கடந்த சில நாட்களாக தமிழ்மணத்தில் மொக்கை, கும்மிபதிவுகளுக்கு எதிராக "தரமான பதிவர்கள் என அறியப் பட்டவர்கள்" சொல்லும் கருத்துக்கள் விவாதத்துக்கு உரிய ஒரு விஷயமாக இருந்து வருகிறது. முதலில் தரமான பதிவு என்பதற்கு அளவுகோலாக எதைச் சொல்கிறார்கள் எனச் சொல்லுங்கள். பிறகு மற்ற பதிவர்களை தரமான பதிவு எழுதச் சொல்லலாம்.
ஒரு பதிவரை இதை இப்படித்தான் எழுதவேண்டும் என சொல்ல எந்த பதிவருக்கும் உரிமை இருப்பதாக நான் கருதவில்லை. என்னையும் இப்படித்தான் இதை இவை பற்றித்தான் எழுத வேண்டும் எனச் சொல்வதற்கு யாருக்கும் உரிமை இருப்பதாக நான் கருதவில்லை. அப்படிச் சொல்வது கூட நான் நம்பும் கருத்துரிமையை நீங்கள் மீறுவதாகத்தான் கருதுவேன்.
கும்மிப் பதிவுகள் மொக்கைப் பதிவுகள் எனத் தரம் பிரிக்க இங்கே யாருக்கு அதிகாரம் இருக்கிறது?. நடுநிலையாக எழுதுங்கள் எனச் சொல்பவர்களுக்கும் இது பொருந்தும். நடுநிலை என எதைச் சொல்கிறார்கள்?. "தினகரன் கருத்துக் கணிப்பும் 3 பேர் மரணமுற்ற விஷயத்தையும் நடுநிலையாக எப்படி எழுத முடியும்?" பத்திரிகை கணிப்பும் சரிதான் 3 பேர் அதனால் இறந்ததும் சரிதான் என்றா?.
இங்கே நடுநிலை, தரம் என்ற எதுவும் கண்ணுக்கு தெரியவில்லை. உங்கள் கண்ணுக்கு தரமான பதிவாக தெரியும் பல பதிவுகளை அதிகம் பேர் படிப்பதில்லை ஏன்பது உங்களுக்கு தெரியுமா? அற்புதமான எழுத்துக்கள் படைக்கும் பதிவர்களை ஊக்குவிக்கும் முகமாக நாம் என்ன செய்துவிடோம். மிஞ்சிப் போனால் ஒரு பின்னூட்டம்.?
ஆனால் கும்மிப் பதிவுகளை கூட்டமாகப் போய் கும்மி எடுக்கிறோம் ஏன். எல்லாம் ஒரு சந்தோஷத்துக்குத்தான். வலையில் எழுதிக் கிழிப்பதால் எல்லாம் இந்தச் சமூகம் திருந்திவிடும் என நீங்கள் எண்ணினால் அது உங்கள் கருத்துச் சுதந்திரம். நான் எழுதுவதால் எனது பதிவுகளை படித்து ஒரு தனி மனிதனிடத்திலாவது எனது எண்ணங்களின் பாதிப்பை , அது குறித்தான ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்றால் அதுவே எனது வெற்றி
என்பதாய் கருதுகிறேன் நான்.
உங்களை கும்மிப் பதிவுக்கு வாங்கள் எங்களோடு கும்மியடியுங்கள் எனச் சொல்ல எனக்கு எப்படி எந்த உரிமையும் இல்லையோ அதே போல இப்படி எழுது இதைப் பற்றி எழுது எனச் சொல்லவும் உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை.
ஒரு பதிவர் தொடர்ந்து மொக்கை போடுகிறார் (என்னையே எடுத்துக் கொள்ளுங்கள் அனல் பறக்கும் விவாதங்களுக்காக எனது பதிவுகள் எழுதப் பட்ட போது யாரும் விவாதத்துக்கு வந்ததாய் தெரியவில்லை விதிவிலக்கு ரஜினிகாந்த் பற்றிய பதிவுகள்" உடனே நாலு பதிவுக்களுக்கு லிங்க் கொடுத்து இங்கெல்லாம் விவாதம் நடக்கிறது பார் என சொல்லுபவரா நீங்கள் அந்த குறிப்பிட்ட பதிவுகளை தொடர்ந்து வாசித்துப் பாருங்கள்.
குறிப்பிட்ட நாலு பேர் மட்டும் தொடர்ந்து பின்னூட்டி விவாதம் நடந்துகொண்டிருக்கும் இப்படிச் செய்வதை விட யாகூ கான்பரன்ஸில் பேசிக்கொள்ளலாம்.
இன்னும் என்னைப் போல் பல பதிவுகளை படித்தும் விவாதம் எதிலும் பங்குபெறாமல் ஒர்துங்கி நின்று வேடிக்கை மட்டும் பார்க்கும் பதிவர்கள் எழுதும் பதிவுகளில் எக்காரணம் கொண்டும் பின்னூட்டக் கூடாது எனக் கொள்கை வைத்திருக்கும் அறிவுஜீவிப் பதிவர்களே. முதலில் தரமான பதிவு என்றால் என்ன என்று ஒரு விளக்கம் கொடுங்கள்.





எங்களாலும் செந்தழலை விட நல்ல பிகர்களை வைத்து போட்டோ பிடிக முடியும் என்ற போதிலும் கொரிய, தாய்லாந்து, டுனீசிய பிகர்களோ ஏன் நம் பக்கத்து ஊர் கருவாச்ச்சி காவிய கதாநாயகிகளோ ஒத்துக் கொள்ளாத காரணத்தாலும், (கொடுத்து வைச்ச ரவிக்கு ஒரு கண்ணடிப்போடு எனக்கு கிடைச்ச சப்ஜெக்டுகளை வைத்து எனது புகைப்பட ஆல்பத்தை காட்சிக்கு வைக்கிறேன் . பாத்துடுவோம் நானா இல்லை ரவியொட தாய்லாந்து பிகரான்னு 





