Tuesday, May 29, 2012

திராவிடச் சோலை.

சோலை. திராவிட இயக்கம் பெற்றெடுத்த பிள்ளை. திராவிட இயக்கத்தின் தாக்கம் கொண்டு ஊக்கமுடன் உழைத்திட்ட பிள்ளை. அய்யா சின்னக் குத்தூசிக்குப் பிறகு நக்கீரனில் தனது இடையறா உழைப்பால் சுமமரியாதைக் கொள்கைகளை தனது பேனா முனையால் வடித்திட்ட சிற்பி. எம்ஜிஆரோடு மட்டுமல்ல கலைஞரோடும் நட்பு பாராட்டிய எழுத்தாளர். இடிப்பவை இடித்தும் எடுப்பவை எடுத்தும் எழுதிய, எடுப்பார் கைப்பிள்ளையாகா எழுத்தச்சன். காங்கிரசின் போலி முக...ங்களை, அதிமுகவின் அராசகத்தை, திமுகவின் தகிடுதத்தங்களை எந்தக் காரணம் கொண்டும் விமர்சிக்கத் தயங்கா எழுத்துப் போராளி. அவரது இழப்பு எல்லா அரசியல் விமர்சன மேதைகளுக்கும், வாசகர்களுக்கும் பேரிழப்பு. சோலை அவர்களே ஒரு முறை சொன்னது போல " இங்கே நிரந்தரமானது எதுவும் இல்லை உண்மையைப் போல, சுயமரியாதையைப் போல, எழுத்தாளனை நேசிக்கும் வாசகனைப் போல" . சோலை எழுத்தாளர் மட்டுமல்ல. நல்ல வாசகரும் கூட " உண்மையான தனித்துவம் கொண்ட அரசியலின் வாசகர்" அதனால்தான் அவர் வாசித்த நல்ல அரசியலை நமக்கு அறிமுகம் செய்தார். எனக்கு என்ன சொல்லி என்னை நான் தேற்றிக் கொள்வேன் தெரியாது. வாழ்க அவர் எழுத்துக்கள்!

No comments: