
கடந்த சில நாட்களாக எனது பதிவில் அனானிமஸாக (கவனிக்கவும் இவர் அமுகவை சேர்ந்தவர் இல்லை)ஒரு பெருந்தலை தொடர்ந்து எச்சமிட்டு வந்தார். எனக்கு அந்த நடையை பார்த்ததும் கொஞ்சம் சந்தேகம். அதற்கு ஏற்றார் போல சில மசால் வடைகளை ஆங்காங்கே தூவி தொடர்ந்து எனது பதிவுகளை வெளியிட்டு வந்தேன்.
தலை கொஞ்சம் உஷாராகி இருக்கும் போல. ஒரு இரண்டு பதிவுகளை படித்துவிட்டு பின்னூட்டம் போடாமலேயே போயிருந்தார். என்ன இது சோதனை எலி சிக்கவில்லையே என கவலைப்பட்ட நேரம் மீண்டும் அதே எலி இந்த முறை சொந்த பெயரில் லாகின் செய்து ஆனால் அதர் ஆப்ஷனில் பின்னூட்டம் போட்டது. இங்கே பின்னூட்டம் போட்ட வேகத்திலேயே எல்லா பதிவுகளுக்கும் போய் எனது பதிவில் இட்ட அதே பின்னூட்டத்தை கக்கிவிட்டு "எஸ்கே"ப்பும் ஆனது.
இதில் கூத்து என்னவென்றால் அந்த மாஸ்க் போட தெரிந்த பதிவரும் அசந்தால் அடிக்கும் தனது தலைவன் போலவே திமுகவுக்கு உண்மையிலேயே எதிர்பை தெரிவிப்பதாக எண்ணி மசால் வடை வாசனைக்கு மயங்கி பொறியில் சிக்கியது. எந்த எலி வேண்டுமானாலும் எனது வலைக்கு வரலாம் ஆனால் இது என் சொந்த வலை இங்கே குப்பை போட எனக்கு மட்டுமே உரிமை அதிலும் சுத்தம் செய்யும் கடமை என்னை சேருமென்பதால்.
இப்படியிருக்க இன்னும் பெரிய தலைகள் எல்லாம் நான் பின்னூட்டம் போட்ட ஒரு பதிவில் எனக்கு எதிரான வாதங்களை அனானிமஸாக கொட்டியிருந்ததுதான் . அங்கேயே சொந்த பெயரிலும் ஒரு பின்னூட்டம் மதுவின் சூதனமான அந்த பதிவர் தெரிந்தே இதை செய்திருக்க மாட்டார் ஆனால் தெரியும். தனது வலையில் தனக்குத் தானே நூறு பின்னூட்டங்கள் போடுவதே தொழிலாக கொண்ட இன்னுமொரு வாண்டுவும் அதே வேலை பார்த்திருக்கிறது.
ஆபத்தான அனானி அதர் ஆப்ஷன்களுக்கு எதிராக போர்க்களத்தில் தோற்று புறமுதுகிட்ட பிறகு தானே அதை தனது வலைப்பூவில் திறக்க காரணம் இனிமேலும் மற்ற பதிவர்களை அல்லது மற்ற பதிவர்கள் போல் பின்னூட்டங்களை தானே போட்டுக்கொள்வது சொந்த செலவில் வாடகை வீட்டுக்கு சுன்னாம்படிக்கும் வேலை என்பதாலேயே எனவும் அந்த பதிவருக்கே நெருக்கமான ஒரு பதிவர் கூகிள் சாட்டில் கூறி எஸ்கேப்பானதாக எனக்கு நம்பிக்கையான வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் தமிழ் வெளி தற்ச்சமயம் சூடு பிடிக்கும் காரணத்தால் அங்கே எந்த ஐபி இன்ன பிற மசால் வடைகள் பொறிகள் இல்லாத காரணத்தால் தமிழ் மணத்தில் இருந்து தானாகவே வி.ஆர்.எஸ் வாங்கும் திட்டமும் பதிவருக்கு இருக்கிறதாம் ஆனால் அது கொஞ்சம் ஆரிய திட்டம். தமிழ் மணம் தரும் சேவைகள் தமிழ்வெளியில் கிடைக்கும் என்றால் அதற்கு குடிபோகும் திட்டம் உண்டாம்.
விடாது கருப்பு, நான், போலியார், வால்டர் வெற்றிவேல், கொசுபுடுங்கி, ஆதிசேஷன், எல்லாமே ஒருவரே என திரும்ப திரும்ப சொல்லும் இவர் தனது கணினியில் பேவரிட்டுகளில் எங்கள் வலைப்பூ முகவரிகளை சேர்த்து வைத்து எங்காவது பொறியில் சிக்கும் பதிவுகள் எழுதினால் என்னையும்.வால்டர் வெற்றிவேலையும் தமிழ் மணத்தில் இருந்து வெளியேற்றும் திட்டம் இருக்கிறதாம்.
அதோடு சார்பில்லாத சிங்கை பதிவர் சாட்டை சொடுக்குவதால் சந்தேகம் வந்து இனி போகும் பதிவுகளில் எங்கள் பெயரோடு அந்த ஜெனரல் நாலேட்ஜ்ஜையும் சிக்க வைக்க யோசிக்கிறாராம். இத்தனை தகவல்களையும் எனக்கு அளித்த அந்த திராவிடத்தின் மேல் கோபம் கொண்ட சிங்கரன் எங்களிடம் அந்த தகவலை சொன்னதில் காரணம் உண்டு. எல்லாம் சொந்த விஷயம் தான்.
தான் எத்தனை ஆதரவாக இருந்தும் தன்னை இன்னும் திரா"விட" எதிரியாக்க அந்த ஆப்பரேசன் சல்மா அயூப்பில் சவுக்கடி வாங்கிய பதிவரின் திட்டம் போலவே தனது பெயரில் போலி வலைப்பூ ஆரம்பிக்கும் திட்டம் இருப்பதை கண்டுகொண்டாராம். ஆனால் நீங்கள் இதற்கெல்லாம் பயப்பட வேண்டாம் என சொன்ன பிறகு கொஞ்சம் தைரியம் பெற்றார்.
எத்தனை முறை அடிவாங்கியும் அசராமல் கப்பு எனக்குத்தான் எனும் வடிவேலுவை போல் எத்தனை முறை புறமுது காட்டியும் இது போர்த்தந்திரம் போடா ஜாட்டான் எனச் சொல்லும் அந்த பதிவரை பார்த்து ஒரே ஒரு வார்த்தை
" டோண்ட் டூ திஸ் "