Tuesday, January 06, 2015

வெட்கமாக இல்லையா திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்களே?

ஆராயப் படாமலேயே  மக்கள் முதல்வர் என்ற பெயரில் ஒரு அசிங்கம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. ஊழல் வழக்கில் தண்டனை பெற்று குற்றவாளி என தீர்ப்பும் சொல்லப் பட்டு தன் வீட்டை விட்டு எதற்காகவும் வெளியேற முடியாத  சட்டமன்ற உறுப்பினர் பதவியைக் கூட இழந்த ஒரு கட்சியின் தலைமை கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் அரசாங்க நடவடிக்கைகளில் பங்கு கொள்வதும் அரசாங்கத்தின் அங்கமாக இருக்கும் சுயமரியாதைப் பேரொளிகளில் ஒருவராக இருந்த பன்னீர்செல்வத்தின் பெயரைத் தாங்கி நிற்பவருமான பினாமி முதல்வர் இன்று வரை கூட மக்கள் முதல்வரின் வழிகாட்டுதலுக்கு இனங்க என்று அறிவிப்புகள் செய்வதும் தமிழகம் இதுவரை காணாத கேலிக் கூத்து.

இந்தியத் தலை நகரில் முதல்வர்களின் கூட்டம் அங்கே செல்லும் பினாமி முதல்வர் கூடவே தன் துணைக்கென்று ஜெயலலிதாவின் புகைப் படம் அடங்கிய கோப்பை கொண்டு செல்கிறார். எல்லா ஊடகங்களிலும் வெளியாகிறது இந்தப் படம். ஒரு தலை முறைக்கு முன்னால் திராவிட இயக்கங்கள் என்றாலே கோவனத்தை அவிழ்க்காமலே மூத்திரம் போன ஆட்கள் எல்லாம் தமிழகம் என்றாலே நகைக்கிறார்கள்.

இன்று வரை நீங்கள் முதல்வர் அறையில் அமர்ந்ததில்லை, உங்கள் வீட்டுக்கு முன்னால் முதல்வர் என்ற பெயர்ப் பலகை இல்லை, உங்கள் படம் தாங்கிய அரசாங்க காலண்டர், நாட்குறிப்பு இல்லை, உண்மையில் தெரியாமல்தான் கேட்கிறேன் யார் நீங்கள்?

அம்மா என்ற பெயருக்கு ஏதும் தடையில்லை ஆனால் இரட்டை இலைக்கு , இயற்கை காட்சிக்கு தடை என்றதும் நாடளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு மறைத்த ஸ்டிக்கர்கள் இன்று இல்லை. சுய உதவிக் குழுக்களை முடக்கும் மோடியின் அரசாங்கத்துக்கு எதிராக பினாமி முதல்வர் வாய் திறக்க மறுக்கிறார். நாடாளும் மன்றத்தில் மோடி. கூடவே சுத்திக் கொண்டிருக்கும் செவ்வாழைகள் பதில் சொல்லும் வேளையில் அடுத்த பயணம் அண்டார்டிகாவா ஆர்டிக்கா என்ற சிந்தனையில். மதமாற்ற தடைச் சட்டம் கொண்டு வரும் இந்துத்துவ தீவிரவாதிகள்  கூடவே மோடி பீரங்கியை களம் இறக்குகிறார்கள்.



மாண்புமிகு முதல்வர் பன்னீர் செல்வம் அவர்களே!!

கோட்சேவுக்கு சிலை, கோவால்கருக்கு மணி மண்டபம், என்று திராவிட இயக்கத்தின்  முக்கிய கொள்கையான சமூகநீதிக்கு எதிரான பார்ப்பனீய பனியாக்களின் ஆதிக்கங்களை ஒரு வார்த்தை கூடச் சொல்ல முடியாமல் ஏற்றுக் கொண்டு குனிந்த தலை கவிழாமல் ஆட்சியை அதிகாரத்தை யாருக்காகவோ ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள் பன்னீர் செல்வம் அவர்களே?

எங்கெல்லாம் அமைதியும் அடங்கிப் போகும் அடிமைப் புத்தியும் இருக்குமோ அங்கெல்லாம் பார்ப்பனீயம் தன் அகன்ற அலகுகளால் ஆதிக்கம் செலுத்த தொடங்கிவிடும். உங்கள் அடிமைத் தனம் என்பது உங்களோடு மட்டும் அல்ல உங்கள் தலைமையை தேர்வு செய்த என்னை அடங்காத கோடிக் கணக்கான தமிழர்களையும் சேரும் முதல்வர் பதவி என்பது வேண்டுமானால் உங்கள் கட்சித் தலைமை கொடுத்த ஒன்றாக இருக்கலாம் சட்ட மன்ற உறுப்பினர் என்பது மக்களின் தேர்வு.

ஒரு டீக்கடைக் காரர் என்று உங்களை கிண்டல் செய்த ஆட்களுக்கு மத்தியில் உங்களின் விசுவாசத்தை போற்றிக் கொண்டிருந்த ஆட்களுள் நானும் ஒருவன். ஆனால் உங்களின் விசுவாசம் என்பது வெறும் கட்சியின் தலைமைக்காக என்பதைக் காணும் போது கண்கள் கலங்கிடத்தான் செய்கிறது. உங்களுக்கு இப்போதிருக்கும் பதவி என்பது யாரோ எவரோ பிச்சை போட்டதல்ல என்பதை உணருங்கள். மக்களின் தேர்வால் சட்டமன்ற உறுப்பினர் ஆன ஒருவரை முதல்வராக்குவது என்பது இந்திய அரசமைப்புச் சட்டம் நமக்குக் கொடுத்த உரிமை.

குஜராத்தில் ஆயிரக்கணக்கான பேரைக் கொன்ற விவகாரத்தில் தன் கறைகளைக் கழுவத் துணியாத மோடி இன்று முதல்வர், பிரதமர் என்ற பதவிகளை அலங்கரித்துக் கொண்டே தன் இந்து பாசிச வெறியை தேசமெங்கும் பரப்ப பர பர பயணத்துக்கு ஆயத்தம் ஆகிக் கொண்டே அத்வாணி வாஜ்பாய் போன்ற ஜாம்பவான்களை கண்காணாத இடத்துக்கு பின் தள்ளிக் கொண்டிருக்கும் வேளையில் கேவலம் விசுவாசத்துக்காக ஜெயலலிதாவின் பின்னால் போய் வரலாற்றை எழுதும் ஆட்களுக்கு கூச்சம் ஏற்படுத்தாதீர்கள்.

உங்களின் மேல் யாருக்கும் விருப்போ வெறுப்போ இல்லை என்பதுதான் உங்களின் பலம், பலவீனம், ஆனால் உங்களிடம் விசுவாசத்தை தவிற வேறொன்றும் இல்லை என்பதை அறியத் தெரிகையில் வெறும் அயற்சிதான் எஞ்சுகிறது. முதலில் உங்கள் கட்சி ஆபிமானங்களை எல்லாம் தூக்கி தூர எறிந்துவிட்டு மக்கள் பணியாற்ற வாருங்கள்.

கொஞ்சமாவது உங்கள் கட்சியில் ஒட்டிக் கொண்டிருக்கும் திராவிட என்ற பெயருக்கு முழு அர்த்தம் தெரியுமானால், அந்த திராவிடச் சொல்லுக்கும் முந்தைய நீதிக் கட்சியின் வரலாறு தெரியுமானால் நீதிக் கட்சியின் முழு அர்த்தமான சுயமரியாதை இயக்கத்தின் போராட்டங்களை அறிவீர்கள் என்றால்  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் மக்களின் முதல்வரின் பினாமியாக இல்லாமல் உண்மையில் மக்களின் முதல்வராக எஞ்சி இருக்கும் உங்களின் ஆட்சிக் காலத்தையாவது கழிக்கப் பாருங்கள்.

பயணக் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, கல்விக் கடன் கிடைக்காத அவலம், மின் வெட்டு, நில அபகரிப்பு, காணாமல் போன மலைகள், சட்டம் ஒழுங்கு
, உள் கட்டுமானம், மத தீவிரவாதங்கள் என  நீங்கள் செய்ய வேண்டிய பணிகள் ஏகப் பட்டவை கிடக்கின்றன உங்கள் முன்னால். ஜெயலலிதாவின் வழக்கை அவர் பார்த்துக் கொள்வார், கட்சியும் கூட அவரின் கட்டுப் பாட்டில்தான் இருக்கும்.

உங்களுக்கு தமிழக முதல்வர் என்னும் மிகப் பெரிய பணி காத்துக் கிடக்கிறது.

நான் சொல்ல வந்ததில் நூற்றில் ஒரு பங்கையாவது சொல்லியிருக்கிறேன் என்ற மகிழ்வோடு.

வாழ்த்துக்கள் திரு. பன்னீர் செல்வம் அவர்களே!!





2 comments:

கரிகாலன் said...

சார்க்கசில் கயிற்றின் மேலே நடப்பவன் போல நடந்து கொண்டிருக்கிறார் பன்னீர் .
ஏதாவது செய்யப்போய் அம்மா அம்மா தூக்கிப்போட்டு மிதித்துவிடுவார்களோ என்ற பயம் அவருக்கு .
மொத்தத்தில் தமிழ்நாட்டின் மானம் காற்றில் பறக்கிறது.

Barari said...

பினாமி முதல்வர் திரு பன்னீர் செல்வம் அவர்களுக்கு சரியான சாட்டையடி அறிவுரை.திருந்துவாரா? வாழ்த்துக்கள் நண்பரே.