
கடந்த சில நாட்களாக ஒருவர்பின் ஒருவராக தமிழ்மணம் மீது பாசிசம் பரப்பும் இணைய தளம் இது எனவே நாங்கள் இனி இங்கே எழுதப் போவதில்லை நாங்கள் போகிறோம் எங்களை
342 பேர் படிக்கிறார்கள் அதில்
12 பேருக்கு தமிழ்மணம் என்றால் என்ன வென்றே தெரியாது என பாவலா காட்டி பயணத்தை தொடங்குகிறார்கள்.
போகிறவர்கள் போகலாம் ஆனால் அவர்களில் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூறுவதும் அல்லது துடைத்து எறிவதும் தமிழ்மண நிர்வாகிகளை பொறுத்த விவகாரம். எனது பதிவுகளை சராசரியாக
ஒரு நாளைக்கு
600 பேர் படிக்கிறார்கள் அதில்
500 பேர் தமிழ்மணம் வாயிலாகவே வருகை தருவதாக கூகிள் அனலிடிக்ஸ் கூறுகிறது மற்றவர்கள் தேன்கூடு மற்றும் தமிழ்ப் பதிவுகள் இன்ன பிற தேடுதளங்களின் உதவியுடன் எதையாவது தேடி எதிர்பாராமல் வந்து விழும் வாசகர்கள்.
தமிழ் மணத்தின் தொட்டாச்சினுங்கி தன்மை சில பதிவர்களை அது பாசிச போகில் செயல்படுவதாக பழிபோட காரணமாய் இருப்பினும் எதிகருத்துக்கள் எல்லாவற்றுக்கும் அது இடம் கொடுத்தே வந்திருக்கிறது. முதலில் எதிர்கருத்து என்றால் என்ன என்று பார்க்கலாம்"எனது கருத்துக்களோடு ஒத்துப்போகாத உங்களின் கருத்து" இதை நீங்கள் அனானியாகவோ அல்லது பதிவர் கணக்கிலோ வந்து தெரிவிக்கலாம் அனானியாக இடப்படும் பின்னூட்டம் எங்கிருந்து வந்தது என (நீங்கள் ப்ராக்ஸி பயன்படுத்தினாலும்) மிக எளிதாக கண்டுகொள்ளும் வகையிலான வெப் ஸ்டாட்டுகள் எனப்படும் வலை கண்கானிப்பு கனிப்பான்கள் சொல்லிவிடும் எனக்கு இந்த பின்னூட்டம் அனுப்பியது யாராய் இருக்கும் என சந்தேகம் எழும் பட்சத்தில்.
போனவர்கள் எல்லோறும் போகிற போக்கில் சேற்றை வாரி தமிழ் மணத்தின் மீது மட்டுமல்ல அதை முற்றும் நம்பி இன்னும் ஆர்வமாக பதிவிட்டுக்கொண்டிருக்கும் மீதமிருக்கும் ஆயிரத்து எண்ணூறு பதிவர்கள் மேலும் இறைத்துவிட்டே செல்கிறார்கள் கடந்த ஆறு மாதங்களாய் தமிழ்மணம் டிஎம் ஐ கைக்கு போனதில் இருந்தும் பூங்கா வலையிதழ் தொடங்கப் பட்டதில் இருந்தும் தெரியாத பாசிசம் இப்போடு மட்டும் இவர்கள் கண்ணுக்கு தெரிந்தது எப்படி?
அதுவும் இனிமேலும் தமிழ்மணத்தில் எழுதுபவர்கள் இந்திய இறையான்மைக்கு எதிராக செயல்படுபவர்கள் போல ஒரு அபார அறிவோடு விலகுகிறார்கள். இன்றைக்கு வேண்டுமானால் இவர்கள் பதிவை
400 முதல்
500 வரையிலான நிரந்தர வாசகர்கள் படிக்கலாம் ஆனால் இவர்கள் தமிழ்மணம் விட்டுப் போனால் என்ன ஆவார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். அதற்க்காக ஒரு பிடிக்காத இடத்தில் அவர்களை தொடர்ந்து எழுதச்சொல்லி கட்டாயப்படுத்தவில்லை. அது அவர்களின் உரிமை அதே நேரம் தன்னலம் கருதாமல்(இதற்கு ஒரு பதிவர் தன்னலம் இல்லையென்றால் இங்கே விளம்பரம் செய்ய தொடர்புகொள்ளுங்கள் என ஏன் ஒரு வரி ஓடுகிறது? என கேட்கிறார் : அய்யா ஓசியில் இடம்கொடுத்து அதில் கொஞ்சம் விளம்பரமும் கொடுத்து காசு பாருங்கள் என கூகிள் ஆட் சென்ஸ் கூவுகிறதே எதற்க்கு? உங்கள் இடுகைகள் ஒரே நாளில் ப்ளாகரை விட்டு தொலைந்து போகாமல் இருக்க உங்கள் விளம்பர வழி வருமாணம் கூகிளுக்கு தேவை) தனி ஒரு நிருவணம் தனது செயல்பாடுகளின் இடையே தங்கள் வருமானத்துக்காக சில விளம்பரங்கள் ஊடே வருமாணம் தேடுவது ஒன்றும் குற்றமில்லை.
பதிவர்கள் இல்லா விட்டால் தமிழ்மணம் இல்லை எனச் சொல்பவர்களுக்கு ஒன்றுதான் சொல்ல முடியும் தமிழ்மணம் நம் வீடு வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது குடியிருப்பவன் கடமை அதே நேரம் வாடகைக்கு விட்டுவிட்டதாலேயே நீங்கள் அடிக்கும் பிடுங்கும் ஆணிகளுக்கு எதிராக கேள்வி கேட்காமல் இருக்க முடியாது தமிழ்மணம் அதைத்தான் செய்கிறது.
பாசிசப் போக்கில் தமிழ்மணம் போகிறது எனக்கூறி வெளியேரும் எல்லோரும் சொல்லாமல் செல்லும் ஒரு காரணம் உண்டு அது "நாங்கள் நாசிக்கள் அதனால்தான் எங்களுக்கு பாசிசம் பிடிக்கவில்லை" வெளியே போகும் முன் வீட்டை சுத்தம் செய்யுங்கள் இல்லாவிட்டால் அடுத்து வரும் சந்ததி அசிங்கப்பட வேண்டியிருக்கும்.
ஒரு பதிவர் இப்படி எழுதுகிறார் இணையத்தில் அடையாள திருட்டு அதிகம் இருப்பதால் எனது விபரங்கள் அனைத்தையும் உடனே அழித்துவிடவும் அட இத்தனை நாளாக இது தெரியாமல்தான் எழுதிக்கொண்டிருந்தாரா? போகிற போக்கில் என்ன அவசரம் பாருங்கள் இந்த விவகாரங்களின் மூலம் ஒரு உண்மை மட்டும் தெரிகிறது "குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் " இந்த போக்கை ஏன் இப்போது மட்டும் வெளிப்படுத்துகிறார்கள்? இத்தனை நாளாய் சகோதரர் விடாது கருப்பு விலக்கப்பட்ட போது ஏன் தெரிவிக்கவில்லை இந்த எதிர்ப்பை? இன்னும் பல பதிவர்கள் விலக்கப்பட்ட போது ஏன் தெரிவிக்கவில்லை?
தங்களுக்கு ஏதேனும் ஒன்று என்றால் வலிக்கும் அதே அடுத்தவனுக்கு என்றால் மகிழ்ச்சியாய் இருக்கிறதோ? முதலில் பதிவர்களின் இந்த மனநிலை மாற வேண்டும் அப்போதுதான் தமிழ் மணக்கும்.