Wednesday, May 02, 2012

நான் மீண்டு(ம்) வந்த பாதை

2006 மே மாதம் நான் முதன் முதலாக இனையத்தை படிக்க மட்டுமின்றி அவற்றை பகிர்ந்து கொள்ளவும் தொடங்கிய ஆண்டு முற்றாக இரண்டு ஆண்டுகள் ப்ளாகரே கதிஎன்று கிடந்தபோது பணி நிமித்தமாக பல இடங்களுக்கு மாற்றலும் இந்தியாவில் ஒரு ஆண்டு கழித்ததும் என்று கொஞ்சமல்ல மிக நீண்டதொரு இடைவெளியே ஏற்பட்டது. ஆயினும் கடந்த ஒரு ஆண்டாக ஃபேஸ்புக் என்னும் அரக்கனின் கையில் அகப்பட்டு சீரழிந்து கொண்டிருக்கும் கோடிக்கணக்கான இளைஞர்களில் நான் மட்டும் விதிவிலக்கா என்ன அங்கேயும் தமிழ் வலைப்பதிவுகள் போலவே ஆரியம் திராவிடம் கலைஞர் ஈழம் என நித்தம் போர்க்களம்தான் என்ன பேஸ் புக்கில் இருப்பவர்கள் தனிமடலில் வந்தெல்லாம் நம் குடும்பப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வதில்லை என்பதைத் தவிற.

இடையில் நான் தமிழ் வலைப் பக்கங்களில் எழுதாத போது என்னைப் பற்றி அவதூறாக செய்திகள் வெளியிட்ட நண்பர்களின்!! பதிவுகளை சிறு புன்னகையுடன் நான் படித்துக் கொண்டிருந்ததை இங்கே தெரிவிக்க வேண்டும்..

தொடர்ந்து இயங்கிய காலங்களில் வளைகுடாவில் நண்பர்களாக இருந்த குசும்பன்,முத்துக்குமரன்,சென்ஷி,அபிஅப்பா,அய்யனார்,துபாய் ராஜா, போன்றோர் என்னோடு தற்போது முற்று முழுதாக விலகியிருப்பதன் காரணம் தொடர்பு எண்கள் தொலைக்கப் பட்டதாலா என்பதை அவர்கள்தான் தெரிவிக்க வேண்டும். மீண்டும் தொடர்புகொள்ள 00971554736076 என்ற எண்ணில் என்னை  தொடர்புகொள்ளலாம்.

சிங்கைப் பதிவர் கோவி.கண்ணன் மட்டுமே இப்போதும் எப்போதும் என்னோடு தொடர்பில் இருப்பவர். நான் ஊருக்கு போகும் போதெல்லாம் சந்திக்க முயன்று அதுவும் அவர் வீட்டு புதுமணை புகுவிழாவில் சந்தித்தேன். நான் லக்கிலுக்கையும் அங்கேதான் சந்திக்க நேர்ந்தது.

அதே சமயம் நான் கிழுமத்தூரில் விடுமுறைக்காக சென்றபோது என் தொலைபேசி எண்ணை இணையத்தில் கண்டவுடன் பாசத்தோடு தொலைபேசிய செந்தழல் ரவியும் நானும் என்ன பேசிக் கொண்டோம் என்பது எங்கள் இருவருக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம் :)

மீண்டும் வளைகுடா வாழ்க்கை. இணையத் தொடர்பில் இருந்தும் பேஸ்புக் மட்டுமே கதியெனக் கிடந்து கொஞ்சம் சோர்வடையும் நேரத்தில்தான் எனக்கும் ஒரு வலைப்பதிவு இருப்பதே நினைவுக்கு வந்து தொலைத்தது. 

தொடங்கியாகிவிட்டது அடுத்த இன்னிங்க்ஸ்.... அல்லக் கையே வருக என பின்னூட்டப் பெட்டியில் பின்னூடம் போடும் முன்பு ஒரு முக்கிய அறிவிப்பு நீங்கள் என்னை எப்படி வேண்டுமானாலும் எண்ணிக் கொள்ளுங்கள்... என் மனசாட்சிக்கு விரோதமாகவோ அல்லது அடுத்தவர் மனம் நோகும் விதமாகவோ ... அடுத்தவர் பற்றி ஆபாசம்.. அவதூறாகவோ ஒரு பதிவும் எழுதவில்லை என்பதே உண்மை.  அது என் மேல் பழிசுமத்தியவர்களுக்கும் தெரியும்.

என் சூழல் காரணமாக மட்டுமே நான் தொடர்ந்து எழுதவில்லையே தவிற. என்மேல் சுமத்தப் பட்ட அவதூறுகளுக்கு பயந்து ஒதுங்கிவிட்டதாக எண்ணியிருந்தால் சாரி பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.