Thursday, June 14, 2007

ரஜினி ரசிகர்களுக்கு வேலை (கவனிக்க மூளை இல்லை) இருக்கிறதா?


இந்த பதிவு எழுதுவதற்கு முன்னாலேயே பலரும் சூப்பர் ஸ்டாரை சூப்புற ஸ்டாராக எண்ணி கிழித்து கடித்துக் குதறி போட்டிருக்கும் வேளை சிவாஜி திரைப்படம் வெளியாகிறது. பத்தாண்டு காலமாய் கடைசிப் படம் கடைசிப் படம் எனச் சொல்லி ரசிக கண்மணியின் பாக்கட்டை காலி செய்து பக்கெட் பக்கெட்டாய் பாக்கெட் பாலாபிசேகம் செய்யப் படும் ரஜினி குறித்தல்ல இந்த பதிவு. ஆனால் எங்கள் தலைவனைப் பற்றி எழுத உனக்கு என்ன அருகதை இருக்கு பிரியாணி குஞ்சே என ஏகவசனத்தில் விளித்தபடி பின்னூட்டம் போடும் ரசிகனாய் இருந்தால் இப் பதிவு உங்களுக்கு சமர்ப்பணம்.

எந்த படத்துக்கும் இல்லாத எதிர் பார்ப்பு இந்தப் படத்துக்கு இருக்கிறது இருக்கிரது எனச் சொல்லியே இருபது வருடமாய் வந்த மாயை பாபா எனும் பஞ்சரால் ஊத்திக் கொண்டது. பஞ்சரான பாபாவை பாமக தூக்கியதால் படுத்துவிட்டதாக ரசிக சீக்காளிகள் இன்னும் ஒப்பாறி வைத்தப்படி இருக்கும் நிலையில் சிவாஜிக்கு ஏவிஎம்மை விட ஊடகங்களின் விளம்பரம் சுனாமியையே ஏற்படுத்திவிட்டு இருக்கிறது. ரஜினி வெளிக்குப் போனால் கூட வின்வெளிக்கு போனது போல் பில்டப் கொடுக்கும் விசிலடிச்சான் குஞ்சுகளை என்ன செய்ய ?

பேரனோடு கொஞ்சினால் முதல் பக்கம் மருகனோடு பேசினால் கவ்ர்ஸ்டோரி என அந்த படம் பூஜை போட்டு பொட்டியை தூக்கியது முதல் பொட்டியை திறந்து திரைக்கு வரும் வரை எல்லாவற்றையும் செய்தியாக்கியது.
அவர்களே எடுத்த புகைப் படங்களை இணையத்தில் வெளியிட்டு அலப்பரை செய்து ஏற்கனெவே எல்லா சுரனைகளையும் தொலைத்த ரசிக குஞ்சுகளுக்கு வயோரிஸம் என்னவென்று சொல்லித் தர ஆரம்பித்த படம் சிவாஜி. பாடல்களை இணையத்தில் வெளியிட்டு உலக வரலாற்றிலேயே திருட்டு
ஆடியோ ரிலீஸ் பெருமை பெற்றது.

ஆனால் இந்த செய்திகள் எல்லாம் பெற்ற அளவுக்கு கூட அந்த படத்தின் தொழில் நுட்ப கலைஞர் ஒருவர் மர்ம மரணம் நிகழ்ந்தது குறித்து கவலை கொண்டதாக தெரிய வில்லை.
ஆரம்ப காலம் தொட்டே அபத்தக் களஞ்சியத்தின் மொத்த உருவமாய் வலம் வந்த ரஜினியின் ரசிகர்கள் அடிக்கும் கூத்துக்கு எந்த ரசிகனும் ஈடாக முடியாது. பாபா பனியன் சிவாஜி கண்ணாடி ரஜினி 25 க்கு ப்ராண்டட் ப்ராடக்டுகள் என வியாபார பட்டையை கிளப்பி ரசிகன் வயிற்றில் பாலை வார்த்த சூப்பர் ஸ்டார்ருக்கு ரசிகன் தரும் பரிசு பல கோடிகளில் வெற்றி. வசூல் சாதனைகள், வயிற்றில் ஈரத் துண்டு.

தூத்துக் குடியில் பிரம்மாண்ட டிஜிட்டல் பேனர்கள், 250 பிட் போஸ்டர் குதிரை வண்டியில் படப் பெட்டி வர ஏற்பாடு முதல் டிக்கட்டுக்கு மோதிரம் கடைசி டிக்கட்டுக்கு கோவணம்.
25ம் நாளில் விழா 50ல் விழா 100ல் விழா இப்பொழுதே ஆரம்பித்து விட்டது ஆட்டம். அதை நோக்கி இருக்கிறது கடைந்லை ரசிகணின் ஓட்டம் காலை உணவுக்கும் காப்பி டீக்கும் காசிருக்கோ இல்லையோ நாளை காலைக் காட்ட்சிக்கு டிக்கட் கிடைத்தால் கொட்டாம் பட்டியின் கூறைக் கொட்டாயில் கூட கூட்டத் தோடு படம் பார்க்க ரெடி கோடி ரூபாய் கொடுப்பேன் எனச் சொல்லும் ரசிக வெறியனை என்ன செய்ய?

கிட்னியை விற்று கிரிக்கெட் பார்ப்பவனுக்கும், அம்மாவுக்காக தீக்குளிப்பவனுக்கும் அழகிரிக்காக வன்முறை செய்பவனுக்கும் என்ன வித்தியாசம்?
பாபா படம் ஊத்திக் கொண்டதால் நஷ்டப் பட்ட கோடீஸ்வர பட முதலைகளுக்கு கோடிக் கணக்கில் தூக்கிக் கொடுத்து அவர்களின் பஞ்சம் போக்கிய ரஜினி என்றாவது தன்னை இந்த நிலைக்கு உயர்த்திய கடைசி பெஞ்ச் ரசிகனின் காயங்களுக்கு ஒத்தடமாய் இருந்த துண்டா?
காவிரியில் இரட்டை வேடம் கண்ணசைத்தால் கட்சி ரெடி என கோவன ஆண்டிகளை கோவனத்துடனே வைத்திருக்க ரஜினி எப்போதோ தயாராகிவிடார் ஆனால் பாவம் அது தெரியா ரசிகன் தமிழகத்தில் எதிர்காலம் இன்னும் தங்கள் தங்கத் தலைவன் கையில் இருப்பதாக பகலில் மல்லாக்கப் படுத்து மனசுக்குள் குட்டி ராசாங்கமே நடத்துகிறான்.
தமிழ் சரியாக பேசக் கூடத் தெரியாத ரஜினியின் முகத்தை ரூபாய் நோட்டில் அச்சடித்து இந்திய இறையான்மையின் முகத்தில் உச்சகட்ட சாணியும் அடித்து வைத்திருக்கிரார்கள் திருச்சி ரசிகர்கள்.

மண்சோறு சாப்பிட்டு மொட்டையடித்து வேண்டுதலுக்கு தயாராகிறான் ரசிகன் . வெட்டவேண்டியது தான் பாக்கி

அடுத்த நாள் காட்சியிலாவது ரஜினிகாந்த் முகத்தில் சில்லரைக் காசுகளை வீசி திரை அதிர வைக்க துட்டுக்களை எண்ணிக் கொண்டிருக்கும் ரசிகனுக்கு இன்னும் போகவேண்டிய தூரம் அதிகம் இருபது தெரியவில்லை. கண்ணில் மின்னும் கனவுகளோடு காந்த் நடிகர்களின் கட் அவுட் களுக்கு கஞ்சி குடித்துவிட்டு மலர்மாலை போட்டு மகிழ்ச்சிப் படுத்துகிறான் ரசிகன். கூட்டம் முண்டியடித்து உள்ளே போகும் முன் தானும் உள்ளே போகும் ஆவலில் எட்டிப் போடுகிறான் நடை.

அந்த ரசிகனிடம் சொல்லுங்கள் போகும் போது சட்டையோடு போகச் சொல்லி. இல்லாவிட்டால் கிழித்துக் கொள்ள எதுவும் இருக்காது.

மேலும் படிக்க...





83 comments:

நாமக்கல் சிபி said...

என்னடா இது? குழுமத்தூர் எக்ஸ்பிரஸ் இன்னும் கெளம்புளையேன்னு பார்த்தேன்!

நடத்துங்க!

//ரஜினி குறித்தல்ல இந்த பதிவு//

சரிதான்!

Anonymous said...

இந்த அறிவிலிகள் ஏன்ன சொன்னாலும் திருந்தாது

Anonymous said...

இந்த அறிவிலிகள் ஏன்ன சொன்னாலும் திருந்தாது

K said...

இந்த அறிவிலிகள் ஏன்ன சொன்னாலும் திருந்தாது

Anonymous said...

இந்த அறிவிலிகள் ஏன்ன சொன்னாலும் திருந்தாது

K said...

இந்த அறிவிலிகள் ஏன்ன சொன்னாலும் திருந்தாது

நாமக்கல் சிபி said...

ரஜினி அல்லது ரஜினி ரசிகர் குறித்தான ஆராய்ச்சிகளை தீர அலசி ஆராய்ந்து குற்றம் கண்டுபிடித்து கும்மி அடிக்கப் பதிவுகளைப் போட்டது போக மீதி நேரத்தில் செய்ய பிறருக்கும் வேலைகள் இருப்பது போல,

கட் அவுட் வைத்து, பாலாபிஷேகம் செய்து, படத்தைப் பார்த்து கைதட்டி, விசிலடித்து வெளியே வந்த பிறகு செய்வதற்கு எங்களுக்கும் வேலைகள் உண்டு!

அந்த வேலையைப் பார்க்கப் போகாமல் சும்மா உங்களோட உக்காந்து கும்மியடிக்க(சண்டை போட) எங்களுக்கு நேரம்தான் இருக்காது!

Unknown said...

வாங்க சிபி நல்லா இருக்கீங்களா?

நம்மள மாதிரி ப்ளாக்ல எழுதறவங்க் பத்தினதில்லை இந்த பதிவு காலேல எந்திரிச்சா கஞ்சிக்கு காசில்லாம இருக்கிற கடேசி டிக்கட் கோவணாடிக்கும் சேத்துதான்

நாமக்கல் சிபி said...

//வாங்க சிபி நல்லா இருக்கீங்களா?//

ரொம்ப நல்லா இருக்கேன். சந்தோஷமாகவும் இருக்கேன்!

பின்னே! நாளைக்கு விஷேஸம்ல!

நாமக்கல் சிபி said...

//இந்த பதிவு காலேல எந்திரிச்சா கஞ்சிக்கு காசில்லாம இருக்கிற கடேசி டிக்கட் கோவணாடிக்கும் சேத்துதான் //

அதே கோவணாண்டிகள்தான் மீதி நாள்ள என்ன செய்யுறான் பாருங்க!

வாரச் சம்பளத்தை வாங்கினவுடன் நேரா வீட்டுக்குப் போறானா? இல்லை டாஸ்மார்க்குக்குப் போறானா?

நல்லா குடிச்சிட்டு மீதி இருக்குறதைத்தான்(!?) வீட்டுக்குக் கொண்டு போறான்!

Unknown said...

//ரஜினி வெளிக்குப் போனால் கூட வின்வெளிக்கு போனது போல் பில்டப் கொடுக்கும் விசிலடிச்சான் குஞ்சுகளை என்ன செய்ய ?//

:))))

Unknown said...

//நல்லா குடிச்சிட்டு மீதி இருக்குறதைத்தான்(!?) வீட்டுக்குக் கொண்டு போறான்! //

இத் மேட்டர் தான் ஆனா அந்த மீதிய கூட வீட்ல குடுக்காம ரஜினி போஸ்டருக்கு பாலாபிசேகம் பன்ற பக்தன பத்தி என்ன சொல்றீங்க

அசுரன் said...

நல்ல விறு விறு தோணியில் எழுதியிருக்கிறீர்கள். நாமக்கல் சிபிக்கு இமயமலைக்கு போகும் ரஜினி எனும் இந்தியாவின் மிக வறூமையான கோமணாண்டி பற்றித்தான் அதிக கவலை போலும்.

ரஜினி ரசிகர்கள் ரசிகர்களாய், மடந்தைகளாய் போதையில் இருக்கக் காரணமான சமூகத்தைப் பற்றீ பேசத் தயாரில்லாத நாமக்கல் சிபி, அதை பயன்படுத்தி காரியவாதியாய் கோடிகளில் சுரண்டும் வேசி மகன் ரஜினியை குறை சொல்லத் துணியாத நாமக்கல் சிபி - அந்த அப்பாவி ரசிகர்களையே குறை கூறுவதில் வியப்பேதும் இல்லை,

மொத்தத்தில் குறைந்த பட்சம் நாமக்கல் சிபியின் கருத்தில் ரஜினியும், கேடு கெட்ட பட்டைச் சாரயமும் ஒரே ரகம். என்ன பட்டை சாரயத்திற்க்கு சிந்திக்க தெரியாது. ரஜினிக்கு சிந்திக்க தெரியும். அதனால் அவனுக்கு எங்களது சிறப்பு அர்ச்சனைகள்.

எப்படித்தான் இந்த மாதிரி முதுகெலும்பில்லாம யோசிக்கிறாங்களோ... சூடு சொரனை, தன்மான உணர்ச்சி, மனிதாபிமானம் இப்படி எல்லவற்றையும் கழட்டி விசிவிட்டுதான் பேசுவார்கள் போல.

அசுரன்

அசுரன் said...

எப்படிப் பார்த்தாலும் ஒரு தெருவோர கழைக்கூத்தாடியின் தரத்திற்க்கு கால் தூசி கூட வரத் தகுதியில்லாத கிழட்டு நாயின் வறட்டு தத்துவ பிதற்றல்களுக்கும், வெட்டி பந்தாக்களுக்கும், வடிவேலு பாணி ரவுடி சல்ம்பல்களுக்கும் பல கோடிகள் வருமானம் என்பதையும் அந்த பணம் உழைக்கும் மக்களிடமிருந்து பிடுங்கப்படுவதே என்பதையும் எந்த வகையில் தன்மானச் சிங்கம் நாமக்கல் சிபி நியாயப்படுத்துவார்?

அவருக்கென்னே நாக்கூசாமல் எதையாவது சொல்லி நியாயப்படுத்துவார். ஏனேனில் அவர் ரசினி ரசிகன்.... :-))))

ரொம்ப கேவலமாக இருக்கிறது

அசுரன்

நாமக்கல் சிபி said...

//இத் மேட்டர் தான் ஆனா அந்த மீதிய கூட வீட்ல குடுக்காம ரஜினி போஸ்டருக்கு பாலாபிசேகம் பன்ற பக்தன பத்தி என்ன சொல்றீங்க //

ரஜினி படம் வரப்போ குடிக்கறதை விட்டுட்டு அந்த காசைதான் இதுலே செலவு பண்ணுறான்!

வருஷம் பூரா கட் அவுட்டுக்கு அபிஷேகம் பண்ணுறதில்லை!
தனக்குத்தானே தீர்த்த அபிஷேகம்தான் நடக்குது!

Anonymous said...

ரஜினி ரசிகர்கள் எல்லாமே விசிலடிச்சான்கள் என்கிற எண்ணம் சில பேருடைய "மூடிய" மனதில் இருக்கிறது.

கட்-அவுட், பாலபிஷேகம், பேனர் எல்லாம் இல்லாமல் பொது மக்களுக்கும் தன்னைச் சார்ந்தோருக்கும் இடையூறாக எதையும் செய்யாமல் அமைதியாய் பொது சேவைப் பணிகள் செய்வோர்களும் இருக்கிறார்கள்.

பொத்தாம் பொதுவாய் எல்லா ரஜினி ரசிகர்களையும் குற்றம் சாட்டாமல் மனதையும் கண்களையும் திறந்து வைத்து பாருங்கள்:
http://www.rajinifans.com/others/aboutus.asp
http://www.rajinifans.com/activities/index.asp

நாமக்கல் சிபி said...

//விசிலடிச்சான் குஞ்சுகளை //

பத்திரிக்கைகள் மற்றும் செய்தி ஊடகங்களை தவறாய் உருவகப் படுத்தும் கிழுமத்தூர் எக்ஸ்பிரஸை வன்மையாகக் கண்டிக்கிறோம்!

Anonymous said...

என்னய்யா இது! அக்கப்போரா போச்சு!

நான் சம்பாரிச்ச பணத்தை எப்படி செலவு பண்ணோணும்னு எனக்கு உரிமை இல்லையா!

அவனவன் சாப்புட்டு வர்ர கம்பேனில வேலை பாத்துப்புட்டு வர்ர காசுல அவனுக்கு புடிச்ச மாதிரி பிச்சா திங்குறான். கோக் குடிக்குறான்! அவனுக்கும் செலவும்தான். உடம்புக்கும் கெடுதல்தான்!

ஆடிக்கொரு தபா அமாசைக்கொரு தபான்னு எங்களுக்கு பிடிச்ச படம் வருது! நாங்க அதைப் பார்க்க செலவு பண்ணக் கூடாதா!

சொல்றவங்களுக்கென்ன வந்தது! திருட்டு வீடியோ கேஸட்டை வாங்கி ஜம்முன்னு ஏசி வூட்டுக்குள்ள குந்துக்கினு பார்க்குறீங்க!

எங்களுக்கு தியேட்டர்தான் வழி!

டிக்கெட் வெலைய எங்க தலைவர் மட்டுமா ஏத்துறார். சர்க்கார் சொன்ன வெலையில எந்த தியேட்டர் காரன் கொடுக்கரான் சொல்லுங்க. தலைவர் படத்துக்கு மட்டும் இல்லை! எல்லா படத்துக்கும்தான்!

30 ரூவா டிக்கெட்ல போட்டிருக்கும்! ஆனா விக்குறது 50 ரூவாய்க்குத்தான விக்குறான்!

Unknown said...

//பத்திரிக்கைகள் மற்றும் செய்தி ஊடகங்களை தவறாய் உருவகப் படுத்தும் கிழுமத்தூர் எக்ஸ்பிரஸை வன்மையாகக் கண்டிக்கிறோம்! /

ஆமா பின்னே காவிரில தன்னியில்லை இடஒதுக்கீடு இல்லை வேற எந்த சமூக சிந்தனைகளோட எந்த பத்திரிகையாவது நல்ல செய்திகளை கொடுக்குதா?
சிவாஜி ஸ்பெயில ஆடுனது மட்டும்தானே வருது?

நாமக்கல் சிபி said...

//எப்படிப் பார்த்தாலும் ஒரு தெருவோர கழைக்கூத்தாடியின் தரத்திற்க்கு கால் தூசி கூட வரத் தகுதியில்லாத கிழட்டு நாயின் வறட்டு தத்துவ பிதற்றல்களுக்கும், வெட்டி பந்தாக்களுக்கும், வடிவேலு பாணி ரவுடி சல்ம்பல்களுக்கும் பல கோடிகள் வருமானம் என்பதையும் அந்த பணம் உழைக்கும் மக்களிடமிருந்து பிடுங்கப்படுவதே என்பதையும் எந்த வகையில் தன்மானச் சிங்கம் நாமக்கல் சிபி நியாயப்படுத்துவார்?//

நல்ல கேள்விதான் அசுரன்!
வருமானம் பிடுங்கப் படுகிறதா என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்!

50 ரூவா கொடுத்தாத்தான் அரசு மருத்துவமனையிலும் நல்ல சிகிச்சை கொடுக்க முடியும்! வசதியா இருக்குற ஆட்கள் கொடுப்பாங்க! கோவணாண்டிகள் என்ன செய்வான்?

விபத்தில் செத்த பிரேதத்தை எடுத்துச் செல்லக் கூட தண்டம் கட்டிதான் எடுத்துச் செல்ல வேண்டும். கோவணாண்டியின் குடும்பத்தினர் அழுதுகொண்டே அதையும் அழுதுதான் ஆக வேண்டும்!

இதெல்லாம் கட்டாயமா செஞ்சிதான் ஆகணும்! அங்கேயே அளவுக்கதிகமா கோவணாண்டிகளின் கோவணன் பீஸ் பீஸா கிழிக்கப் படுகிறது.

ரஜினி படம் பார்த்தே ஆகணும்னோ, கட் அவுட்டுக்கு அபிஷேகம் செஞ்சாகணும்னோ எந்த கோவணாண்டியையும் கையில் உருட்டுக் கட்டையோட ஆடோவில் வந்து யாரும் அள்ளிகிட்டுப் போறதில்லை அசுரன் அவர்களே!

Anonymous said...

//சிவாஜி ஸ்பெயில ஆடுனது மட்டும்தானே வருது? //

பின்னே! வேற செய்தி போட்ட நீ காசு குடுத்து வாங்கிப் படிக்குறியா?

நாமக்கல் சிபி said...

//ரஜினி ரசிகர்கள் ரசிகர்களாய், மடந்தைகளாய் போதையில் இருக்கக் காரணமான சமூகத்தைப் பற்றீ பேசத் தயாரில்லாத நாமக்கல் சிபி//

இதைத்தானய்யா டாக்டரய்யா தமிழ்நாடு முழுக்க மதுவிலக்கு கொண்டு வரணும்னு சொல்றாரு! அது மட்டுமில்லாம தன் கட்சில இருக்குறவங்க குடிச்சா கட்சிய விட்டு நீக்கிடுவோம்னு சொல்றாரு! அந்த தில் வேற எந்த கட்சிக்காவது இருக்கா!

இந்த விஷயத்துல டாக்டர் ஐயாவுக்கு என்னோட "சபாஷ்" எப்பவுமே உண்டு!

கோவி.கண்ணன் said...

க்

கோவி.கண்ணன் said...

//ரஜினி வெளிக்குப் போனால் கூட வின்வெளிக்கு போனது போல் பில்டப் கொடுக்கும் விசிலடிச்சான் குஞ்சுகளை என்ன செய்ய ?//

நானும் போகிறேன் !
:))

நாமக்கல் சிபி said...

//நாமக்கல் சிபிக்கு இமயமலைக்கு போகும் ரஜினி எனும் இந்தியாவின் மிக வறூமையான கோமணாண்டி பற்றித்தான் அதிக கவலை போலும்//

அசுரன்,
சினிமாவுல வந்து கைய காலை ஆட்டிட்டுப் போற ஆளுங்களைப் பத்தி எனக்கென்ன கவலை! அல்லது நான் எப்ப அப்படிச் சொன்னேன்?

உண்மையா கோவணாண்டிகளைப் பத்தி கவலைப் படணும்னா,

ஐயா! ரஜினி படத்தைப் பார்க்காதீங்க!
அது உங்க உடம்புக்கு, குடும்பத்துக்கு, நாட்டுக்குக் கேடுன்னு வெளம்பரம் கொடுங்க! பிரச்சாரம் பண்ணுங்க!

டிக்கெட் கவுண்டர்ல போய் நின்னு ஒவ்வொருத்தரா கூப்பிட்டு தடுத்து நிறுத்துங்க!

வாங்குறவன் இருக்குற வரை விக்குறவனுக்குக் கொண்டாட்டம்தானே அசுரன்!

Anonymous said...

எதிர்த்தோ ஆதரித்தோ எல்லாம் சிவாஜி மயம் தான் நீங்க உட்பட
எழுத எவ்வளவோ இருக்க நீங்களும் சிவாஜி வச்சுதனா இன்னய பொழுத ஓட்டாலம்னு நெனக்கிறிங்க....

நடத்துங்க நடத்துங்க

வேற ஒன்னும் சொல்றதுக்கு இல்ல

அசுரன் said...

அப்படியே இதுக்கும் பதில் சொன்ன நால்லாருக்கும் நாமக்கல் சிபி,

//ரஜினி ரசிகர்கள் ரசிகர்களாய், மடந்தைகளாய் போதையில் இருக்கக் காரணமான சமூகத்தைப் பற்றீ பேசத் தயாரில்லாத நாமக்கல் சிபி, அதை பயன்படுத்தி காரியவாதியாய் கோடிகளில் சுரண்டும் வேசி மகன் ரஜினியை குறை சொல்லத் துணியாத நாமக்கல் சிபி - அந்த அப்பாவி ரசிகர்களையே குறை கூறுவதில் வியப்பேதும் இல்லை,

மொத்தத்தில் குறைந்த பட்சம் நாமக்கல் சிபியின் கருத்தில் ரஜினியும், கேடு கெட்ட பட்டைச் சாரயமும் ஒரே ரகம். என்ன பட்டை சாரயத்திற்க்கு சிந்திக்க தெரியாது. ரஜினிக்கு சிந்திக்க தெரியும். அதனால் அவனுக்கு எங்களது சிறப்பு அர்ச்சனைகள்.

எப்படித்தான் இந்த மாதிரி முதுகெலும்பில்லாம யோசிக்கிறாங்களோ... சூடு சொரனை, தன்மான உணர்ச்சி, மனிதாபிமானம் இப்படி எல்லவற்றையும் கழட்டி விசிவிட்டுதான் பேசுவார்கள் போல.

அசுரன்///

இதுவும் நான் சொன்னதுதான்.

அப்புறம், உழைக்கும் மக்கள சுரண்டப்படும் ஒவ்வொரு அம்சதையும் மிக காட்டமாக நான் விமர்சித்தே வருகிறேன். ஆனால் இவ்வாறு சுரண்டப்படுவதை காரணம் காட்டியே ரஜினியை நியாயப்படுத்தும் தேவை எனக்கு எழவில்லை.

அத்தனைக்கும், அடிப்படை தேவைகளுக்காக ஒரு மனிதன் சுரண்டப்படுவதையும், அப்பட்டமான கொள்ளையில் ஒருத்தனின் மனதை மயக்கி கொள்ளையடிப்பதையும் (லாட்டரி, மதுப் பழக்கம், கஞ்சா etc) ஒன்றாக ஒப்பிட்டு நியாயப்படுத்துவதோடல்லாமல், அது போன்ற போதை நிலையில் அந்த ரசிகன் இருப்பதற்க்கு காரணமான ஊடக மாமாக்களையும், உழைக்கும் மக்களின் படு மோசமான சமூக பொருளாதார சூழ்நிலையும் கண்டுகொள்ளாத கயமைத்தனத்தையும் வெட்கமின்றி விளம்பரப்படுத்துகிறீரகளே நாமக்கல் சிபி...

எனது பதிவுகளில் வந்து மக்கள் மீது பாசமுள்ளவர் போல வசனங்கள் பேசியதெல்லாம ரஜினியின் முன்னால் புஸ்வானம் ஆகிய மர்மமென்ன சிபி...

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விலை சிலரின் குடும்ப உறுப்பினர்களை கடத்தி மிரட்டி மக்கள் விரோதியாக மாற்றலாம். சிலரை கொடுமைப்படுத்தி மாற்றலாம். சிலருக்கு கோடிகளில் பணம் தேவைப்படும்... அய்யோ பாவம் சில ரஜினி ரசிகர்களுக்கு ரஜினியை திட்டினாலே போதும் மக்களை காட்டிக் கொடுக்க முன் வருகிறார்கள்.

ஏற்கன்வே ஒரு முறை ரஜினி குறித்து பதிவெழுதிய போது இது போலவே ஒரு சில தற்குறிகள் ரசிக வெறி தலைக்கேறி மக்கள் விரொதமாக உளறிக் கொட்டி அம்பலமாயினர். இப்பொழுது நீங்கள்...

உங்களது நிலை பரிதாபகரமாகவே இருக்கிறது.

அசுரன்

நாமக்கல் சிபி said...

//எதிர்த்தோ ஆதரித்தோ எல்லாம் சிவாஜி மயம் தான் நீங்க உட்பட
எழுத எவ்வளவோ இருக்க நீங்களும் சிவாஜி வச்சுதனா இன்னய பொழுத ஓட்டாலம்னு நெனக்கிறிங்க//

:))

பின்னே இவரு மட்டும் ட்ரெயினை ஓட்ட வேணாமா?

என்னங்க மகி நான் சொல்லுறது!

Anonymous said...

//நானும் போகிறேன் !
:))
//

விய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்! விய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!

(விசில்தான்! வேறென்ன)

நாமக்கல் சிபி said...

சிகரெட்டு தயாரிக்கிற கம்பெனிகள் இருக்குதுதான்! கம்பெனிய திட்டுறமா? இல்லே தம் அடிக்குறவனைத் திட்டுறமா?

சாராயக் கடைகள் அரசாங்க ஆதரவுல நடக்குது! சாராயக் கடைய திட்டுறமா இல்லே குடிகாரனைத் திட்டுறமா?

படம் எடுக்குறவன் எடுத்துகிட்டுத்தான் இருப்பான்.

இந்த விலைக்குக் கட்டுப் படியாகாதுப்பா! வேற எங்கியாவது ரிலீஸ் பண்னிக்குங்கன்னு தியேட்டர் காரன் சொல்லிட்டா எந்த டிஸ்டிப்யூட்டராவது படத்தை அதிக விலைக்கு வாங்குவானா?

30 ரூவாய்க்கு மேலதான் டிக்கெட்னா நான் அந்தப் படத்தையே பார்க்கமாட்டேன்! வேணும்னா அந்தப் படத்தை டிவில போடுறப்போ பார்த்துக்கிறேன்னு சொன்னா எந்த தியேட்டர் காரனாவது அதிக விலைல டிக்கெட் விப்பானா?

டிமாண்ட் பேஸ்டு சேல்ஸ்னா அப்படித்தான்!

வேணும்னா புது நடிகர்களை போட்டு குறைஞ்ச பட்ஜெட்ல படம் எடுங்க! 20 ரூவா டிக்கெட்டுக்கு படத்தை ஓட்டுங்க!

வேணாம்னா சொல்றோம்!

ரஜினி நடிச்சா என்ன? நடிக்காட்டி போனா என்ன?

வாரம் பூரா மூட்டைத் தூக்குற சாமானிய மக்களுக்கு மூணு மணி நேரம் பொழுது போகணும்! அவ்வளவுதான்!

மனதின் ஓசை said...

கட்சியின் தொண்டனையெல்லாம் பைத்தியக்காரன் ஆக்கி தன் குடும்ப சுயநலத்துக்காக ஆட்சி நடத்துபவர்களை பற்றி விமர்சித்து விட்டு அப்புரம் வாங்க ரஜினி ரசிகர்களை திட்ட..

இதாவது 3 வருஷத்துக்கு ஒரு தடவதான்.. அசிங்கமான ஆட்சி கூத்து காலம் முழுக்க.. இடைவெளி கூட விடாமல்.

நாமக்கல் சிபி said...

ம்ஹூம்! இந்த கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ்ல இது ஒரு கெட்ட பழக்கம்!

எங்கியாவது ஒரு ஸ்டேஷன்ல மணிக்கணக்கா நின்னு போயிடும்!

Unknown said...

//இந்த கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ்ல இது ஒரு கெட்ட பழக்கம்!

எங்கியாவது ஒரு ஸ்டேஷன்ல மணிக்கணக்கா நின்னு போயிடும்! //

சிபி பசிக்குதுங்க சாப்புட்டு வரேன் அதுக்குள்ள எக்ஸ்பிரஸ் பஞ்சர்ன்னு பதிவு போட்றாதீங்க

நாமக்கல் சிபி said...

//சிபி பசிக்குதுங்க சாப்புட்டு வரேன் அதுக்குள்ள எக்ஸ்பிரஸ் பஞ்சர்ன்னு பதிவு போட்றாதீங்க
//

என்னங்க இது! ஸ்டேஷன்ல நிறுத்திட்டு பேசஞ்சர்ஸ்கிட்ட சொல்லிட்டு போனா பரவாயில்லை!

இல்லாட்டி பேஸஞ்சர்ஸை விட்டுட்டு நீங்க மட்டும் சாப்பிட்டு வந்தா எப்படி?

:)

அசுரன் said...

//கட்சியின் தொண்டனையெல்லாம் பைத்தியக்காரன் ஆக்கி தன் குடும்ப சுயநலத்துக்காக ஆட்சி நடத்துபவர்களை பற்றி விமர்சித்து விட்டு அப்புரம் வாங்க ரஜினி ரசிகர்களை திட்ட..

இதாவது 3 வருஷத்துக்கு ஒரு தடவதான்.. அசிங்கமான ஆட்சி கூத்து காலம் முழுக்க.. இடைவெளி கூட விடாமல்.//

வாங்க்ய்யா,

இங்க இன்னொருத்தர்....

அதெப்படிய்யா... உங்க முதுகுல் இருக்குற அழுக்க மறைக்கூறதுக்காக அடுத்தவன் முதுகப் பத்தி பேசுறது வெக்கமாயில்ல?

குறைந்த ப்ட்சம் உங்க முதுகுல அழுக்கு இருக்க்றத ஒத்துக்கிட்டு அது தவறு என்று சொல்லிவிட்டு அடுத்தவன் அழுக்கைப பத்தி பேசுனா அதில ஒரு நியாயம் இருக்கும்.

நான் ஒன்னும் ஓட்டுக் கட்சிகள புனிதப்படுத்தல... இன்னும் சொன்னா இங்க தொடரந்து இந்த கட்சிகளை மிக கடுமையாக திட்டி வருபவன் நான். ஆனால் ரஜினியை பத்தி பேசுனா போதும் நீங்க எல்லாரும் உடனே வெகு மும்மரமா அவனை விட கேவலமான ஒரு சாக்கடைப் பொருள் இந்த சமூகத்தில் எஙக கிடைக்கும் அதை ரஜினி கிட்ட வைத்து எப்படியாவது ரஜினியின் இமேஜை காப்பாத்திருலாம் என்று சம்பளமில்லா கோபாசேக்களாக வலம் வரும் அவலம் சொல்லிமாளாது....

ஒரு கோட்டை சின்ன கோடாக மாற்ற கிட்டக்கயே பெரிய கோடு போடும் பழைய தந்திரத்தை ரஜினியின் புனிதம் காக்கும் இந்த வேள்வியில் நீங்கள் தன்னியல்பாக பயன்படுத்தும் பேதமை இருக்கீறதே? ரொம்பவே ஆச்சர்யமாக இருக்கிறது...

ஆப்டர் ஆல் உங்க சுயமாரியாதை என்பது ரஜினியை திட்டும் போது மட்டும்தான் தூண்டப்படுகிறது என்றால்.......

அசுரன்

அசுரன் said...

இதுல அந்த சனியன் புடிச்ச முட்டைப் பாஸ் நாதரியவே தன்னுடைய அடையாளப் படமாக போடும் கேவலம் வேறு.....

அசுரன்

நாமக்கல் சிபி said...

//எக்ஸ்பிரஸ் பஞ்சர்ன்னு பதிவு போட்றாதீங்க //

எக்ஸ்பிரஸ் பஞ்சர்னு யாராவது சொல்லுங்க!

கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ் தடம்புரண்டதுன்னு பதிவு போட்டா ஹிட் எகிறும்!

அப்புறம் உங்க ரசிகர்கள் யாராவது வந்து

"திவரை பதிவரா மட்டும் பாருங்கப்பா!
அவரு வந்து பதிவுலக வாசகர்களுக்கு நல்லது செய்வார்னு எதிர்பார்த்து ஏமாந்து போயி அப்புறம் மகேந்திரன் வாசகர்களுக்கு நேரம் இருக்கா? ன்னெல்லாம் சொல்லக் கூடாதுன்னு"சண்டை போடுவாங்க!

:)

அசுரன் said...

//சிகரெட்டு தயாரிக்கிற கம்பெனிகள் இருக்குதுதான்! கம்பெனிய திட்டுறமா? இல்லே தம் அடிக்குறவனைத் திட்டுறமா?
//

சிகரெட்ட்டு தயாரிக்கும் கம்பேனிகளத்தான் முதலில் எதிர்க்கனும்...

அப்படியில்லம மக்களை எதிர்ப்பவன் ஆளும் வர்க்க ஏஜெண்டு.



//வேணும்னா புது நடிகர்களை போட்டு குறைஞ்ச பட்ஜெட்ல படம் எடுங்க! 20 ரூவா டிக்கெட்டுக்கு படத்தை ஓட்டுங்க!//

ஏதோ நான் படம் எடுத்த நஸ்டப்பட்ட மாதிரி எனக்கு அட்வைஸ் கொடுக்கீறார் நாமக்கல்....
:-))

பொழுது போக்கு என்பது என்ன?

பொழுது போக்கு உங்களது சிந்தனையை பாதிப்பதில்லையா?

பொழுதுபோக்கு என்பதன் அளவு கோல் என்ன? இன்று பொழுதுபோக்கை சீரியசாகவும், சீரியசானதை பொழுது போக்காகவும் மக்கள் பார்க்கும் மனோபாவத்தில் ரஜினி வகையாறாக்களின் பங்கு என்ன?

ஏன் இதோ இந்த தளத்தில் எத்தனையோ நாட்டு மிக மிக முக்கியமான சீரியசான விவாதங்கள் நடந்துள்ளன். அவற்றிலில்லேல்லாம் பொழுது போக்காக பின்னூட்டமிட்டவர்தான் நாமக்கல் சிபி, மனதின் ஓசை போன்ற்வர்க> ஆனால் பொழுதுபொக்கு தனது வரம்பெல்லை மீறி சமூகத்தின் மீது ஒரு மலைப்பாம்பை போல் சுற்றி சுரண்டுவதை பேசும் பொழுதோ சீரியசாக வந்து விவாதிக்கிறார்கள்.

இங்கு பொழுதுபோக்கு அதன் வரம்பை மீறிய மர்மம் என்ன?

நாளை இதைவிட சிறந்த பொழுது போக்காக குழந்தைகளுடன் பாலியல் இன்பம் செய்யும் வியாபாரம் வந்தால். அதற்க்கு சாதகமான கருத்துக்களை இன்று போலவே ஊடகஙக்ள ஊதிப் பெருக்கி உருவாக்கினால். அது போன்றதொரு உடல் தேவையை கோரும் வகையில் உழைக்கும் மக்களின் பண்பாட்டு பொருளாதார தளங்கள் உறுதி செய்யப்பட்டால் அப்பொழுதும் இந்த சிபி, ஓசை போன்றவர்கள் நியாயப்படுத்தவே செய்வார்கள். யாரை? வேறு யார் அந்த குழந்தை பாலியல் தொழிலிலேயே சிறந்த சூப்பர் க்ரூப்பைத்தான். இதோ இங்கு நாமக்கல் சிபி வைத்துள்ள வாதங்களில் ரஜினி சார்பாக வரும் இடத்திலேல்லாம் பாலியியல் இன்ப சார்பாக மாற்றிப் பாருங்கள்... மிக பொருத்தமாக இருக்கும்.


அசுரன்

சதுர் said...

ரஜினிகாந்த் வாழ்க!ரஜினிகாந்த் வாழ்க!ரஜினிகாந்த் வாழ்க!ரஜினிகாந்த் வாழ்க!ரஜினிகாந்த் வாழ்க!ரஜினிகாந்த் வாழ்க!ரஜினிகாந்த் வாழ்க!ரஜினிகாந்த் வாழ்க!ரஜினிகாந்த் வாழ்க!ரஜினிகாந்த் வாழ்க!ரஜினிகாந்த் வாழ்க!ரஜினிகாந்த் வாழ்க!ரஜினிகாந்த் வாழ்க!ரஜினிகாந்த் வாழ்க!ரஜினிகாந்த் வாழ்க!ரஜினிகாந்த் வாழ்க!ரஜினிகாந்த் வாழ்க!ரஜினிகாந்த் வாழ்க!ரஜினிகாந்த் வாழ்க!ரஜினிகாந்த் வாழ்க!

Unknown said...

//பதிவரை பதிவரா மட்டும் பாருங்கப்பா!
அவரு வந்து பதிவுலக வாசகர்களுக்கு நல்லது செய்வார்னு எதிர்பார்த்து ஏமாந்து போயி//

சிபி இப்போதான் பாயிண்டுக்கு வந்திருக்கீங்க ஆமா அப்படித்தான் இன்னும் கொஞ்சம் ங்க்க்க்க் இழுங்க வந்துடலாம் பாயிண்டுக்கு

நாமக்கல் சிபி said...

//ஆனால் இவ்வாறு சுரண்டப்படுவதை காரணம் காட்டியே ரஜினியை நியாயப்படுத்தும் தேவை எனக்கு எழவில்லை//

ரஜினியை யார்தான் நியாயப் படுத்துகிறார்கள் இங்கே என்று புரியவில்லை!

அவரது நடிப்புக்கு அதிகமாக வாங்குகிறார் என்பது நியாயமில்லைதான்!

முதலில் இதை ஒப்புக் கொள்கிறீர்களா?

இப்ப அடுத்ததுக்கு வருவோம்!

அதே சம்பளத்துல பத்து குறைந்த சம்பளத்தில் நடிக்கக் கூடிய நடிகர்களைப் போட்டு பத்து படமாக எடுத்தால் ஒரு படத்துல வேலை வாய்ப்பு கிடைக்கும் திரைப்படத் தொழிலாளர்களை விட அதிக அளவில் வேலை வாய்ப்பு பெறுவார்கள் அல்லவா!

என்னடா! இப்படிப் பண்ணுறாங்களேன்னு ரஜினி கவலைப் பட்டு சொந்தக் காசைப் போட்டு படமெடுத்து நாமே ரிலீஸ் பண்ணலாம்னு செஞ்சா எல்லாரும் புறக்கணிச்சிடுங்க!

விருப்பம் இருக்குறவங்க மட்டும் பார்க்கட்டும்!

நியாயமான விலையில் விற்காத கடையிலயேதான் போய் பொருளை வாங்குவேன்னு சொன்னா எப்படிங்க அசுரன்?

தனியார் கடைல விலை நியாயம் இல்லைன்னுதான அரசாங்கமே நியாய விலைக் கடை திறந்தாங்க! அதே மாதிரிதான மலிவு விலை மதுவும் வந்துச்சு!

:)


இந்த விஷயத்துல ரஜினியை நியாயப் படுத்தி எனக்கென்ன லாபம்னு அசுரன் நினைக்கிறாரோ தெரியலை!

நாமக்கல் சிபி said...

//சிபி இப்போதான் பாயிண்டுக்கு வந்திருக்கீங்க ஆமா அப்படித்தான் இன்னும் கொஞ்சம் ங்க்க்க்க் இழுங்க வந்துடலாம் பாயிண்டுக்கு
//

மகி! க.க.க.போ!

நாமக்கல் சிபி said...

//இங்கு பொழுதுபோக்கு அதன் வரம்பை மீறிய மர்மம் என்ன?//

இப்பயும் பொழுத போக்கத்தானய்யா விவாதம் பண்ணிகிட்டிருக்கோம்!

இல்லேன்னா நானும், மகியும், அசுரன், மனதின் ஓசை எல்லாம் சேர்ந்து விவாதிச்சா சினிமாத் துறை சீரடைஞ்சிடப் போகுது!

Unknown said...

இந்தப் பதிவு ரசிகர்கள் என்ற தளத்தில் இருந்து மெல்ல தடம் புரண்டு ரஜினி என்பவர் நோக்கி போவதா எனக்கொரு ஐய்யப்பாடு...

சிபி கககபோவா?
அது ககாகபோ இல்லியா?

கலையை காசாக்கும் கருப்பு போலி :)

நாமக்கல் சிபி said...

ம். 40 தாண்டியாச்சு!

என்னோட ஸ்டேஷன் வந்தாச்சு!

கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ்ஸிலிருந்து இறங்கிக்குறேன்!

பை மகி!

:)

நீங்க நான் ஸ்டாப்பா ஓட்டுங்க!

எப்படியும் 2000 ஹிட் தேறும்!

நாமக்கல் சிபி said...

//அது ககாகபோ இல்லியா?//

இல்லை! அது கக்கா போ இல்லை!

அப்படித்தான் எனில் உமக்கும் விசிலடிக்க ரசிகர்கள் வருவார்கள்!

கோ.வி யாருக்கு விசிலடித்த மாதிரி!

நாமக்கல் சிபி said...

//சிகரெட்ட்டு தயாரிக்கும் கம்பேனிகளத்தான் முதலில் எதிர்க்கனும்...
//

நல்லா சொல்றீங்க அசுரன்!

வருஷா வருஷம் புகையிலை ஒழிப்பு நாள்னுதான் ஒண்ணு வருதே ஒழிய
புகையிலை ஒழிப்புச் சட்டம்னு இன்னும் ஒண்ணுமே வரலையே!

மனதின் ஓசை said...

அசுரா,
கொஞ்சம் நாகரீகமான வார்த்தைகளை உபயோகித்தால் நன்றாக இருக்கும் :-)))


ரஜினி பற்றி எனக்கும் விமர்சனங்கள் உண்டு. இன்று ஒரு நண்பருக்கு நான் எழுதிய மடலின் ஒரு பகுதி..

"ரஜினியை பற்றி எனக்கும் விமர்சனங்கள் இருக்கிறது.. ஆனால் அதனை பற்றி விவாதிக்க சரியான விவாதக்களம் அமையாததால் வெளியில் சொல்லவில்லை."

....
"ரஜினியின் பூச்சாண்டி அரசியல் எனக்கு பிடிக்கவில்லை. தனி மனிதனான ரஜினி மேல் இருந்த மதிப்பு முன் போல் இல்லை என்பது உண்மை. அதே போல் சந்திரமுகியில் பேசிய இரட்டை அர்த்த வசனங்களை கேட்டு அதிர்ச்சியும் அருவருப்பும் வருத்தமும்தான் வந்தது.. சிவாஜி பார்க்க ஆசைப்படுகிறேன்.. டிக்கெட் கிடைக்குமா தெரியவில்லை. பார்க்கலாம்

.....
ரசனைகள் பல விதம் என்பது புரியவில்லையா அல்லது புரியாத மாதிரி நடிக்கிரார்க்ளா என தெரியவில்லை.. ரஜினி ரசிகர்கள் மற்ற படங்களை ரசிக்கவில்லையா என்ன?

பதிவுகளில் ( வெளியிலும்) அரசியல் உட்பட எல்லா துறைகளிலும் நான் பார்ப்பது எல்லாம் கன்மூடித்தணமான ஆதரவும் கன்மூடித்தணமான எதிர்ப்புமே.. ஒருவனை பிடிக்க வில்லை என்றால் அவன் என்ன செய்தாலும் தவறு.. பிடித்து இருந்தால் என்ன செய்தாலும் சரி.. :-(((((
"

மேலும் என் பதிவில் இருந்து

"அக்கரையுடன் எழுதப்படும் பதிவுகள் என்பது உண்மையானால் அது சரியான விவாதக்களத்தை அமைத்துக்கொடுக்க வேண்டும். அப்படியில்லமல் ரஜினியை பற்றி தவறாக வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் ஏற்றிவிட்டு நான் அக்கரையுடன் சொல்கிறேன் என்பது சரியா?? அவ்வாறு சீண்டி விடுவதை கோழைத்தனமாகவே நான் நினைக்கிறேன்"

------

மகேந்திரன்,
என் போன பின்னூட்டத்திற்கு உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்.

உண்மைத்தமிழன் said...

அன்புள்ள அசுரன் மற்றும் மகேந்திரன் ஸார்..

மனிதர்கள் பல விதம்.. அவரவர் குணாதியசங்களும் பல விதம். அது ஒன்றுக்கொன்று பொருந்தாதவை.. உங்கள் இருவருக்கும் தெரியும்..

வலையுலகில் ஏன் அனைவருமே பெ.மகேந்திரன் ஸார் போலவும், அசுரன் ஸார் போலவும் எழுதவில்லை. எழுத முடிவதில்லை. அப்படி எழுதாத காரணத்தால் அவர்களைத் தவிர மற்ற அனைவருமே முட்டாள்கள் அல்லது அறிவாளிகள் அல்ல.. அல்லது மக்களைப் பற்றிச் சிந்திக்கத் தெரியாதவர்கள் என்று அர்த்தமா?

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயத்தில் ஆர்வம்? பெ.மகேந்திரன் ஸாருக்கு கடவுள் மறுப்பு, அசுரன் ஸாருக்கு கம்யூனியஸத்தில்.. இப்படி ஒவ்வொருவருக்கும் பல விதங்களில் மட்டுமே அதிக ஆர்வம் காணப்படுகின்றது. (கவனம்-
அனைவருமே நல்லவர்கள்தான்.)

கழைக்கூத்தாடிகள் என்பவர்கள் மக்களை மகிழ்ச்சியூட்டவே சமுதாயத்தில் தோன்றியவர்கள் என்ற உண்மை உங்களுக்கும் தெரிந்ததுதான்.. மக்களுக்கு மகிழ்ச்சி எப்போது கிடைக்கும், அல்லது வேண்டும் என்பது அவரவர் மனம் சம்பந்தப்பட்ட விஷயங்கள். அதில் தலையிட பிறரால் முடியாது. அடுத்தவர் சொல்லி இதனால் உனக்கு மகிழ்ச்சி வரும் என்று உலகில் எவராலும் ஒரு மனிதருக்கு அடையாளம் காட்டிவிட முடியாது.

ரஜினி ரசிகர்கள் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள். எப்படி தோன்றினார்கள்? எப்படி அந்த ரசிப்புத் தன்மை அவர்களுக்குள் ஏற்பட்டது என்றெல்லாம் நாம் எப்படி ஆராய்ச்சி செய்ய முடியும்? சொல்லுங்கள்.

யோசித்துப் பார்த்தீர்களானால் அந்த சில நிமிட கனவுகளுக்கு வித்திடுவதே அவர்களுடைய பெற்றோர்கள்தான். கண்ணு அங்கிளுக்கு ரஜினி ஸ்டைல் செஞ்சு காட்டு என்ற வார்த்தைய பிரயோகிக்காத வீடுகளே தமிழ்நாட்டில் இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு அதன் தாக்கம் அதிகமானது. எதனால்? சத்தியமாக யாருக்கும் தெரியாது. அதனால் விளைகின்ற சில நொடி அல்லது சில நிமிட சந்தோஷங்களை மக்கள் விரும்புகிறார்கள். அவ்வளவுதான்..

அதே போல்தான் சினிமாவும். அந்த மூணு மணி நேரம் பொழுது போகணும். அவ்வளவுதான்.. இந்த நம்பிக்கை ஜாதி, மதம் தாண்டியது என்பதுதான் உலக அளவில் சினிமாத் தொழிலுக்கு ஊற்றுக் கண்ணாக இருக்கும் விஷயங்கள்.

நீங்கள் அனைவரையும் சமூக சேவைக்கு வரச் சொல்கிறீர்கள்.. சமூகத்தை எண்ணிப் பார்க்கச் சொல்லுங்கள். எல்லா நேரமும் அடுத்தவர்களைப் பற்றிக் கவலைப்படச் சொல்கிறீர்கள். அசுரன் ஸார்.. அது நியாயமானதுதான். ஆனால் என்னுடைய தாய், தந்தை, ஆசான், பள்ளி, என் வீடு, என் தெரு, என் ஊர் என்று எங்கேயுமே மக்கள் அது போல் இல்லை.

அவரவர் கவலை அவரவருக்கு.. அப்படியேதான் அடுத்தத் தலைமுறையும் வளர்ந்து வருகிறது.. இதைத் தடுப்பதற்கு ஒரு அசுரனோ, ஒரு மகேந்திரன் மட்டுமே போதுமானதல்ல.

ஒரு சமுதாயமே முழிக்க வேண்டிய கட்டாயம். அது நிச்சயம் நடவாத காரியம் என்றே நான் நினைக்கிறேன். மக்களுக்கு பொழுது போக்கு மிகவும் அவசியம். அந்த மணி நேரத்தில் அதை அவர்கள் கொண்டாடவில்லையெனில் மனித வாழ்க்கையில் யாருக்குமே ஒரு சுவாரஸ்யம் இருக்காது. அப்படியரு சுவாரஸ்யத்தைத்தான் அவர்கள் இப்படி கொண்டாடுகிறார்கள்.

கண்டிப்பா கட் அவுட் வைப்பது, பால் அபிஷேகம், பீர் அபிஷேகம் செய்வது முட்டாள்தனம்தான். மூட நம்பிக்கைதான். யார் கேட்பது? அரசுகள் சொல்லித் தரும் பாடங்கள் என்ன? மாணவர்களுக்கு என்ன சொல்லித் தருகின்றன கல்வித் துறை.. பொதுமக்களுக்கு என்ன கற்றுத் தருகின்றன ஊடகங்கள்? பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு என்ன சொல்லித் தருகிறார்கள்? வளர்ந்த பிறகு உற்றார், உறவினர், பெற்றோர், உடன் பிறந்தோரை மறக்கக்கூடாது. கூடி வாழ்வதுதான் கோடி நன்மையைத் தரும் என்று.. இதனை அனுபவப்பூர்வமாக அவர்கள் உணர்வதற்கு முதல் ஊன்றுகோல் எது? சினிமாதானே..

வீட்டில் இருக்கவே வேண்டாம்.. போயிட்டு ராத்திரி தூங்கும்போது வந்தால் போதும்.. போ என்று சொல்லித்தான் நிறைய வீடுகளில் இளைஞர்களை அவிழ்த்து விட்டிருக்கும் மாடுகளைப் போல் அலைய விட்டிருக்கிறார்கள் பெற்றோர்கள். அவர்களுக்கு என்ன கவலை? பையனை டார்ச்சர் செய்யக்கூடாது.. அவன் வழில போய்தான் விட்டுப் பிடிக்கணும். வேறு வழியில்லை. இல்லாட்டி நம்ம மேல வெறுப்பு வந்து நம்மளை திராட்டில்ல விட்ருவான்.. இந்தப் பயம்தான்..

பயம்.. பயம்.. பயம்.. பெற்றோர்களுக்கு இருக்கின்ற இஇந்த பயம்தான் இளைஞர்களை யாராவது ஒருவரை தமது நெஞ்சில் வைத்து பூஜிக்க வைக்கிறது..

இவர்களே காலம் கடந்த பின்பு யோசித்துப் பார்த்து எவ்ளோ நாட்களை, எவ்வளவு மணி நேரங்களை முட்டாள்தனங்களாக செலவழித்துள்ளோம் என்று வருத்தப்படுவார்கள். நிச்சயம் படுவார்கள். அனுபவப்பட்டவன்தான் ஸார் திருந்துவான்.. அனுபவப்படாதவன் செதுக்காத சிற்பம் மாதிரி.. அப்படி ஒரு சமுதாயச் சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கும்போது இப்படிப்பட்ட நிகழ்வுகள் வரத்தான் செய்யும்.

அதற்காக அனைவரும் நாட்டுப்பற்று, மொழிப் பற்று, தியாக மனப்பான்மை, அறிவாளித்தனம் எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்துவிட்டதாக நினைக்காதீர்கள்.. அனைவருக்குமே இருக்கிறது.. அவரவர் அனுபவங்கள் அவற்றை வெளிப்படுத்தும்போது அவர்களும் வெளிப்படுத்துவார்கள்.

நீங்கள் இருவரும் சொல்வது போல் எப்பவுமே அவர்கள் இந்த மனப்பான்மையுடன் இருக்க அவர்கள் அசுரனோ, பெ.மகேந்திரனோ இல்ல. சாதாரண ஜீவன்கள்.. விட்டுவிடுங்கள்..

Anonymous said...

மகி,

நீங்க ஒரு பதிவு போட்டு அதுல சூடான விவாதமா ? நம்பவே முடியலைப்பா...

ரஜினியை புகழுறதா வேண்டாமா, ஆண்டவா !!! அப்படீன்னு யோசிக்க வைத்திருக்கின்றன அசுரனின் வாதங்கள்...(உங்களுடையதும் தான்)

இதுநாள்வரை ச்ச்ச்சும்மா ரஜினி மேனியாவில் ஆடிக்கொண்டிருக்கும் நன்பர்கள் கொஞ்சம் இந்த கருத்துக்களை ஒரு நிமிடம் யோசித்து பார்க்கவேண்டும்...

வலையுலகில் எழுதி இன்னாத்த நீ கிழிக்கப்போற என்பவர்களுக்கு...மாற்றத்தை நாம் இருக்கும் இடத்தில் இருந்துதானே ஆரம்பிக்கவேண்டும்...

நேற்று டி.வியில் ஒரு லூசு உளறுகிறது...அது சிவாஜி The Boss பார்க்க மும்பையில் இருந்து கிளம்பி வந்திருக்கு சென்னைக்கு...டிக்கெட் வாங்க அது கொடுத்த பணம் 1000 ரூபாய்...

இன்னோரு உண்மையையும் சொல்லிடவேண்டியது தான்...ரசிகர் மன்ற டிக்கெட் மொத்தமாக கிடைக்கும்போது ரசிகர்கள் அதை வைச்சு படம் பார்ப்பதை விடுத்து ப்ளாக்கில் விற்பது தான் அதிகம்..

இப்போது மன்றம் மூலமாக கிடைத்த டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்று மன்றத்தினர் கொஞ்சம் காசு பார்ப்பது என்னவோ உண்மை...ஆனால் சில லூசுகள் 'தலைவர்' படத்தை முதல் ஷோவில் பார்க்கவேண்டும் என்று அந்த வருமானத்தையும் இழந்து தொலையுதுகள்...

என்னைக்காவது ஒருநாள் ரசினி அரசியலுக்கு வருவார், நாமும் எம்.எல்.ஏ, எம்.பி ஆகி நாலு காசு பார்க்கலாம் என்றுதான் ஒவ்வொரு ரசிகனும் இன்றைக்கு மன்றத்தில் ஒட்டிக்கொண்டிருக்கிறானே தவிர வேறு ஒன்றும் ராக்கெட் விஞ்ஞான ஆராய்ச்சி நடத்த அல்ல...

மேலும் அவ்வப்போது வரும் தேர்தல்களில் மன்றத்த்துக்கு கொஞ்சம் பணம் வரும்...அதை நக்கிப்பிழைக்கவும் சிலர் ஒட்டிக்கொண்டிருப்பது மன்றம்...இளைஞர்களை சேர்த்து கொஞ்சம் பந்தா செய்து, டீக்கடை / பொட்டிக்கடை என்று செட்டில் ஆன ரசினி மன்ற பிரமுகர்களும் உண்டு இங்கே...

இதுக்கு மேல விஷயங்களை சொல்லக்கூடாது, மன்ற ரகசியம் ஆமாம் சொல்லிப்புட்டேன்...

Unknown said...

மனதின் ஓசை எனக்கான பதிலையும் சேர்த்தே அசுரன் அவர்கள் சொல்லிவிட்டதால் என் பதில் தேவையில்லை என்பதாக நான் கருதுகிறேன்

மனதின் ஓசை said...

அசுரன் பின்னாடி ஒளிஞ்சிக்காதீங்க மகேந்திரன்.
உங்க கருத்த சொல்லுங்க.

நீங்கள் அந்த அசிங்கமான அரசியலை ஆதரிப்பவர். எனவே அந்த பதில் உங்களுக்கு ஒத்து வராது.

Unknown said...

//நீங்க ஒரு பதிவு போட்டு அதுல சூடான விவாதமா ? நம்பவே முடியலைப்பா...
//
இந்த நக்கல்தான்யா உங்கிட்ட புடிச்ச விசயமே :)

Anonymous said...

அடப்போய்யா வெங்கு.....அவனவன் 2-3 மணிநேரத்தில் கவலையின்றி கழிக்கிறான் அது பிடிக்கலை உங்களுக்கு....நீங்க கருப்பு சட்டைய மாட்டி இருக்கிற கோவிலை/இந்துக்களை திட்டறதுக்கு அந்த 2-3 மணிநேரத்தை ஓதுக்க சொல்லுவீங்க...உங்க நண்பர் அசுரனுக்கு யாரும் நல்லா சம்பாதிச்சா பிடிக்காது...ஏங்க இப்படி சாப்ட்வேர்-சினிமாக்காரங்களை பார்த்தா எஙகோ எரியிது அந்தாளுக்கு?

Unknown said...

//ரஜினி ரசிகர்கள் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள். எப்படி தோன்றினார்கள்? எப்படி அந்த ரசிப்புத் தன்மை அவர்களுக்குள் ஏற்பட்டது என்றெல்லாம் நாம் எப்படி ஆராய்ச்சி செய்ய முடியும்? சொல்லுங்கள்.//

என் அடிப்படை வாதமே அதுதானே
ரசிகன் ஒரு கலைஞனை ரசிக்கும் இடத்தோடு முடிந்து போகவேண்டும் அவர்களுக்கு பாலாபிசேகமும் தேனாபிசேகமும் செய்யவேண்டுமா என்பதே எனது கேள்வி அதிலும் முக்கியமாக ரஜினி ரசிகர்களை சொல்ல வேண்டும். என்ன பலன் இதனால் என்றால் நான் அப்படித்தான் செய்வேன் என்பவர்களோடு என்ன செய்ய? அவன் அவன் விருப்பம் எப்படியோ இருக்கட்டும் என்றால் னீங்களும் நானும் சிபியும், அசுரனும் வலைப்பூக்களில் எதற்க்காக முக்கி முக்கி எழுத வேண்டும்?

Unknown said...

.//கட்சியின் தொண்டனையெல்லாம் பைத்தியக்காரன் ஆக்கி தன் குடும்ப சுயநலத்துக்காக ஆட்சி நடத்துபவர்களை பற்றி விமர்சித்து விட்டு அப்புரம் வாங்க ரஜினி ரசிகர்களை திட்ட..
//
நான் அசுரன் பின்னால ஒளிய வேண்டிய அவசியம் இல்லை ஆனா அவரோட பதில்தான் என்னுடைய பதிலும் அரசியல் சாக்கடையை நான் ஒன்னும் உங்கள மாதிரி கண்மூடித் தனமா எதிர்க்கவும் மாட்டேன் ஆதரிக்கவும் மாட்டேன். இப்போ ரஜினி ரசிகர்கள் பத்தினதுதான் பதிவே இதில சொன்ன கருத்துக்களுக்கு வாதம் இருந்தா சொல்லுங்க அத விட்டு இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்கன்னு சொல்றது உங்களோட விதண்டாவாதம் உண்டாக்கும் நோக்கம்தான் தெரியுது. ஏன்னா இந்த மாதிரி ரசிகனின் முட்டாள் தனங்கள் பத்தி நான் எப்பவாவதுதான் எழுதறேன் ஆனா அரசியல் பத்தி தொடர்ந்து எழுதறேன் அப்பவெல்லாம் வந்து ஒங்க வாதத்தை வைத்திருக்கலாம் ஆனா இன்னைக்கு ரசினி ரசிகனுக்கு எதிரா சிந்திக்க சொன்னா ஒடனே வந்து பின்னுட்டம் போட்டு விவாதம் பன்றீங்களே இத னெனச்சா புல்லா அரிக்குது

Anonymous said...

தலைவா,

கலக்குங்க! உனக்கு கட் அவுட் வெக்க நாங்க இருக்கோம்!

கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ் ரசிகர் மன்றம் நாளை தொடங்கப் படுகிறது!


கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ் ரசிகர் மன்றம்
சென்னை

Anonymous said...

///உங்க நண்பர் அசுரனுக்கு யாரும் நல்லா சம்பாதிச்சா பிடிக்காது...ஏங்க இப்படி சாப்ட்வேர்-சினிமாக்காரங்களை பார்த்தா எஙகோ எரியிது அந்தாளுக்கு? ////

அனானி நன்பருக்கு....

நீங்க அவரிடம் நேரடியாகவே கேட்டிருக்கலாம்...

என்னுடைய புரிதலின்படி...

ஒரு நாடு ஹெல்த்தியா இருக்குன்னா கடைநிலையில் வாழும் விளிம்பு நிலை மனிதனின் ஒரு நாளைய சம்பளமும், நாட்டின் மிக உயர் பதவியில் இருக்கும் சம்பளத்துக்கு வேலைசெய்யும் கூலியின் (தகவல் தொழில்நுட்ப கூலியாகவோ / பெப்ஸி சீ.ஈ.ஓ வாகவோ வேலைசெய்பவர்) சம்பளத்துக்கும் இடையேயான இடைவெளி குறைந்ததாக இருக்கவேண்டும்...

அது தான் ஒரு சிறப்பான சமுதாயத்துக்கு தேவை...

இங்கே அப்படியா...

ஐ.டி துறையில் நாளைக்கு மூவாயிரம் முதல் - ஐயாயிரம் வரை (மாத சம்பளம் ஒரு லட்சம் கூட க்குறைய) சம்பாதிக்கும் ஒருவர்...கட்டுமான பணித்துறையில் கூலியாக ஒரு நாளைக்கு 100 ரூபாய் சம்பளத்தில் வாழுபவர் (மாதம் மூவாயிரம் கூடக்குறைய) இருவரும் வசிப்பது ஒரே நகரத்தில்...

இருவரும் காய்கறிகள் வாங்கவேண்டும், இருவரும் வீட்டில் வாடகைக்கு இருக்கவேண்டும்...இருவரும் பொழுதுபோக்கு அம்சங்களுக்கு செல்லவேண்டும்...

தகவல் தொழில்நுட்ப கூலி Afford செய்வதை கட்டிட வேலைக்கூடி செய்யமுடியுமா ?

இந்த சமுதாய / பொருளாதார ஏற்றத்தாழ்வு தான் இன்றைக்கு சாதீய ஏற்றத்தாழ்வை விட மிக கொடுமையானது...

மாதம் பத்தாயிரம் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர் கூட இன்றைக்கு நகரின் மத்தியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்க முடியாத நிலைமை...அப்படியென்றால் கூலிக்காரனின் நிலையை எண்ணித்தான் பாருங்களேன்...

ச்ச்ச்சே...பின்னூட்டம் பதிவளவுக்கு ப்போகுதுப்பா...

இதுபோன்ற விளிம்பு நிலையில் இருப்பவனுக்கு எழும் குரலுக்கு தலைவணங்குங்கள் அனானி...

Anonymous said...

கிழுமத்தூரார் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்ய 1000 லிட்டர் ஆரோக்யா (4.5 சதவீதம்) பால்

ஆர்டர் செய்யப் பட்டுள்ளது!

கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ் ரசிகர் மன்றம்
சென்னை!

(அசுரன் இதையும் கவனிப்பாராக)

Anonymous said...

//ஒரு நாடு ஹெல்த்தியா இருக்குன்னா கடைநிலையில் வாழும் விளிம்பு நிலை மனிதனின் ஒரு நாளைய சம்பளமும், நாட்டின் மிக உயர் பதவியில் இருக்கும் சம்பளத்துக்கு வேலைசெய்யும் கூலியின் (தகவல் தொழில்நுட்ப கூலியாகவோ / பெப்ஸி சீ.ஈ.ஓ வாகவோ வேலைசெய்பவர்) சம்பளத்துக்கும் இடையேயான இடைவெளி குறைந்ததாக இருக்கவேண்டும்...
//

அதுக்கு கம்மியா வாங்குறவனுக்கு உண்டான கூலியை அதிகமாக்கணும்!

அதிகமா வாங்குறவன் கூலியை குறைச்சி இடைவெளையை குறைப்பது சரிதானா?

இல்லைன்னா அவனுக்கும் அந்த வேலையைக் கத்துக்குடுத்து அவனை அதிகமா சம்பாரிக்க வெக்கணும்!

Anonymous said...

//இதுபோன்ற விளிம்பு நிலையில் இருப்பவனுக்கு எழும் குரலுக்கு தலைவணங்குங்கள் அனானி...
//

கட்டாயமா தலைவணங்குகிறேன் ரவி!

அதுக்கு தியேட்டர்ல டிக்கெட் விலைய விட அதிகமான் விலைக்கு விக்குறாங்களே! அவங்களை என்ன செய்ய?

கவர்மெண்டுல குறைந்த பட்ச விலை நிர்ணயிக்கிறாங்க! அதுவே விளிம்பு நிலை மக்களுக்கு கட்டுப் படி ஆகாது!

வேணும்னா அதிக பட்சம் 10 ரூபா வெச்சி விக்கலாம்! உண்மையா கவலைப் படுறவங்க அதுக்கு உண்டானதை செய்யணும்!

கோவி.கண்ணன் said...

இது அசுரன் ஐயாவுக்காக,

ரஜினி ஒழிக !

இது நாமக்கல் சிபிக்காக,

ரஜினி வாழ்க !

இது நம்ம மகிக்காக,

ரஜினி ரசிகர்கள் தெளிக !
:))

Anonymous said...

ரஜினி வெளிக்குப் போனால் கூட வின்வெளிக்கு போனது போல் பில்டப் கொடுக்கும் விசிலடிச்சான் குஞ்சுகளை என்ன செய்ய
அருமை தமிழ்நாட்டில் இப்படியான கருத்துகளும் வருவது நிம்மதியழிக்கிறது
எல்லோரும் மடையர்களல்ல
ஒரு மடையனின் பின்னால் நிற்பவர்களை என்ன சொல்ல

புதுவைக்குயில் பாசறை said...

ரஜினி வெளிக்குப் போனால் கூட வின்வெளிக்கு போனது போல் பில்டப் கொடுக்கும் விசிலடிச்சான் குஞ்சுகளை என்ன செய்ய ?


பேரனோடு கொஞ்சினால் முதல் பக்கம் மருகனோடு பேசினால் கவ்ர்ஸ்டோரி என அந்த படம் பூஜை போட்டு பொட்டியை தூக்கியது முதல் பொட்டியை திறந்து திரைக்கு வரும் வரை எல்லாவற்றையும் செய்தியாக்கியது.
அவர்களே எடுத்த புகைப் படங்களை இணையத்தில் வெளியிட்டு அலப்பரை செய்து ஏற்கனெவே எல்லா சுரனைகளையும் தொலைத்த ரசிக குஞ்சுகளுக்கு வயோரிஸம் என்னவென்று சொல்லித் தர ஆரம்பித்த படம் சிவாஜி. பாடல்களை இணையத்தில் வெளியிட்டு உலக வரலாற்றிலேயே திருட்டு
ஆடியோ ரிலீஸ் பெருமை பெற்றது.

"யாரை எங்க வைப்பது என்று யாருக்கும் தெரியிலே
அண்டகாகத்திர்கும் (ரஜினி) குயிலுக்கும்(கமல்)
வேதம் புரியலே"

Anonymous said...

கட்சியின் தொண்டனையெல்லாம் பைத்தியக்காரன் ஆக்கி தன் குடும்ப சுயநலத்துக்காக ஆட்சி நடத்துபவர்களை பற்றி விமர்சித்து விட்டு அப்புறம் வாங்க ரஜினி ரசிகர்களை திட்ட..
சினிமாவாவது சில நாள் ஏமாற்று ,அரசியல் தான் இன்றய பெரிய ஏமாற்று ,இந்த மடையர் கூட்டம் திருந்தாது, ஏமாற்றுக் காரனுக்கு என்றும் கொண்டாட்டம் தான்

வவ்வால் said...

எல்லாம் எதிர்மறையாக எதாவது பதிவு போட்டா நான்கு பேர் கவனம் பெறலாம் என நினைப்பது போல்(உங்களை சொல்லவில்லை மகேந்திரன்!) ரஜினி ரசிகர்கள் பால் அபிஷேகம் ,கட் அவுட் ,தோரணம் வைத்து நாலு பேருக்கு தம்மை அடையாளம் காட்டிக்கொள்கிறார்கள் , எல்லாம் அந்த சில நேர புகழ் வெளிச்சத்திற்கு தான், அது எல்லாருக்கும் தேவைப்படுகிறது என்பது தான் உண்மை.தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு.

இது வரை உளவியல் இனிமேல் கொஞ்சம் தடாலடி செய்வோம்.

மதுக்கடைகளை மூட வேண்டும் என்று சொல்லும் ஒரு அய்யாவின் இனத்தினர் தான் அதிக அளவில் கள்ள சாராயம் காச்சுவது விற்பது என்ற தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள்.ஆதாரம் தர நான் தயார்.

அவரும் தன் இன மக்களுக்காக ஒரு பல்கலைகழகம் கட்டப்போகிறேன் என்று சொல்லி பணம் திரட்டிக்கொண்டே இருக்கிறார் அவ்வபோது வேலை நடப்பது போல் ஒரு கூட்டம் எல்லாம் நடத்துவார், மத்தியில் அமைச்சர்களை கொண்ட , மானில அரசை ஆட்டிப்பார்க்கும் வல்லமை கொண்ட அய்யாவிற்கு அனுமதி வாங்கி துவக்குவதில் என்ன சிரமம் இருக்கும். அதனை தட்டிக்கேட்பார் யார், குறைந்த பட்சம் வலைப்பதிவில் ஆவது பதிய வேணாமா , ஒரு வேலை உருட்டு கட்டையுடன் ஆட்டோவில் ஆள் வரும் என்ற அச்சம் ஆக இருக்கலாம்!

இந்த விசில் அடிச்சான் குஞ்சுகள் என்ன செய்வார்கள் என்ற தெகிரியமாகவும் இருக்கலாம்! நான் யாருடைய ரசிகனும் அல்ல இன்னும் சொல்ல போனால் கூட்டம் அதிகம் இருக்கும் திரை அரங்கிற்கு செல்ல மாட்டேன்.எல்லா படமும் பார்ப்பேன் ஆர்ப்பாட்டம் எல்லாம் ஓய்ந்த பிறகு.

(இந்த பின்னூட்டம் கூட இப்படி எல்லாம் சொன்னால் நாலு பேர் நம்மை திரும்பி பார்ப்பார்கள் என்ற சுய நலத்துடன் இடப்பட்டதே! ஒரு விளம்பர மோகம்)

குட்டிபிசாசு said...

நீங்க ப்ளோக்கில் போட்ட இந்த பதிவ எந்த கோவனாண்டி ரசிகனும் படிக்கப்போரது இல்ல! ஆனா நம்ம தமிழ்மணத்தில் எத்தனை பேர் இன்னும் டிக்கட் புக் பண்னிட்டு கன்னத்தில் கையவச்சிட்டு வுக்காந்து இருக்காங்கனுதெரியலயே! இதுக திருந்துனா போதும்! வாய்ப்பு இருக்கா?

Anonymous said...

சினிமா என்ற கற்பனை உலகம் ஒரு மாயை என்று தெரியாத அறிவிலிகளின அறியாமையை தமக்கு சாதகமாக பயன் படுத்திக்கொள்ளும் தன்மானமற்ற சுயநல மனிதர்களால்(அரசியல்,மீடியா..) இப்பொழுதுபோக்கு ஊடகம் திரித்து காட்டப்படுகிறது...

நமது மக்களின் சினிமா மோகமும் இன்ன பிற அறியாமைக் குணங்களும் இன்று இக்கொடிய கேவலமான காட்சிக்கள் ஏதுவாக அமைந்துள்ளது.

நம்மைச் சுற்றி உள்ள மக்கள் மற்றும் சமூகம் பற்றி அக்கறையின்றி வாழும் நமது மக்களின் குறுகிய மனப்பான்மையும் ஒரு காரணமாகும்.

ரசிகர்கள் என்ற போர்வையில் இவர்கள் செயும் இக்கூத்திற்கு நடிகர்கள் மறைமுகமாக அவர்களது மார்க்கட் பலத்தைக் காட்ட ஆதரவு அளிப்பதோடு தூண்டவும் செய்கிறார்கள் என்பது ரசிகர்கள் மறுக்கும் உண்மை..

திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது, அது போல ஒவ்வொரு மனிதரும் தன் சமுதாயத்திற்கு தன் சுயநலமற்ற பங்களிப்பை அக்கறையுடன் அளிக்கும் போது தான் இது போன்ற வெட்கக்கேடான காட்சிகள் எதிர் காலத்தில் மறையும்.

இது அனைத்து நடிகர்களின் ரசிகர்களுக்கும் பொருந்தும்..

எவ்வளவு சிறந்த நடிப்பாற்றல் கொண்ட நடிகராயினும் அவர் நடிப்புத் தொழில் செயும் ஒரு மனிதரே அன்றி தனிப்பிறவியோ, தெய்வப்பிறவியோ அல்ல.

Anonymous said...

//அதற்காக அனைவரும் நாட்டுப்பற்று, மொழிப் பற்று, தியாக மனப்பான்மை, அறிவாளித்தனம் எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்துவிட்டதாக நினைக்காதீர்கள்.. அனைவருக்குமே இருக்கிறது.. அவரவர் அனுபவங்கள் அவற்றை வெளிப்படுத்தும்போது அவர்களும் வெளிப்படுத்துவார்கள்.
//

உண்மைத் தமிழன் சாருக்கு ஏன் துக்ளக் பைத்தியம் என நாங்கள் தெரிந்து கொள்ளலாமா?

Anonymous said...

எப்படியோ, எல்லாரும் உருப்புடாம போனா சரி.

நன்றி.

Anonymous said...

சர்தான் விடுங்க மகி

எருமை மாட்டு மேல மழை பெய்யும்போது அது என்ன குடையா பிடிக்குது? எருமை மாடுங்க மழைல நனையுதேன்னு நீங்க ஏன் வருத்தபப்டுறீங்க?

சாத்தான்குளத்தான்

Anonymous said...

உங்களுக்கு ஏன் இந்த வயித்தெரிச்சல். நீங்கள் குவாட்டருக்கும், பிரியாணிக்கும் செய்வதை விட இது எந்த விதத்தில் குறைந்தது? மஞ்சத் துண்டாருக்கு வச்சால் கொண்டாடுவீங்க, மத்தவங்க பண்ணினா குத்துவீங்க. உங்க பகுத்தறிவுக்கு ஒரு ஜெ!!

அசுரன் said...

//விருப்பம் இருக்குறவங்க மட்டும் பார்க்கட்டும்!
//
ஜெயலலிதாவையும், கருணாநிதியையும் திரும்ப திருமப் தேர்ந்தெடுக்கும் சமூகம் தான் இது, இதோ இப்போ மீண்டும் விஜயகாந்த் என்ற கருப்புப்பண பேர்வழியின் பின்னால் அணி திரண்டு நிற்கிறார்கள்.

மக்களின் சிந்தனையை கல்வி கூடத்தில் ஆரம்பித்து எல்லா இடங்களீலும் கழிப்படை கூடமாக நாறடித்து விட்டு பிறகு அந்த காரணத்தினாலேயே அவன் கேடு கெட்ட கலாச்சாரத்தை தேர்ந்தெடுப்பதை நீங்கள் நியாயப்படுத்துவது சரியா என்று யோசிக்கவும்.

உங்க கருத்துப்படி கருணாநிதி, ஜெயலலிதா என எதையுமே விமர்சிக்கக் கூடாது. விபச்சாரம், பாலியல் வக்கிரம் என எதையுமே விமர்சிக்க கூடாது.

விருப்பம் இருக்குறவன் அத்த செஞ்சிட்டு போறான் நீ உன்னோட சோத்துப் பருக்கையை பொறுக்குற வேலைய மட்டும் பாரு என்று படு கேவலமான பிழைப்புவாத கருத்து இது.

ரஜினி என்பதால்தான் இந்தளவு தரம் தாழ்ந்து யோசிக்கிறீர்கள் என்பது எனது கருத்து.


//நியாயமான விலையில் விற்காத கடையிலயேதான் போய் பொருளை வாங்குவேன்னு சொன்னா எப்படிங்க அசுரன்? //

தன்மானம் உள்ளவன் இந்தியா பொருளாதாரத்தை அழிக்கும் பன்னாட்டு கடையில் விலை மலிவாக கிடைத்தாலும் வாங்க் மாட்டான். கதர் ஆடை உடுத்தச் சொல்லி சுதந்திரப் போராட்டத்தில் அரை கூவப்பட்ட போது எந்த முட்டா பொறுக்கியும் தரம், விலை என்று பேசிக் கொண்டிருக்கவில்லை.


அப்பூறம் முக்கியமாக ரஜினி விக்கிற சரக்கே ஒரு சாக்கடை சரக்கு அதை நியாயமா வித்தா வாங்கலாமா? இதுல அநியாயமா விக்கீறத நாங்க பேசினதுக்கே இந்த பாடு....

ரஜின் என்ன விக்கிறார்:
#1) ஸ்ரேயாவின் பாதி முதுகும், விட்டால் வேறு சில 'மு' வும் முன்னால் தெரியும் அளவு படு மோசமான ஆடைகளை அணிந்து இந்த கிழ்ட்டு பன்றி சரசம் செய்கிறது.

ஏன் உங்க வீட்டு பெண்களை இபப்டி ஆட விட்டு அதனை ஒரு சரக்கு தானே என்று விருப்பப்பட்டவன் பார்த்துக் கொள்ளட்டும் என்று விட்டு விடலாமா? சொல்லுங்க தன்மானமுள்ளவர்களே?


#2) தன்னோட படப் பெட்டிக்கு ஆப்பு என்றவுடன் பாபாவுக்கு அது சமூக பிரச்சனையாக தெரிந்து செயல்பட்டான் இந்த் காரியவாதி. ஆனால் சமூக பிரச்சனைகள் என்று வரும் பொழுது அவர் மறைந்த இடம் தெரியாது. அதுவும் தனது படங்களீல் 'உன்ன முதல்ல பாரு' என்று கேவலமான பிழைப்புவாதம் பேசுபவன், தனது ரசிகனை மட்டும் என்னோட படப் பெட்டிய முதல்ல பாரு என்கிறார்.

ஆம், தலித்துக்கள்அடிமையாயிருந்ததில் இந்த சமூகத்துக்கும், வரலாற்று ரீதியாக உருவான கலாச்சார பண்பாட்டு ஒடுக்குமுறை கருவிகளுக்கு அதனை உறுதிப்படுத்திய ஆதிக்க சாதி வெறியர்களுக்கும் என்ன பங்கோ அதே பங்குதான் ரசிகனை சுயமரியாதையற்ற போதை பேர்வழியாக வைத்திருபப்தில் ரஜினிக்கும் உள்ளது.

ஆதிக்க சாதி வெறியர்களை விமர்சிக்கக் கூடாது எனில் ரஜினியை விமரிக்கக் கூடாது, தலித்துக்களை முதல் குற்றவாளி ஆக்கலாம் எனில், ரசிகனை முதல் குற்றவாளி ஆக்கலாம்.(தாழ்த்தப்பட்டவர்களையும், ரஜினி ரசிகனையும் ஒன்று என்ற அர்த்தத்தில் இந்த ஓப்புமையை செய்வதாக திரிக்க முயல்பவர்களுக்கு எச்சரிக்கை. பிறகு ரொம்ப அவமானப்பட வேண்டியிருக்கும். இங்கு அந்த அர்த்ததில் எழுதவில்லை).


//இந்த விஷயத்துல ரஜினியை நியாயப் படுத்தி எனக்கென்ன லாபம்னு அசுரன் நினைக்கிறாரோ தெரியலை!//

ரஜ்னி ஒரு சமூக விரோதி என்பது இவ்வளவு அப்பட்டமாக இருக்கும் பொழுதும் அவனுக்கு நீங்கள் வக்காலத்து வாங்குவது ஏன் என்றுதான் எனக்கும் புரியவில்லை.


//வருஷா வருஷம் புகையிலை ஒழிப்பு நாள்னுதான் ஒண்ணு வருதே ஒழிய
புகையிலை ஒழிப்புச் சட்டம்னு இன்னும் ஒண்ணுமே வரலையே!//

எப்படி வரும்? ஆட்சி செய்றது புகைப் பிடிக்கும் உழைக்கும் வர்க்கம் இல்லையே? சிகெ஦ரெட் தயாரிக்கும் கம்பேனி வர்க்கத்தார்தானே அட்சி செய்கிறார்கள்.

ரஜினியிடம் ஏதோ பாசிட்டிவ்வாக இருப்பது போல மனதின் ஓசை சொல்கிறார். அது என்ன என்று தெளிவுபடுத்தினால் சிறப்பாக இருக்கும் எனது கருத்து அவன் ஒரு நீயுசென்ஸ் ஒழித்துக் கட்டப் பட வேண்டிய ஒரு சாக்கடை கசடு என்பதுதான். அதனைத்தான் பின்னூட்டங்களிலும் கட்டுரைகளிலும் சொல்லியுள்ளேன்.

ரஜினியிடம் சீர்தூக்கி பார்க்க என்னவுள்ளது என்று அவருக்காக் இங்கு பேசிய யாரும் வைக்கவில்லை. மாறாக ரஜினியை விட படு கேவலமான ஏதாவது ஒன்றை வைத்து ரஜினியை சீர்துக்கும் முயற்சியே நடந்து வருகிறது.

இதில் தவறாக நாங்கள் குறிப்பிட்டது என்னவுள்ளது என்று மனதின் ஓசை சொன்னால் புண்ணியமாக போகும்.

ரஜினி ரசிகனின் சமூக அக்கறையற்ற போதையை விமர்சிக்க நியாயப் பூர்வமான் விவாதம் ஒத்து வராது. பொழுது போக்கு என்று நம்மை நையாண்டி செய்வார்கள். அவனது தன்மானத்தை(அப்படி ஒன்று இருந்தால்) கீறி கிளர்ந்தெழச் செய்தால்தான் பேசும் விசயத்தின் வீரியம் புரியும்.

சில கேள்விகள்,

பெண்களை இத்தனை அவமானப்படுத்தும் கழிசடை ரஜினிகாந்த உங்கள் வீட்டு பெண்களை வைத்து இப்படி செய்தால் ரசிகமகா ஜனங்களே ரசிப்பீர்களா?

பொழுது போக்கு என்று சப்பைக் கட்டு கட்டுவீர்களா?

நல்ல சரக்கை விற்க்குமிடம் என்று விளம்பரம் செய்வீரக்ளா?

அக்கரையுடன் சரியான விவாத களத்தை அமைத்து கொடுக்கும் வகையில் உஙக்ள் வீட்டுப் பெண்களை கேவலப்படுத்திய ரஜினி குறித்து எழுதுவீர்களா?

ரசனை என்பது பலவிதம் அதில் பெண்களை இப்படி ரசிப்பது ஒரு விதம். ரசனையில் தலையிடுவது அறிவீனம் அது என் வீட்டுப் பெண்களாய் இருப்பினும் அப்படியே என்று பின்னூட்டமிடுவீர்களா?

யாருடைய ரசனையிலும் நாம் தலையிட முடியாது என்று இந்த அநாகரீகம் நம்மை இது வரை எதுவும் (நம் வீட்டு பெண்களைத்தான் செய்துள்ளது) செய்யவில்லையென்பதால் கண்டுக் கொள்ளாமல் போவீர்களா?

வாய்ப்புள்ளது... இந்த கேள்விகளுக்கும் கூட மான ரோசமின்றி பதில் சொல்லும் வாய்ப்புள்ளது. அதனால்தான் "அவனது தன்மானத்தை(அப்படி ஒன்று இருந்தால்)" இப்படி குறிப்பிட்டிருந்தேன்.

அசுரன்

இம்சை said...

சிவாஜி யின் இம்சை இம்சையோ இம்சை

சிவாஜி யின் இம்சை இம்சையோ இம்சை

சிவாஜி யின் இம்சை இம்சையோ இம்சை

நாமக்கல் சிபி said...

அசுரன்,

நீங்கள் சொல்வதெல்லாம் புரிகிறது!

ஒரு ஆக்கப் பூர்வமான விவதத்தை இதிலிருந்தே தொடங்குவோம்!

கட் அவுட்டுக்கு அபிஷேகம் செய்யும் ரசிகனை எப்படித் தடுக்க முடியும்?

அவனை சினிமா மோகத்திலிருந்து எப்படி வெளியே கொண்டு வரமுடியும்?
அவனோட பொருளாதாரத்தை இந்த பாழாப் போன சினிமாக்காரங்க சுரண்டுவதிலிருந்து எப்படிக் காப்பாத்தலாம்?


நீங்க உங்க யோசனைகளைச்ச் சொல்லுங்க பார்க்கலாம்?

நாமக்கல் சிபி said...

ஒவ்வொரு நடிகருடைய படம் வெளிவரும்போதும் வரும்போதும் இப்படி சூடா ரெண்டு நாள் விவாதம் பண்ணிகிட்டு அப்புறம் அடிச்சிப் பிடிச்சி ஈவினிங்க் ஷோ டிக்கெட் வாங்கி படத்தைப் பார்த்துட்டு வந்து நம்ம பொழைப்பை நாம பார்க்கப் போயிடுறோம்!

அப்புறம் எப்படியும் ஒரு வருஷத்த்ல இந்த மாதிரி ஏதாவது ஒரு படம். மறுபடியும் ரெண்டு நாள்.

நல்லா சூடா விமர்சனம் பண்னி எழுதி ரெண்டு பதிவு! அம்புட்டுதேன்!

கட் வெக்குறவன் வெச்சிகிட்டேதான் இருப்பான். அபிஷாகம் பண்ணுறவன் பண்ணிகிட்டேதான் இருப்பான்.

இந்த மாதிரி எதிர்மறை பதிவுகளுக்கும் கணிசமான ஹிட் கிடைக்கும் என்பதைத் தவிட வேற என்ன ஆக்கப் பூர்வமான பிரயோஜனம்னு நினைக்குறீங்க அசுரன்?

(நேத்து நாங்க அடிச்சடிக்கிட்டதெல்லாம் வெணும் கும்மின்னு மகிக்கும் தெரியும், எனகும் தெரியும், ஆனா மத்தவங்களுக்குத்தான் தெரியாது பாவம்)

உங்க சீரியஸ்னஸ் புரிஞ்சிகிட்டு இப்ப நானும் சீரியஸாவெ கேக்குறேன்!

அசுரன் said...

////நீங்க உங்க யோசனைகளைச்ச் சொல்லுங்க பார்க்கலாம்? ////


நாமக்கல் சிபி,

இங்கு படிக்கவும்....



http://poarmurasu.blogspot.com/2007/06/blog-post_14.html


//இந்த மாதிரி எதிர்மறை பதிவுகளுக்கும் கணிசமான ஹிட் கிடைக்கும் என்பதைத் தவிட வேற என்ன ஆக்கப் பூர்வமான பிரயோஜனம்னு நினைக்குறீங்க அசுரன்?//

அது இத படிக்கறவங்கள பொறுத்த விசயம்.

எதுவும் தனக்கேயுரிய பாதிப்பை ஏற்ப்படுத்தாமல் செல்வதில்லை.

உங்களுடைய விட்டேத்தித் தனம் கூட(உங்க பசையில் கும்மி) உங்களிடம் தனது பாதிப்பை விட்டுச் செல்கீறது. அது உங்களிடம் ஏற்படுத்தும் பாதிப்பு தன்மானம் இல்லாமல் வாழும் பயிற்சி.

அசுரன்

நாமக்கல் சிபி said...

//உங்களுடைய விட்டேத்தித் தனம் கூட(உங்க பசையில் கும்மி) உங்களிடம் தனது பாதிப்பை விட்டுச் செல்கீறது. அது உங்களிடம் ஏற்படுத்தும் பாதிப்பு தன்மானம் இல்லாமல் வாழும் பயிற்சி.
//

சும்மா விமர்சனமும், திட்டித் தீர்க்கும் சுபாவமும்தான் தெரிகிறது உங்கள் பதிலில் அசுரன்.

அதற்கு முன்பு நான் கேட்ட உங்களுடைய யோசனைகளுக்கு பதில் இல்லையே!

//ஒரு ஆக்கப் பூர்வமான விவதத்தை இதிலிருந்தே தொடங்குவோம்!

கட் அவுட்டுக்கு அபிஷேகம் செய்யும் ரசிகனை எப்படித் தடுக்க முடியும்?

அவனை சினிமா மோகத்திலிருந்து எப்படி வெளியே கொண்டு வரமுடியும்?
அவனோட பொருளாதாரத்தை இந்த பாழாப் போன சினிமாக்காரங்க சுரண்டுவதிலிருந்து எப்படிக் காப்பாத்தலாம்?

//

அசுரன் said...

நாமக்கல் சிபி,

எனது முந்தைய பின்னூட்டத்தில் கொடுத்த லிங்க்கில் எனது பதில்கள் இருக்கின்றன என்று அந்த பின்னூட்டத்திலேயே தெரிவித்திருந்தேன். நீங்கள் கவனிக்கவில்லை என்னை குற்றம் சொல்கிறீர்கள்.

என்னிடம் திட்டி தீர்க்கும் சுபாவம் தெரிகீறது என்று சொல்லும் உங்களுக்கு ஒரேயொரு விசயம் மட்டும் சொல்கிறேன். இந்த விவாதத்தின் இறுதியில் வெகு சுலபமாக சொன்னீர்க்ளே நாங்க எல்லாம் சும்மா லுலுவாய்க்கிதான் விவாதம் செய்கிறோம் என்று, அந்த திமிர்தனத்தை கொஞ்சம் கடுமையாகத்தான் அணுக வேண்டியிருக்கிற்து என்ன செய்ய..... அப்போதான் உங்களுக்கும் கொஞ்சம் சீரியஸ்னெஸ் வருகிறது.....

அசுரன்

Anonymous said...

////உங்களுடைய விட்டேத்தித் தனம் கூட(உங்க பசையில் கும்மி) உங்களிடம் தனது பாதிப்பை விட்டுச் செல்கீறது. அது உங்களிடம் ஏற்படுத்தும் பாதிப்பு தன்மானம் இல்லாமல் வாழும் பயிற்சி.
//

சும்மா விமர்சனமும், திட்டித் தீர்க்கும் சுபாவமும்தான் தெரிகிறது உங்கள் பதிலில் அசுரன்.//

சிபி, எவ்வளவு நேரம் ஆகியிருக்கு இத புரிஞ்சுக்க ?.....

Anonymous said...

பதிவெழுதுபவர்கள் கட்அவுட் வைப்பதில்லை. பின்னூட்டம் இடுபவர்கள் பால் அபிஷேகம் செய்வதில்லை. அது இரண்டும் செய்பவர்கள் பதிவுகளின் பக்கமே வருவதில்லை. இரண்டு வேறு உலகங்கள். காற்றில் மாய்ந்து மாய்ந்து கத்தி வீசிக்கொண்டிருக்கிறோம். வேலையைப் பார்க்கலாமா?

Anonymous said...

//Anonymous said...
பதிவெழுதுபவர்கள் கட்அவுட் வைப்பதில்லை. பின்னூட்டம் இடுபவர்கள் பால் அபிஷேகம் செய்வதில்லை. அது இரண்டும் செய்பவர்கள் பதிவுகளின் பக்கமே வருவதில்லை. இரண்டு வேறு உலகங்கள். காற்றில் மாய்ந்து மாய்ந்து கத்தி வீசிக்கொண்டிருக்கிறோம். வேலையைப் பார்க்கலாமா?
//

பதிவெழுதும் பாப்பானுங்க வேலை இல்லாமல் திண்டாடுகிறானுங்களா ?
அல்லது அவனுங்க சந்ததிகள் முனிசிபல் ஸ்கூலில் தான் படிக்குதா ?

பின்னே ஏன் இட ஒதுக்கீடு என்றால் இனிமா குடித்தது போல் ஆகுறானுங்க ?

பால்வெளி said...

இந்த இம்சை பொறுக்க முடியாம நானும் புதுசா ஒரு ப்ளாக் தொடங்க வேண்டியதாகிடுச்சு...
http://www.paalveli.blogspot.com/