Friday, June 02, 2006

அன்புள்ள போலிகளுக்கு ஒரு அவசரக் கடிதம்.

அன்புள்ள போலிகளுக்கு ஒரு அவசரக் கடிதம்.

உங்களைப் பற்றி ஒரு பதிவு போட்டேன் அதற்கு பல இடங்களில் இருந்தும் அன்பர் சதயம் அவர்கள் சொன்னதுபோல ஒரே இடிமழை மற்றும் சில பாராட்டு மழைகள். இந்த வலைப் பூக்களின் வாயிலாக நான் தெரிந்துகொண்டது இதுதான். இங்கே யாருமே என் கருத்தை கவணிக்க வில்லை பிடியடா சாபம் என்று என் கருத்துக்கு மாற்றுக்கருத்து சொன்னவர்களுக்கு பின்னூட்டமிடுகிறார்கள்.
என்ன செய்ய உங்கள் அனைவரின் பெயரும் அப்படி கெட்டுப்போய் கிடக்கிறது. நீங்களும் அவர்கள் சொல்வதுபோல சாதாரணமான ஆட்கள் இல்லை இல்லையென்றால் எனக்கு ஆதரவு தெரிவிப்பதாக என்பெயரிலேயே எழுதுவீர்களா?. உங்களின் துனிச்சலுக்கு நன்றி. + பாராட்டுக்கள்
அய்யா டோண்டு அவர்கள் சொன்னபடி எலிகுட்டி சோதனை போதும் ஆனால் அதுகூட தனிமனித தாக்குதலாய் இருந்தால்தான் செய்வேன். மற்றபடி உங்களுக்கு பயம் வேண்டாம். உங்கள் கருத்துக்களை அனானிமஸாக தெரிவித்தால் போதும். உங்களின் பெயர் எதுவும் வேண்டாம். இதனால் நான் உங்களை ஆதரிப்பதாக மட்டும் தப்புக் கணக்கு போட்டுவிடவேண்டாம். அது நீங்கள் தெரிவிக்கும் நியாயமானவைகளுக்கு மட்டும். இல்லையென்றால் விருத்தாசலத்தில் பா.ம.க.போட்ட கணக்குதான் உங்களுக்கும். புரிகிறதா?.
தனி ஒரு மனிதனை அவன் சொன்ன கருத்துக்காக தாக்கி எனக்கு வரும் எந்த பின்னூட்டமும் பிரசுரிக்கப் படாது இனி. அது போலியா நிஜமா என்ற வேறுபாடு ஏதுமில்லை. என் கருத்துக்களில் உங்களுக்கு மாற்றுக்கருத்திருந்தால் உடனடியாக எழுதவும் உங்கள் பெயரே இல்லாமல்.
இங்கே உங்களுக்கு எந்தமுகவரியும் இல்லை என்பதால் தான் அடுத்தவரின் முகவரியை தேடி அலைகிறீர்கள் என்ன செய்ய . உங்களுக்கு கருத்தென்றால் கிலோ என்ன விலை ? எப்படியோ உங்கள் பெயருக்கு இருக்கும் மரியாதை தனிதான்.
உங்கள் பெயரில் தலைப்பு என்றதும் ரூபாய்க்கு பத்து என்கிற ரீதியில் ஒரே ஆலோசனை மழை. எல்லாம் அந்த அடியாள் திராவிட முன்னேற்றக் கழத்திற்கு சமர்ப்பணம். நீங்கள் என்ன நிஜமாலுமே சூப்பர் பவரா? உங்களை கண்டு எல்லாரும் மிரள்கிறார்கள்? அந்த அளவுக்கு நீங்கள் அத்தனைபேரையும் போட்டு இம்சித்திருக்கிறீர்?.
எனக்குத்தெரிந்து நீங்கள் இங்கிருக்க வேண்டிய ஆளே இல்லை அ.தி.மு.க விலோ அல்லது தி.மு.க.விலோ இருக்க வேண்டும் அங்கே தான் போலிகளுக்கு ராஜமரியாதை. நான் சொல்வது உங்களுக்கு புரியும் என்றே எண்ணுகிறேன். உங்களுக்கு இந்த கருத்தில் உடண்பாடில்லாமல் போகலாம் அதுகுறித்த கருத்துக்களை எனக்கு தெரிவியுங்கள். வீனாக என் கருத்துக்கு ஆதரவு தந்தவர்களிடமோ அல்லது மாற்றுக் கருத்து சொன்னவரிடமோ நேராக மோதவோ அல்லது பின்னூட்டம் ஏதும் இடவோ வேண்டாம்.
என்னடா இவன் நம்மளிடம் ஏதோ கருத்து கருத்துன்னு சொல்றான்னு பாக்கறீங்களா?இதுகூட தெரியாத உங்களுக்கு கருத்து சொல்ல வந்த என்ன எதால அடிக்கலாம்னு செந்தழல் ரவி கிட்ட கேட்டு சொல்றன்.
உண்மை +தைரியத்துடன் மகேந்திரன்.பெ
பின் குறிப்பு (தைரியம் இருந்தால்)முதலில் உங்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படமாவது வெளியிடவும். இல்லையென்றால் நீங்கள் அத்தனை பேரும் இந்த உலகத்தில் இல்லாதவர்கள் என்று சொல்லிவிடுவோம்

1 comment:

Unknown said...

u are not muse soo dont send ur comments