அனுமன் பற்றி கதைகளில் படித்து இருக்கிறோம், அனுமன் எந்நேரமும் இராமனை நினைத்துக் கொண்டு இருப்பாராம். அப்படி இராமனையே நினைக்கும் அளவுக்கு இராமன் யோக்கியவானாக இல்லை.
இங்கே நடந்த ஒரு ஆப்பரேஷன் அனுமன் திட்டத்தில் கண்டரியப்பட்ட ராமனின் கதை.
1. இராமன் மறைந்திருந்து அம்பு எய்தினான் - அவன் மாவீரன் அல்ல
2. இராமன் மாயமானைக் கண்டு மதிமயங்கிய சீதையின் சொல்கேட்டு அதைப்பிடிக்க பின்னே சென்றான் - நல்ல அறிஞனும் அல்ல
3. இராமன் தன் மனைவியுடன் காட்டுக்கு வந்தாலும் தம்பி இலக்குவனை அவ்வாறு மனைவியுடன் வருவதற்கு அறிவுரைக் கூரவில்லை - நல்ல எண்ணம் கொண்ட சகோதரனும் அல்ல
4.இந்திரனிடம் மோசம் போன அகலிகையை கற்புக்கரசி என்றவன் உத்தமியை தூற்றியவன்
5. இவற்றிற்கெல்லாவற்றிற்கும் மேல் பொன் போன்ற குணவதியை அவதூறு கிளப்பி தீக்குளிக்க வைத்தான்- கடைந்தெடுத்த அயோக்கியன்
இவன் மறைந்து இருந்து வாலிமீது அம்பு செலுத்திய போது முகமிலியாகத்தான் இருந்திருக்கிறான். ஆனால் இராவணனிடம் வீரவசனம் பேசும் போது தாம் ஒரு வீரன் நிராயுதபாணியாக இருக்கும் உன்னை கொல்லவில்லை இன்று போய் நாளைவா என்று சொல்லி இருக்கிறான்.
ஜெயராமன் - ஒரு இரட்டை வேடதாரி ஒருபக்கம் வைதீகம் பேசினாலும் மறுபக்கம் ஆபாசமாகவே சிந்தித்து இருக்கிறான்
இல்லாவிடில் இலங்கையில் இருந்து மீட்டுவந்த சீதையை தீயில் இறக்கி சோதிப்பானா. சிறையில் வைத்திருந்தாலும் அவளைத் தொடாத ராவணன் ஆண்மகனா இல்லை இந்த ஆபாச ராமன் ஆண்மகனா அனுமனே சிந்தித்துப் பார்
அனுமனே இன்னும் நீ ஏன் ஜெய் ராம் என்று சொல்கிறாய் ? அவன் ஜெய்ராமன் இல்லை பொய்ராமன்
தனது வீரத்தை மறைந்திருந்து தாக்குவதில் மட்டும் காட்டும் ஒரு கயவன் விட்டொழி இனி அவன் வாய்ச்சவடால் வைதீகத்தை