Wednesday, May 31, 2006

புத்திசாலி சோவுக்கு பாமரனின் கேள்விகள்


ஜூனியர் விகடனில் கருத்து தெரிவித்திருக்கும் துக்ளக் அதி புத்திசாலிகளின் தலைவர் திரு சோவுக்கு இந்த பாமரனின் சந்தேகங்கள் (எனது கேள்விகள் அடைப்புக்குள்)
‘‘ஒரு சமுதாயம் வளர வேண்டும், எல்லோருக்கும் சமூக நீதி கிடைக்க வேண்டும் என்றால் இட ஒதுக்கீடு விகிதத்தையும், இட ஒதுக்கீடு செய்யப்படும் துறைகளையும் படிப்படியாகக் குறைத்துக் கொண்டேதான் வர வேண்டும். (வளர வேண்டுமென்றால் கூட்ட வேண்டுமா குறைக்க வேண்டுமா?)
அதைவிட்டுவிட்டு மேலும் மேலும் இட ஒதுக்கீடு இல்லாத இடங்களில், குறிப்பாக தனியார் நிறுவனங்களிலும்கூட அதைப் புகுத்துவதும், இருக்கிற இடங்களில் புதிது புதிதாக சில சாதியினரை சேர்த்து இட ஒதுக்கீடு அளிக்க வகைசெய்வதும் கொஞ்சமும் சரியல்ல. (பின்னே அரசு வேலை கிடைப்பதற்க்குள் தான் எங்கள் ஆயுளே முடிந்துபோகிறதே இப்படி தர முடியாது என்று எந்த தனியார் நிருவனமும் சொல்கிறதா இதுவரை?)
இந்தக் கருத்து எல்லோருக்கும் ஏற்புடையதுதான். (யாருக்கு ? எதிர்ப்பாளர்களுக்கா?)
இருந்தாலும், இந்த இடஒதுக்கீட்டு முறையை எதிர்த்தால் ஓட்டு பறிபோய்விடுமோ என்ற பயத்திலேயே எல்லோரும் எதிர்க்கத் தயங்குகிறார்கள். (அதிமுக பிஜேபி கூடவா?)
இட ஒதுக்கீட்டின் மூலம் கிடைக்கிற பெருவாரியான இடங்களை& வசதியும், கல்வி அறிவும் படைத்த குடும்பங்களைச் சார்ந்தவர்களே பெற்றுவிடுவதால், உண்மை யாக யாருக்கு இட ஒதுக்கீடு தேவையோ அவர்களுக்கு அது கிடைக்காமல் போய்விடுகிறது. (இப்போதே இப்படியென்றால் இடஒதுக்கீடு இல்லாவிட்டால் என்னவாகும்?)
ஆக, கல்வி அறிவு பெறாத குடும்பங்களில் இருந்து வருகிற சிறுவர்களுக்கும், சிறுமிகளுக்கும் ஆரம்பத்தில் இருந்தே சிறப்பான கல்வியைக் கொடுப்பதுதான் இதற்கெல்லாம் சரியான வழி. இதற்காக மத்திய&மாநில அரசுகள் ரெஸிடென்ஷியல் பள்ளிகளைத் தொடங்க வேண்டும். அங்கெல்லாம் தகுதிபெற்ற ஆசிரியர்களை நியமித்து, இந்த சிறுவர்&சிறுமிகளுக்கெல்லாம் பயிற்சி அளிக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் மற்றவர்களோடு போட்டிப் போடும் அளவுக்குத் தங்கள் தகுதியை வளர்த்துக் கொள்வார்கள். ஆரம்பத்திலிருந்தே மட்டரகமான கல்வியைக் கொடுத்து, அவர்களைத் தகுதியற்றவர்களாக்கிவிட்டு, அதன்பிறகு இடஒதுக்கீடு தருகிறேன் என்று சொல்வது, ஒரு மோசடி வேலை! இதுதான் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.(நீங்கள் சொல்வதை பார்த்தால் இப்போது ஒதுக்கினால் கூட இன்னும் இருபது ஆண்டுகள் ஆகுமே அதுவரை?)
எப்படியாவது முலாயம் சிங் போன்றவர்களுக்குப் போய்க்கொண்டிருக்கும் பிற்படுத்தப்பட்டவர்களின் ஓட்டுகளைத் தங்கள் பக்கம் திருப்பிவிட வேண்டும் என்ற ஆசையில் காங்கிரஸ் கட்சியினர் உயர்கல்வியிலும் இட ஒதுக்கீடு என்று கோஷமெழுப்ப ஆரம்பித்திருக்கிறார்கள். இது ஓட்டுகளை மட்டும் மையமாக வைத்து நடத்தப்படும் நாடகமே தவிர, உண்மையான சமூக நீதிக்காக அல்ல. இதனை மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். (எங்களுக்கு புரிவதால்தான் கேட்கிறோம் வீனாக முலாயம் எதற்கு இங்கே?. வெறும் மூன்று சதவிகிதம் பேருக்கு ஐம்பது சதவிகிதம் இடஒதுக்கீடு போதாதா மீதமிருக்கும் இடத்தில் பிற்பட்டவர்களுக்கு ஒதுக்கினால் என்ன தவறு என்று பா.ம.க கேட்கிறதே? )
ஆனால், இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்து வதையும், பொதுமக்களை சங்கடத்துக்கு உள்ளாக்குவதையும் என்னால் ஏற்க முடியவில்லை. அந்த அணுகுமுறை தேவை இல்லாதது. குறிப்பாக, டாக்டர்கள் வேலை நிறுத்தம் செய்வதென்பது கண்டிக்கத்தக்க விஷயம் மட்டுமல்ல... பொறுப்பில்லாத்தனமுமாகும்’’ (இதை ஏன் முதலிலேயே சொல்லவில்லை)

Sunday, May 28, 2006

இடஒதுக்கீடு இன்னொரு தீண்டாமை ஒழிப்பு

இடஒதுக்கீட்டை ஆதரித்தும் எதிர்த்தும் போராட்டங்கள் வலுத்து வரும் வேளையில்
கான்பூர் ஐ.ஐ.டி யை சேர்ந்த ஆசிரியர்கள் கொண்ட குழு ஒன்று தற்போது குடியரசு தலைவருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது அதில் " இட ஒதுக்கீட்டின் மூலம் கல்வித்தரம் குறையும்" என்ற குற்றச்சாட்டை வலியுருத்தியுள்ளது அதில் மேலும் எங்களிடம் தகுதியான ஆசிரியர்கள் போதுமான அளவு இல்லை எனவே இடஒதுக்கீட்டின் மூலம் கல்வியின் தரம் தாழ்ந்து போகும் என்று அப்துல் கலாம் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.
இவர்களிடம் தற்போது ஆசிரியர்கள் இல்லை என்பதால் வேறு பணியிடங்களை தகுதியானவர்களை கொண்டு நிரப்ப முடியாதா அல்லது அப் பணிகளுக்காக காத்திருக்கும் எவரும் அந்த தகுதியை பெற்றிருக்க வில்லையா எனும் சந்தேகம் எழுவது தவிற்க வியலாத ஒன்று. மேலும் தற்போது இருக்கும் இடங்களில் ஒதுக்கீடு செய்யவியலாது புதிய இடங்கள் உருவாக்கவும் கூடாது என்கிறது அக்கடிதம். அதாவது" எங்களிடம் உணவு பற்றாக்குறை எனவே பட்டிணியோடு கிடப்பவன் அப்படியே சாகட்டும்" என்பதை சொல்லாமல் சொல்கிறது.
கல்வியின் தரம் என்பது சொல்லிக்கொடுப்பவர்கள் பொருத்தே அமையுமேயன்றி கற்றுக் கொள்பவனால் அமையாது என்பதே உண்மை. இப்படியிருக்க பிற்படுத்த பட்டவர்கள் இடம் பெருவது கல்வியின் தரத்தை குறைக்கும் என்பது வெற்று வாதம். ஏன் பிற்படுத்தபட்ட எந்த மாணவரும் நல்ல மதிப்பெண்களே பெருவதில்லையா என்ன? அதே குழு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு தருவது கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே நிகழும் இனக்கமான சூழலை கெடுக்கும் என்ற விஷத்தையும் கக்கியுள்ளது. அதாவது மேல்சாதியினர் பயிலும் இடத்தில் பிற்படுத்தபட்ட ஒரு மாணவனை சேர்ப்பது அவர்களிடையே சாதிமோதலை ஏற்படுத்தும் என்கிறது.
தீண்டாமை இல்லை என்று வாதிடும் அதே கல்லூரி இல்லை இல்லை அது மேல்சாதிக்கு மட்டுந்தான் என்று இப்போது கொடியுயர்த்துகிறது. இதன் மூலம் நாட்டில் இன்னும் தீண்டாமை இருக்கிறது என்றே அது தெரிவிக்கிறது. இது குறித்து முன்னர் நான் இட்டிருந்த ஒரு பதிவில் "இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் இட ஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை மாறாக பக்கத்தில் இடம்பிடிக்க நிணைக்கும் பிற்பட்ட சாதியை எதிர்க்கும் மனோபாவம் இது" என தெரிவித்திருந்தேன், அது உண்மை என்பதை யே "அவர்களும்" ஒத்துக்கொள்வதுபோலவே தெரிகிறது.
அரசு எந்திரம் என்பது மேல் சாதி மக்களுக்கு மட்டுமல்ல இடஒதுக்கீட்டு தேவையே இவர்களால் தான் உண்டானது என்ற ஞானி அவர்களின் கருத்துக்கு நானும் உடன்படுகிறேன். மேலும் ஞானி அவர்கள் சொன்னதுபோல "என்றைக்கு பிற்படுத்தப்பட்ட மாணவனும் பொதுஇடங்களில் இடம்(சீட்) கிடைக்கிறதோ அன்றுவரை இடஒதுக்கீடும் இருக்கும்"
எனக்கு இன்னும் ஒன்று புரிய வேண்டும். அதாவது "இவர்களுக்கு" உழ, அறுக்க,அடிக்க,சுமக்க,சமைக்க, சுத்தப்படுத்த,துவைக்க,அறிவிக்க தேவைப்படும் ஒரு இனம் கல்வி பயில்வதால் தங்கள் வயிரும் பட்டிணி கிடக்கும் நாடும் நாறிப்போகும் என்பதால்தான் இடஒதுக்கீட்டை எதிர்க்கிறார்களா?. உண்மையில் அவர்களுக்கு நாட்டின் சமூக வளர்ச்சியில் அக்கரை இருந்தால் இட ஒதுக்கீட்டை "எவனும்" மறுக்க மாட்டான். ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்க நீங்கள் வேண்டாம் உங்களுக்கு இத்தனை சதவிகிதம்தான் ஓட்டுரிமை என்று இதேபோல் அறிவிக்க இந்த "மேல்வகுப்"பினர் சொல்லி விடட்டும் அப்போதுதான் அது உண்மையில் இட ஒதுக்கீட்டுக்கான எதிர்பாக இருக்கும் அதுவரை இது வெறும் சாதிக்கு எதிரான போராட்டமாகவே இருக்கும்.
தங்கள் கல்லூரியில் பிற்படுத்தப்பட்ட மாணவன் படிப்பதால் சுமுக நிகழ்வுகள் கெட்டுப்போகும் என சொல்லும் கல்லூரி கல்லூரியாகவே இருக்க முடியாது அது வெறும் மதம் போதிக்கும் குருகுலமாகவே இருக்க முடியும்.அதில் படிப்பவர்களும் மாணவர்களாக இல்லாது "புதிய நூற்றாண்டு கேடிகளாகவே" இருக்க முடியும்.
இந்த விவகாரத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான தகவல்களை திட்டம் போட்டு பரப்பும் என்.டி.டி.வி, தினமலர், தினதந்தி, தி ஹிந்து போன்ற ஊடகம் ,பத்திரிகைகள் அதற்கு ஆதரவு தரும் எந்த போராட்டத்தையும் பதிவுசெய்வதே இல்லை காரணம் அவர்களும் அதே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்
"தீண்டாமை ஒரு பாவச்செயல்"
"தீண்டாமை ஒரு பெருங்குற்றம்"
"தீண்டாமை மனிதத்தன்மையற்ற செயல் "
- மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி

Saturday, May 27, 2006

கருணாநிதி, ஜெயலலிதா நேரடி வாக்குவாதம்



2 ஏக்கர் நிலம் எப்போது?: முதலமைச்சர் கருணாநிதி, ஜெயலலிதா சட்டசபையில் நேரடி வாக்குவாதம் சென்னை, மே.
27-: நிலமற்றவர்களுக்கு 2 ஏக்கர் நிலம், தொடர்பாக முதலமைச்சர் கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் சட்டசபையில் வாக்குவாதம்.
சட்டசபையில் நேற்று அ.தி.மு.க.-காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இடையே மோதல்- கைகலப்பு ஏற்பட்டது. இதையடுத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். அதோடு இந்த கூட்டத்தொடர் முழுவதுக்கும் `சஸ்பெண்டு' செய்யப்பட்டனர். இதற்கிடையே அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றப் பட்டதை கண்டித்து முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டசபைக்கு தன்னந்தனியாக செல்லப்போவதாக நேற்று அறிவித்திருந்தார். விவாதம் தொடர்பாக முழு தகவல் களையும் அவையில் வெளியிடப்போவதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஜெயலலிதா கோட்டைக்கு வந்தார். வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டார். பின்னர் சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது.
அப்போது ஜெயலலிதாவுக்கும், முதல்-அமைச்சர் கருணாநிதிக்கும் நேரடியாக வாக்குவாதம் நடந்தது. அதன் விவரம் வருமாறு
:-(கமெண்டு நம்மளுதுங்க)
ஜெயலலிதா:- அரசியலில் என்னை உருவாக்கிய எம்.ஜி. ஆரை வணங்கி உரையை தொடங்குகிறேன். என்னை வெற்றிபெறச்செய்த ஆண் டிப்பட்டி தொகுதி வாக்கா ளர்களுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஆளுனர் உரையில் பல தவறுகள் இருக்கிறது. எனக்கு பேசுவதற்கு
30 நிமிடம் ஒதுக்கியது போதாது.( போன தடவ அப்பிடிதான் எல்லாறுக்கும் நேரம் ஒதுக்குனீங்க)ளாஆளுனர் உரையில் நிலமற்றவர்களுக்கு
2 ஏக்கர் நிலம் வீதம்
50 லட்சம் ஏக்கர் நிலம் கொடுப்பதாக குறிப்பிடப் பட்டு உள்ளது. அதை எந்த அடிப்படையில் கொடுக்க முடியும். தமிழ்நாட்டில் அரசுக்கு சொந்தமான
3 லட்சம் தரிசு நிலம் தான் உள்ளது. தனியாரிடம்
46 லட்சம் தரிசு நிலங்கள் இருக் கிறது. அப்படி இருக்கும் போது எவ்வாறு நிலமற்றவர்களுக்கு நிலம் கொடுக்க முடியும்.
(உடனே அமைச்சர் பொன்முடி குறுக்கிட்டு பேச எழுந்தார்)
அதற்கு
ஜெயலலிதா ‘‘நீங்கள் உட்காருங்கள், நான் இன்னும் சொல்லி முடிக்கவில்லை’’ என்றார்.(இப்படித்தான இருக்கும் போனதடவ )
சபாநாயகர்:- தவறுகளை சுட்டிக்காட்டும் போது அமைச்சர்கள் பதில் சொல்ல வேண்டும்.
அமைச்சர் அன்பழகன்:- நீங்கள் ஏற்கனவே முதல்- அமைச்சராக இருந்தவர். அவை மரபு நன்றாக தெரியும். இப்போது உறுப்பினராக இருக்கிறீர்கள். உறுப்பினர்கள் கூறும் தவறை மறுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் எழுந்து மறுப்பு சொல்ல அமைச்சர்களுக்கு உரிமை உண்டு.
ஜெயலலிதா:- நான் சொல்லி முடித்த பின்பு தான் மறுக்க வேண்டும்.(சரிங்க டீச்சர்)
அரசுக்கு சொந்தமாக
3 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் உள் ளது. தனியாருக்கு சொந்தமாக
46 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் உள்ளது. ஏழைகளிடம் தரிசு நிலங்கள் மேம்படுத்தப்படாமல் இருக்கிறது.(இன்னைக்கு பூரா இத எத்தன தடவ சொல்லுவீங்க)
முதல்-அமைச்சர் கருணாநிதி:- சில நேரங்களில் குறுக்கிட வேண்டிய அவசியம் உள்ளது. தாங்கள் எப்படி குறுக்கிடுவீர்கள் என்பதை நான் அறிவேன், நாடு அறியும். தேர்தல் அறிக்கையில் அரசு கைவசம் உள்ள இடம், தனியார் கைவசம் உள்ள இடம் என்று நாங்கள் தனியாக குறிப்பிடவில்லை.(தலைவரு இன்னும் கண்ணாடி ஒடஞ்சத மறக்கல )
50 லட்சம் ஏக்கர் நிலத்தை மேம்படுத்தி கொடுப்போம்.
ஜெயலலிதா:- எனக்கு 2 சந்தேகங்கள் எழுகின்றன. (போச்சுடா)
46 லட்சம் ஏக்கர் தனியார் நிலத்தை எப்படி பகிர்ந்து கொடுக்கப்போகிறீர்கள்?
கருணாநிதி:- ஏழைகளிடம் இருந்து தரிசு நிலத்தை எடுத்து அதை மேம்படுத்தி அந்த ஏழைகளுக்கே கொடுப் போம்.
ஜெயலலிதா:- உழவர் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் கணக்கெடுத்ததில் நிலமற்ற ஏழைகள் 86 லட்சம் பேர் உள்ளனர். முதல்-அமைச்சர் அறிவித்தபடி
2 ஏக்கர் நிலம் எப்படி தர முடியும்.
86 லட்சம் பேருக்கு கொடுக்க வேண்டும் என்றால் ஒரு கோடியே
72 லட்சம் ஏக்கர் நிலம் கொடுக்க வேண்டும். எங்கேயிருந்து கொடுக்கப்போகிறீர்கள்.(அம்மா தாயே போதுமே)
அமைச்சர் அன்பழகன்:- விவசாயிகள் அத்தனை பேருக்கும் கொடுக்கவில்லை. நிலமற்ற ஏழைகளுக்கு மட்டும் கொடுக்கிறோம். கருத்து விளக்கம் இல்லாததன் விளைவு இப்படி கேட்கிறீர்கள்.
ஜெயலலிதா:- வாக்குறுதியை கொடுத்துவிட்டு இப்போது முடியாது என்று நழுவ பார்க்கிறீர்கள்.(கீ கீ கீ ... கிளிதாங்க கத்துது)
அமைச்சர் பொன்முடி:- தேர்தல் வாக்குறுதிபடி
50 லட்சம் ஏக்கர் நிலம் பண்படுத்தி கொடுக்கப்படும். எதையும் தெள்ளத்தெரிந்து ஆராய்ந்து சொல்லும் முதல்வர் தான் கலைஞர்.
ஜெயலலிதா:- கருத்து பிழை இருக்கிறது. அதனால் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது. தி.மு.க.வின் இன்னொரு வாக்குறுதியான கூட்டுறவு கடனை தள்ளுபடி செய்து அறிவித்து இருப்பது பதவி ஏற்பு விழாவில் முதல்வர் கையெழுத்திட்டுரூ.
6,866 கோடி கடன்களை, தோராயமாக சொல்லப் போனால் ரூ.
7 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப் பட்டுள்ளது. நாணயமாக கூட்டுறவு கடனை திருப்பி செலுத்தியவர்களுக்கு பணம் திரும்ப கொடுப்பீர்களா? அதுபோன்று ரூ.
500 கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
குறுவை சாகுபடிக்காக ஜூன்

12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக் கம். விவசாயிகளுக்கு ரூ.
1000 கோடி கடன் வழங்குவதாக அமைச்சர் கோ.சி.மணி கூறி யுள்ளார். குறுவை சாகுபடி தொடங்கப்பட்டு உள்ளது. அப்படி இருக்கும் போது எப்படி விவசாயிகளுக்கு ரூ.
1000 கோடி கடன் கொடுக்க போகிறீர்கள். ஏற்கனவே தொடக்க கூட்டு றவு வங்கிகள் நிதி இல்லாமல் செயல்பட முடியவில்லை. கடன் தள்ளுபடி அறிவிப்பு வந்த நாள் முதல் விவசாயிகள் கடனை திருப்பி கொடுக்க மறுத்து வருகிறார்கள். கூட்டுறவு பாங்கிகள் விவசாயி களுக்கு கடனாக
70 சதவீதம் கொடுத்து இருக்கிறது. இந்த நிலையில்
7,500 கோடி வங்கி களுக்கு கொடுத்தால் தான் திட்டத்தை நிறைவேற்ற முடியும்.
கூட்டுறவு வங்கிகளுக்கு நபார்டு வங்கி கடன் வழங்கு கிறது. நபார்டு வங்கிக்கு ரிசர்வ் பாங்கி கடன் கொடுக்கிறது. அதனால் விவசாயிகளுக்கு கடன் கொடுப்பதற்கு நபார்டு வங்கியிடம் அனுமதி பெறப்பட்டதா? எப்போது பெறுவீர்கள். டெல்டா விவசாயிகள் பெரு மளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். கூட்டுறவு வங்கிகளில் மட்டுமல்ல தேசிய வங்கிகளிலும், நிலவள வங்கிகளிடமும், வணிக வங்கிகளிடமும் கடன் பெற்று இருக்கிறார்கள்.(ஹம்மாடி கொஞ்சம் மூச்சு விடுங்க அப்புறம் பேசலாம்)
அந்த வங்கிகளில் வாங்கிய விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்வீர்களா?
அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்:- நீங்கள் எல்லா வங்கிக்கும் வட்டியை தள்ளுபடி செய்தீர்களா கூட்டுறவு வங்கிக்கு மட்டும் தானே வட்டி தள்ளுபடி செய்தீர்கள்.
அமைச்சர் அன்பழகன்:- விவசாயிகள் விவசாயத்திற்கு வாங்கிய கூட்டுறவு கடன்கள் மட்டுமே ரத்து செய்யப்படும். மாமன்-மச்சான் வாங்கிய கடன்களை ரத்து செய்ய முடி யாது.
ஜெயலலிதா:- அமைச்சர் ஜோக்காக பேசி சேம்சேடு கோல் அடிக்கிறார். மாமன்- மச்சான் கடனை தள்ளுபடி செய்ய நான் கேட்கவில்லை.(ஆமா ஆமா ஒங்களுக்கு அதெல்லாம் ஏது ஒரே ஒரு மகன் மட்டுந்தான)
அமைச்சர் அன்பழகன்:- சிறு குறு விவசாயிகள் கடன் களை தள்ளுபடி செய்வோம் என்றோம். இந்த சலுகை நிலச் சுவான்தார்களுக்கு இல்லை. கூட்டுறவு வங்கியில் கடன் வாங்கிய பெரிய பெரிய விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். கூட்டுறவு பாங்கியில் கடன் பெற்றவர்கள் ஏழைகள் மட்டுமல்ல. தேசிய வங்கியில் கடன் பெற்ற டெல்டா விவசாயிகள் உண்மையாக கடன் பெற்ற வர்கள். அவர்களுக்கு கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.
அமைச்சர் ஆற்காடு வீராசாமி:- கடந்த ஆட்சியில் அவர்களுக்கு வட்டி தள்ளு படி செய்யப்பட்டு இருந்தால் கடனும் தள்ளுபடி செய்யப்படும்.
ஜெயலலிதா:- தேர்தல் அறிக்கையில் கிலோ ரூ.
2-க்கு அரிசி வழங்கும் திட்டம் முழுக்க முழுக்க மாநில அரசினுடையது. அதற்கு மத்திய அரசு உதவுவதாக மத்திய மந்திரி சிதம்பரம் உத்தரவாதம் அளிக்கவில்லை.(வடைய சாப்பிட தந்தா நீங்க அதுல ஓட்டைய எண்ணுறீங்க)
ஜெயலலிதா:- நீலகிரி மாவட்ட சிறு தேயிலை விவ சாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி ஆளுனர் உரையில் உண்மைக்கு மாறாக கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாட் டின் வளர்ச்சி விகிதம் அதிக அளவில் இருந்தது. நான் கொண்டு வந்த இலவச சைக்கிள் திட்டம் மாநில அரசின் திட்டம். கவர்னர் உரையில் இதற்கு மத்திய அரசு நிதி ஒதக்கியுள்ளது என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. மாநில அரசு சிறப் பாக செயல்பட்டால் ஒரு குறிப்பிட்ட தொகையைபமத்திய அரசு கொடுப்பது வழக்கம். ஆனால் இந்த திட்டத்துக்கு மத்திய அரசு உதவி அளிக்கவில்லை. அப்படி கொடுத்து இருந்தால் மற்ற மாநிலங்களிலும் இந்த திட்டம் இருந்து இருக்கும் அல்லவா? இது மத்திய அரசின் திட்டம் அல்ல.
கடந்த ஆட்சியில் மத மாற்ற தடை சட்டம் கொண்டுவரப் பட்டது. அந்த சட்டம் திரும்ப பெறப்பட்டது. அதற்கான ஒப்புதல் சட்டசபையில் பெறப்பட்டும் சட்டம் ரத்தாகாமல் உள்ளது என்று தேர்தல் அறிக்கையிலும், பிரசாரத் திலும் கூறினீர்கள். ஆனால் அந்த சட்டத்தை நீக்க மீண்டும் சட்டசபையில் மசோதா கொண்டு வருவதாக ஆளுனர் உரையில் கூறப்பட்டுள்ளது. இது இறந்து போன ஒருவரது பிரேதம் அடக்கம் செய்யப்பட்டு பின்னர் அவர் சாகவில்லை, உயிரோடு இருக்கிறார் என்று பிணத்தை தோண்டி உயிர் இருக்கிறதா? என்று பார்ப்பது போல் ஆகும்
.(டாக்டர் செயா அம்மா வாளுக)
கருணாநிதி:- பிரேதம் பற்றி அம்மையார் சொல்கிறார். சாவில் சந்தேகம் இருந்தால் அதையும் செய்து தான் பார்ப் போம்.
ஜெயலலிதா:- அவசர நடைமுறை சட்டம் மீண்டும் உயிர்பெறாது. ஒரு சட்டம் கொண்டு வந்து அதை திரும்ப பெற்றால் சபையில் விவா தித்து ஒப்புதல் பெற அவசியம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.
கருணாநிதி:- சுப்ரீம் கோர்ட்டு சொல்லி இருந்தாலும் கூட மீண்டும் சட்ட துறையில் வைத்து உறுதிப்படுத்துவதில் தவறு இல்லை. சந்தேகத்தை போக்க சட்டசபையில் வைத்து நிறைவேற்றுவதிலஞ தவறு இல்லை.
ஜெயலலிதா:- சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை முதல்வர் சரியில்லை என்கிறார்.(அப்ப ஒங்கள பத்தி கோர்ட்டு சொன்னது எல்லாம் நெசந்தானா)
கருணாநிதி:- சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு சரியில்லை என்று முன்னாள் முதல்- அமைச்சர் கூறுவது அவர் வகித்து வந்த பதவிக்கு அழகல்ல.
ஜெயலலிதா:- சிறுபான்மை யினரை திசை திருப்புவதற்காக கட்டாய மதமாற்ற தடை சட்டம் அமலில் இருப்பதாக கூறினீர்கள். அந்த சட்டம் அமலில் இல்லை. தெரிந்தே கூறி ஆளுனர் உரையிலும் குறிப்பிட்டு இருக்கிறீர்கள். நடைமுறையில் உள்ள சட்டத்தை ரத்து செய்த பிறகு மீண்டும் அதே சட்டத்தை ரத்து செய்ய மசோதா கொண்டு வர தேவையில்லை.
2004-க்கு பிறகு கட்டாய மதமாற்ற தடை சட்டம் அமலில் இல்லை. இத்துடன் என் உரையை முடித்துக் கொள்கிறேன்.(இத நீங்க நேத்தே செஞ்சிருந்தா ஒரு மைக்கும் மிச்சம் . ஒங்க புள்ளைகளும் ஒழுங்கா உள்ளேன் ஐயா போட்டுருக்கும்)
இவ்வாறு ஜெயலிலதா பேசினார்.ஜெயலலிதா

10.22 மணிக்கு பேச்சை தொடங்கினார்.
11 மணிக்கு பேச்சை முடித்தார். சிறிது நேரம் அவையில் உட்கார்ந்து இருந்து விட்டு புறப்பட்டுச்சென்றார். நன்றி- விகடன்

Friday, May 26, 2006

மதுமிதாவுக்கு மகேந்திரனின் சுட்டி

வலைப்பதிவர் பெயர்: மகேந்திரன்.பெ
வலைப்பூ பெயர் : கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ்
சுட்டி(உர்ல்) :
http://kilumathur.blogspot.com
http://paarima.blogspot.com
http://mahendhiran.blogspot.com
(எத்தனை வலைப்பூக்கள் இருந்தாலும் அனைத்தையும் ஒரே பதிவில் அளிக்கலாம்)ஊர்:நாடு: ஐக்கிய அரபு அமீரகம்
வலைப்பூ அறிமுகம் செய்தவர்: சொந்த சரக்கு
முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் :
17.05.2006
இது எத்தனையாவது பதிவு:
9ம் பதிவு
இப்பதிவின் சுட்டி(உர்ல்):
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்:ஏதோ வலைக்கு என்னாலான தொந்தரவு தரத்தான்
சந்தித்த அனுபவங்கள்: ஒன்னுமில்லபெற்ற
நண்பர்கள்:குழலி, சரவணன்
கற்றவை: கையளவு
எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: எங்க சுதந்திரம் எதையாவது ஏடாகூடமா எழுதுனா .....
இனி செய்ய நினைப்பவை: பாப்போம்
உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: என் வலைக்கு வந்து பார்க்கவும்
இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்: இது போதும்

மலைச்சாமி ஐ.ஏ.எஸ்


மலைச்சாமி ஐ.ஏ.எஸ் அவர்களே...
ஆனந்த விகடனில் முன்னாள் தேர்தல் அதிகாரியும் தற்போதைய அ.தி.மு.க வின் ராஜ்ய சபா உறுப்பினரும் கொரடாவுமான திரு.மலைச்சாமி. அளித்துள்ள பேட்டிக்கு எனது விளக்கம் கோரும் கடிதம்.
ஐய்யா வணக்கமுங்க. நான் துபாய்ல இருக்கனுங்க. நீங்க விகடனுக்கு தந்த பேட்டிய படிச்சனுங்க. ஒடனே எனக்கும் கொஞ்சம் சந்தேகம் வந்துதுங்க. இப்ப நீங்க அ.தி.மு.க வுல இருக்கீங்க ஆனா அதுக்கு முன்னாடி தேர்தல் ஆணையரா ஒரு நாலு வருசம் குப்ப கொட்டுனீங்க. அப்ப நீங்க அதிமுகவுக்கு வேலை செஞ்சீங்களா இல்லையா? இப்ப நீங்க தந்த பேட்டி எனக்கு அப்பிடி தாங்க நினைக்க தோனுது அதெல்லாம் எதுக்கு இப்போன்னு நீங்க நெனைக்கறது தெரிது. சரிங்க.
அடுத்தது எலக்சன் கமிஷன் வலையில திமுக திருவண்ணாமலையில ஜெயிச்சதா ஏழேமுக்காலுக்கு சேதி போட்டதா சொன்னீங்க நானும் பாத்தனுங்க ரிசல்டு தெரிஞ்சுக ஆவல்ல நா அன்னைக்கு வேலைக்கு போலீங்க வெப்பில தாங்க எல்லாம். ஆனா எட்டே மொக்காலுக்கு மேல தாங்க சேதியே வர ஆரம்பிச்சுது.
நீங்க செயா டீவி பாப்பிங்கன்னு நெனக்கிரன் அதுல கூட மத்தியானம் வரைக்கும் ஒங்க கூட்டனி செயிக்க போரதா காட்டுனாங்க அப்பரம் கடேசில ஒன்னுங் காட்டாத எல்லாம் தலகீழா போச்சுங்க. அப்ப அதும் தப்புங்களா?. இன்னுமுங்க.
இந்துக்களின் விரோதி கலைஞர் அதால தான் வெள்ளி செவ்வாய்க்கு முட்ட போடுரார்னு சொல்றீங்க. ஆமாங்க அவரு மேல்சாதி இந்துவான பாப்பானுக்கு எதிரி தாங்க. அவுரும் அருவது வருசமா சொல்றாரு உங்களுக்கு இப்பதான் கேட்டுருக்கு!.
அப்புறம் பெருவாரியான இந்துக்கள் மனச முட்ட போட்டு காயப்படுத்திட்டார்னு சொன்னீங்க.. அதென்னங்க பெருவாரி?. நான் இந்து தாங்க ஆனா ஆடு, மாடு, கோழி,காட கவுதாரி எல்லாந்திம்பனுங்க. நீங்க வடக்கவே வேல பாத்து இந்துன்னா கறி திங்க மாட்டான்னு தப்பா நினைச்சுகிட்டீங்க, இல்லீங்க.
வன்னியன்,தலித்து,முதலியார்,செட்டியார்,குரவன் எல்லாம் இந்துதாங்க என்னா நீங்க மாட்டு மூத்தரத்த தலைல பூசுவீங்க நாங்க அத அடிச்சு சாப்புடுவம். ஆனா மூத்தரமெல்லாஞ் சாப்பிட மாட்டோமுங்க.
அப்புரம் கல்கத்தா இந்து மீன் சாப்புடுவான் அப்பிடின்னு படிச்சனுங்க நெசமா? வாஜ்பாயி,அத்வானிக்கு சிக்கன்னா உசுராம் தெரியுமா அப்ப அவுங்க இந்து இல்லீங்கலா?
அதென்னங்க வெள்ளி செவ்வா? நம்ம சனத்துக்கு சாமி கும்புடறதுன்னாவே ஆடு கோழி வெட்டரது தாங்க. நீங்க முட்டைக்கே குதிக்கிரீங்க?.அப்பறம் கருணாநிதி மஞ்ச துண்டு போடுராரு அது ஸ்டண்டுனிங்க இதேமாரி செயாக்கா பச்ச கலரு போடுராங்களே அதுக்கும் சொல்லுவீங்களா?
கலர் தாங்க இப்ப எல்லாம் கருப்பு வெள்ள டீவி ப்ரீன்னு சொன்னா போடா டுபுக்கு நுட்டு போயிடுவான் அதால தான் தலைவர் கலர் டீ வினு சொன்னாரு. கலைஞர் நிர்வாக தெறம இல்லாதவர் அப்பிடீன்னு சொன்னீங்க சிரிப்பு தான் வருதுங்க.
நிவாரணம் கொடுக்க குள்ள தான் சுப்ரீம் கோர்ட் உங்களுக்கு சர்டிபிகேட் கொடுத்தாங்களே பழிவாங்க மாட்டேன்னு சொல்லிட்டு இப்ப ஆபீசரு எல்லாரையும் டிரான்ஸ்பர் பன்றாருன்னு சொன்னீங்க அவுரு பழிவாங்க மாட்டோம்னுதான் சொன்னாரு இது தண்டனைங்க. தப்பு செஞ்சா எல்லாருக்கும் உண்டு.
நீங்க வேலைல இருக்கப்போ எத்தன பேர மாத்திரிப்பீங்க அப்ப அதுவும் பழிவாங்கறதுங்களா?
அப்பறம் டாடா விவகாரம் இத பத்தி டாடாவே இன்னும் ஒன்னுஞ் சொல்லலீங்க. ஸ்டாலினுக்கு இப்பவே பயிற்சி கொடுக்கார் அப்பறம் முதல்வராக்க முயற்சி பன்றார்னு சொன்னீங்க சரிதாங்க.
அதுக்கு எதுவும் காலேசு இல்லீங்க இப்பிடி எதாவது பிரைவேட்ல படிச்சாதான் உண்டு.
சன் டி வி பிரச்சாரத்தால தான் கலைஞர் செயிச்சாருனு சொல்றீங்க ஒங்க செயா டிவி என்னங்க ஆச்சி வித்துபுட்டீங்களா.
வைக்கோவ அடிச்சாங்க அப்பிடீன்னு சொன்னீங்க ஆமாங்க யாராவது கருணாநிதிய புடிக்காதவங்க செய்வாங்க. அப்பறம் சேதி தெரியுமா இன்னிக்கு சட்ட சபையில சண்டங்க. உங்க ஆளுங்கதான். பாவம் ஒங்க பேட்டிய படிக்கிலயாட்டுக்கு. நீங்க காட்டுமிராண்டின்னு சொன்னது அவுங்களன்னு நெனச்சு உங்கள பார்லிமெண்டுல வச்சி சாத்தபோறாங்க
அதென்னங்க எம்சியாரு காலம் அப்ப ஜெயாவ விட எம்ஜியார் காலம் பெஸ்ட்னு சொல்றீங்களா .பாத்து தூங்குங்க அம்மா நீங்க ஏற்கனவே போட்டு குடுத்த ராசினாமாவ சனாதிபதிக்கு அனுப்பிட போறாங்க.... நன்றிங்க
அப்புறம் நம்ம மொகமூடி ஒரு நாய்கவித போட்டுருக்காருங்க அது ஒங்களுக்கு பொருந்துதுங்க

சட்டமன்ற சண்டியர்கள்


சட்டமன்ற சண்டியர்கள்
இன்று சட்டமன்றத்தில் எதிர் கட்சியான அ.இ.அ.தி.மு.க வும் ஆளுங்கட்சியின் ஆதரவு மற்றும் தி.மு.க தோழமை கட்சியான காங்கிரசும் கைகலப்பில் இறங்கின. எதிர்கட்சி மற்றும் ஆளுங்கட்சி இரண்டும் சுமுகமான போக்கை கடைபிடிக்க போவதில்லை எனும் விவரம் முன்னரே அறிந்தது தான் என்றாலும் அது இத்தனை சீக்கிரம் நிகழும் என எவரும் எதிர்பார்க்க வில்லை. " எங்களை மக்கள் முற்றாக மக்கள் இன்னும் புறக்கனிக்க வில்லை" என நாள்தோரும் அறிக்கை விடும் சண்டியர்களின் தலைவியின் ஆதரவும் இந்த விவகாரத்தில் இல்லாமல் போக வாய்ப்பில்லை. ஏனென்றால் முன்னறே கலைஞரின் கையில் இருந்த நிதிநிலை அறிக்கையை பிடுங்கி கிழித்துப்போட்டவர்தான் அவர். சட்டமன்ற மரபுகள் காக்கப்படுவதில் தி,மு.க. எப்போதும் ஒருபடி முன்னுதாரணமாக இருக்கிறது என்பதில் வேறு கருத்துக்கள் இல்லை. ஆனாலும் அவர்கள் எதிர் கட்சியாக இருந்தபோதும் ஒருமுரைகூட சண்டித்தனங்களில் இறங்கியதில்லை. ஆனால் அ.தி.மு.க. எப்போதும் சட்டமன்றத்தில் ஒரு எதிரிக்கட்சி என்ற போக்கையே கடைபிடித்து வருகிறது. இதுவே இவர்கள் ஆளுங்கட்சியாக இருக்கும்போது தி.மு.க.மற்றும் அதன் தோழமை கட்சிகளை பேசவே விடுவதில்லை. எதிர்கட்சிகளின் குரள்வளையை கட்டிப்போட்டுவிட்டு தனி தர்பாரில் மேசைகளை தட்டி தலைவியின் புகழாரம் சூட்டி மகிழ்ந்தவர்கள். ஆளில்லாத சபையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அப்போதெல்லாம் தி.மு.க. சண்டையில் இறங்கவில்லை. மாறாக அமைதியான முறையில் வெளிநடப்பு செய்திருக்கிறது. அல்லது வெளியேற்றப்பட்டிருக்கிறது. இதுவரை கடந்த ஐந்தாண்டு கால அ.தி.மு.க. அரசு ஒருமுறை கூட எதிர்கட்சிகள் இருக்கும் போது தீர்மானம் எதுவும் நிறைவேற்றியதில்லை. மாறாக ஒவ்வொரு முறையும் தனி ராஜாங்கத்தில் மேசைகளின் சொந்த சத்தங்களுக்கு நடுவே அறங்கேறி வந்த அல்லி ராஜ்யமே அது. தலைவியின் புகழாரம் மட்டுமே கேட்டுக்கேட்டு பழகிய காதுகளுக்கு மக்கள் பிரச்சனைகளை கேட்பது அநாகரீகமாக போயிருக்கும். அத்தோடு எனக்கு இன்னொரு சந்தேகமும் உண்டு. "சட்டமன்றத்திற்கு காட்டுமிராண்டிகள் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்கள்-ஜெயலலிதா" இது அ.தி.மு.க உறுப்பினர்களை பற்றியே கூறப்பட்டது என்று. இதில் இன்னொரு வினோதம் காங்கிரசும் இதே களத்தில் குதித்தது. ஒருவேளை ஆட்சியில் பங்கு கிடைக்காத காரணமோ என்னவோ யாரறிவார். நாங்கள் மக்கள் நலனில் அக்கரை காட்டவில்லை எங்களுக்கு சொந்த விருப்பு வெறுப்புகள்தான் முக்கியம் என்றால் அ.இ.அ.தி.மு.க. தி.மு.க. காங்கிரஸ் கட்சிகளுக்கு ஒரு வேண்டுகோள். மன்றத்தை கலைத்துவிட்டு தெருச்சண்டை போடுங்கள் ஊடகங்களுக்கு தீனி கிடைக்கும். இப்பதிவில் அ.இ.அ.தி.மு.க பற்றி மட்டும் விமர்சணம் இருப்பது போல் தோன்றலாம் ஆனால் அதுதானே உன்மை. அதுபற்றி ஒரு பட்டியலே போடலாம்.
அ.தி.மு.க. வின் சட்டமன்ற மரபுகள் மீறல்:
1. வானளாவிய அதிகாரம் கொண்ட பி.எச்.பாண்டியன் விகடன் ஆசிரியருக்கு அளித்த சிறை தண்டனை
2.ஜெயலலிதா கிழித்துப்போட்ட நிதிநிலை அறிக்கை.அதன் பின் அறங்கேற்றப்பட்ட சேலை கிழிப்பு நாடகம்
3.பன்ருட்டி ராமச்சந்திரனை தாக்கிய தாமரைக்கனி(மோதிரக்குட்டு?)
4.துனை சபாநாயகர் இருக்கையில் அமரவைக்கப்பட்ட உடன்பிறவா தோழி சசிகலா
5.அவை உறுப்பினராக இல்லாதவர் பற்றி எழுப்பிய குற்றச்சாட்டுகள் அவை குறிப்பில் இடம் பெருதல்.
6.ஒரு அமைச்சருக்குரிய கேள்விகள் கேட்கப்படும் போது அதற்குறிய அமைச்சர் அவையில் இருந்த போதும் முதல்வர் குறுக்கிட்டு பதில் கூறுவது.
7.கேள்வி நேரத்தின் போது வாய்ப்பு அளிக்காமல் உறுப்பினர்கள் வெளியேற்றப்படுவது.
8.தேர்தல் பயனத்தில் தேர்தல் அறிக்கையில் இல்லாத புது அறிவிப்புகள் வெளியிடப்படுவது.
9.அதேபோல கவர்னர் உரையுடன் தொடங்கும் சட்டமன்ற முதல் நாள் புறக்கணிப்பு(தி.மு.க எப்போதும் கவர்னர் உரையை புறக்கணித்ததில்லை)
இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். எதிர்கட்சியாக இருந்தபோதும் மக்கள் ஒரு சிறந்த எண்ணிக்கையில் உறுப்பினர்கள் தந்திருப்பது ஏதேனும் நன்மை கிட்டும் என்றுதானே ஒழிய இப்படி அடித்துக் கொள்ள அல்லஇப்படி அடித்துக்கொள்வதுதான் வேலை யென்றால் அது சட்ட மன்றமாய் இல்லாது வெறும் சத்த மன்றமாகவே இருக்கும். மேலும் சபாநாயகரும் இப்போது அ.தி.மு.க.வை
1 மாத காலம் இடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்திருப்பது இந்த கூட்டத்தொடரை பொறுத்தவரை எதிர்கட்சி யில்லாத ஒரு நிலையை உண்டாக்கும். இதுவும் ஒருவித பொறுப்பற்ற சட்ட மன்றம் நடக்கும் என்றே மக்கள் நினைக்கத்தோன்றும்


Thursday, May 25, 2006

முகமூடிகள் வேண்டாம்


இட ஒதுக்கீடும் வலைப் பதிவு விவாதங்களும்!
வலைப்பதிவில் கடந்த சில வாரங்களாக மிகப்பெரிய விவாதம் இட ஒதுக்கீடு தொடர்பாக தொடர்ந்து பதிவுசெய்யப் பட்டு வருவதை அனைவரும் அறிவோம். இதில் ஆரோக்கியமான விவாதங்கள் பலவும் சில விதண்டாவாத கேள்விக் கனைகளும் தொடர்ந்து அறங்கேற்றப்பட்டு வருகின்றன
எடுத்துக்காட்டாக குழலியின் பக்கம். அதில் அவர் ஆதரவாக தொடுத்துள்ள வாதத்திற்கு சிலரின் கேள்விகள் உண்மையில் குழலி யின் வாதங்களுக்காக அல்லாது அவரை நேரடியாக தாக்கும் விதத்தில் மறுமொழியிடப் படுகின்றன. என்னவோ இடஒதுக்கீட்டுக்கு அவர் குரல் கொடுப்பதால் தங்களின் எதிர்கால சந்ததியே பாதிக்கப் படும் என்பதுபோல். உண்மையில் அவரை கேள்வி கேட்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஆனால் புறிந்துகொள்ள மறுக்கும் விதத்தில் முன்னறே தொடுக்கப்பட்ட மறு மொழிகளின் பால் அவரால் வைக்கப்பட்ட பதில்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படுவது கேலிக்கூத்தாக இருக்கிறது. மேலும் கேள்வி கேட்பவர் பதில் சொல்பவரிடம் இருந்து பதிலை பெறும் உத்தேசம் ஏதுமின்றி அவரை சரணடைய வைக்கவேண்டும் என்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது சொந்த வலை.
அதில் பெயரை க் குறிப்பிடாது சில ஆட்சேபனைக்குறிய கருத்துக்களை எழுதுவது என பிரச்சணை உருவான தளத்தில் இருந்து அதை வேறு மட்டத்திற்கு நகர்த்தி செல்லுகின்றனர். இனைய பதிவுகள் கருத்து சுதந்திரத்தின் இருப்பிடமாக இருக்கிறது என்பது எத்தனை தூரம் உண்மை என்பது அனைவரும் அறிந்ததே. எளிதில் பதிவர் வட்டத்தில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் தாக்கி எழுதலாம் என்றால் சிலர் முகமூடி அனிந்துகொண்டு எத்தனை கவிதை வேண்டுமானாலும் எழுதலாம். உண்மையில் இனி இனையத்திற்கும் கடவுச்சீட்டு அளித்தால் தான் சில முகமூடிகளை நம்மால் கண்டுகொள்ள முடியும். அதுகூட அவரின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதில் எந்த மேல்கருத்தும் இருக்கமுடியாது. ஆனால் என்னுடைய கருத்துக்களின் மேல் உனக்கு கேள்வி கேட்க்க உனக்கு எத்தனை உரிமை இருக்கிறதோ அதே அளவு உரிமை உன்னை கேட்பதற்கும் எனக்கு இருக்கிறது என்பதில் உறுதியுடன் இருந்தால் ஒழிய நம்மால் ஒரு ஆரோக்கியமான விவாதத்தில் பங்குபெற அல்லது பதிலளளிக்க முடியாது போகும்.
இட ஒதுக்கீடு தேவையா இல்லையா என்று தொடங்கும் எத்தனையோ விவாதங்கள் முடிவில் நீ பெரியவனா அல்லது நான் பெரியவனா? எனும் போக்கில் இட்டுச் செல்கின்றன. இதில் கருத்தொற்றுமை ஏற்படும் வரை விவாதங்களும் விதண்டாவாதங்களும் தொடர்ந்துகொண்டுதானிருக்கும்.
விதண்டா வாதங்களை வளர்த்து போலி டோண்டுக்கள் ஆதிக்கம் நிறைந்த தளமாக வலைப்பூக்களை மாற்றுவதில்லை நமது நோக்கம். ஒருவரைப் பற்றி தனிப்பட்டதாக்குதலில் இறங்குவது தான் நோக்கமென்றால் முகமூடிகளை கழட்டி எறிந்துவிட்டு அரசியல் மேடைகளில் பேசப்போகலாம். அம்மாக்களும், அய்யாக்களும் அதற்க்குத்தான் ஆள்தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தப் பதிவின் மூலம் நான் குழலிக்கோ பிறருக்கோ ஆதரவு தெரிவிப்பதாக எண்ணவேண்டாம். ஆரோக்கியமான கருத்து தளங்கள் பல உருவாக்கப் பட வேண்டும் என்பதற்க்காகவே என் பதிவின் நோக்கம்.
பிறகு. பா.ம.க. தி.மு.க. அ.இ.அ.தி.மு.க. போன்ற கட்சிகளுக்கு ஆதரவாக எவரேணும் கருத்து தெரிவித்திருப்பின் அதை மறுக்கவோ ஆதரிக்கவோ அனைவருக்கும் உரிமை உண்டு ஆனால் அது அவரவர் தெரிவிக்கும் கருத்துக்களுக்காக இருக்கவேண்டுமேயன்றி அவைசார்ந்திருக்கும் கட்சிகளுக்காக இருப்பது என் அளவில் அநாகரீகமாக தோன்றுகிறது. இதன் மூலம் ஒருவரின் முகவரி சாதி அல்லது கட்சி முத்திரை குத்தப்படுகிறது.


இது நாகரீகம் பேசும் கனிணியுலக நண்பர்கள் செய்வது மேலும் வியப்பளிக்கிறது. நீஆதரிக்கும் கட்சி எனக்கு பிடிக்கவில்லையா இந்தா பிடி சாபம் என்று அந்த கட்சி சார்ந்தவர்கள் மீதான தனிநபர் விமர்சணங்கள் மறுமொழியிடப்படுகின்றன. இது சரியான விவாதமே அல்ல.

இப்படித்தான் திருமதி குஷ்பு சுந்தரின் கருத்தும் திரு.தங்கர்பச்சானின் கருத்தும் தவறாக புரிந்துகொள்ளப்பட்டு தனிநபர் தாக்குதலில் முடிந்தது. குஷ்புவின் கருத்துக்களுக்கும் தங்கர்பச்சானின் கருத்துக்களுக்கும் எதிர்ப்பு தெரிவிப்பதை விடுத்து தனிநபர் தாக்குதலில் இறங்கினர். குஷ்புவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த சுஹாசினிக்கும் அதே கதி. கருத்து சுதந்திரம் என்பது பிடியற்ற கத்தி. இரண்டு புறமும் குத்தவல்லது கவனம் நண்பர்களே

கடைசியாக
"கருத்துக்களுக்கு உங்கள் விமர்சணங்களை தெரிவித்து மறுமொழி யிடுங்கள் .கருத்து சொன்னவருக்கல்ல"