Monday, November 26, 2007

காணாமல் போனவர்கள் -புதிர் பரிசுப் போட்டி

காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு.

குறிப்பு 1 : நீண்ட நாட்களாக அசராமல் அடித்து ஆடிக் கொண்டிருந்தார். தன் மேல் சாதி முத்திரையையும் குத்திக் கொண்டார். இவர் நகைச்சுவை மன்னன் தண்ணி காட்டுவதில் அண்ணன். திடீரென்று பரபரப்பை ஏற்படுத்துவார். கூட்டம் சேர்ந்து குமுறுவார்கள் என்று நினைத்தால் பதுங்கிவிடுவார். இன்னும் ஸ்டேட்டஸ் லைவாகத்தான் இருக்கிறது. இவர் காட்டானா ? நாட்டாமையா ? நல்லவரா ? அவர் யார் ?

குறிப்பு 2 : கோழிபிடிப்பது, தேங்காய் பொறுக்குவது செய்தாலும் இவரும் ஒரு கதாநாயகன் தான். இவரோட மொக்கையே வெள்ளிவிழா கொண்டாடும் அளவுக்கு ரசிக்கப்பட்டு இருக்கிறது. இவர் ஒரு மாதிரியானவரா ? இவர் டவுசரை பலரும் கழட்டிவிட்டார்கள். இப்போது எங்கே செட்டில் ஆனார் என்று தெரியவில்லை. ஆயாவைத்தான் இவருக்கு மிகவும் பிடிக்கும் ஐ மீன் அம்மா.

கண்டுபிடிப்பவர்களுக்கு இலவசமாக 'நச்சுன்னு' 2 அழகிய தமிழ் மகன் பட நுழைவு சீட்டு கொடுக்கப்படும்.

Saturday, November 24, 2007

விசயகாந்துக்கு ஒரு வில்லங்க கடிதம் !

அய்யா வணக்கம்ங்க!
நான் குவாட்டர் கோவிந்தன், கொஞ்சநாளா காணாம போயிட்டு இப்போதான் திரும்ப வரேனுங்க. ரொம்ப நாளாவே உங்களுக்கு ஒரு கடுதாசி எழுதனும்னுதான் முயற்சி பன்றேன் ஆனா பாருங்க சேது சமுத்திரம், குஜராத் படுகொலை, தமிழ்ச்செல்வன் மரணம்னு ஒரே அல்லோலகல்லோலமா போச்சி அதனால இப்போதான் உங்களுக்கு எழுத முடியிது.
சரி நம்ம கதை எதுக்குங்க உங்களுக்கு சொல்லவேண்டியத நான் சொல்லிட்டு போறேனுங்க. வர வர கொஞ்சநாளா எனக்கு உங்க பேட்டிய படிச்சா உங்கமேல ஒரு மதிப்பு வரதுக்கு பதிலா காமெடி காலனி லூசுப்பையன் பேட்டி படிச்ச மாதிரி ஒரே சிரிப்பா வருதுங்க ஏன்னா உங்க பேச்சு அப்படித்தான் இருக்குங்க.
அரசாங்கம்ன்னா என்னமோ நீங்க அபூ ஹை ஆபூ ஹைன்னு சண்டை போடுறது போல அவ்ளோ ஈசி கிடையாதுங்க. அது உழைச்சாத்தான் கைக்கு கிடைக்கும். நாப்பத்தி ஒம்போதில கட்சி ஆரம்பிச்ச அண்ணா பதினெட்டு வருசம் கழிச்சித்தான் ஆட்சிய பிடிக்க முடிஞ்சது இதுக்கு அவங்க எல்லாரும் ஏற்கனவே ஏகப்பட்ட தியாகங்களை செய்திருந்தாங்க நீங்க உங்க மண்டபத்த தியாகம் பன்னினதா சொத்தை தியாகம் பன்னினதா சொல்லிச் சொல்லியே ஆட்சிய பிடிக்கலாம்னு யோசிக்கறீங்க.
இதெல்லாம் கிடக்கட்டும் விருத்தாசலத்தில் நீங்க கண்டிப்பா தோத்துத்தான் போவீங்கன்னு இருந்தப்போ ஜெயிச்சி வந்தீங்க அது உங்களுக்கு கிடைச்ச வெற்றிதான் இல்லேங்கலே ஆனா அதுக்கு பொறவு அந்த பக்கமே உங்களை பாக்க முடியலேன்னு சிலர் சொல்றாங்க ! கேட்டா ஷூட்டிங் போயிட்டதா சொல்றாங்களாம். விருத்தாசலம்தான் இனி என் ஊருன்னு சொன்னீங்க அட அங்கயே தங்கலைன்னாகூட ஒரு மாசத்துக்கு ஒரு தடவை போயிட்டு வரலாம்ல உங்களுக்கு எங்க நேரம் இருக்கு?. அரசாங்கம் படத்துக்கு டப்பிங் பேசனும் அடுத்த படத்துக்கு கதை புடிக்கனும்னு அலைஞ்சா ஒன்னுக்கும் நேரம் கிடைக்காதுங்க.
இதுபத்தி (குமுதம்) கேட்ட காலேஜ் பசங்ககிட்ட ஏன் கலைஞ்ர் கூட இன்னும் கதை எழுதறாரேன்னு கூலா சொல்றீங்க ஆமா அவரு எழுதுறாரு ஆனா தன்னோட அலுவல்களை ஒதிக்கிட்டு எழுதலீங்க இன்னிக்கும் அதிக நேரம் உழைக்கிற ஒரு அரசியல் தலைவர் இவர்தான். ஆனா நீங்க? மூனு மாசமா சூட்டிங், அரசியல் மாநாடு ஒரே டென்சன் ஓய்வே இல்லன்னு சொல்லி இராக்கு, துபாய்னு குடும்பத்தோட கெள்ம்பிடறீங்க. ஆனா கலைஞர் ஓய்வுக்காக இந்தியா தாண்டியதா நான் என்னோட வயசுக்கு கேள்விப்பட்டதில்ல.
இரண்டு கழகமும் தமிழ்நாட்ட கெடுத்துச்சின்னு சொல்லிட்டு நீங்களும் தே.மு.தி.கன்னு கட்சிப்பேர் வைக்கும்போதே தெரிஞ்சு போச்சிங்க உங்களுக்கு ஒன்னும் புதுசா அரசியல் பன்னத் தெரியாதுன்னு ஏன்னா திராவிடம்ங்கிர பேர வச்சு இங்கே அரசியல் பன்ன எந்த தகுதியும் உங்களுக்கு இல்ல.
நானும் திராவிடந்தான்னு நீங்க சொல்லிக்கலாம் ஆனா திராவிடன் அப்படீன்னா கருப்பா தென்னிந்தியாவுல பொறந்து திராவிட மொழிகளை பேசுனா மட்டும் திராவிடனாகிட முடியாதுங்க. அதுக்கு முதல்ல திராவிட கொள்கைகளை புரிஞ்சிக்கனும். உங்களுக்குன்னு ஒரு தனி கொள்கை வச்சுக்கனும் . ஒருவேளை எந்த கொள்கையும் வச்சுக்க கூடாதுங்கறதுதான் ஒங்க கொளுகையோ என்னமோ யாருக்கு தெரியும்.
சேது சமுத்திர விவகாரத்தை கலைஞர்தான் ஊதி பெருசாக்கிட்டதா சொல்றீங்க ஆனா நீங்க உங்களுக்குன்னு ஒரு கருத்து வச்சிருப்பீங்களே அத சொல்லுங்கய்யா. வேணுமா இல்லே வாணாமான்னு அத வுட்டு "வரும் ஆனா வராதுன்னு " காமெடி பன்றீங்க.
வாரிசு அரசியல் பத்தி வாய் கிழிய பேசுறீங்க ஆனா உங்க அரசியல் வண்டவாளம் எல்லாம் ராமுவசந்தன் பிரேமலதான்னு சுத்துதேன்னு கேட்டா வாயையும் இன்னொன்னையும் தொறக்காம "அவங்க என் உதவிக்கு இருக்காங்கன்னு சொல்றீங்க " மத்தவங்களும் அப்படித்தான்க. ஜெவுக்கு சசி கலைஞருக்கு ஸ்டாலின் :)
மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் மாணவர்களுக்கு ஆதரவா பேசுன நீங்க அரசாங்கம் மேலும் ஒரு ஆண்டு அதிக படிப்பை கட்டாயப் படுத்த கூடாதுன்னு சொல்றீங்க ஆனா ஒரு வருசமாவது கிராமங்களில் பணிபுரிய வேண்டும்னு சொல்றீங்க. அரசாங்கமும் (உங்க படமில்லைங்க) அதேதான் சொல்லுது. எனக்கு இப்போ ஒரு மண்ணும் வெளங்கல.
அதெல்லாம் கிடக்கட்டும் விருத்தாசலம் பீங்கான் டெக்னாலஜி மாணவர்கள் ஒரு பத்து பேர் பரிட்சை எழுத முடியாம இருந்தப்போ உங்களை பாக்க முயற்சி செஞ்சு முடியாம குமுதம் ரிப்போர்ட்டர் ஏற்பாட்டுல இப்போ படிக்கிறாங்க அதாவது தெரியுமா இல்லெயா?
அதே மாதிரி என்ன என்ன திட்டம் வச்சிருக்கீங்கன்னு கேட்டா அதெல்லாம் பொதுவில சொல்ல முடியாதுன்னு சொல்லுறீங்க. ஆயிரம் திட்டம் இலவசம்னு சொல்லியே கலைஞர் கூட்டணி ஆட்சி மாதிரிதான் ஜெயிக்க முடிஞ்சது உங்க நிலை பரிதாபமா ஆயிடும்.
புலிகள்னா உங்களுக்கு ரொம்ப புடிக்கும் ஈழத் தமிழர் நலன்ல உங்க ஈடுபாடெல்லாம் பாத்து நிறைய ஈழத் தமிழர்கள் உங்களை எல்லாம் நம்புறாங்களாம் பாவம் அவங்க அவங்களுக்கு ஆதரவா எதாவ்து செய்யலாம் பையனுக்கு பேர் மட்டும் பிரபாகரன்னு வச்சா போதாது. கன்னியா குமரிமுதல் காஷ்மீர் வரைக்கும் இருக்கும் தீவிர வாதிகள் பத்தின அப்டூ டேட் நியூஸ் எல்லாம் கைல வச்சிருக்கும் உங்களுக்கு பக்கத்தில இருக்க நாட்டுக்கு எதாச்சும் பன்னனும்னு தோனலியே?
நல்லவேளையா நீங்க கமல் ரேஞ்சுக்கு ஒன்னும் பெரிய நடிகர் இல்லை இல்லேன்னா ஒரு சாதாரண போலீஸ்காரன் எப்படி காஷ்மீர் தீவிரவாதிய புடிக்க முடியும் அதெல்லாம் மத்திய அரசு வேலையாச்சேன்னு அபி அப்பா உங்களுக்கு லெட்டர் போட்டிருப்பார் :)
இன்னும் ஒன்னே ஒன்னு. உங்க எல்லா படத்துலயும் எதாவது ஒரு காட்சியில முஸ்லிம்களுக்கு உதவுறதா ஒரு சீன் வைப்பீங்க ஆனா குஜராத் மோடி விவகாரத்துல ஏன்ய்யா ஒன்னுமே பேச மாட்டேன்றீங்க? இப்படி எல்லாத்திலயும் மவுனமா இருந்துட்டு அவங்க சரியில்ல இவங்க சரியில்ல 2011ல நாந்தான் முதல்வர்னு பினாத்திகிட்டு இருந்தா நெப்போலியன் சொன்ன மாதிரி எதாவது கல்லூரிக்கு முதல்வரா ஆனாத்தான் உண்டு. நீங்க உங்களுக்கு இருக்குறதா நம்பிட்டு இருக்குற மக்கள் செல்வாக்கு உங்க குடும்பத்தில இருந்துகூட கிடைக்காது .
இன்னும் கேள்விங்க அதிகமா இருக்கு இதப் படிக்கவே உங்களுக்கு நேரம் இருக்கான்னு தெரியல. எதாச்சும் சூட்டிங்ல பிஸியா இருப்பீங்க.
ஃபுல் மப்புடன் ...
குவாட்டர் கோவிந்தன்
நெப்போலியபுரம்.

Thursday, November 22, 2007

ஜெயலலிதா விவகாரத்துக்கு கவர்னர் ஒப்புதல்

ஒருவர் பதிவில் (அவருக்கு பாஜக பிடிக்கும் விபிசிங்கை பிடிக்காது காரணம் அவர்தான் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமுல்படுத்திய பிரதமர். அதனால்தான் பாஜக தூண்டுதலில் மண்டல்கமிஷனை எதிர்த்து ராஜிவ் கோஸ்வாமி என்ற பார்ப்பன மாணவன் தீக்குளித்து இறந்து போனான் ).
திருக்குவளை முத்துவேல் கருணாநிதி. சுருக்கமாக "கலைஞர்".
சந்தர்பவாதி என்று சொல்லப் பட்டிருந்தது. அதாவது சந்திரசேகரை விட ( ஆனா அவரோட தலைப்புலயே விஷமம் இருந்துச்சி. சந்திரசேகர் எப்போ சந்திரசேகரர் ஆனார்னு யாராவது சொன்னால் பரவாயில்லை :) ) கலைஞர் சந்தர்ப்பவாதியாம்.

ஜெயாவிவகாரத்துக்கு வருவோம் (கவணிக்க விவாகரத்து இல்லை) நடராஜன் திமுக ஆளாய் இருந்தபோது ஆர்.எம்.வீ அவரை அடிக்கடி பந்தாடுவாராம் ஆனால் அது ஜெயாவுக்கு பிடிக்கவில்லை. காரணம் தோழியும் கணவரும் தூர தூரமாய் கிடக்க வேண்டுமே அதனால் எம்ஜிஆரிடமே சண்டை போட்டு நடராஜனை சென்னைக்கு மாற்றச் சொன்னார் ஜெயா. ஆனால் எம்ஜிஆருக்கு செயாவுடன் சசி இருப்பது கொஞ்சமும் பிடிக்கவில்லை. நடராஜனிடம் சொல்லி "உங்கள் மனைவியை ஜெயாவுடன் பேச வேண்டாம் எனச் சொல்லச் சொன்னார் நடராஜன் மறுத்துவிட்டார். சாதாரண விடியோகடை நடத்தி வந்த சசி இன்று கோடிகளுக்கு அதிபதி அதுமட்டும் அல்ல அதிமுக செயற்குழு உறுப்பினரும் கூட . எனக்குத் தெரிந்து விடியோ கடை வைத்திருந்த நண்பர் ஒரூவர் சொன்னார் "எங்கப்பாவிடியோ கேசட்டை வாடகைக்கு கொண்டு போனா ஒரு காப்பி அவங்க எடுத்துட்டு வாடகைக்கு விடுறானுங்க இந்த தொழிலையே விட்டுடப் போறேன்னு சொன்னார் ஒரு பத்து வருசத்துக்கு முன்னவே :)

எம்ஜிஆர் எப்போது சாவார் எப்போது கட்சியை தன்வசப் படுத்தலாம் என அல்லும் பகலும் அயராது "பாடுபட்ட" ஜெயா கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவர்களை வளைத்துப் போட்டார். சந்தர்பம் பார்த்து. அதே சந்தர்பம் வந்தபோது தன்னை தலைவியாக முன்னிலைப் படுத்த தடையாக இருப்பார்களோ என திருநாவுக்கரசும் பிறரும் சவ ஊர்வலத்தில் இருந்து தன்னை தள்ளிவிட்டதாக சந்தர்பவசமாக விழுந்ததை ( அந்த விடியோ இப்போதும் காணக் கிடைக்கிறது. எம்ஜிஆரின் உடல் இருக்கும் வண்டியில் இருந்து திருநாவுக்கரசு இறக்கி விடும்போது ஜெயாவின் கால் தவறி தடுமாறி விடுகிறார் அபோதும் திருநாவுக்கரசே தாங்கிப் பிடிக்கிறார்) ஆனால் கட்சியில் ஆர்.எம்.வீ. நெடுஞ்செழியன்களுக்கு ஆதரவு அதிகரிக்காமலும் ஜானகியே கட்சித் தலைமைக்கு வந்துவிடக் கூடாது என்பதாலும் தன்னை தள்ளிவிட்டதாக நாடகமாடுகிறார்.

சட்டசபையில் கலைஞர் முதல்வர் நிதிநிலை அறிக்கையை எழுந்து நின்று வாசித்துக் கொண்டிருக்கிறார். அபோது மறுப்பு தெரிவித்த ஜெயாவுக்கு வந்ததே கோபம் நிதிநிலை அறிக்கை புத்தகத்தால் கலைஞரின் மண்டை குறிவைத்து அடித்தார் கண்ணாடி உடைந்ததோடு தப்பித்தார் கலைஞர்.
அப்போது நடந்த தள்ளு முள்ளில் தன்னை சட்ட சபையில் மானபங்கப் படுத்தியதாக "செல்வி.ஜெயா" அறிக்கை விட்டு அழுது புலம்பினார்.
மேலும் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போனதாக ராஜீவிடம் புலம்பி புலிகள் ஆயுதம் கடத்த தமிழக அரசே உடந்தையாக இருப்பதாகவும் கூறி ராஜீவின் வலியுருத்தலில் கலைஞரின் அரசை "உலகப் புகழ்பெற்ற "பிரதமர் சந்திரசேகரை கலைக்க வைத்தார். "ஈழத் தமிழர்களுக்கு உதவுவதை ஜெயா எதிர்ப்பது ராஜிவ் கொலைக்கு பின்னால் மட்டுமல்ல"

ஸ்ரீபெரும்புத்தூரில் ராஜிவ் காந்தி சிறப்புறையாற்ற தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்திருந்த போது "என்ன காரணத்தாலோ" தமிழக கூட்டணித் தலைவி ஜெயா செல்லாமல் ஒதுங்கிக் கொண்டார் தற்கொலை தாக்குதலில் ராஜீவ் கொல்லப் பட கருணாநிதியே உடந்தை என ஒரு பழியைச் சுமத்தினார்.

இன்னும் திருச்சி விமான நிலையத்தில் ப. சிதம்பரத்தை தாக்கிய பெரம்பலூர் இளவரசனை பால்வளத் துறை அமைச்சராக்கினார். தந்தைக்கு எதிராய் களமிறங்கி வெற்றி சூடிய தாமரைக்கணியின் அய்ந்தாவது வரை "படித்த" இன்பத்தமிழனை விளையாட்டுத் துறை அமைச்சராக்கி "அழகு பார்த்தார்"

தன் முதலாம் ஆட்சி காலத்தில் எம் எல் ஏ என்று எதிர்கட்சிகள் இல்லாத போது கோடிக்கணக்கில் சொத்து சேர்த்த வழக்கில் சில ஆவணங்களில் இருக்கும் கையெழுத்து என்னுடையதே இல்லை என்றார். தனக்கு எதிராக வழக்கு தொடுக்க சுப்பிரமணியன் சாமிக்கு அனுமதி கொடுத்த அப்போதைய கவர்னர் சென்னாரெட்டி தன்னிடம் தவறாக நடக்க முயற்சித்தார் என்ற குற்றச் சாட்டு.

தேர்தல் ஆணையம் சில கடுமையான கருத்துக்களுடன் அரசை சுட்டிக்காட்டிய போது அப்போதைய கமிஷணர் டி.என்.சேஷனுக்கு மகளிர் அணி சார்பில் "புகழ்பெற்ற வரவேற்பு என அம்மாவின் " அற்புதங்கள் ஏராளம் .

இதுநாள் வரை தன்னை "பாப்பாத்தி" ஆகவே வெளிப்படுத்தி வந்த "செல்வி". ஜெயா இப்போது தன்னை ஒரு தமிழச்சியாகவும் சொல்ல ஆரம்பித்திருக்கிறார். பாவம் தமிழச்சிகள் இனி பச்சைத் தமிழன் என்பது போல "பாப்பாத்தி தமிழச்சி " என்றும் சொல்லவேண்டும் போல் இருக்கிறது.

திருவாரூர் மாவட்ட திமுக செயலார் பூண்டி கலைச்செல்வன் கொல்லப்பட்ட தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக சொல்லும் ஜெயா அந்த கொலைக்கு காரணமே அதிமுக நகர செயலாளர் என்பதை ஏனோ மறந்து போனார் இதைத்தான் தேங்காய் திருடுவது ஒருத்தன் தெண்டம் கொடுப்பது ஒருத்தன் என சொல்லுவாங்கபோல.

ஜெயலலிதா என்னவோ சட்டத்துக்கு உட்பட்டே தான் நடப்பது போலவும் அதனால் அடிக்கடி சட்ட உதவியுடன் கலைஞர் அரசை கலைத்துவிடலாம் என்றும் கனவு காண்கிறார். ஆனால் தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட எந்த வழக்கிலும் இதுவரை ஆஜராகாமல் தனி நீதிமன்றங்கள் சுட்டிக்காட்டியும் கூட வாய்தா வாங்குகிறார் செல்வி சட்டத்தை ம்மதிக்கும் பாங்கு இதுதான் "சசி ஜெமீதான வழக்கு விசாரணையுடன் சேர்த்தே ஹவாலா மோசடியும் விசாரிக்கப்படும் விவகாரத்தில் இரண்டையும் ஒன்றாக விசாரிக்க தடை கோரி ஜெயா தொடுத்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இப்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.....

பாவம் அந்த நீதிபதி :)

Monday, November 19, 2007

மனுசன கடிச்சி இப்போ ஆட்டையும் கடிக்கும் காஞ்சி காமகேடி

கும்பகோணத்தில் "சோம வாஜபேயி யாகம்" என்ற யாகத்தில் சில ஆடுகளும் குதிரைகளும் உயிர்பலி கொடுக்கப் பட்டதாகவும் அவை உயிரோடு நெருப்பில் இட்டு கொலைசெய்யப் பட்டதாகவும் செய்திகள் சலங்கை கட்டி வந்தவண்ணம் உள்ளன. காஞ்சி சங்கர ராமன் கொலைவழக்கின் சூத்திரதாரி காம கேடி அந்த வழக்கில் இருந்து வெளிவரவேண்டும் என வேண்டியே கும்பகோணத்தில் இந்த கோர யாகம் நடத்தப்பட்டதாக பத்திரிகை செய்திகள் கூறுகின்றன.

ஆட்டைக் கடிச்சி மாட்டை கடிச்சி மனுசனை கடிக்கும் பழமொழியை தலைகீழாக்கி முதல்ல மனுசனை கடிச்சுட்டு இப்போ மாட்டையும் ஆட்டையும் குதிரையையும் கடிக்கிறார் காமகேடி சுப்புணி மாமா! சங்கர ராமன் கொலைவழக்கில் இருந்து தப்பிக்க மறுபடியும் கொலைத் தாண்டவம்.

இந்துக்கள் ஆட்டை மாட்டை உண்ணக் கூடாது என்பதும் காமகேடி சொல்வதே ஆனால் உயிர்ப்பலியாக கொடுக்கலாம் போல் தெரிகிறது யாராவது "சமீபத்தில்" இப்படி ஒரு யாகம் நடந்ததா என தெரியப்படுத்தினால் நலம்.

ஒரு பார்ப்பானைக் கொன்றாலே கங்கை கரையில் காராம் பசுவை கொன்ற பாவத்து ஆளாகவேண்டிவரும் என மனு தர்மம் சொல்வதாக கல்வெட்டுக்கள் சொல்கின்றன :)
ஒரு பார்ப்பானையும் கொன்று அவ் வழக்கில் இருந்து வெளிவர பசுவையும் கொல்லும் சுப்புணிக்கு பாவமூட்டைகள் இன்னும் அதிகம்தானே ஆகும்?

இது கூடத் தெரியாமல் ஏன் இந்த யாகம் என்று யாராவது சொல்லலாம். உலக அமைதிக்காக வேண்டி இந்த யாகம் நடத்தப் பட்டதாக சுப்புணி அண்டு கோ தெருவாய் மலர்ந்துள்ளது ஆனால் உலகம் அமைதியாக எல்லா பார்ப்பனர்களும் கொஞ்சம் மனிதாபிமானத்தோடு வாயையும் இன்னொன்றையும் பொத்திக்கொண்டிருந்தாலே போதும் என்று நம் குவாட்டர் கோவிந்தன் சொல்கிறார்.

குஜராத்தில் மோடி இங்கே ஒரு கேடி என எங்கே பார்த்தாலும் ராமநாராயணன் படத்தில் வருவது போல ஒரே அதிசய மாந்திரீகவாதிகளாய் மாறிப்போகிறது இந்தியா இந்த கொடுமை போதாதென்று இன்னொரு கடைசி செய்தி,

மதுரையருகே திருநிறைச்செல்வன். செல்வராஜ், செல்வி.செல்வியை தாலிகட்டி மனையாளாக்கிக் கொண்டார் காரணம் மணப்பெண்ணின் உறவினர்கள் இருவரை பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் செல்வராஜ் கொன்று விட்டாறாம் அதனால் நல்ல செயல்தானே இது என்பவர்கள் அவசரப் படாமல் கீழே படிக்கவும் அந்த செல்வி 10 வயதான ஒரு பெண் நாய். இது போலவே காமகேடியும் பசுவுக்கோ அல்லது ஆட்டுக்கோ இல்லல குதிரைக்கோ தாலிகட்டி மனைவியாக்கி அந்த யாகத் தீயில் எரிந்துபோண விலங்குகளை சந்தோசப் படுத்துவாராக !!

Saturday, November 17, 2007

ராமர் பாலத்தில் என்னதான் இருக்கு -ஒரு ஆய்வு

இந்தியாவை இலங்கையில் இருந்து பிரிக்கும் குறுகிய ஜலசந்தியில் ஒரு கப்பல் போக்குவரத்திற்கான கால்வாயை தோண்டும் திட்டம் பற்றிய சமீபத்திய அமளி நெருக்கடி-நிறைந்த பாரதீய ஜனதா கட்சி (BJP) இந்தியாவின் இரண்டாம் பெரிய அரசியல் கட்சியாக ஏன், எவ்வாறு தன் நிலைமையை தக்க வைத்துக் கொள்ள முடிகிறது என்பதைப் பற்றி வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது; அதே நேரத்தில் பெரும்பாலான இந்தியர்களால் நிராகரிக்கப்பட்ட, தீமை விளைவிக்கும் இந்து மேலாதிக்க கருத்தியலை, ஒரு பிற்போக்கான சமூகப் பொருளாதா செயற்திட்டத்தை எப்படி முன்வைக்கிறது என்பதும் தெரியவருகிறது.

முன்பு பலமுறை எண்ணற்ற சந்தர்ப்பங்களில் செய்தது போலவே, இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (BJP) அரசாங்கத்தின் பெரும் பங்காளியான காங்கிரஸ் கட்சி இதற்கு ஏற்ப BJP யின் பிற்போக்கு மற்றும் வகுப்புவாத பிரச்சாரத்திற்கு இணங்க சமரசம் செய்து கொண்டுவிட்டது. நீதிமன்றங்களும் அவ்வாறே செய்தன. UPA அரசாங்கம் தொடர்ந்து பதவியில் நீடிக்கத்தேவையான பாராளுமன்ற வாக்குகள் ஆதரவைக் கொடுத்து பதவியில் அதைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்டுக்கள்) (CPI-M) இந்து வலதுசாரிக்கு தீய இச்சைகளை பூர்த்திசெய்வதற்கு காங்கிரஸ் கட்சிக்கு அதன் ஒப்புதல் முத்திரையை அளித்தது.

சேதுசமுத்திரம் (கடற்-பாலம் எனப் பொருள்படும்) திட்டம் கப்பல்கள் இலங்கைத் தீவின் தெற்கு முனையை சுற்றிக் கொண்டு போகவேண்டிய தேவையை அகற்றுவதன் மூலம் இந்தியப் பெருங்கடலின் மேற்குப்புறத்தில் இருந்து கிழக்குப் பகுதியான வங்கக் கடலுக்கு செல்லும் கப்பல்களின் பயணத் தூரத்தை குறைக்கும்.

இத்திட்டம் தென்னிந்தியாவிற்கும் வட இலங்கைக்கும் இடையே இருக்கும் ஆழமற்ற, குறுகலான கடல்நீர்ப் பாதையை ஆழமாக்குவதின் மூலம் ஒரு கால்வாயை தோற்றுவிக்க முற்படுகிறது. இந்தியாவின் சூயஸ் கால்வாய் என்று இத்திட்டத்தை கொண்டுவருபவர்களால் பாராட்டப்படும் சேதுசமுத்திரத் திட்டம் 2005ல் தொடங்கி 2008ல் முடிவடைய இருக்கிறது.

UPA அரசாங்கம் இது நிறைய வணிக நலன்களைக் கொடுக்கும் என்று கால்வாய்த் திட்டத்தை கொண்டுவந்தாலும், இத்திட்டத்தில் ஒரு இராணுவ நோக்கம் உள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை. இக்கால்வாய் இந்திய கடற்படைக்கு தன்னுடைய பிரிவுகளை ஒரு கடலோரத்தில் இருந்து மற்றொரு கடலோரத்திற்கு மிகத் திறைமையுடன் கொண்டு செல்லும் திறனைக் கொடுக்கும் என்பதோடு, எந்த எதிர்கால போட்டியாளரையும் திணற அடிக்கச்செய்யும் முனைகளாக கால்வாயை திறமையாக கட்டுப்படுத்த முடியும்

இத்திட்டம் கடுமையான குறுகிய மற்றும் நீண்ட கால சேதங்களை ஏற்படுத்தவும் கூடும் என்பதால் மிகப் பரந்த முறையில் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியது இந்திய, இலங்கை கடலோரப்பகுதிகளில் வசிக்கும் வறிய மீன்பிடிக்கும் சமூகங்களின் வாழ்வாதாரத்தையும் இது அழிக்கும். இப்பகுதி நீர்நிலையில் இந்திய கடற்படை அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் தளம் ஒன்றை அமைப்பதற்கான இரகசிய திட்டங்களை கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன; அது அணுசக்திக் கழிவு தற்செயலாகவோ அல்லது கசிந்தாலோ ஏற்படக்கூடிய ஆபத்தை அதிகரிக்கும். இத்திட்டம் சுனாமி புயல் தாக்குதல்கள் திறனை அதிகரிக்கக்கூடும் என்றும் நம்பப்படுகிறது.

கடந்த இரு மாதங்களாக மற்றும் அதன் இந்து அடிப்படைவாத கூட்டாளிகள் வெளிப்படையான சந்தர்ப்பவாத, வகுப்புவாத பிரச்சாரத்தை சேது சமுத்திரத் திட்டத்திற்கு எதிராக நடத்தி வருகின்றனர். BJP தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி (NDA) கூட்டணி அரசாங்கமே இத்திட்டத்தை 2002ல் ஒப்புக் கொண்டிருந்தாலும், இப்பொழுது ஆழமாக்கும் பணி "ராம் சேது" (கடவுள் இராமரின் பாலம்) - இந்தியாவின் தென் கடலோரப் பகுதியில் இருந்து இலங்கையின் வடபகுதி வரை செல்லும் இயற்கை சங்கிலியான சிறு மணல் திட்டுக்களின் மீது ஒரு இந்து சமயப் பெயர் சூட்டப்பட்டுள்ளது-, அழிக்கப்பட்டு விடும் என்ற காரணத்தைக் கூறி, கண்டனத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

"ராம் சேது" மீது நம்பிக்கை BJP என்பது, கிட்டத்தட்ட ஒவ்வொரு இந்திய குழந்தைக்கும் சடங்கு போல் கற்பிக்கப்படும் பழம்பெரும் இந்திய காப்பியங்கள் இரண்டில் ஒன்றான இராமாயணத்தில் இருந்து வருவதாகும்.

இந்தக் காப்பியம் பற்றி கணக்கிலடங்கா மொழிபெயர்ப்புக்கள் இருந்தாலும், இந்து அடிப்படைவாதிகளின் ராம் சேது பற்றிய கூற்றுக்கள் 16ம் நூற்றாண்டு வட இந்தியக் கவி துளசிதாஸ் எழுதிய இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டது ஆகும்.

அக்காப்பியத்தின்படி, இராமர் (இந்திப் பெயர் ராம்), மூன்று முக்கிய இந்துக் கடவுளர்களில் ஒருவரான விஷ்ணுவின் அவதாரம் என்றும் இராமாயணக் கதை புவியில் அவருடைய செயல்களை சித்தரித்துக் காட்டுவது என்றும் நம்பப்படுகிறது.

இராமர் ஒரு வட இந்திய அரசின் ராஜா ஆவார்; அதன் தலைநகர் அயோத்தி நகரம் ஆகும்; இது இப்பொழுது உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ளது. காப்பியத்தின்படி, இராவணன் இராமரின் மனைவியான சீதையைக் கடத்திக் கொண்டு இலங்கை சென்ற பின்னர், இராமர் தன்னுடைய விரோதியான, தென்னக நாட்டு அரசனான இராவணனை, இலங்கைக்கு சென்று பிடிக்க முற்படுகிறார். இராமருடைய தொடர் முயற்சிக்கு அவருடைய குரங்கு-பக்தரான ஹனுமான் உதவி செய்கிறார்; இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே நீரால் பிரிக்கப்பட்டுள்ள பகுதியில் ஒரு பாலத்தை கட்டுவதற்கு ஹனுமான் பெரிய குரங்குப் படை ஒன்றை திரட்டுகிறார்.

BJP உடன் முன்ன்னியில் நின்று இந்து வலதுசாரி பாக் ஜலசந்தியில் ஆழமற்ற பகுதிகளில் காணக்கூடிய சங்கிலி போன்ற மணல்திட்டுக்களை இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பழைய பாலம் என்று அபத்தமான கூற்றை முன்வைத்து இப்பொழுது சேதுசமுத்திரத் திட்டத்தை எதிர்த்துக்கொண்டிருக்கிறது.

BJPதலைமை வகித்த கூட்டணி அரசாங்கம் 2002ல் இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தபோதே, கால்வாயின் அமைப்பு, போக்கு ஆகியவை "ராம் சேதுவை" பிளந்து செல்லும் என்பதை நன்கு அறிந்திருந்தது என்பதை அறியும்போது, BJP மற்றும் அதன் கூட்டாளிகளின் பாசாங்குத்தனம் மற்றும் சந்தர்ப்பவாதம் இகழ்ச்சிக்கு உரியதாகிறது. ஆயினும்கூட இப்பொழுது ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு இந்த "இந்து மரபியத்தை" காக்க முன்வந்துள்ள அடிப்படைவாத அமைப்புக்களில் ஒன்றுகூட அப்பொழுது எதிர்ப்புக் குரலை எழுப்பவில்லை.

தமிழ்நாட்டை தளமாகக் கொண்ட BJP நண்பரான சுப்பிரமணியன் ஸ்வாமி, இந்தியாவின் உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்த மனு ஒன்றிற்கு விடையளிக்கும் வகையில், நீதிமன்றம் இந்திய அரசாங்கத்திற்கும் சேதுசமுத்திர நிறுவனத்திற்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆழப்படுத்தும் வேலையை "ராம் சேதுவை" பாதிப்பு இல்லாமல் நடத்துமாறு இடைக்கால உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. மேலும் இந்திய அரசாங்கம் இரு வார காலத்தில் முழுத் தகவல்களையும் கொடுக்குமாறு உத்தரவிட்டது.

செப்டம்பர் 12ம் தேதி இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை இதை எதிர்கொள்ளும் வகையில் ஒரு பிரமாணத்தைக் கொடுத்தது. , "மனுதாரர்கள் [சுப்பிரமணியன் ஸ்வாமி, மற்றவர்கள்] நியாயம் கேட்கும்போது [ராம் சேதுவை சேதப்படுத்தக்கூடாது என்னும்போது] முக்கியமாக வால்மீகி இராமாயணம், துளசிதாசரின் ராமசரிதமானஸ் மற்றும் புராணப் பொருளுரைகளை நம்பியுள்ளனர் என்றும், இவை பண்டைய இந்திய இலக்கியத்தில் முக்கியமான பகுதி என்றாலும், இவை கதாபாத்திரங்கள் அல்லது காப்பியங்களில் விளக்கப்பட்டிருக்கும் நிகழ்வுகள் மறுப்பிற்கு இடமின்று இருந்தன, நடந்தவை என்று வரலாற்றளவில் சான்றுகள் இருப்பதாகக் கூறமுடியாது" என்று அதில் கூறப்பட்டது.

கிஷிமி மேலும் குறிப்பிட்டது: "இடைக்கால, சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியா பற்றிய தொடர்ச்சியான வரைபடங்களை அடிப்படையாக மனுதாரர்கள் முன்வைத்துள்ளனர்; இவை ஆடம் பாலம் என்று அறியப்பட்டுள்ள ஒரு அமைப்பு பற்றி குறிப்பிடுகின்றன என்பது ஒப்புக்கொள்ளத்தக்க வகையில் உள்ளது. ஆனால் பெயரளவில் ஒரு குறிப்பு இருப்பது மட்டுமே இந்த அமைப்பு உண்மையில் மனிதன் கட்டிய அமைப்பு என்பதாக உண்மையை உறுதியாக நிலைநிறுத்த முடியாது. எலும்புகள் போன்றவற்றிலோ, வேறுபல பழங்கால வடிவங்களிலோ மனிதன் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள், தொல்லியல் ஆய்வு ரீதியாய் ஒரு வரலாற்று உண்மையின் நிலைப்பாடு, தன்மை இவற்றை நிரூபிக்க முக்கியமானது ஆகும். ஆடம் பாலம் என்னுமிடத்தில் உள்ள அமைப்பில் அத்தகைய மனித விட்டுச்சென்ற சுவடுகள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை."

இதற்கு மறுநாள், இந்துக்களுக்காக பாதுகாவல் அமைப்பாக தன்னையே நியமித்துக் கொண்ட BJP, கிஷிமி யின் சாதாரண கருத்தான இராமாயணம் என்பது ஒரு சமய-இலக்கியம், வரலாற்று இலக்கியம் இல்லை என்பதை எடுத்துக் கொண்டு, UPAஅரசாங்கத்திற்கு எதிரான கடுமையான வகுப்புவாத பிரச்சாரத்தை தொடக்கியது.

2004ல் அதிகாரத்தில் இருந்து வீழ்ந்த பின்னர், BJP கிட்டத்தட்ட தொடர்ந்த நெருக்கடியில்தான் இருந்து வருகிறது. பெருவணிகத்தின் முக்கியமான பிரிவுகளையும் அது விரோதித்து கொண்டுவிட்டது; அதற்குக் காரணம் விசுவாசமான எதிர்க்கட்சியாக செயல்படாமல் அடிக்கடி பாராளுமன்ற செயல்பாடுகளை நடத்த விடாமல் இது செய்ததுடன், அரசாங்கத்தை "இந்து-எதிர்ப்பு" அரசாங்கம் என்று காட்டும் முயற்சியிலும் பலமுறை ஈடுபட்டதுதான்; உதாரணமாக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் இத்தாலிய-கத்தோலிக்க மூலத்தை சுட்டிக் காட்டியது எடுபடாமற் போயிற்று.

இருந்தபோதிலும்கூட ராம் சேதுப் பிரச்சினை குறித்து BJP போராட்டத்தை தொடக்கியவுடனேயே UPA அரசாங்கமும் அதன் காங்கிரஸ் தலைமையும் முழுமையாக பின்வாங்கின.

காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி கொடுத்த உத்தரவின்பேரில், மத்திய சட்ட மந்திரி எச்.ஆர். பாரத்வாஜ் அவசர அவசரமாக ஒரு செய்தியாளர் கூட்டத்தை கூட்டி, கிஷிமி கொடுத்த பிரமாணத்தை நிராகரித்து, "இராமர் வாழ்ந்தது பற்றி சந்தேகிக்க முடியாது. இமயமலை என்பது இமயமலை போல், கங்கை என்பது கங்கை போல், இராமர் இராமரே. இது நம்பிக்கை பற்றியது. நம்பிக்கையின் அடிப்படையில் நிறுவப்பட்டுள்ள கருத்திற்கு எந்த சான்றும் தேவையில்லை" என்று அறிவித்தார்.

தொல்லியல்துறை ஐ மேற்பார்வையிடும் பொறுப்பு கொண்ட, மத்திய பண்பாட்டுத் துறை மந்திரியான அம்பிகா சோனி, இராஜிநாமா செய்ய முன்வந்தார். செய்தியாளர்களுக்கு தெரிவித்த கருத்தில் அவர் கூறினார்: "என்னுடைய தலைவர்கள் (பிரதம மந்திரி மன்மோகன் சிங், சோனியா காந்தி) என்னைக் கேட்டுக் கொண்டால் என்னுடைய பதவியை ஒரு நிமிடத்தில் துறந்துவிடுவேன்."

அம்பிகா சோனி, சோனியா காந்தியை சந்தித்தபின் தன்னுடைய வேலையை தக்க வைத்துக் கொண்டாலும், சடுதியில் தொல்லியல் துறையை ஐ ஒரு பலி ஆடாக ஆக்க முற்பட்டார். இரண்டு உயர்மட்ட அதிகாரிகளை வேலையில் இருந்து நீக்கினார்; BJP யின் பிற்போக்கு, மூடப்பழமை இருள் மற்றும் வகுப்புவாத பிரச்சாரத்திற்கு எதிராக அவர்கள் செய்ததெல்லாம் அறிவியல் சார்ந்த கருத்து ஒன்றை அளித்ததுதான்.

ஸ்ராலினிச (cpi-M) இப்படி இந்த வகுப்புவாதக் கூறுபாடுகளுக்கு தீங்கு செய்யத் துணைபோவதற்கு களிப்புடன் ஒப்புதல் முத்திரை இட்டது. தங்கள் அறிக்கையில் அக்கட்சியினர் கூறியதாவது: "சேதுசமுத்திரம் வழக்கில் தலைமை நீதிமன்றத்தில் கிஷிமி அளித்த பிரமாணத்தில், மனுவிற்கு புறம்பாக கருதப்படும் சில கருத்துக்களை திரும்பப் பெற்றுக் கொள்ளுவது என்ற தக்க, உரிய முடிவை இந்திய அரசாங்கம் எடுத்துள்ளது."

இதைத் தொடர்ந்து சிறிமி(வி) ஒரு வளைந்த நாக்குடன் கூறியது: "அப்படி இருந்தாலும், ஆடம் பாலம் (அல்லது ராம் சேது) பாக் ஜலசந்தியில், மனிதனால் உருவாக்கப்பட்ட அமைப்பு என ஒன்று இருந்ததற்கான அறிவியல் பூர்வ சான்று இல்லை என்பது கட்டாயம் வலியுறுத்தப்பட வேண்டும்."

இராமாயணத்தில் இருந்துதான் இது மனிதனால் கட்டப்பட்ட அமைப்பு (பாலம்) என்று கூறப்படுவதற்கு வழக்கின் ஒரே "சான்று" இருக்கும்போது, தாங்கள் ஏன் பாத்திரங்கள் அல்லது காப்பியத்தில் நடந்தது போல் நிகழ்வுகள் உண்மையாய் இருந்தவற்றின் வரலாற்றுத் தன்மை வழக்கிற்கு "புறம்பானது" என்று தாங்கள் ஏன் கருதினர் என்பதை ஸ்ராலினிஸ்ட்டுக்கள் விளக்கவில்லை.

காங்கிரஸ் மற்றும் இடது எதிர்ப்பாளர்கள் அரசியலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தது பற்றி BJP முழு ஆதாயத்தை பெற்றுக் கொண்டது. இந்திய பாராளுமன்றத்தின் மக்கள் பிரிவாகிய லோக் சபாவில் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் எல்.கே. அத்வானி, ராமருடைய பிறப்பிடம் என்ற அடிப்படையில் அயோத்தியில் இருந்த பாபர் மசூதியை இடித்துத் தள்ளவேண்டும் என்ற பிரச்சாரத்தின் முதன்மை ஏற்பாட்டாளர், இப்பொழுது கிஷிமி க்கும் அரசாங்கத்திற்கும் எதிராக கடும் கண்டனத்தை தெரிவிக்கும் வகையில், இந்துக்கள்மீது "இது அவமதிப்பை அள்ளி வீசியது" என்றார்.

BJP யின் தலைவர் ராஜ்நாத் சிங் இதேபோல் முழக்கமிட்டார்: "இந்துக்களின் சமய உணர்வுகளை புண்படுத்தியதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பை அரசாங்கம் கோரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது."
BJP மற்றும் அதன் வகுப்புவாத நண்பர்கள் "இந்து உணர்வு", "இந்து மரபியம்" பற்றி அபசுரமாக ஒலி எழுப்பியிருக்கையில், கால்வாய் திட்டம் எப்படி இந்தியா, மற்றும் இலங்கை கடலோரப் பகுதிகளில் வாழும் மீன்பிடிப்பவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்வில் பேரழிவுத் தாக்கம் ஏற்படுத்தக்கூடியது பற்றியோ, கடுமையான சுற்றுச்சூழல் சேதத்தைப் பற்றியோ கூறவில்லை.BJP காங்கிரஸ் கட்சியும் அது பற்றி ஏதும் கூறவில்லை. BJP வகுப்புவாதிகளை சமரசப்படுத்த விரைவில் அரசாங்கம் முயன்றாலும், பல உள்ளூர் தளத்தை கொண்ட மற்றும் சுற்றுச் சூழல் அமைப்புக்கள் இத்திட்டம் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று பல முறையும் கூறியதை முழு அசட்டையுடனும், இகழ்வுடனும்தான் எதிர்கொண்டனர்.

மதசார்பற்ற தன்மையை நிலைநிறுத்துவதாக கூறிக்கொண்டாலும், காங்கிரஸ் கட்சி பல தசாப்தங்களாக இந்து வலதுடன் இணங்கி நின்றிருக்கிறது, சில சமயம் உடந்தையாக செயல்பட்டதற்கும் நீண்ட வரலாறு உண்டு. 2004 மே மாதம் அதிகாரத்திற்கு வந்ததில் இருந்து காங்கிரஸ் தலைமையிலான UPAகி பலமுறையும் அரசியல் அமைப்பு அதிகாரங்களை பயன்படுத்தி அரசியல் ஆதாயத்திற்காக மாநிலங்களை "ஜனாதிபதி ஆட்சியின் கீழ்" கொண்டுவந்துள்ளது; ஆனால் 2002 ல் முஸ்லிம் எதிர்ப்புப் படுகொலைகளுக்கு தலைமை தாங்கி, இப்பொழுதும் அதை நடத்தியவர்களுக்கு பாதுகாப்புக் கொடுக்கும் BJP அரசாங்கத்திற்கு எதிராக குஜராத்தில் அது எதையும் செய்யவில்லை. உண்மையில், BJP பிரிவினர் சிலரைத் திருப்திப்படுத்தும் வகையில் ஆதரவைக் கொண்டு காங்கிரஸ் வரவிருக்கும் குஜராத் மாநிலத் தேர்தல்களுக்கு தயாராகிறது.

1991ல் காங்கிரஸ் தொடக்கிய புதிய தாராள சீர்திருத்தங்கள் மீதான மக்கள் சீற்றத்தைப் பயன்படுத்திக் கொண்டு 1998ல் தேசிய அளவில் BJP முதல்முறையாக அதிகாரத்தைக் கைப்பற்றியது; மேலும் 1996-1998ல் இந்தியாவை ஆண்ட ஐக்கிய முன்னணி அரசாங்கத்திற்கு ஸ்ராலினிஸ்டுகள் தொடர்ந்து ஆதரவைக் கொடுத்திருந்தனர். BJP தலைமையிலான ழிஞிகி அரசாங்கம் இதன்பின்னர் இரக்கமற்ற முறையில் வணிகச் சார்புடைய, தொழிலாள வர்க்க-எதிர்ப்பு நிறைந்த பொருளாதாரக் கொள்கைகளை செயல்படுத்தியது; இதன் விளைவாக 2004 பொதுத் தேர்தலில் அவமானகரமான தோல்வியை சந்தித்தது.

அப்பொழுதில் இருந்து அக்கட்சி தன்னுடைய முந்தைய இறுமாப்பு நடையை இழந்து, உட்பூசல்கள் குற்றத்தை பிறர்மீது போடல் ஆகியவற்றால் வீணழிந்துவருகிறது. ஆயினும் கூட காங்கிரஸின் சமரசத்தாலும் மற்றும் அரசாங்கத்திற்கும் முதலாளித்துவ செயற்பட்டியலுக்கும் எதிரான தொழிலாள வர்க்கம் மற்றும் உழைப்போரின் எதிர்ப்பை ஸ்ராலினிஸ்டுகள் ஆபத்து இல்லாமல் செய்துவிடுவதாலும் வழங்கப்படும் உயிர் பிழைத்தல் மூலம் தள்ளாடி நடக்கிறது


நன்றி wsws.org

Tuesday, November 13, 2007

பார்ப்பானாக குரங்கு வந்தாலும்...

இராமாயணத்தில் ஒரு காட்சி. அயோத்தியாபுரி அரசன் ஆயிரம் ஆசை நாயகிகளின் ஆசான். தசரத மகா சக்ரவர்த்தி புத்திரகாமேஷ்டி யாகம் செய்து, புரோகிதன் மூலம் பெற்றெடுத்த இராமச்சந்திர மூர்த்தியின் எதிரே ‘குரங்கு வம்சத்தில்’ பிறந்த அனுமான் ‘பிராமண’ உருவத்தில் வருகிறான்.

அந்தப் ‘பிராமண’ உருவத்தைக் கண்டதும், ‘இராம பிரபு’ அப்படியே சாஷ்டாங்கமாகக் காலில் விழுந்து வணங்குகிறான்.

எதிர்பாராது நடந்துவிட்ட இந்த நிகழ்ச்சி கண்டு அனுமான் துடிக்கிறான்.

“இராம பிரபு... என்ன காரியம் செய்து விட்டீர்கள்? நான் உண்மையான பிராமணன் அல்ல. நானோ வானர வம்சத்தில் பிறந்தவன். மரம், செடி, கொடிகளில் தாவிப் பிழைப்பவன், ‘பிராமண’ உருவெடுத்து வந்தேன். அவ்வளவுதான். என கால்களில் கடவுள் அவதாரமாகிய தாங்கள் வீழ்ந்து நமஷ்கரிப்பது நியாயமா? நீதியா? தருமமா? என்று பதறுகிறான்.
அப்பொழுது இராமன் கூறுகிறான்.

“அனும! நீ அறியாமையிலே பேதலிக்கிறாய். பிராமண உருவத்தில் வருவது எதுவாக இருந்தாலும், அது குரங்காய் இருந்தாலும் சரியே. நமஷ்கரித்து வணங்குவதே சரியான தருமமாகும். பிராமணனே சகலத்திறகும் மேலானவன்” என்று பதில் கூறுகிறான்.
இந்தக் காட்சியைப் பக்தி ரசம் கொட்ட தீட்சதர்களும் சாஸ்திரிகளும் பிரசாரம் செய்கிறார்கள் என்றால் காரணம் புரிகிறதா?

‘இராம பிரானே’ ‘பிராமணர்’களைத் தெய்வம் என்று கூறி, தொழுது இருக்கிறான் என்ற எண்ணத்தை நம்மவர்கள் நெஞ்சத்திலே நிலைபெறச் செய்து, நாம் என்றும் பார்ப்பன அடி தொழும் ஆழ்வார்களாக இருக்க வேண்டும் என்ற நப்பாசையால் அல்லவா?

இராமாயணம் போன்ற ‘இதிகாசங்கள்’ எழுதப்பட்டதும், அதில் இதுபோன்ற காட்சிகள் சித்தரிக்கப்பட்டதும், அந்த நிலையை என்றென்றைக்கும் நிலை நிறுத்தும் நோக்கத்தோடல்லவா?

இதுவரை உணராவிட்டாலும், ஏமாளித் தமிழர்கள் இனியேனும் உணர்வார்களாக!

Wednesday, November 07, 2007

வாஸந்தி அம்மா எடுக்கும் வேத வாந்தி !

இந்தம்மா தானும் பத்திரிக்கையில் பணிபுரிந்ததை அவ்வப்போது சொல்லும், ஆனால் என்ன அதில் செஞ்சிச்சுன்னு யாருக்கும் தெரியாது, மூத்தப் பத்திரிக்கையாளராச்சேன்னு எதாவது பத்திரிக்கை காரங்க இந்த அம்மாகிட்ட பேஷினா போதும், 'பேட்டியா போட்டுகிறேளா' னு அவர்களிடம் கெஞ்சாத கொறையாக அம்மாவின் பத்திரிக்கை சேவை நடந்து வருகிறது.

செத்த பொணத்துக்கு கடைசியாக சுடுகாட்டில் சடங்கு செய்து முடிப்பாங்க, அது போல் இராமர் பிரச்சனையை எல்லோரும் பேசி முடிந்த பிறகு இந்த அம்மா பேஷ வந்திருக்கிறது. வந்ததுதான் வந்தது எதாவது அறிவு பூர்வமாக சொல்லி இருக்கான்னு பார்த்தால் அதுவும் இல்லை.
கலைஞரை பார்த்தால் பார்பனருக்கு முதுகில் அரிப்பு எடுத்து பூணூலால் தேய்துக் கொள்வதைப் போல் இந்த அம்மா தாம் ஒரு மடிசார் மாமியாக இந்த பிரச்சனையை அனுகி இருக்கிறது. பெண் உரிமை பெண்ணியம் பேசுபவர் எவராக இருந்தாலும் இராமனின் கதையைக் கேட்டால் சொல்லுபவனை செருப்பால் அடிக்காமல் இருக்க மாட்டார்கள். ஆணாதிக்க வாதியான இராமனை முற்போக்கு சிந்தனை உள்ள எந்த பெண்ணும் சகித்துக் கொள்ள மாட்டார். வாஸந்தி அம்மா மடிசார் அம்மாவாக இருப்பதால் தான் பெண் என்பதைவிட பாப்பாத்தி என்பதாகவே நினைத்து இராமர் பால நம்பிக்கை புனித சாயம் பூசி தீராநதியில் கரையேற்ற முயற்சிக்கிறார்.
பிஜேபி அரசாங்கத்தால் இறுதி செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்ட இந்த திட்டத்தை பற்றி தெரிந்தும் இந்த அம்மா எழுதிய கட்டுரையில் வாஜ்பாய் பெயரையோ, அது தவறு என்று சொல்வது போல் எதையும் காணும், வழக்கமான பார்பனீய பார்வையில் முழுக்க முழுக்க கலைஞரை குறை சொல்லி இந்த அம்மா கட்டுரையை எழுதி இருக்கிறது.

இராமன் காவியத் தலைவனாம் ? வாஸந்தி அம்மா... இராமன் காவியத் தலைவன் இல்லை காலி காவிகள் கூட்டத்தின் தலைவன். இராமன் கதை புனிதம் என்றும், இராமர் பாலம் இருந்தது என்றும் பார்பனப் புளுகை பெரியார் பூமியில் புளுகாதே. உம் போன்ற பெண்களுக்கெல்லாம் பெரியார் இல்லை என்றால் பேச்சே வந்திருக்காது, ஆத்துக்காரருக்கு ஆதரவாக மடப்பள்ளியில் புளியோதரை பட்டை அடிக்க வேண்டி இருந்திருக்கும்.

Monday, November 05, 2007

எவன் செத்தா என்னா இந்து இல்லையே !

குஜராத்தில் நடந்த இன ஒழிப்புக்கு நிகரான கோத்ரா சம்பவத்துக்குப் பிந்தய படுகொலை, கலவரங்கள் பற்றிய தெகல்காவின் உளவுச் செய்திகள் இந்தியாவெங்கும் அதிர்வலைகளை துவக்கிய போதும் அது ஏனோ தமிழக அரசியலில் கள்ள மவுனம் சாதிக்கிறது. அத்வானி என்னும் இந்து வெறியனின் தலைமையின் கீழ் இயங்கும் பார"தீய" ஜனதா கட்சி யின் அதிகார பூர்வ ஊழியர்கள் தாங்களே இந்த கொலைகளை செய்ததாகவும் "உங்களுக்கு மூன்றுநாள் கால அவகாசம் தருகிறேன் அதற்குள் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள் " என்று சொன்னதாகவும் ஒருத்தன் "கற்பவதியான முஸ்லிம் பெண்ணின் வயிற்றை அறுத்து அவளையும் கருவையும் கொன்றதன் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்ததாகவும்" தன் கொலைவாய் மலற்ந்திருக்கிறான்.

ராமர் பாலம் என்றதும் தன் குட்டி மீசை துடிக்க கலைஞர் மேல் காழ்ப்பை வெளிப்படுத்தும் பித்துவானி இந்த விவகாரம் குறித்து வாயில் கொழுக்கட்டையோ இல்லை வேறு என்னத்தையோ வைத்திருப்பது போல மூடிக்கிடப்பது ஏன்? ஒரு மறுப்புக்கூட இல்லாமல் ?

ராமன் எந்த காலேஜில் படித்தான் எனக் கேட்டதும் தன் "தெரு"வாய் மலர்ந்த எதிர்கால இந்தியாவின் பிரதமர் ஜெயா இந்த விவகாரத்தில் தன் பார்ப்பன இந்துப் புனிதம் கெட்டுவிடும் என்றோ என்னவோ ஒரு மண்ணும் சொல்லாமல் மவுணம் சாதிக்கிறார்.

இல்லாத ராமன் பற்றி என்னவர்கள் பேசினால் கனடாவில் இருந்து கொண்டு கண்டனம் தெரிவிக்கும் தன்னம்பிக்கை தம்பி விஜகாந்துக்கு இந்த விவகாரம் பற்றி கேட்டு வாய்திறக்கச் சொன்னாலோ அரசாங்கம் பட வேலைகளில் அரிதாரம் பூசுவதே என் தொழில் என்கிற மாதிரி எகிரி எட்டே போகிறார். அட ஒரு கண்டனம் வேண்டாம் வழக்கம் போல குஜராத்தில் அடுத்த 2011ல் எங்கள் ஆட்சிதான் பாஜக காங்கிரஸுக்கு ஒரு மாற்று ஜட்டி நாந்தான் என்றாவது ஒரு புள்ளிவிவரப் போர் தொடுக்கலாம்.

இன்னும் சரக்கு குமார், என நீளும் லிஸ்டில்

தமிழ்க்குடிதாங்கி அய்யா ஏனோ இன்னும் தன் கண்டனத்தை, ஏன் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை , திருமாவோ அன்புத் தோழி ரிலீஸ் ஆகுமா ஆகாதா என்ற கவலையில் அடுத்த ஜோடியாக மீனாவை நடிக்க வைக்க முயல்கிறார் போலும். கருணாநிதிக்கு வயதாகிவிட்டது இன்னும் அதனால் அவர் தனது முதல்வர் பதவியை துறக்க வேண்டும் எனச்சொன்ன ஞானியோ இந்த விவகாரம் பற்றி வாய் திறப்பதென்றான் ஒன்னுமே எனக்கு தெரியாது அத்வானியா அது யாருன்னே தெரியாது என தண்ணீருக்குள் வாயு பிரிக்கிறார். சோ ராமசாமிக்கு வயதாகிப் போனதாலோ என்னமோ இப்போதெல்லாம் தன் பேட்டிகள் தாறுமாறாக கிழிக்கப் படுவதாலோ மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் என்ன தொடர்பு என ஒரு நாட்டாமையை கூப்பிட்டு
தீர்ப்பு சொல்லச் சொல்வதாக காற்று வாக்கில் செய்தி.

வைகோவுக்கு பொள்ளாச்சியை கட்டி இழுப்பதே பெரிய வேலை. சோனியாவும் மன்மோகனும் எங்கெல்லாம், வாய் திறக்கனுமோ அங்கெல்லாம் மவுனம் சாதித்தே ஓட்டு அறுவடை நடத்த கூட்டுத் திட்டம் போடுகின்றனர்.

மூச்சை வேகமாக விட்டால் கூட முக்கியதாக கூறி கேஸ் போடும் சுப்பிரமணியன் சாமி சேது சமுத்திரத்தை கவிழ்க்கும் வேலையில் ஆழ்ந்து கிடப்பதால் இது பற்றி பேசவே நேரம் இல்லை.

இவ்வளவு ஏன் குஜராத் சம்பவம் பற்றி பகுத்தறிவுப் பகலவன் பள்ளியிலே படித்த கலைஞர் ?

ம்ஹீம் என்னத்த சொல்ல செத்தது முஸ்லீகள் தானே நமக்கு என்னான்னு என்னா "இந்துசாதி" தலைவர்களும் முடிவு பன்னிட்டாங்க போல இருக்கு -

Sunday, November 04, 2007

ஜெவுக்கு நறுக்குன்னு நாலு யோசனைகள் !!

விடுதலைப் புலிகளின் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதற்க்கு முதல்வர் கலைஞர் இறங்கல் கவிதை எழுதியதால் அவர் பதவிவிலக வேண்டும் என வீன் முழக்கமிடும் ஜெயாம்மாவுக்கு எனது சில யோசனைகள்

1. இந்த படுகொலைக்கு இறங்கல் தெரிவித்த பிபிஸி இனி இந்தியாவில் ஒளிபரப்பை தடைசெய்ய வேண்டும் என ஒரு போராட்டம் நடத்தினால் ஒலகம் பூரா ஒங்க பேரு பரவி ஒரு பரபரப்பை உண்டாக்காது?

2. கலைஞர் கருணாநிதி கார்க்கியோட தாய் நாவலை காவியமாக்கி அதை இப்போ சினிமாவாவும் எடுக்கிறாங்க . ஆனா இது கார்க்கிக்கு தெரியுமா ? அவரோட அனுமதி இல்லாம அவர் கதைய திருடின மைனாரிட்டி கருணாநிதிக்கு எதிரா ரஷ்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கனும்னு மாஸ்கோவுல போய் ஒரு பேட்டி கொடுத்தா சும்மா பிச்சிகிட்டு போகாது?

3. என் வீட்டில் நுழைந்த தண்டபானி கலைஞர் சொன்னபடி தமிழ்ச்செல்வன்
அனுப்பிய விடுதலைப்புலி அவர் மாட்டிக்கொண்டதும் தமிழ்ச்செல்வனைகாட்டிக்கொடுத்து அதன் மூலம் தான் மாட்டிக்கொள்வோமோ என கயவன் கருணாநிதிதான் தமிழ்ச்செல்வனை கொன்றது என ஒரு குண்டை போட்டால் இலங்கை முதல் இந்தியா வரை ஒரு ஆழிப்பேரலை ஏற்பட்டு அப்படியே இந்த அரசும் கவிழ்ந்து ஆட்சிக் கட்டிலில் புரளலாமே அம்மா?
4. எல்லாத்தையும் விட புலிகளுக்கு ஆதரவா தமிழ்மணம் செயல்ப்பட்டு தனக்கு அடிக்கடி குட்டு வைக்கும் பாசிச வலைப்பதிவுன்னு சொல்லி அதையே தடை பன்னிட்டா ஒங்க பேரும் புகழும் ஒரே நேரத்தில பரவிடாதா ஒலகம் முழுக்க?
5. ஆமா பக்கத்துலயே ஒரு பல்லு புடுங்குன புலி(அதான் உங்க அண்ணன் வைகோ) யை வச்சிருக்கீங்களே ஒங்களுக்கு பயமா இல்ல?

Friday, November 02, 2007

'தமிழினம் இரு முனைப்போரை சந்திக்கின்றது. -தமிழ்ச்செல்வனின் இறுதி உரை


'தமிழினம் இரு முனைப்போரை சந்திக்கின்றது. ஒன்று எதிரியின் இன அழிப்பிற்குள்ளும் கொடுமையான போருக்குள்ளும் நாம் தள்ளப்பட்டு அதற்குள் இருந்து மீள்வதற்குமான விடுதலைக்காக போராடிக் கொண்டிருக்கின்றோம். இன்னொன்று உலகத்தின் அசைவியக்கத்தோடு ஒன்றித்திருக்க வேண்டிய கட்டத்தில் நாங்கள் இருக்கின்றோம். அதற்காகவும் நாங்கள் போராடவேண்டியவர்களாக இருக்கின்றோம். உயிர் வாழ்தலுக்கான போராட்டத்தில் நாங்கள் வென்று எம்மை தற்காத்துக்கொள்ள முடியாவிட்டால் இந்த பூமிப்பந்திலே வாழமுடியாது. குறிப்பாக எங்கள் தாயகத்தை நாங்கள் இழந்து அழிந்துவிடுவோம்' என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் 'கணிநுட்பம்' மாத மலர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு நூலை வெளியிட்டுவைத்த பின்னர் சிறப்புரையாற்றுகையிலேயே தமிழ்ச்செல்வன் இவ்வாறு தெரிவித்தார்.

'இந்த உலகப்பந்தில் வாழவேண்டுமாக இருந்தால் உலகப்பந்தில் நிலைக்க வேண்டுமாக இருந்தால் உலகத்தின் அசைவியக்கத்தோடு நாங்களும் எங்களை உட்புகுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறுதான் இன்று தொழில்நுட்பத்தை பார்க்கவேண்டும். அதிலும் குறிப்பாக கணினி யுகம் என்பது இன்று எல்லாவற்றுக்குள்ளும் உட்புகுந்துள்ளதால் கணினி தொடர்பான அறிவை நாங்கள் எங்களுக்குள் ஆழமாக கற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்.' எனவும் அவர் தனது சிறப்புரையில் தெரிவித்துள்ளார்.

'கணிநுட்பம்' மாத மலர் நூல் வெளியீட்டு விழா நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு கிளிநொச்சி பண்பாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

கணிநுட்பக்கூட்டு நிறுவனமும்இ ரி.ஆர் ரெக் நிறுவனமும் இணைந்து இந்த இதழை வெளியிட்டன.

பொதுச்சுடரை தமிழீழ மாணவர் அமைப்பின் பொறுப்பாளர் கண்ணன் ஏற்றினார். தமிழீழ தேசியக்கொடியை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் ஏற்றினார்.

மாவீரர் பொதுக்கல்லறைக்கு ஈகச்சுடரை அன்னை இல்லம் பணிப்பாளர் அருட்திரு எட்மண்ட் றெஜினோல்ட் ஏற்றினார். தொடர்ந்து கருத்துரையை விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் நிகழ்த்தினார். வெளியீட்டுரையை இதழாசிரியர் லலிதாமதி நிகழ்த்தினார். முதல் படியை சு.ப.தமிழ்ச்செல்வன் வெளியிட்டு வைக்கஇ தமிழீழ கல்விக்கழக துணைப்பொறுப்பாளர் அருள் ஆசிரியர் பெற்றுக்கொண்டார்.

நூலின் ஆய்வுரையை விடுதலைப் புலிகளின் வரலாற்றுப் பிரிவுப்பொறுப்பாளர் யோ.செ.யோகி நிகழ்த்தினார்.

சு.ப.தமிழ்ச்செல்வன் இங்கு உரையாற்றுகையில் மேலும் முக்கியமாகக் குறிப்பிட்டதாவது:

'அறிவியல் வளர்ச்சியுடன் சேர்ந்துகொண்டு அசைந்து போக வேண்டிய தேவைக்குள் தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள் அதனைச் சாத்தியமாக்கியிருக்கின்றார். எங்களுடைய தேசத்தில் புதிய தலைமுறை அறிவியல்துறையில் தொழில்நுட்பத்துறையில் மேம்பட்ட சமூகமாக வளர்த்தெடுக்கப்படவேண்டும் என்ற தமிழீழத் தேசியாத்தலைவர் அவர்களின் எண்ணத்திற்கும் எதிர்பார்ப்புக்கும் வழிகாட்டுதலுக்கும் வடிவம் கொடுக்கும் வகையில் கணிநுட்பப்பிரிவு எழுத்துள்ளது. அதன் ஒரு வெளிப்பாடாக எமது தாய்மொழியில் கணிநுட்பம் தொடர்பான ஒர் அறிவியல் சஞ்சிகையை அவர்கள் தொடக்கியுள்ளனர். இதனை மிகவும் மகிழ்ச்சிக்குரிய நம்பிக்கை தரும் முயற்சியாக நாங்கள் பார்க்கின்றோம்.

மனிதனின் அசைவியக்கத்தின் ஓர் உறுப்பாக இன்று கணினி மாறிவிட்டது கணினி யுகத்திற்குள் நாங்கள் புகுந்து கொள்ளாவிட்டால் இந்த உலகப்பந்தில் எங்களை நிலைப்படுத்திக் கொள்ளமுடியாத ஒரு சூழலுக்குள் தள்ளப்பட்டுவிடுவோம். அடுத்தது இந்த உலகப்பந்தில் வாழவேண்டுமாக இருந்தால் உலகப்பந்தில் நிலைக்க வேண்டுமாக இருந்தால் உலகத்தின் அசைவியக்கத்தோடு நாங்களும் எங்களை உட்புகுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறுதான் இன்று தொழில்நுட்பத்தை பார்க்கவேண்டும். அதிலும் குறிப்பாக கணினி யுகம் என்பது இன்று எல்லாவற்றுக்குள்ளும் உட்புகுந்துள்ளதால் கணினி தொடர்பான அறிவை நாங்கள் எங்களுக்குள் ஆழமாக கற்றுக்கொள்ளவேண்டிய நிர்பந்தத்திற்குள் நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்.

போர்ச் சூழலுக்குள் அது சாத்தியமாகுமா என்பது கேள்வி. போர் திணிக்கப்படும் போது எங்களுக்கு எல்லாமே தடுக்கப்படும்இ தடைசெய்யப்டும். அதற்கான வாய்புகள் மறுக்கப்படும். ஆகவே இந்தக்கட்டத்தில் நாம் நின்று கொண்டு உலகப்பந்திலே அறிவியல் வளர்ச்சியுடன் சேர்ந்துகொண்டு அசைந்து போக வேண்டிய தேவைக்குள் நாங்கள் இருக்கின்றோம். அது சாத்தியமாகுமா என்பதுதான் கேள்வி இதனையும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் சாத்தியமாக்கியிருக்கின்றார்.

எல்லாருக்கும் அதுதான் அதிசயம். தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பது உலகில் நடைபெறும் விடுதலைப் போராட்டங்களிற்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறது. எல்லாவற்றையும் அதிசயமாக பார்க்கிறார்கள். அதற்கு காரணம் தேசியத் தலைவர் அவர்களின் எண்ணங்களும் சிந்தனைகளும் வழிநடத்தல்களும்தான். இன்று எதிரி எல்லாவிதமான தொழில்நுட்பங்களையும் கொண்டு வந்து எங்களின் தேசத்தை அழிப்பதற்கு தமிழினத்தின் விடுதலைப் போரை இல்லாமல் செய்வதற்கு முயன்று கொண்டிருக்கின்றான். அதற்குள் எதிர்நீச்சல் போட்டு அதை எதிர்கொண்டு அதை முறியடித்து எங்களுடைய விடுதலைப் போராட்டம் முன்னகர்த்தப்படுகின்றது என்றால் எமது தலைவர் அவர்களின் சிந்தனைதான்.

எதிரியிடம் இருந்து மீட்டெடுக்கப்பட்டு மலரப்போகும் எங்களுடைய தமிழீழம் இந்தஉலகப்பந்தில் உயர்ந்து நிற்கும் என்ற உன்னதமான நம்பிக்கையை இன்று ஏற்படுத்தியுள்ளது அதனுடைய உயர்ச்சியும் தொடர்ச்சியுமாகத்தான் இச்சஞ்சிகையின் வெளியீடு அமைந்துள்ளது' எனவும் சு.ப.தமிழ்ச்செல்வன் தனது சிறப்புரையில் தெரிவித்தார்.

Thursday, November 01, 2007

செக்ஸ் டாய்ஸ் கடையில் சாருநிவேதிதா

இன்று கடந்த வார இந்தியா டுடேயின் செக்ஸ் சர்வே பற்றிய கவர்ஸ்டோரி கொண்ட புத்தகத்தின் விருந்தினர் பக்கத்தில் கழிவறைகளில் கிடக்கும் ஆணுறைகள் என்ற தலைப்பில் ஒரு நல்ல கட்டுறை எழுதியிருக்கிறார் அதாவது ......

"பிபிஓ அலுவலக கழிவறைகள் ஆணுறைகளால் நிரம்பி அடைத்துக் கொண்டு கிடப்பதாகவும் இதில் இருந்தே மத்திய தர மக்களின் பாலியல் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியும்" என்றும் எழுதிஉள்ளார். மேலும் பதினாறு வயதில் பெண்கள் திருமணம் செய்துகொள்ள அணுமதி வழங்க வேண்டும் எனவும் பாலியல் தொழிலை அங்கீகாரப் படுத்த வேண்டும் செக்ஸ் டாய்ஸ் எனப்படும் பாலுறவு பொம்மைகள் விற்கும் கடைகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் விரைவான விவாகரத்துக்களுக்கு சட்டம் இடம் தர வேண்டும் எனவும் எழுதியுள்ளார். வழக்கம் போல (குஷ்பு சொன்னதை) தவறாக புறிந்து கொள்ளப்படும் அபாயங்கள் நிறைந்த கருத்து !!

சாருவின் கொடும்பாவியை யாராவது கலாச்சார காவலர்கள் கொளுத்தும் முன் அவரே சொன்ன மாதிரி எங்காவது பாரீஸில் அவர் நண்பர் நடத்தும் செக்ஸ் பொம்மைகள் விற்கும் கடையில் வேலை பார்ப்பது நல்லது

:)

Monday, October 29, 2007

மோடி என்ற நரமாமிச ஓநாய் !!

கருணாநிதி உண்ணாவிரத பந்தலில் உச்சா போய் நீதிமன்றத்தை அவமானப்படுத்திவிட்டார் ஆட்சியைக் கலைக்கனும் என்று சொல்லிய பார்பன பத்திரிக்கைகளும், பார்பனர்களும், தெகல்காவால் அம்பலப்பட்டுக் கிடக்கும் மோடி என்ற நரமாமிச ஓநாய் குறித்து பேசாதது ஏன் ?

நிறைமாத கர்ப்பிணியினை புணர்ந்து, அவள் வயிற்றை கீறி, கருவை வெளியே எடுத்து வீசிவிட்டு அவளை கொன்று தீவைத்து எரித்தோம் என்று பஜ்ரங்தள் என்ற இந்துத்துவ தீவிரவாத கூட்டத்தை சேர்ந்த ஒருவன் வாக்குமுலம் கொடுத்திருக்கிறான். பயங்கரவாதி மோடியின் ஆசிர்வாதத்துடன், விருப்பத்துடன் நடைபெற்றதாக் சொல்கிறான். தமிழக நாளிதழ்களில் இது பற்றி பேசப்படுவதில்லையே ஏன் ? செத்துப் போனது இந்து இல்லை என்பதாலா ?

அதே துணிச்சலில் குஜராத் கும்பல்கள் தமிழ்நாட்டில் ஊடுறுவி செயல்பட எவ்வளவு நாள் ஆகும் ? வாய் மூடி கிடந்தால் சிறுபாண்மையினர் அச்சத்தை போக்கவில்லை என்றால் கோவை குண்டுவெடிப்புகள் போல் தமிழ்நாட்டில் இந்து மத வெறியர்களும் நடத்த மாட்டார்களா என்ன?

நேற்று இஸ்லாமியர்களை அழித்தான், நாளை கிறித்துவர்களை அழிப்பான். அதன் பிறகு திராவிடர்களை அழிப்பான். தமிழர்கள் இந்துத்துவா இனவெறி பாசிச கும்பல்களுக்கு தமிழகத்தில் என்னாளும் துணை போகக்கூடாது.

இந்துமத வெறியர்களுக்கு எதிரான கண்டம் ! மோடிகளும் அவனுடைய கேடிகளும் தூக்கில் இடப்பட வேண்டும் என்பது தமிழ்நாட்டு கோசமாக இருக்கவேண்டும்! எல்லாவற்றுக்கும் ஓ போடும் சோவும், ஞானியும் இதற்கும் ஒருவேளை ஓ மட்டுமே போடுவார்களோ இல்லை
உச்சா போன நீதி மன்றம் மோடியை பார்த்து மூடிக்கொண்டிருக்கிறதா வாயையும் இன்னொன்றையும்?

இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்புக்கு ஆதரவாக இந்துத்துவாவின் கொடுமைகளை தண்டிக்காவிட்டால், கண்டிக்காவிட்டால், இஸ்லாமியர்கள் நம்பிக்கை இழந்து குண்டுவெடிப்புகளை நிகழ்த்தினால் அதற்கு நாமும் நம் மெத்தனமும் பொறுப்பு

வாழ்க இலைக்காரன் வணங்கும் 80 கோடி பாசிச வெறிகொண்ட பயங்கரவாத இந்துக்கள்!!

Friday, October 19, 2007

நான் வன்னியனாக பிறந்ததற்கு வெட்கப்படுகிறேன் !

மதுரையில் ஒரு தலித் வழக்கறிஞர் ஒருவருடன் ஏற்பட்ட தகராற்றில் அந்த வழக்கறிஞருக்கு, வாயில் மலத்தை பாமகவை சேர்ந்த மாவட்ட செயலர் திணித்திருக்கிறான்.

எல்லோருமே பெண்ணுறுப்பில் இருந்துதான் பிறந்தோம். ஆனால் மனுவேதம் பிரித்துப் போட்ட அடிப்படையில் வன்னியர்கள் பிரம்மாவின் மார்பில் இருந்து பிறந்த சத்திரியர்கள் என்றும், பிராமனர்களுக்கு அடுத்த உயர்ந்த நிலையில் இருப்பதாகவும் கருதிக் கொண்டு தம்முடன் கூடி வாழும் தலித் சமூகத்தை அவ்வப்போது அவமரியாதை செய்து வருகின்றனர். வன்னியனாக இருந்தாலும், தலித்தாக இருந்தாலும் உழைத்தால் தான் சோறு கிடைக்கும், வன்னியன் உழைக்காமல் உண்டு வாழும் பார்பானைப் போல் உயர்ந்தவன் என்று நினைத்துக் கொண்டு தலித்துகளை கீழாக நடத்துகின்றனர். கோவிலுக்குள் விடுவதில் பிரச்சனை செய்வதில் இருந்து தீண்டாமை வரை பாப்பானைப் போலவே வன்னியர்களும் நடந்து கொள்கிறார்கள். பார்ப்பானுக்கு வன்னியன் தாழ்த்தப்பட்டவன் என்றும் வன்னியனுக்கு தெரியாமல் இல்லை. ஆனாலும் தமக்கு கீழே ஒருவனை தாழ்த்தி வைத்திருக்கும் மனுவக்கிரத்திற்கு ஏஜெண்டுகளாகவே செயல்படுகிறார்கள்.

தென் தமிழகத்தில் தேவர்கள் தலித்துக்கு எதிராக செயல்படுவது போலவே வடதமிழகத்திலும் பிற இடங்களிலும் வன்னியர்கள் ஆண்டைகள் போல் செயல்பட்டு வருகின்றனர். எல்லோரும் மனுசன் தானய்யா ? ஒருத்தன் காலில் பிறந்தான், ஒருத்தன் வாயில் பிறந்தான் ? எவனும் பெண் உறுப்பில் இருந்து பிறக்கவில்லையா ? தலித் ஏர்பிடிக்கவில்லை என்றால் ஏதய்யா சோறு ? சுடுகாட்டுக் போனாலும் கட்டையை அவன் தானய்யா வேகவைக்கிறான். கேடுகெட்ட சாதி வச்சிக்கிட்டு என்ன மயித்தை புடுங்கப் போறிங்க ?

வன்னியர்கள் தொடர்ந்து தலித்துகளை அவமரியாதை செய்துவருவதைப் பற்றி படிக்கும் போது வன்னியனாக பிறந்ததற்கு வெட்கப்படுகிறேன். மனுச தன்மை மறந்து சாதி பெருமை பேசுகிறவனுங்க எல்லோருக்கும் காயடிக்கனும்.

தமிழச்சிக்கும் தமிழனுக்கும் !!

இன்று எதோச்சையாக வெப்பில் (வழக்கமாக மேய்ந்து வந்தபோதும் பதிவுகள் எழுதுவதில்லை.) வ"லை"ய வந்த போது ஒரு விசயம் அதிர்ச்சியை அளித்தது. சில நாட்களாய் நான் தமிழ் மணத்தில் எழுதாமல் இருந்தாலும் இங்கே தமிழச்சியை தலைப்பாக கொண்ட பதிவுகளை படித்து சிரிக்க நேரம் இல்லாமல் போனது. எதும் எழுதலாம் என்றால் ஒன்னும் நடக்கவே இலை கீற்று இணைய தளம் வேறு நெட் ஒருக் எரராம் :)

சரி வெப் தமிழனில் எதும் தேடலாம் என்றால் வந்தது சைட்டு ப்ளாக்குடு!!





என்ன கொடுமைங்க இது? அவன் அவன் காமலோகம் காதல் லோகம்னு கதை எழுதறான் அதையெல்லாம் ப்ளாக் பன்னல இன்னும் பல தொல்லகாட்சி சேனல் ஓப்பனாத்தான் இருக்கு வெப் தமிழனை ப்ளாக் பன்னிட்டானுங்க !!

இதை யெல்லாம் யாரு கேக்குறது?

நாமதான் இந்த லிங்கை புடிச்சி போனா அங்கே முறையிடலாம் அமீரக ஆளுங்ககிட்ட ஒலக மக்களான நாமதான் கொறைய சொல்லி மொறையிடனும் செய்ங்கப்பா!!

Sunday, September 30, 2007

இந்துத்துவ வியாதிகளே-அழிவை சந்திக்கப் போவது நீங்களே !!

சேதுசமுத்திர திட்டம் எனப்படும் 150 ஆண்டுகால கனவு திட்டம் செயல்வடிவத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, நாசாவின் புகைப்படைத்தை இராமர் பாலம் என்று சொல்லி கதை கட்டி பார்பனிய பாசிச வாதிகளான இந்துத்துவ வாதிகள், அதனை எப்படியும் தடுக்க முயன்று முடியாமல் போகவே கலைஞரின் பேச்சை தொடர்ந்து கொலை மிரட்டல் விடும் அளவிக்கு சென்று இருக்கின்றன. இந்தியாவின் புதிய பார்பனிய பின்லேடன் இராம் விலாஸ் வேதவாந்தி, இந்து இளைஞர் அமைப்பை தூண்டுவிட்டு 'பகவத் கீதை' என்னும் புனித(?) நூலில் சொல்லப்பட்டுள்ள தண்டனையை, ஷங்கரின் அன்னியன் ஸ்டைலில் நிறைவேற்றச் சொல்லி இருப்பதாக தகவல் வருகிறது. கலைஞரின் ஒரு மயிரையும் புடுங்க முடியாது என்பது வேறு விசயம்.

இந்த திட்டம் நிறைவேறினால் திட்டமிட்டபடி தமிழகம் பயன் பெறும். தூத்துக்குடி தொழில் வளர்ச்சி பெருகும். பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இன்னும் பல நன்மைகள் கிடைக்கும். நிறைவேறாமல் போனால்,

தமிழகம் மட்டுமே பெரியார் வழியில் பார்பன விஷப்பற்களை பிடுங்கி எறிந்து அரவங்களின் ஆரவார சீற்றத்தை அடக்கியிருக்கிறது. இந்த திட்டம் நிறைவேறாமல் போனால் பார்பனிய பயங்கரவாதிகளின் சூழ்ச்சிகளை இந்தியா முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களும், பழங்குடியினரும் உணர்ந்து கொள்வார்கள். முன்பு தமிழகத்தில் நடந்தது போலவே இந்திய அளவில் பூனூல் அறுப்பு போராட்டங்கள் நடந்து பார்பனர்கள் செல்வாக்கு இழக்கும் நிலைக்கு ஆளாவார்கள். பார்பனியத்தின் பழமைவாதத்தை உலகமே கண்டு வியப்படைந்து கைகொட்டி சிரிக்கும். பார்பனியம் அழியப்போகும் பொன்னாள் எது என்றால் அது சேதுசமத்திர திட்டத்தை முடக்கிப் போடும் நாள்தான்.

சேது கால்வாய் திட்டம் கிடைத்தால் நமக்கு நன்மை. இல்லையென்றால் பார்பனியம் தம் தலையில் தானே மண்வாரிப் போட்டுக் கொண்டு கொட்டம் அடக்கப்பட்டுவிடும்.

இந்துத்துவ வியாதிகளே, பார்பனிய ஆதரவாளர்களே செயல்படுங்கள், நீங்கள் எப்படி செயல்பட்டாலும் முடிவில் அழிவை சந்திக்கப் போவது நீங்களே.

Thursday, September 27, 2007

தம்பி, அய்யனார், குசும்பன், அபிஅப்பா, மகேந்திரனாகிய நான் மற்றும் குசும்பன் - ஒரு பின் நவீனத்துவ பிதற்றல்


முடிவற்ற சூனிய பிரதேசத்தில் நிலைகொள்ளாமல் தவித்திடும் என் வாழ்வின் எல்லா பிராந்தியங்களும் தன் இருத்தலை சுய விளம்பரிப்பதற்க்காக ஏதாவது ஒரு சிறு தனலை பற்றமுடியுமா என எண்ணிய படியே காலையில் கண்விழிக்கும் எனக்கு ஏதாவது ஒரு கடை வாசல் திறந்தே கிடக்கிறதுதான். தன் எல்லா வாழ்வின் சூனியங்களையும் எதாவது ஒரு கால வெளியற்ற இருட்டுப் புள்ளியில் ஒளித்து வைத்துவிட முடியாதா என ஏங்கும் முப்பத்து சொச்சம் விளிம்பு நிலை மாந்தரின் எல்லா விளக்கங்களும் தனது வழியின் இரண்டு கண்களை மட்டுமாவது சிறக்க சிலாகித்த படியே காற்றும் அசையாத கடை மடு வழியே கால்கள் தள்ளாட நடக்கிறார் அய்யனார். எதிரே மார்புக் கச்சை பிதுங்க மது போதை கொண்டுவரும் விடுதி நடனப் பெண்ணின் கால் கொலுசில் சிக்கி சின்னாபின்னமானது தெரியாமலேயே எதாவது ஒரு பற்றுக்கிளை கிடைக்காதா என பின்பக்கம் பார்த்தே யோசித்த படியும் அடுத்த பெக்கை ஊற்றிய படியே மாலன் அரசியல் என்ன பெரிய மயிரா என்றபடியே அவரின் இலங்கா விருது பற்றி விசாரணைகளை அள்ளித் தெளித்த படியே இருக்கும் அய்யனாரின் கரம் பற்ற தம்பியின் தகிடுதத்தங்கள். விளிம்பின் முடிவில் வாழும் மாந்தர் எல்லாம் என் பக்கம் பாருங்கள் என்றபடியே பின் நவீனத்துவ வாதியாய் ஆக என்ன கொடுமையெல்லாம் செய்ய வேண்டும் என இல்லாத மாணவன் ஒருவனுக்கு பாடம் எடுத்த கோபம் கண்களில் பல்விளக்கி கொப்புளிக்க அடுத்த பாட்டில் பீரையாவது அரை நிம்மதியோடாவதாவது குடிக்க விடுவானா குசும்பன் என்ற பழைய ஞாபங்களை கிளறியபடியே ஈரான் பயனம் பாவனா காதல் என ஏதாவது ஒன்றை எழுதியபடியே என்ன கருமம்டா இந்த வலைப்பதிவு என எங்கும் கிடக்கும் சாக்கடை பன்றிகளை ஒதுக்க முடியாமல் குச்சி கொண்டு விரட்டிடும் கொலைவெறீப்பதிவர்களுக்கு கொஞ்சமாவது ஆசுவாசம் கிடைக்க வழிசெய்வோம் என இந்த வார அபி அப்பா நட்சத்திரம் இந்த கொடுமைகள் எல்லாம் இங்கேதான் நடக்க வேண்டுமா என் எண்ணிய படியே நைட் ஷிப்ட்டில் வேலை பார்க்கும் கோபி என பின் நவீனம் பீரா" யப்பட்ட ஒரு முன்னிரவு வேளையின் மகேந்திரன் சிறுநீர்க்குழாயில் கல்லாமே யாருக்கவது தெரியுமா என எல்லாரின் வயிற்றிலும் இருக்கும் எதாவது ஒன்றைப் பற்றி கேள்விகள் கேட்டபடியே வந்த அபி அப்பா அடர் கானகப் புலி அய்யனாரங்கே இருப்பதை பார்த்து ஜெர்க் விட்ட படியே மாது கொண்டு வந்த மதுவில் மூழ்க எத்தணிக்கும் அகோர காலை வேலையின் முற்பகுதிக்குப் பின்வந்த ஏதாவது ஒரு சிறிய இடைவேளையின் மைய்ய வெளிச்சம் மாலையாய் மங்கும் ரசங்கள் நிரப்பப்பட்ட ராத்திரிகளின் மிச்சம் இருக்கும் காலிப் புட்டிகளையும் காய்ந்த பரோட்டாக்களையும் கொஞ்சமாய் மிச்சம் இருந்த ஊருகாய் பாட்டிலையும் கைவைத்து துடைத்து நக்கியபடியே மதுவிடுதிப் மங்கையின் கொங்கைகளில் கொஞ்சம் கிக்காகி கிறங்கிக் கிடந்த அய்யனாரையும் எழுப்பி வருவதற்குள் ஏறியிருந்த ஒரு பாட்டில் பீரும் அதன் ஒத்துவராத சுவையும் பினாவானா ஆக விடாமல் மற்றவர்கள் செய்த மது களியாட்ட கோப வெறியில் கொஞ்சம் கொலை வெறி கொண்ட தம்பியின் கடைசி வரியாக வந்த வாந்திக் கவிதையில் ஹைக்கூவும் பின்நவீனமும் மரபுக் கவிதையும் சிலாக்கியங்களும் ஜெய மோகனும், மிலோஸ் போர்மெனும், தி மேன் இன் தி மூன் படமும் வின் டாக்கர்சும் அகிரோ க்ரோசாவும் சாரு நிவேதிதாவின் நான் லீனியரும் இன்னும் மிச்ச சொச்சம் இருக்கும் இலக்கிய முகமூடிகளும் தூக்கு போட்டு தொங்கும் முன்னரே விடுதிக் காவலாளியின் இருப்பை சமாளிக்க முடியாமல் என்ன கருமத்தியாவது செய்ங்கடா என உளறிய படியே இருட்டில் கரைந்து போனது " பின் நவீனத்தினை இன்றைக்காவது விளக்குவார்களா என ஆவலோடு வந்திருந்த என் கேள்வி"

இப் பதிவுக்கு காரணமான தம்பியின் கொலைவெறிப் பதிவு இங்கே யாராவது என்னை கோபித்தால் அங்கே போய் கும்மவும்

Tuesday, September 25, 2007

தலித் மக்கள் மீது ஞாநிக்குத்தான் எத்தனை பரிவு, எத்தனை பாசம்.

தந்தை பெரியார், பார்ப்பனர்களை, வைதீகப் பார்ப்பனர் என்றும், லௌகீகப் பார்ப்பனர் என்றும் இரண்டு வகையாகப் பிரிப்பார். ஞாநி ஒரு லௌகீகப் பார்ப்பனர். அவர் அரசியலை அலசுவார், சமூகநீதி பேசுவார், அறிந்தும் அறியாமலும் இருக்கும் பாலியல் உணர்வுகளைப் பாடமாய் நடத்துவார், எங்கு சென்றாலும், தன் முற்போக்கு முகத்தை மறக்காமல் எடுத்துச் செல்வார்.

ஆனால், அவருக்குள் புதைந்து கிடந்த திராவிட இயக்க எதிர்ப்பு, கலைஞர் எதிர்ப்பு போன்றவை பூனைக்குட்டி வெளியே வருவது போல் இப்போது வெளிவரத் தொடங்கி விட்டன.

முரசொலி மாறனுக்கு அஞ்சல்தலை வெளியிட்டது பற்றி எழுதுகையில், தேசிய விலங்குகளுக்கு எல்லாம் கூட அஞ்சல்தலை வெளியிடப்படும்போது மாறனுக்கும் வெளியிட்டால் என்ன என்பது போல் குறிப்பிட்டிருந்தார். நெஞ்சு நிறைய அப்பிக்கிடக்கும் பகையும், வன்மமும் அந்த வரிகளில் அப்படியே வெளிப்பட்டன.

கண்ணகி சிலையைக் கரடி பொம்மையோடு ஒப்பிட்டுத் தன் மேதாவித் தனத்தை ஒருமுறை வெளிப்படுத்தினார். இப்போது ஆனந்த விகடனில், ஸ்டாலினுக்கு இருக்கும் எல்லாத் திறமையும் பரிதி இளம்வழுதிக்கும் உண்டுதானே என்று எழுதி, தி.மு.க.விற்குள் சிண்டுமுடியும் சின்னத்தனத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

என் குடும்பத்தில் தலித் மருமகள் இருக்கிறார் என்பது போன்ற வெற்று அறிக்கைகள் விடுவதைக் கைவிட்டுவிட்டு, எங்கள் கட்சியின் சார்பில் ஒரு தலித் முதலமைச்சராக்கப்படுகிறார் என்று கலைஞர் அறிக்கைவிட வேண்டுமாம், ஒரு தலித் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று ஞாநி கனவு காண்கிறாராம். அடடா, தலித் மக்கள் மீது ஞாநிக்குத்தான் எத்தனை பரிவு, எத்தனை பாசம்.

அண்மையில் அவருக்கு ஆனந்தவிகடனில் ஒரு பெரிய பொறுப்பு கொடுத்துள்ளதாகக் கேள்விப்பட்டேன். அந்தப் பதவி எல்லாம் எனக்கு வேண்டாம், யாராவது ஒரு தலித் நண்பருக்குக் கொடுத்துவிடுங்கள் என்று அவர் சொன்னதாகத் தெரியவில்லை. கனவெல்லாம், கலைஞரைப் பற்றி மட்டும்தான் போலும். குறைந்த பட்சம் ஜெயலலிதாவிடம் இருந்தும் அப்படி ஓர் அறிக்கை வர வேண்டுமென்று அவர் கனவு கண்டிருக்கலாம்.

தங்கள் நெஞ்சில் பட்டதை அப்படியே சொல்லிவிடும் முரடர்கள்தான் நாமெல்லாம். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் பக்குவமெல்லாம் நம்மில் பலருக்கு இன்னும் கைவரவில்லை. பாருங்கள். அது ஞாநிக்கு எவ்வளவு அழகாய்க் கைவருகிறது என்று!

தி.மு.க. விற்குள் உட்கட்சி சண்டையும், குழப்பமும் வரவேண்டும் என்னும் தன் ஆசையை நேரடியாகச் சொல்லும் முரட்டுத்தனம் அவரிடம் இல்லை. பரிதி முதலமைச்சராக வரவேண்டும் என்று கனவு காண்பதாகச் சொல்லிவிட்டால், பிறகு அதை எதிர்ப்பது கடினம். எதிர்ப்பவர்களைத் தலித் விரோதி என்று சொல்லிவிடலாம், ஞாநியின் கனவு பலிக்கும் வரையில், தி.மு.க.விற்கும் தலித் விரோதக் கட்சி என்று முத்திரை குத்திவிடலாம்.

இப்படிப் பல்வேறு சித்து விளையாட்டுகளை ஞாநி அந்தக் கட்டுரையில் செய்து பார்த்திருக்கிறார்.

ஆனாலும், வரலாறு நமக்கு ஓர் உண்மையைச் சொல்கிறது. திராவிட இயக்கத்தில் தலித் தோழர்களுக்கு எப்போதும் இடம் இருந்திருக்கிறது என்பதே அந்த உண்மை. மீனாம்பாள், சிவராஜ், தொண்டு வீராசாமி, சத்தியவாணி முத்து தொடங்கி இன்று வரை அதன் தொடர்ச்சியை நம்மால் காணமுடியும். அண்மையில் கூட தன் பேரனை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் அனைத்துத் தகுதிகளும் வாய்ந்த ஆ.இராசாவைத்தான் அமைச்சராக ஆக்கியுள்ளார் கலைஞர். தமிழக அரசிலும், ஆதிதிராவிட நலத்துறைக்கு மட்டுமின்றி, பால்வளத்துறைக்கும் ஒரு தலித் நண்பரே அமைச்சராக உள்ளார் என்பதை நாம் அறிவோம்.

இந்த உண்மைகளை எல்லாம் மறைத்து விட்டு, தலித் மக்களின் முன்னேற்றத்தில் தி.மு.க. அக்கறை காட்ட வேண்டும் என்பது போல் அறிவுரை சொல்வதும், கனவு காண்பதாய்க் கதைவிடுவதும், கிழிந்துதொங்கும் அவரது முற்போக்கு முகமூடியையே நமக்கு அடையாளம் காட்டுகிறது.

பரிதிஇளம்வழுதியின் மீது நமக்கெல்லாம் இல்லாத பாசம், திடீரென்று அவருக்கு எங்கிருந்து பொத்துக் கொண்டு வந்தது? இதுவரை பரிதியின் திறமையைப் பாராட்டி அவர் எத்தனை இடங்களில் எழுதியும் பேசியுமிருக்கிறார்? எந்தெந்த வகைகளில் ஸ்டாலின் மற்றும் பரிதியின் திறமைகளை ஒப்பிட்டு ஆராய்ந்திருக்கிறார்? பொத்தாம் பொதுவில். போகிற போக்கில், ஒரு குற்றச்சாட்டை வீசிவிட்டுப் போவதென்பது, எவ்வளவு உள்நோக்கமுடையது என்பதை நாம் உணரவேண்டும்.

தந்தை பெரியார் ஓர் இடத்தில் சொல்லுவார், வைதீகப் பார்ப்பனர்களைவிட லௌகீகப் பார்ப்பனர்களே ஆபத்தானவர்கள் என்று!

-சுபவீ -

Monday, September 24, 2007

வந்தேறிய வரலாற்றை மணல் திட்டில் மறைக்கப் பார்க்கும் பார்பன சூழ்ச்சி !!

பார்பனர்கள் இந்தியாவிற்குள் கைபர் போலன் கனவாய் வழியாக வந்தேறிய ஆரியர்கள் என்பது வரலாற்று உண்மையாக ஆகிவிட்ட நிலையில், தாம் வந்தேறிகள் என்பதை மறைப்பது எப்படி என்பதில் உடனடி உபாயம் கிடைக்காததால் பலவித அர்சனைகளை ஆங்கிலேயே மெக்கல்லனுக்கு செய்துவந்தார்கள். வெள்ளையனை பார்பனர்கள் வெறுத்து விடுதலை போராட்டத்திற்கு குதித்தற்கும் வெள்ளையர்கள் இவர்களை வந்தேறிகள் என்று அறிவித்ததாலேயே தான். அதற்கு முன்பு வெள்ளையர்களுக்கு அடிவருடியவர்களில் பெரும்பாண்மையினர் பார்பனர்களே. வெள்ளையர்கள் பார்பனர்களை வந்தேறியவர்கள் என்று பகிரங்கப்படுத்திய பின், நூற்றாண்டுகாலம் குடுமியை அவிழ்த்தும் முடிந்தும் யோசித்ததில் வந்தேறிகள் என்ற வரலாற்றை மறைக்க வழியே தெரியவில்லை.

நிலமை இப்படி சென்று கொண்டிந்த போது கடந்த ஐந்தாண்டுக்கு முன் நாசா செயற்கைகோள் வழியாக எடுத்த இலங்கை - இந்திய கடல்பகுதியில் ஆதாம் பாலம் எனப்படும் மண்ல்திட்டின் புகைப்படம் வெளியானது. அதற்கு முன்பு அப்படி ஒன்று இருப்பதோ, அது இராமர் பாலம் என்று சொல்லப்பட்டு வந்தது இல்லை. அந்த புகைப்படத்தை வைத்து நாசாவில் வேலை பார்க்கும் சர்வசேத பார்புகள் அது இராமர் பாலம் என்று கதை கட்டினால் பார்பனர்களும் பார்பன இலக்கியமான இராமாயணமும் இந்தியாவில் 15,000,00 (பதினைந்து லட்சமாம்) ஆண்டுகளாக இருப்பவை என்று கதை கட்ட முடியும் என்று திட்டுமிட்டு, மணல் திட்டை இராமரின் கயிற்றுப் பாலமாக திரித்து சொல்கின்றன, இராமயண கதைப்படி குரங்குகள் அமைத்த பாலம் மிதந்ததாம்.

இந்து உணர்வை தூண்டிவிட்டால் அரசாங்கத்தின் சேது சமுத்திர திட்டத்தை நிறுத்திவிடலாம் என்பதோ, அந்த பாலத்தை உடையாமல் தடுத்துவிடலாம் என்பதோ தற்போதைய உண்மையான நோக்கம் அல்ல. பார்பனர்கள் இந்தியாவை சேர்ந்த முன்னாள் குடிமக்கள் என்று காட்டுவதற்காக செய்யப்படும் மலிவு அரசியல் இது. இவர்கள் என்னதான் இதை தடுத்து நிறுத்தினாலும் இவர்கள் வந்தேறிகள் என்று நிரூபணம் செய்யப்பட்டதை இனி மாற்ற முடியாது. ஆனால் பாஜாகவுக்கு இந்து ஓட்டுகள் விழும் என்ற மற்றொரு எதிர்பார்ப்பை வேண்டுமானால் இந்த மலிவான மணல் திட்டு அரசியலால் உணர்ச்சி வசப்பட்டு ஏமாந்த இந்துக்களால் கிடைக்கலாம்.

Wednesday, September 19, 2007

ராம பக்தர்கள் செய்ததில் தவறென்ன?

நேற்று இரவு பெங்களூரு வில் கருணாநிதியின் மகள் செல்வி-முரசொலிசெல்வம் இல்லத்தில் பெட்ரோல் குண்டு வீச்சும் கல்லடித் தாக்குதல்களும் நடைபெற்றதாக செய்திகள் வெளியாகி உள்ளன. திராவிட அரசியல் வன்முறைக்கு சற்றும் சளைத்தவர்கள் இல்லை நாங்கள் என இந்துவியாதிகள் இன்னொரு முறை உரக்கச் சொல்லும் செய்தி இதுதான். பாபர் மசூதி, ராமன் கோயில் , இன்னும் என்ன கருமம் எல்லாம் ராமனின் பெயரால் நடக்கும் என்பது தெரியாவிட்டாலும் வாலியை மறைந்திருந்து சூழ்ச்சியால் கொன்றதாக அந்த மடையர்களே ஒத்துக்கொள்ளும் ராமனின் சீடர்கள் அல்லவா அவர்கள் போக்கு அப்படித்தான் இருக்கும்.

தமிழகத்தின் முதல்வர் சொன்ன கருத்துக்கு பதிலடி தரத் தெரியாத இந்து ராமனின் இன வெறியர்கள் கர்நாடகத்தில் கைவரிசை காட்டியுள்ளனர். ராமன் பாலம் கட்டினான் என்று என் மகனிடம் சொன்னால் கூட எந்த காலேஜில் படித்தான் அந்த ராமன் எனக் கேட்பான். அப்படியிருக்க அணுகுண்டுவெடித்து அகில உலகையும் எங்கள் பக்கம் திருப்பினோம் என பிதற்றல் பீற்றல் விடும் பிஜேபி ராமனின் பாலம் அவன் கால் கழுவிய இடம் என்று ஆஃப்பாயில் போடுவதை பார்த்தால் அந்த இல்லாத ராமன் அகில உலகம் அதிர சிரிப்பான்.


ராமன் ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் கட்டிய பாலம் எந்த ராஜாவால் திறந்து வைக்கப் பட்டது என்று ஒரு மண்ணும் தெரியவில்லை. இப்படியிருக்க அந்த மடையர்கள் செல்வியின் இல்லத்தில் என்ன புண்ணாக்குக்காக தாக்குதல் நடத்தினர் என்பதை யாரேனும் "உண்மை பெங்களூர் பதிவரோ இல்லை பின்னூட்ட புகழ் பாலாவோ தெரிவிப்பது நலம்"

அத்தாக்குதலின் போது சில துண்டுப் பிரசுரங்களும் வீசப் பட்டனவாம் அதில் இனியும் கருணாநிதி ராமனை பற்றி இதுபோல பேசிக்கொண்டிருப்பின் இருக்க மாட்டீர்கள் ராவணனுக்கு நேர்ந்த கதிதான் உனக்கும் என அந்த பிரசுரங்களில் தெரிவிக்கப் பட்டிருந்ததாம் அட மடையர்களே நாங்கள் ராமனே இல்லை என்கிறோம் ராவணன் இருந்தான் என ஏனடா கொதிக்கிக்றீர்கள் என நான் கேட்கவில்லை எங்கள் வீட்டு நாய் கேட்கிறது. நல்ல வேலையாகக புழுத்த இந்துத்துவ அரசியல் அந்த நாய்க்குத் தெரியாது இல்லாவிட்டால் என்னை திராவிடக் குஞ்சே என விளித்து பின்னூட்டம் போட்ட்டாலும் போடும்.

அந்த ராமர் பாலம் சேது சமுத்திரத் திட்டம் வருவதற்கு முன்னரும் அங்கே தான் இருந்தது அதை போற்றிப் பாதுகாக்க இதற்கு முன்னர் ஆட்சி செய்த இந்து வெறி பிஜேபி அரசாவது முயன்றதாக தெரியவில்லை. அதில் சேது சமுத்திர திட்டம் அமுல்படுத்த ஆங்கிலேய காலம் தொட்டே திட்டம் இருப்பதும் அவர்களுக்கு தெரியும் அப்போதெல்லாம் ஒன்றும் செய்யாமல் அவ்வளவு ஏன் இந்த அதிமுக இரண்டு முறை ஆட்சியில் இருந்த போதாவது இந்த சமுத்திரத் திட்டத்தை எங்களுக்கு வேண்டாம் என மத்திய அரசுக்கு சொல்லியிருக்கலாம் அதையும் செய்ததாக தெரியவில்லை.

இந்த திமுக திம்மி அரசாங்கம் வந்த போதுதான் எல்லா சாமிகளும் அம்மாக்களுக்கும் முழித்துக் கொண்டனர். சேது சமுத்திர திட்டம் செயல் படுத்த படவேண்டும் என தீராத ஆவலை தெரிவித்து பாராளுமன்றத்தில் முழக்கமிட்ட புரட்சிப் புயல் வைகோ அம்மாவின் ஆதரவில் இருப்பதாலோ என்னவோ சேது எனும் பேரைக் கேட்டாலே செலக்டிவ் அம்னீஷியா வந்து "ரோம் நகரிலே இப்படித்தான் என பொதுக்கூட்டம் பேசப் போகிறார்.

இப்படி ஆளாளுக்கு அம்போவென விட்ட ராமரை "ச்சே" ராமர் பாலத்தை மீண்டும் சீர்திருத்தி இலங்கைக்கு என்ன வல்வோ பஸ் சர்வீஸா தொடங்கப் போகிறார்கள் ?

இந்த பதிவின் தலைப்புக்கும் பதிவுக்கும் என்ன சம்பந்தம் என்பவர்களுக்கு: நீங்க தமிழ்மணத்துக்கு புதுசா?

Thursday, September 13, 2007

இந்திய தேசியத்துக்கே உலை வைத்த பழ.நெடுமாறன் !

நேற்று இந்திய கடல் எல்லையை தாண்டி ஈழ விடுதலைப் புலிகளுக்கு பெருமளவில் ஆயுதங்களையும் போராளிகளையும் சட்டவிரோதமாக அரசுக்கு தெரியாமல் கடத்தி போராளிகளின் போராட்டத்தில் பங்கெடுக்க புறப்பட்ட தேசிய விரோதி பழ.நெடுமாறனை கைது செய்ததன் மூலம் இந்தியா உலக அரங்கில் தன் பெருமையை நிலை நாட்டி உள்ளது.

செப்டம்பர் ஐந்தாம் தேதி இலங்கை பாராளுமன்ற எதிர்கட்சி எம்.பி ரணவக்க பேசியபோது. பழ.நெடுமாறன் தமிழகத்தில் இருந்து புறப்பட்டு கடல் மார்க்கமாக விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்ய வருவதாகவும் இதனை கருணாநிதி அரசும் இந்திய மைய்ய அரசாங்கமும் வேடிக்கை பார்ப்பதாகவும் குற்றம் சாட்டினார். அப்படி கருணாநிதியும் மைய்ய அரசும் வேடிக்கை பார்க்க காரணம் நெடுமாறன் தனது ஆதரவை விலக்கிக் கொண்டால் இந்திய பாராளுமன்றம் கலைக்கப் படும் அபாயம் இருப்பதாலேயே என்றும் ஒரு குண்டை போட்டு உறுப்பினர்களை திகைப்பில், வியப்பில் பின் சிரிப்பில் தள்ளினார் ரணவக்க.

தனது தேசியம் தான் முக்கியம் என என்னும் இந்திய அரசு காஷ்மீர் தீவிர வாதிகளோடும் பாகிஸ்தானோடும் தனது பேச்சு வார்த்தைகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு அடுத்த காரியமாக காஷ்மீரை பாகிஸ்தானுக்கு பத்திரம் செய்த்து கொடுக்கலாம் அங்கே வாழும் இந்துக்களை வெளியேற்றி விட்டு ஒரு அணுகுண்டு சோதனை நடத்தினால் எல்லாம் புஸ்ஸ்ஸ்ஸ்.... பிறகு பாகிஸ்தான் காஷ்மீர் வேண்டும் என்றே கேட்காது. நமக்கும் தொல்லை இல்லை.

மனிதாபிமான அடிப்படையிலான உணவுப் பொருள்களை கூட வழங்க மறுக்கும் இந்தியா எந்த அடிப்படையில் இலங்கைக்கு ஆயுத சப்ளை செய்கிறது என்று ஒரு கன்றாவியும் தெரியவில்லை. எல்லாம் பிராந்திய வல்லரசாக இலங்கையின் உதவி தேவை என எண்ணும் குட்டி மனப்பான்மையா இல்லை சீனா அங்கே காலடி வைத்தால் அல்லது பாகிஸ்தான் வைத்தால் பக்கத்து இந்தியாவை பதம்பார்த்து விடுவார்கள் என்ற பயமா என்று அந்த மன்(ண்)மோகன் சிங்குக்கே வெளிச்சம்.

பழ நெடுமாறன் அப்படி என்ன கள்ளத்தனமாக செல்ல முயன்றாரா என்ன? இல்லை 7 மாதங்களுக்கும் மேலாக இந்திய நடுவன் அரசு, தமிழக அரசு, செஞ்சிலுவை சங்கம் என எல்லா முயற்ச்சிகளையும் மேற்கொண்டு பலனளிக்காத காரணத்தினாலேயே இந்த முயற்ச்சி எடுக்கப் பட்டது. அவர்கள் எடுத்துச் செல்வது ஆயுதங்கள் அல்ல தமிழ் மக்களின் உணர்வுகள். அவர்கள் செய்வது உதவிகள் அல்ல கடமைகள் கடமை. கண்ணியம்
கட்டுப்பாடு என்ற தார்மீக மந்திரத்தை தனது கோஷ்மாக கொண்ட திராவிட முன்னேற்ற கழக ஆட்சி தனது கடமையில் இருந்து விலகுகிறதா?

ஆயுதப் போராட்டம் செய்யும் தமிழன் உணவும் மருந்தும் இல்லாமல் இறந்துபோக வேண்டும் என்பதே இந்திய தேசியம் பேசும் அரசாங்கத்தின் உணர்வாக இருக்கிறது. தனது எல்லா நடவடிக்கைகளும் இலங்கை இனவாத அரசாங்கத்தின் அடிப்பொடியாகவும் தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தொழிப்பதையும் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு ராஜிவ் காந்தி கொலை என்னும் ஒரு விரும்பத் தகாத சம்பவத்துக்கு பழிவாங்கத் துடிக்கிறது.

எல்லா எல்லைகளும் அடைக்கப் பட்டாலும் எங்களுக்கான எல்லைகள் திறந்தே கிடக்கின்றன என்று வன்னியை தலைமையாகக் கொண்ட புலிகளின் தமிழீழம் மலரும். இந்தியா அப்போது தனது மிக நெருங்கிய நண்பனாக வடகிழக்கின் ஆதிக்கம் கொண்ட தமிழீழ அரசாங்கத்தையே நாடவேண்டி இருக்கும் தனது கடல் எல்லைகளை தமிழர்களின் எல்லைகளோடே பங்குபோடவேண்டி இருக்கும். பாரா முகம் காட்டும் இந்த மனோபாவம் தொடர்ந்து தொடர்ந்தால் அப்போது எந்த முகத்தோடு புலிகளின் அரசாங்கத்தை எதிகொள்ளும் இந்தியா?.

கடைசியாய் ஒன்று

ஈழத் தமிழர்களே எங்களையும் எங்கள் அரசாங்கத்தையும் மன்னித்துவிடுங்கள்.

Wednesday, September 05, 2007

தோழி தமிழச்சிக்கு


பாரிஸ் மாநகரிலும் பகுத்தறிவை படையல் போட்டு விநாயகனுக்கு வினா எழுப்பிய தோழி தமிழச்சிக்கு

வாழ்த்துக்கள்!


டிஸ்க்கி:
தமிழச்சியை வாழ்த்தாதவர்கள் பகுத்தறிவுப் பாசறையில் இல்லாத வெங்காயங்கள் என்று முகமூடி கழட்டி அம்பலப் படுத்தப் படுவார்கள் என எனக்கு ஜி டாக்கில் கொலைமிரட்டலோடு கட்டளையிட்ட லக்கி லுக், வரவணையான் மற்றும் அனானி நன்பர்களுக்கு நன்றி

Friday, August 31, 2007

என்னை போலியின் தொண்டன் என்ற தமிழ்ப் பித்தனுக்கு நன்றி

கொஞ்ச நாளுக்கு முன்ன நான் ஒரு பதிவு போட்டேன் "அடத் தூ ஒங்களுக்கு யாருதான் ஒரிஜினல் பதிவர்னு சொல்லி அதுக்கு காரணம் இருக்கு. ஏன்னா எனக்கு நெருக்கமான சில பதிவர்கள் என்னை தொடர்பு கொண்டு நான் போலின்னு ஒரு பிம்பத்த உருவாக்க சிலர் பாடுபடுவதா சொன்னாங்க அப்போவெல்லாம் அட விடுங்க அவனுங்க அப்படித்தான்னு விட்டுட்டேன் சும்மா ஒரு கலாய்த்தல் பதிவு போட்டுட்டு. இப்போ இவங்க அடிச்சிகிட்டு இருக்கும் போது மறுபடியும் தேவையே இல்லாம என்னை இதுக்குள்ள இழுத்து விட்டு என்ன லாபம் கிடைக்க போகுதுன்னு தெரியல. சரி விஷயத்துக்கு வரலாம்.

தமிழ்பித்தன்னு ஒரு ஐஎஸ் ஓ 2008 விருது வாங்குன தமிழ் பதிவர் ஒருத்தர் ஆடிக்கு ஒன்னு அமாவாசைக்கு ஒன்னுன்னு ஒரு அரணா கயித்த காணோம் என்னோட சொம்ப நாய் நக்கிறுச்சின்னு பதிவு போடுவாரு அதும் தமிழ் மண முகப்பில் இருந்துட்டு அப்படியே வானவில்லு மாறி மறஞ்சுபோகும் என்ன செஞ்சும் சூட்ட கிளப்பற மாதிரி பதிவு போடத் தெரியல பாத்தாரு என்ன இப்போதைக்கு லேட்டஸ்டு இவ்வனுங்கதான் அப்படீன்னு என்னையும் இதுல இத்து விட்டு சூட்ட கிளப்ப பாக்குறாரு.

(ச்சூடான இடுகைல வரதுக்கு ச்சூடு பதிவுக்கு உள்ள இருக்க கூடாது தலைப்பிலயே இருக்கனும் அதுகூட தெரியல இன்னும் பாவம் உங்களுக்கு என்னோட பரிந்துரை உங்க பதிவுக்கு
"சிக்கினார் போலியின் அல்லக்கை, மகேந்திரனுக்கு வெகுவிரைவில் ஆப்பு" இப்படி இருக்கனும் தெரிதா?)

அண்ணே தமிழ்பித்தண்ணே என்னன போலியோட தொண்டன்னு சொன்னீங்களே அதுக்கு என்ன காரணம்ணா? தெரிஞ்சுக்கலாமா? ஏன்னா நான் உண்மைலயே தொண்டன் தானான்னு தெரிஞ்சுக்கலாமில்ல அதனாலதான் எங்கயாவது எனக்கு தெரியாம போலியை நான் ஆதரிப்பதாக பதிவோ இல்லை வேற எதுவோ எழுதித் தொலைச்சிருந்தா அதையெல்லாம் அவசர அவசரமா அழிச்சிடலாமில்ல அதுக்குத்தான்.

அப்றம் ஒங்களுக்கு ஒரு நன்றி எதுக்குன்னு கேக்குறீங்களா எல்லாருமென்னை போலின்னே சொல்லும்போது நீங்களாவது கொஞ்சம் பெரிய மனசு "பன்னி" தொண்டன்னு சொன்னீங்களே அதுக்கு!

வேற எதும் விவரம் தேவைன்னா சொல்லி அனுப்புங்க ...

பி.கு.( எனக்கு கோவம் அதிகமா வந்தா ரொம்ப மரியாதையா பதிவு எழுதுவேன் அதுக்கு இந்த பதிவே சாட்சி)

Thursday, August 30, 2007

லூஸ் டாக்ஸ் ( நாய்கள் அல்ல)

நண்பர் ஓசை செல்லா என்னை லூசு என்று சொல்லி இருந்தார். ஒத்துக் கொள்கிறேன். மேற்படி ஓசை செல்லாவுக்கும் கருப்புவுக்கும் பிரச்சனை வந்தது நேற்றோ, இன்றோ இல்லை, ஒரு மாதத்திற்கு முன்பே இருவருக்கும் முட்டிக் கொண்டது அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

மீண்டும் என்று ஒருவர் காலை ஒருவர் நக்கிக் கொண்டார்கள் என்று தெரியவில்லை, கருப்பு அனுப்பிய மெயில் என்று கிருபானந்த வாரியார் பற்றிய கட்டுரையை வெளியிட்டு சிலாகித்துக் கொண்டார். அவர் அந்த பதிவில் கொடுத்த சுட்டியை வைத்து கருப்பு பதிவுக்கே சென்று பலரும் பின்னூட்டினர்.

இவர்கள் என்று அடித்துக் கொள்வார்கள், சேர்ந்து கொள்வார்கள் என்றே தெரியாது, இந்த அவலெட்சணத்தில் என்னை லூசா என்று கேட்பதற்கு ஓசை செல்லாவுக்கு எதாவது ஆகி இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

இது போல் டோண்டு இராகவன் என்ற பார்பன புகழ் நபரும் விடாது கருப்புக்கு நன்றி என்று பதிவைப் போட்டு கருப்புவின் காலை நக்கினார்.

இவனுங்க எப்போ எதிரிஆவானுங்க நண்பன் ஆவானுங்க என்று எந்த நாய்க்குமே தெரியாது. இதில் ஏங்கடா சாமிகளா என்னைப் பார்த்து ?

செல்லா ,
போருக்கு தயாராகிறேன் என்ற சுகிர்தராணி கவிதையும், நாய்களும் நானும் கவிதையும் எந்த இடத்திலாவது யாரையாவது ஆதரித்திருக்கிறதா? அப்படி என்ன அர்த்தம் பார்க்கக் கூட முடியாத அவசரம் உங்களுக்கு? முதலில் இந்த லூசுத்தணமாக ஒரு விஷயத்தை ஆராயாமல் அவசரப் பட்டு அடுத்தவனை லூசு எனச்சொல்லும் லூசுத் தனத்தினை கைவிடவும்.

Monday, August 27, 2007

பார்பனர்கள் இட ஒதுக்கீடு பெற யோஜனை.

அண்மையில் உச்சநீதிமன்றத்தில் சாதிகள் ஒழிக்கப்பட வேண்டும் என்ற அக்மார்க் 'அக்கரையில்' சொல்லப்பட்ட 'மனு'வின் விவரம்

இந்தியாவில் சாதிகள் அடிப்படையில் இட ஒதுக்கீடு இருப்பதனால், பலர் படிப்பதற்கு வழி இன்றி தவிர்கின்றனர்.

"ஆயிரக்கணக்கான ஜாதிகளால் நாடே பிளவுப்பட்டு இருக்கும் போது இந்தியாவை ஒரு நாடு என்று அழைக்க முடியாது. ஜாதியும், சகோதர மனப்பான்மையும் ஒன்றுடன் ஒன்று ஒத்து போகாது. எனவே இரண்டும் நிலைத்து இருக்க வேண்டும் என்பது முடியாத காரியம். ஜாதியத்தால் இந்துக்கள் அழிந்து விடுவர். கல்வி மற்றும் வேலை வாய்ப்பால், இட ஒதுக்கீட்டால் வாய்ப்பு கிடைக்காத இளைஞர்கள் வெறுத்து போய் உள்ளனர். அவர்களை இனம் கண்டு நக்சலைட்டுகள் தங்கள் வசம் மாற்றி வருகின்றனர். இதனால், நக்சலைட் அமைப்பு வளர்ந்து வருகிறது. சமூக ஒருமைப்பாடு மற்றும் சமூக, ஜனநாயக கட்டமைப்புக்கு ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு மிகப்பெரிய அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது. ஜாதி, மதம், பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் குடிமக்களை வேற்றுமைபடுத்த கூடாது என்று அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு அரசியல் சட்டத்துக்கு முரணானது. இதர பிற்படுத்தப்பட்ட மக்களில் மேல் மட்டத்தில் உள்ளவர்களே ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டினால் பலன் பெறுகின்றனர். கீழ்மட்ட மக்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். இட ஒதுக்கீட்டில் இருந்து கிரீமி லேயரை நீக்காதவரை ஜாதி ரீதியான இட ஒதுக்கீடு பலன் தராது."

ச்சே......., படிப்பதற்கே பரிதாபமாக இருக்கிறது,

ஒரு குடுமி ஆசாமி ஸொல்றார்,

'உழைச்சு சாப்பிடுங்கடா என்றார்கள்' படித்துவிட்டு அரசாங்க 'உயர்' பதவிகளில் உட்கார்ந்தோம், மிலிட்டெரி, போலிஸ் என உடம்பு வளைந்து வேலை செய்யும் அளவுக்கு அசைவம் சாப்பிட்ட தேகம் இல்லை, எனவே அதிகாரிகளாகத்தான் 'உயர்ந்தோம்', இட ஒதுக்கீடு எல்லாத்துக்கும் வேட்டுவச்சிட்டு, எங்கவா எல்லோரும் நக்சலைட்டா மாறப்போறா, எல்லோரும் லைட்டா எடுத்துக்காதிங்க'

ஏன் ச்சாமி, நக்சலைட்டு, டியூப்லைட்டுன்னு மாறுவதற்கு பதில், இஸ்லாமிய மததிற்கோ , கிறித்துவ மதத்திற்கோ பூணூலை கழட்டிப் போட்டுண்டு மதம் மாறிடலாமே, ஏன் சாமி பாழாப் போன இந்துமதத்தை கட்டிண்டி அழரேள். அங்கே போனாலும் 'பிசி' ஆக மாறி அரசாங்க சலுகையை நன்னா அனுபவிக்கலாம். நக்சலைட்டா மாறிட்டேள்னா, எப்போதாவது கண்டுபிடிச்சுட்டாள்னா போலிஸ்காரன் பூணூலை கழுத்தில் போட்டு இறுக்குவானே, சாமி பேசாம மதம் மாறிடுங்கோ, இதான் நல்ல யோஜனையாப் படறது. உங்கவா அறிவுக்கும், திறமைக்கும் எடுக்கிற மார்க்குக்கு பிசி(BC)யில் இருந்தேள்னா எங்கேயோ போய்டலாம். செய்வேளா ?

Saturday, August 25, 2007

விஞ்ஞானி துரைமுருகன் தனது காமெடிடைமை சட்டசபையோடு நிறுத்திக்கொள்ளட்டும்

ஜூனியர் விகடனில் மணல்கொள்ளை குறித்து ராமதாஸுக்கு பதில் தரும் விதமாக ஒரு புதிய விஞ்ஞான உண்மையை வெளிப்படுத்தி இருக்கிறார் துரைமுருகன். அதாவது

"மணல் அள்ளுவதால் விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது என்றும் கூறியிருக் கிறார் ராமதாஸ். அவருக்கு ஒன்றைச் சுட்டிக்காட்ட நினைக்கிறேன்... ஆற்றில் மணல் அள்ளாவிட்டால்தான், மணல் குவிந்து மேடாகிவிடும். பிறகு தண்ணீர் வரும்போது ஓட்டம் தடைப்பட்டு, ஊருக்குள்ளும் விவசாய நிலங்களிலும் புகுந்து மக்களுக்கு சிரமத்தைக் கொடுக்கும். இதைத் தவிர்க்கத்தான் காலம்காலமாக ஆற்றில் மணல் அள்ளி வருகிறோம். "

அடக் கொடுமையே ராமதாஸ் சொல்றதுக்கு எதிர்ப்பை சொல்ல வேற ஒன்னுமேவா கிடைக்கல என்னோட அனுபவத்த சொல்றேன் கேளுங்க

அப்போ எனக்கு 10 வயசு இருக்கும் சரியான கோடை வெயில் எங்க ஊர் ஆறு தினம் மழைபேஞ்சா ஒரு நாலு நாளைக்கு வெள்ளம் போகும் அதும் கூட எங்க ஊரத் தாண்டி ஓடனும்னா ஒரு வாரம் பேயனும் ஆனா அந்த குட்டியூண்டு வெள்ளத்தை வச்சே எங்க ஆத்து மோட்டாரு ஒரு வருசம் முழுக்க தண்ணி இறைக்கும் இத வச்சித்தான் எங்க வயல் நெல்லாகவும் கரும்பாவும் தெண்ணையாவும் காச அள்ளித் தந்தது. அப்போ எங்க ஊரு முழுக்க கூறை வீடுங்கதான் அதிகம் மெத்தை வீடுங்க இல்லை. எங்க மோட்டார் தண்ணி இறைக்க போட்ட போரின் ஆழம் வெறும் 17 அடி எந்த நாளும் வற்றாது எங்ககிட்ட ஒரு கிணறு இருக்கு அது 20 அடி ஆழம்தான் இன்னிக்கு வரைக்கும் வத்தினதில்ல. அது ஆத்தை விட்டு கொஞ்சம் உள்ள தள்ளி இருக்கு வயலுக்குள்ள அது இந்த 65 வருசத்தில் வத்தினதே இல்லைன்னு எங்க அப்பா சொல்றாரு. சரி விஷயத்துக்கு வருவோம்.
அப்போ அப்ப்டியெல்லாம் இருந்த எங்க ஆத்து நீர்நிலை இப்போ எப்படி இருக்கு? போன வருசம் தமிழகம் எங்கும் பேஞ்ச கணத்த பேய் மழைல எங்க ஊருக்குள்ள எல்லாம் வெள்ளமாம் எங்க ஊர் பசங்க சொன்னாங்க ஆனா என்ன கொடுமை அந்த வெள்ளமும் 10 நாளில் வடிஞ்சி போச்சி... தண்ணியிறைக்கிற மோட்டார் பம்புசெட்டெல்லாம் தண்ணி புகுந்து ரிப்பேர் ஆச்சு அத சரி செஞ்சி வைக்கறதுக்கு முன்ன ஆத்துல ஓடுன வெள்ளம் வடிஞ்சி போச்சி. அப்போ 17 அடியில இருந்து தண்ணிய அள்ளி கொட்டுன மோடார் இன்னிக்கும் கொட்டுதுதான் ஆனா 17 அடியில இருந்து இல்ல 42 அடியில இருந்து. அட எங்களை மாதிரி கொஞ்சம் கையில காசு வைச்சி விவசாயம் (கடன் வாங்கியாவது) பாக்குறவன் எதாவது ஒரு வகையில இன்னும் ஆழமா போர் போட்டு தண்ணியிறைக்கலாம் ஆனா அடுத்தவங்க தயவில மோட்டார் தண்ணி பாசனம் பன்றவங்க என்ன பன்ன? இந்த கஷ்ட காலத்துக்கெல்லாம் யார் காரணம் என்ன காரணம்? எல்லாம் இந்த ஆத்துல அடிக்கிற மணல் லோடு லோடா போய் மாடி வீடாவும் காண்கிரீட் காடாகவும் மாறிக் கிடக்கே அதனாலதான். அதனாலதான் எங்க ஏரியா முழுக்க தண்ணீர் பஞ்சம். இது தலைவிரிச்சி ஆட ஆரம்பிக்கும் முன்ன எதாவது செய்யனும்னு பாக்குறோம் எவன் கேக்குறான்? எல்லாம் அரசியல் எங்க போய் முறையிட்டாலும் இந்த அரசியல் அங்கயும் வந்துடுது. அதனாலதான் மணல் கொஞ்சமா தேவைப்படும் ஹாலோப்ளாக் முறை தயாரிப்பு கற்களைபயன்படுத்த சொல்லி பலரை கொஞ்சமா மணல் பயன்பாட்டுக்கு மாத்திப்பாக்குறோம், இப்படி விவசாயிகளோட வாழ்வாதாரமா இருக்கும் தண்ணீர் ஆத்து மணலை ஆதாரமா கொண்டு இருக்கு. 3ம் வகுப்பு பாடத்திலயே மணல்தான் அதிக நீரை தேக்கிவைக்கும் படிச்சதோட இல்லாம இந்த மகேந்திரனுக்கு 5 வருசம் தீவிர விவசாயம் வேற பாத்தோம்கிற விவசாயிக்கே உரித்தான திமிர் இருக்குங்க, அதனால துறைமுருகன் அய்யா உங்க விஞ்ஞான காமெடிகளை சட்டசபைக்கு உள்ள மட்டும் வச்சுக்கோங்க இந்த மாதிரி ஆத்திரமூட்டும் பதில் எல்லாம் சொல்லி மனுசன கடுப்பக் கெளப்பாதீங்க.. ஒரு பாட்டு உங்களுக்கு ஞாபகம் இருக்கா கருத்தம்மா படத்தில

"ஆறு என்ன ஆறு அட போடா வெக்கக்கேடு
மழ வந்தா தண்ணி ஓடும் மறு நாளே வண்டி ஓடும்"

இது எல்லா ஆத்துக்கும் வந்து விவசாயம் மஞ்சத்துண்டு போட்டுக்கறதுக்கு முன்ன கொஞ்சமாவது இந்த மணல் கொள்ளைய தடுங்கய்யா மவராசனுவளா....

Monday, August 20, 2007

பெரியண்ணனின் தகிடுதத்தங்கள் இன்னொரு ஈரானா இந்தியா?

மார்ச் 2, 2006ல் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் மற்றும் இந்திய பிரதம மந்திரி மன்மோகன் சிங் ஆகியோரால் அறிவிக்கப்பட்ட மிகவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட இந்திய, அமெரிக்க நாடுகளுக்கு இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் இப்பொழுது ஒரு இக்கட்டான நிலையில் உள்ளது; சிக்கலகற்றுவதற்கு அச்சுறுத்தலை கொண்டிருக்கிறது. மே 31ம் தேதி புது டில்லியில் அமெரிக்க வெளிவிவகார துணைச் செயலர் (அரசியல் விவகாரங்கள்) மற்றும் இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தத்தின் தலைமை பேச்சுவார்த்தையாளருமான நிக்கோலஸ் பேர்ன்ஸ§க்கும், இந்திய வெளியுறவுச் செயலர் சிவசங்கர் மேனனுக்கும் இடையே உக்கிரமாய் நடந்த மூன்று நாள் பேச்சுவார்த்தைகள் முக்கிய வேறுபாடுகளை தீர்ப்பதில் தோல்வி அடைந்தன.

பேர்ன்ஸ் 123 என அழைக்கப்படும் உடன்பாட்டை அடைவதற்காக முன்கூட்டி நிர்ணயிக்கப்படாத ஒரு பயணத்திற்காக தனிஒரு முனைப்புடன் புது டில்லிக்கு பறந்து வந்தார்; இதற்கு இப்பெயர் கொடுக்கப்பட்ட காரணம் 1954 அமெரிக்க அணுசக்தி சட்டத்தின் (US Atomic Energy Act -USAEA) 123 வது பிரிவின் கீழ் மற்ற நாடுகளுடன் நடத்தப்படும் அமெரிக்க பேச்சுவார்த்தைகளின் இருநாட்டு அணுசக்தி ஒப்பந்தமாக இது இருப்பதால்தான். அவர் புது டில்லிக்கு புறப்படுவதற்கு சற்று முன்னர் பேர்ன்ஸ் பயணம் பற்றி அமெரிக்க தரப்பு உறுதியற்ற தன்மையை காட்டியது; இந்தியாவை இன்னும் சில சலுகைகள் விட்டுக்கொடுக்கும் வகையில் பேச்சுவார்த்தைகளை தூண்டும் உந்துதலாய் இது ஐயத்திற்கு இடமின்றி இருந்தது.

குறிப்பிட்ட நேரத்தில் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை கொள்ளலாம், அதையட்டி புஷ் நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கையின் "வெற்றிகளை" மன்மோகன் சிங் மற்றும் புஷ் இருவரும் ஜேர்மனியில் இருக்கும் ஹைலிகென்டாமில், G8 உச்சி மாநாட்டை ஒட்டி சந்திக்கும்போது அறிவிக்கலாம் என்று பேர்ன்ஸ் நம்பியிருந்தார். உத்தியோக பூர்வமாக இந்தியா நி8 ல் உறுப்பு நாடு இல்லை என்றாலும், மன்மோகன் சிங் உச்சிமாநாட்டின் சில பகுதிகளுக்கு சீனா, பிரேசில், மெக்சிகோ, தென் ஆபிரிக்க தலைவர்கள் அழைக்கப்பட்டது போல், அழைக்கப்பட்டிருந்தார்.

இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தப்படி, இந்தியாவிற்கு ஒரு சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்படும்; அதையட்டி அது அணு தொழில்நுட்பம் மற்றும் யுரேனிய எரிபொருள் அளிப்புக்களை உலகின் அணுசக்தி வணிகத்தை கட்டுப்படுத்தும் அணுசக்தி அளிக்கும் 45 உறுப்பினர்கள் அடங்கிய குழுவிடம் இருந்து (NSG) பெறமுடியும்; இதற்கு ஈடாக இந்தியா தன்னுடைய குடியியல்சார்ந்த அணுவாற்றல் வசதிகளை தனியே இராணுவத்திற்குப் பயன்படுத்தும் வசதிகளிடம் இருந்து பிரிக்க வேண்டும் என்றும் முந்தையதை சர்வதேச அணுசக்தி அமைப்பின் ((International Atomic Energy Agency -IAEA) கண்காணிப்பிற்கு உட்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டது.

இப்படி ((Non-Proliferation Treaty -NPT) ) அணுவாயுதப் பரவலை தடுக்கும் ஒப்பந்தத்தை மீறி அணுவாயுதங்களை தயாரித்துள்ள இந்தியாவிற்கு கொடுக்கப்பட இருந்த சிறப்பு அந்தஸ்து, ஈரானுக்கு எதிராக அமெரிக்கா இடைவிடாமல் அதை அரக்கத்தனமாக சித்திரித்து வருதல், அச்சுறுத்தல் கொடுத்தல் என்பதோடு வேறுபடுத்திப் பார்க்க வேண்டியதாகும். ஈரான் NPT ல் கையெழுத்திட்டுள்ள போதிலும், அமெரிக்கா மிகக் கடுமையாக அது முழு குடியியல் சார்ந்த அணுசக்தித்திட்டத்தை மிகிணிகி கண்காணிப்பில் அபிவிருத்தி செய்யும் உரிமைகளுக்கு மறுப்பு தெரிவித்து, NPT இன் விதிகள் ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதற்கு எதிரான போதுமான எச்சரிக்கைகளை கொண்டிருக்கவில்லை என்றும் கூறுகிறது.

இந்திய-அமெரிக்க 123 உடன்பாட்டின் விவரங்கள் பல மாதங்களாக பேச்சு வார்த்தைகளில் உள்ளன. ஆனால் டிசம்பர் 2006 Henry Hyde Act விதிகள் சிலவற்றின்படி (இவை USAEA இலும் திருத்தம் செய்து அமெரிக்க அரசாங்கம் இந்தியாவுடன் குடியியல் சார்ந்த அணுசக்திக்கு, அது அணுவாயுதங்களை தயாரித்திருந்தபோதிலும் கொள்ளலாம் என்கின்றன), என்பது பெரும் முட்டுக் கட்டைகளாக உள்ளன.

HYDE ACT அறிமுகப்படுத்தும் பல தேவைகள் இந்தியாவின் அணுசக்தி அமைப்பினாலும் இந்தியாவில் அரசியல் உயரடுக்கினராலும் வாஷிங்டன் இந்தியாவின் அணுசக்தி வளர்ச்சித் திட்டத்தை கடுமையாக தடைக்கு உட்படுத்திவிடும், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை அமெரிக்காவின் மேலாதிக்க விழைவுகளுக்கு தாழ்த்திவிடும் என்றும் கருதப்படுகிறது.

மே மாதத்தில் Strastfor வலைத் தளத்தில் வந்த கருத்து கூறியதாவது: "அமெரிக்க காங்கிரஸ் முதல் ஒப்பந்தத்துடன் சேர்த்த சில புதிய நிபந்தனைகள் பற்றி இந்தியா களிப்பு அடையவில்லை; நிறைய சலுகைகளை இந்தக்கட்டத்தில் கொடுப்பதற்கு இரு பக்கங்களும் தயாராக இல்லை."

இந்தியாவிற்கு கவலை மிக அதிக அளவில் தரும் hyde act நிபந்தனைகள் வருமாறு:

*அமெரிக்கா இதேபோன்ற சோதனைகளை நடத்துதற்கு தடை ஏதும் இல்லை என்றாலும், இந்தியா எவ்வித அணுசக்தி வெடிப்பு முறையையும் வெடிப்பதில் இருந்து தடை செய்யப்படுகிறது. IAEA உடன் கொண்டுள்ள உடன்பாட்டை மீறிய வகையில் ஏதேனும் செய்தாலோ, அணுசக்தி வெடிப்புச் சோதனையை இந்தியா நடத்தினாலோ, "திரும்பிச் செல்லும் உரிமையை" அமெரிக்கா எடுத்துக் கொள்ளும்; அதன்படி இதுகாறும் கொடுக்கப்பட்ட அமெரிக்க உலைகள், செலவழிக்கப்பட்ட எரிபொருள், உபயோகிக்கப்படாத எரிபொருள் உட்பட அனைத்தையும் திருப்பிக் கொடுக்குமாறு அமெரிக்கா கோரும்.

* தற்போதைய உடன்பாட்டின்படி, இந்தியா அமெரிக்காவில் இருந்து கிடைக்கும் எந்தக் கருவி அல்லது எரிபொருளையும் வெளிப்படையான அமெரிக்க அனுமதி இல்லாமல் செலவழிக்கப்பட்ட அணுசக்தி எரிபொருளை மறுமுறை பயன்படுத்தக்கூடாது. இந்த 123 உடன்பாட்டில் இருக்கும் வெளிப்படை மொழி என்பதில் அமெரிக்காவால் முன்கூட்டிய நிரந்தர, முழுமையான அனுமதி என மாற்றப்பட வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது.

ஹைட் சட்டம் இந்தியா, "ஈரானை அணுவாயுதங்கள் உட்பட பேரழிவு ஆயுதங்கள் பெறும் முயற்சிகள் மற்றும் யூரேனிய செறிவூட்டல், அணுசக்தியை மறுவழிப்படுத்துதல், பேரழிவு ஆயுதங்களை இயக்கும் வகைகள் இவற்றில் இருந்து தவிர்த்துக் கொள்ளுவதற்கு அறிவுரை கூறுதல், தனிமைப்படுத்துதல், தேவையானால் பொருளாதாரத்தடைகள் மற்றும் அதை அடக்குதல் ஆகியவற்றை கையாள வேண்டும்" என்று அமெரிக்கா கூறுகிறது. இந்த நடவடிக்கையின் முக்கியத்துவம் சற்று பூசலில் உள்ளது; ஏனெனில் வெள்ளை மாளிகை இது ஒரு "ஆலோசனைதான்" என்று கூறினாலும், இந்தியா தன் வெளியுறவுக் கொள்கை அமெரிக்க சட்டத்தின் கீழ் ஆணையிடப்படுவதற்கு எதிர்ப்பைக் காட்டியுள்ளது.

* அமெரிக்க ஜனாதிபதி ஒவ்வொரு ஆண்டும் காங்கிரசிற்கு இந்தியா சட்டத்தின்படி நடந்து கொண்டுவருகிறது என்று சான்று கொடுக்க வேண்டும்; உலக அரங்கில் அமெரிக்கா கூறுவதை செய்வதற்கு இது வாடிக்கையாக மிரட்டும் வகையில் பயன்படுத்தப்படும் என்று இந்திய ஆளும் உயரடுக்கு அஞ்சுகிறது.

புஷ் நிர்வாகம் இந்தியாவுடனான இறுதி 123 உடன்பாட்டிற்கு மிகிணிகி, ழிஷிநி இவற்றின் ஒப்புதலை பெற வேண்டும் என்று ஹைட் சட்டம் விதிக்கிறது. ழிஷிநி உறுப்பினர்களில் பலர் ஏற்கனவே இத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்; ஒருமித்த உணர்வு ஒன்றை அந்த அமைப்பின் மூலம் ஒப்புதலுக்காக இந்த உடன்பாட்டின் வெற்றிக்காக பெறமுடியுமா என்பது இந்தக் கட்டத்தில் தெளிவாக இல்லை.

புஷ் நிர்வாகம் ஹைட் சட்டத்தின் சில விதிகள் பற்றி பகிரங்கமாக உடன்பாடு இல்லை என்று கூறினாலும், இந்த சட்டமன்றத்தின் கட்டுப்படுத்தும் ஆணைகளை பயன்படுத்தி இந்தியா அதன் உயரடுக்கின் பல பிரிவுளுக்கு ஏற்கமுடியாத சில சலுகைகளை கொடுக்குமாறு அழுத்தம் கொடுக்கிறது; குறிப்பாக இந்தியாவின் அணுசக்தி அமைப்பும் இராணுவமும் இதற்கு ஆதரவாக இல்லை.

இந்தியா NNWS (Non-Nuclear Weapons State அணுசக்தி இல்லாத நாடு என்ற பகுப்புமுறையைத்தான் ஹைட் சட்டம் கொண்டுள்ளது; இதன் விளைவாக பல ழிறிஜி வகையிலான தடுப்புக்களுக்கு USAEA வில் இருக்கும் தடுப்புக்களுக்கு உட்பட நேரிடும்.NNWS ல் இந்தியாவை பகுத்துக்காட்டியுள்ளதின் அபத்தம் உடனடியாக வெளிப்படையாகும்; ஏனெனில் இந்தியா கணிசமாக அணுவாயுதங்களை கொண்டிருக்கிறது; தேவையானால் "அணுசக்தி வகைத் தடைகளையும்" பெருக்க விரும்புகிறது. ஆயினும்கூட இத்தகைய பகுப்பு முறை அமெரிக்க சட்டத்தின்படி, NPT ல் கையெழுத்திடா நிலையில், இந்தியா குடியியல் சார்பு அணுசக்தி எரிபொருள், தொழில்நுட்பம் ஆகியவற்றை பெறுவதற்கு தேவையாகும்.

இந்திய உயரடுக்கினருக்கு இந்த அணுசக்தி எரிபொருள் அளிப்பு உறுதி மற்றும் வெளிநாட்டு அணுசக்தி தொழில்நுட்பத்தை இறக்குமதி செய்யும் திறன் இரண்டும் மிகவும் முக்கியமானது ஆகும். இந்தியாவில் மிகக் குறைந்த உள்நாட்ட அணு யுரேனிய இருப்புக்கள்தான் உள்ளன; அவை குடியியல் மற்றும், இராணுவ அணுசக்தி தேவைகளுக்கு போதுமானதாக இல்லாமல் அதை சிரமத்திற்கு உட்படுத்துகிறது.

International Panel on Fissile Material இன் மதிப்பீடுகளின்படி, இந்தியா தன்னுடைய அணுவாயுத உற்பத்திகளை ஆண்டிற்கு 6ல் இருந்து 12 என்ற தற்போதைய நிலையிலிருந்து ஆண்டிற்கு 40 முதல் 50 வரை என்று, இந்திய-அமெரிக்க அணுசக்தி உடன்பாடு இராணுவத்திற்காக யூரேனியம் உள்பட உள்நாட்டு வளங்களை செலவழிக்க வகைசெய்துவிட்டபின் அதிகரிக்க முடியும்.

இந்திய அணுசக்தி அமைப்பு கணிசமான முயற்சியில் இந்தச் சிக்கல் வாய்ந்த அணுசக்தி தொழில்நுட்பம் பற்றி, அதன் உற்பத்தி உட்பட, ஆய்ந்திருந்தாலும், இதன் கருவிகள் பலவும் மாற்றுப் பொறியியல் தன்மை, நடுவர் இடர்பாடுகள் ஆகியவற்றிற்கு உட்பட்டிருப்பதால் அவற்றின் தரம் பற்றி வினாக்கள் எழுகின்றன. இந்திய அணுசக்தி நடைமுறை உலகில் இருக்கும் அணுசக்தி நடைமுறையுடன் இடைத்தொடர்பு கொண்டு இன்னும் முன்னேற்றமான தொழில்நுட்பம், அறிவியல் பெருக்கம் ஆகியவற்றைக் காண விரும்புகிறது.

அணுவாயுத தடையில் இந்தியா ஒரு கால வரம்பை அறிவித்துள்ளது; ஆனால் இந்த தடையை சட்டபூர்வ கட்டுப்பாடாக மாற்றுவதை தடுக்கிறது. பாகிஸ்தான் அல்லது சீனா அணுவாயுதங்களை சோதித்தல், அல்லது புதிய அணுவாயுதங்களை அமெரிக்காவே தயாரித்தல் போன்ற உலக நிலையினால் பாதிப்பு ஏற்படுகிறது என்று தாங்கள் நினைத்தால் இந்த தடையை எப்பொழுது வேண்டுமானாலும் நீக்கும் உரிமை இருக்க வேண்டும் என்று இந்திய உயரடுக்கு விரும்புகிறது.

எரிக்கப்பட்ட எரிபொருளை மறுபயன்பாடு செய்யும் உரிமையும் இந்தியாவிற்கு பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது; ஏனெனில் அத்தகைய எரிபொருள் இந்தியா தயாரிக்க விரும்பும் மூன்று கட்ட, இந்திய அணுசக்தி கட்டமைப்பிற்கு தேவையாகும் --இந்த வழிவகையின் இறுதிக் கட்டம் தோரியம் பயன்படுத்துவதாக இருக்கும்; இந்தியா இதனை மிக அதிக அளவு இருப்பில் கொண்டுள்ளது. யூரேனியமும் புளூட்டோனியமும் மறு பயன்படுத்தலுக்கு தடை என்றால் இந்தச் சிக்கல் வாய்ந்த பொறுப்பெடுத்தலை இன்னும் கடினமாக்கும்; இந்தியா அதையட்டி மகத்தான தொழில்நுட்ப மற்றும் பொருளாதார பாதிப்புக்களை சந்திக்க நேரிடும்.

முரண்படும் நலன்கள்

ஐயத்திற்கு இடமின்றி மிகச் சிக்கல் வாய்ந்த முரண்பட்ட காரணிகள் ஒரு ஒப்பந்தத்தை அடைவதற்கு இரு புறத்திலும் பெரும் முயற்சிகள் வேண்டும் என்ற உந்துதலை கொடுத்துள்ளன.

உடன்பாடு வெற்றிகரமாக முடிந்தது என்றால், இப்பொழுது ரஷ்யாவினால் கொடுக்கப்படும், மிக அதிக அளவிலான அணுசக்தி தொழில்நுட்பம், இராணுவ தளவாடப் பொருட்களுக்கான இந்திய சந்தை அமெரிக்க பெருவணிகத்திற்கு கிடைக்கும். அமெரிக்க வணிகக் குழுவின் கருத்துப்படி, ஒரு வெற்றிகர உடன்பாடு அணுசக்தி நுட்பம் மற்றும் பிற விற்பனைகள் மூலம் $100 பில்லியன் வணிகத்தை அமெரிக்க நிறுவனங்களுக்கு கொடுக்கும்.

பொருளாதார கணக்கீடுகள் கணிசமான முக்கியத்துவம் கொண்டாலும், இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்திற்கு உந்துதல் கொடுக்கும் முக்கிய காரணிகள் புவிசார்-அரசியல் தன்மை உடையவை ஆகும்.

இந்தியா "ஒரு உலக சக்தியாக" வருவதற்கு தான் உதவத் தயாராக இருப்பதற்கு இந்த அணுசக்தி உடன்பாடு நிரூபணம் என்று புஷ் நிர்வாகம் கூறிக் கொள்ளுகிறது; உலகின் "இரு பெரும் மக்கட்தொகை நிறைந்த ஜனநாயகங்களுக்கு இடையே" "பூகோளந்தழுவிய பங்காளித்தனத்தின்" முதல் கட்டமாகும் இது என்றும் அமெரிக்கா கூறுகிறது.

எழுச்சி பெற்று வரும் சீனாவை கட்டுப்படுத்தி, அடக்கி வைப்பதில் தான் காட்டும் முயற்சிகளின் மையப்பகுதியாக இந்தியாவை ஆக்க வேண்டும் என்பதில் அமெரிக்கா ஆர்வம் கொண்டுள்ளது. இந்தியாவை பயன்படுத்தி எண்ணெய் வளம் நிரம்பியிருக்கும் மத்திய ஆசியப் பகுதியில் இன்னும் ஊடுருவ அது நம்பிக்கை கொண்டுள்ளது; இதற்காக அமெரிக்காவுடன் அதிகம் பிணைந்துள்ள ஒப்பந்தங்களை இந்தியா கொள்ளுவதை அது விரும்புகிறது --அவை அதிகரித்த அளவில் இராணுவ, அணுசக்தி, புவி-அரசியல் பிணைப்புக்கள் மூலம்-- இந்தியப் பெருங்கடல் பகுதியில் கண்காணித்தலுக்கு தயார் செய்கிறது.

ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானத்தில் அமெரிக்கா எதிர்கொண்டுள்ள சங்கடங்கள், புஷ் நிர்வாகத்தை இந்தியாவுடன் இத்தகைய உடன்பாட்டை முடிக்க வேண்டும் என்ற உணர்விற்கு தள்ளியிருக்கிறன.

ஏப்ரல் 26ம் தேதி வாஷிங்டன் போஸ்ட் பதிப்பில் எழுதிய நிக்கோலஸ் பேர்ன்ஸ் அறிவித்தார்; "வாஷிங்டனுக்கும் டில்லிக்கும் இடையே நடக்கும் பேச்சுவார்த்தைகளின் போக்கு மிக விரைவாக உள்ளது; அமெரிக்க நலன்களுக்கு கிடைக்கக்கூடிய இலாபத் திறன்கள் கணிசமாக இருக்கும்; எனவே ஒரு தலைமுறைக்குள் அமெரிக்கர்கள் இந்தியாவை நம்முடைய இரண்டு அல்லது மூன்று மூலோபாய முக்கிய பங்காளிகளுள் ஒன்றாகக் கருதுவர் என்று நான் நம்புகிறேன்.

அமெரிக்க நிறுவனங்களுக்கு மிகக் கணிசமாக வரக்கூடிய இலாபத்திறன் பற்றி பேர்ன்ஸ் தொடர்ந்து கூறினார்: "அமெரிக்க நிறுவனங்கள் முதலில் முதலீடு செய்து இலாபம் பெரும் வகையில் இந்த மகத்தான விசைச் சந்தை இருக்கும். இந்தியாவும் விரைவில் இருதரப்பு உடன்பாட்டை முடிக்க செயல்பட்டு இதை உண்மையாக்கும் என்று நம்புகிறோம்."

இந்திய ஆளும் உயரடுக்கு இந்தியா ஒரு பெரிய உலக சக்தியாகிறது என்ற வாஷிங்டனின் பேச்சில் பெரும் திருப்தியைக் கொண்டுள்ளது. இந்தியாவின் அணுசக்தித் திட்டத்திற்கு, புவி அரசியல் காரணங்களுக்காகவும் இந்தியாவின் குடியியல் சார்பு அணுசக்தி விசைத் திறன் விரைவில் விரிவாக்கம் செய்யப்படுவதற்கும், சர்வதேச பிரித்து வைக்கப்படலில் இருந்து வெளியேறுவது மிகவும் முக்கியம் என்றும் அது நம்புகிறது.

ஆனால் இந்தியாவை "அணுவாயுதக் குழுவில்" முழுமையாக அனுமதிக்க அமெரிக்கா மறுப்பது, ஹைட் சட்டத்தில் இருக்கும் பல நிபந்தனைகள், ஒப்பந்தத்தை பயன்படுத்தி அமெரிக்காவுடன் இணைந்து ஈரானுக்கு எதிரான மோதலில் நிற்க வேண்டும் என்று அமெரிக்கா மிரட்டுவது, ஈரானிய இயற்கை எரிவாயுவை தெற்கு ஆசியாவிற்கு குழாய்த்திட்டம் மூலம் கொண்டுவருவதை கைவிட்டுவிடுமாறு கூறுவது ஆகியவை இந்திய அரசாங்கத்திற்கும் உயரடுக்கிற்கும் அனுமதி அளித்திருக்கிறது.

ஈரான் மற்றும் பாகிஸ்தான் உடன் சேர்ந்து எரிவாயுத் திட்டம் (மிறிமி) ஒன்றை கைவிடுமாறு இந்தியாவை அமெரிக்கா வற்புறுத்துகிறது; இதற்கு ஈடாக அணுசக்தி ஒப்பந்தத்தை கொடுப்பதுடன் ஒரு போட்டி குழாய்த்திட்டத்தையும் அது தர உள்ளது; அத்திட்டம் துர்க்மேனிஸ்தான்-ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான்-இந்திய குழாய்த்திட்டம் (IPI) ஆகும். Asia Times online கருத்தின்படி, ஜிகிறிமி குழாய்த்திட்டம், மிறிமி திட்டம் போலன்றி, முக்கிய அமெரிக்க எண்ணெய், கட்டுமான நிறுவனங்களையும் தொடர்புபடுத்தி, அமெரிக்காவின் ஆக்கிரமிப்பிற்குட்பட்ட ஆப்கானிய பகுதி வழியே செல்லும். இது அமெரிக்காவை மற்ற நாடுகளின்மீது கட்டுப்பாட்டை கொள்ளும் நிலையில் வைக்கும்; இந்திய உயரடுக்கு இத்தகைய அமெரிக்காவை நம்பியிருந்தல் பற்றி எச்சரிக்கையாக இருப்பது உணர்ந்து கொள்ளத்தக்கதே; அதுவும் நீண்டகாலமாக மிரட்டும் உத்திகளை அமெரிக்கா பயன்படுத்திவரும் நிலையில்.

இந்தியாவிற்கு சமீபத்திய பேர்ன்ஸின் வருகை அதிக பேச்சுக்களை, குறிப்பாக அமெரிக்கத் தரப்பில் இருந்து, 123 உடன்பாடுகள் பற்றிய பேச்சுக்கள் இறுதிக் கட்டத்தை அடைந்துவிட்டன என்பதுடன் வந்துள்ளன. ஆனால் இரு திறத்தாருக்கும் இடையே இருக்கும் வேறுபட்ட உந்துதல்கள், நலன்கள் ஆகியவற்றை பார்க்கும்போது, இது அடையப்படமுடியுமா என்பது சந்தேகமாகத்தான் உள்ளது. இறுதிவடிவம் பெற்றாலும், அதற்கு nsg , iaea மற்றும் அமெரிக்க காங்கிரஸ் ஆகியவற்றின் ஒப்புதல் வேண்டும்; அப்படியும் அதி ஆட்டம் கொடுக்கும் ஒரு புவி அரசியல் அஸ்திவாரத்தில்தான் தொடர்ந்து தங்கியிருக்கும்.

நன்றி: WWW.WSWS.ORG

Thursday, August 16, 2007

வடகலை அய்யங்கார்களுக்கும் இடஒதுக்கீடு தேவை..

அரசு இட ஒதுக்கீடுகள் சாதி சார்பாக இருப்பதற்கு ஆயிரம் ஏற்கத்தக்க காரணங்கள் இருக்கின்றன. அதே சமயத்தில் சாதிரீதியாக இட ஒதுக்கீட்டில் உயர்சாதியைச் சேர்ந்த ஏழ்மை நிலையில் இருப்பவர்களில் வெகு சிலர் பாதிக்கப்படுவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை. (யப்பா பாலா வந்து திட்ட முடியாத அளவுக்கு ஒரு பதிவுக்கு கரு கிடைச்சிடுச்சி) :)

உயர்சாதி வகுப்பில் பிராமணர்கள் என்ற பிரிவில் தமிழகத்தை பொருத்து இரு பெரும் பிரிவுகளாக இருப்பது ஒன்று ஐயர் அடுத்து ஐயங்கார். ஐயர்கள் கோத்திரத்தில் பலபிரிவுகள் இருக்கின்றன என்பதை திருமண வரன் விளம்பரங்களைப் படித்தவர்களுக்கு நன்கு தெரியும். அதுபோல ஐயங்கார் என்ற பிராமணப் பிரிவில் முக்கிய இரண்டு பிரிவுகள் வடகலை மற்றும் தென்கலை. நாம வெறுபாடுகளை வைத்தே இவர்களை அடையாளம் கண்டு கொள்ளலாம் என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதே போன்று நிறத்தை வைத்தும் இவர்களை வடகலை ஐயங்கார் என்றும் தென்கலை ஐயங்கார் என்றும் கண்டு கொள்ளலாம்.

பார்ப்பனர்களுக்கே உரிய வெளிரிய மஞ்சள் நிறத்தில் இருப்பவர்கள் தென்கலை ஐயங்கார்கள், தமிழர்களின் பொது நிறமான மாநிறம் அல்லது கருப்பு நிறத்துடன் இருப்பவர்கள் வடகலை ஐயங்கார்கள். எல்லோரும் பிராமணர்கள் என்று இருக்கும் போது வடகலை ஐயங்கார்கள் மட்டும் ஏன் கருப்பாக இருக்கிறார்கள் என்று கேள்வி பலருக்கும் இருக்கக்கூடும். அதற்கு நாம் சமய வரலாற்றை திரும்பிப் பார்க்க வேண்டும்(நன்றி: ஜோசப் சார்).

இராமானுஜர் காலத்தில் தீண்டாமை கொடுமை தலை விரித்தாடியது, அதனைக் கண்டு மனம் நொந்த இராமானுஜர் மாற்றுவழியை கொண்டு வந்தார். பார்ப்பனர்கள் அல்லாதவர்களையும் பார்பனர்கள் ஆக்கிவிட்டால் தீண்டாமை கொடுமை தனியும் என்று நினைத்து பலதரப்பட்ட மக்களையும் அரவணைக்க ஆரம்பித்தார். அதன்படி மீனவர்களாக மீன்பிடித்துக் கொண்டவர்களிடம் வைணவத்தின் பெருமைகளைக் கூறி அவர்களை அரவணைத்தார். பிராமண பெரியவர்கள் தங்கள் மீனவ குலத்திடம் அன்பு செலுத்துவதை நினைத்து நெகிழ்ச்சியுற்றனர் அம்மீனவர்கள். பின்பு அவர்களையும், இன்னும் அந்நாளில் தாழ்த்தப்ப்பட்டு இருந்த பலரையும் வைணவ பிராமணர்களாக மாற்றுவதற்காக அவர்களுக்கு தீட்சை கொடுத்தார் இராமானுஜர். (பாத்துக்கோங்க வடகலை அய்யங்கார்கள் வந்தேரிகள் இல்லை )




தீட்சையின் போது இனிமேல் யாரும் தங்கள் பழைய சாதியைச் சொல்லிக் கொள்ளக் கூடாது என்று சத்திய பிரமாணமும் பெறப்பட்டது.(அட பாவமே இது தெரியாதா அவங்களுக்கு )இராமனுஜருக்குப் பின்பு ஐயங்கார்களில் இருந்த ஒரிஜினல் ஐயங்கார்கள் இந்த மாற்றத்தை ஏற்றாலும் அவர்களுடன் இரத்த உறவுகள் வைத்துக் கொள்ள விரும்பவில்லை. ஆகையால் புதிதாத ஐயங்கார்களாக மாறிய முன்னாள் மீனவர்களை அவர்கள் கூரேசர் வழிவாந்த வடகலை ஐயங்கார் என்று அடையாளப்படுத்தி வைத்தனர். அந்த அடையாளம் அப்படியே நிலைக்க வடகலை ஐயங்கார்களின் கரிய நிறமும் ஒரு காரணமாக இருந்தது. பழைய உண்மைகள் தெரியும் என்பதால், இன்றைய காலகட்டத்திலும் வடகலை ஐயங்கார்கள் வீட்டில் தென்கலை ஐயங்கார்கள் சம்பந்தம் வைத்துக் கொள்வது மிக மிக குறைவு.

ஆரியர்கள் குடியேறியவர்கள் என்ற வாதம் இருந்தாலும் வடகலை ஐயங்கார்கள் எனப்படும் பிராமணப் பிரிவுகள் இம்மண்ணின் மைந்தர்கள். தீண்டாமை இன்னும் பல சமூக கொடுமைகளில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டவர்கள். இன்றைய கால ஓட்டத்தில் இடஒதுக்கீடு முறை இருப்பதால் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகுபவர்கள் வடகலை ஐயங்கார்களே. காரணம் மற்ற பிராமணப் பிரிவுகள் போல் இவர்களுக்கு பெரிய கோவில் மானியங்களோ, அரசர்களால் பெரிய அளவில் பொருளுதவி ஒதுக்கீடு செய்யவில்லை என்பதால் ஏழைகளாகவே கோவில்களில் கூலி வேலை செய்து சொற்ப வருமானத்திலேயே வாழ்ந்து வந்தார்கள்.

நமக்குத் தெரிந்து வடகலை ஐயங்கார்கள் இன்னும் அடிப்படை வசதி இல்லாமல் அன்றாட வருமானத்தில் வயிற்றைக்கழுவி வருகிறார்கள். எனவே அரசுகள் இடஒதுக்கீடு முறையில் வடகலை அய்யங்கார்களுக்கு முன்னாள் மீனவர்களக இருந்த பூர்வ குடிகள் என்றமுறையில் சமய வல்லுனர்களைக் கலந்து ஆலோசித்து, அவர்கள் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு சாதி ரீதியான இட ஒதுக்கீட்டில் 'பிற்பட்டுத்தப்பட்டோர்' பட்டியலில் இவர்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும்.

Sunday, August 05, 2007

கிழிந்துபோன காவிக் கோமணம் !

கிழிந்துபோன காவி கோமணம் !

உலகிலேயே அலங்கார வார்த்தைகளுக்கு சொந்தக்காரர்கள் என்ற பெருமையை பெற்றிருக்கும் ஒரு கொள்கை உடையவர் எவரென்றால் அது "பாரத" "தேச"த்தில் இயங்கிவரும் சங்கர் பரிவார் கும்பலைச் சேர்ந்தவர்களே. தேசிய ஒருமைப்பாட்டையும், உலகம் தழுவிய கொள்கைகளையெல்லாம் பார்கும் போது மொட்டை தலையில் உள்ள ஒற்றை முடி கூட சிலருக்கு சிலிர்கிறது.

தே'சீ'யம் என்ற வார்த்தைகளில் இவர்கள் அமைக்கும் கொள்கைகளையும் கட்சி பெயர்களைப் பார்க்கும் போது பாரத தேசத்தில் பிறந்த பசுமாடுகள் கூட படி பாலை எக்ஸ்டாராவாக கறக்கின்றனர். இந்த வேத விற்பனையாளர்களின் கட்சி பெயர்களைப் பார்த்தால் தேசியம் பொங்கி பெருக்கெடுத்து, உடைப்பெடுத்து இந்து மக்கள் ச"மூ"த்திரத்திரத்தால் இந்திய பெருக்கடலையே மூழ்கடித்துவிடும் போல் தெரிகிறது.

ஆகா ! இந்துக்களை ஒருங்கினைத்து, இந்து அரசியல் நடத்தவும் வருணம் செழித்து விளைச்சலை பெருக்க இவர்களுக்கு தேவைப்படும் பெயர் தேசம் தழுவிய ஒரு கவர்ச்சி பெயர். ஆம் 'பாரதம்' என்ற சொல்லை வைத்துவிட்டால் அகில இந்திய இந்துக்களின் மதிப்பைப் பெற்று சாதி வேறுபாடு என்ற அம்மணத்தை காவிக் கோமணத்தால் தற்காலிமாக மறைத்துவிடலாம் என்று கணக்கு போட்டு பார'தீய' ஜனதா (மக்கள்) பார்டி - என்ற பெயரில் கவர்ச்சி பெயர் சூட்டினர். அதன் பொருள் பாரதிய மக்கள் கட்சி என்பதாகும். இங்கே 'பாரதிய' என்று புகுத்தியிருக்கும் சொல்லாடலைப் பார்த்து இந்து அபிமானிகள் (மதி ?) மயங்கி ஒன்றிணைந்தார்கள் என்பதைக் காட்டுவதே வாஜ்பேயின் முந்தைய வெற்றிகள். பார'தீ'ய திட்டம் வெற்றிகரமாகவே கவர்ச்சி பெயரால் தேச ஒற்றுமை என்ற உணர்வின் பெயரால் மயக்க மருந்த்தாக கொடுக்கப்பட்டது தெரியவருகிறது.

அடுத்து கோவண ஆண்டிகளின் உலக பார்வை என்னவென்று பார்ப்போம். இவர்களின் நோக்கு ஈரேழு பதினான்கு உலகமும் சுபிக்சமாக இருக்கவேண்டும் என்று சாதாகாலமும் அசுத்தமோக (அசுவமேத ?) யாகம் வளர்த்து லோக ஷேமத்திற்காக சிறப்பு பூஜைகள் செய்துவருகின்றனர். இஸ்லாம் வாளால் பரப்பிய மதம் என்றும், கிறித்துவ மெசினரிகள் இந்தியவை கெடுத்துவிட்டார்கள். மெக்கலே (வெள்ளைக்காரன்) ஆட்சியால் இந்திய ஏழை நாடக மாறியது என்று இவர்கள் அடிக்கடி குற்றம் சுமத்துவதை மறந்துவிடுங்கள். ஏனென்றால் உலக மததுக்கெல்லாம் தாய் மதமான இந்துமதத்தில் இருந்து கொண்டு மற்ற மதங்களை கண்டிப்பது என்பது ஒரு தாய் மகனை கண்டிபதற்கு என்ற "உயர்ந்த" நோக்கில் பார்க்க பழகிக் கொள்ளுங்கள். இந்துத்துவ வாதிகளின் உலக பார்வை என்பது பூமியை மற்றும் சார்நத்து இல்லை, சந்திரமண்டலத்தையும், கடந்து புளூட்டோவையுகடந்து காஸ்மிக் கதிர்களை ஊடுருவி தடைகளை கடந்து செல்பவை. இருந்தாலும் உலக மக்கள் புரிந்து கொள்ளவேண்டிய உலக நன்மையை முன்னிறுத்தி எளிய முறையில் வைக்கப்பட்ட பெயர் ஒன்று இருக்கிறது. அது உலகத்தை பிரகலாதன் சிவலிங்கத்தை தழுவியது போல் ஒருங்கிணைக்கும் ஒரு பெயர், அதுதான் "விஷ்வ" ஹிந்து பரிசத். அதாவது உலக ஹிந்துக்களின் அமைப்பு. பெயரில் உள்ள கவர்சியை பாருங்கள். யார் சொன்னது இந்துத்துவ என்பது ஒரு "குறுகிய" நோக்கம் கொண்ட அமைப்பு என்று ? உலகம் என்ற ஒருங்கினைப்பினால் இந்துவத்தைப் புரிந்து கொண்டு வெளிநாட்டினர் வெள்ளை ஆடைகளை கிழித்து எறிந்துவிட்டு காவி கோமணத்துக்கு மாற தயாராகவே இருக்கிறார்கள் என்று பழைய பேப்பர் "கட்டிங்" ஆதாரத்தில் அண்ணன் நந்த லீலா நரித்தனத்தால் எழுதும் பொது நமக்கு எங்கெல்லாமோ அரிக்கிறது.

ஆக இன்னும் ஒரு பெயர் சொல்ல மறந்துவிட்டேன். மாணவர்களை ஒருங்கிணைக்கும் ஒரு அமைப்பு இருக்கிறது. மாணவ பருவத்தில் மாணவர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு சமஸ்கிரதம், சாஸ்திரம் எல்லாவற்றையும் குருகுல பாடம் போல் நடத்தி மாணவர்களுக்கு மத(வெறி) ப்பால் ஊட்டிவரும் ஒரு அமைப்பு. "அகில பாரதிய வித்யார்த்தி பரிசத்" மாணவர்களே மாநிலங்களை மறந்துவிடுங்கள், தாய்மொழியை மறந்துவிடுங்கள்
நீங்கள் ஒன்றிணைந்து உங்கள் ஆற்றலை வெளிப்படுத்தும் சக்தி மான் ஆகுங்கள். நீங்கள் அகில பாரதிய வித்யார்த்திகள் (மாணவர்கள்).

இந்துத்துவ வாதிகள் என்னதான் கோவணத்தை இறுக்கிக் கட்டினாலும் அதன் கோரமுகத்தினால் வருணபேத கிழிசல்கள் ஏற்பட்டு சாதிய அம்மணம் தெரியவே செய்கிறது.

Saturday, August 04, 2007

தோழி தமிழச்சிக்கு.....

கடந்த வாரம் இதே வலைப்பூவில் எழுதப்பட்ட தாடிக்கார தந்தை பெரியாரின் பார்ப்பன துரோகம் எனும் பதிவில் பெரியாரைப்பற்றி அவதூறுகளை பரப்புவதாக சொல்கிறீர்கள் அதற்கான பதில்....

அந்த பதிவில்

//பெரியார், அம்பேத்காருக்கு பிறகு பிற இந்திய மாநிலங்களிலும் தலித் தலைவர்கள் வளர்ந்து பார்பனரின் தகிடு தத்தங்களை அம்பலப்படுத்தினர் என்று தோழர் ஓத்துக் கொள்கிறார். பிறகு பெரியாரைப் பற்றி அவதூறுகளை எழுதுகிறார். அவருக்கே என்ன எழுதுவது என்று தெரியவில்லை. ஆனாலும் எதையாவது எழுத வேண்டும் என தொடருகிறார்… "பெரியார்தான் காங்கிரசில் இருக்கும் பார்ப்பனர்கள் சொல்பேச்சு கேட்கவில்லை என்பதால் எதிர்த்தார் அம்பேத்கருக்கு என்ன வந்தது அவரும் ஏன் பார்ப்பனர்களை எதிர்க்க ஆரம்பித்தார்? என்று குறிப்பிடுகிறார். தோழர் சமூதாய நிகழ்வுகளை மேம்போக்காக பேசுகிறார்.//

என்ன சமுதாய நிகழ்வுகளை மேம்போக்காக பேசுவதை அதில் கண்டீர்கள் எனத் தெரியவில்லை. ஆண்டாண்டு காலமாய் அடக்கி ஒடுக்கி நம்மை வைத்திருந்தவன் பெரியாருக்குப்பின்னும் அம்பேத்கருக்குப் பின்னும் அடங்க ஆரம்பித்தான் . ஆனால் பெரியார் பார்ப்பனர்களை எதிர்க்க காங்கிரஸில் அவரின் செயல்பாடுகளுக்கு ஏற்பட்ட தடைகளே காரணம் என நான் அதே பதிவில் குறிப்பிட்டிருக்கும் ஒரு பதிவர் தனது வலையில் எழுதுகிறார் அதற்கானபதிலாக பார்பனர்கள் ஒன்னும் நல்லவர்கள் இல்லை பெரியார் பார்ப்பனீயத்தை எதிர்க்க காங்கிரஸ் மட்டும் காரணமில்லை எனச் சொல்வதற்காக எழுதப்பட்டதே அது.

//அம்பேத்கருக்கு என்ன வந்தது அவரும் ஏன் பார்ப்பனர்களை எதிர்க்க ஆரம்பித்தார் என முட்டாள்தனமான கேள்வியை எழுப்புகிறார்? வரலாறு தெரியாதவர்கள் தெரியாததைப்பற்றி ஏன் பேச வேண்டும்? எழுத வேண்டும்? //

என் பதிவை நீங்கள் படித்த விதம் தவறு என்பதற்க்கு இது ஒன்றே சான்று. முன்னறே சொன்னது போல அது அந்த பதிவருக்கு அளிக்கப் பட்ட பதில். மற்றபடி எனக்குத் தெரிந்த வரலாறு பற்றியெல்லாம் உங்களுக்கு கவலை வேண்டாம். நீங்கள் சொல்லும் அதே எழுத்துரிமையை முற்றாய் நம்புபவன் நான்.

//பூணூல் சட்டைக்குள் இருந்தால் எவருக்கு தெரியப்போகிறது. இணையத்திலும் 'குறுக்கிட்டு' காட்டவேண்டுமோ? என்று இடக்குமடக்கான கேள்விகளை கேட்கிறார். பூணூல் என்ன மார்பில் மட்டுமா ஒட்டிக் கொண்டிருக்கிறது? குணத்தையும் அல்லவா தரங்கெட்ட நிலையில் வைத்திருக்கிறது. மனிதனை மனிதன் தாழ்த்தி கேவலப்படுத்திக் கொண்டிருக்கும் சிறு கூட்டத்தின் ஆணவத்திற்கு வக்காலத்து வாங்குவதோடு அல்லாமல்,//

இதில் என்ன வக்காலத்தை கண்டீர்கள். ஒருவன் பார்ப்பானாக இருப்பதை அவன் பிறப்பின் காரணம் எனச் சொல்லலாம் ஆனால் அதை அவன் இணையத்தில் எழுதி தன்னை ஏன் இன்னும் வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிறேன்?. பார்ப்பனத் தனத்தை இன்னும் ஏன் விட்டுவிடாமல் இருக்கிறார்கள் எனக் கேட்கிறேன். இதனால்தான் மற்றவர்களின் வசைபாடலுக்கு ஆளாகிறார்கள் எனச் சொல்கிறேன்.

//பார்பனர் பழம்பெருமையையும், சாதிய அடையாளத்தையும் விட்டு தொலைக்காமல் இருக்க வேண்டும் என்கிறார். இவர் சொல்வதைப்பார்த்தால் பார்ப்பான் மீண்டும் பழையநிலைக்கு திரும்ப வேண்டும் என்று அழைப்பு விடுப்பதை போல் உள்ளது//

இந்த அர்த்தம் தொனிக்கும் வரிகள் அப் பதிவில் எங்கேனும் இருப்பின் நான் வலைப்பூ எழுதுவதை நிறுத்தி விடுகிறேன்.

பின் குறிப்பு: மகேந்திரன்,பெ அவர்களுக்கு என கடிதத்தை ஆரம்பித்து அதை பொதுவிவாதமாக எழுதி அதாவது ஏன் இப்படி அவர் எழுதுகிறார், இப்படி எழுதுகிறார் என எழுதும் உங்கள் எழுத்து வியப்பாய் இருக்கிறது.

Thursday, August 02, 2007

Wednesday, August 01, 2007

தாடிக்கார தந்தை பெரியாரின் பார்ப்பன துரோகம்

பெரியார் வாழ்ந்த காலத்தில் பெரியார் பெயர் சொல்லியதும் கடவுள் சிலைகள் கூட எழுந்து ஓடியதாம் : இது தமாஷ்.

பார்பனர்களை பலரும் தூற்றுகிறார்கள், பார்பனர்களை இழிபிறவிகளாக பலரும் பார்க்கிறார்கள் இதற்கு பெரியார்தான் காரணம் என்று ஒரு பதிவர் எழுதி இருக்கிறார். ஐயா பெரியாரை தென் இந்தியாவைத் தவிர வட நாடுகளில் தெரிந்தவர்கள் மிகக் குறைவு. பார்பன சூழ்ச்சிகள் ஒவ்வொன்றாக கடந்த நூற்றாண்டுகளிலேயே இந்தியா கண்டு கொண்டது. சூடு போட்டுவிடத்தான் எவரும் முன்வரவில்லை. காரணம் அன்றைய மன்னர் ஆட்சி. மன்னர்களுக்கு அடிவருடிகளாக சேவகம் செய்த பார்பனர்களை எப்படி எதிர்க்க முடியும்? எவரும் முன்வரவில்லை. பெரியார் , அம்பேத்காருக்கு பிறகு பிற இந்திய மாநிலங்களிலும் தலித் தலைவர்கள் வளர்ந்து பார்பனரின் தகிடு தத்தங்களை அம்பலப்படுத்தினர். பெரியார்தான் காங்கிரசில் இருக்கும் பார்ப்பனர்கள் சொல்பேச்சு கேட்கவில்லை என்பதால் எதிர்த்தார் அம்பேத்கருக்கு என்ன வந்தது அவரும் ஏன் பார்ப்பனர்களை எதிர்க்க ஆரம்பித்தார்?

தமிழ்நாட்டில் மட்டுமல்ல டில்லியில் கோலோச்சிய பார்பனர்களின் நிலை இன்று பரிதாபம், கழிவறையை காவல் காத்து பார்பனர்கள் வாழ்கை நடத்துவதாக செய்திகள் கூட வருகிறது. இது பார்பனர்களின் இழிந்த நிலையாம். வாழ்ந்து கெட்டவர்கள் ஆகிவிட்டார்களாம். அடுத்தவர்களை கெடுத்துதானே வாழ்ந்தார்கள் ? என்பதெல்லாம் யாரும் நினைவு படுத்தி கேள்வி எழுப்பாதீர்கள். பூனை செய்தது குறும்பு அடித்தால் பாவம். பார்பனர்களுக்காக வந்திருக்கும் பழமொழி போல இருக்கிறது.

பார்பனர்களை 'இழிபிறவிகள்' என்று பலரும் சொல்ல காரணம் பெரியார் என்றால் அதில் ஓரளவு உண்மையும் உள்ளது அது தமிழ்நாட்டிலும், சிறிதளவு தாக்கம் கேரளத்திலும் மட்டும் தான். மற்ற மாநிலங்களிலும் பார்பனர்களை 'இழிபிறவி' ஆக்கி பார்பனர் அல்லாதோர் தூற்றுவதற்கு பெரியார் எப்படி காரணம் ஆனார்?

எல்லோருக்குமே பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மட்டுமே ஜாதி அடையாளம் கேட்கப்படுகிறது. அதைத்தாண்டி வெளியில் வேலைக்கு வந்துவிட்டால், பார்பனர்கள் தவிர பெரிய அளவில் தங்கள் சாதியை சொல்லி எவரும் பெருமை பட்டுக் கொள்வது இல்லை. மற்றவர்கள் சொன்னாலும், அவர்கள் மற்றவனை தாழ்ந்தவன் என்று சொல்லுவது இல்லை. நாங்கள் பிரம்மனின் மூக்குச் சளியில் (நன்றி விடாது கருப்பு) இருந்து பிறந்த உயர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்வது இல்லை. மற்றவர்கள் அவரவர் அப்பனின் உயிரணுவில் இருந்து பிறந்ததாகத்தான் சொல்கிறார்கள். இவர்களே சாதியை வெளியில் சொல்லிவிட்டு 'இழிபிறவி' என்கிறாயே என்றால் இதற்கு யார் காரணம். பூனூல் சட்டைக்குள் இருந்தால் எவருக்கு தெரியப் போகிறது. இணையத்திலும் 'குறுக்கிட்டு' காட்டவேண்டுமோ ?

எனவே பார்பனரின் 'இழிநிலைக்கு' முக்கிய காரணம் பார்பனர் பழம்பெருமையையும், சாதிய அடையாளத்தையும் விட்டு தொலைக்காமல் இருப்பது தான். பெரியார் பார்பனர்களை மாற்ற முயலவில்லை பார்பனர்கள் குறித்த எச்சரிக்கையை பிறருக்கு ஏற்படுத்தினார். பார்பனர் திருந்தி இருக்கலாமே. ஆனால் நடந்ததா ? இன்றும் கோவிலுக்குள் தமிழில் ஓதக்கூடாது, தலித் அர்சகர் ஆகக் கூடாது என்று கோர்ட் வரை சொல்லுகின்றனரே ஏன் ? - இப்படி செய்வதால் பார்பனர்கள் 'இழிபிறவிகள்' என்று பிறரால் தூற்றப்படமாட்டார்களா ? புத்தி இருப்பதாக பீத்திக்கொள்ளுபவர்களே அதை கொஞ்சம் பயன்படுத்துங்கள்.