Monday, July 10, 2006

ரஜினி ரசிகர்களுக்கு மூளை இருக்கிறதாம்

சமீபத்தில் ஆனந்த விகடனுக்கு இயக்குனர் தங்கர் பச்சான் அளித்த பேட்டியில்
"இப்போ இருபது கோடி, முப்பது கோடின்னு போட்டுப் படமெடுக்கி-றீங்களே... யாரை நம்பி? இந்தியாவுக்கு வெளியே உலகமெல்லாம் வாழ்கிற ஈழத் தமிழர்கள் உருவாக்கியிருக்கிற சந்தையை நம்பித்தானே? அப்போ அவங்க துயரத்-திலும் நீங்க பங்கெடுக்-கணுமா, இல்லையா?
ரஜினி, கமலெல்லாம் ஒரு வார்த்தை சொன்னா, அதைக் கேட்கவும் எடுத்துச் செய்யவும் எவ்வளவோ பேர் இருக்காங்க. அவங்ககிட்ட நிறைய மக்கள் பலம் இருக்கு. ஏன் பேச மாட்டேங்கிறாங்க? ஒவ்வொருத்-தருக்கும் ஒரு அரசியல் பார்வை இருக்கணும். சமூகப் பிரச்னையோட தங்களை இணைச்சுக்கணும். சும்மா மார்லன் பிராண்டோ நடிப்பைப் பத்தி சிலாகிச்சா மட்டும் போதுமா?
ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், விக்ரம், அஜீத், சூர்யான்னு ஆரம்பிச்சு இன்னிக்கு இருக்கிற ஆர்யா, பரத் வரைக்கும், ஒவ்வொருத்-தரும் இந்தப் பிரச்னையில் தங்கள் கருத்து என்ன என்பதைப் பத்திரி-கைகள் மூலமா தெரிவிக்கணும். ஒரு படம் முடிச்சுட்டு, துட்டை அள்ளிட்டு, ஆயில் மசாஜ் எடுக்கவும், இமய-மலைக்கும், ஓய்வெடுக்க வெளி-நாட்டுக்கும் போனா நாங்க எங்கே போறது? மனச்சாட்சி வேண்டாமா? நம்ம மக்களுக்கு ஒரு துன்பம் வரும்-போது அதுக்கான பொறுப்பு வேண்டாமா? இந்தப் பிரச்னை-யைக் கண்டுக்காம இருக்கோமேன்னு ஒரு குற்ற உணர்ச்சி வேண்டாமா?
"
இதில் தனது தலைவனை ஆயில் மஸாஜ் செய்துகொள்ள போய்விடுவதாக தங்கர்பச்சான் சொன்ன வரிகளை மட்டும் கவ்விப் பிடித்துக்கொண்டு துள்ளிக் குதிக்கும் ரஜினியின் பட்டதாரி பேரவை ரசிகர்கள் ஈழத்தமிழர் விவகாரத்தை அடியோடு மறந்தது மட்டுமின்றி தங்கரை மன்னிப்பும் கேட்கவேண்டும் என்றும் கோரியுள்ளனர் அப்படியென்றால் ரஜினி ரசிகர்கள் ஈழத்தமிழர் விவகாரத்தில் எடுக்கும் நிலை என்ன எவன் செத்தால் எனக்கென்ன தலைவர் படம் ஓடுனா சரிதான் "சிவாஜி வாயிலே ஜிலேபி" என்ற முடிவெடுக்கும் இவர்களுக்கு உண்மையில் மூளை இருக்கிறதா அப்படி யிருந்தால் அதில் தமிழனை பற்றியும் தமிழகம் பற்றியும் சிந்தனை இருக்கிறதா?

119 comments:

தி.ராஸ்கோலு said...

மகேந்திரன்,

சேர்ந்தே இருப்பது?

ரஜினியும் சந்தர்ப்பவாதமும்!

சேராதிருப்பது?

ரஜினி ரசிகர்களும் மூளையும்!

இது தெரியாதா உங்களுக்கு?

ஜெ. ராம்கி said...

மொதல்ல உங்களுக்கெல்லாம் மூளை இருக்குதுன்னு நிரூபிங்கப்பா. முடிஞ்சா சொந்த பெருல எழுதப்பாருங்க. பொத்தாம் பொதுவா எழுதி கும்மியடிக்காதீங்க!

Anonymous said...

ungalukku enna irukkiradu,


mudalla unga photo va maatunga

நாமக்கல் சிபி said...

//அப்போ அவங்க துயரத்-திலும் நீங்க பங்கெடுக்-கணுமா, இல்லையா?
ரஜினி, கமலெல்லாம் ஒரு வார்த்தை சொன்னா, அதைக் கேட்கவும் எடுத்துச் செய்யவும் எவ்வளவோ பேர் இருக்காங்க.//

சொல்லிச் செய்யவும் இருக்கிறார்கள். சொல்லாமல் செய்பவர்களும் இருக்கிறார்கள்.

Muthu said...

ramki,

ஊருல இல்லைன்னு நெனச்சி வலை வீசி தேடிட்டு இருந்தேன்....

பதிவு தலைப்பை பார்த்துட்டு எப்படியும் வருவீர்னு நெனச்சன்..வந்துட்டீரு...

மெயில் அனுப்புறன்.

Unknown said...

//சொந்த பேருல//
பின்ன மகேந்திரன் என்னா பூனை பேரா? :)
வாங்க ராம்கி உங்க வருகையத்தான் எதிர்பார்த்தனுங்க பின்னாடியே $சல்வனும் வருவார் பாருங்க

நாமக்கல் சிபி said...

//ரஜினி ரசிகர்களுக்கு மூளை இருக்கிறதா?//

இல்லை என்று முடிவு செய்துவிட்டீர்கள்.
ஏனைய மூளை இருப்பவர்கள் அனைவரும் என்ன செய்து விட்டார்கள் என்பதைத் தனிப் பதிவாக போடவும்.

ஜெ. ராம்கி said...

//உங்க வருகையத்தான் எதிர்பார்த்தனுங்க

எதுக்கு இந்த வெட்டி வேலை பிரதர்? ரஜினி ரசிகர்கள்னா என்ன மட்டமா? உங்களை நீங்க ஒழுங்கான்னு பார்த்துட்டு அப்புறம் விமர்சனம் பண்ணுங்க. மூளை இருக்கான்னு கேட்குறதெல்லம் ரொம்ப ஓவர்.

//சேராதிருப்பது?

ரஜினி ரசிகர்களும் மூளையும்

இது தனிப்பட்ட கருத்தா அல்லது திராவிட தமிழனின் ஒட்டுமொத்த கருத்தா?

நாமக்கல் சிபி said...

//முடிஞ்சா சொந்த பெருல எழுதப்பாருங்க//

ராம்கியார் குறிப்பிட்டிருப்பது தங்களை அல்ல என்று நினைக்கிறேன் மகேந்திரன்.

மஞ்சூர் ராசா said...

உங்க கட்டுரை விவாதத்திற்காக முத்தமிழ் குழுமத்தில் இடப்பட்டுள்ளது.

muththamiz@googlegroups.com

நன்றி.

நாமக்கல் சிபி said...

தங்கர் பச்சான் அடுத்த படம் எடுக்கும் வரையிலும் அவரை தமிழகம் மறந்துவிடப் போகிறது என்ற அச்சம் தெரிகிறது. ஈழத்தமிழர்களை அனைவரும் மறந்துவிட்டனர் என்ற ஆதங்கம் தெரியவில்லை.

ப்ரியன் said...

ரஜினி ரசிகர்களுக்கு மூளை இருக்கிறதா?

தலைப்பு கடுமை..தலைப்பு போடும்முன் யோசித்தீர்களா?

Unknown said...

//mudalla unga photo va maatunga //
அனானி போட்டோதான மாத்திட்டா போச்சி ஆமா உங்களுக்கு பேரு எதுவும் வைக்கலியா?

//சொல்லிச் செய்யவும் இருக்கிறார்கள். சொல்லாமல் செய்பவர்களும் இருக்கிறார்கள்.
//
சொல்லியும் செய்யாதவர்கள் இருக்கிறார்களே சிபி

//ஊருல இல்லைன்னு நெனச்சி வலை வீசி தேடிட்டு இருந்தேன்....//
ஒருவேள சிவாஜி ஷீட்டிங்குல இருந்திருப்பார் -ஆமா கண்டுபுடிச்சு குடுத்ததுக்கு எனக்கெதுவும் இல்லையா?

//மூளை இருப்பவர்கள் அனைவரும் என்ன செய்து விட்டார்கள் என்பதைத் தனிப் பதிவாக போடவும்//
சிபி இந்த நக்கல்தான வேண்டாங்கிறது அந்த மாதிரி மூளையில்லாதவங்க பதிவ போட்டாலே கூப்பிட்டு வச்சு கும்முறாங்க இன்னும் மூளை இருக்கவங்கள பத்தி எழுதுனா என்னாகும் கொஞ்சம் யோசன பன்னுங்க:)

//மூளை இருக்கான்னு கேட்குறதெல்லம் ரொம்ப ஓவர். //
தப்புதானுங்க ஆனா நீங்க இருக்கா இல்லியான்னு ஒரு பதில சொல்லியிருக்கலாமே?:)

//ராம்கியார் குறிப்பிட்டிருப்பது தங்களை அல்ல என்று நினைக்கிறேன் மகேந்திரன்.//
ஆனா அவரு எதுவுமே சொல்லலியே? அப்ப என்னத்தான சொல்றாருன்னு அர்த்தம் ....:)

//முத்தமிழ் குழுமத்தில் இடப்பட்டுள்ளது//
மஞ்சூர் ராசா நானும் வரனுங்க அங்க

//ஆதங்கம் தெரியவில்லை. //
அட எப்பிடியாவது சனங்க மத்தீல இருக்கனுமுல்ல.... ஆனா அவரு கேட்டது தப்பில்லையே?

நாகை சிவா said...

சரி மூளை இல்லை என்றே வைத்துக் கொள்ளுங்கள்.
அரசாங்கம், பல அமைப்புகள், அரசியல்வாதிகள் இவர்கள் எல்லாம் இந்த பிரச்சனையை குறித்து என்ன செய்து கொண்டு இருக்கின்றார்கள். ஏன் ஒரு சிலரை தவிர மற்றவர்கள் வாய் திறக்க மாட்டேன் என்கிறார்கள். அத கேளுங்க முதல, கலைஞர்களை கலைஞர்களாக மட்டும் காணுங்கள். இந்த பேட்டிக் கொடுத்தவரின் லட்சணம் அனைவருக்கும் தெரியும். அடுத்தவர்களை குறை கூறுவதற்கு ஒரு தகுதி வேண்டும்.

நாகை சிவா said...

//சொல்லாமல் செய்பவர்களும் இருக்கிறார்கள். //
ரஜினியால் வாழ்ந்தவர்கள் பல பேர், இவரால் வாழ்ந்தவர்கள் எத்தனை பேர் என்றுக் கூற முடியுமா.....

Unknown said...

//தலைப்பு போடும்முன் யோசித்தீர்களா? //
அட அந்த சந்தேகமே வேண்டாம் ப்ரியன் நல்லா யோசிச்சு விடைகிடைக்காம வேதனைலதான் அந்த தலைப்பே வச்சேன்

தி.ராஸ்கோலு said...

ராம்கி,

//
இது தனிப்பட்ட கருத்தா அல்லது திராவிட தமிழனின் ஒட்டுமொத்த கருத்தா?
//
இது தி.ராஸ்கோலுவாகிய என் தனிப்பட்ட கருத்து.

இதில் பல திராவிட தமிழர்கள் ஒத்தும் போகலாம் இல்லாமலும் இருக்கலாம்.

தங்கருக்கு ஈழத்தமிழர்கள் மேலெ அக்கறை இருக்கோ இல்லையோ 'திரும்ப ஆட்சிக்கு வந்தா ஆண்டவனால் கூட தமிழகத்தைக் காப்பாற்ற முடியாத அளவுக்கு ஆட்சி தந்த' தெகிரிய லெச்சுமி பேர் கொடுத்தவரோட கருத்து என்னான்னு அவராண்ட கேட்டு சொல்லுங்கப்பு

புதுமை விரும்பி said...

தங்கர்பச்சானின் கருத்துக்கள் கவனிக்கப்படவேண்டியவை. அவரின் செயல்கள், அவரது இந்த கருத்துக்களோடு உடன்படுகின்றனவா, அல்லது ஒதுங்கியே நிற்கின்றனவா என்பது தனியாய் ஆராய வேண்டிய விஷயம். ஆனால், 'ரசிகர் மன்றங்கள்' என்ற இளைஞர்களின் எரிமலை போன்ற சக்தியை உள்ளடக்கிய அமைப்புகள், வெறும் பிறந்த நாள் மற்றும் புதுப்பட போஸ்டர் ஒட்டுதல், கட்-அவுட்டுக்கு மாலை அணிவித்தல் என்ற செயல்கள் மட்டுமே செய்துவருவது ஒரு வருந்தத்தக்க விஷயம். இந்த அமைப்புகளின் சக்தியை சமூக முன்னேற்றத்துக்கு பயன்படுத்தக்கூடிய வழிகாட்டுதல்களை, பெரும்பாலான நடிகர்கள் செய்யாமலிருப்பது எல்லாரும் அறிந்ததே. இந்த நிலை மாறுவதற்கு, சமூக மேம்பாட்டிற்கு இந்த மன்றங்கள் தொண்டு செய்வதற்கு, நடிகர்களின் அறிவிப்புகள், வழிகாட்டுதல்கள் உதவி புரிய வேண்டும்.

Unknown said...

//மூளை இல்லை என்றே வைத்துக்கொள்ளுங்கள்// யப்பா மொள்ள நாகை சிவா ஒத்துகிட்டார் :)
//மத்தவங்க என்ன செய்தாங்க// நாயகன் படம் ஞாபகத்துக்கு வருது....அவன நிருத்த சொல்லு...
//தி.ராஸ்கோலுடைய கருத்து// ஓவர் டு ராம்கி
//ரஜினியால் வாழ்ந்தவர்கள் பல பேர்// யாருங்க கூட நடிக்கறவங்களும் தயாரிப்பாளர்களுமா?
//கலைஞர்களை கலைஞர்களாக மட்டும் காணுங்கள்// அட அவங்க அப்பிடி இருந்திருந்தா இந்த விவாதமே வேண்டாமே? படம் ஓடனும் தன்னோட இமேஜுக்கு பாதிப்புன்னா மட்டும் தமிழனும் தமிழும் வேணும் ஆனா தமிழனுக்கு ஒரு பாதிப்புன்னா மட்டும் நாங்க கலைஞர்கள் எங்களுக்கு எதுக்கு வம்பு? இன்னா நாயம் பா இது

ஜெ. ராம்கி said...

இங்கே டைட்டில்தான் பிரச்னை. பொழுதுபோகவில்லை என்றால் விட்டத்தை பார்க்கவும். பிரச்னையை திசை திருப்ப வேண்டாம். மூளைஇருப்பவர்களின் லிஸ்ட் கிடைத்தால் விரிவாக பதில் சொல்ல முடியும்.

தி.ராஸ்கோலு said...

மகேந்திரன்

தலைப்பை "ரஜினி ரசிகர்களுக்கு மூளை இல்லையா?" என்று மாற்றி விடுங்களேன். நீங்க இப்படி மாத்துனவுடனேயே இதுவரை விட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்த நம்ம ராம்கி ரஜினியின் ஈழத்தமிழர்கள் நிலை குறித்த அறிக்கையைச் சமர்ப்பிக்கப் போகிறார்.

செய்வீர்களா?

Unknown said...

ராம்கி எனக்கு //வேலை இல்லாவிட்டால் விட்டம் பார்க்க// என் வீட்டில் விட்டம் இல்லை அதனால் தான் பதிவை போட்டு பலரையும் விட்டம் பார்க்கவைக்க எண்ணம்
//மூளை இருப்பவர்களின் லிஸ்ட்// கிடைத்ததும் நானே ஒரு பதிவு போடுகிறேன்
//டைட்டில் தான் பிரச்சணை //
மாத்திட்டன்ல இது எப்டி இருக்கு? (எல்லாம் உங்காளு சொன்னதுதாங்க)

தகடூர் கோபி(Gopi) said...

ராம்கி,

http://photos1.blogger.com/blogger/2575/766/1600/teasing.1.jpg

மகேந்திரன்,

:-)

Balamurugan said...

ராம்கி,

லிஸ்ட்டுதானே வேணும். சிம்பிள். இலங்கை பிரச்சனைக்கு குரல் கொடுத்தவங்க எல்லாம் மூளை உள்ளவங்க. குரலு உடாதவங்க எல்லாம் மூளை இல்லாதவங்க. இப்போ புரியுதா?

Anonymous said...

தமிழர்களுடைய அரசியல் உரிமைக்கு பல விதங்களில் குரல் கொடுத்து வரும் ஒரு சில சினிமாக் கலைஞர்களில் தங்கர்பச்சானும் ஒருவர். அவர் சொல்லும் விதம் தவறாக இருக்கலாம். ஆனால் சொல்ல வந்த கருத்து முற்றிலும் சரி.
ரஜினி ரசிகர்கள், ரஜினி அரசியலுக்கு வர எல்லாத் தகுதியுமுண்டு என்று சொல்லும் பொழுது, ஈழ விவகாரத்தில்,அவரின் அரசியல் நிலைப்பாடு என்னவென்று மற்றவர்கள் கேட்ப்பதை குறை கூற முடியாது.
தமிழக மக்கள் சினமாவிற்கு தரும் முக்கியத்தை வேறு ஊடகங்களுக்கு தருவதில்லை. இது ஒரு சாபக்கேடு தான்: அரசியலரங்கில் நம் உரிமையை பாதுகாப்பவன்தான் தலைவன்.திரையில் தோன்றி நம்மை மகிழ்விப்பவன் வெறும் நடிகன்தான். இதை உணறும் வரை, சிம்ரன்கள் நம் அரசியல் மேடைகளில் "டமில்" பேசிக்கொண்டுதான்.

விடுங்க சார், ரொம்ப டென்ஷன் ஆகாதீங்க.
-- மணி

Unknown said...

"/ராம்கி-/" பாலமுருகன் உங்களுக்கு லிஸ்ட் அனுப்பிருக்காருங்க
/கோபி/ இது யாருக்குன்னு சொல்லலியே எனக்கா இல்ல ராம்கிக்கா?
/மணி/ டென்ஸன் ஆகாம என்னங்க பன்றது முடியலியே................(சிவாஜி ஸ்டைலில் படிக்கவும்)

Unknown said...

//கலைஞர்களை கலைஞர்களாக மட்டும் காணுங்கள்//.
From Rajini Fans.com
"As a messiah, he swung the course in 1996 Assembly Election of Tamil Nadu by making a televised appeal to voters to pick the D.M.K - T.M.C combine and they did well. As a citizen as well as crowd-puller, he did an inevitable role which made him to become helmsman of Tamil Nadu. Certainly he is an alternative to the Dravidian politics. He can turn a super-politician and on the face of it appear to be someone above castes and communities. He is straight-forward, great achiever and someone who is genuinely concerned about the goings-on around him. It is obvious that people find Rajnikanth as an alternative with high integrity. He has always been a political figure of sorts. One could find allusions to contemporary politics in his films post-1992",
இதுக்கென்னா சொல்றீங்க?

நாமக்கல் சிபி said...

வலைப்பூ வாயிலாக இரண்டு மூளை இல்லாத ரசிகர்களின் வேதனை என்ன என்று இங்கு பாருங்கள்.

(இதற்கெல்லாம் அவர் குரல் கொடுக்க தேவை இல்லை. அதேபோல் அவரின் பெயரை விளம்பரப் படுத்தியும் இவர்கள் செய்வதில்லை)


http://sethukal.blogspot.com/2006/06/blog-post_21.html

http://pithatralgal.blogspot.com/2006/06/105.html

http://manamumninavum.blogspot.com/2005/11/blog-post_113338793400461627.html

Unknown said...

பாத்தீங்களா சிபி நீங்க எழுதுனது எனக்கு நீங்க சொன்னாத்தான் தெரீது இதே கமலோ ரஜினியோ சொல்லீருந்தா பத்திகிட்டு எரியாது? அதுக்குத்தான் சொல்றாரு தங்கர்பச்சான்

தகடூர் கோபி(Gopi) said...

// இது யாருக்குன்னு சொல்லலியே எனக்கா இல்ல ராம்கிக்கா?//

அதாவது ராம்கிக்கு சொன்னது அவருக்குங்க. உங்களுக்கு சொன்னது உங்களுக்குங்க.

Unknown said...

இதோட சூடான விவாதம் இங்கயும் போயிட்டிருக்கு போய்ப்பாருங்க
http://www.tamilnadutalk.com/portal/index.php?showtopic=2290

நாகை சிவா said...

//யாருங்க கூட நடிக்கறவங்களும் தயாரிப்பாளர்களுமா?//
அவர்கள் மட்டும் தான் வாழ்ந்தார்கள் என்று நீங்கள் நினைத்தால், நீங்க கேட்ட அதே கேள்வியை தான் நாங்கள் உங்களை பார்த்துக் கேட்க வேண்டும். ஒருவரை குறை கூறுவதற்கு முன்பு நன்கு யோசித்து குறைக் கூறுங்கள்.
விவாதம் பண்ணுங்கள், விதாண்ட வாதம் பண்ணாதீர்கள்.

நாகை சிவா said...

//ரஜினி -க்கே இல்லாதது இவர்களுக்கு மட்டும் எப்படி இருக்கும். நல்ல ஜோக் //

எங்க ரஜினிக்கு எங்களுக்கும் முளை இருந்தால் உங்களுக்கு என்ன, இல்லாட்டி உங்களுக்கு என்ன. உங்க வேலை ஏதுவோ அதை மட்டும் பாருங்கள். எங்களுக்கு தான் முளை இல்லை என்று முடிவு செய்து வீட்டீர்களே. அப்புறம் எதற்கு உலகத்தில் நடக்கும் விசயங்கள் எல்லாத்துக்கும் வந்து உங்க கருத்து என்ன, உங்க கருத்து என்ன கேட்கின்றீர்கள்.

நாகை சிவா said...

//பாத்தீங்களா சிபி நீங்க எழுதுனது எனக்கு நீங்க சொன்னாத்தான் தெரீது இதே கமலோ ரஜினியோ சொல்லீருந்தா பத்திகிட்டு எரியாது? //
எங்க கலைஞர், ஜெயலலிதா போன்றவர்களை விடவாங்க ரஜினியும் கமலும் பெரிய ஆளு. அவர்கள் சொன்னால், மத்திய அரசையும், இலங்கை அரசையும் நெருக்கினால் முடிவு ஏற்படாதா.......

Unknown said...

ரஜினியை குறை சொல்லவில்லை அவர்பற்றி கருத்துசொன்ன தங்கர்பச்சானை மன்னிப்புகேட்கவேண்டும் எனச்சொல்லும்...............ரஜினி ரசிகனுக்கானது இப்பதிவு(தலைவர் எவ்வழி ரசிகன் அவ்வழி?)

நாகை சிவா said...

//பாத்தீங்களா சிபி நீங்க எழுதுனது எனக்கு நீங்க சொன்னாத்தான் தெரீது இதே கமலோ ரஜினியோ சொல்லீருந்தா பத்திகிட்டு எரியாது? //
ஏங்க, கலைஞர், ஜெயலலிதாவை விட ரஜினியும், கமலும் பெரிய ஆள்களா, அவர்கள் மத்திய அரசையும், இலங்கை அரசையும் நெருக்கி இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு ஏற்பட வைக்க முடியாதா?????

நாகை சிவா said...

//ரஜினியை குறை சொல்லவில்லை//
//தலைவர் எவ்வழி ரசிகன் அவ்வழி//

நீங்க அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியில் ரஜினியிடம் தானே வருகின்றீகள்.

Unknown said...

//கடைசியில் ரஜினியிடம் தானே வருகிறீர்கள்//
பதிவே அவரையும் அவர் ரசிகர்களையும் பற்றித்தானே பிறகு அங்கே வராமல்? சல்மான் கானிடமா போவது?

நாகை சிவா said...

//பதிவே அவரையும் அவர் ரசிகர்களையும் பற்றித்தானே பிறகு அங்கே வராமல்? சல்மான் கானிடமா போவது? //
காமெடி பண்ண முயற்சி செய்து இருக்கீங்க. "But Better Luck Next Time".

//ரஜினியை குறை சொல்லவில்லை//
அப்புறம் இதை எதுக்குங்க சொன்னீங்க.

நாமக்கல் சிபி said...

அரசியல் சாணக்கியர் கலைஞர், யாருக்கும், எதர்க்கும் பயப்படாத அம்மா இவர்களே இலங்கை தமிழர்களைப் பத்தி பேச பயப்படும் போது, நம்ம ரஜினியையும் கமலையும் எதிர் பார்ப்பது தவறு.
இதையே முதல்வர் சொல்லி இருந்தார்னா எல்லாரும் முன்னாடி இருந்து வேலை செய்வாங்கனு தோனுது.

நாமக்கல் சிபி said...

//தலைவர் எவ்வழி ரசிகன் அவ்வழி//

ரசிகர்களின் குரலை சுட்டிகளின் பார்த்தீர்கள். பிறகு தலைவரின் குரல் வேறு தனியே எதற்கு?

தலைவரின் குரல் ரசிகரின் குரல்.

Unknown said...

மகேந்திரன் நாட்டில் எந்தப் பிரச்சனை நடந்தாலும் அதற்குப் பொறுப்பு நடிகர் ரஜினிகாந்த் தான் என்பது சமீபத்தைய காலமாய் பலத் தரப்புகளில் பரப்பப்பட்டு வரும் நம்பிக்கை.

தேர்தலுக்கு தேர்தல் வாக்களிக்க மறக்கும் தமிழன் கூட தலைவர் ( அட அவர் எங்களுக்குத் த்லைவர் தாம்ப்பா அப்படியே கூப்பிட்டு பழகிட்டோம்) யாருக்கு ஓட்டுப் போடப்போறார்ன்னு ஆருடம் சொல்லிகிட்டு திரியறது தமிழ்நாட்டு ஸ்டைல் ஆகிப் போச்சு.

அதி மேதாவிகள்ல்ல இருந்து சாதரண மனுஷன் வரைக்கும் ( அட அடி முட்டாள்ன்னு சொல்லலாம் ஆனாப் பாருங்க யார் மனசௌம் புண்படக் கூடாது) அந்தாளு வாழ்க்கையிலே நுழைஞ்சு நொங்கெடுக்கணும்ன்னு அப்படி ஒரு ஆசை... ஆசைப் படுங்க ஆனா அவசரப் படாதீஙக்ய்யா...

இது வரைக்கும் தமிழ்நாட்டு வெள்ளித் திரையிலே அரிதாரம் பூசுணக் கலைஞர்களின் எண்ணிக்கை யாருக்கும் சரியாய் தெரியாது.. அதுல்ல பத்து படம் தாண்டியவர்கள் எத்தனை யாருக்கும் தெரியாது.

ஆனா இந்த படிக்காத முட்டாள்ன்னு கேலி செய்யப் பட்ட சிவாஜி ராவ் கெய்க்வார்ட் முப்பது வருசமா இங்கன நின்னு செயிச்சிகிட்டு இருக்கார். புத்தி இல்லாதவன் வேணும்ன்னா ஒரு த்டவை ஜெயிக்கலாம்.. சரி கூட ஒரு தடவை செயிக்கலாம். இந்தாளு தொடர்ந்து செயிச்சிருக்கார். அந்தச் செயிப்பு அந்த செயிப்பையும் மீறிய எளிமை, மனிதாபிமானம். உழைப்பு இதைத் தாம்ய்யா நாங்க விசிலை அடிச்சு ரசிக்கிறோம்

மூளை இருந்தால் தான் ரசிக்க முடியும் என்பது அறிவியல் உண்மை... இந்த உண்மை எங்கக் கூட்டத்துக்கும் பொருந்தும்...

சொன்னா நம்புங்க அய்யா... இன்னிக்குப் பலத் துறைகளிலும் ரஜினி ரசிகர்கள் இருக்காங்காங்க...ஜெயிச்சு இருக்காங்க....

இதுக்கும் மேல் வம்பாப் பேசுன்னா.... அட என்னத்தச் சொல்ல....

அவர் கஷ்ட்டப் பட்டு உழைச்சு முன்னேறிப் போறாரு..
நாங்க இஷ்ட்டப் பட்டு தாம்ய்யா அவர் பின்னாலே போறோம்...

இந்தக் கருத்துக்களைப் பதிவு செய்து ஆக்கப் பூரவமான விமர்சனங்களை நிச்சயம் வரவேற்கிறோம். ஆனால் ரஜினிர்சைகரகளைத் திட்டமிட்டு உள்நோக்கத்தோடு உரசும் இந்தப் பதிவிற்கு என் அமைதியானக் கண்டனங்களைப் பதிவு செய்கிறேன். நண்பர் மகேந்திரன் இதைச் ச்ரியான முறையில் எடுத்துக் கொள்ளுவார் என நம்புகிறேன்.

Unknown said...

//அரசியல் சாணக்கியர்,அஞ்சாத அம்மா// இவங்க ரெண்டுபேறோட முடிவும்தான் தெரியுமே
கலைஞர்: இந்தியாவின் முடிவே எனது முடிவும் அகதிகளுக்கு புகலிடம் தருவோம்
ஜெயா: ஈழத்தமிழர்கள் எல்லோரும் தீவிரவாதிகள் அவங்களபத்தி பேசுனாவே பொடா தான்
நன்றி வெட்டிப்பயலாரே?
//காமெடிபன்ன முயற்சி// சடனா சீரியஸ் ஆயிடுவேன்

Pot"tea" kadai said...

ரசினியின் மூளை(லை)!

சில வருடங்களுக்கு முன் ஒரு விழாவில் அவர் தன் திருவாயால் மொழிந்தது...

ஷிவபெருமானிடமிருந்து வஞ்சக சூழ்ச்சியினால் இலங்கையை பரிசாய் பெற்றான் பிராமண வேடம் தரித்த இலங்கை வேந்தன் இராவணன். இதையறிந்த ஷிவபெருமான் இலங்கை என்றுமே அமைதியாக இருக்காது என்று சாபம் விட்டாராம். அதனால் தான் இலங்கையில் இன்னமும் அமைதியின்றி போர்க்கோலமாகவே இருக்கிறது...

இந்த அளவுக்கு மூளையும் ஞானமும் உள்ள "மென்டல்"ன் ரசிகர்களுக்கு கண்டிப்பாக மூளை இருக்கும்.

******
தங்கரிடமிருந்து மன்னிப்பு வேண்டுமா...ஹி...ஹி...நல்ல தமாசா இருக்கே...மன்னிப்பு அல்ல ஒரு .யிர் கூட கிடைக்காது.

நாமக்கல் சிபி said...

தங்கர் பச்சனை பேட்டிக்காக விகடனார் அணுகியபோது(தான்) தன் உணர்வுகளைக் கொட்டியுள்ளார். விடனாரை இவராக அழைக்கவில்லை.
இல்லையெனில் ஒரு பிரஸ் மீட்டிற்கு ஏற்பாடு செய்து அங்கல்லவா அவர் குமுறியிருக்க வேண்டும்.


திருமா அவர்களின் அழைப்பின் பேரில் திருமா அவர்கள் ஏற்பாடு செய்யும் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளைச் செய்வதில் ஈடுபடுத்துக் கொண்டுள்ளார்.

ஏன்! இத்தனை ஆண்டு காலமாக இப் பிரச்சினையில் இவருக்கு குரல் கொடுக்கத் தோன்றவில்லை. யாரேனும் அழைத்தால்தான் செல்ல வேண்டுமா? அல்லது பேட்டியென்று அணுகினால்தான் தம் உணர்வுகளை வெளிப் படுத்துவாரா?

இவராக ஒரு கூட்டத்திற்கு அரசியல் கட்சிகள்/கலைஞர்கள்/பொது மக்கள்/ அதிகாரிகள்/பிரபலங்கள் ஆகியோரை கூட்டி ஏற்பாடு செய்திருக்கலாமே!

(ஒரு கல்லை எடுத்துப் போட்டு விட்டு ஊரில் உள்ளோரையெல்லாம் சோம்பேறி என்றானாம் ஒருவன்)

நாமக்கல் சிபி said...

//கலைஞர்: இந்தியாவின் முடிவே எனது முடிவும் அகதிகளுக்கு புகலிடம் தருவோம்//
நீ அங்க செத்தா பரவாயில்லை. ஆனால் என் வீட்டுக்கு எப்படியாவது உயிரை காப்பாத்திட்டு வந்த சோறு போடுவோம்...இது தான அதுக்கு அர்த்தம்.

பொன்ஸ்~~Poorna said...

யாருக்காவது மூளை இருக்கான்னு கேட்கிறது..
யாரையாவது காணோம்னு தேடுறது..
இதெல்லாம் செஞ்சாத் தான் இப்போ தமிழ்மணத்தில் பேர் தெரிய வழின்னு மக்களுக்குப் புரிஞ்சிடுச்சு..

நடத்துங்க.. சூப்பர் ஸ்டார் பேரைப் போட்டா 100 பின்னூட்டம் நிச்சயம் வரும்..

பண்பட்ட பதிலை வழங்கிய தேவுக்கு என் வாழ்த்துக்கள்.

Unknown said...

//திரு தேவ்// நானோ அல்லது விமர்சித்த தங்கர்பச்சானோ ரஜினியின் வெற்றி குறித்தோ அல்லது அவரின் கடின உழைப்பு பற்றியோ ஏதும் சொல்லவில்லை. ஆனால் இத்தனை ரசிகர்களை கொண்டிருக்கும் ஒருவர் நான் நடிகன் மட்டும்தான் என்று தட்டிக்கழிப்பது தவறல்லவா. அதை சுட்டிக்காட்டிய தங்கர்பச்சானுக்கு மன்னிப்பு கேள் என கோரிக்கை வைப்பதும் தவறே. தனக்கு ஒரு களங்கம் என்றால் வாழவைக்கும் தமிழினம் வேண்டும் ஆனால் தமிழினத்துக்கு ஒரு களங்கம் என்றால் வாய்மூடி மௌனமாய் இருப்பது ஏன்.? மற்றபடி திட்டமிட்டு உள்நோக்கோடெல்லாம் விமர்சனமில்லை. தங்களின் விமர்சனம் பதியப்படும். தங்களின் எதிர்ப்பும் அதில் இருக்கும். "கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ் - எனது கருத்துக்களை மறுக்க உனக்கிருக்கும் உரிமைக்காக"

//இதுக்கும் மேல் வம்பாப் பேசுன்னா.... // அம்மாடி என்னத்த சொல்ல பயந்து வருது(நன்றி விருமாண்டி நல்லமநாயக்கர்) :))

//பொட்டீக்கடை// அதை விட தைரிய லச்சுமி கதைய சொல்லீருக்கலாம்கோ

// நாமக்கல் சிபி//இத்தனை நாளா தங்கர் என்னா பன்னாருனு நீங்க கேக்கறது திரும்பவும் எனக்கு நாயகன் படத்தத்தான் ஞாபகமூட்டுது. இப்பவேதான் அவரு பிரபலமாக முயற்சி பன்றாறுன்னு சொல்றாங்க இன்னும் அவரே பிரஸ்ஸ கூப்டிருந்தா அம்மாடி

//வெட்டிப்பயல்// இருக்கலாமுங்க

நாமக்கல் சிபி said...

தங்கர் பச்சன் என்னவோ பல காலமாக இப்பிரச்சினையில் பங்கு கொண்டு பேராடியது போலவும் ஏனைய அனைவரையும் அவர் கேட்டுக் கொண்டும் கூட கண்டு கொள்ளாமல் இருப்பது போலவும் தோற்றத்தை உண்டாக்கி இருக்கிறார்.

எதற்கென்றாலும் ரஜினிதான் கிடைத்தாரா? பச்சானின் ஆதங்கம் உண்மையெனில் பொதுவாக அரசியல் மற்றும் கலையுலக பிரபலங்கள் குரல் கொடுக்க வில்லை என்று கூறியிருக்கலாமே! கலைஞர் மற்றும் அம்மா அவர்கள் கூட அமைதியாகத்தான் உள்ளனர். இவையெல்லாம் அரசியல் ரீதியாக முடிவெடுத்து ஒட்டு மொத்த தமிழகமும் ஒற்றுமையாய் போராட வேண்டிய விஷயம். ரஜினி மட்டுமே குரல் கொடுப்பதால் ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை.

இப்பிரச்சினை பற்றி கருத்து கேட்கப்பட்டால் ரஜினி கமல் மட்டுமல்ல ஏனைய அனைத்து பிரபலங்களுமே பேட்டியின் வாயிலாக தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திவிட்டுப் போகிறார்கள். இவரிடம் கேட்டார்கள். இவர் சொன்னார். அதனால் சொல்லாத அனைவரும் தமிழின உணர்வுகள் அற்றவர் என்பது போல் இவர் பேசியிருப்பது தவறு.

இன்னொன்று நடித்து முடித்த பின் அனைவரும் மசாஜ் செய்துகொள்ள இமய மலை சென்றுவிடுவதாகச் சொல்லியுள்ளார். இதுதான் ரசிகர்களின் மனதில் கொந்தளிப்பை உண்டாக்க காரணம். அவரவர் வேலை முடிந்ததும் ஓய்வு நேரத்தில் என்னவோ செய்துவிட்டு போகிறார்கள்.

தங்கர் பச்சன் மட்டும் படப் பிடிப்பு முடிந்ததும் கலெக்டர் அலுவலத்தின் முன்னால் காலிக் குடங்களுடன் போராடவா வருகிறார்.

Unknown said...

JustForComment said...
/தங்கர் பச்சானை மன்னிப்புக் கேட்கச் சொன்னது தொடர்பாக ரஜனி ரசிகர்களின் கருத்தென்ன? (அவர்கள் தான் மன்னிப்புக் கேட்கச் சொன்னார்கள் என்றாலும் வலைப்பதிவு ரசிகர்களைக் கேட்கிறேன்)
பதிவு அதைப்பற்றியது தானென்றாலும் எல்லோரும் அனாவசியத்துக்கு உணர்ச்சிவசப்பட்டு திசைதிரும்பி நிற்கிறீர்கள். /

ஓவர் டு ரஜினி அன்டு ரசிகர்கள்

வாங்க பொன்ஸ் இப்பத்தான் வழிதெரிஞ்சுதா?
/நடத்துங்க.. சூப்பர் ஸ்டார் பேரைப் போட்டா 100 பின்னூட்டம் நிச்சயம் வரும்../
ஆமா நீங்க என்ன வச்சு எதும் காமெடி கீமெடி பன்னலியே?
இந்த விவகாரத்துல கைப்புள்ள என்னா சொல்றாரு?

நாமக்கல் சிபி said...

அவர்கள்தான் மன்னிப்பு கேட்க சொன்னார்கள் என்றாலும் வலைப்பதிவு
ரசிகர்களாகிய நாங்கள் சொல்வது என்னவென்றால் மூளை இல்லை/மூளை இருக்கிறதாம் என்று எழுதியதை தவறு என்கிறோம்.

பொன்ஸ்~~Poorna said...

JustForComment,
//பதிவு அதைப்பற்றியது தானென்றாலும் எல்லோரும் அனாவசியத்துக்கு உணர்ச்சிவசப்பட்டு //
என்ன செய்ய தலீவா, தலைப்பு ரொம்ப "அறிவுப் பூர்வமா" கீதே!! அவனவன் உணர்வுப் பூர்வமா பதில் சொல்லணும்னு தானே தல மகேந்திரன் இப்படி ஃபீல் ஆகி தலைப்பு வச்சிருக்காப்ல..

// ஆமா நீங்க என்ன வச்சு எதும் காமெடி கீமெடி பன்னலியே? //
யாரு, நானா?! ஹ..
//இந்த விவகாரத்துல கைப்புள்ள என்னா சொல்றாரு? //
தெரியலியே மகேந்திரன்.. தெரியலியே!!! (கமல் ரசிகரை நாயகன் ஸ்டைலில் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.. ) ;)

//வாங்க பொன்ஸ் இப்பத்தான் வழிதெரிஞ்சுதா? //
அம்புட்டுத் தாம்லே contribution.. எனக்குக் கொஞ்சம் மூளை இன்னும் ஒட்டிக்கிட்டு இருப்பதாக நான் நினைப்பதால், இந்தப் பதிவோட பேசிக் ஐடியாவை இனிமேல் ஆதரிக்கும் எண்ணம் இல்லை.

Anonymous said...

//தங்கர் பச்சன் மட்டும் படப் பிடிப்பு முடிந்ததும் கலெக்டர் அலுவலத்தின் முன்னால் காலிக் குடங்களுடன் போராடவா வருகிறார். //

:-))

aaradhana said...

they are so oppourtunistic. when will our people realize?

Unknown said...

//இப்பிரச்சினை பற்றி கருத்து கேட்கப்பட்டால் ரஜினி கமல் மட்டுமல்ல ஏனைய அனைத்து பிரபலங்களுமே பேட்டியின் வாயிலாக தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திவிட்டுப் போகிறார்கள். இவரிடம் கேட்டார்கள். இவர் சொன்னார். அதனால் சொல்லாத அனைவரும் தமிழின உணர்வுகள் அற்றவர் என்பது போல் இவர் பேசியிருப்பது தவறு.//

கூப்பிட்டோ கூப்பிடாமலோ தனது இருப்பை தெரியப்படுத்துவது தலைவர்களுக்கு அழகு. தனக்கு ஒரு வில்லங்கம் என்றால் அப்போதும் இதுவே ரஜினியின், ரசிகர்களின் பதிலாக இருக்குமா?

நாமக்கல் சிபி said...

பச்சானின் கோபம் நியாயமென்றால் முதலில் தமிழின தலைவர் கலைஞரையும், திருமா கூட்டணி அமைத்திருக்கும் அவர் பாசமுள்ள அக்காவையும் திட்டி இருக்க வேண்டும்.
அதை விட்டு நடிகர்களை திட்டுவது நியாயமற்ற செயல்.

ரஜினி ரசிகர்களும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.
"Great Power brings Great Responsibility".
ரஜினியிடம் மக்கள் சக்தி உள்ளது. அதனால்தான் தமிழ்நாட்டில் நடக்கும் ஒவ்வோரு முக்கிய விஷயத்திற்கும் அவரின் கருத்து முக்கியமாகப்படுகிறது.

Anonymous said...

Well, Rajni fans sent him a notice!:-) And I think your title is self-explanatory.

I have certain reservations against Thangapachan, but I have to say that the man has more guts than all the stars in Tamil Cinema and some politicians. That he has no people power, but has the guts to speak his mind, and quite fairly in this issue, says a lot about the man at least on qualities. Hats off on that.

Coming to Rajni, I think that his hold on his fans is decreasing. Everyone wondered if his word would have been respected in the last election. He smartly kept quiet.

But in general, you can't expect much from the average fan/person. Most of them seek attention more than anything. Asking for apology is like that.

-Kajan

Unknown said...

//இல்லை/மூளை இருக்கிறதாம் என்று எழுதியதை தவறு என்கிறோம்.// இருக்கான்னு கேட்டப்போ தலைப்ப மாத்துங்க அதுல தான் பிரச்சணைன்னு சொன்னீங்க சரி எதுக்கு வம்புன்னு இருக்கிறதுன்னு போட்டாக்கா அதுலயும் சரியில்லன்னு சொல்றீங்க தலைய தூக்கிட்லாமா(தலைப்பதாங்க)

//பொன்ஸக்கா// இப்பிடி போட்டு வார்ரது நாயமா? இது அந்தமாதிரி டெஸ்டெல்லாம் இல்லீங்க நிஜமான சந்தேகந்தான் .

ஆராதனா மிக்க நன்றி

//வெட்டிப்பயல்// ஒருவேள முதல்ல நம்ம (நடிகர்களின்) அழுக்க அலசுவோம்னு நினைச்சிருப்பாரு

Unknown said...

//That he has no people power, but has the guts to speak his mind, and quite fairly in this issue, says a lot about the man at least on qualities. //
இதைச் சொன்னால் அவர் பிரபலம் தேடுகிறார் என்கிறார்கள்
//you can't expect much from the average fan/person. Most of them seek attention more than anything. Asking for apology is like that.//
பட்டதாரி ரஜினி ரசிகர்கள் பேரவை (கொடுமை சாமி)

Anonymous said...

---பட்டதாரி ரஜினி ரசிகர்கள் பேரவை ---

இந்த பட்டதாரிகளை தமிழ்நாட்டை ஆளுகிறவர்தான் காப்பாத்தனும். (அதாம்பா வேலையில்லா பட்டதாரிகளுக்கு உதவி தொகை தருவேன்னு தேர்தள்ளு அறிக்கையிலேயே சொல்லியிருக்கோம்ல)

Anonymous said...

/**தங்கரிடமிருந்து மன்னிப்பு வேண்டுமா...ஹி...ஹி...நல்ல தமாசா இருக்கே...மன்னிப்பு அல்ல ஒரு .யிர் கூட கிடைக்காது. **/

Pot"tea" kadai
ஆமாம், குஷ்பூவிடம் மட்டும் தான் அவர் .யிர் கொடுப்பார்...

Balamurugan said...

இலங்கை பிரச்னையில் இந்திய தமிழர்கள் செய்ய வேண்டியது பற்றி பத்து ஆண்டுகளுக்கு முன்பே ரஜினி தெளிவாக சொல்லியிருக்கிறார். தெனாலி விழாவில் கூட தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார். இது அரசியலில் கத்துக்குட்டிகளான திருமாவளவன், ராமதாஸ், சோனியா காந்தி போன்ற ஜூனியர்களுக்கு தெரியாமலிருக்கலாம். பொட்டீக்கடை, முதல்ல கடையை மூடுப்பா. எத்தனை நாளைக்கு ஜாதி ஜால்ரா அடிச்சுட்டே இருப்பீர்?

Balamurugan said...

முதலில் இலங்கை பிரச்னையில் என்ன முடிவு எடுக்கப்போகிறார்? ஆட்சியை காவு கொடுக்குமளவுக்கு அவர் மூளை இல்லாதவர் இல்லையே?

Balamurugan said...

இந்த பிரச்சினையில் அம்மா என்ன செய்வார்? வை.கோ, திருமாவளவனோடு கைகோர்த்து இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுப்பாரா?

Balamurugan said...

திரும்பவும் விடுதலை புலிகளை ஆதரித்து பேசி சிறைக்கு போகுமளவுக்கு வை.கோ மூளை இல்லாதவரா?

Balamurugan said...

அன்புமணி ராமதாசு இலங்கை பிரச்சினையில் இந்தியா தலையிடவேண்டும் என்று வலியுறுத்தி பதவியை ராஜினாமா செய்வாரா வேணுகோபாலோடு சண்டை போட்டுக்கொண்டு இருப்பாரா?

Balamurugan said...

எதைப்பற்றியும் பேசாமல் சூயிங்கம் மெல்லும் மூப்பனார் வாரிசு, பெரியாரின் வாரிசு இவர்களெல்லாம் எப்போது குரல் கொடுப்பார்கள்? தமிழ் உணர்வு அதிகமாகி அடிக்கடி உணர்ச்சிவசப்படும் பாரதிராஜா எப்போது குரல் கொடுக்கப்போகிறார்?

Unknown said...

//இலங்கை பிரச்னையில் இந்திய தமிழர்கள் செய்ய வேண்டியது பற்றி பத்து ஆண்டுகளுக்கு முன்பே ரஜினி தெளிவாக சொல்லியிருக்கிறார்//

பாலமுருகன் அப்ப பத்து வருசத்துக்கு முன்ன ஜெயலலிதா பத்தி சொன்னதுதான் அவரோட இப்போதைய ஜெயலலிதா பத்தின விமர்சனமா?

Unknown said...

பால முருகன் நீங்கள் வெறும் ரசிகன் எனும் நிலையில் மட்டும் இருந்துகொண்டு அரசியல்வாதிகள் என்னசெய்தார்கள் எனக் கேட்கிறீர்கள் அவர்கள் வேலையை அவர்கள் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்



தங்களின் வெளியாகாத பின்னூட்டத்திற்கு பதிலாக- அப்படி எதுவும் வேலை கிடைத்தால் சொல்லி அனுப்புகிறேன்

குழலி / Kuzhali said...

மகேந்திரன் நல்ல வார்த்தைகளில் அர்சித்து எத்தனை மின் மடல்கள் வந்துள்ளது இது வரை... எனக்கும் நிறைய வந்திருக்கு அதிலிருந்து ரீஜென்டான ஒன்றை இங்கே http://kuzhali.blogspot.com/2006/04/we-are-immortal-be-careful.html தந்துள்ளேன்... இது மட்டுமில்லை, சாருவையும் மிரட்டியிருக்காங்க http://kuzhali.blogspot.com/2005/09/blog-post.html

இவங்க தலைவரும் அவர் ரசிகர்களும் இல்லாம போனா காமெடி இல்லாம போயிடும்...

சரிப்பா ஒரு ஸ்மைலி போட்டுக்கிறேன் :-)

Pot"tea" kadai said...

//பொட்டீக்கடை, முதல்ல கடையை மூடுப்பா//

தோ..டா...போலீசுகாரர் வன்ட்டாரு...கடைய சாத்தனமுமாம்...சாத்திடுவோம்!!!

//எத்தனை நாளைக்கு ஜாதி ஜால்ரா அடிச்சுட்டே இருப்பீர்?//

குடுமிகளும், பூணூல்களும், வர்ணங்களும், தேவ பாஷைகளும் அதன்கால் எழுதப்பட்ட வேத கருமங்களும் அறுத்தெரியப்படும் வரை...

மனதின் ஓசை said...

கமல் ரசிகர் திரு. மகேந்திரன் அவர்களே,

1. இந்தப் பதிவில் மற்றும் உங்கள் பின்னூட்டங்களில் ரஜினி மீது உங்கள் காழ்ப்புணர்ச்சி மட்டுமே தெரிகிறதே அன்றி ஈழத்தமிழர் நிலை பற்றிய எந்த ஒரு சிறு வருத்தமும் தெரிய வில்லையே, ஏன்?

2.திரு.கமல் இது வரை தமிழகத்துக்காக என்ன செய்து இருக்கிறார்? தங்கர்பச்சான் கூரிய கருத்துக்களுக்கு முற்றிலும் பொருத்தமானவர் அவர் அல்லவா?
இவர் மேல் தங்களுக்கு எதுவும் கோபம் வராதது ஏன்? கருத்து கூறாதது ஏன்? உங்கள்/தங்கர்பச்சான் வேதனை ஈழத்தமிழர் நிலை பற்றி வருந்தி அதற்கு கலைஞர்கள் அக்கறை காட்ட வில்லை என்பது தானே? இல்லை இவ்வளவு காலமாக வெற்றி நடை போடும் ரஜினியை பற்றி பேசினால் விளம்பரம் கிடைக்கும் என்பதா?

உண்மையிலேயே நீங்கள் தெரிவிப்பது வருத்தமா? இல்லை தேடுவது விளம்பரமா?

3. தங்கர்பச்சான் கடந்த காலங்களில் இதுவரை எத்தனை முறை சமூகப்பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்து இருக்கிறார் என தெரியப்படுத்த முடியுமா?

4. ரஜினி ஒரு கலைஞன்.. அரசியல்வாதி இல்லை..அவர் வேலை நடிப்பது... தினமும் அறிக்கை கொடுத்து கொண்டு இருப்பது அல்ல...அவரும் விழாக்களில் மற்றும் வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் தன் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்..மற்றவர்கள் போல் அல்ல அவர்...

மனதின் ஓசை said...

////தலைப்பு போடும்முன் யோசித்தீர்களா? //
அட அந்த சந்தேகமே வேண்டாம் ப்ரியன் நல்லா யோசிச்சு விடைகிடைக்காம வேதனைலதான் அந்த தலைப்பே வச்சேன்//
இங்கு யாருக்கும் சந்தேகமே இல்லை.. நிச்சயமாக யோசித்து தான் இந்த தலைப்பை வைத்து இருப்பீற்கள்...ஆனால், வேதனையா உங்களுக்கு தெரிந்தது இந்த தலைப்பில்? இல்லை..உங்களுக்கு தெரிந்தது : "ஆஹா.. சூப்பர் மேட்டர் இது.... இதுலயாவது நிறைய பின்னூட்டம் வாங்கிடலாமில்ல..." - இதுதான்


////ரஜினியை குறை சொல்லவில்லை//
அப்புறம் இதை எதுக்குங்க சொன்னீங்க. // உங்கள் பதில் என்ன?

Unknown said...

When their own faily tv business was affected, they were quick to see the givernor and now in power quick to act to abandon the cable tv,
When the issue of NLC privatisation became a political embarassment they were quick to threaten the central government and put an end to issue.

With support from central and state with all the ministers, it is the responsibility of the DMK government to take action.All those who claim to be the saviour of tamils should come forward and say what action they propose to take and how they solve the issue.

What has Thangar bacchan done to TN, any one can talk and criticize but only one who has done some thing relevant should matter.
What is vaiko doing in this issue, what about other tamil MP's stance.Why disturb Rajini on this issue, how does it matter even if he makes a comment.
Author needs to examine his brain before supporting people like Thangar, thirumaa

அருண்மொழி said...

உங்களின் முன்னைய தலைப்பு சரியானதே. ஒருவருக்கு ரசிகராக இருந்து அவரின் நடிப்பை ஆராதிப்பது சரியானதே. ஆனால் அந்த நடிகரை தலைமேல் தூக்கி வைத்து ஆடுவது ....

ஜூப்பர் ஸ்டாரின் ரசிகமணிகள் தேர்தல் நேரத்திலும், இப்பவும் செய்யும் காமெடி காட்சிகளை பார்த்தால் உங்களின் முன்னைய தலைப்பு சரியானதே.

வக்கீல் நோட்டீஸ்
தல வூட்டு முன்னால உண்ணாவிரதம்
தல படத்த ஒட விடமாட்டோம் (இதுதான் செம காமெடி).

அவரு பட வசனம். என்ன கொடுமை ......

நாமக்கல் சிபி said...

//தனது இருப்பை தெரியப்படுத்துவது தலைவர்களுக்கு அழகு. தனக்கு ஒரு வில்லங்கம் என்றால் அப்போதும் இதுவே ரஜினியின், ரசிகர்களின் பதிலாக இருக்குமா?
//

தலைவர்களுக்கு அழகு என்பது எல்லா தலைவர்களுக்குமல்லவா பொருந்தும். அல்லது விகடனாரின் பேட்டியின் மூலம் தனது இருப்பைத் தெரியப் படுத்திக் கொண்ட பச்சானை தலைவர் என்று நாம் ஏற்றுக் கொள்ள வேண்டுமா?

உங்கள் கூற்றுப்படி பார்த்தால் தற்போதைய நிலையில் பச்சானைத் தவிர வேறு தலைவர்களே இல்லையே.

நாமக்கல் சிபி said...

குரல் கொடுத்தால்தான்(சொன்னால்தான்) இன உணர்வு இருக்குமென்று கூறும் பச்சான் சொல்லாமலேயே பிறருக்கு தமிழின உணர்வு இல்லை என்று மட்டும் அவராக ஊகித்துக் கொண்டது எப்படி?

Unknown said...

நன்றி குழலி " இந்த மாதிரி பின்னூட்டம் போட்டு எதிர்ப்ப தெரிவிக்கிறவங்க அட நான் என்ன சொல்ல வற்றேன்னு புறிஞ்சுகாமலே எழுதுறது வேதனையான விஷயம் அதிலும் மனதின் ஓசை எழுதியிருப்பதை படித்து மாருங்கள் அவங்க என்னா செஞ்சாங்க இவங்க என்னா செஞ்சாங்க அதால எங்க தலைவரும் எதுவும் செய்ய மாட்டார். அப்பறமா கமல் என்னா பன்னார் தமிழ்நாட்டுக்கு அட அவர் என்னா பன்னாருன்னு அவரோட நற்பணி இயக்கத்த கேட்டா புக்கு போட்டு சொல்வாங்க எத்தனை ஜோடி கண்கள் எத்தனை ஆயிரம் லிட்டர் இரத்த தானம் இதெல்லாம் அவர் சொன்னதால தான நடக்குது ஒரு ரசிகர் மன்றமாக மட்டும் இல்லாமல் அதை நற்பனி இயக்கமாக நடத்துகிறார் அவர். தங்கர்பச்சான் கமலையும் தான் சொல்லி யிருக்கிறார் அதற்க்காக எந்த கமல் ரசிகனும் கோபித்து கொண்டு தங்கர் மன்னிப்பு கேட்க வேண்டும் என கொந்தளிக்கவில்லை. தங்களின் பின்னூட்டத்துக்கு நன்றி

நாமக்கல் சிபி said...

//தங்கர்பச்சான் கமலையும் தான் சொல்லி யிருக்கிறார் அதற்க்காக எந்த கமல் ரசிகனும் கோபித்து கொண்டு தங்கர் மன்னிப்பு கேட்க வேண்டும் என கொந்தளிக்கவில்லை//

ஐயா மகேந்திரன்,
ரஜினி ரசிகர்கள் கொந்தளித்தது ரஜினி குரல் கொடுக்க வில்லை என்று சொன்னதற்காக அல்ல.
படப்பிடிப்பு முடிந்ததும் மசாஜ் செய்துகொள்ள இமயமலை போய்விடுகிறார் என்று சொன்னதால்தான்.

ரஜினி ரகிகர்களும் எத்தனையோ நற்பணிகள் செய்து கொண்டுதான் உள்ளனர். மன்றங்களில் போய் கேட்டுப் பார்த்தால் அவர்களும் சொல்வார்கள்.

ரஜினி ரசிகர்கள் ரஜினி சொல்லாமலேயே நற்பணிகள் செய்பர்கள். அவற்றையெல்லாம் விளம்பரம் செய்யத் தேவை இல்லை.

நாமக்கல் சிபி said...

http://rajinifans.com/activities/index.asp

http://rajinifans.com/activities/blood_donors.asp

http://rajinifans.com/others/recruitment.asp

http://rajinifans.com/Tsunami/

ஐயா மகேந்திரன் அவர்களே,
மேற்கண்ட சுட்டிகளைப் பாருங்கள்.
ரஜினி ரசிகர்களும் (மூளை இல்லாவிடினும்) இயன்ற நற்பணிகளைச் செய்துவருகிறார்கள் என்று தெரியவரும்.

Unknown said...

//மனதின் ஓசையின் பின்னூட்டக் கேள்விகளுக்கு பதிலாக.//
1.இது ரஜினி மீதான காழ்ப்புணர்வு அல்ல .அவரின் முட்டாள்தனமான கொள்கைகளை தூக்கிப் பிடிக்கும் ரசிகர்களை கண்டு வந்த கோபம் தனிமனித தாக்குதல்களை கண்டிக்க எனக்கு எத்தனை உரிமை உண்டோ அதே அளவு தனிமனித வழிபாட்டையும் கேள்விக்குள்ளாக்க வேண்டிய சமூக பொறுப்பும் பதிவருக்கு உண்டு.
2.கமல் என்ன செய்தார் தமிழ் நாட்டுக்கென்று எல்லோருக்கும் தெரியும் ரஜினி தமிழ்நாட்டுக்கு என்ன செய்தார் என்பதும் எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஈழத்தமிழர் பிரச்சனையில் இருவரும் வாய்மூடி மவுனமாய் இருப்பதாக "அவரது பாணியில் சொன்ன தங்கர் பச்சான் மன்னிப்பு கேட்கவேண்டும் எனச் சொல்வது முட்டாள்தனமா இல்லையா?. எந்த கமல் ரசிகனும் இதுபோல் ஒரு முடிவை எடுப்பதில்லை. நான் கமலின் நடிப்புக்கு ரசிகன் அவரின் கொள்கைகளுக்கும் அவரின் எண்ணங்களுக்கும் அல்ல.
3.விளம்பரம் தேடுவதால் எதுவும் எனக்கு கிடைக்கும் எனத் தெரியவில்லை கூகிள் அட்சென்சில் கூட சேர்க்க மாட்டார்கள் இப்படித்தான் தங்கரையும் கேட்கிறீர்கள். இதில விளம்பரம் தேட என்ன இருக்கிறது.
4.தங்கர் என்ன செய்தார் என்ன செய்தார் எனக் கேட்கிறீர்களே அவர் ஒன்றும் தன்னை வருங்கால தமிழக முதல்வர் மாற்று சக்தி என முழக்கமிட்டுக்கொண்டும் தனது சுய லாபத்துக்காக கொள்கைகளை மாற்றிக்கொண்டும் இல்லை தன் மனதுக்கு சரி எனப் பட்டதை தெளிவாக சொல்பவர்.
5.அவர் ஒரு நடிகர் மட்டும் எனும் நீங்கள் முன்பு அவர் அறிக்கை மேல் அறிக்கை விட்ட போது என்ன செய்தீர்கள் ஆகா தலிவர் அரசியலுக்கு வரபோறார் நமக்கொரு கவுன்சிலர் சீட்டு நிச்சயம் என கணவுகண்டுடிருந்தீர்களா?
6.இப்பதிவில் ரஜினியை எந்த இடத்திலும் குறைசொல்ல வில்லை தங்கர்பச்சானை மன்னிப்பு கேட்கவேணும் என தீர்மாணம் நிறைவேற்றிய ரசிகர்களின் முடிவின் மீது கோபம் வந்ததாலேயே ஈழத் தமிழர் நிலையில் இவர்களின் நிலை இதுதானா எனக் கேள்வி எழுப்பி இருந்தேன்? ஒருவேளை தங்கர் பச்சானை போல ரஜினியை போல என் எழுத்தின் ஸ்டைல் காரணமாக அது உங்களுக்கு வருத்தம் தெரிவிக்காத தொனியை தந்திருக்கலாம்.
//ஆர்.தர்மா// கருத்துக்கு நன்றி

நாமக்கல் சிபி said...

//ஆனால் ஈழத்தமிழர் பிரச்சனையில் இருவரும் வாய்மூடி மவுனமாய் இருப்பதாக//

இவ்விஷயத்தில் பச்சான் இப்படியே கூறியிருந்தால் சரி. கூடவே எதற்கு

"ஒரு படம் முடிச்சுட்டு, துட்டை அள்ளிகிட்டு, ஆயில் மசாஜ் எடுக்கவும், இமயமலைக்கும், ஓய்வெடுக்க வெளிநாட்டுக்கும் போனா நாங்க எங்கே போறது?"

ன்னு கேட்கணும்?

ரஜினி இமயமலையில் போய் அமர்ந்து கொண்டு என்ன செய்தாம் இவருக்கென்ன? அவரவர் ஆன்மீகத் தேடலுக்கு அவரரவர் விருப்பப்பட்ட இடங்களுக்குச் செல்கின்றனர். இவருக்கென்ன வந்தது!

இல்லை பொதுவாகத்தான் (எல்லா கலைஞர்களையும்) சொல்கிறார் என்றால்
பொதுவாக அவரவர்கள் ஓய்வெடுக்க சென்று விடுகிறார்கள் என்று சொல்லியிருக்கலாமே!

//துட்டை அள்ளிகிட்டு,//

அவரது உண்மையான ஆதங்கம் இங்கல்லவா தெரிகிறது.

நாமக்கல் சிபி said...

//அவரின் முட்டாள்தனமான கொள்கைகளை தூக்கிப் பிடிக்கும் ரசிகர்களை கண்டு வந்த கோபம் //

அதென்னங்க முட்டாள் தனமான கொள்கைகள்?

//ரஜினியை குறை சொல்லவில்லை//

அப்போ மேலே சொல்லியிருப்பது யாரை?

நாமக்கல் சிபி said...

//தனிமனித வழிபாட்டையும் கேள்விக்குள்ளாக்க வேண்டிய சமூக பொறுப்பும் பதிவருக்கு உண்டு//

தலைவரைப் பார்த்ததும் காலில் விழும் தொண்டர்கள், தலைவர்களுக்காக பந்த் நடத்தும் தொண்டர்கள், தீக்குளிக்கும் தொண்டர்கள் - இவையெல்லாம் தனிமனித வழிபாடுகள் இல்லை. அப்படித்தானே!

//அவர் ஒன்றும் தன்னை வருங்கால தமிழக முதல்வர் மாற்று சக்தி என முழக்கமிட்டுக்கொண்டும் தனது சுய லாபத்துக்காக கொள்கைகளை மாற்றிக்கொண்டும் இல்லை தன் மனதுக்கு சரி எனப் பட்டதை தெளிவாக சொல்பவர்//

ரஜினி கூட தன்னை வருங்கால முதல்வர் என்று சொல்லிக் கொள்ளவில்லை. சொல்வதையும் விரும்பியதில்லை. அது ரசிகர்களின் விருப்பம் மட்டுமே! அதனை அவர் மீது திணிப்பது தவறு!


//அவர் ஒரு நடிகர் மட்டும் எனும் நீங்கள் முன்பு அவர் அறிக்கை மேல் அறிக்கை விட்ட போது என்ன செய்தீர்கள் ஆகா தலிவர் அரசியலுக்கு வரபோறார் நமக்கொரு கவுன்சிலர் சீட்டு நிச்சயம் என கணவுகண்டுடிருந்தீர்களா?
//

ஆக ரஜினியின் ரசிகர்கள் மட்டும் ரஜினி அரசியலுக்கு வந்தால் கவுன்சிலர் பொறுப்புகளுக்கு ஆசைப் படக் கூடது. அனைத்து பதவிகளுக்கும் ரசிகர் மன்றங்களை விடுத்து வெளியில் இருப்போரை தேர்ந்தெடுக்க வேண்டும் அப்படித்தானே!

//தங்கர்பச்சானை மன்னிப்பு கேட்கவேணும் என தீர்மாணம் நிறைவேற்றிய ரசிகர்களின் முடிவின் மீது கோபம் வந்ததாலேயே ஈழத் தமிழர் நிலையில் இவர்களின் நிலை இதுதானா எனக் கேள்வி எழுப்பி இருந்தேன்? //

ஓஹோ! தங்கர் பச்சானை மன்னிப்பு கேட்கச் சொன்னால் ஈழத்தமிழர் பிரச்சினையில் தமிழர்க்கு எங்கள் ஆதரவு இல்லையென்று பொருளா?

அப்போ முன்பொருமுறை நடிகைகள் பற்றி பேசி மன்னிப்புக் கேட்டாரே அப்போது எந்தப் பிரச்சினையில் மன்னிப்புக் கேட்கச் சொன்னவர்களின் நிலை பற்றி அறிந்தீர்கள்?

நாமக்கல் சிபி said...

ஆக தங்கர்பச்சானுக்கு இருக்கும் பிரச்சினை
1.ஈழத்தமிழர் பிரச்சினையில் அனைவரும் குரல் கொடுக்க வேண்டுமென்பதா?

2.அல்லது படம் முடிந்ததும் துட்டை அள்ளிக்கொண்டு போக அவருக்கு இன்னும் ஒரு கிடைக்காமல் இருப்பதா?

முன்னது சரியெனில் இரண்டாவதைப் பற்றி அவர் பேசி இருக்க தேவை இல்லை.

பின்னது சரியெனில் இதனைத் தனியே பேசியிருக்கலாம். முன்னதோடு சேர்த்துப் பேசியிருப்பதன் காரணம், தனியே பேசினால் வரவிருக்கும் பிரச்சினைகளை எதிர்கொள்ள அவருக்கு தைரியம் இல்லாமை. சேர்த்துப் பேசும்போது இரண்டாவது விஷயத்தைக் கண்டிப்பவர்களை
ஈழத்தமிழினத்தவர்களுக்கு எதிரானவர்கள் என்று முத்திரை குத்தி தப்பித்துக் கொள்ளலாம்.

Unknown said...

கூவத்தின் சத்தம் காதுக்கு இனிமையாக இருக்கிறது ஆனால் அது கேட்க வேண்டிய இடத்துக்கு கேட்கவேண்டும். அட கூவம் என்னைத்தான் சொன்னாரு ஆனா அது வெறும் சத்தம்தான இரண்டு பக்க காதிலும் கேட்கும்

மனதின் ஓசை said...

//இது ரஜினி மீதான காழ்ப்புணர்வு அல்ல //

உங்கள் தலைப்பும் பிண்ணூட்டங்களில் வார்த்தை பிரயோகங்களும் இதனை அனைவருக்கும் தெளிவாக தெரிவிக்கின்றன. ஏன்... இதற்கு அடுத்த வரியிலேயே

//அவரின் முட்டாள்தனமான கொள்கைகளை தூக்கிப் பிடிக்கும் ரசிகர்களை கண்டு வந்த கோபம்//

தெரிகிறது...பாருங்கள்.


//தனிமனித தாக்குதல்களை கண்டிக்க எனக்கு எத்தனை உரிமை உண்டோ அதே அளவு தனிமனித வழிபாட்டையும் கேள்விக்குள்ளாக்க வேண்டிய சமூக பொறுப்பும் பதிவருக்கு உண்டு.//
உங்கள் சமூகப்பொறுப்பு கண்டு மெய் சிலிர்க்கிறது.. பலே பலே..

//ஈழத்தமிழர் பிரச்சனையில் இருவரும் வாய்மூடி மவுனமாய் இருப்பதாக// ஆனால், கமல் மேல் எந்த விதமான முட்டாள் பட்டமோ அர்ச்சனையோ இல்லையே ஏன்?

//தங்கர் பச்சான் மன்னிப்பு கேட்கவேண்டும் எனச் சொல்வது முட்டாள்தனமா இல்லையா//
மன்னிப்பு கெட்க சொன்னது அவர் பொதுவாக சொல்லாமல் ரஜினியை குறிப்பிட்டு தாக்கியதுதான். இதனை பல முறை இங்கே சொல்லி விட்டார்கள்.. (அது மட்டுமின்றி
இவர் யார் அடுத்தவரை குற்றம் சொல்ல.. திடீர் என இவருக்கு சமூக பொறுப்பு வந்து விட்டதாக காட்டிக் கொள்ள எதற்காக ரஜினி பெயரை இழுக்கிறார்...)

//இதில விளம்பரம் தேட என்ன இருக்கிறது.//
இதனை படிக்கும் அனைவருக்கும் தெரியும்... இருக்கிறதா இல்லையா என..

தங்கர் பற்றிய உங்கள் கருத்து--- மேலும் சொல்ல எதுவும் இல்லை..
அழகி படம் எடுத்து விட்டு தன்னை தவிர வேறு யாருக்கும் தரமான படம் எடுக்க தெரியவில்லை என கூறிய ஆகங்காரம் பிடித்த மனிதர் தானே அவர்..

//அவர் ஒரு நடிகர் மட்டும் எனும் நீங்கள் முன்பு அவர் அறிக்கை மேல் அறிக்கை விட்ட போது என்ன செய்தீர்கள் ஆகா தலிவர் அரசியலுக்கு வரபோறார் நமக்கொரு கவுன்சிலர் சீட்டு நிச்சயம் என கணவுகண்டுடிருந்தீர்களா?//

அவர் அரசியலுக்கு வருவதும் வராததும் அவர் விருப்பம்...அப்படியே அவரை நம்பி காத்திருந்தாலும், பாதிக்கப்பட்டதாக நிங்கள் சொல்வது அவர் ரசிகர்கள்தானே?உங்களுக்கு ஏன் இந்த நீலிக்கண்ணீர்?
//இப்பதிவில் ரஜினியை எந்த இடத்திலும் குறைசொல்ல வில்லை //
இதுதாங்க சூப்பர்.. எப்படிங்க இப்படியெல்லாம்? மனசாட்சின்னு ஒன்னு இருக்குதா உங்களுக்கு?

//தங்கர்பச்சானை மன்னிப்பு கேட்கவேணும் என தீர்மாணம் நிறைவேற்றிய ரசிகர்களின் முடிவின் மீது கோபம் வந்ததாலேயே ஈழத் தமிழர் நிலையில் இவர்களின் நிலை இதுதானா எனக் கேள்வி எழுப்பி இருந்தேன்? //

அப்படியா? மன்னிப்பு கேட்க சொன்னதால தான் கோவம் வந்து இந்த பதிவா?

//ஒருவேளை தங்கர் பச்சானை போல ரஜினியை போல என் எழுத்தின் ஸ்டைல் காரணமாக அது உங்களுக்கு வருத்தம் தெரிவிக்காத தொனியை தந்திருக்கலாம்.//

இப்படியெல்லாம் கூட சப்ப கட்டு கட்டலாமா? ம்ம்.

இனி இந்த சுய விளம்பரம்/தனி மனித காழ்ப்புணர்ச்சியை காட்ட எழுதப்பட்ட பதிவில் பதில் சொல்லப் போவது இல்லை... அடுத்தவரின் மனதை வேதனைபடுத்தி அதன் மூலம் சுகம் தேட முயலும் உங்களிடம் என்ன பேசுவது...தொடரட்டும் உங்கள் சமூகப்பணி...

Unknown said...

//இனி இந்த சுய விளம்பரம்/தனி மனித காழ்ப்புணர்ச்சியை காட்ட எழுதப்பட்ட பதிவில் பதில் சொல்லப் போவது இல்லை... அடுத்தவரின் மனதை வேதனைபடுத்தி அதன் மூலம் சுகம் தேட முயலும் உங்களிடம் என்ன பேசுவது...தொடரட்டும் உங்கள் சமூகப்பணி...//

தங்களின் ஆசியுடன் தொடர்ந்து நடக்கும் நன்றி :)

சரவணகுமார் said...

ரஜினி பண்ணுவது சரியில்லை ஆனா தப்புமில்லை

தங்கர் கோபம் சரிதான்னும் வச்சுக்கலாம்...சரியில்லைனும் வச்சுக்கலாம்

இந்த பதிவு தேவையானது ஆனா தேவையில்லை

:))))

ரஜினி பத்தி பதிவுன்னா பின்னூட்டம் எகிர வேணாமா... தரித்திரத்தில (சாரி) சரித்திரத்தில நம்ம பேரும் வரணுமுல்ல.....அதான் நாமளும் ஒண்ணு போட்டு வைக்கலாமேன்னு.. ஹீ...ஹீ

Anonymous said...

மகேந்திரனுக்கு மூளை இருக்கிறதாம்..

Unknown said...

சரவண குமார் இதுக்கு பேர்தாங்க உள்குத்துங்கறது நீங்க என்ன டாக்டரா? இல்ல கான்ஸ்டபிளா அடிக்கறது தெரியாம அடிக்கிறீங்க? :)

Unknown said...

தங்கர் பச்சான் அவர்களே எனக்கு இருப்பது எனக்குத் தெரியும் ஆனால் நான் கேட்ட கேள்விக்கு இதுவரை யாரும் பதில்சொல்லக் காணோம்யா

நாமக்கல் சிபி said...

//மகேந்திரனுக்கு மூளை இருக்கிறதாம்..

அனுப்பியவர்தங்கர்பச்சான்
//

:))
இது நல்ல காமெடி!

Unknown said...

சீரியசான விஷயத்திலியும் காமடி பன்றது நம்மாளுங்க பொழப்பாபோச்சுப்பா :)

Anonymous said...

அவங்களே விஜயகாந்த் ரசிகர்களை பாத்து பெருமூச்சு
விட்டுக்கொண்டிருக்கிறார்கள். :)
வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுகிறார் தங்கர்

கதிர் said...

உண்மையிலே ஒரு பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும்னு நினைக்கறவங்க அழைப்பை நாகரீகமா வெளியிடணும். அதை விட்டுட்டு அழைக்கும்போதே இவங்க எல்லாம் இமயமலைக்கு மசாஜ் பண்ணதான் போவாங்க மக்கள் பிரச்சினைக்கு எல்லாம் வர மாட்டாங்க என்பது போல குத்தலோட ஆரம்பிச்சா எவனும் வரமாட்டான். அரசியல்வாதிங்க கூட பழகி சற்றே குழம்பிய நிலையில இருக்கிறார் தங்கர்.
உணர்ச்சி வேகத்தில பேசினாலும் பேச்சுல நிதானம் இருக்க வேண்டும். அதை விட்டுட்டு இன்னொரு பிரச்சினைக்கு வழி செய்ற மாதிரி அறிக்கை விடுறது ஒரு நல்ல இயக்குனருக்கு அழகல்ல.

அன்புடன்
தம்பி

Anonymous said...

//உண்மையிலே ஒரு பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும்னு நினைக்கறவங்க அழைப்பை நாகரீகமா வெளியிடணும். //

தங்கருக்கும் பொருந்தும்..
மகேந்திரன்,
தங்களுக்கும் பொருந்தும்..

தலைவர் ரஜினி பேரை ஒருவாட்டி போட்டா, நூறு வாட்டி கமென்ட் வந்தே தீருது..

Nakkiran said...

பல நாட்கள் முன்னாடி த்மிழ் சினிமாவை கமெண்ட் பண்ணி சேரன் கிட்ட செமத்தியா வாங்கி கட்டிக் கொண்டார்

சில நாள் முன்னாடி நடிகைகள் விஷயத்தில மாட்டி மானம் போச்சி

கொஞ்ச நாள் முன்னாடி விஜய்காந்துக்கு எதிரா பிரச்சாரம் பண்ணி கரி பூசிக்கிட்டார்.

இப்போ ரஜினியா??? கலக்குர தங்கரு...

உன்னால மட்டும் எப்படி இப்படியெல்லாம்

Unknown said...

பாலமுருகன்(விடாக் கண்டன் ) நான் என்னமோ அவர் போட்ட பின்னூட்டத்த மறச்சது எனக்கு அசிங்கமா இருக்கும்னு நினைச்சு அதவச்சி அவர் ரொம்ப ஆதங்கப் படறார் எதுக்கு வம்பு நீங்களே படிங்க அவரின் பின்னூட்டத்த

பால முருகன் சொன்னது..... //"கடைசியாக ஒன்று இத்தனை தூரம் எழுதும் நீங்கள் அமீரகத்தில் இருந்து கொண்டு என்னசெய்கிறீர்கள் பொட்டீக்கடை சொன்னதை அதாவது தங்கர்பச்சான் தரமறுப்பதை .யிரை பிடுங்கிக்கொண்டிருந்தீர்களா?//

சக வலைப்பதிவரின் எழுத்து நாகரீகம் காற்றில் பறக்காமல் இருக்கவே அது வெளியிடப்படாமல் இருந்தது சம்மந்தப் பட்ட நபரே அதை என்னவோ புச்சா ரிலீசான படத்த பொட்டிய புடிங்கிட்டு போயிட்டாப்புல வருத்தப் பட்றார்
இப்ப சந்தோஷமா? பாலமுருகன்
அன்புடன் அமீரகப் பொடியன்
மகேந்திரன்.பெ

Santhosh said...

நாட்டுல எவ்வளவு பிரச்சனை நடந்திட்டு இருக்கு ஒரு நடிகரை இன்னொரு நடிகர் கம் இயக்குனர் திட்டிவிட்டாராம் அட போங்கப்பா எப்படியும் தமிழன் யார் சொல்லியும் திருந்தப்போறது இல்ல கொடிபுடிக்கிறவன் அவன் தலையில கால்வெச்சி அடுத்தவன் மேல வருவது கூட தெரியாம கொடி புடிச்சிடுதான் இருக்கப்போறான் கஷ்டப்படுகிறவன் கஷ்டப்பட்டுகிட்டு தான் இருக்கப்போறான்.

தி.ராஸ்கோலு said...

மகேந்திரன்,

ரசினி ரசிகர்களோட காமெடி நல்லாவே போய்க்கிட்டு இருக்கு

"என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக் காசு கொடுத்தது தமிழல்லவா?

என் உடல் பொருள் ஆவியைத் தமிழுக்கும் தமிழர்க்கும் கொடுப்பது முறையல்லவா?"

இப்படிப் பீத்துனது யாராம்?

இலங்கைத் தமிழர்கள் ஒருவேளை மேற்படி கூற்றுக்குள் வரமாட்டார்களாமா?

காவிரிப் பிரச்ச்னையில் பெங்களூர் தமிழர்கள் நிலை

வள்ளுவர் சிலை பிரச்சனை

நதியிணைப்புக்கு ப்ராமிஸ் பண்ணுன ஒரு கோடி

ஆண்டவனே காப்பத்த முடியாது டயலாக்

தெகிரிய லச்சுமி டயலாக் (நம்ம ஓ.பி தோற்றார்)

இதுக்கெல்லாம் என்ன பதில்?

சொல்வார்களா மூளைக்கு மொத்த குத்தகை எடுத்துக் கொண்ட மேற்படி ரசிகர்கள்?

Unknown said...

http://kilumathur.blogspot.com/2006/06/blog-post_16.html

Unknown said...

Mahendran neenga eduttha topic venumna controversial, ana I must apprecite for ur good blog writing on other topics, including this(Not for the contents though), keep it up and best of luck

நாகை சிவா said...

//நடத்துங்க.. சூப்பர் ஸ்டார் பேரைப் போட்டா 100 பின்னூட்டம் நிச்சயம் வரும்..//
பொன்ஸ் கூறியது உண்மையாகி விட்டது. நீங்கள் எதிர்பார்த்ததும் அது தானே!
ஆனா இருந்தாலும் நீங்க பலே கில்லாடிங்க. நாமக்கல் சிபி கண்டுக்காம அப்படியே ஒதுங்கி இருக்கிங்களே.

Unknown said...

//நாகை சிவா// பின்னூட்டம் பெறுவது மட்டுமே நோக்கம் என்றால் அதற்கு வேறு பதிவுகள் எழுத எனக்கும் தெரியும் குவாட்டர் கோவிந்தனை படித்துப் பார்க்கவும் வலைப்பூவின் நிலவரத்தை பிச்சுப் போட்டிருப்பார் அது எதுவும் உண்மை இல்லை என மறுக்கமுடியுமா உங்களால்?

//நன்றி// ஆர்.தர்மா

நாகை சிவா said...

உங்களின் குவோட்டர் கோவிந்தனின் பதிவுகளை நான் படித்து உள்ளேன். அதில் ஒரு கட்சி சார்ப்பு இருந்தாலும் நகைச்சுவையாக எடுத்துக் கொண்டு பல முறை சிரித்து உள்ளேன்.
இந்த பதிவின் தலைப்ப தாங்க பிரச்சனையே....
//ஆயில் மசாஜ் எடுக்கவும், இமய-மலைக்கும்,//
இந்த ஒரு வார்த்தை மட்டும் தங்கர் சொல்லாமல் இருந்தால் அவர் சொல்வதின் நியாயம் அனைவரையும் சென்று அடைந்து இருக்கும். அது போல நீங்களும் இந்த தலைப்பை வைக்காமல் அவர் கேட்பது நியாயம் தான் என்பது போன்ற பதிவுக்கு தலைப்பு வைத்து இருந்தால் சரி.
நீங்கள் இருவருமே தேவையே இல்லாமல் தனி மனித தாக்குதல் நடத்தியது தான் பிரச்சனயே

Anonymous said...

so guys,

do you think that if rajini or kamal speaks about this issue will this issue be solved.

Think senior leaders like kalangar, Vaiko are screaming for years to gather nothing happened.

Please guys leave the film stars as film start dont try to make them a politicians.

As far as i see thangarbaccan is like other found of popularities, when ever he fells like people forget him he try to create a new issue.

Can any body assure that the problem will be solved if rajini or kamal or any other actor talks about this stuffs.

Rajini ramki, you are correct.

Thamil said...

ரஜனி ரசிகர்களே சொல்லிக்கக்கூடாது மூளை இருக்கிறது என்று, அவர்களை பார்ப்பவன் சொல்ல வேண்டும். ரஜனிக்கே மூளை இருக்கு என்று அவரே சொல்லிக்ககூடாது இருந்தால் சந்தேகமே.

வி.சபேசன் said...

"சிவாஜி" திரைப்படத்தை புறக்கணிக்க நேரிடும்!

.....ஆகவே தேவையில்லாமல் பிரச்சனையை கிளப்புகின்ற ரசிகர்கள் மீது நடிகர் ரஜனிகாந்த் நடவடிக்கை எடுப்பது நல்லது. ரஜனி ரசிகர்களின் அர்த்தமற்ற நடவடிக்கைகள் நடிகர் ரஜனிகாந்திற்குத்தான் தீங்காக அமையும். தமிழினத்திற்காக குரல் கொடுக்கின்ற தங்கர்பச்சானுக்கு துணையாக தமிழர்கள் நிற்பார்கள். தங்கர்பச்சானுக்கு எதிராக ரஜனி ரசிகர்கள் போராட்டம் நடத்துவதையோ அல்லது அவ்வாறான ஒரு போராட்டத்தை நடிகர் ரஜனிகாந்த் கைகட்டி வேடிக்கை பார்ப்பதையோ உணர்வுள்ள தமிழர்கள் பொறுத்துக் கொள்ளவும் மாட்டார்கள்......

www.webeelam.blogspot.com
www.webeelam.com

ஜெ. ராம்கி said...

I didn't expect that this would go this much serious. I just wanted to register my condemn for your title. However, lot of blatant attack has been already made on Rajni & his fans and almost all became vain. I strongly believe that it will not be useful. I would be happy if it could be brought to an end. Thanks.

ராபின் ஹூட் said...

ரஜினியாவது கொஞ்சம் இரக்க குணத்துடன் ஏழைகளுக்கு தானம் செய்தார்.

ஆனால் சில பதர்கள் அம்மா என்று கும்பிடும் அந்த ராட்சஸி தமிழ்நாட்டை சுரண்டியதைத்தவிர வேறு ஒன்றுமே செய்ததில்லை.

மறுபடியும் பிடித்து உள்ளார போடனும்.

Unknown said...

தைரிய லட்சுமி பத்தி தப்பா பேசாதீங்க ராபின் ஹூட்

தி.ராஸ்கோலு said...

மகேந்திரன்,

நல்லா இருக்கீங்களா

சமீபத்தில் ஒரு பதிவில் 'ரஜினியை வென்றவரும் இல்லை' என்று படிக்க நேர்ந்தது. உங்களின் இந்தப் பதிவு தான் நினைவுக்கு வந்தது.

உண்மை தான். சுயநலத்தில், சந்தர்ப்பவாதத்தில், நழுவலில், காவிரிப் பிரச்னையைக் கயமைத் தனமாக பிசுபிசுக்க வைத்ததில் ரஜினியை வென்றவர் இருக்கவே முடியாது!

சாந்தி தியேட்டர்ல சிவாஜி பிலிம்ஸ் படம் ஓடுறது ரொம்பப் பெரீய்ய சாதனை, இல்லீங்களா?

Anonymous said...

யாருப்பா அது ரஜினி ரசிகர்களுக்கு மூளை இருக்கிறதாதனு கேட்டுகீனி இருகீது.

யாராவது எக்ஸ்ட்ரா வச்சிருந்தா ஒரு ஹாப் கீலோ பார்சல் பண்ணி அனுப்புபா...

Anonymous said...

மூளையிருந்தால் ஏன் இப்படி ரசிகர் மன்றம் வைத்துவிட்டு வழிகாட்டி இல்லாமல் தெருவில் நிக்கறான்? சினிமா நடிகன் என்பவன் யார்? ஒரு கோமாளி! அவனைப்போய் தலைவா வால்வா என்று பின்னால் அலைந்தால் அடுத்த வேளை சோற்றுக்கு அவன் வழிசொல்வானா? இந்த கூமுட்டைத்தனம் தமிழ்நாட்டில் மட்டும்தான். இதுதான் நம்ம திராவிட பண்பாடு!

Anonymous said...

//ரஜினி பண்ணுவது சரியில்லை ஆனா தப்புமில்லை
தங்கர் கோபம் சரிதான்னும் வச்சுக்கலாம்...சரியில்லைனும் வச்சுக்கலாம்
இந்த பதிவு தேவையானது ஆனா தேவையில்லை
:))))
ரஜினி பத்தி பதிவுன்னா பின்னூட்டம் எகிர வேணாமா... தரித்திரத்தில (சாரி) சரித்திரத்தில நம்ம பேரும் வரணுமுல்ல.....அதான் நாமளும் ஒண்ணு போட்டு வைக்கலாமேன்னு.. ஹீ...ஹ//

கட் அன்டு பேஸ்ட் பண்ணியே 100 தாண்டிட்ட....

Anonymous said...

//"ரஜினி ரசிகர்களுக்கு மூளை இருக்கிறதாம்" //

அபத்தமான தலைப்பு.
ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமே முளை இருக்கிறது. எங்கள் தலைவனைப் பத்தி ஒரு பதிவு அபத்தமாக எழுதினாலும் 1000 கமென்ட் வருவது தெரிந்தே தான் இந்த பதிவோ

வாழ்க ரஜினி தெய்வம்

ரஜினி ரசிகர்மன்றம்
பொன்அமராவதி

Unknown said...

//அபத்தமான தலைப்பு.
ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமே முளை இருக்கிறது. எங்கள் தலைவனைப் பத்தி ஒரு பதிவு அபத்தமாக எழுதினாலும் 1000 கமென்ட் வருவது தெரிந்தே தான் இந்த பதிவோ//

ஆமா சொன்னாங்க அவரு இனிமே அங்க தான் இருக்கனும்னு (மூலை) அபத்த பதிவையும் படிச்சி அதுக்கு பின்னூட்டம் போடும் உங்க வெறியை என்ன சொல்றது?

அருண்மொழி said...

ரொம்ப மூள கீதுப்பா. இத்த படி.

"கடந்த 12 வருடங்களாக ரஜினியை சந்திக்க முடியவில்லை. அகில இந்திய ரஜினி மன்ற தலைவர் சத்ய நாராயணா இதற்கு தடையாக உள்ளார். இதற்கு அவர்தான் காரணம். மேலும் தலைவர் ரஜினி சத்யநாராயணாவை மாவட்ட வாரியாக அனுப்பி மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களின் குறை அறிய அவர்களை சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால், இதுவரை ரசிகர்களை அவர் சந்திக்கவில்லை. கோவை மாவட்டத்துக்கு தொழில் ரீதியாக வந்து செல்கிறார். ரசிகர்களை சந்திப்பதில்லை. ஆகையால், நாளை (7-ந் தேதி) கோவை மாவட்டம் வரும் சத்யநாராயணாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கறுப்பு உடை அணிய உள்ளோம். மேலும், அவருக்கு கறுப்பு கொடி காட்டவும் தயங்க மாட்டோம். இந்த போராட்டத்தை கோவை மாவட்டம் மற்றும் கிளை மன்றங்களில் இருந்து நீக்கப்பட்ட ரஜினி ரசிகர்கள் மற்றும் எங்களுக்கு ஆதரவாக இருக்கின்ற ரசிகர்களும் ஒன்று சேர்ந்து நடத்த உள்ளோம்"

நல்ல ஜூப்பர் ஸ்டாரு. நல்ல ரசிக கண்மணிகள்.