Wednesday, May 30, 2007

ராமன் கடவுளா? தினமலர் கிண்டல்


இப்படியெல்லாம் நக்கலும் நையாண்டியும் செய்து செய்தி வெளியிடும் தினமலரை இனியும் பார்ப்பன சங்கத்து பத்திரிகை என்பதாலேயே படிக்கத்தான் வேண்டுமா என்பதை "இந்துக்கள்" தான் முடிவு செய்ய வேண்டும்,
(இங்கே இந்துக்கள் என்பது திருடர்களை குறிக்காது)

யாரும் பார்க்காத சிவாஜி டிரெய்லர்


சற்று முன் வலைப் பதிவில் இருந்து சக்தி விகடன் வரை எல்லா மக்களும் தேடி பிடித்து படிக்கும் ஒரே செய்தி சிவாஜி தி பாஸ் பற்றியது. இப்போது டிரைலரும் வந்து கலக்குவதால் ஜோதியில் நானும் அய்க்கியமாக வேண்டி இந்த டிரைலரை சமர்பிக்கிறேன் நல்லா இருக்கான்னு சொல்லுங்க

இங்கே சுட்டினால் கிடைக்கும்

Tuesday, May 29, 2007

இட்லிவடை, கொத்தாளத்தேவர், மற்றும் விருமாண்டியாகிய நான்

நேற்று மதியம் இட்லிவடையின் அழகிரி கேள்வி முதல்வர் டென்ஷன் எனும் பதிவை நல்ல வேளை(?)யாக ஜெயா டிவி(நம்புங்கப்பா) செய்திகளை பார்த்த பின்பு பார்க்க நேரிட்டது. இட்லி வடையின் பதிவில் இந்த விவகாரம் குறித்து பின்னூட்டமும் போட்டேன். அது இந்த பதிவை எழுதும் இந்த நிமிடம் வரை வெளிவர வில்லை. அந்த நான் குறிப்பிடும் பின்னூட்டம். அந்த பின்னூட்டத்தில் நான் சொல்லியிருந்தது இதுதான்...

//அப்போது ஜெயா டிவி நிருபர் மதுரையில் தினகரன் அலுவலகம் மீதான தாக்குதலுக்கு மு.க.அழகிரிதான் காரணம் என்று கூறுப்படுகிறதே என்று கேட்டார்.//

இட்லிவடை நானும் நீங்கள் குறிப்பிடும் ஜெயா டிவி செய்திகளை பார்த்தேன் அதில் ஜெயா டிவி நிருபர் முதல்வரை நோக்கி "மதுரை பத்திரிகை அலுவக கொலைகளுக்கு காரணம் அழகிரிதான் என்பது அப்பட்டமான உண்மை" ஆனால் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?" எனக் கேட்டார் அதற்க்குத்தான் முதல்வர் " எதுடா உண்மை உனக்குத் தெரியுமா எனக்கேட்டார். ஆனால் உங்கள் பதிவில் நிருபர் என்னவோ மிக நல்ல முறையில் கேள்வி கேட்டதாகவும் அதற்கு முதல்வர் கடுமையான வார்தைகளை வீசியதுபோலவும் எழுதியிருக்கிறீர்கள்.

இதுதான் இட்லி வடையின் பதிவில் இட்ட பின்னூட்டம் ஆனால் என்ன காரணத்தாலோ எனது பின்னூட்டத்தை அவர் வெளியிட வில்லை. அதற்காக அவரிடம் கெஞ்சிக்கொண்டிருக்கும் அளவுக்கு எனக்கும் பொறுமையில்லை.

உடனே கலைஞர் செய்தது சரி எனச் சொல்கிறீர்களா? அழகிரி இந்த கொலைகளுக்கு காரணமில்லையா என சரளைக்கற்க்களை வீசப்போகும் குஞ்சுகளுக்கு ஒன்றே ஒன்றுதான் சொல்ல முடியும். மாணவிகள் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் ஜெயலலிதா எப்படி குற்றவாளியோ அதே போல்தான் அழகிரியும் குற்றவாளி இதை மறுப்பதற்கில்லை. ஆனால் முதல்வர் அழகிரியின் தந்தையாக மட்டும் பதில் சொன்னது எதிர்பாராத ஒன்று. கலைஞரின் முகத்தில் தெரிந்தது கடும் கோபமில்லை அது எதிர்பாராமல் வந்து விழுந்த எகத்தாளமான கேள்விக்கு திருப்பித் தந்த பதில் அவ்வளவே.

ஜல்லிகள் வரவேற்க்கப் படுகின்றன :)

Sunday, May 27, 2007

கனிமொழி மேல் கல்லெறியும் கழிசடைகள்




கனிமொழி
கவிஞர், கட்டுரையாளர், பத்திரிகையாளர், முற்போக்கு சிந்தனை கொண்ட பெண்ணியவாதி என பல முகங்கள் கொண்ட தமிழ் பெண் ஆளுமைகளுள் குறிப்பிடத் தகுந்தவர். சங்கமம் நடத்தி தான் ஒரு சிறந்த வெளிப்படையான நிர்வாகத் திறமை கொண்டவர் என்பதையும் நிரூபித்தவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாநிலங்களவைக்கு போட்டியிடுவார் என திமுக அறிவித்ததுமே திமுக குடும்ப அரசியல் நடத்துகிறது தமிழ்நாடு திமுக தலைவர் கைகளுக்குள் போனது என் ஜல்லியெறியும் வேலைகளை தொடங்கிவிட்டனர்.

திமுக மட்டும்தான் குடும்ப அரசியல் செய்கிறதா ஒரு பைலட் இந்திய பிரதமராக வரும்போது, ஒரு நடிகை முதல்வராக வரும் போது?, ஒரு முன்னாள் நடிகையின் முன்னாள் முதல்வரின் முன்னாள் வளர்ப்பு மகனின் அண்ணன் அரசியலுக்கு வரும்போது? முன்னாள் முதல்வரின் உடன்பிறவா சகோதரி கட்சியின் பொதுக்குழு உறுப்பினராகும் போது?, இந்த கழிசடைகள் எங்கே போயின?

அதிலும் ஒரு பன்னாடை உளருகிறது இப்படி பார்க்க பின்னூட்டங்கள் "இந்த முகத்தை வைத்துக்கொண்டு இவர் டிவி பேட்டியெல்லாம் கொடுக்க கூடாது என்று"

ஏன் ஜெயலலிதா இன்னும் அழகாய்த்தானே இருக்கிறார் கதாநாயகியாக நடித்தவர்தானே அவர் நாட்டுக்கு செய்த நலன்களை நாடு அறியுமே? அப்ப இவனுங்களுக்கு அசினும் திரிசாவும், பாவனாவும் வந்தாத்தான் புடிக்குமா?

அழகா இருக்கவங்க மட்டும்தான் அரசியலுக்கு வரவேண்டுமென்றால் உபியில் மாயவதி ஏது? நேருவின் மகள் அரசியலுக்கு வந்தால் கேக்க மாட்டோம் , இந்திராகாந்தியின் மகன் அரசியலுக்கு வந்தால் கேக்க மாட்டோம், ராஜீவ் காந்தியின் மகன் அரசியலுக்கு வந்தால் கேக்கமாட்டோம் , பிரியங்கா காந்தியின் கணவர் அரசியலுக்கு வந்தால் கேக்க மாட்டோம் எம்ஜியாரின் "துணை"வியார் அரசியலுக்கு வந்தால் கேக்க மாட்டோம் அம்மாவின் தோழி வந்தால் கேக்க மாட்டோம், தோழியின் அண்ணன் மகன் வந்தால் கேக்க மாட்டோம், மூப்பனாரின் மகன் வந்தால் கேக்க மாட்டோம், சிதம்பரத்தின் மகன் வந்தால் கேக்க மாட்டோம் ஆனால் அன்புமணி ராமதாஸ் வந்தா கேப்போம், கருணாநிதியின் மகள் வந்தால் கேப்போம் என்னடா உங்க லாஜிக்கு?

துணையாக சேர்த்துக்கொண்டவரின் மகள் என்றும் புலம்பியிருக்கிறது சில பன்னாடைகள். துணையாக்கிக் கொண்டவர் இவர்தான் எனச் சொல்லும் துணிவு அவருக்கு இருக்கிறது சட்ட மன்ற விவாதத்தின் போதே ராஜாத்தியம்மாள் என் மகள் கனிமொழிக்கு தாய் எனச் சொல்லும் துணிவு இருக்கிறது கலைஞருக்கு ஆனால் நான் ஒரு பாப்பாத்தி என்பதை சொல்லும் துணிச்சலோடு தனக்கும் எம்ஜியாருக்கும் என்ன உறவு என்பதை சொல்வாரா அம்மையார்?

இந்திராகாந்தி இறந்தபோது காங்கிரசில் வேறு தலைவர்களே இல்லையா?, எம்ஜிஆர் இறந்த போது ஜானகி அம்மையார் தவிர வேறு ஆட்களே இல்லையா? , அதிமுகவில் வேறு ஆட்களே இல்லையா ஜெவைத் தவிர? இவங்க தகுதியெல்லாத்தியும் விட கனிமொழிக்கு ஆயிரக் கணக்கில் தகுதியிருக்கு.

என். டி. ராமராவுக்கு பிறகு சிவபார்வதி ஏன் வந்தார்?. இவ்வளவு ஏன் அமெரிக்கா செய்றது எல்லாம் சரி இஸ்ரேல் எல்லாம் சரி, நேருவோட லெகஸி எல்லாம் சரின்னு சொல்றவங்க ஏன் ஜார்ஜ் புஷ்சுக்கு பிறகு ஜார்ஜ் வில்லியம் புஷ் வந்தாரு? கிளிண்டனுக்கு பிறகு ஹில்லாரி வந்தாங்கன்னு சொல்ல முடியுமா? அழகா இருந்த கிளிண்டன் பன்ன "வேலை" தான் உங்களுக்கு தெரியுமே லேடி மவுண்ட்பேட்டன் அழகாத்தான் இருந்தாங்க.

ஆக மொத்தம் உங்களுக்கு திமுக மேல கல்லெறிய இப்ப கனிமொழின்னு ஒரு பழம் கிடைச்சிருக்கு ஆனா உங்க காரணம் சப்பையால்ல இருக்கு.

இன்னும் அவங்க மந்திரியா ஆனா என்ன நடக்குமோ யப்பா இப்பவே கண்ணை கட்டுதே.

Saturday, May 26, 2007

கலைஞரின் குடும்ப அரசியல்- ஆ.ராசா




‘‘நிச்சயமாக இல்லை. ஏற்கெனவே அவர் குடும்பமே இயக்கம்தான். மிசா காலத்தில் கலைஞர் முரசொலியைக் கையில் எடுத்துக் கொண்டு சாலையில் நடந்தபோது ஜனநாயக உரிமைகளுக்காகப் பாடுபட்ட போது அந்தக் குடும்பத்தில் இருந்தவர்கள் _ அது சிறைக்குப் போன தளபதி ஸ்டாலினாக இருந்தாலும் மு.க. அழகிரியாக இருந்தாலும் மு.க. தமிழரசுவாக இருந்தாலும் அவர்களும் தெருவுக்கு வந்து அவசரச் சட்டத்தை _ போலீஸ் அடக்கு முறையை எதிர்த்து ஜனநாயகத்தைக் காக்கப் போராடினார்கள்; ஆனால், இன்றைக்கு அரசியலுக்கு வரும்போது அல்லது துணையாகப் பணியாற்றும் போது, ‘இவர்கள் வரலாமா?’ என்று கேட்கிறார்கள். இன்னொன்று, நான் ஓர் அரசியல் கட்சியில் இருப்பதாலேயே என் பிள்ளையை நிராகரிக்க வேண்டுமென்று சொல்வது என்ன நியாயம்? என்ன கொள்கை? தி.மு.க.வில் உள்ள ஒருவரின் மகன் தி.மு.க.வில் இல்லாமல் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திலா சேரமுடியும்? மோதிலால் நேரு நேருவையும், நேரு இந்திராவையும் கொண்டு வரக்கூடாது என்று காங்கிரஸிலோ, மக்களிடத்திலோ விவாதம் நடந்ததாகத் தெரியவில்லை. இவையெல்லாம் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. அப்படியே ஒரு வாரிசு திணிக்கப்பட்டால், அல்லது வெளியிலிருந்து நடப்பட்டால் அதை நிராகரிப்பதா, ஏற்றுக் கொள்வதா என்பதை கட்சித் தொண்டர்கள்தான் முடிவு செய்ய முடியும். ஊடகங்களும் மற்ற விமர்சனமும் அல்ல. வாரிசாக வந்த எத்தனையோ பேர் வெற்றியடையவில்லையே!’’




கலைஞரது குடும்ப அரசியல்பற்றி புதிய தகவல் தொழில் நுட்ப அமைச்சர் ஆ.ராசா குமுதம் ரிப்போர்ட்டரில்

Thursday, May 24, 2007

ஜெயலலிதா கும்பகோணத்தில் ஏன் குளித்தார்?

கோவி கண்ணன் அவர்களின் பதிவில் கிருஷ்ணா என்பவர் இட்ட பின்னூட்டம் இதற்கு எனது பதிலை கோவி கண்ணன் அவர்களின் பதிவில் சொல்லியிருக்க முடியும் என்றாலும் அத் எத்தனை பேரின் பார்வைக்கு போகும்? அதனால் அதற்கான பதில் இங்கே பதிவாக.

//ஹிந்து கோவில்களில் பிற மதத்தினர் பிரவேசிப்பது தடை செய்யப்பட்டுள்ளது (ஹிந்துக்களுள் ஜாதி பார்த்தல் கோவில்களில் கிடையாது).ஆகவே தீண்டாமை எனும் வாதம் இங்கு பொருந்தாது.//

தீண்டாமைன்னா என்னங்கயா? அப்ப எங்க ஊர்ல ஆதி திராவிடர்கள் எங்கள் கோயிலுக்குள் நுழையக்கூடாதுன்னு சொல்லி இன்னமும் கேனத் தனமா தடுக்கற எங்க ஊர் முட்டாள் பெருசுங்க செய்யறது சரியா ஆதி திராவிடர்கள் இந்துக்கள் இல்லையா?

//எந்த இடத்திற்கு போனாலும், அந்தந்த இடங்களுக்குறிய விதிமுறைகளை நாம் பின்பற்றத்தான் வேண்டும். உ.ம். நூலகத்தில் அமைதி காத்தல், மருத்துவமனை வளாகத்தில் ஒலிப்பான் உபயோகிக்கத் தடை, தர்ஹாக்களில் நீரினால் சுத்திகரித்தல் இன்ன பிற. அதே போல் ஒரு கோவிலுக்கென உள்ள விதிகளை பின்பற்ற வேண்டியது ஒரு பொறுப்புள்ள குடிமகனின் கடமை. //

இந்துக்கள் கோயிலுக்குள் பிற மதக்காரர் போகக் கூடாதுன்னு நம்ம இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் சொல்வதா எங்கயும் படிக்கலீங்களே?

//அதுவும், பொது வாழ்வில் உள்ளதாக கூறிக் கொள்ளும் ஒருவரின் பொறுப்பு மிகவும் அதிகம். ஏற்கனவே ஒருமுறை அனுபவப் பட்ட பின்னும், இவர் மறுபடியும் அதே தவற்றைச் செய்ய முற்படுவது சற்று அதிகார ஆணவம் என்று படுகிறது. //

எதுங்க அதிகார ஆனவம்? பாப்பான் உள்ள போனா பாக்கிற சாமி வேற யாரும் போனா கண்ண மூடிக்குமா? அப்படீன்னா அது என்னங்க சாமி?

//இறைவன் முன் எல்லாரும் சமம் என்று இங்கு வாதிடும் நாத்திகவாதிகள், இறைவன் எங்கும் இருக்கிறான் என்ற தத்துவத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டியது தானே? இவர் தன்னுடைய சடங்கை வீட்டினுள் வைத்துக் கொள்வது தானே? ஏன் வீம்பு பிடிக்க வேண்டும்?//

கும்பகோணம் போய் செயலலிதா குளிச்சாத்தான் அந்த மகாமகம் கிடைக்குமா? ஏன் சொந்த பாத்ரூம்ல அவுத்துபோட்டு குளிச்சா அந்த சாமி பாக்காதா? சாமிதான் எங்கயும் இருகே?

//கோவில் விதிப்படி ஒரு தவறு நிகழ்ந்திருந்தால், அதை சரி செய்ய அவர்கள் முறைப் படி அவர்கள் அதைச் செய்கிறார்கள். இதற்கு மேல் இதை பெரிது படுத்துவது அடுத்தவர் சுதந்திரத்தில் தலையிடுவது போன்றதாகும். அவ்வளவே.//

அடுத்தவர் சுதந்திரமா? எது அடுத்தவர் சுதந்திரம்? எங்க கோயிலுக்கு வராத.. உள்ள போனா தீட்டு, உக்காந்த இடத்தை கழுவனும், தொட்டா தீட்டு இதெல்லாம் உங்க சொதந்திரமா? இல்லை தந்திரமா? போங்கய்யா

Sunday, May 20, 2007

ஆப்பரேஷன் அனானிமஸ் பின்னூட்டங்கள்


கடந்த சில நாட்களாக எனது பதிவில் அனானிமஸாக (கவனிக்கவும் இவர் அமுகவை சேர்ந்தவர் இல்லை)ஒரு பெருந்தலை தொடர்ந்து எச்சமிட்டு வந்தார். எனக்கு அந்த நடையை பார்த்ததும் கொஞ்சம் சந்தேகம். அதற்கு ஏற்றார் போல சில மசால் வடைகளை ஆங்காங்கே தூவி தொடர்ந்து எனது பதிவுகளை வெளியிட்டு வந்தேன்.


தலை கொஞ்சம் உஷாராகி இருக்கும் போல. ஒரு இரண்டு பதிவுகளை படித்துவிட்டு பின்னூட்டம் போடாமலேயே போயிருந்தார். என்ன இது சோதனை எலி சிக்கவில்லையே என கவலைப்பட்ட நேரம் மீண்டும் அதே எலி இந்த முறை சொந்த பெயரில் லாகின் செய்து ஆனால் அதர் ஆப்ஷனில் பின்னூட்டம் போட்டது. இங்கே பின்னூட்டம் போட்ட வேகத்திலேயே எல்லா பதிவுகளுக்கும் போய் எனது பதிவில் இட்ட அதே பின்னூட்டத்தை கக்கிவிட்டு "எஸ்கே"ப்பும் ஆனது.


இதில் கூத்து என்னவென்றால் அந்த மாஸ்க் போட தெரிந்த பதிவரும் அசந்தால் அடிக்கும் தனது தலைவன் போலவே திமுகவுக்கு உண்மையிலேயே எதிர்பை தெரிவிப்பதாக எண்ணி மசால் வடை வாசனைக்கு மயங்கி பொறியில் சிக்கியது. எந்த எலி வேண்டுமானாலும் எனது வலைக்கு வரலாம் ஆனால் இது என் சொந்த வலை இங்கே குப்பை போட எனக்கு மட்டுமே உரிமை அதிலும் சுத்தம் செய்யும் கடமை என்னை சேருமென்பதால்.


இப்படியிருக்க இன்னும் பெரிய தலைகள் எல்லாம் நான் பின்னூட்டம் போட்ட ஒரு பதிவில் எனக்கு எதிரான வாதங்களை அனானிமஸாக கொட்டியிருந்ததுதான் . அங்கேயே சொந்த பெயரிலும் ஒரு பின்னூட்டம் மதுவின் சூதனமான அந்த பதிவர் தெரிந்தே இதை செய்திருக்க மாட்டார் ஆனால் தெரியும். தனது வலையில் தனக்குத் தானே நூறு பின்னூட்டங்கள் போடுவதே தொழிலாக கொண்ட இன்னுமொரு வாண்டுவும் அதே வேலை பார்த்திருக்கிறது.


ஆபத்தான அனானி அதர் ஆப்ஷன்களுக்கு எதிராக போர்க்களத்தில் தோற்று புறமுதுகிட்ட பிறகு தானே அதை தனது வலைப்பூவில் திறக்க காரணம் இனிமேலும் மற்ற பதிவர்களை அல்லது மற்ற பதிவர்கள் போல் பின்னூட்டங்களை தானே போட்டுக்கொள்வது சொந்த செலவில் வாடகை வீட்டுக்கு சுன்னாம்படிக்கும் வேலை என்பதாலேயே எனவும் அந்த பதிவருக்கே நெருக்கமான ஒரு பதிவர் கூகிள் சாட்டில் கூறி எஸ்கேப்பானதாக எனக்கு நம்பிக்கையான வட்டாரங்கள் தெரிவித்தன.


மேலும் தமிழ் வெளி தற்ச்சமயம் சூடு பிடிக்கும் காரணத்தால் அங்கே எந்த ஐபி இன்ன பிற மசால் வடைகள் பொறிகள் இல்லாத காரணத்தால் தமிழ் மணத்தில் இருந்து தானாகவே வி.ஆர்.எஸ் வாங்கும் திட்டமும் பதிவருக்கு இருக்கிறதாம் ஆனால் அது கொஞ்சம் ஆரிய திட்டம். தமிழ் மணம் தரும் சேவைகள் தமிழ்வெளியில் கிடைக்கும் என்றால் அதற்கு குடிபோகும் திட்டம் உண்டாம்.


விடாது கருப்பு, நான், போலியார், வால்டர் வெற்றிவேல், கொசுபுடுங்கி, ஆதிசேஷன், எல்லாமே ஒருவரே என திரும்ப திரும்ப சொல்லும் இவர் தனது கணினியில் பேவரிட்டுகளில் எங்கள் வலைப்பூ முகவரிகளை சேர்த்து வைத்து எங்காவது பொறியில் சிக்கும் பதிவுகள் எழுதினால் என்னையும்.வால்டர் வெற்றிவேலையும் தமிழ் மணத்தில் இருந்து வெளியேற்றும் திட்டம் இருக்கிறதாம்.


அதோடு சார்பில்லாத சிங்கை பதிவர் சாட்டை சொடுக்குவதால் சந்தேகம் வந்து இனி போகும் பதிவுகளில் எங்கள் பெயரோடு அந்த ஜெனரல் நாலேட்ஜ்ஜையும் சிக்க வைக்க யோசிக்கிறாராம். இத்தனை தகவல்களையும் எனக்கு அளித்த அந்த திராவிடத்தின் மேல் கோபம் கொண்ட சிங்கரன் எங்களிடம் அந்த தகவலை சொன்னதில் காரணம் உண்டு. எல்லாம் சொந்த விஷயம் தான்.


தான் எத்தனை ஆதரவாக இருந்தும் தன்னை இன்னும் திரா"விட" எதிரியாக்க அந்த ஆப்பரேசன் சல்மா அயூப்பில் சவுக்கடி வாங்கிய பதிவரின் திட்டம் போலவே தனது பெயரில் போலி வலைப்பூ ஆரம்பிக்கும் திட்டம் இருப்பதை கண்டுகொண்டாராம். ஆனால் நீங்கள் இதற்கெல்லாம் பயப்பட வேண்டாம் என சொன்ன பிறகு கொஞ்சம் தைரியம் பெற்றார்.


எத்தனை முறை அடிவாங்கியும் அசராமல் கப்பு எனக்குத்தான் எனும் வடிவேலுவை போல் எத்தனை முறை புறமுது காட்டியும் இது போர்த்தந்திரம் போடா ஜாட்டான் எனச் சொல்லும் அந்த பதிவரை பார்த்து ஒரே ஒரு வார்த்தை


" டோண்ட் டூ திஸ் "