள் சொல்பேச்சு கேட்கவில்லை என்பதால் எதிர்த்தார் அம்பேத்கருக்கு என்ன வந்தது அவரும் ஏன் பார்ப்பனர்களை எதிர்க்க ஆரம்பித்தார்?

தமிழ்நாட்டில் மட்டுமல்ல டில்லியில் கோலோச்சிய பார்பனர்களின் நிலை இன்று பரிதாபம், கழிவறையை காவல் காத்து பார்பனர்கள் வாழ்கை நடத்துவதாக செய்திகள் கூட வருகிறது. இது பார்பனர்களின் இழிந்த நிலையாம். வாழ்ந்து கெட்டவர்கள் ஆகிவிட்டார்களாம். அடுத்தவர்களை கெடுத்துதானே வாழ்ந்தார்கள் ? என்பதெல்லாம் யாரும் நினைவு படுத்தி கேள்வி எழுப்பாதீர்கள். பூனை செய்தது குறும்பு அடித்தால் பாவம். பார்பனர்களுக்காக வந்திருக்கும் பழமொழி போல இருக்கிறது.

பார்பனர்களை 'இழிபிறவிகள்' என்று பலரும் சொல்ல காரணம் பெரியார் என்றால் அதில் ஓரளவு உண்மையும் உள்ளது அது தமிழ்நாட்டிலும், சிறிதளவு தாக்கம் கேரளத்திலும் மட்டும் தான். மற்ற மாநிலங்களிலும் பார்பனர்களை 'இழிபிறவி' ஆக்கி பார்பனர் அல்லாதோர் தூற்றுவதற்கு பெரியார் எப்படி காரணம் ஆனார்?

எல்லோருக்குமே பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மட்டுமே ஜாதி அடையாளம் கேட்கப்படுகிறது. அதைத்தாண்டி வெளியில் வேலைக்கு வந்துவிட்டால், பார்பனர்கள் தவிர பெரிய அளவில் தங்கள் சாதியை சொல்லி எவரும் பெருமை பட்டுக் கொள்வது இல்லை. மற்றவர்கள் சொன்னாலும், அவர்கள் மற்றவனை தாழ்ந்தவன் என்று சொல்லுவது இல்லை. நாங்கள் பிரம்மனின் மூக்குச் சளியில் (நன்றி விடாது கருப்பு) இருந்து பிறந்த உயர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்வது இல்லை. மற்றவர்கள் அவரவர் அப்பனின் உயிரணுவில் இருந்து பிறந்ததாகத்தான் சொல்கிறார்கள். இவர்களே சாதியை வெளியில் சொல்லிவிட்டு 'இழிபிறவி' என்கிறாயே என்றால் இதற்கு யார் காரணம். பூனூல் சட்டைக்குள் இருந்தால் எவருக்கு தெரியப் போகிறது. இணையத்திலும் 'குறுக்கிட்டு' காட்டவேண்டுமோ ?

எனவே பார்பனரின் 'இழிநிலைக்கு' முக்கிய காரணம் பார்பனர் பழம்பெருமையையும், சாதிய அடையாளத்தையும் விட்டு தொலைக்காமல் இருப்பது தான். பெரியார் பார்பனர்களை மாற்ற முயலவில்லை பார்பனர்கள் குறித்த எச்சரிக்கையை பிறருக்கு ஏற்படுத்தினார். பார்பனர் திருந்தி இருக்கலாமே. ஆனால் நடந்ததா ? இன்றும் கோவிலுக்குள் தமிழில் ஓதக்கூடாது, தலித் அர்சகர் ஆகக் கூடாது என்று கோர்ட் வரை சொல்லுகின்றனரே ஏன் ? - இப்படி செய்வதால் பார்பனர்கள் 'இழிபிறவிகள்' என்று பிறரால் தூற்றப்படமாட்டார்களா ? புத்தி இருப்பதாக பீத்திக்கொள்ளுபவர்களே அதை கொஞ்சம் பயன்படுத்துங்கள்.