Wednesday, December 31, 2014

நெகிழ வைத்த திரைப்படங்கள் -5 The Tin Drum

சில திரைப்படங்கள் காணும் போது உங்களை வெறும் நெகிழ்வுக்குள் ஆழ்த்தி விட்டு வேறெந்த கேள்விகளையும் கிளப்பாமல் சும்மா இருந்துவிடும், சில படங்கள் புதிய புதிய கதவுகளை திறந்துகொண்டே இருக்கும். சில படங்கள் விளிம்பு நிலை மனிதர்களின் கதையைச் சொல்கிறேன் என்று கிளம்பி அவர்களை கழிவிறக்கத்துக்குள்ளான மனிதர்களாய் சித்தரிப்பதோடு முடிந்து விடும். இல்லை நகைச்சுவையாக்கி பழி வாங்கி இருக்கும். 

ஆனால் சில படங்கள் மட்டும்தான் விளிம்பு நிலை மனிதர்களின் உணர்வுகளை நமக்கு உணர்த்துவதோடு சமுதாயத்தின் மீதான மதிப்பீட்டின் மீது நாம் கட்டி வைத்திருக்கும் பிம்பங்களை கேள்விக்குள்ளாக்கி அதன் மேல் தன் தாக்கத்தையும் விட்டுவிட்டுப் போகும். அப்படியான ஒரு படம்தான் இது.

The Tin Drum (1979)


இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியின் டான்சிங் (Danzing) என்னும் நகரத்தில் நடக்கிறது கதை, ஆஸ்கார் என்னும் சிறுவன்  முதலில் போலந்தில் இருந்து வந்து ஜெர்மானியர்களால் தேடப்பட்டு தன் பாட்டியை தாத்தா மணந்து கொண்ட கதையைச் சொல்லி பின் தன் தாயின்  (அக்னெஸ்) இரண்டு பேர் (ஜான் ப்ரொன்ஸ்கி, ஆல்ஃபிரட் மாட்செரத்)  மீதான காதலையும் சொல்லிக்கொண்டிருக்கும் போது வயிற்றில்தான் இருக்கிறான் . 

ஆஸ்காரின் மூன்றாவது வயதில் தன் தந்தைகளுள் ஒருவரான (?)  ஜான் ப்ரொன்ஸ்கி (ஆம் ஆஸ்காரின் தந்தை யார் என்பது கடைசி வரை சொல்லப் படவே இல்லை. ஆஸ்காரின் தாய் இரண்டுபேரையுமே காதலிக்கிறாள்.ஆனால் ஆல்ஃபிரட் மாட்செரத்தை மணம் முடிக்கிறாள் ) ஆஸ்காருக்கு ஒரு ட்ரம்மை பரிசாகக் கொடுக்கிறார். ஆஸ்காரின் மூன்றாவது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது தன்னைச் சுற்றி நடக்கும் முறை தவறிய பெரிய மனிதர்களின் நடவடிக்கைகளால் மனம் வெறுத்த ஆஸ்கார் தான் பெரிய மனிதனாகவே ஆகக் கூடாதென்ற முடிவை எடுக்கிறான்.

பெரியவனாகவே ஆகாமல் இருக்கவேண்டும் என்பதற்காக நிலவரை ஒயின் செல்லரை கீழே தள்ளி விட்டு தானும் விழுகிறான் அதுவும் அந்த ட்ரம்மை மிகப் பத்திரமாக வைத்துவிட்டு. பின்னர் மருத்துவர்களால் காப்பாற்றப் பட்டாலும் தன் வளர்ச்சியை அவன் உடல் நிறுத்திவிடுகிறது. (Dwarf). 

பின்னர் அவனின் உலகமே அந்த ட்ரம் மட்டும்தான். தன்னைச் சுற்றி நடக்கும் சமூக அவலங்களை பெரிய மனிதர்களின் சின்னத்தனங்களை காணும் போதெல்லாம் பறையடிப்பது போல தன் எதிர்ப்பை அந்த டரம்மின் மூலமாகவே தெரிவித்துக் கொண்டிருக்கிறான். ஆஸ்காரின் ட்ரம்மைப் பிடுங்க முயற்சி செய்யும் போது அவனிடம் இருந்து வெளிப்படும் உச்ச சத்தம் கண்ணாடிகளை உடைக்கும் வலுக் கொண்டது என்று ஒரு நாள் தெரிய வருகிறது.

ஆஸ்காருக்கு வயதாகிக் கொண்டே போனாலும் அவன் வளர்சியில் எந்த மாற்றமும் இல்லை. ஆஸ்காரின் தாய் தன் இன்னொரு காதலனை (ஜான் ப்ரொன்ஸ்கி) காண்பதற்காக போலந்தின் (?) ஒரு நகருக்கு ஆஸ்காருடன் போய் அங்கே இருங்கும் ஒரு பொம்மைக் கடையில் விட்டுவிட்டு போகும் போது தன் தாயின் இன்னொரு காதலை தெரிந்துகொள்ளும் ஆஸ்கார் மணிக்கூண்டின் உச்சியில் இருந்து ட்ரம்மை ஒலிக்கச் செய்து தன் எதிர்ப்பை தெரிவிக்கிறான்.

இதன் பின் தான் கற்பம் ஆனதால் இன்னொரு குழந்தை வேண்டாம் என்றோ இல்லை தன் காதல்களால் விளைந்த மோசங்களாலோ ஆஸ்காரின் தாய் வெறும் பச்சை மீன்களை தொடர்சியாகச் சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்ள ஆஸ்காரின் தந்தை(?)  தன் உறவுக்கார பெண்ணான மரியாவைக் கொண்டு வந்து தன்னோடு வைத்துக் கொள்கிறார். ஆனால் ஆஸ்காருக்கும் அந்தப் பெண்ணுக்கும் , ஆஸ்காரின் தந்தைக்குமே ஒரு காதல் ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் இரண்டு பேருமே மரியாவுடன் ( வேறு வேறு நேரத்தில் ) உடலுறவு கொள்ள அதன் பின் மரியா கர்பமாக குழந்தைக்கு யார் தந்தை என்ற குழப்பம் வேறு. 

இரண்டாம் உலகப் போரின் உச்சத்தில் போரில் பங்கெடுக்க இயலாத குள்ளர்களின் சர்கஸ் கூடாரத்தில் தான் முன்பே பார்த்த ஆட்களோடு சேர்ந்து போர் முனைக்குச் சென்று வீரர்களை மகிழ்வாக்கும் வேலை செய்யப் போகும் ஆஸ்கார் அங்கே தன்னைப் போல ஒரு பெண்ணைக் காதலிக்க ஆரம்பிக்கிறான்.  அந்தக் காதலும் போரின் முடிவில் புட்டுக் கொண்டு போகிறது குண்டு வீச்சில் கொல்லப் பட்டுகிறாள் அந்த பெண்.

போர் என்பதும் அதன் பின்னால் ஆன தோல்விக்குப் பின்னரும் தன் தந்தைகளுள் ஒரு ஆளான ஜான் ப்ரோன்ஸ்கியின் தபால் ஆஃபீஸில் சண்டைகளுக்கு நடுவே தன் இருப்பை நிலை நிறுத்த போராடுகிறான் ஆஸ்கார்.

தனக்குப்( ? ) பிறந்த மரியாவின் குழந்தைக்கு மூன்று வயதில் நானும் ஒரு ட்ரம் கொடுப்பேன் அதன் பின் வளராமல் இருக்க வேண்டிய ரகசியமும் சொல்லிக் கொடுப்பேன் என்று சொல்லும் ஆஸ்கார் (?)ஆல்ஃபிரட்டின் (?) குழந்தை குர்ட்ஸ் வீசிய கல்லில் மரணமடைந்த ஜான் ப்ரோன்ஸ்கியின் சவக் குழியில்   மூன்று வயதில் தொட்ட ட்ரம்மை வீசி வளர விரும்பி ஆஸ்கார் வளர ஆரம்பிப்பதோடு முடிகிறது படம்.

இதில் நெகிழ என்றோ அழுகைக்கு என்றோ எந்த காட்சியும் இல்லை ஆனால் எல்லா காட்சிகளிலும் தன் இருப்பை வெளிப்படுத்தவென்றே ஒரு ட்ரம் இருக்கிறது. பறை என்றோ முரசு என்றோ சொல்லிக் கொள்வோம் ஆனால் 2007ல் இந்த படம் பார்க்கும் போது உலகப் படங்கள் மேல் இத்தனை ஆர்வம் இல்லாமல் இருந்ததாலோ என்னவோ இத்தனை பாதிக்கவில்லை இப்படம்.

இந்த தொடரை ஆரம்பித்த பின்னால் எந்த படங்களை எல்லாம் நான் கண்டு நெகிழ்ந்து அழுது கிடந்திருக்கிறேன் என்று பார்கையில் இந்தப் படமும் வந்தது நினைவில்.  மீண்டும் பார்க்கும் போது ஆஸ்காரின் எல்லா நடவடிக்கைகளுக்கும் பின்னால் இருக்கும் சமூக அவலங்களின் மேலான பறை அறிவித்தல் எல்லா சமூக விளிம்பு மக்களின் குரலாக ஒலித்துக் கொண்டே இருக்கிறதது.  உடல் ரீதியாக ஒடுக்கப் பட்ட குள்ளர்கள், ஜெர்மனியை சுத்தம் செய்கிறோம்  என்று கொன்றொழிக்கப் பட்ட இன சுத்திகரிப்பின்  பெயரால் நாட்ஜிக்களின் வரலாறில் இடம் பெறாமல்  போன பல்லாயிரம் பேர்களின் ஒற்றை சாட்சியாக படம் முழுக்க ஒலித்துக்கொண்டே இருக்கிறது ஆஸ்காரின் டின் ட்ரம்.















Monday, December 29, 2014

நெகிழ வைத்த திரைப்படங்கள் -4 The Boy in the Striped Pajamas


ஜெர்மனியை ஹிட்லர் ஆண்டு கொண்டிருந்த இரண்டாம் உலகப் போரின் காலத்தில் நடக்கிற கதை.

The Boy in the Striped Pajamas (2008)




சீக்ரட் சர்வீசஸ் அல்லது சுருக்கமாக எஸ்.எஸ் என அழைக்கப் பட்ட ஹிட்லரின் நாட்ஜி ராணுவத்தில் கமாண்டராக இருக்கும் தன் தந்தையின் பணி உயர்வின் காரணமாக தன் தாய் , சகோதரி, வேலைக்காரி சகிதமாக  யூதர்களை இன ஒழிப்பு செய்யவென்றே உண்டாக்கப் பட்ட கான்ஸன்ட்ரேஷன் கேம்புகளுக்கு அருகிலேயே ராணுவம் ஒதுக்கித் தந்த ஒரு வீட்டில் குடியேறுகிறான் எட்டு வயது சிறுவன் (ப்ரூனோ). கேம்பில்  தன் வேலை என்னவென்று குடும்பத்தில் யாரும் அறிந்து விடாமல் ரகசியம் காக்கிறார் தந்தை,

கேம்பில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் இருக்கும் போது ப்ரூனோ சும்மா சுற்றிப் பார்க்கப் போன இடத்தில் கேம்பில் இருக்கும் ஒரு யூதச் சிறுவனோடு (ஷ்யூல்ட்ஸ்)  யாருக்கும் தெரியாமலேயே நட்பு கொண்டு விடுகிறான். நடுவில் இரண்டு பேரையும் பிரித்து வைத்திருக்கும் மின் வேலியின் அர்த்தம் தெரியாமலேயே. தினசரி வீட்டுக்குத் தெரியாமல் இருவரும் சந்தித்துக் கொள்கிறார்கள், விளையாடுகிறார்கள். ப்ரூனோ வீட்டுக்குத் தெரியாமல் தின்பண்டங்கள் கொண்டு வந்து கொடுக்கிறான்.

இதனிடையே ப்ரூனோவின் தாய் தன் வீட்டில் வேலை செய்யும் ஒரு லெப்டினென்ட் மூலம் கேம்பில் இருந்து வரும் புகையும் அதன் துர் நாற்றம் குறித்தும் கேட்கப் போய் அங்கே நடைபெற்று வரும் படுகொலைகளை குறித்து தெரிந்து கொண்டு தன் கணவனோடு சண்டை பிடிக்கிறாள். இதை சொன்னதற்காக லெப்டினென்ட் போர் முனைக்கு அனுப்பப் படுகிறான். லெப்டினென்ட்டுக்கும் ப்ரூனோவின் அக்காவுக்கும் ஒரு ரகசிய காதல் வேறு ஓடுகிறது.

போர் நடைபெற்று கொண்டிருக்கும் வேளையில் ப்ரூனோவின் தாத்தாவும் பாட்டியும் குண்டுவீச்சில் இறந்து விட குடும்பத்தோடு அவர்களை பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பிவிட முடிவு செய்கிறார் தந்தை. கிளம்பும் நாளுக்கு முந்தைய நாள் யூதச் சிறுவனின் தந்தை கேம்பில் காணாமல் போய்விட நானும் நாளை வந்து உன்னோடு தேடுகிறேன் என்று சொல்லும் ப்ரூனோ கிளம்பும் நாளில் கேம்புக்குள் யூதர்களின் உடை அணிந்துகொண்டு யூதச் சிறுவனின் தந்தையை கண்டு பிடிக்க உதவுவதற்க்காக கேம்புக்குள் செல்லும் இடத்தில் கூட்டத்தோடு கூட்டமாக விஷ வாயுக் குளியலில் மரணமடைந்துவிடுவதோடு படம் முடிகிறது.

ஜெர்மனியின் நாட்ஜிக்களுக்கு, யூதர்களின் மேல் இருந்த வெறுப்பை எந்த காட்சிப் படுத்துதலும் இன்றி வசனங்கள் மூலமே சொல்லியிருப்பது படத்தின் பெரும் பலம். சிறுவன் ப்ரூனோ பள்ளிக் கூடத்தில் இருந்து மகிழ்ச்சியோடு வெளிப்பட்டு நண்பர்களோடு ஓடி வரும் போது சடக்கென தன் வீட்டைக் கண்டதும் சோகமே உருப்பெற்று படக்கென முகம் சோர்வதாக இருக்கட்டும், புதிதாகப் போன இடத்தில் வீட்டு வேலை, தோட்ட வேலை  செய்யும் முன்னாள் டாக்டரான யூதக் கிழவர் பாவெலைப் பார்த்து வருத்தப் படுவதாக இருக்கட்டும் ,  கேம்பின் உள்ளே இருக்கும் ஷ்யூல்ட்ஸ்சை கண்டதும் சந்தோசப் படுவதாகட்டும் ப்ரூனோவாக நடித்திருக்கும் ஆஷா பட்டர்ஃபீல்டு அட்டகாசம் செய்கிறான்.

கேம்பில் இருக்கும் சிறுவன் ஷ்யூல்ட்ஸ் ஆக நடித்திருக்கும் பெல்லா ஃபெச்ட்ஸ்பம்க்கு   மிக அழுத்தமான பாத்திரம், எளிதில் உணர்வுகளைக் காட்டாத முகம் என்று ஒரு யூதச் சிறுவனாகவே மாறியிருக்கிறான் லெப்டினன்டால் முகத்தில் அடிபட்டு ப்ரூனோவை பார்க்காமலேயே தலை கவிழ்ந்து பேசும் இடங்கள் அற்புதமான நடிப்பு. உண்மையில் இந்த யூதச் சிறுவன் தான் படத்தின் கதாநாயகன்.

படம் முழுக்கவே மிகச் சில கதாபாத்திரங்களே என்றாலும் படத்தின் காட்சிகளும் வசனங்களும் இசையும் படத்தோடு நம்மை ஒன்ற வைக்கின்றன. ஜெர்மனியின் யூத வெறுப்பை முன்பே புரிந்து கொண்டு படம் பார்ப்பவர்களுக்கு படத்தின் சில இடங்கள் நுணுக்கமாக புரியும் உதாரணமாக கேம்பின் புகைக் கூண்டில் இருந்து புகை வரும் போது ஏன் துர் நாற்றம் வருகிறது என்று ப்ரூனோ தன் தந்தையிடம் கேட்கும் போதும் , துர் நாற்றம் குறித்து லெப்டினன்ட் ப்ரூனோவின் தாயிடம் சொல்லும் போதும் வரலாற்றின் காலகட்டம் தண்டியும் நாம்  ஒரு இன ஒழிப்பைப் பற்றி சிந்திக்கத் தொடங்கி விடுகிறோம்.

இரண்டு சிறுவர்களுக்குள் இருக்கும் அன்பும் நட்பும், வளர்ந்த மனிதர்களிடையே சமூகத்தில் இருக்கும் ஏற்றத் தாழ்வுகளை எள்ளி நகையாடும் விதமாக குழந்தைகளின் இன்னொரு உலகத்தை நமக்குள் கொண்டு வருகிறது.

படம் முடிகையில் இரண்டு சிறுவர்களுமே கேம்பின் உள்ளே மாட்டிக் கொண்டு உயிர் விடப் போகும் நேரத்தில் கைகளை ஒன்று சேர்த்துக் கொள்கிற இடம் ஒரு கவிதை. கடைசியில் வழக்கமான சினிமாக்களில் காட்டுவது போல் இறந்தவர்களின் உடல்களைக் காட்டாமல் வரிசையாக தொங்கிக் கொண்டும் இறைந்தும் கிடக்கும் கோடிட்ட நீல நிற பைஜாமாக்களை காட்டியதற்காகவே, ஜான் பாயினின் நாவலை படமாக்கிய இயக்குனர் மார்க் ஹெர்மனுக்கு ஒரு பூங்கொத்து.

மேல்ஜாதிகளால் கீழ் ஜாதிகள் ஒடுக்கப் படுவதன் வலி உணர்ந்த, இனத்தின் பெயரால் கொத்துக் கொத்துக்களாக கொல்லப்பட்ட மனிதர்களை கண்டுணர்ந்த அதற்காக வருத்தப் படும் எல்லாருக்கும் பிடித்த படமாக இது இருக்கும்.

படம் குறித்த தகவல்களுக்கு 

முழு படத்தையும் காண 

Friday, December 26, 2014

கோட்சேவின் பெயரால் விருது கொடுப்போம் !

நாதுராம் வினாயக் கோட்சேவை தெரியாதவர்கள் காந்தியைக் கொன்ற இந்து மகா சபை உறுப்பினர் என்றால் உலகுக்கே தெரியும். காந்தியைக் கொன்றதன் மூலம் இந்து முஸ்லிம் கலவரத்தை தூண்டும் விதமாக தன் கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டது தொடங்கி சாவர்கர், மாளவியாக்களின் அங்கீகரிக்கப் பட்ட பிரதிநிதி அல்லவா கோட்சே.



பாஜகவின் ஆட்சியை இந்து மத வெறியர்களின் ஆட்சி, பஜகோவிந்தங்களின் ஆட்சி, காவிகளின் ஆட்சி என்று விமர்சித்தால் நம்மை ஏதோ தாலிபான்களின் அளவுக்கு வெறுக்க ஆரம்பித்துவிடுகிறார்கள் இந்த இடைச்சாதி இந்துக்கள். அவர்கள் அப்படியெல்லாம் இல்லை என்று சொல்லும் அளவுக்கு இவர்களுக்கு எந்த ஆதாரங்களும் இல்லை என்பதால் ஒட்டு மொத்தமாக எழுதுபவனின் அறிவைச் சோதிக்கும் விதமாக சில நண்பர்கள் அறிவாளித்தனமாக நம்மை சொறிய ஆரம்பித்து விடுகிறார்கள்.

கோட்சே பற்றியோ மாளவியா பற்றியோ வாஜ்பாய் பற்றியோ அத்வானி பற்றியோ ஏன் மோடியைப் பற்றியோ சொல்ல ஒன்றுமே இல்லை. பாபர் மசூதி இடிக்க முக்கிய காரணமான அத்வானி, வெள்ளைக்கார துரைகளுக்கு உளவு வேலை பார்த்த வாஜ்பாய், குஜராத் கலவரங்களின் பிதா மகன் மோடி, பூரண இந்துத்துவ நாடாக இந்தியாவை மாற்றுவோம் என்று முழங்கிய மாளவியா குறித்து நல்லவிதமாக எதாவது இருந்தால் அல்லவா இவர்கள் நம் எழுத்தை விமர்சிக்க முடியும்?

கோட்சேவுக்கு கோவில் கட்டுகிறார்கள் காந்தியின் நினைவு நாளில் திறக்கப் போகிறார்களாம், கூடவே, இந்திராவைக் கொன்ற சீக்கியருக்கும், அதற்கு காரணமான பிந்தரன் வாலேவுக்கும், ராஜீவைக் கொன்ற தனுவுக்கும் சிவராசனுக்கும், பிரபாகரனுக்கும் சிலைவைக்கப் போகிறோம் என்று யாராவது கிளம்பினால் என்ன ஆகும் என்று நினைக்கும் போதே பயந்து வருகிறது.

வாஜ்பாயிக்கும் , மாளவியாவுக்கும் பாரத ரத்னா கொடுக்கிறார்களாம் கொடுக்கட்டும் இன்னும் இருக்கும் மிச்ச சொச்ச ஆட்சியின் சொற்ப நாட்களிலும் அமித் ஷாவுக்கும் , கலைஞரின் தலைக்கு விலைவைத்த ராம்விலாஸ் வேதாந்திக்கும் இன்னபிற பார்பனீய, இந்து வெறி எதிர்ப்பாளர்களுக்கு கொலைமிரட்டல் விடுக்கும் எச்ச ராஜாக்களுக்கும் கொடுத்துக் கொள்ளட்டும்.

காவிகளின் வேர் ஆழ ஊன்றிக் கிடக்கும் இந்நாட்டில் இன்னும் ஆயிரம் ஆயிரம் கூத்துக்களும் அரங்கேறப் பார்ப்பதென்னவோ உண்மைதான் ஆனால் இவர்களின் கையில் ஆட்சி கிடைத்த பின் ஊடகங்களால் ஊதிப் பெருக்க வைக்கப் பட்ட ஶ்ரீமான் மோடியின் தர்பார் என்னவோ காத்தாடிக் கொண்டிருக்கிறது என்பது மட்டும் உண்மை.

நாட்டை வளப்படுத்தும் பொருளாதார மேதைகள் இல்லாத சுகாதாரத்துக்கான செலவில் கூட 6000 கோடிகளை குறித்து வல்லபாய் பட்டேலுக்கு பல்லாயிரம் கோடிகளில் சிலை வைக்கத் துடிக்கும் ஆட்களின் கைய்யில் அல்லவா ஆட்சி இருக்கிறது.? பாவம் அவர்கள் மட்டும் என்ன வைத்துக் கொண்டா வஞ்சனை செய்கிறார்கள் தேர்தலுக்கு இரண்டு நாட்கள் முன்னர் தேர்தல் அறிக்கை வெளியிட்ட புத்திசாலிகள் அல்லவா?

காஷ்மீரிலும் ஜார்கண்டிலும் வெற்றி பெற்று விட்டோம் என்றூ கொக்கரிக்கிறார்கள் ஆனால் காஷ்மீரில் வென்ற தொகுதிகளைத் தவிர மற்ற தொகுதிகளில் டெப்பாசிட் கூட பறிபோன விஷயத்தை மூடி மறைக்கிறார்கள்.

கல்வி, மருத்துவம், சுகாதாரம், உள் கட்டமைப்பு என்று எந்த ஒரு அரசு, மக்கள் நலம்  சார்ந்த கொள்கைகளும் இல்லாமல் , வாஜ்பாயி , அத்வானி மோடி அமித்ஷா என்ற பிம்பங்களின் தயவில் ஆட்சிக்கு வந்தவர்களிடம் கோட்சேவுக்கும் மாளவியாவுக்கும் வாழ்த்துக்களும் வீர வணக்கங்களும் தவிற வேறென்ன எதிர்பார்க்க முடியும். பஜகோவிந்தங்களின் ஆட்சி என்பது இன்னும் கொஞ்ச நாட்களின் முட்டுச் சந்தில் முட்டிக் கொண்டு நிற்கப் போகிறது என்பதை கருப்புப் பண விவகாரம், பெட்ரோல் விலை, ஊழல் எதிர்ப்பு, டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு என்று எல்லாவற்றிலும் பார்த்துவிட்டொம்.

கூட இருந்தே கோஷ்டி காணம் பாடி என்னவோ திமுகவும் காங்கிரசும் மட்டும்தான் ஊழலின் வித்து, ஈழத்தின் எதிரி என்பதாய் பரப்புரைகளை வெளியிட்டு வஞ்சம் தீர்த்துக் கொண்ட செவ்வாழைகள், கொஞ்சம் கொஞ்சமாய் புளி மூட்டைக்குள் இருந்து வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்
விளக்கத்துக்கு வினவின் கட்டுரை படியுங்கள்.

திராவிடம் என்றாலே உச்சா போய்க்கொண்டு ஆர் எஸ் எஸ்ஸின் பெயரைக்கூட தமிழகத்தில் உச்சரிக்க பயந்துகொண்டிருந்த எச்ச. ராஜாக்கள் எல்லாம் இன்று ரங்கராஜ் பாண்டேக்களின் தயவால் தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் கோட்சே புகழ் பாடிக் கொண்டிருக்கிறார்கள். கூடவே கொங்கு ஈஸ்வரன் என்ற ஜால்ராவும்.

அத்வானிக்கு கோவையில் குண்டு வைத்தார்கள் என்று உண்மைக் குற்றவாளிகள் என்று யாராவது கிடைத்தால் அவர்களுக்கும் சிலைவைப்போம் என்று கிளம்பினால் அப்போதும் இந்த மகா சபைகள் மவுனம் காத்து வரவேற்கும் என்று நம்புவோமாக.

பாஜக என்னும் ஆட்சியில் இருக்கும் ஒரு முகத்தை வைத்துக் கொண்டு காவிகள் தங்களின் எல்லா ஆசைகளையும் இந்த ஐந்தாண்டுகளுக்குள் நிறைவேற்றிக் கொள்ள துடிப்பது என்பது பொன் முட்டையிடும் வாத்தின் வயிற்றை அறுப்பதற்குச் சமம் என்பதை யாராவது சோக்களோ, இல்லை பத்ரிக்களோ அவர்களிடம் சொன்னால் பரவாயில்லை. பொன்முட்டை கிடைக்காவிட்டால் அவர்களுக்கு நஷ்டம் இல்லை, நம் உயிரல்லவா போகிறது.

சிறுபான்மை மக்களின் நலனுக்கு எதிராகவே எப்போதும் நடக்கும் பாஜக சங் பரிவாரங்களின் சங்கறுக்கும் வேலை தொடங்கும் முன் விழித்துக் கொள்வோம் இல்லாவிட்டால் வரலாற்றை திரித்து எழுதும் பஜகோவிந்த பன்னாடைகள் கோட்சே பெயரில் ஒரு விருதை உண்டாக்கி காந்திக்கு கொடுத்து விடுவார்கள்.



Monday, December 22, 2014

நீங்கள் இந்துவா இல்லை இந்தியனா?

இந்த காவிகளைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதித் தள்ளியாயிற்று, தமிழ் தேசியம் பேசுவோரின் இனத் தூய்மையை விட இந்து தேசியம் பேசும் தொகாடியாக்களின் பேச்சு ஆயிரம் மடங்கு அதிகம் வன்மம் கக்குவதாக மாறிக் கொண்டே போவது  மத்திய கிழக்கின் இசிஸ், இசில், தாலிபான், அல்கொய்தாக்களின் வளர்ச்சி போல ஒரு புற்று நோய் போல உலக சமூகத்தை அச்சத்துக்குள் தள்ள ஆரம்பித்திருக்கிறது.

இன்று கூட December 22, 2014 இந்தியாவில் இந்து மக்கள் தொகையை 100 சதவீதம் ஆக்குவோம் என்று வி.ஹெச்.பி. தலைவர் பிரவீன் தொகாடியா கொக்கரித்திருக்கிறார். இவர்கள் சொல்லும் இந்து நாடென்பது முதலில் யாரையெல்லாம் உள்ளடக்காது என்பதற்கு ஏகப்பட்ட ஆவணங்கள் உண்டு, சுருக்கமாகச் சொல்லப் போனால் ஒட்டு மொத்த சிறுபான்மையினர் அல்லாத இந்துக்களின் தேசமாக ஆக்கப் போகிறார்களாம்.

கூடவே கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் என்ற ஒன்றையும் கொண்டு வரப் போகிறார்களாம். நாசூக்காக "கட்டாய" என்றை சொல்லைச் சேர்த்துக் கொண்டுவிட்டார்கள். யார் வேண்டுமானாலும் எந்த சிறுபான்மை ஆட்கள் மேல் வேண்டுமானலும் என்னை இவர் "கட்டாயப்" படுத்தி மதம் மாற்ற முயல்கிறார் என்று குற்றம் சாட்ட ஏதுவாக. ஏற்கனவே தமிழ்நாட்டில் ஊழல் வழக்கில் தண்டனை பெற்று பதவியை இழந்த ஜெயலலிதா இப்படி ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து பின்வாங்கினார் என்பதெல்லாம் மோடி மஸ்தான்கள் அறிவார்களோ இல்லையோ?

இதைத்தானே மத்திய கிழக்கில் இஸ்லாமியத்தின் பெயரால் செய்கிறார்கள்? சிங்கள பவுத்தத்தின் பெயரால் இலங்கை இனவாத அரசாங்கம் செய்கிறது? பங்களாதேஷ், பர்மா, ஆப்பிரிக்க நாடுகள் சூடான் இஸ்ரேல் எல்லாம் இதைத்தானே செய்தன? ஜெர்மனி இதைத்தானே செய்தது? பிறகென்ன வேற்றுமையில் ஒற்றுமை இந்தியாவுக்கு?

அப்படி என்ன செய்துவிட்டார்கள் என்று வாதம் செய்ய வரவேண்டாம் இத்தனை ஆண்டுகள் சும்மா இருந்தவர்கள் ஆட்சியும் அதிகாரமும் மிருக பலத்தோடு கிடைத்தவுடன் பேசவும் ஆரம்பித்து விட்டார்கள். இனி மீதம் ஒன்றும் இல்லை 

செய்ய வேண்டியது மட்டுமே பாக்கி. 

இனத் தூய்மைவாதம், மதத் தூய்மைவாதம் எல்லாம் போய் வரலாற்றை திரித்தும் எழுத ஆரம்பித்திருக்கிறது காவிகளின் கூடாரம். காந்தியும் தேசபக்தர், காந்தியைக் கொன்ற கோட்சேவும் தேச பக்தர் என்று! இவர்களிடம் இருந்து வேறென்ன வார்த்தைகள் வரும்? கீதையை இந்தியாவின் தேசிய நூலாக்குவோம் என்று முழங்கியவர்கள் தானே?.

நமக்கு வாய்த்த பிரதமர் பற்றி சொல்லவே தேவையில்லை. எப்படியும் ஐந்தாண்டுகளுக்குள் தன் கால் படாத தேசமே உலகில் இருக்கக் கூடாதென்ற முன் முடிவோடு பறந்துகொண்டே இருக்கிறார். அவருக்கு அதானிகளும் அம்பானிகளும்தானே முக்கியம்?. அடுத்ததாக செவ்வாய் கிரகத்தில் நிலக்கரி கிடைக்கும் என்றால் அதானி குழுமத்தோடு அங்கும் போய் ஒரு ஒப்பந்தம் போடுவார் என்று நம்புவோம்.

அரசாங்கத்தை வழி நடத்தவும், மக்கள் நலத் திட்டங்கள் குறித்தும் எந்த கொள்கையும் அற்ற கட்சிகள் வெறும் மதம், தன் கட்சி சார்ந்த கொள்கைகளை மட்டும் வைத்துக் கொண்டு ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதை இன்னும் சில ஆண்டுகளில் தெரிந்துகொள்ளலாம் என்றிருந்த இந்திய மக்கள் ஆறே மாதங்களுக்குள் கசப்பு மருந்தை சுவைக்க ஆரம்பித்துவிட்டார்கள். 

உண்மையில் காவி கட்சிகளின் கொள்கைதான் என்ன என்று கேட்டால் எல்லோரும் அது, ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி,சிவசேனா, பாஜக, இந்து முன்னனி என்று எவனைக் கேட்டாலும்  . ராமர் கோவில், சேது சமுத்திரத்தை காப்பாற்றுவது, படேல்களுக்கும், சாவார்கர் களுக்கும் சிலை வைப்பது உலகின் ஒரே இந்து நாடு என்ற பெருமையை நேபாளிடம் இருந்து பிடுங்கிக் கொள்வது என்று பதில் இப்படித்தான் இருக்கிது. ஆட்சியாளர்கள் வெறும் போட்டோஷாப் உத்திகளைக் கொண்டே குஜராத்தை ஜப்பான் ஆக்கிக் காட்டி இந்தியாவை வென்றவர்கள் ஆயிற்றே இன்னும் சில நாட்களின் ராமர் கோவிலை அயோத்தியில் கட்டியேவிட்டதாகக் கூட காட்டுவார்கள் படம்.

பாஜகவும் அதன் கூட்டாளிக் கட்சிகளும் எப்படியெல்லாம் பிற்போக்குத் தனமாக சிந்திப்பவர்கள் என்பதற்கு இந்தியர்கள் எல்லாம் ராமனின் பிள்ளைகள் என்று உளரிக் கொட்டிய சாத்வி நிரஞ்சன் ஜோதி ஒருவரே போதும் இப்பேர்பட்ட ஆட்களை எல்லாம் மத்திய அமைச்சர் ஆக்கி அழகு பார்க்கும் பெருமை பாஜகவுக்கு மட்டுமே சேரும், சொல்லி வைத்தார் போல சட்ட சபைகளில் ஆபாசப் படங்கள் பார்ப்பது என்பதும் இவர்களின் பொழுதுபோக்கு , பெண்களை தெய்வமாகக் கொண்டாடுவோம் என்பதும் இவர்களின் பொழுதுபோக்கு.

குஜராத்தில் திட்டம் போட்டு கலவரங்கள் நடத்திவிட்டு அதை ஒரு விபத்து என்றும் ஒரு நாய் தான் செல்லும் வண்டியில் அடிபட்டு இறந்துவிட்டால் வருந்துவேன் என்று சொன்ன ஒரு ஆளைத்தானே நாம் பிரதமராக்கி அழகு பார்த்துக் கொண்டிருக்கிறோம்?.

கோத்ரா முதல் உத்திரப் பிரதேச கலவரங்கள் வரை தன் ரத்தக் கறைகளை கழுவாமல் அதையே ஆதாரங்களாக வைத்து ஒரு ஆளும் தேசிய கட்சியின் தலைவராக அமித் ஷா வரமுடியும் என்கிறபோது பாபா ராம்தேவ்களும் ஏதாவது ஒன்று கிடக்க ஒன்று செய்து தொலைக்கப் போகிறார்களோ என்று பயமாய் இருக்கிறது. 

அத்வானி போகும் இடமெல்லாம் குண்டு வெடித்துக் கொண்டிருந்தது, நல்லவேளையாக தேர்தலில் ஜெயித்துவிட்டு அத்வானியும் ஓரங்கட்டப் பட்டுவிட்டதால் இனி அப்படி நடக்காது என்று நம்புவோம். மோடியின் கூட்டங்களில் இனி குண்டுகள் வெடிக்குமோ என்னமோ எல்லாம் அந்த அமித் ஷாக்களுக்கே வெளிச்சம். 

காவி பயங்கரவாதம் என்பதென்னவோ வடநாட்டுக்கு மட்டும் என்று நினைத்துக் கொண்டு இங்கிருக்கும் திரவிடக் கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் வாக்கு கிடைத்தால் போதும் என்பதற்காகவும் ஆட்சியில் அதிகாரத்தில் இருந்து பதவியைச் சுவைத்தால் போதும் என்பதற்காகவும் ஒரு கூட்டணியை அமைக்குமேயானால் அந்த பிழையை வரலாறு ஒரு போதும் மன்னிக்காது. காரியம் ஆனபின்னால் காலை வாரி விடும் கயவர்கள் நிறைந்த இடம் என்பதை சு,சாமி தன் ஒவ்வொரு டிவீட்டிலும் சொல்லிக்கொண்டே இருக்கிறார், மான ரோஷம் இல்லாமல் இன்னும் பாஜகவில் ஒட்டிக்கொண்டிருக்கும், ராமதாஸ்களும், விஜயகாந்த் களும் விரைவில் அரசு உப்பை ஓருபிடி தனியே தின்றாவது உணர்ச்சி பெறட்டும்.

சமூகநீதி சமத்துவம் என்று வாய்கிழியப் பேசும் ராமதாஸ் பாஜகவின் கொள்கையை தன் கொள்கையாக மாற்றி நாட்கள் பல ஆயின என்றாலும் திராவிட மண்ணில் காவி பயங்கரவாதம் இடம் கொள்ள அனுமதிக்கக் கூடாது என்பதே எல்லாருடைய ஆவலும், அதற்குள் அன்புமணிக்கு ஏதும் மந்திரிப் பதவி கொடுத்து காரியத்தை பாஜக கெடுத்துவிடாது என்று நம்புவோம்.  

எங்கெல்லாம் மத பயங்கரவாதம் தலைதூக்குகிறதோ அந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போவார்கள் என்பதற்கு உதாரணமாக ஏகப் பட்ட நாடுகளைச் சொல்லலாம்.நாமும் அப்படி நாசமாய்த்தான் போகவேண்டுமா என்பதை இந்தியர்கள் சிந்திக்கவேண்டும். 

திராவிடம் பேசும் ஆட்களுக்கு இந்தியர்கள் மேல் என்ன அக்கரை என்று கேட்கும் ஆட்களுக்கு நாங்கள் திராவிடர்கள் அதனால்தான் இந்துக்களின் முகமூடிகளை கழட்ட முயற்சி செய்கிறோம். 

நீங்கள் இந்துவாக இருக்கவேண்டுமா இல்லை இந்தியனாக இருக்க வேண்டுமா? 

Sunday, December 21, 2014

திமுகவின் ஊளைச் சதைகள்.

எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து இன்று நெப்போலியன் வரை நடிகர்களுக்கும் திராவிட முன்னேற்ற கழகத்துக்கும் ஏழாம் பொருத்தம்தான். நடிகர்கள் என்று மட்டும் இல்லை எந்த கொள்கைகளும் அற்ற பதவிக்காகவும், புகழுக்காகவும் மட்டுமே திமுகவோடு ஒட்டி உறவாடிக் கொண்டிருந்து விட்டு சீ சீ இந்த பழம் புளிக்கும் என்று தனிக்கடை போட்டு திமுகவின் ஓட்டு வங்கியில் சேதாரம் செய்தவர்களால் திமுகவின் கொள்கைகளை சேதப் படுத்த முடியாது என்பதை வரலாறு உணர்த்திக் கொண்டே இருக்கிறது.

கட்சியின் பொருளாளராக இருந்து கொண்டே பொதுக் கூட்ட மேடையில் கட்சியின் கணக்கு வழக்குகளை கேட்ட எம்ஜிஆர் ஆகட்டும், ஏதாவது ஒரு விதத்தில் ஏதாவது ஒரு பதவியை அடைந்து விட மாட்டோமா என்று தன்னைத் தானே கழகத்தில் முன்னிலைப் படுத்திக் கொள்ள முயன்ற கண்ணதாசன் ஆகட்டும், ஏன் எஸ் எஸ் ஆர் முதல் ராதாரவி, சரத்குமார், ஏன் இன்றைய குஷ்பு வரை ஏதாவது ஒரு விதத்தில் கட்சியை விட்டு விலகும் போதோ அல்லது அங்கிருந்துகொண்டோ கலகச் செயல்களில் ஈடுபடுவதும் வழக்கமான ஒன்றாகிவிட்டது.முக முத்து முதல் முக அழகிரி வரை கலைஞரின் குடும்பத்துக்குள்ளேயே சிலர் இந்த வேலையை செய்யத் துணியும் போது மற்றவர்களை குறைகூறிப் பயணில்லை.

எந்த விதத்திலும் கட்சியின் கொள்கைகளான சமத்துவம் சமூக நீதி ஜனநாயகம் சாதி ஒழிப்பு திராவிட சித்தாந்தங்கள் அற்றவர்களை ஏதாவது ஒரு வகையில் மக்கள் அறிந்த முகம் என்பதனாலேயே கட்சியில் முன்னிலைப் படுத்தியதன் விளைவுகளை திமுக இப்போது அறுவடை செய்து கொண்டிருக்கிறது.  இதெல்லாம் ஆரம்பகாலத்தில் எம்ஜிஆர் என்ற பிம்பம் கட்சியை உடைத்ததும் அதனால் ஏற்பட்ட இழப்புகளால் ஏற்பட்ட பயமும் கூட கட்சித் தலைமையை இப்படி முடிவுகளை எடுக்க வைத்திருக்கலாம். இது ஒன்றும் அதிமுக பாஜக போல பிரபலமான முகங்களால் மட்டும் வளர்ந்த கட்சி இல்லை. 

கொள்கைகளால் புடம் போடப் பட்டு பெரியார் அண்ணா கலைஞர்  பேராசிரியர் என்று வழிவந்த ஒரு இயக்கம் தேர்தல் தோல்விகள் என்பது கலைஞருக்கோ இல்லை கழகத்துக்கோ இழப்பு இல்லை ஆனால் சமூகநீதிக்கு, சமத்துவத்துக்கு ஒட்டு மொத்த தமிழ்நாட்டுக்கும் இழப்பு என்பதை திமுக ஆட்சியில் இல்லாத காலங்களில் எல்லாம் கண்டே வந்திருக்கிறோம்.
திராவிடக் கொள்கைகளில் பற்றில்லாதவர்கள் கழகத்தில் இணைவதும் அவர்களை கட்சியே முன்னிலைப் படுத்துவதும் அவர்கள் பின்னர் கழண்டுகொண்டு புழுதி வாரி தூற்றுவதும் என்பது கட்சியின் அடிமட்டத் தொண்டனை அயர்வுக்குள்ளாக்குகிறது.

தீவிர காங்கிரஸ் ஆளான எம்ஜிஆர் கழகத்துக்குள் வந்து பிரிந்த போது கணிசமான வாக்காளர்களை தன் பின்னாலேயே இழுத்துக் கொண்டு போனார், பெயரில் மட்டுமே திராவிடத்தை வைத்துக் கொண்டு கருமாரி அம்மன் வழிபாட்டை பகிரங்கமாகச் செய்து பின்னர் தன் மறைவுக்குப் பின்னரான தலைமையை அடையும் அளவுக்கு முழுக்க முழுக்க திராவிடத்துக்கும் சமூக நீதிக்கும் எதிரான நிலைப்பாட்டையே எடுக்கும் அளவுக்கு தீவிர இந்துத்துவ வாதியான ஜெயலலிதாவை வளர்த்துவிட்டதைத் தவிர வேறெந்த புரட்சியையும் இந்த இரண்டு சினிமா புரட்சிகளுமே செய்துவிடவில்லை.

கட்சியில் இருந்து ஒதுங்கிய கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்துமதம் எழுதினார், டி ராஜேந்தர் பயங்கர பக்திமான் சோதிடரும் கூடவாம். நேறைய நெப்போலியன் கூட பாஜகவில் ஐக்கியமாகிவிட்டார், அடடே என்ன ஒரு கொள்கைப் பிடிப்பு? இவர்களுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தில் ஒரு பங்கையாவது குமரிமுத்து, வாகை சந்திரசேகர் போன்றவர்களுக்கு கொடுத்திருந்தால் இன்னும் இன்னும் என்று தமிழகத்தில் புயலாகச் சுழன்றிருக்க மாட்டார்களா?

 விநாயகர் சதுர்த்திக்கு ஸ்டாலின் வாழ்த்து என்றதற்கு பின்னர் வந்த மறுப்பை படித்துவிட்டு கலைஞர் வீட்டிலேயே இந்த கூத்துக்கள் எல்லாம் நடக்கும் போது என்னடா பெரிய கொள்கை பேச வந்துட்டீங்க என்று மாற்றுக் கட்சியினர் கேட்கும் போது தலையை கவட்டியில் வைத்துக் கொள்ளும் அவமானம் என்பது எல்லா திமுக ஆட்களுக்கும் வழக்கமாகிப் போனது.

அதுதான் அப்படியென்றால் திராவிடக் கொள்கையென்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் ஆட்கள் எல்லாம் கட்சியின் முக்கியப் பதவிகளுக்கு முன்னிருத்தினால் அவர்கள் தங்களின் சாதியை வளர்த்துவிட்டு முடிவில் தனிக் கட்சி தொடங்க ஆரம்பித்து விடுகிறார்கள். சரத்குமார் உதாரணம்.

முறசொலி மாறனின் மகன் என்ற ஒரே காரணத்துக்காக வளர்த்துவிட்டு ஊடக ஜாம்பவானான அண்ணனின் துணைகொண்டு ஆ. ராசா என்ற கொள்கை பிழம்பின் அரசியல் முடிவுக்கே வித்திடும் அளவுக்கு 2ஜி அலைக்கற்றை விவகாரத்தை ஊதிப் பெரிதாக்கியதில் தயாநிதி மாறனின் பங்கு என்ன என்பதை நாடே அறியும். திமுகவின் படுதோல்விக்கு அதுவும் ஒரு காரணம் என்று சொல்லப் படுகிறது. 

இப்படி வழக்கமான ஜனநாயகத்தில் இருந்து கொள்கைகளை அறவே மறந்த ஆட்களை எல்லாம் திமுகவில் வளர்த்துவிட்டதன் விளைவு இன்று பாஜக அடுத்த முதல்வரை தமிழகத்தில் களமிறக்குவோம் என்று குட்டை குழப்புகிறது. 2016 தேர்தலில் திமுகவோடு சேர்த்து முதல்வர் பதவிக்கு போட்டியிடும் கட்சிகளின் எண்ணிக்கையே ஒரு டஜனைத் தாண்டுகிறது.

திமுக ஒன்றும் சங்கர மடமில்லை என்று அடிக்கடி நாமே சொல்லிக் கொண்டு நம்மை ஏமாற்றிக் கொள்கிறோமா என்ற பயம் வரத்தான் செய்கிறது. ஆனாலும் இன்றளவும் கொஞ்சமாவது ஜனநாயகமும் கொள்கையும், அடிப்படை தொண்டன் சொல்வதையும் காது கொடுத்துக் கேட்கும் தலைமையும் இருக்கும் ஒரே கட்சி என்ற வகையில் திமுக தொண்டனாக பெருமைப் பட்டுக் கொள்ளலாம்.

திமுக ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கின் தண்டனைக்கும் பின்னால் அதிமுகவில் ஏற்படுத்தியிருக்க வேண்டிய வெற்றிடத்தை யார் யாரோ பயன்படுத்திக் கொள்ள வேடிக்கப் பார்த்தபடி கையைப் பிசைந்து கொண்டிருக்கிறது. அதன் விளைவுகள் தான் இன்றளவும் ஒரு டம்மி முதல்வரை பெயருக்கு வைத்துக் கொண்டு மம்மி ஆட்சியில் இருப்பது போன்ற பிம்பத்தை ஊடகங்கள் மூலம் மக்கள் முதல்வர் என்ற பெயரால் இன்னும் இன்னும் ஜனநாயகத்தையே கேலிக் கூத்தாக்கும் முயற்சியில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறது அதிமுக.

பாஜக ஆர் எஸ் எஸ் சங் பரிவார் அமைப்புகள் எல்லாம் ஒருவருக்குள் ஒருவர் அடித்துக் கொண்டாலும் ஒரு சிக்கல் அடுத்தவர்களால் என்று வரும் போது ஒன்றாய் கூடி கூட்டுச் சதி செய்கிற ஆட்கள் ஆனால் திமுக இன்று அப்படி இல்லை , தங்களுக்குள் குழுக்களை அமைத்துக் கொள்ளும் பெருந்தலைகள் திமுகவுக்கு ஒரு சேதாரம் என்றால் ஆஹா நான் இதைத்தான் ஆசைப் பட்டேன் என்று உள்ளுக்குள் கொட்டமடிப்பதை எல்லா சமீபகால தேர்தல்களிலும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதெல்லாம் வெளியில் இருந்து வந்தவர்களால் அல்ல.

மதுரையில் அழகிரி கொடுத்த தைரியம், இன்று கட்சியில் இருந்தும் ஒட்டு மொத்த மாக நீக்கப் பட்டதாக அறிவிக்கப் பட்டிருந்தாலும், திமுகவில் அவரை இத்தனை தூர வளர்த்துவிடுவதற்க்கு காட்டிய முனைப்பில் ஸ்டாலினுக்கு ஒரு பாதியாவது கட்சியில் முக்கியத்துவம் அப்போதிருந்தே கொடுத்திருந்தால் இன்று அடுத்த முதல்வர் யார் என்று அமீத் ஷாகளும் ராமதாசும், விஜயகாந்தும் போட்டிக்கு வந்து பேட்டிகள் கொடுத்திருக்க மாட்டார்கள்.

கொள்கைக் குன்றுகளும், கழகமே உயிர் என்று நினைத்தும் பலபேர் இருக்க கொழுத்த ஆட்கள் என்று கட்சியில் சிலரை முன்னிலைப் படுத்தியதன் விளைவே இன்றைய பிரபலங்கள் எல்லாம் கட்சியை விட்டு கழட்டிக் கொண்டு போவதும் , 

போனவை போகட்டும் என்று கலைஞர் கத்தியை எடுக்க வேண்டிய நேரம் இது. ஊளைச் சதைகள் அதிகம் இருப்பது உடலுக்கும் நல்லதல்ல கட்சிக்கும் நல்லதல்ல என்பது அரசியலையே சுவாசித்து உயிர் வாழும் கலைஞருக்கு தெரியாதது அல்ல. இளைத்தாலும் பரவாயில்லை என்று சிகிச்சையை தொடங்குங்கள் கலைஞரே. 

ஏனென்றால் கலைஞர் மட்டுமே கழகத்தின் முகம் என்பது கட்சித் தொண்டனுக்கு தெரியாமல் இல்லை.




















Wednesday, December 17, 2014

வினையூக்கி சிறுகதைகள்- ஆண்களின் மறைக்கப் படாத உலகம்.

செல்வகுமார் ராமச்சந்திரன் என்கிற செல்வகுமார் வினையூக்கிக்கும் எனக்கும் அத்தனை ஒன்றும் பூர்வஜென்ம பந்தம் இல்லை, இரண்டு பேரும் நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்து கொஞ்சமாவது இந்த இணைய கடலில் ஒரு சிறு கல்லையாவது வீசி, சிற்றலைகளை உண்டாக்கிவிட முடியாதா என்ற பல ஆயிரம் பேர்களின் கனவுகளின் பிரதிநிதிகளாக எங்களை நாங்களே முன்னிறுத்திக் கொள்ள முயன்றதைத் தவிர.

சமூக நீதி, சமத்துவம், இட ஒதுக்கீடு, பெரியார், திராவிடம் என்று கண்ணுக்குத் தெரியாத இழைகளால் இணைக்கப் பட்ட இணைய உலகம் எங்களுக்கானது என்று இருவரும், தனித் தனியே தங்களின் பாதையை வகுத்துக் கொண்டு இரண்டு பேருமே பத்தாண்டுகளில் என்ன என்னவோ செய்து தொலைத்திருக்கிறோம். அவரும் நானும் ஒரே பாதையில் பயணப் பட்டவர்கள் என்பதை தவிற அதிகம் நான் ப்ளாகுகளில் எல்லாம் உரையாடிக் கொண்டது கூடக் கிடையாது.

செல்வாவின் கதைகள் எல்லாம் கார்த்திக், அம்மு, அஞ்சலி பாப்பா என்கிற மூன்று பேருக்குள்ளேயே அடங்கி விடுகிறது. ஒவ்வொரு கதையும் படிக்கும் போதும் நாம் கார்த்திக்கையும் அம்முவையும் வேறு வேறு கார்த்திக் அம்மு அஞ்சலிகளியும் பார்க்கிறோம். அது வெறோனிக்கா ஆகட்டும் இல்லை வேறெந்த ஐரோப்பிய பெண்ணாகட்டும் எல்லாமே அம்முதான். தனித் தனி சிறுகதைகளை எல்லாம் ஒரு நாவல் போலவே படிக்க முடிவதற்கு காரணம் இதுதான் வேறு வேறு ஆட்கள் பெயர்கள் மட்டும் ஒன்றே.

இடையிடையே சில விஞ்ஞானக் கதைகளும் உண்டு. போகிற போக்கில் அப்பாவி கணேசனை அத்தனை எளிதாக கடந்து செல்ல கொஞ்சம் நகைச்சுவை உணர்வும் வேண்டும், ஆனால் ஒட்டு மொத்த கதைகளையும் படிக்கையில் கார்த்திக் மேல் பொறாமையே வரும் அளவுக்கு திகட்டத் திகட்ட பெண்கள், காதல் , காதல். பிரிதல் என்ற ஒன்றைக்கூட வெகு எளிதாக கடந்து வந்த என் போன்ற ஆட்களுக்குள் இருக்கும் கார்த்திக்குகளை நிச்சயம் படிக்கிற எல்லோருக்கும் பிடிக்காமல் இருக்காது.

ஆண்கள் எல்லாம் உத்தமர்களாகவோ இல்லை கேடு கெட்ட பொறுக்கிகளாகவோ மட்டும் கதை செய்யத் தெரிந்த ஆட்களுக்கு நடுவே ஆண்களின் இன்னொரு உலகத்தை ஒவ்வொரு கதையிலும் ஜன்னல் ஜன்னலாக திறந்து கொண்டே போகிறார். சமூக நீதி பேசும் இடங்களில் எல்லாம் கிளிமூக்கு அரக்கனும் எட்டிப் பார்க்கிறார். விஞ்ஞானக் கதைகளில் வினையூக்கி எட்டிப் பார்க்கிறார். இப்படி ஆங்காங்கே கதாசிரியர் தன் முகத்தை காட்டிக் கொண்டே இருப்பதால் படிக்க சுவாரஸ்யமாகவும் இருக்கிறது.

நிறைய பயணங்களும் அதில் சந்திக்கும் பெண்களும் என்று சில இடங்கள் இழுவை போட்டாலும் ஐரோப்பிய அம்முகளுக்காகவே படிக்கத் தூண்டும் கதைகள் பக்கம் பக்கமாய் இருக்கின்றன. ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் மூலம் கடவுளை காணும் கதை இன்னொரு அன்பே சிவம்.

ஒவ்வொரு கதையுமே ஒரு குறும்படத்துக்குண்டான நிகழ்வுகளை கொண்டவை, யாராவது குறும்பட இயக்குனர் இதைப் படித்தால் செல்வாவிடம் முன் அனுமதி பெற்று படமாக்க முயலலாம்.

"தேவதைகளை பெற்றெடுத்தவுடன் மனைவிகள் பிசாசுகள் ஆகி விடுகின்றனர், தேவதைகளுக்காகவே பிசாசுகளை பொறுத்துக் கொண்டிருக்கவேண்டியிருக்கிறது"

இது போல ஏகப்பட்ட சுவாரஸ்யம் மிகுந்த வரிகள் நூல் முழுதும் காணக் கிடைக்கிறது.

பிடிஎஃப் கோப்பாக முழு நூலையும் தரவிறக்கம் செய்ய
http://freetamilebooks.com/ebooks/vinaiooki-short-stories/







Monday, December 01, 2014

பா.ஜ.க எனும் பாசிச நச்சு.

ஆர்.எஸ்.எஸ், பாஜக என்னும் பாசிஸ்டுகள் ஆட்சியில் அமரும் போதெல்லாம் இந்தியா என்ற துண்டுகளால் ஒருங்கமைக்கப் பட்ட தேசம் மத, சாதி விரோதங்களால் அழிவையும், நிலையற்ற தன்மையும் சந்தித்தே வந்திருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் என்றும் சிவ சேனா என்றும் பாஜக என்றும் பெயர்கள் மட்டும்தான் வேறு வேறு மற்றபடி இவர்களின் கொள்கை எல்லாம் இந்தியாவை ஒரு இந்துக்களின் நாடாக, பாகிஸ்தான் முஸ்லிம்களின் நாடாக ஆனது போல மத்திய கிழக்கு நாடுகளில் மதத்தின் பெயரால் துண்டாடப் பட்டு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வன்முறை வெறியாட்டங்களால் மக்கள் ஒரு அச்சத்திலேயே வாழ்ந்து கொண்டிருப்பது போல இந்தியாவையும் வேற்றுமையில் ஒற்றுமை காணும் நிலையில் இருந்து ஒற்றுமை என்கிற பெயரால் வேற்றுமை விரோதங்களால் துண்டாடிவிட வேண்டும் என்பதே.

ஆர் எஸ் எஸ் காலத்திலேயே தொடங்கப் பட்ட இவர்களின் செயல் திட்டம் கொஞ்சம் கொஞ்சமாக இந்துக்களுக்குள் ஒற்றுமை எனும் ஒரே முழக்கத்தோடு திட்டம் போட்டு தங்கள் ஆட்சி அதிகாரங்களை கைப்பற்ற ஆரம்பித்த பின் முழு வீச்சில் இப்போது செயல் படுத்த தொடங்கி விட்டனர். பாபர் மசூதி இடிப்பு தொடங்கி சேது சமுத்திர திட்டத்தை முடக்கியது வரை, இவர்கள் மதத்தாலும் தேச நலனாலும் தங்களுக்கு, தங்கள் மதத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கும் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்பதையே இப்படி புதுப் புது திட்டங்களாலும் அறிக்கைகளாலும் மிரட்டல்களாலும் செயல் படுத்த துணிகின்றனர்.

சமஸ்கிருத தினிப்பு, பள்ளியில் சரஸ்வதி வணக்கம், எங்கே  சென்றாலும் ஹிந்தியில் உரையாற்றும் பிரதமர், என்று தங்களின் பாசிச கொள்கைகளை தினிக்க ஆரம்பித்து விட்டனர். பெரும்பான்மை இல்லாத காலங்களில் அடுத்தவர் தயவில் ஆட்சியை ஓட்டிய காலங்களில் கொஞ்சமாவது கூட்டணி கட்சிகளின் தயவு வேண்டும் என்பதற்காக கடிவாளம் இட்ட குதிரையாக இருந்த இவர்கள் இப்போது  மிருக பலத்தோடு எதிர்கட்சிகளே இல்லாத நிலையை அடைந்ததும் தங்கள் முகமூடிகளை எல்லாம் கழட்டி தூர வைத்துவிட்டு கோர முகத்தை காட்ட ஆரம்பித்து விட்டனர்.

ஆட்சியில் அமரும் முன்னர் வானளாவி மோடி புராணம் பாடிய ஊடகங்கள் இன்னும் மயக்கத்தில் இருந்து விடுபடவில்லை.  இதற்கெல்லாம் கட்டியம் கூறுவது போல அமைந்திருப்பதுதான் ஹெச்.ராஜா என்னும் பாஜக போர்வையில் பதுங்கிக் கொண்டு பகிரங்க மிரட்டல்களை கூட்டணிக் கட்சியின் தலைவர்களுக்கே விடுக்கும் அரசியல் ரவுடி. எந்த இன ஒழிப்புக்கு ஆதரவாக இருந்தது என்ற ஒரு காரணத்துக்காக ஒட்டு மொத்த தமிழகமும் திரண்டு நின்றதோ அதை ஒட்டு மொத்தமாக நடத்திய ராஜபக்‌ஷே மீண்டும் தேர்தலில் வெற்றிபெற வாழ்த்து சொல்லும் ஊடகங்களால் ஊதிப் பெருத்த ஊர்சுற்றி அதானிகளுக்கும் அம்பானிகளுக்கும் நன்றிக் கடனை திருப்பிச் செலுத்திக் கொண்டிருக்கும் மிஸ்டர் 56 அங்குல மோடி என்று தங்களின் காவி அடையாளத்தை காட்டத் தொடங்கி விட்டனர்.



முன்னரே ஒரு முறை பெரியாரை செருப்பால் அடிப்பேன் என்று ஹெச்.ராஜா கூறியபோதும் சரி இப்போது வைகோவுக்கு பகிரங்க மிரட்டல் விடும் போதும் சரி, பாஜகவின் முக்கிய தலைவர்களுள் ஒருவராக மாறிப் போன சுப்பிரமணியன் ஸ்வாமி ஒட்டுமொத்த தமிழர்களையும் எலிகள் பொறுக்கிகள் என்று திட்டி வாய்க்கு வந்ததையெல்லாம் உளறிக் கொண்டிருக்கும் போதும் சரி ஊடகங்களோ, எதிர்கட்சிகளோ அப்படி ஒன்றும் பெரிய எதிர் விணை ஆற்றிடவில்லை என்பதுதான் உண்மை. தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் ஹெச்.ராஜா சு.ஸ்வாமியின் பேச்சுக்கள் அவர்களின் தனிப்பட்ட கருத்து என்றும் அரசியல் நாகரீகம் குறித்தும் வைகோ ராமதாஸ் போன்றவர்கள் அடக்கமாக இருப்பது நல்லது என்று பாடம் எடுக்கிறார்.

முன்பே வைகோ, ராமதாஸ்  போன்றவர்களை சு.ஸ்வாமி கூட்டணி கட்சியென்றும் பாராமல் டிவிட்டரில் திட்டிய போதே தங்களின் கண்டனத்தை தெரிவித்திருந்தாலாவது கொஞ்சம் அடக்கி இருக்கலாம். ஆனால் இவர்கள் கண்டுகொள்ளாமல் விட்டதன் விளைவு இன்று ஹெச் ராஜா வைகோவுக்கு மிரட்டல் விடுப்பதும், ஸ்வாமி கூட்டணியை விட்டு அவர்களே வெளியேறி விடுவது நல்லது என்றும் கூறும் அளவுக்கு வளர்ந்து போய் இருக்கிறது.

பாசிசம் என்பது படுகொலைகளால் மட்டும் வளர்வதில்லை. மதத்தின் பெயரால் மட்டுமே மக்களை ஒன்று திரட்டி இனக் குழுக்களின் அரசியலை அதிகாரத்தை, அவர்களின் கைகளில் இருந்து பிடுங்கி ஒரு பெரும்பாண்மை மக்களின் கைய்யில் கொடுத்தால் அவர்களே தங்களின் அதிகாரங்களை நிறுவிக் கொண்டு சட்டத்தையும் மனித நேயத்தையும் கால்களில் போட்டு மிதிப்பார்கள் என்பதற்கு ஜெர்மனியின் ஹிட்லர், உகாண்டாவின் இடி அமீன், ஆப்கானிஸ்தானின் தாலிபான்கள், குஜராத்தில் மோடி, இலங்கையின் ராஜபக்‌ஷே என்று வரலாற்றின் அடுக்கு தோறும் சாட்சிகள் கொட்டிக் கிடக்கின்றன.

நாம்தான் வரலாற்றை அதன் மகிழ்வான பக்கங்களை மதிப்பெண்களுக்காக மட்டுமே படித்துவிட்டு மறந்தும் போகிறோமே? அதனால்தான் அம்பேத்கரும் பெரியாரும் சிங்காரவேலரும் வாழ்ந்த மண்ணில் காவிக் கொடியும் பறக்க அனுமதித்துவிட்டு இன்று அரசியல் மிரட்டல்களை சந்தித்துக் கொண்டிருக்கிறேம்.

இந்த காவிக் களைகளை இப்போதே ஒழிக்கும் பணிகளை தொடங்காவிட்டால் இந்தியாவில் இருந்து எங்களை நாங்களே துண்டித்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதை குறைந்த பட்ச அரசியல், மத நல்லிணக்கம் விரும்பும் கட்சிகள் மக்களுக்கு தெரிவித்து காவிகளுக்கு எச்சரிக்கை விடுத்து தங்களின் செயல்பாட்டை தொடங்காவிட்டால் எதிர்காலத்தில் வரலாறு உங்களை மன்னிக்கப் போவதில்லை.

முடிவு நம் கையில்.




Thursday, November 27, 2014

நெகிழ வைத்த திரைப்படங்கள்-3 Dancer in the Dark

இந்த படம் என்னை மட்டுமல்ல பார்க்கும் யாரையும் இளகவைக்கும் என்பதில் எனக்கு துளியும் சந்தேகம் இல்லை 2002ல் இந்த படத்தை பார்க்கும் போது எனக்கு இவ்வளவு ஆச்சரியம் இல்லை ஆனால் இப்போது இருக்கிறது, காரணம் 2002க்கு  பிறகுதான் வெறிபிடித்தது போல  உலக சினிமாக்களை தேடித் தேடி பார்த்துக் கொண்டிருக்கிறேன். கிட்டத்தட்ட 2 TB கொள்ளளவு கொண்ட ஹார்ட் டிஸ்க்கில் முழுக்க முழுக்க உலக சினிமாக்கள் ஆங்கில சினிமாக்கள் என்று வகை வாரியாக 3000 படங்களுக்கும் மேல் சேமித்து வைத்திருக்கிறேன். இன்னும் டவுன்லோடிக் கொண்டிருக்கிறேன். எல்லாம் டோரண்ட்ஸ் தந்த வரம்.

Dancer in the Dark.


பொதுவாகவே வசனங்கள் நிறைந்த சினிமாக்களை ரசிப்பவன் நான். அதிலும் Lars van Trier படங்களை சொல்லவே வேண்டியதில்லை, நிம்போமேனியாக் ஆகட்டும் ஆன்ட்டி கிரிஸ்ட் ஆகட்டும் மனுஷன் பின்னி இருப்பார். இந்த படத்தை பொருத்தவரையில் இசையும் பாடல்களும் வசனங்களும் என்று எந்த ஒரு இரும்பு இதயத்தையும் கொள்ளை கொள்ளுகிறது. அதிலும் முக்கியமாக வழக்கம் போல ட்ரையர் இந்த படத்தையும் கதாநாயகியை முன்னிலைப் படுத்தியே எடுத்திருக்கிறார். ஒட்டு மொத்தமாக காதாநாயகி பட்டுமே படத்தை தூக்கி சுமந்திருக்கிறார் அதுவும் ஜோர்க்குக்கு சொல்லவா வேண்டும் படத்தை சுண்டு விரலில் சுமந்திருக்கிறார். 

கதை இதுதான் கதையின் நாயகி சல்மா தன் மகனுடன் செக்கோஸ்லோவாக்கியாவில்  இருந்து அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்தவர், சல்மாவுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் பார்வை பறிபோய்க்கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தன் மகனுக்கும் அதே குறைபாடு என்பதால் மகனுக்கு மருத்துவம் பார்ப்பதற்காக வந்தவர். வந்த இடத்தில் , ஒரு ஸ்டீல் பேக்டரி, ஒரு வீட்டில் இருந்தே செய்யும் சிறு வேலைகள், மற்றும் டான்ஸ் பாடல் என்று உண்மையில் ஒரு குருவி சேர்ப்பது போலவே கொஞ்சம் கொஞ்சமாய் பணம் சேர்த்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு உதவியாக காவல் துறையிலிருக்கும் நண்பனும், அவர் மனைவியும் தங்கள் இடத்தை சல்மாவுக்கு வாடகைக்கு விட்டும் சல்மாவின் மகனை கவனித்துக் கொள்ளும் பொறுப்பும் ஏற்றிருக்கின்றனர், சல்மாவை தன் காதலியாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் ஒருவர், சல்மாவுக்கு பேக்டரியில் ஒரு தோழி. கொஞ்சம் கொஞ்சமாய் பணம் சேர்த்து வைத்திருக்கும் சல்மா தன் மகனுக்கு மருத்துவம் பார்ப்பதற்கு முன்பே கண் பார்வை முற்றிலும் போய்விடுகிறது அதன் பின் அவருக்கு எல்லா சத்தங்களும் இசைதான் அவருக்கு. பேக்டரியில் சத்தம் இசை, ரயில் சத்தம் இசை, என்று.

முற்றிலும் பார்வை பறிபோன பின்னர் ஒரு நாள் தான் வங்கிக்கு செலுத்த வேண்டிய கடனுக்காக அந்த போலீஸ் நண்பன் சல்மாவின் பணத்தை திருடி விடுகிறான். அதைக் கேட்கப் போன இடத்தில் நடக்கும் தள்ளு முள்ளுகளில் போலீஸ்காரன் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு விட கொலைப் பழி , திருட்டுப் பழி எல்லாம் சல்மாவின் மேல் விழுகிறது.

சிறைச்சாலையில் விசாரணைக்குப் பின் சல்மாவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப் படுகிறது. இதுதான் கதை.

சல்மாவாக நடித்திருக்கும் ஜோர்க் (Bjork)க்கைத் தவிற வேறு யாராலும் இப்படி ஒரு நடிப்பை வெளிப்படுத்தி இருக்க முடியுமா என்பதை ஒவ்வொரு காட்சியிலும் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார். பேக்டரியில் வேலை செய்வதாக இருக்கட்டும் கண் பார்வை பறிபோய்க் கொண்டிருப்பதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சமாளிப்பதாகட்டும் தன் காதலை ஏற்கச் சொல்லி வரும் ஜெஃப் இடம் (Peter Stomare) மறுக்கும் இடம் ஆகட்டும், தன் பார்வைக் குறைபாட்டை போலீஸ் கார நண்பன் பில்லிடம் (David Morse) சொல்லும் போதாகட்டும் இப்படி எல்லாக் காட்சிகளிலும் ஜோர்க் வாழ்ந்திருக்கிறார். 

படம் முழுக்க நெகிழத்தான் வைக்கிறது ஆனாலும் குறிப்பிட்டுச் சொல்லும் இடங்கள்  என்றால் பேக்டரியில் வேலை செய்து முடிந்த பின் ஜெஃப் தன் வண்டியில் வரும்படி அழைக்க சல்மா தனக்கு இப்போது ஒரு ஆண்துனை தேவையில்லை என்றும் அப்படி ஒரு வேளை தேவைப்பட்டால் உன்னைத்தான் தேர்ந்தெடுப்பேன் ஜெஃப் என்று சொல்லும் காட்சி ஒரு கவிதை என்றால் தனியே தண்டவாளத்தில் நடந்து போகையில் ஜெஃப்பும் சல்மாவும் பாடும்  I have seen it all பாடல் ஒரு காவியம். பாடல், இசை, நடனம், என்று எல்லாம் ஒட்டுமொத்தமாய் மயங்க வைக்கிறது 


பணம் காணாமல் போனபின் பில்லிடம் போய் பணம் கேட்கும் போது ஒரு அடிபட்ட பறவையைப் பார்ப்பது போல் உணர்ந்தேன் ஆனால் கொலைக்குப் பின்னால் வரும் அந்த பாடல் நம்மை கொலைக்குப் பின்னாலான அதிர்வுகளில் இருந்து மீட்டு விடுகிறது. படத்தின் எல்லாப் பாடல்களும் மேஜிகல் ரியலிசங்கள்தான் கொஞ்சம் கூட தொய்வடைய வைக்காத கதை, சிறையில் இருக்கும் போதும் ஒரு பாடல் வருகிறது, 

தனக்கு மரண தண்டனை என்று தெரிந்த பின் சிறையில் தன் பேக்டரி தோழியுடன் தொலை பேசியில் பேசிக் கொண்டே என் மகனுக்கு பார்வை முக்கியம் எனக்காக வக்கீல் வேண்டாம் என்று கதறும் காட்சி கண்களை குளமாக்குகிறது. முடிவில் தூக்கு தண்டனையின் போது எனக்கு தூக்கு வேண்டாம் பயமாய் இருக்கிறது என்று கதறுவதை பார்க்கும் போது என்னை அறியாமல் விம்மி வெடித்திருக்கிறேன் கல்நெஞ்சம் கொண்ட நானா இப்படி என்றெல்லாம் நினைத்தாலும் அதுதான் இந்த படத்தின் வெற்றி. 

முடிவாக தூக்கிற்கு முன் கொடுக்கப் படும் கொஞ்ச அவகாசத்தில் சல்மா பாடிக் கொண்டிருக்கும் போதே அடிப்பலகை நகர்ந்து கொள்ள பாடல் பாதியில் துண்டிக்கப்பட தூக்கில் தொங்கும் கணத்தில் கண்களை மூடிக் கொண்டேன். ஒரு பத்து தடவைகளுக்கு மேல் பார்த்த இந்த  படத்தில் நான் அந்த ஒரு செகண்டை மட்டும் கண்களை மூடிக் கொண்டுதான் கழித்திருக்கிறேன் என்றால் நம்பித்தான் ஆகவேண்டும். ஒட்டு மொத்தமாக என்னை நெகிழச் செய்த படங்களின் உச்சத்தில் எப்போதும் இருக்கும் படம் இது.








Tuesday, November 25, 2014

நெகிழ வைத்த திரைப்படங்கள்-2 A Serbian Film (Un Serbski Film)

இந்த படத்தை ( எ ஸெர்பியன் ஃபில்ம் ) , ( Un Serbksi Film ) நெகிழவைத்த திரைப்படங்கள் வரிசையில் சேர்ப்பதை விட அதிர வைத்த திரைப்படங்கள் வரிசையில் சேர்ப்பதுதான் மிகச் சரியாக இருக்கும் என்றாலும் நான் அப்படி ஒரு தொடரை எழுத இதுவரை உத்தேசித்திருக்கவில்லை என்பதால் வேறு வழியே இல்லாமல் இதையும் நெகிழ வைத்த திரைப்படங்களின் வரிசையிலேயே சேர்க்க கட்டாயப் படுத்தப் பட்டுள்ளேன் ஒரு வேளை டின்ட்டோ பிராஸ் காவியங்களை (?) எழுதும் போதோ அல்லது ஸ்பார்ட்டகஸ் ப்ளட் அண்ட் சேண்ட் , காட்ஸ் ஆஃப் அரேனா, ரோம் சீரியல்கள் குறித்தோ எழுதினால் அந்த தலைப்பை வைக்கலாம் என உத்தேசித்திருக்கிறேன்.

முதலிலேயே சொல்லி விடுகிறேன், கற்பினிப் பெண்கள், குழந்தைகள் 18+ வயதாகாதவர்கள், இளகிய மனமுடையவர்கள், என்னை பிடிக்காதவர்கள் இந்த படத்தை தவிற்பது உங்களுக்கும் எனக்கும் நலம் பயக்கும்.



கிடக்கட்டும் நம் கதைக்கு வருவோம். படத்தின் ஆரம்பத்திலேயே வரும் அறிமுகக் காட்சியில் அதிர ஆரம்பிக்கும் நாம் படம் முடியும் வரை அதில் இருந்து மீளப் போவதே இல்லை என்பதை கதாநாயகனும் மனைவியும் தன் மகன் பார்க்கும் "அந்த" காட்சியில் உணர்த்தி விடுகிறார்கள். கதை இதுதான். ஸெர்பியாவின் ஒரு முன்னாள் "ரிட்டயர்டு" பாலுணர்வு தூண்டும் சினிமாக்களின்  நடிகர் தன் குடும்ப பொருளாதார சூழலால் மீண்டும் அந்த பாலுணர்வு பட்டங்களுக்குள் நுழைந்து அதன் பின்னனியில் வலையில் சிக்கிக் கொள்ளும் ஒரு பாலியல் வன்முறைகள் நிறைந்த படம்தான் இது ஆனாலும் அதிர்வுகளுக்கு மட்டும் பஞ்சமே இல்லை.

மிலோஸ், மரியா, பீட்டர் என்ற அழகான குடும்பம், மிலோஸின் மனைவி  மரியா மேல் ஒரு கண் வைத்திருக்கும் மிலோஸின் தம்பி மார்கோஸ், மிலோஸின் முன்னாள் தொழில் முறை நண்பி லைலா (லேய்ஜா?) மீண்டும் மிலோஸை உக்மிர் என்னும் தொழில் முறை பாலியல் பட, நிஜத்தை, நிஜ கொலைகளை, நெக்ரோ பீலியாக்களை, படமாக்கி அதை பணமாக்கும்  இயக்குனரிடம் அறிமுகப் படுத்த அதன் பின் மிலோஸுக்கு நடப்பவைதான் கதை.

இதில் நீங்கள் அதிர அதிர என்று அதிர்ந்து கொண்டே இருக்க படம் முழுக்க காட்சிகளும் விவரணைகளும் உண்டு. மிலோஸ் உக்மிரின் படத்தில் நடிக்க ஆரம்பிக்கும் போது ஒரு சிறு குழந்தையை அவளின் அம்மா அடித்து இழுத்துக் கொண்டு போகும் போது ஆரம்பிக்கிறது , பின்னர் எதுவுமே சினிமா இல்லை எல்லாமே உண்மைதானோ என்ற எண்ணம் வந்து மிலோஸ் மரியாவிடம் பேசிக் கொண்டிருக்கும் போதும், அந்த சிறுமியோடு, அவளின் முன்னிலையில் தன்னால் நடிக்க முடியாது என்னும் போதும் தன் மனைவியிடமும் தன் தம்பியிடமும் பேசும் போதும் உக்மிரின் படத்தில் நடிக்கையில் தன்னை போதைக்குள்ளாக்கி படம் எடுப்பதை பின் ஃபாளாஷ் பேக்கில் கண்டு திகைப்பதையும் காணுகையில் நெகிழச் செய்வதை விட படம் நம்மை அதிரத்தான் செய்கிறது.

நான் நல்ல விமர்சகனாக இல்லாமல் போகலாம் என்னடா இவன் வள வள என்று இழுக்கிறானே என்று அது பற்றியெல்லாம் நான் கவலைப்படப் போவதில்லை ஆனால் நல்ல சினிமாக்களின் ரசிகன் என்ற முறையிலும், கொஞ்சம் ஹாரர்,கல்ட்,மேஜிக்கல் ரியலிச படங்களின் ரசிகன் என்ற முறையிலும் இந்த படத்தை பற்றி எழுதாவிட்டால் என் ஜென்மம் சாபல்யம் ஆகாது.

எல்லாவற்றையும் விஞ்சி இந்த படத்தில் எஞ்சி நிற்பது கொஞ்சமே கொஞ்சமாய் ஒட்டிக் கொண்டு நிற்கும் செண்டிமெண்ட்.

For Example  an dialog from the film, after Milos Saw the Agreement and speaking with his Wife Maria.

Maria: You fucked every one in the Industry and you just throw them like a Condom but why you couldn't don't to me?

Milos: Because i just Fucked them but i love you.

Maria: So it means you don't just like to fuck me?

இதன் பின்னர் வரும் இரண்டு நிமிடங்களும் காதலின் , காமத்தின் உச்சம், இதில் என்ன உணரவைக்கும் நெகிழ்த்தும் நிமிடங்கள் என்று கேட்பவர்கள் படம் பார்த்துக் கொள்ளவும்.

ஆனால் உங்களை அதிர்வின் உச்சத்துக்கே கொண்டு செல்ல இருக்கவே இருக்கிறது படத்தின் உச்ச காட்சி, இதைக் கண்டும் அதிராமல் போனீர்கள் என்றால் உங்களை ஒரு நல்ல மன நல காப்பகத்தில் கொண்டு சேர்ப்பது நல்லது, அதிராமல் மகிழ்வீர்கள் என்றால் உங்களையும் அங்கேயேதான் கொண்டு சேர்க வேண்டும் என்பது நிச்சயம்.

உங்களை அதிரவைக்கவோ இல்லை உறைய வைக்கவோ இந்த படம் பற்றி எழுதவில்லை, என்னை கொஞ்சம் உலுக்கிய படங்களுல் ஒன்று இது.  இன்னும் கொஞ்சம் இந்தப் படத்தை உற்றுப் பார்த்தீர்களே ஆனால் என் கண்களுக்கும் தெரியாத காட்சிகள் உங்களுக்கு கிட்டும்.

இன்னொரு விஷயம் இது முழுக்க முழுக்க ஸெர்பியன் மொழியில் இருக்கும் படம் கொஞ்சமே கொஞ்சம் சிரமப் பட்டு ஸப் டைட்டிலை படித்து விடுங்கள்.

படம் பற்றிய தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும்.

படத்தை முழுதாகக் காண இங்கே சொடுக்கவும்.







Thursday, November 20, 2014

நெகிழ வைத்த திரைப்படங்கள்- 1 Room in Rome

இப்போதெல்லாம் எந்த படத்தை பார்த்தாலும் சில காட்சிகள் என்னை ஒரு நிமிடம் குபுக் என்று நெகிழ்த்தி விடுகிறது. முன்பெல்லாம் சில காட்சிகளை பார்த்தால் என்ன கொடுமைய்யா இதெல்லாம் ரொம்பவே செண்டிமெண்ட் போட்டு தாளிக்கிறார்களே என்ற கிண்டலோடு படம் பார்த்த நானா இப்படி ஆகிவிட்டேன் என்று யோசிக்க வைப்பது என் நாற்பதை நெருங்கும் வயதா இல்லை சுமார் பத்தாண்டுகளாக நீண்ட இடைவெளிகளில் குடும்பத்தை பிரிந்து வாழும் துயரா என்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் கிடக்கட்டும் என்னை எத்தனை முறை திரும்பத் திரும்ப பார்த்தாலும் நெகிழ்த்திய படங்கள் என்று ஒரு தொடரை உத்தேசித்திருக்கிறேன். டாப் டென் போல இது வரிசைப் படுத்துவதற்காகவோ இல்லை படங்களை விமர்சிப்பதற்க்காகவோ அல்ல. வெறுமனே என்னை நெகிழச் செய்த படங்களை, காட்சிகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள. 

Room In Rome.



இரண்டு முற்றிலும் அறிமுகமில்லாத (ஆல்பா, நடாஷா ) பெண்களின் ஒரு நாள் இரவின் கதை, கொஞ்சம் பிசகினாலும் பாலியல் படங்களின் (Porn) வரிசையில் சேர்ந்துவிடக் கூடிய திரைக்கதை, ஆனால் அதை காட்சிப் படுத்திய விதத்திலும், பின்னனி இசையிலும் கொஞ்சம் கூட ஆபாசம் எட்டிப் பார்த்துவிடாமல் நிர்வாணத்தை அழகாக்கி இருக்கும் இயக்குனர், Julio Medem ( ஒளிப்பதிவாளர் Alex Catalán இரண்டு பேரையும் விட இரண்டு கதை நாயகிகளும்  கூட படத்தை ஒரு சேர அழகாக்குகிறார்கள்.

சரி இது ஏன் நெகிழ வைத்தது என்ற விஷயத்துக்கு வருகிறேன் , ஏனென்றால் படத்தை நான் விமர்சிக்க விரும்பவில்லை.  இரண்டு பெண்களும் ஒரு நாள் இரவில் அறிமுகமாகி ஆல்பா நடாஷாவை தன் அறைக்கு அழைக்கும் தருணம் நடாஷா ஆல்பாவின் கையை விட்டு விலக எண்ணி இழுத்துக்கொண்டு போகையில் ஆல்பா, நடாஷாவிடம் என்னிடம் போட்டியிட்டால் நான் தோற்றுப் போவேன் ஆனால் உன் அறைக்கு வந்து விடுவேன் என்னும் போது இருவரின் முகத்திலும் குறும்பு கொப்பளிக்கும்,

முதன் முதலாய் ஒரு பெண் என்னை இப்படிப் பார்ப்பது இதுதான் முதல் முறை என்னும் போது நடாஷாவின் வெட்கமும் ஆல்பாவின் காதல் பார்வையும் ஒரு அழகிய கவிதை,  அதன் பின் ஆபா உறங்குகையில் நடாஷா தன் அறைக்குச் செல்லும் முன் தன் பெயரை ஆல்பாவின் காதில் சொல்லும் " ஷா, நடாஷா" எனும் போதும் தவறுதலாய் ஆல்பாவின் உள்ளாடையை அணியும் போது அது கிழிந்து போனதை பார்த்து சிரிப்பதும் என இதெல்லாம் கதையை சுவாரஸ்யம் ஆக்குகின்றன, நடாஷாவின் செல்போனை ஆல்பாவின் அறையில் விட்டு விட்டு வந்து அதை திரும்ப எடுக்க வரும் போது இருவருக்கும் இடையில் ஆரம்பிக்கிறது கதை.

ஆல்பா தன்னைப் பற்றி சொல்லும் போது தன் தாயாருடன் ஒரு அரபு ஷேக்கின் அந்தப்புரத்தில் இருந்த போது கர்பமாகி அங்கே  இருந்தால் தன் குழந்தையும் ஒரு அந்தப்புரத்தில் இருப்பதை விரும்பாமல் அதுவும் பெண் குழந்தை என்றதால் கருவைக் கலைத்து விடுவதையும் சொல்லும் போதும் அந்த குழந்தைக்கு வைக்க விரும்பிய பெயரைத்தான் தனக்கான பெயராக வைத்துக் கொண்டதையும் சொல்லும் போது ஒரு கணம் நம்மை உலுக்கி விடுகிறதுதான். ஆனால் நடாஷாவும் ஆல்பாவும் தங்களை பற்றி பொய் மட்டுமே சொல்லிக் கொண்டு அந்த ரோமின் மைய்யத்தில் இருக்கும் ஹோட்டல் அறையின் சித்திரத்தின் கேரக்டர்களை பற்றியும் அதனை தொட்ட வாரே ஊரும் கதை அமைப்பையும் கவணித்து வந்தால் தான் இது ஒரு மேஜிகல் ரியலிசம் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

நடாஷாவும் ஆல்பாவும் தங்களை யார் என்றும் தங்களின் காதலையும் தெரிந்து கொண்ட பிறகும் இருவரும் பிரிந்து போவது என்று முடிவு செய்யும் போதும் என்று படம் முழுக்க நெகிழ வைக்கும் இடங்கள் ஏராளம், அதிலும் கடைசி காட்சியில் ஆல்பாவை பாத் டப்பில் கிடத்தி அந்த கற்பனை அம்பை நடாஷா பிடுங்கும் வேளை க்ளாஸ்.

மற்றபடி இந்த படத்தை சிலாகித்துச் சொல்ல வசனங்கள் தான் இருக்கிறது ஆனால் நிறைய நேரங்கள் மவுனங்களின் அழகை அனுபவிக்கலாம், பின்னனி இசை காதில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.  அதிகமாய் எழுதி படத்தை பார்க்கப் போகிறவர்களின் சுவாரஸ்யத்தை குறைக்க விரும்ப வில்லை.

படம் பற்றிய குறிப்புகளுக்கு இங்கே சொடுக்கவும்.

முழு படத்தையும் காண இங்கே சொடுக்கவும்.

பின் குறிப்பு ; படம் முழுக்க நிறைந்து கிடக்கிறது நிர்வாண அழகு என்பதால் முன் கூட்டி எச்சரிக்க வேண்டியது அவசியம்.  இது ஒரு 18+ படம். ஆனால் ஆபாசப் படம் அல்ல .

நம் பின் நவீனத்துவ எழுத்தாளர்கள் யாருமே இந்த மேஜிக்கல் ரியலிச படத்தை இன்னும் பார்க்கவில்லையா இல்லை இப்படி நிர்வாணங்கள் நிறந்த படங்களை எல்லாம் மக்களிடம் கொண்டு சேர்த்தால் ஆபாசம் என்று சொல்லி விடுவார்களோ என்று பயந்து விட்டார்களா என்று தெரியவில்லை.




Tuesday, October 14, 2014

தமிழ் பாஸ்போர்ட் !!!

என் அறை நண்பர்கள் ஈழத் தமிழர்கள். ஒருவர் மட்டக் களப்பு, மற்றொருவர் யாழ்ப்பாணம். மட்டக்களப்பு நண்பர் எனக்கு ஒரு எட்டாண்டுகளாய் தெரியும் அரசியல் , ஈழவிடுதலை, கருணாநிதி, ராமச்சந்திரன், ஜெயலலிதா, பிரபாகரனை விமர்சனம் செய்வது என்பதில் எனக்கும் அவருக்கும் மலைக்கும் மடுவுக்கும் எலிக்கும் பூனைக்கும் இருக்கும் ஒற்றுமை என்பது என்னைச் சுற்றி இருக்கும் நிறைய பேருக்கு தெரியும். எங்கள் இருவரையும் நட்பைத் தவிற வேறெதுவும் இணைக்கவில்லை.

சென்ற வாரத்தில் என் அறையில் தங்கியிருக்கும் யாழ் நண்பர் அவருக்கு தமிழ்நாடு இந்தியாவில் தான் இருக்கிறதா என்பது தொடங்கி பிரபாகரன் வரை பயங்கர அரசியல் பூகோள அறிவு ஆனாலும் அறியாமையில் இருக்கும்ஆட்கள் தமிழ் நாட்டுக்கு மட்டுமே சொந்தமா என்ன? ஆனாலும் அவர் என் அறையில் இருக்கும் இன்னொரு மலையாள நண்பரைக் காட்டிலும் பரவாயில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

மலையாளிகளின் அரசியல் என்பதுதான் சுயநல அரசியலையும் தாண்டி சுய சொரிதலுக்கான அரசியல் என்பது உலகப் பிரசித்தம். பிரபாகரனே மலையாளி என்பவர்கள் ஆயிற்றே அதோடு மாடுமல்ல உலகில் முதலில் நடக்கும் எல்லாம் மலையாளிகளால் தான் என்று இன்றும் ஐய்யப்பன் மேல் சத்தியம் செய்கிறார்கள். ஒருபக்கம் அச்சுவையும் உம்மன் சாண்டியையும் கடவுளுக்கு(?) நிகராக தூக்கிச் சுமப்பார்கள் பாஜகவின் ராஜகோபால் தோற்றுப் போன காரணத்துக்காகவே சசி தரூரை கேவலமாக்குவார்கள். அதெல்லாம் கிடக்கட்டும்.

நான் சொல்ல வந்ததே அது அல்ல. அந்த மலையாள நண்பரின் பாஸ்போர்ட்டை எதற்க்காகவோ பார்த்த யாழ் நண்பர் கேட்டாரே ஒரு கேள்வி "உங்கட பாஸ்போர்ட்டில மலையாளம் காணக் கிடைக்குதில்லயே இது மலையாளமா என்ன ? " என்று ஹிந்தியைக் காட்டி. குண்டு அங்கேதான் வெடித்தது. மலையாளர் (எல்லாம் ஒரு மரியாதைதான்) அவருக்கும் ஒரு நண்பர் வேலைதேடி வழக்கம் போல எங்கள் அறையில் இருப்பவர் ( எங்களின் அறைக் கதைகளை இங்கே சொல்ல ஆரம்பித்தால் அது ஜெயமோகனின் வெண்முரசை விட பெரிதாகக் கூடிய அபாயம் இருப்பதால் இங்கேயே அதற்கொரு தடா போடுவோம்). அவரும் சொன்னார்கள் "ஹிந்தி ராஷ்ட்ர பாஷை " அதுகொண்டு தன்னெ இந்தியன் பாஸ்பொர்டிலே ஹிந்தியும் இங்கிலீசும் மத்துறாமுண்டு"

நமக்குத்தான் மலையாளிகளை பேசிக்காகவே பிடிக்காது ஹிந்தியை அடிப்படையில் இருந்தே பிடிக்காது, ( என்ன ஒரு மொழி அறிவு என்று நீங்கள் சிரிப்பது என்னைப் பார்த்து அல்ல மக்களே நன்றாக சிந்தித்து பாருங்கள் பேருந்து நிறுத்தத்துக்கு வழி கேட்டால் பஸ் ஸ்டாப்புக்கு வழி சொல்லி இன்னொரு சக ஜீவியை பேந்த பேந்த அலைய விட்டவர்கள் தானே நீங்கள் ? ) இன்னொன்று இந்த இணையத்தில் புழங்க ஆரம்பித்த பிறகு தெரிந்தோ தெரியாமலோ தென்னிந்திய திராவிட அரசியலை படித்து படித்து ஒரு துளியாவது பருகி இருக்கிறேன், அதன் தாக்கம் என் செயல்களில் என் பேச்சுக்களில் தெரிக்கும், அது கேட்டு தெரித்தவர்கள் அதிகம் என்றாலும் அதிலெல்லாம் பார்வை செலுத்தாமல் நான் என் பாட்டுக்கு போய்க் கொண்டிருக்கிறேன்.

நான் அந்த  சரித்திர முக்கியத்துவமான வசனத்தை என் எட்டாண்டு கால இரண்டாண்டு இரண்டு மாத இரண்டு நாள் நண்பர்களிடம் சொன்னேன் " என்ன ஹிந்தி தேசிய மொழியா ? எவன்டா சொன்னான் இந்தியாவுக்கு அங்கீகரிக்கப்பட்ட மொழிதான் உண்டே தவிற அலுவல் மொழி எதும் இல்லைய்யான்னு   குஜராத்தில் கோர்ட்டில் சொல்லப்பட்ட உயர்நீதிமன்ற தீர்ப்பைச் சொல்லி இந்திய அரசியல் மொழி அரசியல் பூகோள அரசியல் இன்ன பிற இன அரசியல் எல்லாம் விளக்கி சொன்ன பின்னரும் அந்த ஈழ நண்பர்கள் கேட்டார்கள் ஏன் அண்ணா இந்திய பாஸ்போர்ட்டில் அந்த அங்கீகரிக்கப் பட்ட மொழி கூட இல்லை? என்று!

நியாயமான கேள்விதான் ! இலங்கை பாஸ்போர்ட்டில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் மூன்று மொழிகளும் உண்டு ஆனால் எல்லா விவரணைகளும் ஆங்கிலத்தில்தான் இருக்கும் என்பது  உலக வல்லாதிக்க சக்திகளின் சதி என்பது உலக அறிவு கொண்டவர்களின் பால பாடம். ஆனாலும் கூட ஒவ்வொரு நாட்டின் குடி மகனுக்கும் தான் வைத்திருக்கும் குடிஉரிமை அட்டையில் என்னதான் அப்படி எழுதி வைத்து தொலைத்திருக்கிறார்கள் என்பதை அறிய அடிப்படை உரிமை உண்டே அது கூடத் தெரியாமல் இந்தியாவெங்கும் இருக்கும் பல நூறாயிரம் மக்கள் ஆங்கிலமும் ஹிந்தியும் தெரியாமல் அடிப்படையில் தாங்கள் தங்களை அடையாளப் படுத்துவதற்காக வைத்திருக்கும் அந்த குடிஉரிமைச் சீட்டு யாரைக் கேட்டு இப்படி ஆங்கிலத்தையும் ஹிந்தியையும் மட்டும் தாங்கி தொங்கிக்கொண்டு இருக்கிறது?

சட்டபூர்வமாக ஹிந்தி தேசிய மொழி அல்ல ஆனால் அதைத்தான் நம் எல்லோர் தலையிலும் ஏற்றி இந்தியாவை ஹிந்தியா ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்

நிலவியல் , பன் மொழிக் கொள்கை, நேருவின் ஹிந்தி தினியாமை, காக்கைதான் தேசிய பறவையா என்ற எல்லா உதா "ரணங்களையும்" தாண்டி நாம் இன்னும் சிந்திக்க வேண்டிய செயல்கள் பல கோடி உண்டு!

என் கேள்வி எல்லாம் ஏன் இந்த பரந்த பல நாடுகள் ஒருங்கிணைந்த இந்தியாவில் பண் மொழி பேசும் இடத்தில் எவன் எந்த மொழி பேசும் இடத்தில் இருந்தோ அல்லது அந்த மாநில மொழிகளை விருப்ப மொழிகளாக பேசும், விரும்பும், அல்லது எனக்கு இந்த மொழியில்தான் குடியுரிமை வேண்டும் என்று கேட்பவர்காளுக்கு அவர்கள் விரும்பும் விருப்ப மொழியில் குறைந்த அளவுக்கு குடி உரிமையாவது கொடுக்கக் கூடாது?

இந்தியாவுக்கென்று அலுவல் மொழி என்பது ஹிந்தி அல்ல என்பது நிறுவப் பட்டுள்ளது என்பதை எல்லாம் வெளி நாட்டில் பாரத் பாஸ்போர்ட்டில் இருந்துகொண்டு ஜாங்கிரி ஜிலேபி இன்ன பிற கை முறுக்குகளை எங்களின் குடி உரிமை, கடவுச் சீட்டுகளில் தாங்கிப் போகும்  எங்களை பேசிக் கிழித்த எங்களை தூக்கித் தோரணமாய் தொங்கவிட்ட அந்த அறியாத யாழ் நண்பர் வாழ்க!!

Friday, August 15, 2014

ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமா?

1947 ஆகஸ்டு 15 இந்தியா,  பாகிஸ்தான் பிரிவிற்குப் பிறகான ஒரு தனி நாடாக கட்டமைக்கப் பட்ட பல்வேறு மொழிகள், கலாச்சாரங்கள், தேசிய இனங்கள், ஏழைகள், திருடர்கள், எளிய மக்கள் , ஏமாற்றும் கடவுள்கள், அவர்களை பயன் படுத்தும் மூடர்கள், அவர்களின் வயிற்றில் அமிலத்தை வார்த்த இடதுசாரிகள், திராவிட சித்தாந்த பேரலைகளை உண்டாக்கிய பெரியார்கள், இந்துக்களின் முகத்திரையை முடிந்த அளவுக்கு கிழிக்க முற்பட்ட பேராசான் அம்பேத்கர்.... இதற்கெல்லாம் மேல் இவரால் தான் இதனால்தான் என்று இன்று மோடியை கட்டமைத்த மீடியா பிம்பங்களின் ஒரே உருவமான திருவாளர் மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி.

இத்தனை சிக்கல்களுக்கும் மத்தியில்தான் இந்தியா இங்கிலாந்து என்ற ஒரு பேரரசில் இருந்து விடுபட்ட ஒரு சுதந்திர நாடாக பிரகடனம் செய்யப்பட்டது,  குண்டூசி முதல் குண்டி கழுவும் காகிதம் வரை பாகப் பிரிவிணைகள். சேர்களும் நாற்காலிகளையும் விட மனிதர்கள் அத்தனை மதிப்பு பெற்று பாகம் பிரிக்கப் படவேண்டிய பொருளாய் இல்லாத காலம்.

ஜவஹர்லால் நேருவும், இரும்பு மனிதர் படேலும் இந்தியாவை ஒரு குடையின் கீழ் கொண்டு வர முயன்று தங்களை பிரபல்யம் செய்துகொண்டிருந்தபோது ஒரு கோவணாண்டி மனிதர் கல்கத்தாவில் வழக்கம் போல முதல் தர உண்ணாவிரத நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருந்தார். அவரி நாடகத்தை வழக்கம் போல பேராசான் பெரியார் கிழித்து தொங்கவிட்டுக் கொண்டிருந்தார். பேரறிஞர் அண்ணா சில கோப தாபங்களால், கருத்து வேறுபாடுகளால் கருப்புக் கொடி தேவையில்லை எனக்கென்று கலகம் செய்து கொண்டிருந்தார், தமிழகம் ஒரு திரிசங்கு நரகத்தில் ராஜாஜியின் இந்தியாவின் முதல் கவர்னர் ஆட்சியின் கீழ் தொங்கிக் கொண்டிருந்தது.

போனவை போனதாகட்டும் நிகழ்காலத்திற்கு வருவோம், இப்படித்தான் சில ஆண்டுகளுக்கு முன்  அப்துல் கலாம் என்ற ஒரு புனித பிம்பம், இன்றைக்கு ஆளும் இதே பாஜகவால்,  உண்டாக்கப் பட்டு கட்டமைக்கப் பட்டும் அதன் பின்  கீதையும் ராமாயணமும்,  குரானிலும் பைபிளும் சொல்லாத புதிய அத்தியாயமான 2020 என்ற முழு ஹிந்திய தேசத்திற்கு வித்திட முயற்சித்த  அண்ணார் அப்துல் கலாம் . ஒரு இந்துவாக இருக்க நீ பிறப்பால் இந்துவாக இருந்தால் போதும் , இந்தியனாக இருக்க பிறப்பால் முசல்மானாகவும், வாழகையால் இரண்டு பங்கு இந்துவாகவும் இருக்க வேண்டும் என்று காஞ்சி காமகோடி  பீடத்தில் மண்டியிட்டு , நிரூபித்த மகான்.

இந்த கருமங்கள் எல்லாம் போய் சேர்ந்துவிட்டது என்று நானும் நீங்களும் கனவுகொண்டிருந்த வேளையில் , அன்னா ஹசாரே என்றொரு புனித பிம்பம் தன்னைத்தானே சுயம்புவாக உருக்கொண்டு, ஒரு புதிய அலையை உருவாக்கி,  தன்னை ஒரு நவீன உலக பெருமகன், தன் சீடர்கள் எல்லாம் எந்த கட்டுப் பாடுகளுக்குள்ளும் அடங்காத பிறவிகள் என்ற புதிய சட்டம் படைக்க முயன்று முற்றும் தோல்வி அடந்த அரவிந்த் கேஜ்ரிவால்களும்,  டெல்லியில் மண்ணைக் கவ்வியபோது பாபா ராம் தேவ்கள் ராக்க்கி சாவந்துகளுக்கு கங்கனம் கட்டவா இல்லை ராக்கி கட்டவா என்று சிந்தனை செய்துகொண்டிருந்தார்கள்.

இந்த கால கட்டங்களில் தான் ஈழப் போரும் அதற்கு ஆதரவாளர்களாக ஊடக பிம்பங்களால் கட்டமைக்கப் பட்ட லொட்டு லொசுக்கு இவர்களுக்கு ஆதரவாக உயிகளை இழந்த முத்துக் குமார்கள். இவர்களின் ஒரே எதிரியான தென் இந்திய திராவிட சித்தாந்தங்களின் ஒரே கடை ஆளான கருணாநிதியை நோக்கி திரும்பின. வெற்றி பெற்ற பக்கம் இருப்பதாக தங்களை கருதிக் கொண்டன.

அதுவும் போகட்டும் என்றுதான், தமிழகத்தில் திராவிடத்தை வீழ்த்தவென்றே ஊடக ரவுடிகளால் உண்டாக்கப் பட்ட சீமான்களும் சீமாட்டிகளும் பெரும் வெளிச்ச வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தார்கள், அப்போது அலைகளில் ஒதுங்கிய வைகோக்கள், பழ மாறன்கள் , சீமான்கள் , மணியன்கள், எல்லாவற்றுக்கும் மேல் கோட நாடு சீமாட்டி.

சீமாட்டிகளுக்கு சேவகம் செய்ய வந்த பிரவீன் குமார்கள், தேர்தல் ஆணையர்கள் வேடத்தில் வந்த தே...............................ர்தல் ஆணையர்கள்...  ஆனாலும் என் பேராசான் பெரியார் சொன்னது போல, ஒரு அடிமையிடம் இருந்து ஒன்னொரு அடிமையிடம் தானே நாம் சுதந்திரத்தை அடகு வைத்திருக்கிறோம்?

 ஆனால் இத்தனை இழிவுகளுக்கும் பின்னால் எனக்கு இந்தியா என்ற ஒரு உடோப்பியா தேசத்தை கொண்டாட ஆயிரம் காரணங்கள் உண்டு,  நான் வைக்கும் விமர்சனங்கள் என்பவை என் சக மனிதம் கொண்டாடும், மிக முட்டாள்தனமான கடவுள் மேல், அந்த கடவுளின் மூன்றாம் தர தரகர் மேல் இந்த தரகர்கள் மேல் அளவு மீறிய பற்று வைக்கும் முட்டாள் மாக்களும் வைக்கும் அன்புமேல் எனக்கும் ஒரு கோபம் இருக்கும். இதை எதைக் கொண்டு தீர்க்க?. மோடிகளும் காவிகளும் அரசாளும் நாடாக இருந்தாலும், எங்காவது ஒரு மூலையில் ஜனநாயகம் என்ற பேரால் சக மனிதர்கள் மேல் கொஞ்சமாவது துளிர்த்து நிற்கும் அன்பு.

இன்றும்  நாளையும் , இதைப் போலவே எழுதும் ஆயிரத்து சொச்சம் எழுத்தர்களும் இதுபற்றி எழுத ஆயிரம் காரணங்கள் உண்டு முற்றுப்பெறாத இந்த வியாக்கியானங்களை, விமர்சனங்களை என்னால் புறக்கணிக்க முடியாமல் இந்த அகண்ட தேசம் எனக்கும் ஒரு இடம் கொடுத்தது வெறும் இயல்பல்ல. நாளையே நான் முன் எப்போதோதோ இப்போதைய தமிழக முதல்வருக்கு எதிராக எழுதிய நிலைத் தகவல்களுக்காக கைது செய்யப் படலாம், இதே தமிழக முதல்வர் என் விடுதலைக்காக போராடவும் செய்யலாம், பிரபாகரனை கைது செய்து தூக்கில் இடுவோம், போரென்றால் பொதுமக்கள் சாகத்தான் செய்வார்கள், என்ற பித்தலாட்டம் போல, இதுவும் கடந்து போகும். இதே முதல்வர்,  தனித் தமிழ் ஈழம் ஒன்றே தமிழர்களின் நிரந்தர விடிவுகாலம்  இதை அடைவதே எமது குறிக்கோள் என்று போர் முழக்கம் செய்வதையும், அதை, நம் 56" மார்பகம் கொண்ட மோடிகளின், மார்புகளில் பார்ப்பதுவும்,  விதியா இல்லை இந்த பாமர மக்களின் மதியில் கொண்டு வந்து சுதந்திரம் என்ற  பெயரால் விவாதிக்கும் சதியா என்று தேடி தேடி பேசித் தீர்ப்போம் வா,

அந்த நாள் வரை... ஹேப்பி இன்டிபெண்டன்ஸ் டேய்ய்ய்ய்ய்ய்ய் !!

Tuesday, August 12, 2014

அம்மான்னா சும்மா இல்லடா!!!

எங்கள் இதயமே,
குருதியில் ஓடும் ரத்தமே,
நடுவில் இருக்கும் சென்டரே,
ஓரத்தில் இருக்கும் சைடே,
நதியில் ஓடும் ஆறே,
கடலில் இருக்கும் ஆழியே,
காற்றில் மிதக்கும் வாயுவே,
மூச்சில் இருக்கும் சுவாசமே,
கண்ணில் தெரியும் பார்வையே
இப்படி எல்லாவற்றிலும்
இரண்டிரண்டாக இருக்கும்
இரட்டை இலையின்
இயற்கை காட்சியே.
குதிரைக்கு ரெக்கை முளைக்க
வைத்த கோமகள் ஆட்சியே
எங்கள் தங்கத் தலைவியே
தன்னிகரற்ற முதல்வியே
மாண்புமிகு இதய தெய்வமே
எங்கள் நெஞ்சில் நிலைத்து நிற்கும்
பயமே....17 ஆண்டுகளாய் வாய்தா
வாங்கி சாதனை படைக்கப் போகும்
எங்கள் பெண் கஜினியே.

ஃப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பஆ ஆ ஆ மூச்சு விட்டுக்கொள்கிறேன். ஒரு முறை எழுதுவதற்கே நாக்கு தள்ளி விடுகிறது ஆனால் சலிக்காமல் மலைக்காமல் சட்டமன்றத்தில் எல்லா எதிர் கட்சிகளையும் கவனமாக கலாட்டா என்ற பெயரில் வெளியேற்றிவிட்டு ஆளுங்கட்சி நடத்தும் காமெடி தர்பார் மேலே நீங்கள் படித்த கவிதையை (?) விட மரண மொக்கையாக இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

110 விதி என்பதே இன்னொரு நாள் அவகாசம் இல்லாத அப்போதே அவையில் சொல்லிவிட வேண்டிய அறிவிப்புகளை எந்த வித எதிர்ப்பும் இல்லாமல் நிறைவேற்ற என்றே ஆட்சியாளார்களுக்கு ஒரு அவசரத் தேவைகளுக்காக உருவாக்கப் பட்டிருக்கிறது.

அம்மையார் ஆட்சியில் 110 விதி என்பதை எப்படி எல்லாம் பயன் படுத்துகிறார்கள் என்பதற்கு நகைச்சுவையாக ஒரு உதாரணம் சொல்ல ஆசைதான் ஆனால் அம்மையாரின் 100க்கும் மேற்பட்ட 110 அறிவிப்புகள் எல்லாம் நகைச்சுவைதானே? ஒரு அறிவிப்பு, இன்று முதலமைச்சர் ஆணைப்படி

//Statement No.036 of the  Chief Minister as per Tamil Nadu Legislative Assembly Rule 110 on new schemes for the development of Courts - 11.8.2014:

"ஜனநாயகத்தின் தூண்களுள் முக்கியத் தூணாக விளங்கிக் கொண்டிருக்கின்ற நீதித் துறை நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில், நீதிமன்றங்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளையும், நீதிபதிகளுக்கு தேவையான குடியிருப்பு வசதிகளையும் எனது தலைமையிலான அரசு ஏற்படுத்தித் தருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் புதிய நீதிமன்றக் கட்டடங்கள் மற்றும் நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் கட்டுவதற்காக, 225 கோடியே 19 லட்சம் ரூபாய் நிதியினை எனது தலைமையிலான அரசு ஒதுக்கியுள்ளது.//


மனசாட்சி இருப்பவர்கள் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். ஒரு மாநில முதல்வர் பதினேழு ஆண்டுகளுக்கும் மேலாக தன் மேல் நடக்கும் வழக்குகளை எப்படியெல்லாம் இழுத்து வளைத்து ஒடித்து வாய்தா மேல் வாய்தாக்களை வாங்கி இன்று வரை சட்டத்தை தன் கைப்பாவையாக்கி வைத்திருக்கிறார்.? அவர் ஆணைப்படி ஒதுக்கப் பட்ட தொகை குறித்தோ நீதி பாதிகளுக்கு ( எழுத்துப் பிழை இல்லை) வழங்கப் படும் சலுகைகள் குறித்தோ எனக்கு எந்த ஆதங்கமும் இல்லை.

ஆனால் சட்டத்தை தன் போக்கில் வளைத்து ஒரு மாமாங்கமாக நீதியில் இருந்து தப்பித்துக் கொண்டே இருக்கும் ஒரு முதல்வர் இருக்கும் மாநிலத்தில் ஏழைகள் நீதி என்பது எட்டாக் கனியாக அல்லவா இருக்கிறது?

மனல் கொள்ளையை தடுக்கப் போகும் காவலர், கொல்லப் படுகிறார். அரசு அறிவிப்பு இப்படி வருகிறது கடமையை செய்ய டிராக்டர் வண்டியில் ஏறிய காவலர் தவறி விழுந்து வண்டி ஏறியதில் அதே இடத்தில் மரணமடைந்தார். காவலரின் குடும்பத்துக்கு சில லட்சங்கள் உதவி.

சில காவலர்களால் சில பெண்கள் பாலியல் வன்முறையால் பாதிக்கப் படுகிறார்கள், அரசு அறிவிக்கிறது, சில லட்சங்கள் உதவி, இங்கே உயிருக்கும் மானத்துக்கும் நீதிக்கும் நீதிபாதிகளுக்குமே சில லட்சங்கள்தானே மதிப்பு?
இல்லையென்றால் ஒரு வங்கிக் கொள்ளையில் தொடர்புடையவர்களை கண்டறிந்து கைது செய்வதற்குப் பதிலாக இரவோடு இரவாக போட்டுத் தள்ளி புகழ் பெற்ற அமையார் காவல் துறையை கைய்யில் வைத்திருப்பது வெறும் வேடிக்கை விளையாட்டுக்காகவா என்ன? இந்த அழகில் எல்லா கொள்ளையர்களும் ஆந்திர மாநிலத்துக்கு தப்பி ஓடிவிட்டார்கள் என்று அறிக்கை விட்டிருப்பாரா? கொள்ளையர்களை கோட்டை விட்டதைத்தான் எத்தனை நாசூக்காக சொல்கிறார் பாருங்கள்.

ஆனால் ஆட்சியில் அமர்ந்தது முதல் ஆயிரத்தை நெருங்கும் கொலைகள், சில ஆயிரங்களை நெருங்கும் பாலியல் வன்முறைகள் பல்லாயிரங்களை தொட்ட பகல் கொள்ளைகள், என்று சட்டமும் ஒழுங்கும் சந்தியல்லவா சிரிக்கிறது?, யாரைப் பார்த்து வாக்களித்து சொந்த செலவில் வாய்க்கு அரிசியும் போட்டுக் கொண்ட அப்பாவி வாக்காளர்களான நம்மைப் பார்த்து.

1200த்தி சொச்சம் பள்ளிக் கூடங்களை மாணவர் எண்ணிக்கை குறைவால் அம்மையார் மூடப் போவதாக ஒரு செய்தி வந்தது. நமக்கு அதெல்லாம் எதற்க்கு அம்மா திரையரங்குகள் திறந்தால் அதில் எஜிஆர் படம் பார்த்தால் போதுமல்லவா? மக்கள் பயனுற அம்மா மருந்தகங்கள். ஆரம்பித்த நாளில் கேள்விப் பட்டதோடு சரி இப்போதும் அதில் மருந்துகள் கிடைத்தால் ஒரு நல்ல தலைவலி மாத்திரை வாங்கி போட்டுக் கொண்டு உறங்கி விடுங்கள்.

அரசன் எவ்வழி மக்களும் அவ்வழி என்று முட்டாள் தனமாக எவனோ சொல்லி வைத்தான் டாஸ்மாக்கை தெருவுக்குத் தெரு திறந்து வைக்கும் அரசாங்கம் ஆண்டுக்கு 20000 கோடிகளுக்கும் மேல் லாபமாக ஈட்டுகிரதாம் கேட்டால் நலத்திட்ட உதவிகளை இதன் மூலம் தான் நிறைவேற்றுகிறதாம். இதைவிட ஒரு நல்ல தொழில் இருக்கிறது , ஆணுறைகளை மட்டும் இலவசமாகக் கொடுத்து ஆட்களை வெளிநாட்டில் இருந்து தருவித்து விட்டால் போதும் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும்.

அதில் கிடைக்கும் லாபத்தில் அம்மா எயிட்ஸ் நோய் கட்டுப்பாட்டுக் கழகம் என்று ஒன்றை 110 விதியின் கீழ் ஆரம்பித்து விட்டால் போகிறது.

எத்தனையோ திட்டங்கள் அறிவிப்போடு கிடக்கின்றன பள்ளித் திட்டம் எதுவும் இல்லை , சட்டம் ஒழுங்கு சரியில்லை, ரேஷன் அரிசிகள் அளவை குறைக்கிறார்கள், பஸ் கட்டணம் பால் விலை உயர்கிறது. பள்ளிக் கூடங்கள் மூடப் படுகின்றன லாப் டாப் கிடைக்கிறது மின் வெட்டு உயர்கிறது பேனும் மிக்ஸியும் பரண் ,மேல் பூணைக் குட்டிகளோடு உறங்கிக் கொண்டிருக்கிறது.

டாஸ்மாக் தமிழன் ஒரு க்வாட்டரும் அம்மா இட்லி கடையும் இருந்தால் போதுமென்று முழு போதையில் வெயிலுக்கு இதமாக மரத்தடியில் மல்லாந்து கிடக்கிறான்.





பின் குறிப்பு : இனையக் குற்றங்களை குண்டர்கள் சட்டத்தின் கீழ் கொண்டுவருகிறார்களாம். இப்போது தெரிகிறதா? ஆரம்பத்திலேயே ஏன் அபிராமி அந்தாதி பாடினேன் என்று?

Tuesday, August 05, 2014

ஆப் கி பார்..... அரசாங்கமா இல்லை ஆர்.எஸ்.எஸ் சாங்கமா?

மோடியின் அரசாங்கம் பதவியேற்ற இத்தனை நாட்களில் குறைந்த பட்சம் மக்கள் நலத் திட்டங்கள் என்று விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் கூட ஒரு திட்டத்தை வகுக்கும் அளவுக்கு வக்கில்லாமல் மோடி தர்பாரில் காற்றாடிக் கிடக்கிறது.

சூப்பர் மேன் , ஸ்பைடர் மேன் அளவுக்கு மோடியை, ஆஞ்சநேயர் அளவுக்கு ஊதிப் பெரிதாக்கிய ஊடகங்களும் பாஜக தலைவர்களும் வாயைத் திறந்தாலே முத்துக்களை உதிர்க்கும் மோடிகளும் கூட மூடிக்கொண்டு கிடப்பது காலத்தின் கோலம் மட்டுமல்ல அவர்கள் மட்டும் என்ன வைத்துக் கொண்டா வஞ்சனை செய்கிறார்கள்?

தேர்தலுக்கு முதல் நாள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டபோதே தெரிந்து விட்டது மோடியின் அரசாங்கம் எப்படி இருக்கப் போகிறது என்பது. இத்தனை நாட்களில் மோடியின் குஜராத் மாடல் ஃபேக் அரசாங்கம் கிழித்ததெல்லாம் காங்கிரசின் கொள்கைகளை இவர்கள் காப்பி அடித்தது மட்டுமல்லாமல் அதை கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல், ஈழ விவகாரம் முதல் கட்சத் தீவு வரை, சுவிஸ் வங்கியின் கருப்புப் பணம் முதல் ரயில்வே கட்டணம் வரை, பெட்ரோல் முதல் மரபணு மாற்றப் பயிர் வரை என்று ஏகபோகமாய் விளையாடிக் கொண்டே ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது.

அன்னிய முதலீட்டில் அவர்கள் படிப்படியாக உள்ளே விட்டார்கள் என்றால் பாஜக ஒட்டு மொத்தமாக கதவைத் திறந்து விட்டிருக்கிறது. ராணுவம் முதல் இன்ஸூரன்ஸ் வரை, ரயில்வே தொடங்கி, கக்கூஸ் கழுவுவது வரை, ரீடெய்ல் மார்கெட்டிங்கில் 100 சதவீதத்துக்கு பொங்கிய பாஜக இப்போது அதைத்தானே செய்து கொண்டிருக்கிறது?

இவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்புவரை அமீரக திர்ஹம் 1= ரூ14+ ல் இருந்தது இப்போது அது 16+க்கு எகிறி இருக்கிறது என்ன ஒரு முன்னேற்றம்?

கம்யூனிஸ்டுகள் பேசுவதற்கும் வழியில்லை காங்கிரஸ் பேசவே பேசாது.

அரசாங்கம் நஷ்டப் பட்டால் மக்களைத்தானே பாதிக்கும் என்ற பாஜக சொல்வதில் ஒரு கார்ப்பொரேட் தனம் இருக்கிறது. கார்பொரேட் முதலாளிகளின் அரசாங்கமாகத்தானே இது வரை மோடியின் அரசு இருக்கிறது?, அதானிகளும் அம்பானிகளும் ஆட்சியில் இருந்தால் என்ன நடக்கும் என்பதை மோடி காட்டிக் கொண்டிருப்பது மட்டும் தான் உண்மை.. இது கார்பொரேட்களின் அரசாங்கம் என்பதை வாரா வாரம் உயர்த்தப் படும் பெட்ரோல் டீசல் விலையேற்றம் காட்ட வில்லையா?

வெளியுறவுக் கொள்கைகளில் அகன்ற 56 " மார்பு கொண்டவரின் கொள்கைகளைத்தான் பார்த்தோமே. இலங்கை விவகாரத்தில் மோடி வந்தால் எல்லாம் சுபிட்சம் ஆகும் என்ற தேர்தல் பிரச்சாரத்தில் மக்களை முட்டாளாக்கி பாஜகவின் வாக்கு வங்கி கூடிப் போனதாக பேசிய தரகர் தமிழருவி மணியன் 45 ஆண்டுகால (?) அரசியல் வாழ்வில் பாஜகவின் அடிப்படைக் கொள்கைகள் கூட தெரியாத அளவுக்கு மதி மயங்கிப் போனது உச்ச கட்ட காமெடி.

மக்களாட்சி என்பது அதிகாரம் ஒருவரிடம் குவிந்து போகாமல் பரவலாக்கப் பட வேண்டுமே தவிர இப்படி ஒட்டு மொத்தமாக எல்லா மட்டத்திலும் ஒரு கட்சியே ஆட்சியில் இருப்பதனால் ஏற்படப் போகும் விளைவுகளை இன்னும் 4 ஆண்டுகளுக்குள் மக்கள் புரிந்துகொள்வார்கள் என்று திடமாக நம்புகிறேன்.

அதற்கான அறிகுறிகள் தான் ஹிந்தியை அலுவல் மொழியாக்க முயற்சி சமஸ்கிருத வாரம் என்று ஆர் எஸ் எஸ் ன் அகண்ட பாரதம் என்ற கொள்கையை சத்தமே இல்லாமல் நிறைவேற்ற தயார் ஆகிறது மோடியின் அரசு. அதை மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் படிப்படியாகச் செய்யும் படேலுக்கு சிலை வைக்க பல நூறு கோடிகளை ஒதுக்கும் அரசாங்கம் கழிவரை வசதிகளுக்கும் கல்விக்கும் ஒதுக்கும் தொகை என்பது மிகச் சொற்பம்.

 காங்கிரஸ், அதிமுக. இரண்டுமே மக்களுக்காக இனி நாடாளு மன்றங்களில் பேசப் போவது இல்லை. அதிமுகவுக்கு நாடாளு மன்றத்தில் நரேந்திர மோடியை காய்ச்சி எடுப்பதை விட அம்மா புராணம் பாடினாலே போதும். அதைத்தான் அவர்கள் செய்யப் போகிறார்கள்

காங்கிரசுக்கு உள்ளுக்குள் மகிழ்வாகக் கூட இருக்கும்! அது பாஜக செய்யப் போகும் தவறுகளை சுட்டிக் காட்டாமல் காத்திருந்து அடுத்த தேர்தலின் போது கூடாரம் கலகலக்கும் நேரத்தில் உள்ளே புகுந்து கொள்ளலாம் என்று காத்திருக்கிறது அதற்குள் இருக்கிற குட்டி குட்டி மாநில கட்சிகளை மறுபடியும் ஓரணியில் திரட்ட வேண்டிய அவசியமும் தேவையும் அதற்கு இருப்பதால் மக்கள் பிரச்சினைகளை பேசும் அளவுக்கு அவர்களுக்கு நேரம் இல்லை.

மக்கள் செய்ய முடிந்தது ஒன்றே ஒன்றுதான் ஓட்டுப் போடும் முன்பாவது ஒரு நிடம் சிந்தித்து பார்க்க வேண்டும் இல்லையென்றால் இப்போதும் இன்னும் வரப் போகும் 4 ஆண்டுகளிலும் அனுபவிக்கப் போவதை அனுபவிக்க தயாராய் இருக்க வேண்டும்.

#ஆப் கி பார்.......ஆர்.எஸ்.எஸ் சர்கார்

Thursday, July 17, 2014

நாத்திகம், பகுத்தறிவு பேசாமல் சமூக நீதி சாத்தியமாகுமா?

சில வாரங்களாகவே முகநூலெங்கும் தோழர்கள் குறிப்பாக திமுக உடன்பிறப்புகள் உட் கட்சி மோதலோ என்னவோ என்று நினைக்கும் அளவுக்கு நாத்திகம், பகுத்தறிவு,சமத்துவம், சமூக நீதி என்ற தளத்தில் தொடர்ச்சியாக ஒரு விவாதத்தில் ஈடுபட்டுக் கொள்ளுகின்றனர்.
இதை எப்படி எடுத்துக் கொள்வது என்று எனக்கு இன்னும் தெரியவில்லை. அடிப்படை சமூக நீதிகள் மறுக்கப்பட்டு அதற்கெதிராக கிளர்ந்தெழுந்த தென்னிந்திய நல உரிமைச் சங்கமான நீதிக்கட்சியின் தொடர்ச்சியாக திராவிடர் கழகமும், கேட்கும் இடத்தில் இல்லாமல் சமூக நீதியை கொடுக்கும் இடத்தில் இருந்தால் தான் எதுவும் எளிதில் சாத்தியமாகும் என்ற அண்ணாவின் ஏற்பாட்டுக்கு இணங்க ஆரம்பிக்கப் பட்ட திமுக என்று இது ஒரு சமூக நீதிக்கான தொடர்ச்சி மட்டுமே.
சமூக நீதி சமத்துவம் எல்லாம் ஏன் மறுக்கப் பட்டன ? அவற்றுக்கான தீர்வு என்ன என்று தேடித்தேடி தேய்ந்த சமூக சமத்துவ முன்னோர்களான டி.எம்.நாயர், பி.டி தியாகராயர், முனுசாமி நாயுடு, போன்றவர்களும் அவர்களின் தொடர்ச்சியான தந்தை பெரியாரும் வளர்த்தெடுத்த தத்துவார்த்தமான சிந்தனைகளே திராவிடச் சிந்தனைகளானது. பின்னர் திராவிடர் கழகமான பின் தேர்தல் அரசியலில் இருந்து தன்னை முற்றாக விடுவித்துக் கொண்ட தி.க சமத்துவம் சமூக நீதி ஆகியவற்றை வெல்ல வேண்டுமானால் முதலில் இவற்றுக்கு முட்டுக் கட்டையாக இருக்கும் சாதிய கட்டுப் பாடுகளையும் அதை மிகக் கவனமான ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்து மனு தர்ம ஆட்சியை நிலை நாட்டும் பார்ப்பனீயத்தையும் ஒழிப்பதே ஆகும் என்றனர். இதே கொள்கைகளை சமூக நீதியை கொள்கை அளவில் காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அதை ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோதே அடிமக்களுக்கும் படிப்பறிவு என்ற ஒற்றைக் காரணத்தாலே மட்டுமே பெரியாரால் காமராஜ் கொண்டாடப் பட்டார்.
கருத்து வேறுபாடுகளால் பிரிந்தாலும் , சமத்துவம் சமூகநீதிக் கொள்கை அளவில் ஒன்றாகவே இருந்த திமுக ஆட்சிக்கு வந்ததும் அண்ணா திராவிடக் கொள்கைகளையே ஆட்சி அதிகாரங்களில் செயல் படுத்தினார். அதன் நீட்சியாக வந்த கருணாநிதியும் பெரியார் அண்ணா வழியில் நின்றே அதனை செயல்படுத்த முனைந்தார்.
"சாதி மதப் பித்து என்னும் சனி தொலைந்தால்தான் சமத்துவம் எனும் ஞாயிறு பிறக்கும் " என்ற கலைஞரின் தொண்டர்களான நாம் இன்றும் அதனை கடைபிடிக்கிறோமா?
எனக்கென்னவோ இல்லை என்றே தோன்றுகிறது.
சமூக நீதி கிடைக்காமல் போனதன் அடிப்படையே சாதியும் மதமும்தான் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடுகள் இருக்க முடியாது அந்த சாதியும் மதமும் இன்றும் கட்டிக் காக்கப் படுவது கடவுளின் பெயரால் சமத்துவமாக இல்லாத சாமிகளால் என்ன சமூக நீதியை படைத்துவிட முடியும் ?, இந்த சாமிகளின் பெயரால் சாதிகளையும் அதன் வழிபாட்டு நெறிகளையும் ஒரு கட்டுக்குள் வைத்திருக்கும் பார்ப்பனீயம் என்று இது ஒரு விஷ வலைப் பின்னல். 
சமூக நீதியை நிலை நாட்டவே திமுக, பகுத்தறிவு பேச்சால் மட்டுமே தன்னை வளர்த்துக் கொண்ட ஒரு இயக்கம் அதற்க்காக போராடியே ஆட்சியை அடைந்த கழகம்,

//என் உடல் நிலைமை மிக மோசமாகி விட்டது. நினைவு சரியாக இல்லை. மறதி அதிகம். கண், காது சரியாக இல்லை. கால்கள், நடக்கவே முடிவதில்லை. அசதி அதிகம். இப்படிப்பட்ட நிலையிலும் சற்று மகிழ்ச்சி, சிறிது உற்சாகம் கொள்ளுகிறேன் என்றால், இன்று நமக்கு வாய்த்திருக்கும் தி.மு.க. ஆட்சிப் பணிகளால்தான்.காரணம் என்னவென்றால், இதன் முன்னர் இருந்த ஆட்சியின் யோக்கியதைகளை அவைகளால் நாட்டுக்கு சமுதாயத்திற்கு ஏற்பட்ட கேடுகளை ஒழித்துக் கட்டாததால் சமுதாய விஷயத்தில், ஜாதி அமைப்பு விஷயத்தில், கல்வி விஷயத்தில் எப்படி நடந்து கொண்டார்கள்; என்ன கொள்கை மேற்கொண்டார்கள் என்பவைகளைச் சிந்தித்தால் தெரிய வரும்.
ஏதாவது பொல்லாத வாய்ப்பால் இப்போதைய இந்த தி.மு.க. ஆட்சிக்கு ஏதாவது மாறுதல் காலம் ஏற்பட்டால், வேறு எந்த ஆட்சிவரும், அதன் பலன் என்ன ஆகும் என்பவைகளை சிந்தித்தால் பெரும் பயம் ஏற்படுகிறது. // பெரியார் -1972 விடுதலை மலரில்.
ஆக சமூக மாற்றங்களுக்காகவும் சமத்துவ நீதிக்காகவும் உண்டான ஒரு இயக்கத்தின் தொண்டர்கள் நாத்திகம் பேசுவதையும் சாதி மத வேறுபாடுகளை பேசுவதையும் ஊக்குவிக்கத்தான் வேண்டுமே ஒழிய இவற்றால் நாம் ஓட்டு வங்கியை இழக்கிறோம் என்பதோ இல்லை இதனால் ஆட்சியை இழக்கிறோம் என்பதோ அறிவானதல்ல.
யாருக்கும் சுயமரியாதை கிடைக்க பாடுபடுவதே திமுகவின் அடிப்படைக் கொள்கை என்பதை உணரவேண்டுமே ஒழிய பகுத்தறிவு பேசாதே என்பது அல்ல. நாத்திகமும் பகுத்தறிவும் பேசாமல் எந்த நீதியும் சாதியின் கட்டுப்பாட்டால் மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கும் இந்த நாட்டில் சாத்தியம் இல்லை. 
நாத்திகம் பேசாதே என்பதை விட கடவுள் நம்பிக்கை உள்ள திமுக ஆத்திகவாதிகள் ஏன் கலைஞரின் அணைவருக்கும் அர்ச்சகர் ஆகும் உரிமைக்காகவும், கருவறை நுழைவுக்கான உரிமைகளை முன்னெடுத்துச் செல்வதற்க்காகவும், ஆத்திகவாதிகளால் மக்களை மூட நம்பிக்கைக்களுக்குள் தள்ளப் படும் கொடுமைகளைப் பற்றியும் பேசக் கூடாது? பகுத்தறிவை பேச நாத்திகவாதியாய் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் நாத்திகம் பேச கடும் பகுத்தறிவு வாதம் தேவைப் படுகிறது.
தேர்தல் அரசியலை மீறி அதில் அடையும் வெற்றி தோல்விகளை தாண்டி திமுக என்னும் கட்சியை அதன் கொள்கைகள் மட்டுமே இந்திய அளவில் மாறுபடுத்துகின்றது. அது நாத்திகமா பகுத்தறிவா என்பதெல்லாம் அவர் அவர் சிக்கல். ஆனால் நாத்திகமும் பகுத்தறிவும் பேசாமல் , சமத்துவம் சமூக நீதிக்கான பெண்ணுரிமைக்கான எந்தக் கல்லையும் புரட்டிவிட முடியாது. அடிப்படைத் தத்துவங்கள் இல்லாமல் போனால் திமுக ஒரு அதிமுகவாக ஆகிவிடும் அபாயம் இருப்பதை உணர வேண்டும். அதை விட பாஜக கொள்கைகளே மேல்.
அதற்க்காக சிலை உடைப்பு போராட்டம் நடத்த வேண்டாம், அந்த சிலைகளை வழிபடும், அர்ச்சிக்கும் உரிமைகளை பேசுவோம்.


Wednesday, July 16, 2014

ஓடு காலியும் ஓடு காலியும்.

சட்டமன்ற கூட்டத் தொடரில் ஒரு அசிங்கம் அரங்கேறியுள்ளது. அசிங்கங்களே ஆட்சியில் இருக்கும் நாட்டில் இது என்ன ஒரு பெரிய அதிசயம் என்று கேட்டுவிடாதீர்கள் ஆனால் அந்த அசிங்கத்தின் பின்னால் ஒளிந்திருக்கும் இலக்கியச் சுவை வேறெந்த இலக்கியவாதிகளாலும் புரிந்துகொள்ள முடியாதது.

ஓடுகாலி என்று எதிர்கட்சியை பார்த்து ஆளுங்கட்சியின் ஜிங் ஜக் மேஜை தட்டும் மங்குனிப் பாண்டியன்கள் சொல்கிறார்கள், வானளாவிய அதிகாரம் கொண்ட பதவியில் இருப்பவரும் அந்த ஓடு காலி வார்த்தை ஒன்றும் அப்படி ஒரு கெட்ட வார்த்தை அல்ல என்று சபைக் குறிப்பில் அனுமதிக்கிறார், இதைக் கேட்ட வானளாவிய அதிகாரம் கொண்டவரின் அதிகாரத்தை நள்ளிரவில் கூட குட்டி  எழுப்பி தட்டிப் பறிக்கும் வல்லமை கொண்ட மாண்பு மிகு அதிகாரம் கொண்டவரும் 'குலுங்கி, குலுங்கி" சிரிக்கிறார்.

(இதுவே கலைஞராய் இருந்திருந்தால் நாங்கள் சொன்னது கஜானாவை , அதிமுக ஆட்சியை விட்டுப் போகும் போது ஓடு காலியாகத்தான் இருந்தது என்று நச் பஞ்ச் அடித்திருப்பார். அதெல்லாம் இவர்களுக்கு கலைஞரிடம் வாங்கிக் குடித்தாலும் வராது.)

சட்டமன்றம் முற்றாய் சந்தைக் கடையாய் மாறிப் போகிறது. இது ஜனநாயக நாடய்யா அப்படித்தான் இருக்கும் என்று வாதிடவேண்டாம் நண்பர்களே உங்கள் மனசாட்சியை தொட்டுச் சொல்லுங்கள். அப்படி ஒரு வஸ்து இங்கே இருக்கிறதா என்ன?

ஜனநாயகத்தின் தூண்கள் என்று தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும் இந்த நாட்டின் முதுகெலும்பில்லாத விளம்பர வருவாயைக் கொண்டே வயிறு வளர்க்க வெறும் வாயைக் கூட மென்று கொண்டே இருக்கும் எந்த மானமுள்ள பத்திரிகையும் இது பற்றி வாயே திறக்கவில்லை என்பது தற்செயலானதா என்ன?

நயன் தாரா யாரோடு லவ்வுகிறார், விஷால் திருட்டு விசிடியை தட்டிக் கேட்டார், என்று விளக்கு பிடிப்பதற்கே அவர்களுக்கு நேரம் சரியாய் இருக்கிறது. இந்த லட்சனத்தில் மவுலி வாக்கம் கட்டிட விபத்து வேறு 61 பேர்தானே போனார்கள் நல்லவேளை என்று எதையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை பத்திரிகைகள் அடைந்துவிட்டன.

எங்கோ பெயர்தெரியாத நிர்பயாவுக்கு ஒன்றென்றதும் மாதக் கணக்கில் மைக்கில் புலம்பிய பாண்டேக்கள் ஒரு நாளாவது தமிழ்நாட்டில் தினம் நடக்கும் இதுபோன்ற செயல்களை வாய் திறந்து பேசுகிறார்களா?

இந்த லட்சணத்தில் இருக்கும் ஊடகங்கள் எதைத்தான் மக்களுக்கு சொல்ல வருகின்றன என்பதை விட எதற்க்காக எவர்களால் நடத்தப் படுகின்றன?
அதுவும் சரிதான் வாரம் ஒருமுறை உங்களை சந்திப்பேன் என்றவரிடம் ஏனம்மா எங்களை மாதம் ஒரு முறைக் கூட சந்திக்கவில்லை என்று கேட்க திராணியற்ற வீராதி வீரர்கள் தானே .

டிஆர்பி ரேட்டிங்கில் முன்னுக்கு வந்தால் விளம்பரத்தை கூட்டி வருமானம் பார்க்கலாம் அவ்வளவுதான் நமக்கான  ஊடகங்களாக நம்மை நாமே மாற்றிக் கொள்ளாத வரை ஆண்ட கட்சியின் ஆளும் கட்சியின் சொந்த ஊடகங்களும் அவற்றின் சொம்பு ஊடகங்களும் விளம்பர வருவாய் டிஆர்பி ரேட்டிங் மட்டும் குறிக்கோளாய் கொண்டு  நம் வாயில் தொடர்ந்து பாலூற்றிக் கொண்டே இருக்கும் நாம் லட்ஷ்மிமேனன் பத்தாவது பாஸாம்ல ? நஸ்ரியாவுக்கு கல்யாணமாம்ல என்று வலைத் தளங்களில் மொக்கை போட்டுக் கொண்டிருப்போம்.

பின் குறிப்பு: மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு வந்திருக்கிறேன் இனி இங்குதான் இருப்பேன்.