Friday, December 15, 2006

பெரியார்சிலை உடைப்பும் பேடிகளின் கொண்டாட்டமும்

பெரியார் சிலைக்கு சந்தனம் பூசி அவமானப் படுத்திய பன்றிகள் குனம் கொண்ட ஜந்துக்கள் வேலை தொடர்ந்து பெரியாரின் சிலை உடைக்கப் பட்டது. இதை வெறும் சிலையாக மட்டும் பார்க்கும் பேடிகள் அதை தங்களின் வெற்றி என நினைத்து கொட்டமடிக்கின்றன.

பெரியார் வெறும் சிலை மட்டும் அல்ல அவர் தமிழக அரசியல் சமூக விழிப்புணர்வின் அழிக்க முடியாத சின்னம். சுயமரியாதை என்றால் என்ன என தமிழர்களுக்கு சொல்லித் தந்த தந்தை.

அவரை அவமானப் படுத்தும் எவனும். ஒரு சமுதாயத்தை, தனது சுயமரியாதையை, ஒரு இனத்தின் மதிப்பை, அதன் மொழியின் சிறப்பை கேளிக்குள்ளாக்குகிறான். பெரியாரை அவமதிப்பதாய் கருதி தனது சக இனத்தின் மதிப்பை கேள்விக்குள்ளாக்கும் மூடன், அவனுக்கு துனை போகும், சுயமரியாதை இல்லாத தமிழன் இன்னும் இருக்க வேண்டும் என நினைக்கும் ஆதிக்க வெறிபிடித்த ஆரிய கும்பல் அதன் அளவற்ற வெறி, பார்ப்பனீயம் செத்துப் போகும் என நினைக்கும், கொள்கை வெறி பிடித்த கயமைக் கேடிகள், இவர்கள் தூண்ட நினைக்கும் வன்முறை ஆட்டம் எல்லாம் சேர்ந்து....

எங்களுக்கு,

பெரியாரை பின்பற்றும் எங்களுக்கு மேலும் மேலும் ஊக்கமும் ஆக்கமும் தருகின்றன. அதற்க்காகவாவது ஒரு நன்றி. அவமதிக்க நினைக்கும் அனைவருக்கும் ஒரு செய்தி...

தலையை தயார் படுத்தி வையுங்கள் பிடறியில் இறங்கும் இடி



Saturday, December 09, 2006

நான் வன்னியன்

நீண்ட நாட்களாய் தமிழ் மணம் பதிவுகளில் தலை காட்டாமல் இருந்த நான் இன்று எழுத காரணம் இருக்கிறது. சகோதரர் விடாது கருப்புவை நீக்கி விட்டது குறித்து இப்போது அறிந்தேன்.

இப்போது எனக்கு எழும் கேள்விகள். பதில் சொல்ல விரும்புவோர் கூறலாம்.

1. தமிழ் மணத்தில் பார்ப்பணீயம் பற்றி எழுதுவது தவறா?

2. திராவிடத்தை இழித்தும் பழித்தும் எழுதுபவர்கள் என்ன வேண்டுமானாலும் எழுதலாமா?

3. அதை எழுதுபவர்களின் பெயர் சொல்லி பதிலுக்கு சில கோபக் கணைகளை வீசிடின் அது தமிழ் மண விதிகளுக்கு புறம்பானதா?

4. விடாது கருப்புவையும், சிலரையும் பெயர் சொல்லி, இழி பிறவி, என விளிப்பவர்களை என்ன செய்ய போகிறது தமிழ்மண நிர்வாகம்?

//ஹரிஹரன்களை விட கருப்புவின் செயல்களில் குற்றம் காண்பது எவ்வகையில் நியாயம் என்று புரியவில்லை. அவரை பகிரங்கமாக குற்றம் சாட்டிய மாயவரத்தான்களை பற்றி கணக்கில் எடுத்தீர்களா என்றும் புரியவில்லை// செந்திலின் இக் கருத்துடன் நான் முற்றிலும் உடன் படுகிறேன்.

//உங்களை உறுத்தியது அவரின் மொழி என்றால், ஒடுக்கப்பட்டவர்கள் கேலிச் சீண்டலுக்கு ஆளாகும் போது அவர்களிடமிருந்து எங்ஙணம் நாகரீக வார்த்தைகளை எதிர்பார்க்கிறீர்கள்???// இதையும்தான்.

தமிழ் மண நிர்வாகம் எடுக்கும் முடிவுகளை பார்க்கையில் இது முற்றிலும் பிராமணீயத்தை வளர்க்க மட்டுமே பயன்படுமே அன்றி ஒரு நல்ல சூழலையும், தமிழையும் அல்ல.

தான் அய்யர் என்பதை வீராவேசத்துடன் சொல்லும் ஒருவர் தனது நிலையில் இருந்து நல்ல வார்த்தைக்குள் நஞ்சை வைத்து நான் இப்படித்தான் இருப்பேன் என கூறினால் அது நியாயம்.

ஒடுக்கப் பட்ட மக்களின் அவலம் குறித்து ஆற்றாமை கொண்டு எழுதும் ஒருவருக்கு தடை நல்ல நீதி.

" மனு நீதி... ஒரு குலத்துக்கு ஒரு நீதி".

இப்படி பார்ப்பணீயம் பற்றி அதை எதிர்த்து கேள்வி கேட்க்க ரோசா வசந்தை போல பார்ப்பணராய் இருக்க வேண்டுமா? அவருக்கு அனுமதி.. அதையே எழுதும் கருப்புவுக்கு தடை?..

நான் வன்னியன். நான் எழுதினால் என்ன செய்வீர்கள்?

வாழ்க தமிழ்மண நீதி.

Sunday, December 03, 2006

ஒரு மாலை இளவெயில் நேரம்

டந்த புதன் காலை வேலையில் இருக்காத ஒரு பசியான மதியம். குளிரும் வெயிலும் கலந்து ஒரு மிதமான வெப்ப நிலையில் எனது அறைக்கு அருகிலேயே இருக்கும் ஒரு இணைய நிலையத்தின் ஒரு மூலையில் அமர்ந்து ஆனந்த விகடனை படித்துக்கொண்டே தமிழ்மணத்தை மேய்ந்துகொண்டிருந்த போது யாகூ செய்தி தூதுவனில் முத்துக்குமரன் அழைத்தார்... எப்படி இருக்கிறீர்கள் என்று. அட இரண்டுமாதமாக எழுதுவதற்கு முடியவில்லை என்றாலும் நம்மை நிணைவுவைத்து அழைக்குமளவுக்கு நிணைவில் நிற்கிறோமே என்றவாரே பேச ஆரம்பித்தோம். சனிக்கிழமை கராமாவில் நடைபெற இருக்கும் அமீரக வலையுலக நண்பர்களின் சந்திப்பு பற்றி சொன்னவர் என்னையும் ஆட அழைத்தார். 2ம் தேதி தேசிய விடுமுறைதானே வரலாம் என்றே எண்ணி வாக்குக் கொடுத்தேன். ஆனால் இந்த சனிக்கிழமை பகலில் தான் வேலை யில்லை, ஆனால் சனி இரவு இருப்பு சோதனைக்காக கண்டிப்பாக வரவேண்டும் என ஒரு சிறு அதிமுக்கிய வேலை காரணமாக நாலு மணிக்கு கராமாவில் நடைபெற்ற (?) மாநாட்டில் கலந்துகொள்ள முடியாமல் போனது. மேலும் எல்லோரும் நம்பும் வருணபகவான் தனது சதித் திட்டத்தை நிறைவேற்றும் சீறிய முயற்ச்சியில் இருந்ததாலும் வர முடியவில்லை. எனக்கு தனிமடலில் அழைப்பு அனுப்பிய சாத்தான் குளத்து வேதம் எதுவும் இது குறித்து எழுதியிருப்பார் என வந்தால் சிம்ரண் சைஸ் என்ன, லைலா வோடு போட்டி போடுகிறார் பார்க்கலாம் .....