Wednesday, May 25, 2011

சுஜாலம் சஃபாலம்**குஜராத்தில் நடத்தும் ஆட்சியின் கதை


2002 ஆம் ஆண்டில் இஸ்லாமிய இனப் படுகொலையை நடத்தியவர் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி. இப்போது, அவர், இந்தியாவிலேயே நல்லாசி நடத்தி, சாதனை படைப்பதாக பார்ப்பன ஏடுகளும், ‘இந்துத்துவா’ சக்திகளும் புகழ் மாலை சூட்டத் தொடங்கியிருக்கின்றன. தமிழின உரிமை பேசும் நமது தோழர்களும்கூட இந்த பிரச்சார மாயை உண்மையென நம்பி மோடிகளின் புகழ் பாடத் தொடங்கியிருக்கிறார்கள். மோடி குஜராத்தில் நடத்தும் ஆட்சியின் கதை என்ன? அதையும் பார்ப்போம்.

பிரபல இந்தி நடிகையான ஷெர்லின் சாப்ரா என்பவர், குஜராத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது, நரேந்திர மோடியைத் தூக்கி வைத்துப் புகழ்ந்து, தான் அவரை சந்தித்ததே இல்லை என்றும், அவரிடம் உதவியாளராகப் பணியாற்றக் கூட தயாராக இருப்பதாகவும் பேசினார். அவர் பேசிய இடம் குஜராத் தொழிலதிபர்கள் நடத்திய நிகழ்ச்சி.

அடுத்ததாக ஊழல் எதிர்ப்பு இயக்கம் தொடங்கியுள்ள அன்னா அசாரேயிடமிருந்து, பாராட்டு மாலை வந்து விழுந்தது. மோடி - குஜராத் மாநிலத்தை வெகுவேகமாக வளர்ச்சிப் பாதையில் அழைத்துப் போகிறார் என்று. தமிழ்நாட்டில், குருமூர்த்திகளும் சோ இராமசாமிகளும் தீவிரப் பரப்புரை செய்து வருகிறார்கள். இந்தியாவின் பிரதமர் பதவி வேட்பாளருக்கு மோடியை முன்னிறுத்துவதே, இந்தப் பரப்புரையின் உள்நோக்கம். இந்த நாடகங்கள் நடந்து கொண்டிருக்கும்போது, மோடியின் உண்மை முகத்தை வெளிப்படுத்தும் மற்றொரு நிகழ்வும் நடந்தது. அதுதான் சஞ்சீவ் ராஜேந்திரபத் என்ற குஜராத்தின் முன்னாள் அய்.பி.எஸ். போலீஸ் அதிகாரி தாமாகவே முன்வந்து உச்சநீதிமன்றத்தில் மோடிக்கு எதிராக தாக்கல் செய்துள்ள வழக்கு. குஜராத் கலவரத்தைப் பற்ற வைத்தவரே மோடி தான் என்பது இவரது குற்றச்சாட்டு.

கலவரத்தின்போது உயர்மட்ட காவல்துறை அதிகாரிகளின் கூட்டத்தைக் கூட்டிய மோடி, ‘முஸ்லீம்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார் என்பதே வழக்கு. அந்த உயர்மட்ட அதிகாரிகள் கூட்டத்தில், இருந்தவர், இந்த அதிகாரி. கொடூரமான குஜராத் இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பித்து கரை சேர்ந்து விட்டதாக நம்பிக் கொண்டிருந்த மோடிக்கு, இது ஒரு பேரிடி. இந்த அதிகாரி, பிரமாண வாக்குமூலமாக வழக்கை தாக்கல் செய்துள்ளார். வாக்குமூலத்தில் தவறான தகவல் இடம் பெற்றிருந்தால் - அது கடுமையான குற்றமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

சபர்மதியில், கரசேவகர்கள் பயணம் செய்த ரயில் பெட்டி தீ வைக்கப்பட்டதைத் தொடர்ந்து குஜராத் கலவர பூமியானது. அப்படி ஒரு கலவரம் இந்தியாவில் நடந்ததே இல்லை. மூன்றே நாட்களில் குஜராத்தின் 19 மாவட்டங்களில் 2500 முஸ்லீம்கள் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டனர். மோடி அமைச்சரவையில் வருவாய்த் துறை அமைச்சராக இருந்தவர் ஹேரன் பாண்டி. இவர் ஆர்.எஸ்.எஸ். பின்னணியிலிருந்து வந்தவர்தான். அவராலேயே இதை சகித்துக் கொள்ள முடியவில்லை. இந்தப் படுகொலைகள் பற்றி சிறப்பு புலனாய்வுக்குழு உச்சநீதிமன்ற ஆணையின் கீழ் நியமிக்கப்பட்டு விசாரித்தது. ஆனால், ஆட்சி நிர்வாகம் மோடியிடம் இருந்ததால் உயர் அதிகாரிகள் உண்மையை வெளிப்படையாகக் கூறத் தயாராக இல்லை. சிறப்புப் புலனாய்வுக் குழுவும் நேர்மையாக செயல்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியங்களை சிறப்பு புலனாய்வுக் குழுவே பதிவு செய்ய மறுத்தது. இந்த நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் பி.பி.சவந்த் மற்றும் ஹோஸ்பர்ட் சுரேஷ் ஆகியோரைக் கொண்ட ‘குடிமக்கள் பேராயம்’ என்ற சுயேச்சையான விசாரணை மையம் பல உண்மைகளைப் பதிவு செய்து சிறப்பு விசாரணைக் குழுவிடம் அளித்தது.

இந்த நீதிபதிகள் முன் தோன்றி மோடிக்கு எதிராக சாட்சியளித்தவர்களில் ஒருவர் வருவாய்த் துறை அமைச்சர் ஹிரேன் பாண்டியா, பிப். 27 ஆம் தேதி மோடி தனது வீட்டில் நடத்திய கூட்டத்தில் தானும் கலந்து கொண்டதாகவும், அப்போது இந்துக்கள் நடத்தும் தாக்குதல் நடவடிக்கைகளை காவல்துறை தடுக்க வேண்டாம் என்று - மோடி உத்தரவிட்டதாகவும் கூறினார். பின்னர் மர்மமான முறையில் அவர் கொலை செய்யப்பட்டார். மோடிக்கு ஆதரவாக உண்மைகளை மறைத்த காவல்துறை அதிகாரிகளான பி.சி. பாண்டே, பி.கே. மிஸ்ரா, அசோக் நாராயணன் போன்ற பார்ப்பன அதிகாரிகளுக்கு அவர்கள் பதவி ஓய்வுக்குப் பிறகு, வேறு பதவிகளை பரிசாக வழங்கினார் மோடி. இப்போது மனுதாக்கல் செய்துள்ள காவல்துறை அதிகாரி சஞ்சீவ் ராஜேந்திரபத், மோடி நடத்திய கூட்டத்தில் பங்கேற்கவே இல்லை என்று அரசு தரப்பில் மறுக்கப்பட்டது.

அப்போது உளவுத் துறையில் துணை ஆணையாளர் என்ற நிலையில் தான் அவர் இருந்தார். எனவே உயர்அதிகாரிகள் மட்டும் பங்கேற்ற கூட்டத்துக்கு அவர் எப்படி வந்திருப்பார் என்பது, அரசு தரப்பு எழுப்பும் மறுப்பு. அப்போது உளவுத் துறையின் தலைமை ஆணையர் ஜி.சி. ராஜ்கர் விடுப்பில் இருந்தார். எனவே தன் சார்பாக இராஜேந்திர பத்தை, கலந்து கொள்ளுமாறு அவர் பணித்ததால், பத், அந்தக் கூட்டத்தில் பங்கேற்றார். மோடியின் கட்டுப்பாட்டில் இருந்த சிறப்புப் புலனாய்வுக் குழு இராஜேந்திர பத் அக்கூட்டத்தில் பங்கேற்கவே இல்லை என்று தடாலடியாகக் கூறிவிட்ட பிறகு, நீதிமன்றமும் அதை ஏற்றுக் கொண்ட பிறகு, இப்போது நேரடியாகவே இராஜேந்திர பத் மோடிக்கு எதிரான வலிமையான சான்றுகளுடன் நீதிமன்றம் வந்து விட்டார். இந்த அதிகாரியின் வாகன ஓட்டுனரும், மோடி கூட்டிய கூட்டத்தில், அவர் பங்கேற்றதை உறுதிப்படுத்தியிருக்கிறார். பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதிமன்றத்தில் போராடி வரும், மனித உரிமைப் போராளியும், பெண் பத்திரிகையாளருமான தீஸ்த்தா செட்டால் வத், மோடிக்கு எதிராக நேரடியான குற்றச்சாட்டு, இப்போது தான் முதன்முதலாக வந்துள்ளது. உண்மைகள் வெளியே வரத் தொடங்கியுள்ளன என்று கூறியுள்ளார்.

மோடி நிர்வாகத்தில் பணிபுரிந்த சிறீகுமார், ராகுல் சர்மா போன்ற நேர்மையான அதிகாரிகள், கலவரங்கள் பற்றி சிறப்பு புலனாய்வில் பதிவு செய்த உண்மையான தகவல்களும் நிராகரிக்கப்பட்டு விட்டன. உண்மையைப் பேசியதற்காக, மோடி ஆட்சியில், இந்த அதிகாரிகள் பழிவாங்கப்பட்டனர். இந்த சூழ்நிலையில் தனது குற்றச்சாட்டுகளுக்கு நீதி கிடைக்குமா என்ற சந்தேகம் ராஜேந்திர தத்துக்கு ஏற்படுவது நியாயம் தானே! அந்த தயக்கமே, அவரை காலம் கடந்து, நீதிமன்றம் வரக் காரணமாக இருந்துள்ளது. இப்போது உச்சநீதி மன்றம் சிறப்பு புலனாய்வுக் குழு அறிக்கையை மட்டுமே ஏற்க வேண்டும் என்ற அவசியமில்லை; சுதந்திரமான அமைப்புகள் நடத்திய விசாரணை களையும் பரிசீலிக்கலாம் என்று அதிரடியாக அறிவித்துள்ளது.

மோடி - குஜராத் கலவரத்துக்குப் பிறகு இரண்டு தேர்தல்களில் வெற்றி பெற்றுவிட்டார். அவர் நாட்டை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு சென்று, வளர்ச்சித் திட்டங்களில் கவனம் செலுத்துவதே அவரது வெற்றிக்கான காரணம் என்ற பிரச்சாரம் பார்ப்பன வட்டாரங்களில் தீவிரமாக முடுக்கி விடப்படுகிறது!

பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டலுக்கு தாராளமாகக் கதவு திறந்து விட்டுள்ள மோடியை அவர்கள் நடத்தும் ஊடகங்கள் புகழ் பாடுவதில் வியப்பு எதும் இல்லை.

• ‘என்.சி.ஏ.பி.ஆர்.’ என்ற பொருளாதார ஆய்வு மய்யம் அண்மையில் குஜராத்தில் சிறுபான்மையினர் நிலை பற்றிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டு அறிக்கையாக வெளியிட்டுள்ளது. ஏழ்மை, வறுமை, கல்வியின்மை, பாதுகாப்பற்ற நிலையில் - இந்தியாவிலேயே ஒரிசா, பீகார் மாநிலங்களைப்போல் மிக அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பவர்கள் குஜராத்தில் வாழும் முஸ்லீம்கள் என்று அந்த ஆய்வு கூறுகிறது.

• குஜராத்தில் முஸ்லீம்களின் வறுமையின் அளவு உயர்சாதி இந்துக்களைவிட 50 சதவீதம் அதிகம். வங்கிக் கணக்கு வைத்துள்ள முஸ்லீம்கள் எண்ணிக்கை 12 சதவீதம் மட்டுமே. வங்கிக் கடன் வாங்கியவர்கள் 2.6 சதவீதம்.

• தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் முஸ்லீம்கள் புறக்கணிப்பு பெருமளவில் உள்ளது.

• 2002 கலவரத்தால் பாதிக்கப்பட்ட 23000 முஸ்லீம்கள் இப்போதும் தற்காலிக முகாம்களிலேயே அகதிகளாக வாழ்கிறார்கள். நிரந்தர முகாம்கள்கூட அமைக்கப்படவில்லை. பல லட்சம் மதிப்புள்ள வீடுகளை இழந்தவர்களுக்கு அரசு தரும் இழப்பு ஈடு ரூ.10,000 அல்லது ரூ.15,000 மட்டுமே.

• கிராம சாலைகள்; வீடுகளுக்கு மின் இணைப்பு; குடிநீர் இணைப்பு போன்ற அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டிருந்தாலும், மனித சமூக மேம்பாடு வளர்ச்சி மிகவும் குறைவாகவே உள்ளது. காரணம், ஊழல்கள் பெருகி நிற்பது தான்.

• கடந்த 2 ஆண்டுகளில் மூன்று பெரும் ஊழல்கள் நடந்துள்ளன. 17000 கோடி செலவில் குளங்களை வெட்டும் திட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத் திட்டத்தின் பெயர் ‘சுஜாலம் சஃபாலம்’; இதில் வேலை செய்யும் தொழிலாளருக்கு, உள்நாட்டு சந்தையில் கோதுமைக்கான விலை நிர்ணய அடிப்படையில் கூலி வழங்கப்பட வேண்டும். தொழிலாளர்களுக்கான ஊதியத்தை மொத்தமாக முன் கூட்டியே ஒப்பந்தக்காரர்களுக்கு அரசு வழங்கி விட்டது. ஆனால் தொழிலாளர்களுக்கு அரிசி விலைக்கான கூலியே தரப்படுகிறது. பல குளங்கள் காகிதத்தில் மட்டுமே வெட்டப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்காக வழங்கப்பட வேண்டிய அரிசி - பெருமளவில் மகாராஷ்டிராவுக்கு கடத்தப்படுகிறது.

• 2009 இல் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்துக்காக ரூ.260 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், எந்த வேலையும் கிடைக்கவில்லை. வேலை நடப்பதாக கணக்கு எழுதப்பட்டு, பணம் ஒப்பந்தக்காரர்களால் சுருட்டப்பட்டு விட்டது.

• 2010 இல் உருவாக்கப்பட்ட மீன் வளர்ப்புத் திட்ட ஊழல்களால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.600 கோடி. இதற்கான டெண்டர் விடப்பட்டதில் ஊழல்கள் நடந்தன.

• பெருமளவில் அன்னிய தொழில் முதலீடுகளுக்கு குஜராத்தில் மோடி கதவு திறந்து விட்டுள்ளார். அன்னிய முதலீட்டை எதிர்ப்பதாக கட்டுரைகள் எழுதும் பார்ப்பன குருமூர்த்திகள், மோடி அதே வேலையை செய்யும்போது தொழில் வளர்ச்சி என்று பாராட்டுகிறார்கள். குஜராத்தில் 2003 இல் மோடி அன்னிய முதலீடுகளை வரவேற்கும் திட்டத்தைத் தொடங்கியபோது, ரூ.69 கோடி முதலீடு வந்தது. 2005 இல் ஒரு லட்சம் கோடி; 2007 இல் 4 லட்சம் கோடி; 2009 இல் 12 லட்சம் கோடி; 2011 இல் 21 இலட்சம் கோடியாக பன்னாட்டு மூலதனம் அதிகரித்து நிற்கிறது.

• இந்த பன்னாட்டு பெரும் தொழில் நிறுவனங்களுக்கு அவர்கள் விரும்புகிற இடங்களில் நிலம் தாராளமாக ஒதுக்கப்படுகிறது. 5 ஆண்டுகளுக்கு எந்த வரி விதிப்பும் கிடையாது. தொழிலாளர் நல சட்டங்களிலிருந்தும் விதி விலக்கு. விவசாய நிலங்கள், பழங்குடியினருக்கானவனப் பகுதிகள், பெரும் தொழில் நிறுவனங்களின் வசமாகி விட்டன. சுற்றுச் சூழல் பாதிப்பு காரணமாக நீதிமன்றமே தலையிட்டு, பல தொழிற்சாலை களை மூட உத்தரவிட்டுள்ளது. உடனே - மோடி ஆட்சி, அவர்களுக்கு வேறு இடங்களை ஒதுக்கித் தருகிறது. இந்த பெரும் தொழில் நிறுவனங்கள் வரத் தொடங்கிய பிறகு, மக்களின் சுகாதாரம், பொருளாதாரம், கல்விச் சேவைகள் மிகவும் குறைந்துவிட்டன. பெண்கள், குழந்தைகள், மைனாரிட்டியினர் வாழ்நிலை மிகவும் பின்னுக்குப் போய்விட்டன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

• பெரும் தொழில் நிறுவனங்கள் வந்த பிறகும் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கவில்லை. படித்த வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சமூக சேவையாளர் தீஸ்கா செடல்வாட் ஆய்வு வழியாக அம்பலப்படுத்தியுள்ளார்.

• குஜராத்தில் மகுவா பகுதியில் விவசாயிகள் மோடி அரசுக்கு எதிராக கடும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். விவசாயத்தை நம்பி வாழும் இப்பகுதியில் பாசன வசதிக்காக அணைகட்டுவதற்காக ஒதுக்கப்பட்டிருந்த இடத்தை மோடி பூமிக்கடியில் உள்ள சுண்ணாம்புக் கல்லைத் தோண்டி எடுத்து சோப்பு தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க அனுமதித்து விட்டதால், அப்பகுதி மக்கள் உள்ளூர் பா.ஜ.க. ஆதரவுடன், மோடியை எதிர்த்து போராடி வருகின்றனர். குண்டர்களை வைத்து போராடும் மக்களை ஒடுக்குகிறது மோடி ஆட்சி. 1400 கோடி செலவில் 214 ஹெக்டர் நிலப்பரப்பில் உருவாகும் இந்தத் தொழிற்சாலைக்காக, 5000 குடும்பங்களைச் சேர்ந்த 30,000 மக்கள் கட்டாயமாக வெளியேற்றப்படுகின்றனர்.

• சவுராஷ்டிரா பகுதியில் வாங்கனர் மாவட்டத்தில் ‘ஒர்பட்’ நிறுவனத்துக்கான 40 ஹெக்டர் நிலத்தை ஒரு சதுர மீட்டர் ரூ.40 என்ற விலையில் வழங்கினார் மோடி. அந்தப் பகுதி மக்களின் பாசனத்துக்கும், குடிநீருக்கும் ஆதரமான இந்த ஒரே இடத்தை பெரும் தொழில் நிறுவனத்துக்கு ‘தாரை’ வார்த்ததை எதிர்த்து உள்ளூர் மக்கள் கடந்த மார்ச் மாதம் உயர்நீதிமன்றம் போய் தடை வாங்கியுள்ளனர்.

• உதோராவில் உள்ள ‘கலாச்சாரம் மற்றும் மேம்பாடு ஆய்வு நிறுவனம்’, அரசு ஆவணங்களைக் கொண்டு நடத்திய ஆய்வில், 1947-லிருந்து 2004 ஆம் ஆண்டு வரை குஜராத் மக்கள் தொகையில் வளர்ச்சித் திட்டங்களினால் 5 சதவீத மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே காலகட்டத்தில் 33 லட்சம் ஹெக்டர் நிலம் பெரும் தொழில் நிறுவனங்களுக்காக கையகப்படுத்தப்பட்டிருக்கிறது என்று கூறுகிறது.

• “சர்வாதிகாரமும் வளர்ச்சியும் கைகோர்த்துக் கொண்டு வரும்போது மக்களுக்கு அத்தகைய ஒரு வளர்ச்சியே தேவை இல்லை. ஜனநாயகம் வாழும் ஒரு சமூகத்தில் வளர்ச்சி சற்று குறைவாக இருப்பினும் அதுவே நன்மை பயக்கும்” என்கிறார் மதச் சார்பற்ற எழுத்தாளரும், சிந்தனையாளருமான ராம் புனியானி.

• மோடிக்கு எதிராக அங்கே எவரும் பேச முடியாது. சட்டமன்றங்கள் அவர் புகழ் பாடும் மன்றங்களாகவே செயல்படுகின்றன.

• தலித் சமூகத்தின் மீதான அடக்குமுறை தலைவிரித்தாடுகிறது. தலித் மாணவர்களையும் பிறசாதி குழந்தைகளையும் ஒன்றாக அமர வைத்து ஒற்றுமை பற்றி பேசியதற்காக ஒரு ஆசிரியை உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டார். ‘இந்துத்துவாவின் பரிசோதனைக் களம்’ என்று அறிவிக்கப்பட்ட ஒரு மாநிலத்தில் அச்சத்தின் பிடியில் மைனாரிட்டிகளும் தலித் மக்களும் வாடும் நிலையில், பார்ப்பனர்களும், பட்டேல்களும் பன்னாட்டு நிறுவனங்களுடன் சுரண்டி கொழுத்து வரும்போது வளர்ச்சிப் பாதையில் நடைபோடுகிறது என்று பேசுவது என்ன நியாயம்? கருவுற்ற தாய்மார்களின் இரத்தத்தில் இருக்க வேண்டிய சிகப்பணுக்களின் எண்ணிக்கை குஜராத் மாநிலப் பெண்களிடம் தான் மிகக் குறைவாக இருப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது. தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு முறையான இட ஒதுக்கீடோ, இலவசக் கல்வியோ, அங்கே இருக்கிறதா? என்ற கேள்விக்கு, இவர்களிடமிருந்து பதில் இல்லை. இதுதான் மோடி ஆட்சியின் சாதனைகளா?

தகவல்கள்: ‘பிரன்ட்லைன்’ மே 20, 2011

Monday, May 23, 2011

ஊழல் ஒழிப்பும் ஒரு திடீர் மகாத்மாவும்!!


ஊடகங்கள் நினைத்தால், ஒரே வாரத்தில் ஒருவரை மகாத்மா ஆக்கிவிட முடியும் எனபதற்கான சான்றுதான், அன்னா ஹசாரே !

அடேயப்பா... 4 நாள் உண்ணாவிரதம், ஒரு சட்ட முன்வடிவம்... இவை போதும் நாட்டை விட்டே லஞ்சத்தையும், ஊழலையும் ஒழிப்பதற்கு! இப்படித்தான் ஊடகங்கள் நம்மை நம்ப வைக்க முயல்கின்றன. நடுத்தட்டு வர்க்கத்தினர் பலர் இதனை நம்பவும் செய்கின்றனர்.

70 வயதுக்காரரான அன்னா ஹசாரே, மராத்திய மாநிலத்தைச் சேர்ந்தவர். காந்தி குல்லாய் வைத்திருந்தாலும், ஆர்.எஸ்.எஸ். கோட்பாடுகளில் ஈடுபாடுடையவர். இடஒதுக்கீட்டுக்கு எதிரான கருத்து உடையவர். ஊடகங்கள் ஒருவரைத் தோளில் வைத்துத் தூக்கி ஆடுவதற்கு இவை போதாவா?

‘ ராலேகான் சித்தி ’ என்னும் ஊரில், நிலத்தடி நீரை உயர்த்த அவர் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றிபெற்றுள்ளன என்னும் செய்தியை இணையத்தளம் தெரிவிக்கிறது. ஒரு குறிப்பிட்ட காலத்தில் மழை கொட்டித் தீர்த்துவிடும் அந்த ஊரில், தேவையான குளங்களையும், குட்டைகளையும், மக்களைக் கொண்டே உருவாக்கி, நீரைத் தேக்கி வைப்பதற்கான வழியை ஹசாரே செய்துள்ளார். அதனால் நிலத்தடி நீர்மட்டம் கூடியுள்ளது. பிறகு, ஆடு, மாடு, கோழிகளை வளர்க்கும்படி அந்தக் கிராம மக்களைத் தூண்டியுள்ளார். அவர்களின் பொருளாதார நிலையை அந்தக் கருத்துரை உயர்த்தியுள்ளது.

இவைகளெல்லாம் பாராட்டப்பட வேண்டிய செயல்கள்தாம். இதிலிருந்து அவர் புகழ் பரவத் தொடங்கியிருக்கிறது. இப்போது,

‘லோக்பால் ’ சட்டத்தை உடனடியாகக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, ஏப்ரல் 4ஆம் தேதி, தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் அவர் உண்ணாவிரதம் தொடங்கினார்.

அவ்வளவுதான்... ஆங்கிலத் தொலைக்காட்சிகள், இந்தியா முழுவதும் உள்ள பன்மொழி நாளேடுகள் அனைத்தும், ஒரே நாளில், ‘ இதோ காந்தி மறுபடியும் பிறந்து வந்துவிட்டார் ’ என அறிவிக்காத குறையாய், அச்செய்திக்கு அவ்வளவு பெரிய விளம்பரம் கொடுத்தன. லஞ்ச ஊழலை ஒழிப்பதற்கான இறுதிப்போர் தொடங்கிவிட்டது போன்ற ஒரு மாயை, அனைத்து மக்களின் ஆழ் மனங்களிலும் விதைக்கப்பட்டது.

மேதா பட்கர், கிரண்பேடி, பாலிவுட் நடிகர் அமீர்கான், ரஜினிகாந்த் என்று பிரபலங்கள் பலர் வரிசையாய்த் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். சோனியா காந்தி ஆதரித்தார். ஊழலை ஒழிக்கப் புறப்பட்டுள்ள ஹசாரேக்கு, நம் ஊர் ஜெயலலிதாவும் ஆதரவு தெரிவித்துவிட்டார்.

(ஊழலை ஒழிக்க ஜெயலலிதாவும், போதையை ஒழிக்க விஜயகாந்தும் தனி இயக்கமே கூடத் தொடங்கலாம்). தமிழ்நாட்டில் உள்ள தமிழருவி மணியன் போன்ற வறட்டுக் காந்தியவாதிகளும் கூடத் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.

இவ்வளவு பேர் ஆதரிக்கும் போது, நாம் மட்டும் சும்மா இருக்கலாமா என்று கருதி, கொலை வழக்கு ஒன்றில் வாழ்நாள் தண்டனையை அனுபவித்து வரும், பீகாரைச் சேர்ந்த பப்பு யாதவும், தன் ஆதரவை வழங்கினார். ஆதரவுகளில் எல்லாம் சிறந்த மணிமகுடமாய் அது ஆகிவிட்டது.

இனிமேல் லோக்பால் சட்டத்தைக் கொண்டுவந்து, ஊழலை ஒழிக்க வேண்டியது ஒன்று மட்டும்தான் மீதமுள்ளது.

அந்த லோக்பால் சட்ட முன்வடிவம், அப்படியயான்றும் புத்தம் புதிதன்று. 1969ஆம் ஆண்டு, முதன் முதலாக அது அறிமுகப்படுத்தப் பட்டது. ஆனால் ஏற்கப்படவில்லை. மீண்டும் மீண்டும், சில திருத்தங்களுடன் கொண்டுவரப்பட்டது. இன்றுவரை, 10 முறை அதே சட்ட முன்வடிவம், நாடாளுமன்றத்திற்கு வந்து போய்விட்டது. இப்போது 11ஆவது முறை கொண்டுவரப்பட்டவுடன், அனைத்து ஊழல்களும் ஓடி ஒளிந்து விடும் என்பது போல, ஊடகங்கள் நமக்குப் படம் காட்டுகின்றன.

பழைய லோக்பால் சட்டமுன்வடிவம், சில மாற்றங்களுடன், ‘ ஜன லோக்பால் ’ என்னும் பெயரில் வரைவு (Draft) செய்யப்பட்டுள்ளது. இதனை, மேனாள் உச்சநீதிமன்ற நீதிபதி சந்தோஷ் யஹக்டே உருவாக்கியுள்ளார். இந்த ஜனலோக்பால் திட்டத்தைச் சட்டமாக ஆக்கவேண்டும் என்பதற்குத்தான் ஹசாரேயின் உண்ணாவிரதம்.

ஜனலோக்பால் சட்டம் நடைமுறைக்கு வருமானால், ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளான அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் விசாரிக்கும் உரிமை லோக்பால் குழுவிற்கு உண்டு. அக்குழுவின் பரிந்துரையையயாட்டி, உச்ச நீதிமன்றம் வழக்கை விசாரித்து, ஓராண்டிற்குள் தீர்ப்பு சொல்ல வேண்டும். குற்றவாளிகள் என மெய்ப்பிக்கப்பட்டால், அவர்களின் தண்டனைக் காலத்தில், அவர்களிடமிருந்து நாட்டிற்கு ஏற்பட்ட இழப்புத் தொகை திரும்பப் பெறப்படும். இவைகளே அச்சட்ட முன் வடிவின் அடிப்படைச் செய்திகள். இதற்காக, மத்தியில் லோக்பால் என்ற அமைப்பும், மாநிலங்களில் லோகாயுக்தா என்ற அமைப்பும் நிறுவப்படும்.

அன்னா ஹசாரேயின் கோரிக்கையை மத்திய அரசும் உடனே உள்வாங்கிக் கொண்டு, அதற்கான 10 பேர் கொண்ட குழுவை உடனடியாக நியமித்துவிட்டது. ஊழலை ஒழிப்பதில், அரசு உட்பட, அனைவரும் காட்டும் விரைவு நடவடிக்கைகள் நம்மை மலைக்க வைக்கின்றன. அதனாலேயே அது குறித்த ஐயங்களும் நமக்கு எழுகின்றன.

ஜனலோக்பால் வரைவு அறிக்கையை இறுதி செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள அந்த 10 பேர் கொண்ட குழுவில், ஐவர் அரசு சார்ந்தவர்கள் ; ஐவர் பொதுநல விரும்பிகள். பொதுநல விரும்பிகளில் ஹசாரேயும் ஒருவர். போகட்டும், உண்ணாவிரதம் இருந்ததற்கு ஏதேனும் பலன் வேண்டாமா? பிறகு, தந்தையும், மகனுமான சாந்தி பூ­ன், பிரசாந்த் பூ­ன் ஆகியோரும் உறுப்பினர்கள்.

இங்கெல்லாம் வாரிசுச் சிக்கல் எழவில்லை என்றாலும், ஏன் ஒரே குடும்பத்திலிருந்து இருவர் என்ற கேள்வி சிலரிடம் எழுந்த போது, “ அவர்களைத் தனி மனிதர்களாகவும், அவர்களிடையே என்ன உறவு என்ற அடிப்படையிலும் பார்க்கக்கூடாது. அவர்களின் தகுதி, திறமையை மட்டுமே பார்க்க வேண்டும்” என்று ஹசாரே கூற, அதனைக் கிரண்பேடி வழிமொழிய, அரசும் ஏற்றுக்கொண்டுவிட்டது. அடடா, எவ்வளவு எளிய விளக்கம் ! 120 கோடி மக்களைக் கொண்டிருக்கும் இந்தியாவில், தகுதி, திறமை உடைய வேறு யாரும், வேறு குடும்பங்களில் இல்லாமல் போய்விட்டார்கள் !

இனிமேல் அந்த வரைவு அறிக்கை, சட்டமுன் வடிவமாக மக்களவையிலும் மேலவையிலும் வைக்கப்படும். ஆயிரம் விவாதங்களுக்குப் பிறகு அவை ஏற்கப்பட்டுச் சட்டமாகலாம். அல்லது, வேறு சில திருத்தங்களுக்காக வழக்கம்போலத் திருப்பி அனுப்பப்படலாம். சட்டமாகவே ஆனாலும், அதில் உள்ள ஓட்டைகளைத் தகுதி, திறமை உள்ள வழக்கறிஞர்கள கண்டுபிடித்துக் கொள்வார்கள். கண்ணாமூச்சி ஆட்டம் தொடர்ந்து நடைபெறும். இதற்குத்தான் இவ்வளவு தடபுடல் !

ஒரு சமூகத்தை அப்படியே வைத்துக்கொண்டு, ஊழலை மட்டும் எப்படி ஒழித்து விட முடியும்? ஏற்றத் தாழ்வுகள், ஆதிக்கங்கள், சுரண்டல்கள், உலகமயமாதல் என்னும் பெயரில் பன்னாட்டு நிறுனங்கள் நடத்தும் பகற்கொள்ளைகள் எல்லாம் அப்படியே இருக்குமாம். ஊழலை மட்டும் ஒழித்துவிடுவார்களாம்.

தோலிருக்கச் சுளைவிழுங்கும் இந்தக் கனவு நாடகத்தின், கற்பனா வாதத்திற்குத்தான் எவ்வளவு வரவேற்பு!

-சுப.வீரபாண்டியன்

Sunday, May 22, 2011

பெரியார் எப்படிப்பட்ட அரசைக் காண விரும்பினார்?


பெரியார் ஈ.வெ.ரா., திருச்சியில், 30-09-1945 இல் அறிவித்தபடி, அவர் காணவிரும்பியது வெள்ளையன் ஆட்சியிலிருந்து விடுபட்ட - வட நாட்டான் சுரண்டலி லிருந்து விடுபட்ட ஒரு தனிச் சுதந்தர திராவிட நாடு!

அதற்கு முன்பு, 28-10-1942இல், அருப்புக் கோட்டையில் அவர் ஆற்றிய உரையில் பின்வருமாறு குறிப்பிட்டார்.

“இந்த நாடு நல்ல நிலைமையில் பொருளாதாரம், கல்வி, நாகரிகம் முதலியன ஏற்பட வேண்டுமானால், திராவிட நாடு பிரிந்தே தீர வேண்டும். அப்படி நாட்டைப் பிரிக்க வேண்டுமானால், காங்கிரஸ், அச்சு நாடு(கள்) ஆகிய எதிரிகளின் தொல்லை இல்லாமல் இருக்க வேண்டும். தொல்லை இல்லாமல் இருக்க வேண்டுமானால், இந்தச் சண்டையில் வெள்ளைக் காரனுக்கு எல்லா உதவியும் செய்வதைத் தவிர வேறு வழியில்லை. இவ்விதச் சண்டை நின்ற பின்பு, நம்முடைய நாட்டைக் கொடுக்க வேண்டும் என்று நாம் வெள்ளைக்காரனைக் கேட்க வேண்டும். அவன் நாட்டைப் பிரித்துக் கொடுக்க மறுப்பானாகில் அவனிடமிருந்து நாட்டைப் பெறுவதற்கு இலட்சக் கணக்கான வாலிபர்களைப் பலி கொடுக்க நேர்ந்தாலும் நேரிடும். நாம் எந்தவிதமான யுத்தத்திற்கும் தயாராக இருக்க வேண்டும்.”

பெரியார் குறிப்பிட்டுள்ளது இரண்டாவது உலகப் போர். அது 1945 ஆகஸ்டு 14ல் முடிவுற்றது. அப்படி உரையாற்றிய அவர், அதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னரே, 30-03-1942இல், பிரிட்டிஷ் அமைச்சர வைத் தூதுக்குழுவின் தலைவர் சர். ஸ்டாஃபோர்டு கிரிப்சை அவரும் மற்றும் மூவரும் சந்தித்தனர். அவர்கள் தமிழ் நாட்டின் பிரதிநிதிகள் மட்டுமே ஆவர் என்பதாலும் - பார்ப்பனர் ஆதிக்கம் இல்லாமலிருக்கச் சென்னை மாகாணத்தைப் பிரித்து பிரிட்டிஷாரின் நேரடி ஆட்சியில் வைக்க வேண்டும் என்று மட்டுமே அவர்கள் கோரியதாலும், பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் என்கிற வகுப்பின் பேரில் அரசியல் உரிமை வழங்கப்பட முடியாது என்று, 1945இல், கிரிப்ஸ் குழு மறுத்ததாலும், உடனடியாகத் தனிச் சுதந்தரத் திராவிட நாடு வேண்டும் என்று 30-09-1945 இல் கோரினார் ஈ.வெ.ரா.

இவ்வளவு இக்கட்டான நிலை ஏற்பட்ட பிறகும், சென்னை மாகாணத்தின் மற்ற திராவிட மொழிகளைப் பேசும் பகுதிகளில் திராவிடர் இயக்கம் கால் பதிக்க வில்லை. தமிழ் நாட்டில் உயிரைப் பணையம் வைக்கும் போருக்கு ஏற்ற மறவர் கூட்டமாகத் தமிழர்கள் உருவாக்கப்பட வில்லை.

திராவிடர் இயக்கத்தில், 1942க்குப் பிறகு எண் ணற்ற படித்த இளைஞர்களும் திறமை வாய்ந்த பரப்புரையாளர்களும் எழுத்தாளர்களும் இருந்த போதிலும், ஓர் அரசு அமைப்புக்கு முன்னர் நடை பெற வேண்டிய எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஏற்ற போரிடும் படை எதையும் உருவாக்கவில்லை.

இந்நிலையில் கருத்தியல் அளவில் பெரியாரை மூர்க்கமாக எதிர்த்த காங்கிரஸ் தேசிய வாதிகளுக்கும், கம்யூனிஸ்ட்களுக்கும் தக்க மறு மொழி தருவதிலும், தன் நிலையை விளக்குவதிலுமே பெரியார் முனைப்புக் காட்ட வேண்டி நேரிட்டது. அது இன்றியமையாத தாகவும் இருந்தது.

வெள்ளையன் இந்தியாவை விட்டு வெளியேறப் போவதாக 1946 சூனிலேயே அறிவித்தான். வெள்ளை யனிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்ட காங்கிரசுக்கட்சி, 1946 திசம்பர் 9 தொடங்கி, சுதந்தர இந்தியாவுக்கான அரசமைப்புச் சட்டத்தை எழுதத் தொடங்கியது. அதற்குத் தக்க முகம் கொடுத்து 1946 தொடங்கி எதிர்த்திட்ட பெரியார், 21-07-1947 இல், மக்களுக்குத் தெளிவானதொரு வேண்டு கோளை விடுத்தார். அது யாது?

“இந்துஸ்தான் அரசமைப்புச் சபையில் வகுக்கப் பட்டுவரும் அரசியல் முறை, சென்னை மாகாணத் தைப் பழங்காலப் பஞ்சாயத்து ஆக்கவே தயாராகிறது. கடந்த பல நூற்றாண்டுகளாக நம் மீது ஆட்சி புரிந்து ஆதிக்கப்படுத்தி வந்த சுயநலக் கும்பலைக் கொழுக்க வைக்க, திராவிடஸ்தான், இந்திய யூனியனில் இணைந் திருப்பதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. மிக்க கேவலான முறையில், திராவிடஸ்தான், அக்கும்ப லுக்கு உழைத்துக் கொட்ட வேண்டும். திராவிடஸ்தான் சுதந்தரம் பெறாத வரையில் அதிகாரம் என்பது வெறுங்கற்பனையே” என்று தெளிவுபடக் கூறினார்.

அத்துடன், நாட்டுப் பிரிவினைக் கோரிக்கையை ஏளனம் செய்த கம்யூனிஸ்டுக் கட்சியினருக்கு, 1947 சூலையில் பெரியார் தக்க விடை பகர்ந்தார்.

“திராவிடர் கழகம் கேட்கும் சுதந்தரம் கம்யூனிஸ்ட்டுக் கட்சி கேட்கும் சுதந்தரத்தை விட மேலானது”.

“கம்யூனிஸ்ட்டுக் கட்சி - முதல் வைத்துப் பேரம் செய்யும் முதலாளித்துவம் ஒழிந்த சுதந்தரம் கேட்கிறது. திராவிடர் இயக்கமானது அம்முதலாளிகளுடன், அம் முதலாளிகளை உற்பத்தி செய்வதற்கு மூல காரண மாயுள்ள - அதுவும் முதல் வைத்துக் கூட பேரம் செய்ய யோக்கியதை இல்லாத கல் முதலாளிகளையும் - பிறவி முதலாளிகளாயிருந்து யாதொரு முதலு மின்றி, சோம்பேறித் தனத்தையும், ஏமாற்றுதலையும் ஈடாகவைத்து, மக்களை மாக்களாக்கி வரும் பார்ப்பனி யத்தையும் சேர்த்து ஒழித்துச் சுதந்தரம் கேட்கிறது”. என விளக்கமளித்தார்.

மேலும், “இன்றைய கம்யூனிஸ்ட்டுக் கட்சிக்கோ, கொள்கைக்கோ நாங்கள் விரோதிகளாக இருந்த தில்லை; விரோதிகளாகப் பாவித்ததுமில்லை” என்று தோழமை உணர்வுடன் கூறினார்.

சுதந்தர திராவிட நாட்டில் எப்படிப்பட்ட ஆட்சி இருக்கும் என்பது பற்றித் தெளிவான ஒரு விளக்கத்தை, 06-01-1948இல் செயங்கொண்டம் (அரியலூர் மாவட்டம்) சொற்பொழிவில் அளித்தார்.

“... என் உயிருள்ள அளவும் சமூகத்தில் சூத்திரர் களாகவும், பொருளாதாரத்தில் ஏழைகளாகவும், அரசி யலில் அடிமைகளாகவும் வாழ்ந்து வரும் பண்டைச் சிறப்பு வாய்ந்த திராவிட மக்களை மனிதர்களாக ஆக்கும் பணியில் ஈடுபட்டிருக்கத் துணிந்து நிற்கிறேன்.

“நாடு தன்னாட்சி பெற்றால், திராவிட நாட்டில் சூத்திரன், பிராமணன் என்கிற வேறுபாடு இருக்காது”

“திராவிட நாட்டில் ஓரிரண்டு ஆண்டிற்குள் எழுதப் படிக்கத் தெரியாத மக்கள் ஒருவர் கூட இருக்க மாட்டார்கள்”.

“திராவிட நாட்டிற்குள் அந்நியர் ஒருவர் கூட அநுமதிச் சீட்டின்றி உள்ளே வர அநுமதிக்கப்பட மாட்டாகள்”

“திராவிட நாட்டில் அந்நியர்களோ அல்லது தனிப்பட்ட முதலாளிகளோ பிறரைச் சுரண்டி வாழ வசதி இருக்காது.”

“எல்லாவற்றிற்கும் மேலாக திராவிட நாட்டு ஆட்சி வரி இல்லாமலே ஆட்சி புரிந்து வரும். போக்குவரத்து இலாகாவையும், தந்தி தபால் இலாகாவையும் அரசாங்கமே ஏற்று நடத்தி வருவது போல, மற்ற எல்லா வியாபாரங்களையும் திராவிட நாட்டு அரசாங்கமே ஏற்று நடத்தும்”

“திராவிட நாட்டில் எந்த விவசாயிக்கும் அய்ந்து ஏக்கருக்கு மேற்பட்ட நஞ்சை புஞ்சை இருக்காது. அவனுடைய விளைபொருளை அவனுடைய கொள்முதலை அறிந்து ஓரளவு இலாபத்தைக் கூட்டிக்கொடுத்து, அரசாங்கமே வாங்கிக் கொள்ளும். அவனுக்கு நிலவரி இருக் காது. அவ்விளைபொருள்களைத் திருப்பி மக்களுக்கு விற்கும் போது ஓரளவுக்கு இலாபம் வைத்து, அரசாங்கமே தனது சொந்தப் பண்ட சாலைகள் மூலம் விற்பனை செய்யும்”என மாதிரி சமதர்ம ஆட்சித் திட்டம் ஒன்றையே முன்வைத்தார்.

20-01-1948இல் ஆம்பூரில் பேசிய பெரியார், “லேவா தேவி முறை (தனியார் வட்டிக்குக் கடன் தரும் முறை) சட்டத்தின் மூலம் தடை செய்யப்பட வேண்டும். அரசாங்கமே லேவாதேவி செய்து வருமானால் கடன் வாங்குவதால் உள்ள வேதனை கள் பொது மக்களுக்கு இருக்காது.”

“வயது வந்த எல்லோருக்கும் வாக்குரிமை வழங் கப்படும்” எனக் குறிப்பிட்டார்.

மதம், சமயம், இனம் பற்றிய குழப்பங்களுக்கும், ஏற்கெனவேயே 25-07-1947இல் பறங்கிப்பேட்டை சொற்பொழிவில், பின் வருமாறு தெளிவுரை தந்தார்.

“திராவிட ஸ்தானில் முஸ்லீம்களின் நிலை என்ன என்று கேட்கப்படுகிறது. இனி இக்கேள்விக்கே இட மில்லை. திராவிடர் ஆட்சியில் முஸ்லீம் என்றோ, கிறித்துவர் என்றோ ஆதித்திராவிடர் என்றோ பிரிவி னைகள் ஒரு நாளும் இருக்க முடியாது. எல்லோரும் ஒரே இனமாக - திராவிடர்களாக வாழ்வோம். சைவன், வைணவன், பௌத்தன் என்ற பிரிவுகள் போல, இஸ்லாமியத் தத்துவத்தைப் போற்றும் முறையில் அவர்களுக்கும் உரிமை தரப்படுமே அன்றிப், பிரிவினைக்கு இடமே இருக்க முடியாது. அதேபோன்று, ‘ஆதித்திராவிடர்’ என்ற இழிவுப்பட்டத்தையும் ஒழித்துத் திராவிடனாக வாழ, சட்டப்படிச் செய்வோம்” எனத் தெளிவுபடுத்தினார்.

தந்தை பெரியாரால் மேலே சொல்லப்பட்ட வை தான், அவர் காணவிரும்பிய ஓர் அரசின் இலக்கணம்; “அரசு” என்பது பற்றிய அவர்தம் விளக்கம்.

அது “தனிச் சுதந்தர அரசா”? “தன்னாட்சி அல்லது தன்னுரிமை அரசா”? என்பதை இன்றைய உலகச் சூழல் இந்தியச் சூழல் மற்றும் தமிழராகிய நாம் பெற்றுள்ள வலிமை - இந்திய ஏகாதிபத்திய அரசு பெற்றுள்ள வலிமை; இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உழைக்கும் மக்களின் விடுதலைக்கும் - மானிட சமத்துவ உரிமைக்கும் எதிரான கேடு கெட்ட கூறுகள் - இவற்றை உடைத்து நொறுக்கத் தமிழகத் தமிழர்கள் - குறிப்பாக இளைஞர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் இவற்றைப் பற்றிச் சிந்திக்க தமிழர்கள் ஒன்று கூடிச் சிந்திக்க ஆயத்தமாவோம், தந்தை பெரியார் காணவிரும்பிய வடிவிலான சமதர்ம - தன்னாட்சி அரசைத் தமிழகத்திலும் மற்ற அடிமைப்பட்ட மொழி வழி மாநிலங்களிலும் அமைக்கப்பட வழி காண்போம் வாருங்கள்! வாருங்கள்! இது முதலாவது பணி.

- வே. ஆனைமுத்து

Saturday, September 04, 2010

கிழவனின் கைபிடித்து பயணிக்க வாருங்கள் தோழர்களே!

சாதி, மதம், மூட நம்பிக்கைகள், சடங்குகள், ஆணாதிக்கம், பொருளாதாரச் சுரண்டல் என அனைத்து வித இழிவுகளிலும் புதையுண்டு கிடந்த சமூகத்தை அவை அனைத்திலிருந்தும் மீட்டெடுத்து தன்மதிப்பு, சகோதரத்துவம், சமத்துவமுடைய ஒரு சமூகமாக மாற்ற தன் வாழ்நாள் முழுவதும் அயராது உழைத்த ஒரு மனிதர் பெரியார். தனது 95 ஆண்டு கால வாழ்க்கையில் ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுப் பணியில் ஈடுபட்டிருந்தவர் அவர்.

ஈ.வெ.ராமசாமி நாயக்கராக பொது வாழ்வில் நுழைந்து, அனைவராலும் வேறுபாடின்றி 'பெரியார்' என்று ஏற்றுக் கொள்ளப்படும் நிலைக்கு அவர் உயர்ந்தது ஓரிரவில் நடந்த மாயம் அல்ல.

ஆதிக்க சாதியை சேர்ந்ததாக அறியப்பட்ட ஒரு குடும்பத்தில் ஆணாகப் பிறந்து தன் நேர்மையான பார்வையாலும் சுயசிந்தனையாலும் சாதி ஆதிக்கத்திற்கும் ஆணாதிக்கத்திற்கும் எதிராக இறுதி வரை அவர் உறுதியாக நின்று போராடினார் எனில் அவர் கடந்து வந்த பாதை நிச்சயம் அத்தனை எளிமையானதாக இருந்திருக்க முடியாது. இன்றைய சமூகத்தில் எளிதாக உள்வாங்கப்படுகிற எத்தனையோ முற்போக்கான செயல்களுக்கு வித்திட்டவர் அவரே. இன்றளவிலும் சமூகத்தால் சகித்துக் கொள்ள முடியாத முற்போக்கான சிந்தனைகளை ஏறத்தாழ 80 ஆண்டுகளுக்கு முன்பே பழமையில் ஊறிப் போன அன்றைய சமூகத்தின் முன் துணிச்சலுடன் வைத்தவரும் அவரே.

பெரியார் ஒரு சுய சிந்தனையாளர் மட்டுமல்ல; இன்று இச்சமூகம் ஓரளவேனும் சுயசிந்தனையும் சுயமரியாதையும் உள்ள ஒரு சமூகமாக வளர்ச்சிப் பெற்றிருக்கிறது எனில் அதற்கு அவரது அயராத உழைப்பே முக்கிய காரணம்.

தனது சிந்தனைகளை அவர் பகிரங்கப்படுத்தியதும், பிரச்சாரம் செய்ததும் அதிலிருந்து பொருள் ஈட்டவோ, புகழ் பெறவோ அல்ல; தேர்தலில் வாக்குகள் பெறவும் அல்ல. மாறாக அவரது சிந்தனைகள் அன்றைய சமூகப் போக்கிற்கு நேர் எதிராக இருந்த காரணத்தால் எதிர்ப்புகளையும் இழப்புகளையுமே அவர் சந்தித்தார்.

பெரியாரின் இந்த நெடும்பயணம் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட ஒவ்வொரு மனிதனுக்கு வழிகாட்டியாக இருக்கக் கூடியது. அந்தப் பயணத்தின் சில பக்கங்களை, மிக முக்கியமான பக்கங்களை, பெரியாரின் சிந்தனைப் போக்கை, பெரியாரின் சொற்களிலேயே அறியும் வாய்ப்பாகவே பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டிருக்கும் குடி அரசு தொகுப்பு விளங்குகிறது. இதுவும் பெரியாரின் வாழ்க்கை வரலாறுதான். ஆனால் சம்பவ‌ங்களால் கோர்க்கப்பட்ட வரலாறு அல்ல; கருத்துக்களால் கோர்க்கப்பட்ட வரலாறு.

அந்த வரலாற்றைத் தொகுத்து 1925 முதல் 1938 வரையிலான குடி அரசு இதழ்களை 27 தொகுதிகளாக வெளியிட்டு ஒரு பெரும் பணியை பெரியார் திராவிடர் கழகம் செவ்வனே செய்து முடித்து விட்டது. அதை மக்களிடம் கொண்டு செல்லும் பணி பெரியார் திராவிடர் கழகத்திற்கு மட்டுமே உரியதல்ல. அந்தப் பெரும் பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது. ஏனெனில் பெரியார் மக்களுக்கு உரியவரே அன்றி எந்த ஒரு தனி கட்சிக்கு மட்டும் உரியவரல்ல. இதனை வலியுறுத்தியே பெரியார் திராவிடர் கழகம் பெரும் சட்டப் போராட்டத்தை நடத்தி இந்நூல்களை வெளிக் கொணர்ந்துள்ளது.

வெறும் நோக்கு நூலாகவோ, அலங்காரமாக அடுக்கி வைக்கவோ அல்லது இதன் மூலம் பணம் சம்பாதிக்கவோ இந்நூல்கள் வெளியிடப்படவில்லை. இன்றைய சமூகத்தில் மீண்டும் தலைதூக்கியுள்ள சாதி, மத இழிவுகளை ஒழிக்க மீண்டும் மீண்டும் பெரியார் தேவைப்படுகிறார் என்ற பேருண்மையை உணர்ந்து இன்றைய தலைமுறையினருக்கு அவரை, அவரது கருத்துக்களை கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவே இந்நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன; இலவசமாக இணையத்தில் தரப்பட்டுள்ளன.

10,000 பக்கங்களுக்கு மேலாக இருக்கக் கூடிய குடிஅரசு தொகுப்புகள் முழுவதையும் படிக்க பலருக்கு மலைப்பாகத் தோன்றக் கூடும். அந்த பணியை எளிதாக்கவே கீற்று 'பெரியாருடன் ஒரு பயணம்' நிகழ்விற்கு ஏற்பாடு செய்துள்ளது. ஐந்து தோழர்கள் நம்மை பெரியாருடன் பயணிக்க வைக்க இருக்கின்றனர். சாதி, மதம், பாலினம், வறுமை என அனைத்துவித ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகப் போராடிய பெரியாருடனான பயணத்தில் நம்மை அழைத்துச் செல்லக் கூடியவர்களாக அந்த ஒடுக்குமுறைகளுக்கு ஆளான சமூகத்தின் தோழர்களே வருகின்றனர்.

தன்னைச் சுற்றியுள்ள மனிதர்கள் அனைவரையும் குழந்தை போல நேசித்த அந்த கிழவனின் கைபிடித்து பயணிக்க வாருங்கள் தோழர்களே!

பெரியாருடன் ஒரு பயணம்
(1925 -‍ 1938 குடிஅரசு தொகுப்புகளின் வழியே)

நாள்: 18.09.2010, சனிக்கிழமை மாலை 4 மணி
இடம்: தேவநேயப் பாவாணர் நூலக அரங்கு, அண்ணா சாலை, சென்னை

வரவேற்புரை: பாஸ்கர், கீற்று ஆசிரியர் குழு

குடிஅரசு இதழ் தொகுப்பு:

1925 -‍ 1926: ச.தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்
1927 ‍- 1929: எழுத்தாளர் ஓவியா
1930 - 1932: எழுத்தாளர் அழகிய பெரியவன்
1933 - 1935: எழுத்தாளர் பூங்குழலி
1936 - 1938: பேராசிரியர் ஹாஜா கனி, பொதுச் செயலாளர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்

ரிவோல்ட் ஆங்கில இதழ் தொகுப்பு: விடுதலை இராசேந்திரன், பொதுச் செயலாளர், பெரியார் திராவிடர் கழகம்

தொகுப்புரை: கொளத்தூர் மணி, தலைவர், பெரியார் திராவிடர் கழகம்

நன்றியுரை: பிரபாகரன், கீற்று ஆசிரியர் குழு

அனைவரும் வருக!!

தொடர்புக்கு: பாஸ்கர் - 9884499357

Sunday, August 22, 2010

முழு அப்பம் கேட்கும் பார்ப்பன குரங்குகள்

AIIMS, IIT, IIM ல் எல்லாம் எப்படி இடஒதுக்கீடு அளிக்க முடியும்’ என்று சமீபத்தில் பத்திரிகைகளை கரைத்து குடிக்கும் சுபாவம் உடைய ஒருவர் என்னிடத்தில் விவாதித்துக் கொண்டிருந்தார். விவாதம் நடக்கும் பொழுது தான் புலப்பட்டது. அவருடைய புரிதலில், அந்த உயர்கல்வி நிறுவனங்கள் எல்லாம் பிராமனர் சங்கத்தால் நடத்தப்படுபவை என அவர் அதுகாறும் நம்பி வந்தது. மத்திய அரசால் நடத்தப்படும் உயர் கல்வி நிறுவனங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27% இட ஒதுக்கீடு என்ற மண்டல் கமிஷனின் பரிந்துரைகளை அமுல்படுத்தும் அறிவிப்பு மனிதவள மேம்பாட்டு துறையிலிருந்து வந்தது தான் நாடு முழுக்க தீப்பற்றியது போலான தோற்றத்திற்கும், தில்லியிலுள்ள அஐஐஙந ல் மட்டும் தீ பிடித்ததற்கும் காரணம்.



அர்ஜுன் சிங் தனது அறிக்கையை வெளியிட்டு இரண்டு வாரங்கள் வரை இது ஏதோ அவரது சொந்த பிரச்சனை அல்லது வீட்டு விவகாரம் போலத்தான் அரசியலாகவும், மீடியாவிலும் கையாளப்பட்டது. இந்த தேசத்தின் பூர்வகுடிகளான கோடானு கோடி ஜனங்களின் அடிமை வரலாறு தொடர்புடைய பிரச்சனையாக இதை மீடியாக்கள் மாற்றத் தவறியது. அதை விடுத்து ஆங்கில சேனல்கள் சர்ச்சையை தலைகீழாக மாற்ற முயற்சி செய்தது. நுனி நாக்கில் ஆங்கிலம் ‘உள்ளவா‘ தான் பெரும்பகுதி ஆங்கில சேனல்களில் பணிபுரிவதால் அவர்கள் அஐஐஙந டாக்டர்களின் போராட்டங்களை சுதந்திர போராட்டத்தை விட ஒரு படி மேலாக சித்தரிக்க ஒவ்வொரு நிமிடமும் பாடு பட்டார்கள். பார்ப்பன மனசாட்சி துடிதுடித்தது. இந்த துடிப்புகளுக்கு பின் உள்ள சுயநலத்தையும், இடஒதுக்கீட்டால் ஏற்படும் தேச பொது நலத்தையும் ஒரு பார்வை பார்க்கலாம்.


2000 ஆண்டுகளுக்கு மேலாக பார்ப்பனியத்தின் நிழலில், அடிமை சமுதாயமாகவே இந்திய சமூகம் இருந்து வருகிறது. ஆங்கிலேயர்களுடன் 400 ஆண்டுகால கூடாநட்பையும் நாம் வரலாறு நெடுகிலும் காணலாம். இந்த தேசத்தின் பூர்வகுடிகளை வந்தேறிகள் அடிமையாய் வைக்க இன்றளவும் துடித்துக் கொண்டிருப்பதை உணர்த்துகிறது இங்கு நடக்கும் ஒவ்வொரு செயலும். சுதந்திர இந்தியாவில் மூச்சு திணறாமல் கொஞ்சம் சுவாசித்துக் கொள்ள அம்பேத்கரின் அரசியல் சாசனம் வழிவகை செய்தது. அரசு வேலைவாய்ப்புகளில், கல்வி நிறுவனங்களில் என யாவற்றிலும் இதுவரை வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகத்தை வெளிக் கொணர்ந்து அவர்கள் உலகை ஸ்பரிசிக்கும் முயற்சிகள் துவங்கின. அதிகார வர்க்கத்தின் சகல தளங்களிலும இயங்கும் பார்ப்பனியம் முனைப்புடன் பல முயற்சிகளை மழுங்கடித்தது.


1955ல் நாடாளுமன்ற உறுப்பினர் கலேகர் (Kalekar) தலைமையிலான குழுவை மத்திய அரசாங்கம் நியமிக்கிறது. தீவிரமான ஆய்வுகளை மேற்கொண்டபிறகு அந்த அறிக்கை 70% இட ஒதுக்கீட்டை பரிந்துரை செய்கிறது. முழி பிதுங்கிய மத்திய அரசாங்கம் அந்த அறிக்கையை கண்டு கொள்ளவில்லை. உச்ச நீதிமன்றத்துக்குள் இயங்கும் பார்ப்பனியம் எந்த ஒதுக்கீடாக இருந்தாலும் அது மொத்தத்தில் 50%க்குள்தான் இருக்க வேண்டும் என தனது கடிவாளத்தைக் கட்டுகிறது. தொடர் போராட்டங்களின் விளைவாக 1978ல் பி.பி.மண்டல் (B.P.MANDAL) தலைமையில் குழு அமைக்கப்படுகிறது. 49.5% இட ஒதுக்கீட்டை சிபாரிசு செய்யும் தனது அறிக்கையை அந்த குழு 1980 டிசம்பரில் சமர்ப்பிக்கிறது.


பத்தாண்டுகளுக்குப் பிறகு 1990ல் அந்த அறிக்கையை தூசி தட்டி எடுத்தார் வி.பி.சிங். மண்டல் கமிஷன் என்ற சொல் ஊடாக புழக்கத்திற்கு அப்பொழுது தான் வந்தது. மிகப் பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தது. காங்கிரஸ் கூட அதை எதிர்த்து பி.ஜே.பியுடன் களமிறங்கியது. இந்த இரு கட்சிகளின் ஆதரவு இல்லையெனில், போராட்டம் எதுவும் அன்று நடைபெற்றிருக்க வாய்ப்பு இல்லை. தங்களின் சுயநல அரசியல் பொய்களுக்காகவே, இதை அன்று பூதாகரமாக மாற்றினார்கள். (இன்று நிலைமை மாறி காங்கிரஸ் - பி.ஜே.பி. இடஒதுக்கீடு வேண்டும் என்கிறார்கள்.) பி.ஜே.பி இந்திய அரசியலில் வேரிட்டது இரண்டு தளங்களில் - மண்டல் அறிக்கை மற்றும் பாபர் மசூதி விவகாரம்.


மண்டல் அறிக்கை இடஒதுக்கீட்டை மட்டும் பரிந்துரைக்கவில்லை. அது “பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உகந்த கல்வி சூழல் இன்றைய அரசு கல்வி நிறுவனங்களில் இல்லை, அதனால் அவர்களுக்கான பிரத்யேக தொழில் கல்வி மையங்கள், மேற்படிப்பிற்கான சிறப்பு வகுப்புகள், என புதிய கல்வி மற்றும் கலாச்சார சூழலை உருவாக்கவும் உத்தரவிட்டது. நடப்பில் உள்ள கல்வி மையங்களை சீர்திருத்தாமல் அங்கு பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரை அனுமதித்தால் அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படும் வாய்ப்பு உள்ளது” என்று மிக நுணுக்கமான அணுகுமுறைகளையும் கொண்டிருந்தது அந்த அறிக்கை.
மண்டல் பரிந்துரையை மிஞ்சுகிற வகையிலான 69% இட ஒதுக்கீடு தமிழகத்தில் மட்டுமே அமலில் உள்ளது. தென் இந்திய மாநிலங்களில் ஏறக்குறைய 49 - 50% இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது.


தென் இந்திய சமூகம் மனம் உகந்து இந்த பரிந்துரைகளை அமல்படுத்தியது. நாராயண குரு, பெரியார், அயோத்திதாசர் வாழ்ந்த மண்ணுக்கான சான்றுகளே. இவை மத்திய அரசால் நடத்தப்படும் உயர் கல்வி நிறுவனங்களில் ஏற்கெனவே பட்டியலிடப்பட்ட சாதியினர் / பழங்குடியினருக்கான 22.5% இட ஒதுக்கீடு அமலில் உள்ளது. இப்பொழுது அதே நிறுவனங்களில் 27% ஒதுக்கீட்டை மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு வழங்க வேண்டும் என்பது மண்டல் அறிக்கையின் மற்றொரு பரிந்துரை. 22.5% இடஒதுக்கீட்டால் அந்த நிறுவனங்களின் தரம் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை என்பதை வரலாறு எடுத்துரைக்கிறது. ஆனால் 27% ஒதுக்கீட்டால் அந்த நிறுவனங்களின் தரம் கெட்டு விடுமாம். பொது பிரிவில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவிடும் என்பது தான் அவர்களின் மறைமுகக் கவலையே.


உயர்கல்வி நிறுவனங்களுக்கான நுழைவு தேர்வு வகுப்புகளை FIIT, JEE நடத்துகிறது. வருடாந்திர கட்டணம் ரூபாய் நாற்பதாயிரம். இந்த தொகையை கொடுத்து மேட்டுக் குடியினர், பொருளாதார வசதி படைத்தோர் தான் சேர இயலும். இங்கு படிப்பவர்கள் தான் வருடந்தோறும் 30% இடங்களை கைப்பற்றுகிறார்கள்.


இவர்களை போலவே அனைவரும் நுழைவு தேர்வை எழுதுகிறார்கள். மதிப்பெண்கள் பெறுகிறார்கள். எல்லா நடைமுறைகளும் பின்பற்றித்தான் மற்ற வகுப்பினர் அனுமதிக்கப்படுகிறார்கள். நம் பத்திரிக்கைகள் எழுதுவதையும் அந்த தில்லி மருத்துவர்கள் பேசுவதையும் பார்த்தால் ஏதோ மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள். தங்கள் ஜாதி சான்றுகளுடன் வந்தால் அனுமதிக்கப் படுவார்கள் என்பது போல் உள்ளது. உதாரணத்திற்கு, 3000 மாணவர்களை இந்த ஆண்டு இந்தியா முழுவதிலுமுள்ள IIT களில் அனுமதிக்கலாம் என்றால், அதில் 27% - 810 மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் அனுமதிக்கப் படுவார்கள். 810 இடங்களை கைப்பற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இரண்டு லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். அவர்களின் கூற்றுப்படி இந்த இரண்டு லட்சம் மாணவர்களுமே முட்டாள்கள் இவர்கள் அனுமதிக்கப்பட்டால் தரம் கெட்டுவிடும்.


தனியார் மருத்துவ கல்லூரிகள், மற்றும் பல அரசு மருத்துவ கல்லூரிகள் மாணவர்களை பெரும் தொகை பெற்று கொண்டு சேர்த்துக் கொள்வதை நாம் நன்கு அறிவோம். கடந்த ஆண்டு கூட என்.டி.டி.வி ரகசிய காமிராவுடன் இந்த பேரங்களை அம்பலப்படுத்தியது. பட்ட மேற்படிப்பு அதை விட தறிகெட்டு கிடக்கிறது. M.Ch -80 லட்சம், M.S -60 லட்சம், M.D. -45 லட்சம் என தேசமெங்கும் கூவி விற்கப்படுகிற மருத்துவ படிப்புகளால் தரம் கெட்டு விடவில்லையாம். இதை எல்லாம் அவர்கள் கண்டுகொள்ள மாட்டார்களாம்.


மருத்துவத்தை படித்தவுடன் இவர்களில் 99% பேர் தங்களின் சுயநல கொள்ளைக்கு மட்டுமே தொழிலை அர்ப்பணிக்கிறார்கள். மருத்துவ தொழிலின் எல்லா அறங்களையும், இந்துமகா சமுத்திரத்தில் கரைத்தாகி விட்டது. அரசாங்கம் ஆயிரம் கோடிகளை இவர்களுக்காக செலவிடும் பட்சத்தில், சில புதிய நடைமுறைகளை அமுல்படுத்தலாம். பயிற்சிக்கால மருத்துவர்களின் காலத்தை மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம். அரசு தலைமை மருத்துவ மனைகளில் ஓராண்டும், அடுத்த இரண்டு ஆண்டுகள் மலைவாழ் மக்களிடம், மருத்துவம் இன்னும் எட்டிப்பார்க்காத கிராமப் புறங்களில் சிகிச்சையளிப்பதை நடைமுறையாக்கலாம். இந்த மூன்று ஆண்டுகளுக்குப் பின்பு தான் பட்டங்கள் வழங்க வேண்டும். கிராமப்புறங்களில் பணியாற்றும் காலத்தில், புறக்கணிக்கப்பட்ட மக்களின் மூச்சுக்காற்று மருத்துவர்களின் கொள்ளை வெறிகளைத் தணிக்கக் கூடும்.


AIIMS உள்பட அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் அரசு பணியிலிருந்து கொண்டே விதிகளுக்கு மாறாக தனியார் மருத்துவமனைகளை நடத்தி வருகிறார்கள். அவர்களின் சொந்த மருத்துவமனைகளுக்கு நோயாளிகளை அரசு மருத்துவமனைகளிலிருந்து தான் கடத்தி செல்கிறார்கள். அந்த தரகர் வேலைக்கு அவர்கள் பயன்படுத்துவது இந்த பயிற்சி மருத்துவர்களையே. பயிற்சி காலத்திலேயே பணம் சம்பாதிக்கும் வழி. மொத்த நாட்டின் மருத்துவத்துறையை சீரழித்துவிட்டு, தரம், தரம் என யாரை ஏமாற்றுகிறார்கள்.


21 சதவிகித இந்தியர்கள் தங்கள் உடல் உபாதைகளுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதில்லை. மருத்துவச் செலவுகள் கிராமப்புறங்கள் கடன் வலையில் சிக்குவதற்கான மிக முக்கிய காரணம். தனியார் மருத்துவமனைகள் கந்துவட்டிக் கடைகள் போல் மாறிவிட்டது.


IIT, IIM, AIIM, படித்து வெளியேறுகிற மாணவர்களில் 70% பேர் வெளிநாடுகளுக்கு சென்று விடுகிறார்கள். இந்த உண்மையை மறைக்கும் விதமாக பலர் கட்டுரைகளை தீட்டுகிறார்கள். கோர்வையுடன் பல பச்சை பொய்கள் IIT படித்து விட்டு மாதம் பத்தாயிரம் சம்பளத்திற்கு அம்பிகள் இந்தியா முன்னேற வேண்டும் என்கிற நோக்கத்துடன் மென்பொருள் குமாஸ்தாக்களாக பணிபுரிகிறார்களாம். அரசு செலவில் படித்து வெளிநாடு சென்றுவிடுகிறார்கள் என புலம்பிக் கொண்டேயிருப்பதில் பிரயோசனம் இல்லை. இந்த மாணவர்கள் தங்கள் படிப்பை முடிக்கும் தருவாயில் இவர்களது கடவுசீட்டுகள் (பாஸ்போர்ட்) 10 ஆண்டுகளுக்கு முடக்கப்பட வேண்டும். MLA, MP, அமைச்சர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள் (அதில் வரம்புகளை நியமித்துக் கொள்ளலாம்) என இந்த மேட்டுக் குடியினரை மொத்த ஒதுக்கீட்டிலிருந்து விலக்க வேண்டும். வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான (NRI) ஒதுக்கீடு முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். தனியார் தொழிற்சாலைகளின் இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் கடுமையான சட்டங்கள் பிறப்பிக்கப்பட வேண்டும்.



ஏற்கெனவே இந்த சலுகையை அனுபவித்த பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினர் கூட போராட்டங்களில் களமிறங்காமல் வேடிக்கை பார்ப்பது அபத்தமானது. இது ஒரு வகையான மேனிலையாக்கம். நூற்றாண்டுகளாக அடிமைப்படுத்தப்பட்ட ஜனத்திரளை கல்வி வாய்ப்பளித்து, அரசு உத்யோகங்களில் அமர்த்தினால் தான் அவர்களுக்கு இது தங்கள் சொந்த நாடு, தங்களுக்கு இந்த நாட்டில் உரிமை இருக்கிறது என்கிற உணர்வு பிறக்கும் என திட்டமிடப்பட்டது தான் இந்த ஒதுக்கீட்டின் நோக்கம். 20 ஆண்டுகளுக்கு இந்த ஒதுக்கீடு அமலில் இருக்க வேண்டும் என்பது மண்டல் பரிந்துரை. பின்பு குழு அமைக்கப்பட்டு அவர்களின் வாழ்க்கை தரம், சமூகத்தில் அவர்களின் பங்களிப்பு பற்றிய ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டு, அந்த முடிவுகளின் அடிப்படையில் தேவைப்பட்டால் இந்த இட ஒதுக்கீடு மீண்டும் நீட்டிக்கப்பட வேண்டும் எனத் தெளிவாக எடுத்துரைக்கிறது மண்டல் பரிந்துரை. நூறு சதவிகித எழுத்தறிவை (அரசு பதிவேடுகளில் அல்ல) நாட்டு மக்கள் மெய்யாக பெற வேண்டும், இடஒதுக்கீடு மட்டுமே சமூக ஏற்றத்தாழ்வுகளை நீக்க உதவும் கருவி.


கல்வி நிறுவனங்களில் வெவ்வேறு நிலப்பரப்புகளைச் சார்ந்த, சாதிகளைச் சார்ந்த, பொருளாதார நிலை சார்ந்த, மாணவர்கள், ஆசிரியர்கள் ஒன்றிணையும் பொழுது தான் அங்கே கற்கும் சூழல் உருவாகிறது. அங்குதான் மிகப் பெரும் அனுபவப் பகிர்வு பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் நோக்கி, தீர்வுகள் நோக்கி பயணிக்கிறதென உலகளவிலான கல்வி ஆய்வாளர்கள் தெரிவித்துவருகிறார்கள். அதுபோலவே இங்கும் பன்முகத் தன்மை வாய்ந்த கல்வி நிறுவனங்கள் உருவாக இடஒதுக்கீடு தவிர்க்க முடியாத கருவியாகிறது.


பொதுப்பிரிவில் உள்ள இடங்களை குறைக்காமல், அந்த கல்லூரிகளின் மொத்த இருக்கைகளை கூட்டுகிறதாம் மத்திய அரசு. போகிற போக்கை பார்த்தால் IIT, IIMல் இடஒதுக்கீட்டில் வரும் மாணவர்களுக்கு தனி வகுப்பறைகள் அமைக்க கூட அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். (பல உயர்கல்வி நிறுவனங்களில் தம்பி நல்ல படிக்கனும் டா, என பெருந்தன்மையாக கூறி சபாஷ் என முதுகில் தட்டி பூணூல் உள்ளதா என்பதை சோதிக்கும் பேராசிரியர்கள் இன்றளவும் சுதந்திரமாக உலவுகிறார்கள்).


தகுதி என்றால் என்ன. மனப்பாடம் செய்து அப்படியே வாந்தி எடுக்கும் கலையைத்தான் தகுதி என்கிறது இன்றைய தேர்வு முறை. அறிவியல் பூர்வமான அணுகுமுறைகள் வளர்ந்து வரும் 21ஆம் நூற்றாண்டில் இப்படிப்பட்ட காலாவதியான தேர்வு முறைகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும். சொந்தமாக சிந்திக்கும் திறன் வளர்க்கப்பட வேண்டும். முடிவெடுக்கும் திறனின் அடிப்படையில் சோதனைகள் நடத்தப்பட வேண்டும். நடைமுறையில் உள்ளது கல்வி கற்பதல்ல பயிற்சி அளிப்பதே.
அமெரிக்காவில் வாழும் இந்தியர்களின் ஜனத்தொகை ஒரு கோடியைத் தாண்டுகிறது. இதில் பிராமணர்கள் 70%. குடியுரிமை பெற்று அமெரிக்காவைத் தங்கள் தாய்நாடாக பாவித்தவர்களுக்கும், அடுத்து பாவிக்கவிருக்கும் இந்த அடிமைக் கூட்டத்திற்கு இந்திய அரசாங்கத்தின் வரிப்பணம் ஏன் விரையம் செய்யப்பட வேண்டும். சென்னை மவுண்ட்ரோடில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் விசாவுக்காக நாள் கணக்கில் இந்த கூட்டம் காத்துக் கிடக்கிறது. இவர்கள் அமெரிக்கா சென்ற பிறகு அங்கும் இதுபோலவே அமெரிக்க குடியுரிமை பெற காத்துக் கிடக்கிறார்கள்.


தாழ்த்தப்பட்டவர்கள் நுழைந்தால் கோவில் தீட்டு பட்டுவிடும் என்பதற்கும் IIT, IIM ல் பிற்படுத்தப்பட்டவர்கள் நுழைந்தால் தரம் கெட்டுவிடும் என்பதற்கு எவ்வகையிலும் வேறுபாடு அல்ல. அடுத்து அர்ச்சகர்களாக அனைத்து சாதியினரும் வரலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்துள்ளது. அது தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. சென்னை IITல் மொத்த பேராசிரியர்கள் 400 அதில் பிராமணர்கள் 282 பேர், இதை எப்பொழுது மாற்றப் போகிறோம்.


1830கள் வரை பிரிட்டிஷ் நிர்வாகத்தில் மராட்டிய (தஞ்சாவூர்) பிராமணர்களின் ஆதிக்கத்தின் கீழ் தான் இருந்தது. அந்த காலத்தில் தான் சில சீர்திருத்தங்கள் அமுலாயின, அதில் மிகவும் முக்கியமானது வட்டார மொழிகளில் எல்லா அரசாங்க தொடர்புகளும் இருக்க வேண்டும் என்பது. இதனால் நவாபுகள் முதல் எல்லா உயர் பதவிகளில் உள்ளவர்கள் வரை அனைவரும் வட்டார மொழிகளை கற்க துவங்கினார்கள். அதன் தொடர்ச்சிதான் இப்பொழுதும் மாவட்ட ஆட்சியர்கள் வெளி மாநிலத்தவராக இருந்தால், அவர்கள் தமிழ் கற்கத் துவங்கி, தக்க புக்க என தொகைக்காட்சிகளுக்கு பேட்டி அளிப்பது, சமயத்தில் சன் டிவி தமிழையும் (டமில்) விஞ்சி விடுகிறார்கள்.



மிஷனரிகள் பள்ளிகள் நடத்தி வந்தார்கள், 1838 முதல் அரசாங்கப் பள்ளிக் கூடம் துவக்கப்பட்டது. 1838ல் ரேவ். ஆண்டர்சன், கிறித்துவ மேல்நிலைப்பள்ளியை துவக்கினார். அதில் சில தலித் மாணவர்களை அவர் அனுமதித்தார். அனுமதித்த அடுத்த நாள் அந்த பள்ளியில் படித்த பிராமண மற்றும் வெள்ளாள மாணவர்களை ஒட்டு மொத்தமாக அவர்களின் பெற்றோர் விலக்கிக் கொண்டார்கள். உடன் அவசர அவசரமாக நீதிமன்றத்தில் நிலுவையிலிருந்த பச்சையப்பா அறக்கட்டளை வழக்கை முடிவுக்கு கொண்டு வந்து, பச்சையப்பா பள்ளி துவக்கப்பட்டது. ஏறக்குறைய 1840-1940 வரை ஒரு நூற்றாண்டு காலம் பச்சையப்பா பள்ளியில் தலித் மாணவர்களே அனுமதிக்கப்படவில்லை.


கேம்ப்ரிட்ஜில் படித்த பவேல் அரசு பள்ளியை சென்னையில் துவக்குகிறார், ப்ரோபிசியன்சி படிப்பு துவக்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூபாய் நான்கு கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த கட்டணமே பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களை பள்ளியில் நெருங்கவிடாமல் தடுக்கிறது. மிகச் சிலருக்கே அந்த வாய்ப்புக் கிடைக்கிறது. 33 மாணவர்களில் ஏறக்குறைய 30 பேர் பிராமணர், உயர்சாதியினர்களே. இவர்கள் தான் இந்தியா முழுவதும் திவான்களாக, உதவி கலெக்டர்களாக பல சமஸ்தானங்களில் நியமிக்கப்படுகிறார்கள். முழுக்க முழுக்க அரசு எந்திரத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் இவர்களில் சமூக மாற்று அல்லது சீர்திருத்தம் என்ற வார்த்தைகளைக் கூட எவரும் உச்சரித்ததில்லை.


1890 - 91ல் செங்கல்பட்டு கலெக்டர் ட்ரேமன்ஹீர் தனது அறிக்கையை சமர்ப்பிக்கிறார். அந்த அறிக்கை, தமிழக சமூக வாழ்வில் தலித்துகளின் புறக்கணிக்கப்பட்ட நிலையை எடுத்துரைக்கிறது. அயோத்திதாசர் தனது குரலை, கேள்விகளை உரக்கப் பதிவு செய்கிறார். அந்த காலகட்டத்தில்தான் பிரம்மஞான சபை துவக்கப்படுகிறது.


1880ல் பல சமூகங்கள் அரசு கட்டமைப்புக்குள் ஊடுருவ முனையும் காலம். நாயக்கர்கள் காவல்துறை இராணுவம் ஆகிய துறைகளில் பெரும் பகுதியாக சேர்க்கப்படுகிறார்கள். இராணுவத்தில் நாயக் ரெஜிமென்ட்கள் உருவாக்கப்படுகிறது. இன்றளவும் அது தொடர்கிறது.


அடையாறில் ஆள்காட் பள்ளி துவக்கப்படுகிறது. அதுவே தலித் மாணவர்களுக்காக பிரத்யேகமாக துவக்கப்பட்ட முதல் பள்ளி. நீதிக்கட்சி துவக்கப்படுகிறது. சர்.பிட்டி. தியாகராய செட்டி, சர். சங்கரன் நாயர் என புதிய சமூக மாற்றத்திற்கான அலை வீசத்துவங்குகிறது. தென்னிந்திய நல உரிமைச் சங்கம் துவக்கப்படுகிறது. ஜஸ்டிஸ், திராவிடன் இதழ்கள் துவக்கப்படுகிறது. காங்கிரஸ் பிராமணர்களால் நிரம்பி வழிவதை உணர்ந்து காங்கிரஸிலிருந்து பெரியார் வெளியேறுகிறார்.


1911ல் கல்கத்தாவில் இருந்து நாட்டின் தலைநகரம் தில்லிக்கு மாற்றப்படுகிறது. அம்பிகளின் (பார்ப்பனர்களின்) இடப் பெயர்வும் துவங்குகிறது. தில்லி, மும்பை என பெருநகரங்களை நோக்கி, அவர்களின் உறவினர்கள், சொந்தம், சுற்றாருடன் மொத்தமாக மூட்டை முடிச்சுக்களுடன் இடம் பெயர்ந்தனர். அங்கே தமிழ் சங்கங்கள் துவங்கப்படுகின்றது. புதிய தலைமை செயலகங்கள், அமைச்சக வளாகங்கள் என எதையும் விட்டுவைக்காமல் ஆக்கிரமிக்கிறார்கள். அன்றிலிருந்து இன்று வரை அவர்களுடைய ஆதிக்கத்தின் கீழ் தான் உள்ளது அதிகார வர்க்க (Bureaucratic) செயல்பாடு. அந்த வளாகங்களின் உள்கட்டமைப்பை அவர்களுக்குத் இசைவாக மாற்றிக் கொண்டு இன்றளவும் நிழலாட்சிப் புரிகிறார்கள். இவர்களைப் போலவே வங்கத்திலிருந்து சட்டர்ஜி, பானர்ஜிக்கள், கேரளாவிலிருந்து நாயர்கள், நம்பூதிரிகள், மகாராஷ்டிரத்திலிருந்து ராவ், தேஷ்முக்கள் என இந்த உயர்சாதி கூட்டத்தின் பிடியில், மூச்சுத் திணறுகிறது தேசம். வட மாநிலங்களில் இந்த பிராமணர்கள் செலுத்தத் துவங்கிய ஆதிக்கத்தை பொறுக்க முடியாமல்தான் பின்னாட்களில் சிவசேனா போன்ற இயக்கங்கள் உருவாக ஒரு காரணமாகயிருந்தது. மதராசி என தென் மாநிலத்தவர்களை அழைக்கவும் கேலி செய்யவும் துவங்கினார்கள். இன்றளவும் ஹிந்தி, மராத்தி சினிமாக்களில் மதராசிக்கள் நகைச்சுவை கதாப்பாத்திரங்களாக சித்தரிக்கப்படுகிறார்கள்.

Thursday, August 12, 2010

ஒருவன் ஒருத்தி என்றால் - பரத்தை எதற்கு?


‘போகும் பொன்னி ஆறும் - இனி ஆகும் காலம் நூறும் - போவோமா - ஊர்கோலம்’ - என்று சின்னத்தம்பியில் பாடினவர் குசுபு. வருஷம் 16இல் - கார்த்திக்குடன் - முதல்படம். தளதள இளமையில் - எதுவும் அறியாப் பருவத்தில் - அவர் பேச்சும் நடிப்பும் படத்துக்குப் புதுமை சேர்த்தன. அதற்கேற்ப - ஒரு பணக்காரக் கேரளத்து நாயர் வீட்டில் சூட்டிங். ஓடி ஒளிய - கொஞ்ச - கெஞ்ச - நிறைய இடம் உண்டு.

கற்பு என்பது

மாமேதை குசுபு ஒரு கருத்து சொன்னார் - கற்பு என்பது திருமணத்துக்குப் பிறகு இருந்தால் போதும் என்று - தமிழகம் கொந்தளித்தது. தமிழ் மக்கள் திருடர்கள் - பொய்யர்கள் - என்பது என் கருத்து. வெளிப்படையாக பல கணவர் வாழ்க்கை வாழும் கேரளப் பெண்கள் போற்றுதலுக்குரியவர்கள். ஒருவன் ஒருத்தி என்று நாடக மாடும் தமிழர்கள் பற்றி எனக்கு மரியாதை குறைவுதான். திருவள்ளுவர் கூட - ஒருவன் ஒருத்தி கொள்கையைப் பெரிதுபடுத்துகிறார். அதே சமயம் பரத்தை கலாச்சாரம் இருப்பதையும் ஒப்புக்கொள்கிறார். ஒருவன் ஒருத்தி என்றால் - பரத்தை எதற்கு?

விதைப்பதே ஆண்வேலை

பரிணாமத்தின் உச்சியில் இருக்கும் ஆணுக்கு விதைப்பதும், பெண்ணுக்குக் கருவுருவதும் வேலை. பெண் யாருடன் வேண்டுமானாலும் உறவு கொண்டு கருவுறலாம். ஆண் - பெண் ஒன்று - இரண்டு எத்தனைப் பெண்களை வேண்டுமானாலும் கருவுறச் செய்யலாம். திருவள்ளுவர் - ஒருவன் ஒருத்தி உறவை உயர்த்திப் பேசுவது 1. குழந்தைகளின் பாதுகாப்புக்காக, 2. பெண்களின் பாதுகாப்புக்காக எல்லோருக்கும் பெண்டாட்டி என்பதுதான். யாருக்கும் பெண்டாட்டி இல்லை என்பது - ஒது பாதுகாப்பற்ற நிலை. குழந்தைகளின் வளர்ச்சிக்குப் பாதுகாப்பான சூழல்தான் முதல் தேவை. இதில் திருவள்ளுவர் - பெண்களின் கடமையை அதிகமாக்குகிறார். ஆண் எப்படியாவது ஒழியட்டும் பெண்ணாகிய நீ கற்போடு இரு; அதுதான் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு என்று. ‘தற்காத்துத் - தற் கொண்டான் பேணி’ தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்’ என்கிறார். 1. உன்னைக் காப்பாத்திக்கோ, 2. உன் கணவனைப் பராமரி,

3. நல்ல பெயரை எடு, 4. எதற்கும் எப்பவும் கலங்காதே. இதை நோண்டிப்பார்த்தால் - புருஷன் காரன் - எப்படியும் திரிவான். நீதான் குடும்பத்தின் விளக்கு. உன் குழந்தைகள் வளர வீடு என்று ஒன்று இருக்க - நீ தான் முதன்மை என்பதாகும். கொஞ்சம் ஆழமாகப் பார்த்தால் இது மனுநீதிக் கருத்துதான்.

மதர் இந்தியா - முதல் - கண்ணகி வரை

மதர் இந்தியா - என்று சினிமா கணவன் - வயல் வேலையில் கால் நொண்டியாகி ஊரைவிட்டு ஓடிவிடுகிறான். அம்மாதான் - தன் நிலத்தை, தன் இரண்டு குழந்தைகளை உருவாக்கிக் கொண்டு வருகிறாள். ஒரு மகன் - பெண்களைக் கெடுப்பவனாக மாறும்போது அவனைச் சுட்டுத்தள்ளவும் தவறுவதில்லை. தேவடியாள் கூட ஓடிப்போகும் கோவலனை - என்ன ஆனாலும் என் கணவன் என்று கண்ணகி ஏற்கிறாள். ‘தேரா மன்னா’ என்று அரச சபையில் தன் வழக்கில் தானே வாதிடுகிறார். மதுரையை அழிக்கிறார். இதில் எல்லாம் கணவனைப் புறக்கணிக்காத - பெண்டிரே குடும்பத்தின் அடித்தளம் என்பது தெளிவாகிறது.

சின்ன தம்பி’யின் பிரம்மாண்ட வெற்றி

சின்ன தம்பியில் குசுபுவும், பிரபுவும் - அந்தப் பாத்திரங்களாகவே வாழ்ந்து காட்டினார்கள். தமிழ்த் திரைப்படங்களில் - சின்னதம்பி ஒரு மைல்கல் என்றால் அது மிகை இல்லை. இந்தப்பட வெற்றிக்குப் பிறகு குசுபு - சிவாஜி கணேசன் வீட்டுக்கு போகவும் அனைத்துப் பிரபு உறவினர்களுடன் பழகவும் செய்தார். சிவாஜி கூட ‘குச்பு குச்பு’ என்று இந்த அம்மையாரைக் கொஞ்சினார்.

பிரபு மட்டுமே

சில பத்திரிகையாளர்கள் ‘சின்னத்தம்பி’க்குப் பிறகு குசுபுவைப் பேட்டி கண்டார்கள். 1. உங்கள் வாழ்வில் முக்கிய ஆண் யார்? 2. நீங்கள் யாரையாவது காதலிக்கிறீர்களா? 3. யாரைத் திருமணம் செய்து கொள்வீர்கள் - என்று இப்படி எல்லாக் கேள்விகளுக்கும் குசுபு ஒரே விடைதான் தந்தார் - பிரபு - என்று. இதுதான் பிரபுவின் மனைவியை உசுப்பி இருக்கவேண்டும். முன்பே மனைவியாக வாழ்ந்து ஒன்றிரண்டு குழந்தைகளைத் தந்த தன் கணவனை - இன்னொருத்தி சொந்தம் கொண்டாடினால் எப்படி இருக்கும்? நடிப்பு வேறு. வாழ்க்கை வேறு.

உண்மையைச் சொன்னார்

‘கற்பு’ பற்றிய பேட்டியில் - தன் வாழ்க்கை அனுபவத்தை வைத்து - ‘திருமணத்துக்குப் பின் பெண் கற்போடு இருந்தால் போதும்’. முன்னால் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும் என்கிற மாதிரி ஒரு கருத்தைச் சொன்னார். சுகாசினி கூட - இந்தக் கருத்தை ஆதரித்தார். சினிமா உலகில் இது சர்வ சாதாரணம். பொய்யே வாழ்வாக - இரட்டை வாழ்க்கை வாழும் - பார்ப்பனத் தலைமை - தமிழ்மக்கள் - ஆகா எம் கற்பை - இப்படி சிரிப்புச் செய்தி ஆக்கலாமா - என்று தாண்டிக் குதித்தார்கள். குசுபு - இதைப்பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. சில தீவிரத் தமிழர்கள் குசுபு மீது வழக்கும் போட்டார்கள். வழக்கில் - குசுபு நிலைப் பாட்டில் தப்பில்லை - என்று தீர்ப்பு வந்தது. தமிழ் மாவீரர்கள் - மேலும் கீழும் மூடிக் கொண்டார்கள்.

தி.மு.க.-வில் குசுபு

இப்ப செய்தி குசுபு தி.மு.க.வில் சேர்ந்தார் - என்பது, அதாவது மிக வெற்றிகரமான தொடர்களை ‘ஜெயா டிவி’யில் செய்து கொண்டிருக்கும்போதே, இந்த முடிவு. தொடர்களைச் செய்யும்போதே - குசுபுவின் மிகப்பெரிய பங்களிப்பு - இன்று என்ன சோளி அணிந்தார் என்பதே இவருடைய பேச்சு - கருத்து பற்றியாரும் கவலைப்படவில்லை. ரவிக்கை பற்றியே ஆண்களும் பெண்களும் பேசி மாய்ந்து போனார்கள். குசுபுவுக்கு அரசியல் தெரியுமா? குசுபு - எம்பி - ஆவாரா? அமைச்சர் ஆவாரா? யார் யார் எல்லாம் குசுபுக்குத் தலைவர்கள் - இப்படி எல்லாம் கேள்விகள், விவாதங்கள்.

மனு நீதிக் காட்டுமிராண்டிகள்

பெண்ணுக்கென்று உடம்பு இருக்கிறது; அறிவு இருக்கிறது; தன் உடம்பை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பது அவள் செய்ய வேண்டிய முடிவு; தன் அறிவை எப்படி உபயோகிப்பது என்பது அவளுடைய முடிவு; அவள் ஒரு மனித சென்மம். அவளுடைய ஆசைக்கும் திட்டத்துக்கும், செயலுக்கும் விளைவுக்கும் அவள்தான் பொறுப்பு. அதில் மூக்கை நுழைத்துக் கருத்துச் சொல்வது அநாகரிகம். ‘குழந்தையாகத் தந்தையை - குமரியாகக் கணவனை - கிழவியாக மகனைச் சார்ந்து வாழப் பெண் கடமைப் பட்டவள்’ என்கிறது மனுநீதி. நீ யாரடா - அதைச் சொல்ல?

- சங்கமித்ரா

Thursday, March 04, 2010

பிரேமானந்தா முதல் நித்தியானந்தம் வரை

பிரேமானந்தா ஆரம்பித்து வைத்த போலிச் சாமியார் டைட்டில் மெகா சீரியலில் லேட்டஸ்ட் வரவு நித்தியானந்தம் என்பதை தவிர இந்த விசயத்தில் என்ன கருமாந்திரப் புதுச்செய்தி இருந்துவிடப் போகிறது? பிரேமானந்தா, காஞ்சி காம கேடி, குலுக்கிய கலுக்கி பகவான் அம்மா சாமி காஞ்சி காமதேவன் தேவநாதன், சத்திய சாய்பாபா, இன்னும் இன்னும் தொடரப்போகும் காம சாமிகளின் வரிசையில் நித்தியானந்தமும் ஒருவர்.

நடிகை ஒருவரோடு படுத்திருந்ததற்காக நித்தியை கைதுசெய்ய வேண்டும் எனச் சொல்லும் மக்களை முதலில் கைது செய்து உள்ளே தள்ளுங்கள், இந்த மானம் கெட்ட மடையர்களின் மூட நம்பிக்கைகளால் தானே இந்த காலி சாமியார்கள் பெருத்து கொழுத்து கிடக்கிறார்கள். தவறு செய்தவனை விட தூண்டியவனுக்கு தான் அதிக தண்டனையாமே? மக்களே உங்களுக்கு என்ன கருமத்திற்காக தண்டனை தரலாம்?